ஆனமடுவ தொகுதி ஐ.தே.க.அமைப்பாளர் சுட்டுக்கொலை
>> Tuesday, July 15, 2008
ஆனமடுவ தொகுதி ஐ.தே.க.அமைப்பாளர் சுட்டுக்கொலை | |
புத்தளம் மாவட்டம் ஆனமடுவ மகா கும்புக்கடவல பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐ.தே.க.வின் கட்சியின் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் குவைத் செல்லவிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வெள்ளை வானொன்றில் வந்த மூன்று ஆயுத பாணிகளே தனது கணவனைச் சுட்டுக்கொன்றதாக மனைவி தெரிவித்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான எச்.எம். ஜெயசிங்க என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இது தொடர்பான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். | |
|
0 கருத்துரைகள்:
Post a Comment