உயிரோடு இருப்பவருக்கு சிலை வைக்கும் அறியாமை
>> Wednesday, November 24, 2010
உயிரோடு இருக்கும் இயேசுவுக்கு ஒரு சிலை வைத்து அதில் தங்க கிரீடம் வைக்கும் அறியாமையை நினைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இது தொடர்பில் போலந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், யேசு கிறித்தவை பெருமைப்படுத்தும் விதத்தில் மாபெரும் விழாவாக இந்நிகழ்வு கொண்டாடப்படுவதாகவும், 'இப்பிரபஞ்சத்தின் மாமன்னர் கிறிஸ்த்து' என பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை யாத்திரிகர்கள் ஏந்தியவண்ணம் இவ்விழாவில் கலந்துகொண்டதாகவும் கூறியுள்ளன.
இதுவரை உலகில் மிக உயரமான யேசு கிறிஸ்த்துவின் சிலையாக இருந்து வந்த பிரேஸிலின் ரியோ டி ஜனேரியோ, ரெடிமீர் கிரிஸ்த்து சிலையிலும் பார்க்க, போலந்திலுள்ள இச் சிலை மூன்று மீற்றர் உயரம் கூடியதாகும்.
இச்சிலை 33 மீற்றர் உயரம் என்ற போதும், 3 மீற்றர் உயரத்தில் தங்கக்கிரீடம் பொருத்தப்பட்டிருப்பதால் இச்சிலையின் மொத்த உயரம் 36 மீற்றர் ஆகும். இதன் மொத்த எடை 440 டொன் ஆகும்.
போலந்துக்கு வரும் கத்தோலிக்க யாத்திரிகள் மத்தியில் இச்சிலை மாபெரும் வரவேற்பை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
source:uyir
0 கருத்துரைகள்:
Post a Comment