பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட அமெரிக்க சாமியார் திடீர் மாயம்
>> Wednesday, March 9, 2011
இந்நிலையில், 31 வயதான கேத்தி டோனிசென் என்ற பெண், தன்னிடம் சாமியார் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறினார். இதையடுத்து, பிரகாஷானந்த் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் பிரகாஷானந்த் ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. மீண்டும் 45 கோடி ரூபாய் ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சாமியார் பிரகாஷானந்த் உடல் நலம் குன்றி இருந்ததாகவும், அவர் தற்போது, எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும், அவர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். பிரகாஷானந்தின் பாஸ்போர்ட் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடு தப்பித்து செல்வதற்கு வழியில்லை என்று தெளிவாக்கினர்
0 கருத்துரைகள்:
Post a Comment