இன்று வியாழக்கிழமை 44 பொதுமக்கள் படுகொலை 178 பேர் காயம்
>> Thursday, January 29, 2009
| |
றிலங்கா கொடுங்கோல் அரசு அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரம் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும், சுதந்திரபுரம் அந்தோனியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லப்பட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் உடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் கிடக்கிறது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தாது என்று தனக்கு உறுதியளித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் இந்திய அரசும், இதனை பகிரங்கமாக சொல்லி பெருமைப்படும் தமிழக அரசும் ஈழத் தமிழர்கள் கூண்டோடு சாகத்தான் மெளனிகளாக காத்திருக்கின்றனவோ |
0 கருத்துரைகள்:
Post a Comment