சமீபத்திய பதிவுகள்

ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்.

>> Monday, February 11, 2013

 



      ஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருத்ந்தபோது TNTJTTj வகையராக்கள் ரிஸானா நபீக் என்ற சிறுமிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதைக்குறித்து "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"(நிச்சயமாக நாம் அல்லாவுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக அவனிடமே திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்) என்ற வாசகத்தை முன்னிருத்தி குற்றம் செய்திருந்தாலும் இந்த தண்டனை மிக அதிகமானதே; ஒரு வேளை குற்றம் செய்யாது இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அப் பெண்ணிற்குசொர்க்கம் கிடைக்கும். அதற்கு பிரார்திப்போம்" என்ற செய்திகள் உலாவந்தன. ஆனால் அவர்களது அவுலியா இந்த தண்டனையை வரவேற்றும் மனுஷ்யபுத்திரனனை கேவலமாக விமர்சித்தும் தமது இணையதளத்தில் கட்டுரையை எழுதியதும் சொந்த புத்தி எல்லாம் அவுலியாவுக்கு அடகு போய் தண்டனையை ஆதரித்தும் மனுஷ்யபுத்திரனனை கடுமையாக திட்டவும் தொடங்கிவிட்டனர். இந்த செய்திக் குறித்து விபரம் ஏதும் தெரியாத நிலையில் இருந்தபோது நக்கீரனில் வந்துள்ள மனுஷ்யபுத்திரனின் கட்டுரையை சுட்டிக்காட்டி தொலைபேசியில் ஒரு தோழர் விபரம் கூறினார். அதனைப் படித்த பிறகு மேலும் செய்திகளை அறிந்துகொள்ள இணைய இணைப்பில் அமர்ந்தேன். அப்பொழுது இசுலாமியர்கள் நிறைய உள்ள ஒரு பிரபலமான ஊரில் இருந்தேன். அந்த புரோஸிங் சென்டரும் ஒரு இசுலாமியருடையது. யுடியூப்பில் ரிஸானா நபீக் தலை வெட்டப்படும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது என் இதயம் கனக்க, வயிற்றுக்குள் ஒருவர் கையைவிட்டு பிசைவதுபோன்று திணறல் ஏற்பட்டது. அநாகரீக காலத்திலிருந்து இந்த இசுலாமியர்கள் மாறவே மாட்டார்களா என்ற கேள்விக்குறியுடன் என்னை இயல்பு நிலைக்கு திருப்ப சற்று எழுந்து நகர்ந்து நின்றேன்.

      அருகில் அதனை பார்த்துக்கொண்டிருந்த தாடியும் மீசையும் மழித்து சிவந்த நிறத்திலிருந்த இசுலாமிய இளைஞர் ஒருவர் "இவனுக காட்டுப் பு.... மவனுக" என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இன்னொரு இளைஞர் எதற்கு இந்த தண்டனை என்ற விபரம் அறியாது "இப்படி எல்லாம் தண்டனை கொடுத்தாலும் தப்பு பண்றவன் தப்பு பண்ணிக்கொண்டுதானே இருக்கான்" என்றார். தண்டனை பற்றி சிறு விபரம் கூறியதும் மௌனமாகிவிட்டார். மற்றொரு இளைஞர் "என்னங்க ரொம்ப கொடுமையாக இருக்கிறது என்றார்.
      ஒரு 55 வயது முதியவர் ஒருவர் "சௌதியைப் பொருத்தவரை வேலை செய்யப்போகிறவர்கள் அனைவரையும் அடிமைகள் போல்தான் நடத்துகிறார்கள். நாம் என்ன சொன்னாலும் அங்கே எடுபடாது. சௌதி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள்மலேசியாவிலும் அப்படித்தான்;  மலேசிய முதலாளி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள். ஆனால் பங்களாதேசத்தவர்கள் கூறினால் எடுபடும்" என்று கூறினார். இவர்களில் முதலாம் நபர் தவிர பிறருக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும் என்பதால் மேற்கொண்டு கருத்துக்கூறாமல் பேச்சு திசை திரும்பிவிட்டது.
      ரிஸானா நபீக் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் சௌதியிலுள்ள Naif Jiziyan kalaf Al- otaibi  என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பாத்திரம் பண்டங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தையைப் பராமரிப்பது அவளுக்கு இடப்பட்ட வேலைகள். 2005 மே மாதம் 25 ஆம் நாள் அதாவது ஒருமாத்தில் தனது முதலாளியின் 4 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டார் என்று சிறையிலடைக்கப்பட்டார்.
      குழந்தையின் தாய் வெளிச்சென்றிருக்கும்போது குழந்தைக்கு ரிஸானா நபீக் புட்டிலிருந்து பால் புகட்டியுள்ளார். அப்படி பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது மூக்கு வழியாக பால் வந்ததாகவும், அதனை துடைத்துவிட்டும் தொண்டையை தடவி விட்டுவிட்டும் குழந்தையை தொட்டியில் படுக்கவைத்ததாகவும் ரிஸானா நபீக் கூறுகிறார். ஆனால் முதலாளியம்மாள், குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டதாக கூறி ரிஸானாவை தனது செருப்பால் கன்னங்களில் மாற்றி மாற்றி அடித்துள்ளார். அதனால் ரிஸானாவின் கன்னத்தில் காயங்களும் மூக்கில் இரத்தமும் வடிந்துள்ளது. அதே நிலையில் சௌதி போலீசில் புகார் செய்ய ரிஸானா நபீக் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திலும் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். போலீஸ் ரிஸானாவை மிரட்டி 'கழுத்தை நெறித்து கொன்றதாக' வாக்கு மூலம் பெற்று வழக்குத் தொடர்ந்தது.
      ஜூன் 16, 2007 அன்று தவாமி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல்லா அல் ரோஸ்மி, சரியத் சட்டப்படி ரிஸானாவுக்கு மரண தண்டனை வழங்கி மேல் முறையீடு செய்துகொள்ளவும் அனுமதி அளித்தார். முறையான மொழிபெயர்பு வசதியும், வழக்காட வழக்கறிஞர் வசதியும் ரிஸானா நபீக்குக்கு வழங்கப்படவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
      சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) ரிஸானா நபீக்காக சௌதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. எப்படியும் தண்டனை உறுதி என்னும் நிலையை உணர்ந்த அவர்கள், குற்றம் சாட்டப்பட்டபோதுரிஸானாவின் உண்மையான வயது பதினேழுதான் என்பதை ரிஸானா நபீக்கின் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் ஆகியவற்றைக் ஆதாரமாகக்கொண்டு சர்வதேச குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். வேலை கிடைக்கவேண்டும் என்பதால் வயதை கூடுதலாகச் சொல்லி ஏஜென்ட் மூலம் கடவுட் சீட்டு பெற்றுள்ளதாகவும் வாதாடினர். உச்சநீதிமன்றமோ கடவுட்சீட்டிலுள்ள வயதையே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.
      சரியத் சட்டத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல. அது குழந்தையாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் நிலை ஒன்றுதான். அதுபோக ஒரு பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்துவிட்டாலே அவள் முழு முதிற்சியடைந்த பெண்தான் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதுபோல ஒரு பையனுக்கு விந்து என்று ஒன்று வெளிவந்துவிட்டாலே அவன் முதிற்சியடைந்த ஆண் என்பதும் அவர்களின் நிலைப்பாடு. அதனால்தான் முகம்மதுநபி 6 வயதுடைய ஆயிஷாவை மணந்து 9 வயதில் உறவுகொண்டதை நியாப்படுத்துகிறார்கள். நியாப்படுத்த முடியாதவர்கள் அது முகம்மதுநபிக்கும் ஆயிஷாவிற்கும் வழங்கப்பட்ட சிறப்பு சலுகை என்கின்றனர். அது அப்படி அல்ல என்பதை பின் வரும் செய்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
(Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu'l–Fadl) when she was a baby crawling before him  and said, 'If she grows up and I am still alive I will marry her.' But he died before she grew up and Sufyan b. al-Aswad b.
'Abdu'l-Asad al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311).
(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால்,  இவளைத் திருமணம் செய்வேன்". ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபிஇறந்து விட்டார்.
Musnad Ahmad: 25636
Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, "If she grows up while I am still alive, I will marry her."
(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குழந்தையைக் கண்ட நபி (ஸல்), "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால்இவளைத் திருமணம் செய்வேன்". என்று கூறினார்)

ரிஸானா நபீக் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில கேள்விகள்:
1. பிறந்து 4 மாதமேயான பச்சிளங்குழந்தையை ஒரு சிறுமியிடம் பராமரிக்க கொடுத்துவிட்டு தாய் வெளியில் சென்றது என்னவகை நியாயம் என்று தெரியவில்லை. அது முதல் தவறு. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த அம்மாவே பொறுப்பேற்க வேண்டும்.
2. வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் குழந்தையை கொல்லும் அளவுக்கு ஒரு சிறுமியின் மனதில் குரோதம் ஏற்பட எவ்வித காரணமும் இல்லை. தனியாக நாடுகடந்து நாடு சென்று வாழும் ஒரு ஏழைச் சிறுமிக்கு ஒரு குறுகிய காலத்தில் மனக்குரோதம் ஏற்படும் என்று சொல்வோமானல் அவரைப்போல ஒரு அறிவிலி எவரும் இல்லை. இம் மரணம் ஒரு விபத்தாகவே கருதவேண்டும். ஆனால் நீதிமன்றம் அதனை பரிசீலிக்கவே இல்லை.
3. ஒருவேளை அச்சிறுமி கொலை செய்திருந்தால் இயல்பாக குழந்தையை தொட்டியிலிட்டுவிட்டு மூக்கில் பால் வடிந்ததாகவெல்லாம் முதலாளியம்மாளிடம் கூறியிருக்க மாட்டாள். பயந்துபோய் என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்திருக்கவேண்டும். அப்படி ஏதும் அறியாததுபோல் கூற வேண்டுமானால் கொலைசெய்து அனுபவப்பட்டிருக்க வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காக பெற்றோர்களைப் பிரிந்து வெளிநாடு சென்றுள்ள ஒரு சிறுமியிடம் கொலை செய்த அனுபவங்கள் உள்ளதுபோல் போலிசும் அநீதிமன்றமும் நடந்துகொண்டது மனித இனத்திற்கே ஒரு அவமானம்.
4. கழுத்தை நெறித்து குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி கழுத்தை நெறித்து கொலை செய்திருந்தால் குரல்வலை உடைந்திருக்கும். பிரேத பரிசோதனையில் உண்மை தெளிவாக தெரிந்திருக்கும். ஆனால் சௌதி போலீசும் அநீதிமன்றமும் இந்த நவீனக்காலத்திலும் பிரேதப் பரிசோதனை செய்து உண்மையை அறிய அக்கரை காட்டவில்லை. இது ரிஸானா நபீக்கு அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையே காட்டுகிறது.
5. கொலைக்கு சாட்சிகள் எதுவும் இல்லை. குழந்தையின் பெற்றோர்கள் தவிர பிற சாட்சிகள் கிடையாது. அப்படி இருக்கும்போது பிரேத பரிசோதனை செய்யாமல், ரிஸானா நபீக்கிற்காக வாதாட வழக்கறிஞர்களுக்கு அநீதி மன்றம் ஏற்பாடும் செய்யாமல் பெற்றோர்களின் குற்றச்சாட்டை மட்டுமே கொண்டு மரண தண்டனை வழங்கியது கொடுமையிலும் கொடுமை.
6. கொலைக்கான காரணம் எதுவும் எவரும் கூறவில்லை. கொலைக்கான காரணம் என்று ஒன்று இருந்தே தீரவேண்டும். அதன் தன்மையைப் பொறுத்தே தண்டனைகள் அமைய வேண்டும்.  எடுத்துக்காட்டாக் ஒருவர் தொடர்ந்து ஒருவரால் துன்பப் படுத்தப் படுவதால் கெலை செய்தார் என்று எடுத்துக்கொண்டால் கொலை செய்தவருக்கு மரணதண்டனை வழங்குவது நியாயமாகாது.
            சூழ்நிலையும் மறுக்கப்பட்ட அறிவியல் ஆய்வும் குற்றமற்றவள் என்பதை உணர்த்தும்பொழுதுகுறைந்தபட்ச சிறு தண்டனையை (அதுவே தவறு என்ற போதிலும்) வழங்கப்பட்டிருக்க வேண்டும்அதுவே மனசாட்சியும் அறிவும் உடையவர்களின் செயலாகும். ஆனால் கொடுமையான தலையை வெட்டி எரியும்தண்டனை ஏன்?
            ஒரு சௌதியின் நலனுக்காக சரியத் சட்ட முகமூடி அவர்களுக்கு முக்கியம்இப்படி தண்டனைகள்வழங்குவதன் மூலம் பிற  தொழிலாளர்களையும் மிரட்டிவைக்கலாம் அல்லவாகடுமையான தண்டனைகள் வழங்கினால்தான் குற்றம் செய்பவர்கள் பயப்படுவார்கள் என்று ஊளையிடுபவர்கள் இங்கே சற்று யோசியுங்கள்.
            அக்குழந்தை 4,5 வயது சிறு குழந்தை என்றும்  அவ்வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கார சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் தவறி அல்லது வேலைக்காரப் பெண் கால் தடுக்கி குழந்தை கீழே விழுந்து மண்டை உடைந்து இறந்துவிடுவதாக வைத்துக் கொள்ளவோம்அப்பொழுதும் குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்காரப் பெண் கொலை செய்துவிட்டாள் என்று குற்றம் சுமத்த முடியும்இங்கேயும் சாட்சிகள் இல்லைஅப்படியானால் குற்றம் சுமத்தப்பட்ட வேலைக்காரப் பெண் தான் செய்யவில்லை என்று சொல்லுவதை ஏற்று கொலைக்கான காரணச் சூழ்நிலைகள்பிரேதபரிசோதனைகள் செய்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தீர்ப்பு செய்யவேண்டுமா அல்லது பெற்றோர்கள்களின் குற்றச்சாட்டைக்கொண்டே தீர்ப்புச் சொல்வதாஒரு வேளை கொலையை நிருபிக்கவோ மறுக்கவோ முடியாத நிலை ஏற்படுமானால் குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்வதே நியாயம்இங்கே குற்றம்சாட்டப்பட்ட வேலைக்காரப் பெண்ணின் வாக்கு மூலத்தை சௌதியின் அடியாள் பிஜே சொல்வதுபோல் ஏற்றகக் கூடாது என்றால் அது நீதியாமனசாட்சியற்ற மதவெறியா?
ரிசானாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான சரியத் சட்டம் பின்வருமாறு:
குரான் 2: 178 இறைநம்பிக்கையாளர்களேகொலை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் பழிவாங்குதல் உங்கள்மீது விதியாக்கப்பட்டுள்ளதுசுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும்அடிமைக்குப் பதிலாக அடிமையும்பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்படும்எனினும்(கொலைசெய்யப்பட்டஅவனுடைய சகோதர ர் மூலம் (கொலை செய்தஇவனுக்கு ஏதேனும் மன்னிப்பளிக்கப்பட்டால் அப்போது (கொலையாளிநல்ல வழக்கமுறையைப் பின்பற்றி (அதற்கான ஈட்டுத்தொகை முதியவற்றைநன்றியறிதலுடன் (கொலை செய்யப்பட்ட)  அவ(னுடைய பாத்தியஸதரி)ன் பால் நிறைவேற்றுதல் வேண்டும்இது உங்களுடைய இறைவனிடமிருந்து (உங்களுக்கு கிடைத்து)ள்ள சலுகையும் கிருபையைமாகும்ஆகவே இதற்குப் பிறகு எவரேனும் வரம்புமீறினால் அப்பொழுது அவருக்கு நோவினை அளிக்கும் வேதனை உண்டு.
குரான் 2:179 நல்லறிவாளர்களேகொலைக்குப் பழிதீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டுநீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம்.
குரான் 5:45 மேலும் அ(வ்வேதத்)தில் நிச்சயமாக உயிருக்குப் பகரமாக உயிரையும்கண்ணுக்குப் பகரமாக கண்ணையும்மூக்குக்குப் பகரமாக மூக்கையும்காதுக்குப் பகரமாக காதையும்பல்லுக்குப்பகரமாக பல்லையும் (பழிக்கப் பழிவாங்க வேண்டுமென்றும்காயங்களுக்குப் பழிக்குப்பழி உண்டு என்றும் அவர்கள் மீது நாம் விதித்திருந்தோம்எனினும் எவரேனும் இதனை தர்ம மாக விட்டுவிட்டால் அது அவரு(டைய பாவத்துக்குபகரமாகிவிடுர்எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் அவர்கள்தாம் அநியாயக்கார ர்கள்.
(குர்ஆன் வசனங்களுக்கிடையில் வரும் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களையும் தொடரந்தார்போல் சேர்த்தே படியுங்கள்.)
            இச்சட்டம் ஒரு ஆடவனை நோக்கி கூறுகிறதுசுதந்திரமான உன்னை ஒருவன் கொன்றுவிட்டால் கொலைகாரனை உன் உறவினர்கள் கொலை செய்யலாம்உன்னுடைய அடிமையை ஒருவன்(சுதந்திரமானவன்கொலை செய்துவிட்டால் அவனுடைய அடிமையை நீ கொலை செய்துக் கொள்ளலாம்.உன் (சுதந்திரமானவன்வீட்டுப் பெண்ணை ஒருவன் கொலை செய்துவிட்டால் கொலை செய்தவனுடைய வீட்டுப் பெண்ணை நீ கொலை செய்யலாம் என்று கூறுகிறதுபாதிக்கப்பட்டவன் (சுதந்திரமானவன்)விரும்பினால் இழப்பீடுகள் (இரத்தப பணம்பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னிக்கலாம்.மன்னிக்க விருப்பம் இல்லை என்றால் பழிக்குப்பழியே விதியாகிவிடும்.
            சுதந்திரமானவாக உள்ள ஒருவன் அதாவது அடிமையாக இல்லாத எஜமான் இன்னொரு சுதந்திரமானவனின் சொத்துக்களான அவன் வீட்டுப்பெண்களையோ அல்லது அடிமைகளையோ கொன்றுவிடுவதனால் ஏற்படும் இழப்பிற்குஇழப்பை ஏற்படுத்தியவனின் வீட்டுப் பெண்களையோ அடிமைகளையோ இழந்தவன் கொலை செய்து இழப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது மட்டுமே இச்சட்டத்தின் குறிக்கோள். கொலை செய்தவனை கொல் என்று இச்சட்டம் கூறவில்லை
மனித உயிர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதான மனிதாபிமானச் சட்டம் அல்ல இதுஅதனாலேயே இழப்பை இரத்தப்பணம் என்கிறதுபெண்கள்கூட ஒரு சொத்து என்பதையும் கூடுதலாக இச்சட்டம் நமக்கு புரியவைக்கிறது.
            இச்சட்டம் சரிதானா என்று சிந்தித்துப்பாருங்கள்கொலை செய்தவன் ஒரு சுதந்திரமானவனாக அதாவது இன்றையக் காலத்தில் முதலாளியாக இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த ஒருவரை கொலை செய்தால் அவன் வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச் சொல்லுகிறதுஎஜமானர்களுக்கு சேவை செய்யும் சட்டம்இது ஒரு சீரிய சட்டம் என்றும்,காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்.
            கூடுதலாக குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்களில் அதி சிறந்தவர் என்று போற்றப்படும் இப்னு கஸிர் என்பவரின் விளக்கத்தையும் படித்துக்கொள்ளுங்கள்.

The Command and the Wisdom behind the Law of Equality
Allah says;
O you who believe! Al-Qisas (the Law of equality) is prescribed for you in case of murder: the free for the
free, the slave for the slave, and the female for the female. Allah states: O believers! The Law of equality has been ordained on you (for cases of murder), the free for the free, the slave for the slave and the female for the female. Therefore, do not transgress the set limits, as others before you transgressed them, and thus changed what Allah has ordained for them.
The reason behind this statement is that (the Jewish tribe of) Banu An-Nadir invaded Qurayzah (another Jewish tribe) during the time of Jahiliyyah (before Islam) and defeated them. Hence, (they made it a law that) when a person from Nadir kills a person from Quraizah, he is not killed in retaliation, but only pays a hundred Wasq of dates. However, when a person from Quraizah kills a Nadir man, he would be killed for him. If Nadir wanted (to forfeit the execution of the murderer and instead require him) to pay a ransom, the Quraizah man pays two hundred Wasq of dates (double the amount Nadir pays in Diyah (blood money)). So Allah commanded that justice be observed regarding the penal code, and that the path of the misguided and mischievous persons be avoided, who in disbelief and transgression, defy and alter what Allah has commanded them. Allah said:
Al-Qisas (the Law of equality in punishment) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female. Allah's statement:  (the free for the free, the slave for the slave, and the female for the female) was abrogated by the statement life for life (5:45).
However, the majority of scholars agree that the Muslim is not killed for a disbeliever whom he kills. Al-Bukhari reported that Ali narrated that Allah's
Messenger said:
The Muslim is not killed for the disbeliever (whom he kills). No opinion that opposes this ruling could stand correct, nor is there an authentic Hadith to contradict it. However, Abu Hanifah thought that the Muslim could be killed for a disbeliever, following the general meaning of the Ayah (5:45) in Surah Al-Ma'idah.
The Four Imams (Abu Hanifah, Malik, Shafii and Ahmad) and the majority of scholars stated that; the group is killed for one person whom they murder. Umar said, about a boy who was killed by seven men, "If all the residents of San`a' (capital of Yemen today) collaborated on killing him, I would kill them all.'' No opposing opinion was known by the Companions during that time which constitutes a near Ijma (consensus).
There is an opinion attributed to Imam Ahmad that;
a group of people is not killed for one person whom they kill, and that only one person is killed for one person. Ibn Al-Mundhir also attributed this opinion to Mu`adh, Ibn Az-Zubayr, Abdul-Malik bin Marwan, Az-Zuhri, Ibn Sirin and Habib bin Abu Thabit.
Allah's statement:
But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), then it should be sought in a good manner, and paid to him respectfully. refers to accepting blood money (by the relatives of the victim in return for pardoning the killer) in cases of intentional murder. This opinion is attributed to Abu Al-Aliyah, Abu Sha`tha', Mujahid, Sa`id bin Jubayr, Ata Al- Hasan, Qatadah and Muqatil bin Hayyan. Ad-Dahhak said that Ibn Abbas said: (But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), means, "the killer is pardoned by his brother (i.e., the relative of the victim) and accepting the Diyah after capital punishment becomes due (against the killer), this is the `Afw (pardon mentioned in the Ayah).''
Allah's statement:
...then it should be sought in a good manner, means, when the relative agrees to take the blood money, he should collect his rightful dues with kindness: and paid to him respectfully. means, the killer should accept the terms of settlement without causing further harm or resisting the payment.
Allah's statement:
This is an alleviation and a mercy from your Lord. means the legislation that allows you to accept the blood money for intentional murder is an alleviation and a mercy from your Lord. It lightens what was required from those who were before you, either applying capital punishment or forgiving. Sa`id bin Mansur reported that Ibn Abbas said, "The Children of Israel were required to apply the Law of equality in murder cases and were not allowed to offer pardons (in return for blood money).
Allah said to this Ummah (the Muslim nation):
The Law of equality in punishment is prescribed for you in case of murder: the free for the free, the servant for the servant, and the female for the female. But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money). Hence, `pardoning' or `forgiving' means accepting blood money in intentional murder cases.'' Ibn Hibban also recorded this in his Sahih.
Qatadah said:  (This is an alleviation from your Lord), Allah had mercy on this Ummah by giving them the Diyah which was not allowed for any nation before it. The People of the Torah (Jews) were allowed to either apply the penal code (for murder, i.e., execution) or to pardon the killer, but they were not allowed to take blood money.
The People of the Injil (the Gospel – the Christians) were required to pardon (the killer, but no Diyah was legislated).
This Ummah (Muslims) is allowed to apply the penal code (execution) or to pardon and accept the blood money.'' Similar was reported from Sa`id bin Jubayr, Muqatil bin Hayyan and Ar-Rabi bin Anas.
Allah's statement:
So after this whoever transgresses the limits, he shall have a painful torment. means, those who kill in retaliation after taking the Diyah or accepting it, they will suffer a painful and severe torment from Allah. The same was reported from Ibn Abbas, Mujahid, Ata Ikrimah, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas, As-Suddi and Muqatil bin Hayyan. The Benefits and Wisdom of the Law of Equality
Allah's statement:
And there is life for you in Al-Qisas, legislating the Law of equality, i.e., killing the murderer, carries great benefits for you. This way, the sanctity of life will be preserved because the killer will refrain from killing, as he will be certain that if he kills, he would be killed. Hence life will be preserved.
In previous Books, there is a statement that killing stops further killing! This meaning came in much clearer and eloquent terms in the Qur'an: (And there is (a saving of) life for you in Al-Qisas (the Law of equality in punishment).
Abu Al-Aliyah said,
"Allah made the Law of equality a `life'. Hence, how many a man who thought about killing, but
this Law prevented him from killing for fear that he will be killed in turn.'' Similar statements were reported from Mujahid, Sa`id bin Jubayr, Abu Malik, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas and Muqatil bin Hayyan.
Allah's statement:
O men of understanding, that you may acquire Taqwa. means, `O you who have sound minds, comprehension and understanding! Perhaps by this you will be compelled to refrain from transgressing the prohibitions of Allah and what He considers sinful.' Taqwa (mentioned in the Ayah) is a word that means doing all acts of obedience and refraining from all prohibitions.
      ஒரு முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்யப்பட்டால் அதற்காக ஒரு முஸ்லீமைக் கொல்லக்கூடாதுஎன்று இசுலாமிய பெருமக்கள் கருதுவதாகவும் இப்னு கஸிர் கூறுவதையும் கவனியுங்கள்.
இச்சட்டப்படி...
1. சாட்சிகள் தேவையில்லை.
2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும்காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லைமுதலாளி முறையிட்டாலே போதும்.
3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
            முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம்யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதுஇச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார்கொலைக்கான காரணம்சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லைசாட்சிகள் இல்லைசாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள்தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லைஎஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா?

சமீபத்தில் நடந்த இன்னொரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். முஸ்லீம் நாடான ரியாத்திலுள்ள ஃபையான் காம்தி என்ற மதகுரு தனது பெண் குழந்தை "லாமியா காம்தியைகற்பழித்து கொலை செய்துள்ளான். மருத்துவ அறிக்கை அந்த பெண்னின் எல்லா உறுப்புகளிலும்சித்திரவதை நிகழ்த்த பட்டுள்ளதும் அவளின்முதுகெலும்பு உடைக்கபட்டதாகவும், மலவாயும் சிதைக்கப்பட்டு தீயினால் சுடப்பட்டுள்ளதாகவும்சொல்கிறது.

கற்பழிப்புகளிலிருந்து உலகப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் புர்கா அணியவேண்டும் என்று கூப்பாடுபோடும் மதவெறியர்களே. பெற்ற தந்தையே தன் குழந்தையை கற்பழிக்கும்போது புர்கா எவ்வாறு தடுக்கும்? அந்த குழத்தைக்கும் புர்கா போடவேண்டுமோ? அல்லது தந்தைக்கு முன்பாகவும் ஒரு மகளும் வரக்கூடாது என்று சட்டம் போடனுமோ? இசுலாமிய அறிவிலிகளே யோசிங்கள். இந்த காமக்கொடூரனுக்கு சரியத் சட்டப்படி இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை அளித்துள்ளது அநீதிமன்றம். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லி நியாப்படுத்துகறார்கள். அதாவது இந்தக் கொலைக்கு காரணம் ஏதும் இல்லையாம். ரிசானாவுக்கு "காரணம்" ஆராயப்பட மறுத்தவர்கள் முல்லாவுக்கு "காரணம் இல்லை" என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

1. சரியத்சட்டப்படி குழந்தைகள் தந்தைக்கு உடமையானவர்கள். அப்படியானால் இரத்தப்பணம் கற்பழித்த அந்த காமுகனுக்குத்தான் அதாவது தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் குழந்தையின் அம்மாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சரியத்து எங்கே போனது?

2. இந்த காமக்கொடூரனுக்கு இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதேன்? குழந்தையின் அம்மா மன்னித்ததால் இரத்தப்பணம் கொடுக்கப்பட்டது என்று அறிவுகெட்டத்தனமாக உளரவேண்டாம். காரணம் குழந்தைக்கு பாத்தியப்பட்டவன் அந்த தகப்பனே. அது மட்டுமில்லாது தனது கணவன் என்ற நிலையில் அந்த அம்மா அவனுக்கு மன்னிப்பு வழங்குவது இயல்பானது. இதை அனுமதித்தால் இரத்தப்பணம் கொடுக்கக் கூடிய பணக்காரன் எவனும் தனது மகள்களை கற்பழிக்கலாம் என்பதை சரியத் சட்டம் கூறுகிறது என்று பொருளாகும். சௌதிகாரனுக்கென்றால் சரியத் பல்டி அடிக்குமோ?
      கடுமையாக தண்டித்தால்தான் குற்றங்கள் நடக்காது என்று ரிசானாவின் படுகொலைக்குகூக்குரலிட்ட பிஜே வகையரா மதவெறியர்களே, இதற்கு மௌனம் காப்பது ஏன்?
            ஆனால் பல நாடுகளும்நாட்டின் மக்களும்மனித உரிமை அமைப்புகளும்தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் போன்ற சில காட்டுமிராண்டி அமைப்புகள் தவிர பிற இசுலாமியர்களும் வருடங்களாக போராடியும்,வேண்டிக்கொண்டபோதும் மயிரளவுக்குக்கூட செவி சாய்க்காமல் ரிசானாவின்  தலை சீவப்பட்டுவிட்டது.சௌதி சிறைச்சாலைகளில் இன்னும் 'புத்தர் சிலையை வைத்திருந்தார்பைபிள் வைத்திருந்தார்மந்திரம்ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு கட்டியிருந்தார்என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரதண்டனை வழங்கப்பட்டு தலைசீவப்பட  காத்திருக்கிறார்களர்சௌதிதுபாய் போன்ற நாடுகளில் தொழிலாளர்களாகசென்றுள்ளவர்கள் தங்கள் தங்குமிடங்களில் தங்கள் தெய்வங்களை வணங்குவதைக்க தடுக்கும் அரசின் நடவடிக்கை குறித்து "அங்கேயும் போய் அநாச்சாரங்களை புகுத்த நினைத்தால் அரசாங்கம் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கையா பார்க்கும்என்று இசுலாமியர்கள் தங்கள் மதவெறியைக் கக்குகின்றனர்.ஆனால் பிற நாடுகளில் தங்களுக்கு மதவழிபாட்டு உரிமை வேண்டும் என்று கேட்கின்றனர்ஜனநாயகம் பேசுகின்றனர்.
            ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம் ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் சிலவரிகள் பின்வருமாறு:
            'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும் உண்டா என்று கேட்டேன்அதற்கு அவர் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வதுஎன்று கேட்டார்என்றும், "என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா"என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டதுஎன்றும் எழுதியுள்ளார்இந்த இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல் பல மணிநேரம் கழிந்தது
                        போதுமான மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள் ஏற்படுத்தித் தராததால்கடைசி நிமிடங்கள் வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால் மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின் கருணைமீது நம்பிக்கையுடன் வருட காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச் சிறுமி.ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்களஇந்த 7 வருட சிறைதண்டனையே இதற்கு அதிகம்ஆனால் மரணதண்டனை…….
            எனது காதில் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வதுஎன்ற ரிசானா நபீக்கின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதாகேட்டால் இந்த காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும், மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக வாழுங்கள்.
ஒன்றை மறந்துவிடாதீர்கள்ரிசானா நபீக்கின் சீவப்பட்ட தலை புதைக்கப்படவில்லைவிதைக்கப்பட்டுள்ளது.ஒருநாள் அரபு தேசங்களின் தொழிலாளர்கள் இதற்கு பழிவாங்குவார்கள்.
ஏழை ரிசானாவின் குடில்

நன்றி : நக்கீரன்ஆனந்தவிகடன்



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அல்லாவின் திருப்பெயரால்… ….

>> Wednesday, February 6, 2013

 

கடந்த இரண்டு வார காலமாக, தமிழகத்தில் நீடித்து வந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.  விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, இஸ்லாமியர்கள் தரப்புக்கும், கமல்ஹாசன் தரப்புக்கும் தமிழக அரசு நடத்திய கட்டப்பஞ்சாயத்தின் மூலம் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக, போராட்டங்களை விலக்கிக் கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.  கமல் தரப்பு 7 காட்சிகளில் ஒலியை நீக்குவது, குறைப்பது உள்ளிட்ட சமரசங்களுக்கு ஒப்புக் கொண்டதால், இன்று (03.02.2013) மதியம், அனைத்து மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
Kamal-Sir-4
காட்சியை நீக்குவதாக கமல் ஒப்புக் கொண்டதோடு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்ற ஒப்பந்தம், கமலின் கையை முறுக்கி கையெழுத்திட வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.    மராட்டிய மாநிலம் தொடர்பாகவோ, மராட்டியர்கள் தொடர்பாகவோ, திரைப்படத்தில் கிண்டலாகவோ, கேலியாகவோ ஏதாவது காட்சிகள் வந்தால், அப்படம் வெளியாகும் தியேட்டர்களை சிவசேனை குண்டர்கள் அடித்து நொறுக்குவதும் பின்பு சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், பால் தாக்கரேவின் காலில் விழுந்து, தங்கள் திரைப்படத்தை காப்பாற்றிக் கொள்வது போன்றதொரு காட்சி தமிழகத்திலும் அரங்கேறியிருக்கிறது.
இத்திரைப்படம் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவு படுத்துகிறது என்று தமிழக இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்தன.  இங்கு இஸ்லாமிய அமைப்புகள் என்று குறிப்பிடுவது, அந்த அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே.  தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், இறை நம்பிக்கையோடு, உழைத்து தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள்.  ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் என்று இஸ்லாமிய மக்களின் பெயரால் பிழைப்பு நடத்தி வரும் அமைப்புகள் மட்டுமே, ஒரு திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகக் காட்டியதால் இஸ்லாத்தே இழிவுபடுத்தப்பட்டு விட்டது என்று கூக்குரலிட்டு, இத்தனை களேபரங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
DSC_0241
ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மதம், பல கோடி மனிதர்களால் பின்பற்றப்பட்டு, வளர்க்கப்பட்டு வரும் ஒரு மதம், ஒரே ஒரு திரைப்படத்தால் இழிவு படுத்தப்படும் என்று பிரச்சினை செய்யும் இந்த மதவாதிகள், உண்மையிலேயே, இஸ்லாமை அறிந்திருக்கிறார்களா என்ற சந்தேகமே ஏற்படுகிறது.  எத்தனையோ நெருக்கடிகளையும், போர்களையும் தாண்டியும் இன்று இஸ்லாத் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.  ஒரு திரைப்படமா இஸ்லாத்தை இழிவுபடுத்தி விடும் ?
இஸ்லாமியர்கள், இந்தியா முழுக்க பரவலாக இருக்கிறார்கள். விஸ்வரூபம் திரைப்படம், தமிழகத்தைத் தவிர, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்டு கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  ஐதராபாத்திலும், கேரளாவிலும் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.  எந்த இடத்திலும், இஸ்லாமியர்கள் இத்திரைப்படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியதாக தகவல் இல்லை.   பெரும்பாலான இடங்களில் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடி வருகிறது.  ஆனால், தமிழகத்தில் உள்ள மதவாதிகள், தமிழகத்தின் அனைத்து இஸ்லாமியப் பிரதிநிதிகள் போல, நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், வெட்டுவோம், கொளுத்துவோம் என்று மிரட்டி அந்த மிரட்டலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட பிடிவாதத்தின் காரணமாக, இந்த மதவாதிகளின் கோரிக்கைக்கு, தமிழக அரசின் ஆதரவு கிடைத்தது. விஸ்வரூபம் திரைப்படத்தை வைத்து, ஜெயலலிதா தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். மதவாதிகள், நாங்கள் நினைத்ததை நிறைவேற்றியே தீருவோம்… எங்களைப் பகைத்துக் கொண்டால், எதுவும் நடக்காது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாக இறுமாந்து இருக்கிறார்கள்.   இந்தப் பிரச்சினையின் வீச்சு என்ன, இதன் எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஜெயலலிதா உணர்ந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை… ஆனால் மதவாதிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
உள்துறைச் செயலாளரிடம் புகார் கொடுத்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், இத்திரைப்படம் முழுக்க முழுக்க, இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது.. அதனால், இப்படம் வெளியிடுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள்.  இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக வாதிட்ட, வழக்கறிஞர் சங்கர சுப்புவும், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த திரைப்படமும் முஸ்லீம்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், படத்தில் சில காட்சிகளை 7 நிமிடங்கள் குறைத்துக் கொள்ள கமல் தரப்பு ஒப்புக் கொண்டதால், திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.  முழுக்க முழுக்க இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், வெறும் ஏழு நிமிடங்கள் குறைப்பதால், எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய திரைப்படமாக மாறியது என்பது இந்த மதவாதத் தலைவர்களுக்கே வெளிச்சம்.
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள். 2001 கணக்கெடுப்பின்படி, இந்த 5.5 சதவிகிதம் 34,70,647.  தற்போது இந்தத் தொகை 50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம்.   இந்த 50 லட்சத்தில் 50 பேர் மட்டுமே இத்திரைப்படத்தை நிறுத்த வேண்டும், கொளுத்த வேண்டும் என்று முழக்கமிட்டவர்கள்.  இந்த 50 பேரின் பின்னால் இருப்பவர்கள் எப்படிப் பார்த்தாலும்  5 லட்சத்தைக் கூடத் தாண்டாது. இந்த 5 லட்சத்தைக் கழித்து விட்டால், மீதம் உள்ள 45 லட்சம் இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புபவர்கள்.  சகோதரத்துவத்தோடு, தங்கள் வாழ்வை உழைத்து வாழ வேண்டும் என்று நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள்.  இவர்களுக்கு, கடவுள் மனதில் இருக்கிறார்.  இவர்கள் இறைவனை மனதில் நினைத்து வாழ்வை நடத்துபவர்கள்.
An_Indian_Muslim_old_man
குரானில் சொன்னது போல,
"கடுமையாகச் சண்டையிடுபவன்,  மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம்  மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"(நபியே!) கூறுவீராக: ""தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பிவிடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்'.
இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.
உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது."
என்பது போன்ற பொன்மொழிகளைப் பின்பற்றி தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள்.  அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது, எவனோ ஒருவன் சினிமாவில் மோசமாகச் சித்தரிப்பதாலும், எவனோ ஒருவன் இறையை தவறாகப் பேசுவதாலும், இறைவனை இழிவுபடுத்தி விட முடியாது… ஏனெனில் இறைவன் மிகப்பெரியவன், அவன் கருணையே வடிவானவன் என்பதை உணர்ந்தவர்கள்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம்.  இதில் இஸ்லாமியர்கள் ஏற்கனவே சொன்னது போல 50 லட்சம் இருப்பார்கள்.  இதில் இந்த மதத் தலைவர்களின் பின்னால் உள்ளவர்கள், சுமாராக 5 லட்சம்.  இந்த 5 லட்சத்திலும், தியேட்டர்களில் கல்லெறிபவர்கள், மதவாதிகளின் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு துணை சென்று, இதையே பிழைப்பாக வைத்திருக்கும் இவர்கள் அதிகபட்சம் 10 ஆயிரம் இருப்பார்கள்.  இந்த 10 ஆயிரம் பேருக்கு வேறு பிழைப்பு இல்லை.  எங்கே எப்போது பிரச்சினையை உண்டு பண்ணலாம்.  எந்த இடத்தில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கலாம் என்று காத்துக்கொண்டே இருப்பார்கள்.
"ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்." என்கிறார் நபிகள்.  ஆனால் இந்த மதவாதிகளின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் எல்லையே இல்லை. பணம், பதவி, பகட்டு, சொகுசு என்ற இவர்களின் தேவைகளுக்கு அளவே கிடையாது.
உன் சகோதரனுக்கு உதவி செய் என்கிறது இஸ்லாம்.  இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ?  இதே தேசத்தில் கல்வியறிவு இல்லாமலும், வறுமையிலும் வாழும் இஸ்லாமியர்களின் நிலையை மேம்படுத்த வேண்டுமா   இல்லையா ? ஆறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் தலைமையிலான குழு, முஸ்லிம்களின் கல்வியறிவு, முஸ்லிம் பட்டதாரிகளின் சதவிகிதம், பள்ளிப் படிப்பை கூட நுகராத முஸ்லிம்களின் நிலை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் வாழும் முஸ்லிம்களின் சதவிகிதம், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்கள் உணவு, உடை, இருப்பிடம் இல்லாத வாழத் தகுதியற்ற நிலையில் இருக்கும் நிலை, குடிநீர், கழிப்பிட வசதியின்றி வாழும் முஸ்லிம்கள், 88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை என்பது உள்ளிட்ட முஸ்லிம்களின் சமூக வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
மதக் கலவரங்கள் ஏற்படும்போது முஸ்லிம் சமுதாயம் அதிகளவில், பொருளாதார சூறைக்கும், உயிர் பலிக்கும் ஆளாவதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பரிந்துரை செய்திருந்தார் நீதிபதி சச்சார். பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம் பிரதிநிதித்தவம் வெறும் 3 சதவீதம்தான் என்கிறது சச்சார்  அறிக்கை. இதன்படி, பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இருக்கின்ற காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு.  இந்த பரிந்துரைகளில் ஒன்றாவது அமல்படுத்தப்பட்டிருக்கிறதா ?  சென்னை நகரையே எடுத்துக் கொண்டால், சென்னையில் எத்தனை இஸ்லாமியர்கள் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள் ?  விரல் விட்டு எண்ணி விடலாம்.
இதையெல்லாம் அமல்படுத்த வேண்டும் என்று இந்த இஸ்லாமிய அமைப்புகள் போராடியிருக்குமேயானால், இவர்களோடு, தோளோடு தோள் நின்று, போராட மனித உரிமையாளர்களும், நடுநிலையாளர்களும் களத்தில் குதித்திருப்பார்கள்.  ஆனால், அற்பத்தனமான, ஒரு திரைப்படத்திற்காக, கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும் இந்த மதவாதத் தலைவர்களின் உண்மை முகங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
திரைப்படம் எடுத்தவனை அடாவடி செய்து, மிரட்டுவது…..  முகநூலில் முண்டா தட்டுவது…. எங்களை ஏன் இப்படி இழிவுபடுத்துகிறீர்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு முகநூலில் மணிக்கணக்காக எழுதுவது … இப்படி முகநூலில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், ஒரே ஒரு இஸ்லாமியனுக்காவது இது பயனளிக்குமா ?   இதையா நபிகள் சொன்னார் ?
விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை பல உண்மைகளை உணர வைத்தது.  பல காலமாக நெருக்கமாகப் பழகிய இஸ்லாமிய நண்பர்கள் ஒரே நாளில் விரோதிகளானார்கள்.  பேசுவதை நிறுத்தினார்கள்.   நீ ஒரு ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்றார்கள்.  வலதுசாரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறாய் என்றார்கள்.  அடையாளம் தெரியாமல், பின்னூட்டம் போட்டு மிரட்ட நினைக்கும் இவர்கள், இதே சவுக்கு தளம், அஜ்மல் கசாப்புக்கு உரிய உரிமைகளை வழங்காமல் இரவோடு இரவாக தூக்கிலிட்டதைக் கண்டித்து எழுதிய ஒரே ஊடகம் சவுக்கு மட்டுமே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.  வெளிப்படையாக சவுக்கு தளம் அதைக் கண்டித்து எழுதியபோது, இவர்கள் அஜ்மல் கசாப்புக்காக ரகசியமாக தொழுகை நடத்தினார்கள்.
நான்கு ஆண்டுகளாக நெருக்கமாகப் பழகிய ஒரு தோழர், தாலிபான்கள் விடுதலைப் போராளிகள்… அவர்களை கமல்ஹாசன் விமர்சிப்பதே தவறு என்றபோது, அதிர்ச்சி மட்டுமே மேலிட்டது.  அத்தோடு நிற்காமல், அவர், தாலிபான்களையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பிட்டுப் பேசினார்.  புலிகள் இயக்கம், பெண் புலிகளை உருவாக்கி போர்க்களத்திற்கு அனுப்பியது.  தாலிபான்கள், பெண்களை முக்காடிட்டு, இருட்டில் அடைக்கிறார்கள்.  யாரை யாரோடு ஒப்பிடுவது ?   இத்தனை ஆண்டுகளாக, தாலிபான்களை விடுதலைப் போராளிகளாக நினைத்த ஒருவருடனா பழகியிருக்கிறோம் என்ற அதிர்ச்சி மட்டுமே எஞ்சி நிற்கிறது.    தாலிபான்களை விடுதலைப் போராளிகள் என்று கூறும் ஒரு நபரிடம் என்ன விவாதிப்பீர்கள் ?  அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது ?
முகநூலில் நடைபெறும் பெரும்பாலான விவாதங்களில் கூறப்படும் ஒரு விஷயம், இந்து தீவிரவாதம்.  இந்து தீவிரவாதத்தில் ஈடுபட்ட கர்னல் புரோகித் மற்றும் பெண் சாமியாரிணி சாத்தி பிரக்ஞா சிங் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டாம் என்று யாருமே கூறவில்லை.  அவர்கள் செய்ததையும் யாரும் நியாயப்படுத்தவில்லை.  ஆனால், தீவிரவாதச் செயல்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபட்டதில்லையா ?  மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…!!!
இந்தியாவில் நடந்த முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களின் பட்டியல் இதோ…
1993 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 257, 1993 சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு மரணம் 11, 1996 பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 33, 1997 பாண்டியன் எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மரணம் 3, செங்கோட்டை துப்பாக்கிச் சூடு மரணம் 3, காஷ்மீர் சட்டசபை தாக்குதல் மரணம் 38, பாராளுமன்றத் தாக்குதல் மரணம் 7, 2002 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 12, 2002 மும்பை பஸ் வெடி குண்டு மரணம் 2, 2002 கர்னூல் ரயில் தகர்ப்பு மரணம் 20, 2002 அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் மரணம் 31, 2003 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 1, 2003 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 11, 2003 மும்பை பஸ் வெடிகுண்டு மரணம் 4, 2003 மும்பை கார் குண்டு வெடிப்பு 52, 2005 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 13, 2005 புதுதில்லி தீபாவளி குண்டு வெடிப்பு 70, 2006 வாரணாசி குண்டு வெடிப்பு மரணம் 21, 2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 209, ஐதராபாத் லும்பினி பார்க் குண்டு வெடிப்பு மரணம் 42, 2007 லூதியானா தியேட்டர் குண்டு வெடிப்பு மரணம் 6, 2007 வாரணாசி, லக்கோ மற்றும் பைசாபாத் குண்டு வெடிப்பு மரணம் 16, 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மரணம் 63, 2008 பெங்களுரு சின்னசாமி விளையாட்டரங்க குண்டு வெடிப்பு மரணம் 2, 2008 அகமெதாபாத் தொடர் குண்டு வெடிப்பு மரணம் 29, 2008 டெல்லி மார்க்கெட் குண்டு வெடிப்பு மரணம் 21, 2008 இம்ப்பால் குண்டு வெடிப்பு மரணம் 17, 2008 தாஜ் ஓட்டல் தாக்குதல் மரணம் 171, 2010 பூனா பேக்கரி குண்டு வெடிப்பு மரணம் 17, 2011 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 18, 2011 டெல்லி நீதிமன்ற குண்டு வெடிப்பு மரணம் 10. இந்த அத்தனை குண்டு வெடிப்புகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் / தண்டிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
20081101T125107Z_01_DEL07_RTRMDNP_3_INDIABLASTASSAM
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு ஆகிய இரண்டில் மட்டும்தான் இந்து தீவிரவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா ?  இந்து தீவிரவாதம் இருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா ?  யாரும் மறுக்கவுமில்லை… மறைக்கவுமில்லை.  ஆனால், மீதம் உள்ள அத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் ?  அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளா ?  பம்பாய் படத்தை இயக்கியதற்காக, இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டில் குண்டு வீசியது யார் ?
இந்த குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் நாத்தீகர்களா ?  மார்க்சியம் பேசுபவர்களா ?  அவர்களும் ஐந்து வேளை தொழுகிறார்களா இல்லையா ?  குரான் படிக்கிறார்களா   இல்லையா ?
ஆப்கானிஸ்தானில் குண்டு வைக்கப்படுவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவன், கோவையிலும் மதுரையிலும் தங்கியிருந்ததாகவும் ஒரு திரைப்படம் எடுத்தால் அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து, இத்தனை அராஜகமா ?   கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் போலச் சித்தரிக்கிறார் என்று கூறும் மதவாதிகளே…. நீங்கள் செய்யும் காரியத்தால்தான் அப்படி ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது.  தாலிபான்களை தீவிரவாதிகளாகக் காண்பித்தால் தமிழக முஸ்லீம்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறதா  இல்லையா ?   நீங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா.. இல்லை தாலிபான்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுமா எழாதா ?
இந்த மதவாதிகள் விஸ்வரூபம் படத்தில் ஏற்படுத்திய பிரச்சினைகளால் ஏற்பட்டிருக்கும் சேதம் குறைவானதல்ல.  சாதாரணமாக, எவ்வித அரசியல் பிரக்ஞையுமின்றி, இயல்பாக தன் வாழ்வை நடத்தும் ஒரு நடுத்தர வர்க்க இந்து, இஸ்லாமியர்களை எடுத்த எடுப்பில் திட்டுகிறான்…. ஏன் இப்படிச் செய்கிறார்கள்….  இந்தப் படம் வந்தால் என்ன குடி முழுகப் போகிறது.. என்று கேட்கிறார்கள்….   ஏன் இவர்களைப் பற்றிப் படம் எடுக்கக் கூடாதா ? இது ஜனநாயக நாடுதானே என்று கேட்கிறார்கள்.
நாளை ஒரு வேளை தப்பித் தவறி, ஒரு மதக்கலவரம் உருவானால், அதனால் பாதிக்கப்படப் போவது யார் தெரியுமா ? பீடி சுற்றி பிழைக்கும், கறிக்கடை வைத்திருக்கும் ஏழை இஸ்லாமியன்தான் பாதிக்கப்படுவான்.  இன்று அரசோடு பேச்சுவார்த்தை நடத்தும், இந்த இஸ்லாமியத் தலைவர்கள் ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது.  அனைத்தும் நடந்து முடிந்தபிறகு, ஆறுதல் சொல்ல வருவார்கள்.
விஸ்வரூபம் திரைப்படத்துக்காக இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன் யார் தெரியுமா ?   மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு இஸ்லாமியச் சிறைவாசியை பரோலில் அனுமதிக்க மறுத்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்று, ஒரு சிறை அதிகாரியை கொலை செய்ததற்காக வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று கோவையில் இருந்து வருபவர்தான் அபுதாஹிர்.  இந்த அபுதாஹிரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன.  இதயமும் பலவீனமாக உள்ளது.  இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதால், வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும்.  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, இவருக்கு சிறுநீரக தானம் செய்ய யாரும் முன்வராததால், இவர் தினந்தோறும் மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  இவரை சிறை விதிகளின் படி, 90 நாட்களுக்கு பரோலில் அனுப்ப வேண்டும் என்று இவரது சகோதரர் உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கிறார்.  இந்த ராஜகோபால், அவரது மனுவை நிராகரிக்கிறார்.  90 நாட்கள் பரோலில் அனுப்ப உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார், 24.08.2012 அன்று கீழ்கண்டவாறு உத்தரவிடுகிறார்.
Rajagopal_IAS_2
உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன்
"Considering the medical report dated 10.08.2012, the Writ Petition is disposed of with a direction to the first respondent (Home Secretary) to grant leave to the petitioner's brother, the life convict No. 1487 for 90 days from 30.08.2012 on condition that the petitioner's brother shall report before the Ukkadam police station once in 15 days between 10 am to 12 noon"
10.08.2012 நாளிட்ட மருத்துவ அறிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையில், மனுதாரரின் சகோதரரான வாழ்நாள் சிறைவாசி (தண்டனைச் சிறைவாசி எண் 1487)க்கு 90 நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்குமாறும், அந்தச் சிறைவாசியின் சகோதரரான மனுதாரர், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை உக்கடம் காவல் நிலையத்தில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து பரோல் வழங்குமாறு உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
நான் முடியாது என்று உத்தரவிட்ட பிறகு, அதற்கு மேல் உத்தரவிட நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்போடு நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையிலேயே சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன்.  இந்த சீராய்வு மனுவை நீதிபதி பால் வசந்தகுமார் 14.09.2012 அன்று தள்ளுபடி செய்கிறார்.
தீர்ப்பு வழங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், அத்தீர்ப்பை அமல்ப்படுத்தவில்லை ராஜகோபாலன்.  29.09.2012 அன்று ராஜகோபாலனுக்கு, உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது என்று வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப் படுகிறது.  இந்த வழக்கறிஞர் அறிவிக்கைக்குப் பிறகு, நீதிபதி பால் வசந்தகுமாரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன்.  அந்த மேல்முறையீட்டு மனுவை, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இக்பால், வேறு டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி உத்தரவிடுகிறார்.  தற்போது இந்த வழக்கு நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் தேவதாஸ் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, மேலும் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவமனையில் சரியன சிகிச்சை வழங்கப்படாததால், தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில், டயாலிசிஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அபுதாஹிர்.  கடந்த 18.01.2013 அன்று அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர் மருத்துவர்கள்.  அன்று சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அபுதாஹிரின் உடல்நிலையைப் பார்வையிட்ட சிறை அதிகாரிகள், அவரை சிறையில் அனுமதிக்க முடியாது…. மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்று கூறியதன் அடிப்படையில் 19.01.2013 முதல் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார்.  இன்று (04.02.2013) மாலை நிலவரப்படி, அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
உள்துறைச் செயலாளரான ராஜகோபாலன் ஐஏஎஸ் அபுதாஹிருக்கு பரோல் வழங்காமல் இருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எனக்கு உத்தரவு போட நீதிபதி யார்…. ?  புரட்சித் தலைவி அம்மாவின் அருளாசி பெற்ற ஒரே ஐஏஎஸ் அதிகாரி நான்தானே…. எனக்கு இல்லாத அதிகாரமா ?  அப்படியே நீதிமன்றம் உத்தரவு போட்டாலும், நான் பணிந்து விடுவேனா என்ற இறுமாப்பும் திமிரும் மட்டுமே இதற்கான காரணம்.
அந்த உள்துறைச் செயலாளரிடம்தான், இந்த இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படத்துக்காக மணிக்கணக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன.  மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியனை, தன் இறுதி நாட்களில் குடும்பத்தோடு இருந்து மரணத்தைத் தழுவுவதற்கு இந்த இஸ்லாமிய அமைப்புகள் உதவியிருக்க வேண்டுமா இல்லையா ?  அபுதாஹிருக்கு பரோல் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்து என்று இந்த 24 இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமா இல்லையா ?  இந்த இஸ்லாமியனுக்காக போரட்டம் நடத்துவதை விட, விஸ்வரூபம் திரைப்படம் முக்கியமா ?
துப்பாக்கித் திரைப்படத்துக்காகவும், விஸ்வரூபம் திரைப்படத்துக்காகவும், ஒன்று கூடிய 24 இஸ்லாமிய அமைப்புகள், சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவோ, அபுதாஹிர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்ப்படுத்தவோ, இவ்வாறு ஒன்று கூடவில்லை என்பதிலிருந்தே  இவர்கள் இஸ்லாமியர்களின் பெயரைக் கூறி பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் என்பது புரிகிறதா இல்லையா ?  இஸ்லாமியர்களின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறையை விட, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடைக்கண் பார்வையில் இருக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை இருக்கிறது.
இன்று இஸ்லாமிய அமைப்புகளின் பெரும் தலைவர்களாக இருக்கும் சிலர், தமிழகத்தில் நடந்த பல குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.  அவர்கள் உத்தரவின்படி குண்டு வைத்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள்…. உத்தரவிட்டவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் குடும்பங்கள் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று என்றைக்காவது இத்தலைவர்கள் அக்கறை பட்டதுண்டா ?
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனையாகி, சிறையில் இருக்கும் அஸ்ரப் அலி என்பவரின் சகோதரி ஆமினா என்பவர், வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.  அவரின் வறுமையைப் போக்கவோ, அவர் வாழ்வை செழிக்க வைக்கவோ எந்த உதவியும் செய்யாத, அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், குரானுக்கு எதிராக பாலியல் தொழில் செய்தார் என்ற காரணத்தால் அவரைக் கொலை செய்து, அவர் உடல் பாகங்களை சிதைத்து வீசியெறிந்தனர்.  இதுதான் இவர்களின் இரட்டை வேடம்.
கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோடு, சாதாரண முஸ்லீம்கள் பழகுவதைத் தவிர்க்கிறார்கள்.  இவர்களோடு பழகினால், போலீஸ் தொந்தரவு வரும் என்று விலகியே இருக்கிறார்கள்.   கடுமையான வறுமையில் இருக்கும் இவர்களின் குடும்பங்கள், ஆட்டோ ஓட்டியும், பஜாரில் திருட்டு விசிடி விற்றும், பிழைத்துக் கொண்டிருக்கின்றன.
1997ம் ஆண்டு பாண்டியன் விரைவு வண்டி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கூறி, 19 வயது இளைஞர் கைது செய்யப்படுகிறார்.  12 ஆண்டுகள் கழித்து, அவரை நிரபராதி என்று 2010ம் ஆண்டு விடுதலை செய்தது நீதிமன்றம்.  தன் இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்த அந்த இளைஞர், இன்று பிழைக்க வழியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.  அந்த இளைஞருக்கு என்ன செய்தன இந்த இஸ்லாமிய அமைப்புகள்…. குறைந்தபட்சம் அந்த இஸ்லாமிய இளைஞர் எங்கிருக்கிறார் என்பதாவது இந்த அமைப்புகளுக்குத் தெரியுமா ?
எங்காவது ஒரு குண்டு வெடிப்பு நடந்தால் சமூகத்தைத் திருப்தி செய்வதற்காக, கையில் கிடைத்த முஸ்லீம்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு.  யார் குற்றம் செய்தவன்… யார் செய்யாதவன் என்ற பாரபட்சமெல்லாம் பார்க்காமல், இக்குற்றத்தை கண்டு பிடித்து விட்டோம் என்று சமூகத்தை சமாதானப்படுத்துவதற்காக அப்பாவிகளைக் கூட காவல்துறை கைது செய்யத் தயங்காது.
அது போன்ற அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமையாளர்களும், ஜனநாயகவாதிகளும், மதத்தின்பால் அல்லாமல் மனிதத்தின்பால் போராடிக்கொண்டிருக்கிறோம்.   ஆனால், அந்த ஜனநாயகவாதிகளையும், மனித உரிமையாளர்களையும் முகம் சுளித்து ஒதுங்க வைக்கும் வேலைகளைத்தான் இந்த மதவாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
விஸ்வரூபம் திரைப்படத்தில் ஏற்படுத்திய பிரச்சினையால், இஸ்லாமிய சமுதாயத்துக்கு இழப்பே அதிகம்.  ஒரு சிலர், அரசைப் பணிய வைத்து, அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, சமுதாயத்தில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள்.  இஸ்லாமியர்களை ஒரு தீவாக மாற்றி விட்டார்கள்.
இனி எந்த திரைப்பட இயக்குநரும், திரைப்படங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு பாத்திரமாக வைக்கக் கூட தயங்குவார்கள்.  இஸ்லாமியர்களின் கேரக்டரே இல்லாத வகையில் கதையமைப்பார்கள்.  இஸ்லாமிய சமூகத்தின் வாழ்க்கை முறை, சூழல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவை தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறாமலேயே போய் விடும் அபாயம் விஸ்வரூப சர்ச்சையால் ஏற்பட்டிருக்கிறது.
மலையாளத்தில் 2011ம் ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு என்று ஒரு திரைப்படம் உருவானது.  ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஹஜ் பயணம் எவ்வளவு முக்கியமானது….  அந்தப் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன…. எப்படிப்பட்ட மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்று அற்புதமாக எடுத்துரைத்த ஒரு படம்.  சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக 2011ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அது.
Adaminte_Makan_Abu
ஆயுஷும்மா மற்றும் அபு ஆகிய இருவரும் மலபார் பகுதியில் வசிக்கும் மாப்ளா முஸ்லீம்கள்.  எழுபது வயதாகும் அபு ஒரு அத்தர் வியாபாரி.  அவர்களின் ஒரே மகன், அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அவர்களை மறந்து விடுகிறான். எப்படியாவது அந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல வேண்டுமென முடிவெடுக்கும்அபு, அது வரை அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை சேமிப்புகளையும் கணக்கிட்டால் மிகவும் குறைவாக இருக்கிறது.  ஆயுஷும்மா அவள் ஆசையாக வளர்த்து வந்த கோழிகளையும், மாடுகளையும் விற்கிறார். அப்போதும் பணம் குறைவாக இருக்கிறது.  ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒரு பிராமணர், அபுவின் நண்பர்.  அவர் அபுவுக்காக பணத்தை கடனாக அளிக்கிறார்.  கடன் பெற்று ஹஜ் செல்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அவர் அந்த உதவியை அன்போடு மறுக்கிறார்.
இறுதியாக வாசலில் இருக்கும் பலா மரத்தை வெட்டி விற்றால் பணம் முழுமையாக வரும் என்று உணர்ந்து பல ஆண்டுகளாக வீட்டு வாசலில் இருக்கும் பலா மரத்தை மர வியாபாரிக்கு விற்கிறார். மரத்தை விற்பனை செய்து விட்டு, ஹஜ் பயணத்துக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அபுவுக்கு பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவரோடு சிறு சண்டை ஏற்பட்டது.  பக்கத்து வீட்டுக்காரர் அபுவை அப்போது அடித்து விடுகிறார்.  பல ஆண்டுகளுக்குப் பின்னால், அவரைத் தேடி அவர் குடியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, பல மைல்கள் பயணம் செய்து அவரைக் கண்டுபிடிக்கிறார்.  அந்த பக்கத்து வீட்டுக்காரர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
அபு அவரிடம் சென்று, நான் ஹஜ் பயணம் செல்கிறேன்.  எந்தக் கடனையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.  பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் உன்னோடு சண்டையிட்டேன்…  என்னை மன்னித்து விடு… என்று கேட்பார்.  அபுவை ஏற்கனவே அடித்திருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், கண்கணில் கண்ணீரோடு, நான் உன்னை அடித்ததற்குத்தான் ஆண்டவன் என்னை பக்கவாதத்தில் படுக்க வைத்துள்ளான் என்று அழுவார்.  இந்தக் காட்சி அபு என்ற மனிதனின் அற்புதமான குணத்தையும், ஹஜ் பயணம் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்துகிறது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தது.
ADAMINTE_MAKAN_1_853933f
பயண ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்க, ஹஜ் பயணத்துக்கான பொருட்கள், உடைகள் அனைத்தையும் நகரத்துக்கு சென்று வாங்கி  விட்டு, விசா பெற்றுக் கொண்டு கிராமத்துக்கு திரும்புவார்.  திரும்புகையில் மரக்கடைக்காரர், அவர் வெட்டிய பலாமரம் உளுத்துப் போயிருந்தது… எதற்கும் பயன்படாதது என்பதைக் கூறுவார்.   அபு இடிந்து போவார்.   ஆனால் அந்த மரக்கடைக்காரர், மரம் போனால் போகிறது….. உங்களது ஹஜ் பயணத்துக்கு எனது அன்பளிப்பாக அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று பணத்தைக் கொடுப்பார்.  அந்த பணத்தை வாங்க மறுத்து, சோகமாக வீடு தீரும்புவார் அபு.
வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியிடம்….  அந்தப் பலா மரமும் ஒரு உயிர்தானே…  அதைக் கொன்று நான் பாவமிழைத்து விட்டேன் அல்லவா ?  அதனால்தானோ என்னவோ இறைவன் என்னை ஹஜ் பயணத்துக்கு வர விடாமல் தடுத்து விட்டான் என்று கூறி விட்டு, ஒரு பலா மரக்கன்றை நடுவார்.
ஹஜ் பயணம் சென்றிருக்க வேண்டிய மறுநாள், தொழுகைக்குச் செல்லும் காட்சியோடு அத்திரைப்படம் நிறைவடையும்.
எத்தனை அற்புதமான திரைப்படம் பார்த்தீர்களா….. இப்படி ஒரு திரைப்படத்தை தமிழில் எடுக்கவில்லையென்றாலும், அபு போன்ற பாத்திரங்களைப் படைக்கும் சிறப்பான இயக்குநர்கள் தமிழில் இருக்கிறார்கள்.  அப்படி ஒரு சூழலை மறுத்து, முடக்கும் வேலையைத்தான் இந்த இஸ்லாமிய மதவாதிகள் செய்திருக்கிறார்கள்.
திரைப்படத்தை காரணமாக வைத்து, மதவெறியைத் தூண்டும் மதவாதிகளே…. !!! உங்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். ஒரு திரைப்படத்துக்காக சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மதவாதிகளே…  குரானின் இந்த வாசத்தைப்   படித்திருக்கிறீர்களா ?
"இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளி ஆக்கி விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்."
மனிதனின் சுதந்திரத் பறிக்கும் உங்களைப் பற்றி குரான் என்ன கூறுகிறது தெரியுமா ?
"(இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை; எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.
(நபியே) இந்நயவஞ்சகர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள் (எதற்கும் உதவாதவர்கள்). இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய் கருதுகின்றனர். இவர்கள் தாம் கடும் பகைவர்களாவர்."
சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மதவாதிகள் உண்மையில் சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்கள்.  அமைதியான சமூகத்தை சீர்குலைக்கும் பாவிகள்.  அவர்கள் அவர்களின் பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கட்டும். நமக்கு ஆதாமின் மகன் அபு போன்ற இஸ்லாமியர்களோடு மரியாதையும், நட்பும், அன்பும், தோழமையும் எப்போதும் உண்டு.  அந்த உழைப்பாளி இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள்.
c2
மதவெறியைத் தூண்டும் இந்தப் பாவிகளை, அளவிளாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய அல்லாவின் திருப்பெயரால் மன்னிப்போம்.


StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP