சமீபத்திய பதிவுகள்

பிரான்ஸ் பிரஜைகளை கொல்வேன்

>> Saturday, October 30, 2010

 பிரான்ஸ் பிரஜைகளை கொல்வேன் என ஒசாமா பின்லேடன் எச்சரிக்கை

நிஹாப் மற்றும் பர்தா அணிவதற்குத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை அமுல்படுத்தவுள்ளமை மற்றும் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை போன்ற நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் முகமாக பிரான்ஸ் பிரஜைகளைக் கொல்லப்போவதாக அல்ஹைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அச்சுறுத்தியுள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சேவையினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒலிநாடாவிலேயே இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ள பின்லேடன் ஆப்கானில் பெண்களையும் சிறுவர்களையும் கொலை செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பிரான்ஸ் உதவி வருகிறது. முஸ்லிம்கள் மீது பிரான்ஸ் பிரயோகிக்கும் அடக்குமுறைகளுக்கெதிராக கடந்த மாதம் ஆபிரிக்க நாடான நைஜரில் 5 பிரான்ஸ் பிரஜைகள் கடத்தப்பட்டனர். எமது நிலங்களை ஆக்கிரமித்து எமது சிறுவர்களையும் பெண்களையும் கொல்லும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள உங்களின் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவது?

இதனை இலகுவாக சமப்படுத்துவதற்கான வழியாதெனில் நீங்கள் எமது மக்களைக் கொன்றால் நீங்களும் கொல்லப்படுவீர்கள். எமது மக்களைக் கைது செய்தால் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள் எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தால் உங்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படும். உங்களது பராதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையையும் எமது தேசத்தின் மீது நீங்கள் செலுத்தும் செல்வாக்கையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அத்துடன் ஆப்கானிலிருந்து உங்களது படைகளை விலக்கிக் கொள்வது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்


source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தலாக் கோமாளித்தனத்தால் விபரீதம்

 
தலாக் ஜோக் அடித்ததால் தன் திருமணவாழ்க்கையை தொலைக்கும்  இளைஞன் 

ஷரன்புர் (உ.பி):  இணையதளத்தில் தன்னுடைய மனைவியுடன் தலாக் ஜோக் அடித்த ஒரு இளைஞன் தன் திருமண வாழ்க்கையை தொலைக்கும் அபாயத்தில் உள்ளார். 

 கத்தார் வாசியான ஒருவர் தன்னுடைய மனைவியோடு இணையதளம் மூலம்  (சாட்டிங்) உரையாடும் போதும் மூன்று முறை தலாக் என்று கூறியிருக்கிறார்;, ஆனால் விளையாட்டாக தான் கூறியவை தன் திருமணவாழ்க்கைக்கே ஆப்பு வைக்கப் போகிறது என்று அறியவில்லை. 

  இளைஞனுடைய குடியுரிமை அல்லது முகவரி அறிவிக்கப்படவில்லை. அந்த இளைஞனுடைய வேண்டு கோளுக்கு பதில் அளித்து டியோபன்டின் (னுநழடியனெ)  அறிக்கைப் பிரிவான டருல் இட்பா (னுயசரட ஐவகய)வால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்  இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டத்தின் படி மூன்று முறை தலாக் சொன்னால் திருமணம் செல்லாததாகிவிடும் என்று இஸ்லாமிய பல்கலைகழகமான னுயசரட ருடழழஅ னுநழடியனெ அறிவித்துள்ளது.  

  தன்னுடைய வேண்டுகோளில் அந்த இளைஞன், "எனக்கு இஸ்லாம் பற்றி கொஞ்சம் அறிவே இருக்கிறது, என் மனைவியோடு சாட்டிங் செய்யும் போது விளையாட்டாக தலாக் என்று மூன்று முறை கூறினேன், மேலும் தலாக் சொல்லுவது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று எனக்கு தெரியாது. மேலும் நான் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டவன் நான் என் மனைவியோடு வாழவே விரும்புகிறேன்" என்றும் கூறியுள்ளார்.

 டருல் இட்பா அவருக்கு அளித்திருக்கிற பதிலாவது:  தலாக் என்று மூன்றுமுறை சொல்லிவிட்டால் அது விவாகரத்து நிறைவேற்றப்பட்டுவிட்டதாகும். எனவே அவருடைய மனைவி அவருக்கு "ஹராம்"  ஆகிவிடுகிறாள். அவருக்கு இஸ்லாம் பற்றி போதிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. அப்படிப்பட்ட நிலையில் அந்த இளைஞன் தன் மனைவியை கூட்டிக் கொண்டு போகவோ அல்லது மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவோ அனுமதியில்லை. மீண்டும் அவள் தன் கணவனிடம் சேர வேண்டுமென்றால் அவள் "ஹலாலா" வை நிறைவேற்ற வேண்டும். 

  "ஹலாலா" என்னும் செயலானது, மனைவியானவள் தன் கணவனிடம் சேருவதற்கு முன்  இன்னொரு மனிதனை திருமணம் செய்து கொண்டு பிறகு அவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும் மேலும் அவள் "இத்தாத்" (மூன்று மாத காலகட்டம்) காலத்தையும் நிறைவேற்றிய பிறகே இன்னொரு மனிதனை இரண்டாவதாக திருமணம் செய்ய முடியும். அவள் இரண்டாவது கணவனை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் "இத்தாத்" காலத்தை நிறைவேற்றிய பிறகே தன் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள முடியும். "இத்தாத்" காலத்தின் போது எந்த விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ளக் கூடாது. "நீ மூன்று தலாக் கூறும் பொழுது இந்த மூன்றும் நடைபெறுகிறது" மனைவி தலாக் கூறுகிறாளா என்பது முக்கியமல்ல. உனக்கு கட்டளையைக் குறித்து அறிவு இருந்தாலும் இல்லாதிருந்தாலும் உன்னுடைய மனைவி உனக்கு "ஹராம்" ஆகிவிட்டாள்" என்று அறிக்கை கூறுகிறது.  ஷரியத் சட்டத்தின் படி தலாக் என்று சும்மா சொன்னாலும் அது விவாகரத்து செய்ததற்கு சமம் என்று ளுநnழைச அரகவi ழக னுயசரட ருடழழஅ றுயஙக  யுசகை  முயளஅi  கூறினார். 

Talaq joke may cost youth his marriage

Saharanpur (U.P.): A talaq joke to his wife on the Internet may cost an e-savvy youth his marriage.

The man, a resident of Qatar, spelt talaq thrice while chatting with his wife, but little did he know that his humorous intention could nullify his marriage in reality.

The Islamic seminary, Darul Uloom Deoband, has ruled that saying talaq thrice, even casually, is valid as per the Shariyat (Islamic Law) and the marriage will stand nullified. The nationality or the identity of the youth has not been revealed. The fatwa was given by the Deoband's fatwa section, Darul Ifta, in reply to a query posted by the youth.

In his query he had stated that while chatting with his wife over the Internet he jokingly spelled talaq thrice. Claiming to have little knowledge of Islam, the youth said that he didn't know how talaq was taken, adding that he was happily married and wanted to live with his wife.

Darul Ifta had replied to him that once talaq is spelled thrice it amounted to divorce and that his wife was "haraam" for him. It does not matter whether he had enough knowledge of Islam or not. Under such circumstances, the youth is neither allowed to take his wife nor to marry her again, and that she would be required to go through "halalah," if she wanted to return to her husband.

"Halalah" is a practice under which the woman has to marry another man and divorce him before she can marry her previous husband againThe wife would be required to complete the 'iddat' (three months time) period after which she would be allowed to marry another man. In case she divorced her second husband, she would have to go through the iddat period again before she could re-marry her former husband, it stated. During "iddat" a woman is supposed to stay away from celebrations and socialising. "When you gave three talaqs, all the three took place. It does not matter whether the woman gives talaq or not. Your wife became "haraam" for you, whether you are aware of the commandment or not," the fatwa read. Senior mufti of Darul Uloom Waqf Arif Kasmi said that under the 'Shariyat' talaq, even if given in a lighter vein, amounts to divorce. — PTI


http://www.hindu.com/2010/10/28/stories/2010102858282000.htm




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

>> Friday, October 29, 2010

 
முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?


சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்


1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுயும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?

மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:









--
10/29/2010 11:41:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்



முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

கைபர் என்ற ஊரை திடீரென்று தாக்கி அம்மக்களை கொள்ளையிட்டு, கொன்று குவித்து, அங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக முஹம்மது பிடித்தார், மற்றும் தனக்காக ஷபியா என்ற பெண்ணையும் எடுத்துக்கொண்டார் என்று சஹீ புகாரி ஹதீஸில் இன்னும் பல விவரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய நம்முடைய முந்தைய கட்டுரையை இங்கு படிக்கவும்:



கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.


இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)



1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?

2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?

3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?

5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?

6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?

7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?

8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?

9) தன்னோடு உடலுறவு கொல்லும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?

11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?

12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?


இந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.

சரி,

ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?

அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.



மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:



Source: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html




--
10/29/2010 09:12:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

செல்போனில் படம் எடுத்த மாணவர்

தூத்துக்குடி: தூத்துக்குடி  யில் செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி கல்லூரி மாணவரை பேராசிரியர்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீசார் 3 பேராசிரியர்களைத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி பொன்னாகரத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரின் மகன் ஜோசப் தினகரன். இவர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. விலங்கியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் கல்லூரி முதல்வர்  அறை அருகே செல்போனை இயக்கியபடி சென்றாராம். அப்போது அங்கு நின்ற 3 பேராசிரியர்கள் ஜோசப் தினகரனை பார்த்து எப்படி எங்களை படம் எடுக்கலாம் என்று கேட்டுள்ளனர். 

அதற்கு அவர் நான் படம் எதுவும் எடுக்கவில்லைஇ நம்பரைதான் பார்த்தபடி சென்றேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதை நம்பாத பேராசிரியர்கள் 3 பேரும் அவரை ரவுண்ட் கட்டி அடித்து உதைத்துள்ளனர்.

இதில் காயமடைந்த ஜோசப் தினகரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி அந்த கல்லூரியைச் சேர்ந்த கணித பேராசிரியர் முனியப்பனஇ தாவரவியல் துறைத் தலைவர் ஹரிநாதன்இ கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஜோசப் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

மாணவரை ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம்  மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

source:thatstamil

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட் - ரகசியத்தைக் காப்பாற்ற

>> Thursday, October 28, 2010


இணையம் வழி அனைத்து நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நமக்குக் கிடைத்த வசதி சிறப்பான ஒன்று என்றாலும், அதில் உள்ள ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. நாம் என்ன கீ போர்டில் அழுத்துகிறோம் என்று அறிந்து, அதனை அப்படியே மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஸ்பைவேர்கள் ஆபத்து நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இத்துடன் நம் கம்ப்யூட்டரில் நம்மை வேவு பார்க்கும் ஒரு புரோகிராம் கீ லாக்கர்களாகும். நாம் என்ன கீகளை அழுத்துகிறோம் என்பதனை அப்படியே ஒரு லாக் புக்காக அமைத்து, நம்மை வேவு பார்க்கும் நபர்களுக்கு பைலாக தெரிவிக்கும் கீ லாக்கர்கள் அதிகம் இயங்கி வருகின்றன.  இதிலிருந்து நம்மை பாதுகாக்க, நாம் அழுத்தும் கீகளை, கம்ப்யூட்டர்களில் உள்ள கீ லாக்கர்  புரோகிராம்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்க இணையத்தில் சில இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன.
இவற்றில் சிறந்ததாக  அண்மையில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் KeyScrambler Personal. இதனைQFX Software  என்னும் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.  இது மிக அருமையாகச் செயல்படுகிறது. நாம் டைப் செய்கையில் கிடைக்கும் கீ ஸ்ட்ரோக்குகளைச் சுருக்கி மாற்றுகிறது. பின்னர், பிரவுசர்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று, அங்கு ஒரிஜினல் கீகளாக மாற்றித் தருகிறது. இதனால், கீ லாக்கர்கள்   எந்த கீகள் அழுத்தப்பட்டன  என அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த கீ லாக்கர்களுக்கு, சுருக்கப்பட்ட என்கிரிப்டட் சிக்னல்கள் தான் கிடைக்கும். அதனை மற்றவர்கள் அறிய முடியாது. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிளாக் ஆகிய பிரவுசர்களுக்கான  KeyScrambler Personal   தொகுப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மற்ற பிரவுசர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுக்கு வேண்டும் என்றால், கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மேலும் இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே இயங்குகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி https://addons. mozilla.org/enUS/firefox/addon/3383/

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மாடல் அழகியின் நிர்வாண யோகா காட்சியால் பரபரப்பு

 
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த மாடல் அழகி சாராஜுன் நிர்வாணத்துடன் யோகா செய்வது போன்ற வீடியோ பட காட்சி பிளேபாய் இணைய தளத்தில் வெளியானது.
 
இதற்கு அங்குள்ள இந்து மத தலைவர் ராஜன்செட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறும்போது, இந்துக்கள் அனைவரும் யோகாசனத்தை தெய்வீக கலையாக மதித்து வருகிறார்கள். அதனை மாடல் அழகி சாராஜுன் நிர்வாணமாக செய்து அவமதித்துள்ளார்.
 
யோகா உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரக்கூடியது. அந்த கலையை அவமதிப்பதை இந்துக்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்றார்

source:maalaimalar


 

StumbleUpon.com Read more...

onlinepj.com-பி.ஜெய்னூல் ஆபிதீன் புதிய தளம் ஆரம்பம்

 

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

முன்னுரை:

பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளமாகிய ஆன்லைன் பீஜே தளத்தில், கிறிஸ்தவர்களுக்கு பதில் தருவதற்காக ஒரு புதிய தளத்தை ஆரம்பித்துள்ளதாக பீஜே அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள். அந்த புதிய தளத்திற்கு "ஏசு அழைக்கிறார்"  என்று பெயரை சூட்டியுள்ளார்.

இந்த கட்டுரையில் கீழ்கண்ட விவரங்கள் பற்றி நான் எழுதப்போகிறேன்.

1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்
2. பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி
3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்
4. எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?
5. முடிவுரை
--------------------------------------------------------------------------------

1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்

பீஜே அவர்கள் "கிறிஸ்தவத்திற்கு மட்டும் பதில் தருவதற்கு" மட்டுமே ஒரு தளத்தை ஆரம்பித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று உண்டு என்றால், இஸ்லாமியர்கள் அதிகமாக எழுதுவதும்/பேசுவதுமேயாகும்.  முக்கியமாக, கிறிஸ்தவத்திற்கு பதில் என்றுச் சொல்லி ஒரு தளம் அதுவும் தமிழில் பீஜே அவர்கள் ஆரம்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். இதற்காக நான் பீஜே அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரி, பீஜே அவர்கள் தங்கள் புதிய தளம் பற்றி எப்படி அறிமுகம் செய்கின்றார் என்பதை இப்போது படிப்போம்.


சோதனை ஓட்டம் ஆரம்பம்

•         இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும், கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும் இணைய தளம் சோதனை ஓட்டம் ஆரம்பம். jesusinvites.com. விரைவில் முழுமையான ஒளிபரப்பு செயல்படும் இன்ஷா அல்லாஹ். உங்களின் ஆலோசனைகள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. kaliltntj@gmail.com மற்றும் admin.jesusinvites@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பி உதவுங்கள். . . .



அதாவது, இரண்டு காரணங்களுக்காக இந்த தளத்தை ஆரம்பிப்பதாக கூறுகிறார்.

1) இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும்
2) கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும்

மேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்களில், இரண்டாவது காரணம் பற்றி அதிகமாக எழுதுவார் என்று எனக்குத் தெரியும், அதாவது முஹம்மதுவைப் போல மார்க்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு அட்டூழியங்களைச் செய்த (அ) செய்துக்கொண்டு இருக்கும் ஒரு சில கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி எழுதுவார் என்று எனக்கு நன்றாகத்  தெரியும் ஆனால், முதல் காரணத்தை நிறைவேற்றுவாரா? நாம் கேட்கும் அல்லது இதுவரை கேட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவாரா? என்பதை நாம் பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்போதைக்கு, அவரது வாக்குக்களை அப்படியே நம்பி, இந்த புதிய தளத்தை எல்லாரும் வரவேற்போம்.

உமராகிய நான் மன மகிழ்ச்சியோடு, பீஜே அவர்களின் புதிய தளத்தை கிறிஸ்தவ உலகிற்கு அறிமுகம் செய்கின்றேன். 

தளத்தின் பெயர்: ஏசு அழைக்கிறார் (jesusinvites.com)
நோக்கம்: கிறிஸ்தவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவது, மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பது.
த‌ள‌ நிர்வாகி அல்ல‌து ஆசிரிய‌ர்: திரு பீஜே அவ‌ர்க‌ள்


2 பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

பீஜே அவர்கள் இந்த ஆண்டின் முதல் மாதத்தில், என்னை நேரடிவிவாதத்திற்கு அழைத்தார், நான் மறுத்தேன், எழுத்துவிவாதத்தை மட்டுமே நான் ஒப்புக்கொள்வேன் என்றேன். இதற்கு பீஜே அவர்கள் கீழ்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறினார்:


பீஜே அவர்கள் எழுதியது

இந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

தன்னுடைய இன்னொரு கட்டுரையில் எனக்கு நெருக்கடியை உண்டாக்கும் படி(நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று) அறிவுரை கூறினார்.

பீஜே அவர்கள் எழுதியவை:

இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்

Sources: 


ஆனால், நான் அப்போதே அவருக்கு  பதில்  எழுதினேன், நெருக்கடி எனக்கு அல்ல உங்களுக்குத் தான், மற்றும் இஸ்லாமியர்களுக்கு நீங்கள் சொன்ன அறிவுரையை அவர்கள் நிறைவேற்றுவார்கள், ஆனால் நீங்கள் மட்டும் அதை பின்பற்றப்போவதில்லை, இப்போது தான் வருடம் ஆரம்பித்தது, இவ்வருட முடிவிற்குள் ஒரு முடிவு தெரியவரும் என்று எழுதினேன், அதே போல, பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு தக்க பதில் அளிக்கப்படும் என்றுச் சொல்லி தளத்தை ஆரம்பித்துள்ளார்.

2010 ஜனவரி மாதம் நான் கொடுத்த பதிலை கீழே படிக்கவும்:

உமர் எழுதியது: 

2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. 

….தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது. …


ஈஸா குர்ஆன்

இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று. 
எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.

உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....

கேளுங்கள் பீஜே அவர்களே... 

கேள்விகளை கேளுங்கள்... 

எதை வேண்டுமானாலும் கேளுங்கள்... 

ஆனால், ஜாக்கிரதை....... 

நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...

என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

முடிவுரை: 

ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்... 

நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்". 

ஆக, நான் சொல்லியது போலவே, பீஜே அவர்கள் எங்கள் கேள்விகளுக்கு தக்க பதில்களை தருவதாக கூறியுள்ளார், பாவம் எவ்வளவு நெருக்கடியோ... நேரடி விவாதத்திற்கு தான் ஒப்புக்கொள்வேன் என்றுச் சொன்னவர், இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறியவர்... இப்போது பதில் தரவந்துள்ளார்.   பீஜே அவர்களே! உங்களை வருக வருக என வரவேற்கிறேன். 

[பின் குறிப்பு: கிறிஸ்தவத்திற்கு தக்க பதில் தருவேன் என்றுச் சொல்லி, வெறும் இந்த பாதிரியார் இப்படி செய்தார்.. அந்த பாதிரியார் அப்படி செய்தார் என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்‍ஆன் பற்றி நாங்கள் எழுப்பிய கேள்விகளை அப்படியே காற்றில் விட்டுவிடப்போகிறீர்கள்....]

"இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்" என்று நான் எழுதினேன், அதே போல, "உங்கள் புதிய தளம் இவ்வாண்டிற்குள் வந்தமைக்கு மிக்க நன்றி".  எல்லாரும் பீஜே அவர்களுக்கு ஒரு "ஓ"ப்போடுங்க....



3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்

பீஜே அவர்கள் தன் தளத்தில் "கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு அவதூறுகளுக்கு தக்க பதில் தருவதாக" வாக்கு கொடுத்துள்ளார். ஆகையால், மற்ற இஸ்லாமிய தளம் போல அல்லாமல், தம்முடைய அதிகார பூரவமான தளத்தில் எழுதியது போல அல்லாமல் கீழ்கண்ட வழியில் நேர்மையாக நடந்துக்கொள்வார் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம்  அவரிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.

1) எங்களுக்கு பதில் தரும் போது, எங்கள் வரிகளை பதிக்கும் போது, எங்கள் கட்டுரையின் தொடுப்பு என்ன என்று குறிப்பிட்டு பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

2) அவருடைய புதிய தளத்தில் படிக்கப்போகும் வாசகர்கள் வெறும் இஸ்லாமியர்களாக மட்டும் இருக்கமாட்டாரக்ள், அவர்கள் அனைத்து தர மக்கள் இருப்பார்கள். எனவே, அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க, எங்கள் வரிகளை/கட்டுரைகளை மேற்கோள் காட்டி பதில் சொன்னால், நியாயமானதாக இருக்கும்.

3) இஸ்லாமியர்கள் நேர்மையாக நடந்துக்கொள்கிறார்கள் என்று மேடையில் சொல்வது மட்டுமல்ல, அதனை செயலில் காட்ட முஹம்மதுவை பின்பற்றுபவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

4) பீஜே அவர்களின் கட்டுரையை அவரது தளத்தில் படிக்கும் கிறிஸ்தவர்கள் அதற்கான பதிலை நாங்கள் கொடுத்து இருந்தால், அதனை (அ) அதன் தொடுப்பை  அவர்கள் தளத்தில் பின்னூட்டமிட அனுமதி அளிப்பார் என்று நம்புகிறேன், ஏன்னெறால், அப்போது தான் அவரது தளத்தில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு வாதங்களையும் படித்து சரி பார்க்கமுடியும்.

5) தங்கள் தளத்தில் படிக்கவரும் வாசகர்களை ஏமாற்றாமல் இருக்கவேண்டுமானால், நாங்கள் கொடுத்த பதிலின் தொடுப்பையும் கொடுக்கவேண்டும்.

6) உங்கள் தொடுப்பை நாங்கள் கொடுக்கமாட்டோம், நாங்கள் உங்கள் வரிகளை பதித்து எங்கள் பதிலை மட்டும் தருவோம் என்று இதர கோழையான இஸ்லாமிய தளங்கள் சொல்வது போல, பீஜே அவர்களும் சொல்வாரானால்... அவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை... அல்லது உண்மைக்கு முன்னால் இஸ்லாம் தோற்றுவிடும் என்று பயப்படுகிறார் என்று அர்த்தம். ஒரு தளத்தின் தரம், அந்த தளம் முன்வைக்கும் ஆதாரங்கள் மீது சார்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

7)  உங்கள் புதிய தளம் பற்றி நான் ஏன் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்றால், எனக்கு கிறிஸ்தவம் மீது நம்பிக்கை உண்டு, பைபிள் பற்றி நம்பிக்கை உண்டு, ஆகையால், பயப்படாமல் என் கட்டுரைகளில் யாருக்கு பதில் தருகிறேன், அந்த தளத்தின் தொடுப்பு என்ன என்று எழுதுகிறேன். அதே போல, நீங்களும் செய்வீர்கள் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் நம்புகிறது.

8) இது எங்கள் எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான படித்த அறிவுள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் இது தான். இரு தரப்பினரின் வாதம் படித்த பிறகு உண்மை தெரியவரும். இதனை பீஜே மறுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.

எனவே, பீஜே அவர்கள் தங்கள் தளத்தில் நேர்மையனவராக நடந்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு நாம் முன் செல்லலாம்.


4 எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?

நான் எழுத்துவிவாதத்திற்கே வரமாட்டேன் என்று அடம்பிடித்தவர், முகவரி இல்லாமல் எழுதும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பதில் கூட‌  எழுதவேண்டாம் என்று சொன்னவர், வெறும் கேள்விகளை மட்டும் கேட்டுக்கொண்டே இருங்கள் என்றுச் சொன்னவர்,  இப்போது கிறிஸ்தவ கேள்விகளுக்கு தக்க பதில் தருவதாக சொல்லியுள்ளார்.

இனியாவது.. எழுத்து விவாதத்திற்கு வருவாரா?

அப்படி வருவதாக இருந்தால்.. கீழ்கண்ட கேள்விகளில் எந்த தலைப்பையும் தெரிந்தெடுத்துக்கொண்டு விவாத கட்டுரை எழுதினால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.

1) முஹம்மது ஒரு நபியா (தீர்க்கதரிசியா) VS   இயேசு இறைமகனா?

2) குர்‍ஆன் இறைவேதமா VS    பைபிள் இறைவேதமா?

3) வன்முறையை தூண்டுவது குர்‍ஆனா அல்லது பைபிளா?

4) முஹம்மது ஒரு பாவியா VS   இயேசு பரிசுத்தரா?

5) இஸ்லாமில் பெண்களின் நிலை VS கிறிஸ்தவத்தில் பெண்களின் நிலை

6) இஸ்லாமிய சொர்க்கம் VS கிறிஸ்தவ சொர்க்கம் 

7) மனிதர்கள் பின்பற்றத்தகுந்த மாமனிதர் முஹம்மதுவா? அல்லது கிறிஸ்துவா?

8) இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கமா VS கிறிஸ்தவம் ஒரு தீவிரவாத மார்க்கமா?


இவ்வளவு தான் தலைப்புகள் என்று எண்ணவேண்டாம்... வேறு தலைப்புக்களையும் நீங்கள் தெரிந்தெடுத்துக்கொள்ளலாம்.. ஆனால், இரண்டு பக்கமும் அதைப் பற்றி விவாதிக்கும் வண்ணம் அந்த தலைப்பு இருக்கவேண்டும்.  


5. முடிவுரை

பீஜே அவர்களின் புதிய தளத்தை பார்வையிட்டபோது, தற்கால கிறிஸ்தவ ஊழியர்களில் சிலர் செய்யும் அட்டூழியங்கள் பற்றி, பண கையாடல் பற்றி படங்களோடு எழுதியிருந்தார், நல்லது, இது பீஜே என்ற தனி மனிதருக்கு இருக்கும் உரிமை. இயேசுவின் அடியார்களில் ஒரு சிலர் செய்யும் அட்டகாசங்கள் பற்றி படங்கள் போட்டு எழுதியிருந்தார், அதே போல, அல்லாஹ்வின் அடியார்கள் (முஹம்மது மற்றும் இன்றுள்ள அடியார்கள்) செய்த‌/செய்யும் அட்டகாசங்களை படங்களோடு நாங்கள் எழுதினால் நீங்கள் மனம் வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், சமத்துவம் பற்றி, சம உரிமை பற்றி அதிகம் பேசுபவர்கள் நீங்கள் என்பதால் இப்படி உங்களைப் பற்றி நாங்கள் நினைப்பது சரியாகத் தான் இருக்கும்.

பீஜே அவர்கள் எடுத்த முடிவு, மிகவும் உயர்ந்தது, அதாவது இஸ்லாம் பற்றி எழுத்து மூலமாக கிறிஸ்தவர்களுக்கு கேள்வி கேட்க/பதில்கள் தர முன்வந்திருப்பது அதிக ஆபத்தானது, இருந்தாலும் பீஜே வந்துள்ளார் என்றால் இதன் அறுவடையை நிச்சயமாக அறுப்பார்.

கடைசியாக, உங்களின் புதிய "இயேசு அழைக்கிறார்" தளத்தை வரவேற்று இந்த அறிமுக கட்டுரையை முடிக்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் வாசகன் உமர்



 


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தனியார் பள்ளிகளின் கட்டணம் தேடல் எளிமையாக:Tamil Nadu PRIVATE SCHOOLS FEE easy Search

>> Wednesday, October 27, 2010



PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE, CHENNAI - 600 006. Source http://www.tn.gov.in/

Table: Tamil Nadu PRIVATE SCHOOLS FEE   Printer Friendly

 Search
District Name contains
Type of School contains
Name of the School contains
  Show all  Advanced Search 


source:http://tamilchristians.com/schools/tn_schoollist.php
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு சி.பி.ஐ தள்ளுபடி


சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்; சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.


இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.


இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அமிர்தலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, இலங்கை கோர்ட்டில் அந்நாட்டு போலீசார், கடந்த ஆண்டு ஓர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "பிரபாகரனும், பொட்டுஅம்மானும் இறந்துவிட்டனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், "ராஜிவ் கொலை தொடர்பான வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, கைவிட வேண்டும்' என, "தடா' கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி கூறிய கோர்ட், சி.பி.ஐ.,யின் அறிக்கையை ஏற்க மறுத்தது.


கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, தலைமைப் புலனாய்வு அதிகாரி, ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், "கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலும், இலங்கை அதிகாரிகள் அனுப்பிய கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும், ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர் என திருப்தியடைகிறோம். அதனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.


மனுவை விசாரித்த, "தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வரும் ஊனமுற்றவர்

>> Monday, October 25, 2010

"பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே':புது மொழி படைக்கும் ஊனமுற்றவர்



காரைக்குடி : பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார்.



யாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் செய்வது. இது தவறு தான். ஆனால், "கற்கை நன்றே, கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற நன்னெறியை தழுவி, கடந்த நான்கு ஆண்டாக, ஏழை மாணவர்களுக்கு (இலவச) கல்விச்செல்வம் கொடுத்து வருகிறார். மாலையில் டியூசன் எடுப்பது, புத்தகம், நோட்டு வாங்கி கொடுப்பது என இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.



அவர் கூறுகையில், ""காலை, மாலையில் மூன்று மணி நேரம் பிச்சை எடுப்பேன். 300 ரூபாய் வாடகையில் குடிசை பகுதியில் வசிக்கிறேன். பிச்சை எடுப்பது வருத்தம் அளித்தாலும், மாணவர்களுக்கு உதவுவது திருப்தி தருகிறது. கல்விக்காக பிச்சை எடுப்பதை கவுரமாக கருதுகிறேன்,'' என்றார்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் சிறுவன்



பெங்களூரு : இணையதளங்களால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழும் நிலையில், சமூக வலைதளம் வாயிலாக, 13 வயது சிறுவன் ஒரு தொகையை சம்பாதித்து வருகிறான். இணையதளங்களில், அண்மைக்காலமாக பாலியல் மற்றும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இணையதளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆர்குட், பேஸ்புக் மற்றும் பிளாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிளாக்கில் எழுதுவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். டீன்-ஏஜ் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர்.

பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வரும் விஷால் என்ற மாணவன், பிளாக்கில் எழுதுவதன் மூலம் மாதந்தோறும் 3,680 ரூபாய் சம்பாதித்து வருகிறான். 

அவனது பிளாக்கில் எழுதுவதால், விளம்பரத்திற்கென்று உள்ள பகுதிகளில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளம்பரம் அளிக்கின்றனர். இதனால், அவனுக்கு விளம்பர வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மற்றவர்களில் பிளாக்குகளை மேம்படுத்தி, விளம்பரம் செய்வதன் வாயிலாகவும், டிசைன் செய்து தருவதாலும் வருவாய் ஈட்டுகிறான். பிளாக் உட்பட இரண்டு இணையதளங்களையும் வைத்துள்ளான். அவற்றின் வாயிலாகவும் வருவாய் வருகிறது. இதுதவிர, இ-புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறான்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது: முதலில், வலைதளங்களில் எழுதுவதற்கு எனது வயது தடையாக இருந்தது. ஆனால், ஆறு மாதம் வரை மட்டுமே அந்த சிரமம் இருந்தது. தற்போது, வயதே எனக்கு சாதகமாகி விட்டது. தற்போது, 60 பக்கம் கொண்ட இ-புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அது முடியும் தறுவாயில் உள்ளது. எனது நண்பர்கள் பிளாக்கில் எழுதுவதற்கு உதவுவதோடு, அவர்களின் பிளாக்குகளை பிரபலப்படுத்தவும் உதவி செய்கிறேன். இவ்வாறு விஷால் கூறினான்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இந்த வார இணைய தளம் - ஆங்கிலத்தில் எழுத கூகுள் உதவி

>> Sunday, October 24, 2010


வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.  ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு   Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர்  http://scribe.googlelabs. com. 
இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்; அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது. இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன.  இதில் அனைத்து பிரிவு களுக்கும் சொற்கள் கிடைக் கின்றன. அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன.  இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும். 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மொபைல்போனில் நிர்வாண குளியல் படம்

>> Friday, October 22, 2010


  வீட்டு பாத்ரூமில் குளிக்கும்போது நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக லாரி டிரைவர் மிரட்டியதால், வனக்கல்லூரி பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்குத் தூண்டியதாக லாரி டிரைவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சீரநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கருமலை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்(42); லாரி அதிபர். இவரது மனைவி கவிதா(35); இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டில், கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார்(33) என்பவர் தனது மனைவி பார்வதியுடன் வசித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் வேணுகோபால் மற்றும் சிவக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து புதிதாக லாரி வாங்கினர். வரவு - செலவு கணக்கில் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

வீட்டைக் காலி செய்த சிவக்குமார், அதே ஊரில் வேறு வீட்டில் குடியேறினார். அதன்பின், தனது கணவர் வேணுகோபாலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்த கவிதா, தனியாக வசித்து வந்தார். குடும்பத்தை நடத்த வழியின்றி, கோவை வனக்கல்லூரிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார், கவிதாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கவிதா காலை 11.00 மணிக்கே வீடு திரும்பினார்.

காரணம் குறித்து அவரது தாயார் கேள்வி எழுப்பிய போது, "உடல்நிலை சரியில்லை' என கூறியுள்ளார். மறுநாள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த கவிதா, சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய ஆர்.எஸ்.,புரம் போலீசார், பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கவிதாவின் உடலை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள், சமையலறை "பிரிட்ஜ்'ஜில் ஒரு கடிதமும், மொபைல்போனும் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டெடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடிதத்தில், கவிதா கூறியிருப்பதாவது: எங்களது வீட்டுக்கு சிவக்குமார் குடிவந்த போதே, "அவன் நல்லவன் அல்ல; செயல், பேச்சு சரியில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் குடிவந்துள்ளான்' என, கணவரிடம் தெரிவித்தேன். அப்படியிருந்தும், அவன் எங்களது வீட்டுக்கு குடிவந்து விட்டான். நான் கணவரை பிரிந்த பின், நிறைய தொந்தரவுகளை கொடுத்தான். நான் பாத்ரூமில் குளிக்கும் போது மொபைல்போனில் நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்தான். மறுத்த போது, "உனது நிர்வாணப் படத்தை வெளியிட்டு விடுவேன்' என, மிரட்டினான். அவனது தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சிவக்குமாரும், அவனது மனைவி பார்வதியுமே காரணம். என்னை செத்துப் போகுமாறு, அவனது மனைவி அடிக்கடி மிரட்டினாள். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கவிதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, லாரி டிரைவர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி பார்வதியை கைது செய்தார். இவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்:வீடியோவில் ஆதாரம்; உரையாடல் முழு விவரம்

 பெங்களூர், அக். 22-

 
எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்: குமாரசாமி வெளியிட்ட வீடியோவில் ஆதாரம்; உரையாடல் முழு விவரம்
கர்நாடகாவில் ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக எடியூரப்பா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
இதற்காக பெருந்தொகை பேரம் பேசப்படுகிறது. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா, ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசை இழுக்க பேரம் பேசினார்.
 
அவர்கள் பேசிய டெலிபோன் பேச்சு, வீடியோ ஆதாரத்தை குமாரசாமி வெளியிட்டார். அதில் இருந்த உரையாடல்கள் வருமாறு:-
 
சுரேஷ் கவுடா (பா.ஜனதா):- அணி மாற உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?
 
ஸ்ரீனிவாஸ் (ஜனதா தளம்):- எனக்கு ரூ.100 கோடி வேண்டும் உங்களால் தரமுடியுமா?
 
சுரேஷ் கவுடா (சிரித்து கொண்டே):- நான் அசோக்கிடம் (உள்துறை மந்திரி) பேசட்டுமா. ரூ.15 கோடி வரை தரலாம்.
 
ஸ்ரீனிவாஸ்:- ரூ.15 கோடி மட்டும்தானா?
 
சுரேஷ்கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுவது நல்லது. வாருங்கள் அவரை சந்தித்து பேசுங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
 
ஸ்ரீனிவாஸ்:- எனக்கு கொடுக்கும் பணம் முடிவானால் நான் எனது ராஜினாமா கடிதத்தை உடனே தருகிறேன்.
 
சுரேஷ் கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுங்கள் அவர் முடிவு செய்வார். பேரம் முடிவானால் நீங்கள் 2 காருடன் வாருங்கள் ஒரு காரில் பணத்தை நிரப்புகிறோம். வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.
 
ஸ்ரீனிவாஸ்:- இல்லை. பணம் முடிவாகும்வரை என்னால் எங்குமே வரமுடியாது. அஸ்வதா (ராஜினாமா செய்த ஜனதா தளம் எம்.எல்.ஏ) என்னிடம் போனில் பேசினார். அவருக்கு ரூ.25 கோடி பேசிவிட்டு ரூ.5 கோடி மட்டுமே கொடுத்து இருக்கிறீர்கள். எனவே நீங்கள் உரிய பணத்தை எனக்கு கொடுத்தால் உங்களுடன் வர தயாராக இருக்கிறேன்.
 
சுரேஷ்கவுடா:- ரூ.15 கோடி என்று பேசி முடிக்கவா? அசோக் இதை தர தயாராக இருக்கிறார்.
 
ஸ்ரீனிவாஸ்:- இல்லை, இல்லை, எனக்கு குறைந்தது ரூ.25 கோடி வேண்டும்.
 
இவ்வாறு அந்த உரை யாடல் செல்கிறது.
 
இந்த ஆதாரத்தை வெளியிட்ட குமாரசாமி சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி வரை தர மேலும் பேசப்படுவதாக தெரிவித்தார்.
 
ஆனால் இந்த வீடியோ ஆதாரம் உண்மை இல்லை என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP