சமீபத்திய பதிவுகள்

ஆயிஷாவின் சக்காளத்தி(தொடர் கதை,வயது வந்தவர்களுக்கு மட்டும்)

>> Sunday, March 16, 2008

முஸ்தபா

ஒரு முஸ்லீம் இளைஞன்.ஆனால் இவன் இஸ்லாம் வழக்கப்படி குரான் ஓதுவது,ஐந்து நேர தொழுகை எல்லாம் செய்வதில்லை. இவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு.நல்ல அருமையான குடும்பம் சந்தோஷமாக போய் கொண்டிருந்தது.

 

இரண்டாவது

குழந்தை பிறந்தவுடன் முஸ்தபாவின் மனைவி ஆயிஷா கொஞ்சம் குண்டாகி விட்டாள்.இப்பொழுது முஸ்தபாவின் பார்வையில் தன் மனைவி ஆயிஷாவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரியவில்லை.இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக முஸ்தபா மாறிக்கொண்டிருந்தான்.அதாவது ஐந்து நேரம் பள்ளி வாசல் போக ஆரம்பித்தான்.குரான் ஓத ஆரம்பித்தான்.நபி அவர்களின் வாழ்க்கை புத்தகமான நன்நெறிகள் அடங்கிய ஹதித்களையும் படிக்க ஆரம்பித்தான்.

 

வழக்கமாக

அரபியில் குரான் ஓதி வந்த முஸ்தபாவுக்கு திடீர் என்று ஒரு நாள் தமிழில் குரான் படிக்கும் ஆசை வந்தது.உடன் அருகில் உள்ள ஒரு புத்தக நிலையத்துக்கு சென்று தமிழ் குரான் வாங்கினான்.தினமும் தவராமல் படிக்க ஆரம்பித்தான்.சரியாக இரண்டு வாரங்களுக்கு பின் அவன் குர்ஆனின் நான்காம் அத்தியாயம் படித்துக்கொண்டிருந்தான்.அதில் இந்த கீழ் கண்ட வசனம் அவன் கண்ணில் பட்டது.

 

4:3

அநாதை

(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

 

அந்த

வார்த்தை அல்லாஹ்வே இவனிடம் சொன்னது போல் அவனுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது.மெல்ல தன் மனைவியிடம் சென்றான்.நீண்ட நாளுக்கு பின் தன் கணவன் தன்னிடம் அன்பாக பேசுவதை கண்ட அந்த அபலைப்பெண் மிகவும் சந்தோஷத்துடன் கணவனை நெருங்கி அமர்ந்துங்கொண்டாள்.

 

முஸ்தபா கொஞ்சம் நேரம் அவளை தாஜா செய்து விட்டு தான் வந்த வேளையை ஆரம்பித்தான்.

 

முஸ்தபா

:ஆயிஷா நான் உன்னை எப்படி நேசிக்கிறேன் தெரியுமா?

ஆயிஷா:போங்க அத்தான்.இத்தனை நாள் இந்த நேசம் எல்லாம் எங்க போச்சு.மொதல்ல எல்லாம் என்னொடு நன்ராக பேசுவீங்க.இப்ப எல்லாம் தொழுகை,குரான்னு அதுலயே கிடக்கிறிங்க.

முஸ்தபா:அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஆயிஷா.அல்லாஹ்வையும்,அவன் அனுப்பிய நபி(ஸல்)அவர்களையும் நாம் தினமும் நினைக்க வேண்டும்.அவர்கள் குரான்,ஹதீசில் என்ன சொன்னார்களோ அதை செய்ய நாம் ஒரு போது தயங்கவே கூடாது.

ஆயிஷா:நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்.சரி வேற எதையாவதும் பேசுங்க.

முஸ்தபா:ஆயிஷா குரானை பத்தி பேசத்தான் உங்கிட்ட வந்தேன்.உனக்கு குரான் மேல் நம்பிக்கை இருக்கில்ல.

ஆயிஷா:என்னங்க இப்படி கேட்டுடீங்க.அதனால தான் நான் முஸ்லீமாவே இருக்கிறேன்.

முஸ்தபா:குரானில் 4:3 ல் என்ன அல்லாஹ் சொல்லியிருக்கார்ன்னு படிச்சுப்பாரேன்.

 

(

குரான் தமிழாக்கத்தை எடுத்து அந்த பக்கத்தை எடுத்துக்கொடுக்கிறான்.ஆயிஷாவும் அதை படிக்கிறாள்.படித்தவுடன் அவள் முகம் சந்தேக ரேகைகளுடன் உடன் அவனை நோக்கிப் பார்க்கிறாள்)

ஆயிஷா:இதில் என்ன சொல்லி இருக்குன்னு எனக்கு புரியலீங்க.

முஸ்தபா:இதுக்குத்தான் தினமும் குரான் படிக்கனும்ன்னு சொலறது.

பிடித்தமானபெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),

அதவாது இந்த வசனம் சொல்லுது நல்ல வசதி இருந்தா இரண்டிரண்டா,இல்லாட்டி மூன்று மூன்றா ,அதும் இல்லாட்டி நாலு நாலா நீங்கள் கல்லீயாணம் செய்யலாம்ன்னு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு சொல்லியிருக்கார்.

 

ஆயிஷா;நபி அவங்களுக்குத்தானே சொல்லியிருக்கார்,அதக்கு நமக்கு என்னங்க பிரச்சனை.

முஸ்தபா

:முண்டம்,குரானில் சொன்னது எல்லாம் உலகில் கடைசி வரை உள்ள முஸ்லீம் எல்லார்க்கும் உரியது தான்.

ஆயிஷா:அப்படின்னா ஏங்க நபி(ஸல்) அவர்கள் மட்டும் பதினோரு கல்லீயானம் செய்தார்கள்ன்னு சொல்றாங்க.

முஸ்தபா:ஐயோ,அதுவும் குரானில் இருக்குதே.

 

33:50

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51

 

அவர்களில்

நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

 

இந்த வசனங்கள் எல்லாம் நபிகள்

(ஸல்)அவர்கள் கல்லியாணத்தை பத்திதான் சொல்கிறது.அல்லாஹ் அவருக்கு மட்டும் கொடுத்த ஸ்பெசல் பர்மிஷன்.ஆயிஷா நம்ம வீட்டு பக்கத்தில் இருகிற மும்தாஜ் பற்றி  நீ என்ன நினைக்கிற?

 

ஆயிஷா

:என்னங்க நினக்கிறது,14 வயசுல ஒரு பெண் பிள்ளை அவள் கணவன் சாஜகான் இறந்து போயிட்டார்.அவள் தான் கஷ்டப்பட்டு தன் பெண்பிள்ளையை வளர்த்தி வருகிறாள்.அத ஏங்க இப்ப கேக்கரீங்க?

 

முஸ்தபா

:இல்லை மும்தாஜிக்கு ஏதாவதும் உதவி செய்யலாம் என்று தான் கேட்டேன்,

ஆயிஷா

:அதனால் என்னங்க தாராளமா செய்யளாம்.அல்லாஹ் நமக்கு பலன் கொடுப்பான்.

முஸ்தபா

:இல்லை ஆயிஷா அவளுக்கு மஹரா ஒரு பவுன் கொடுத்து ....

ஆயிஷா

:என்ன மஹரா,எதுக்கு?

முஸ்தபா

:அவளுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

ஆயிஷா

:அடப் பாவி மனுஷா,குத்துக்கல்லாட்டம் ஒருத்தி இங்க இருக்கேன் எங்கிட்டயே வந்து இன்னொருத்திய உனக்கு சக்காளத்தியா வச்சுக்கிறேன் சொல்றியே உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையில்ல.

முஸ்தபா

:என்னடி வாய்க்கு வந்தபடி பேசற.அல்லாவும்,நபி(ஸல்)சொன்ன வார்த்தைய கீழ் படிய நி என்ன எனக்கு தடைபோட முடியும்.(அவளை லேசாக அடிக்கிறான் அல்லாஹ் குரானில் சொன்னபடி,அவள் தலை எதேச்சையாக சுவற்றில் பட்டு மயங்கி கீழே சரிகிறாள்)

 

தொடரும்

............

 

 

 

 

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

3 கருத்துரைகள்:

Anonymous March 17, 2008 at 2:23 AM  

நல்ல கதை சீக்கிரம் அடுத்த பகுதியை தாருங்கள்

Anonymous March 17, 2008 at 3:02 AM  

இது உண்மையாக நடந்த கதை மாதிரி இருக்குதே,அப்படியா

Anonymous March 17, 2008 at 3:11 AM  

அவளுக்கு சக்காளத்தி இருந்தா யாருக்கு என்னவாம்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP