சமீபத்திய பதிவுகள்

விந்து குறித்த குரானின் விந்தைகள்

>> Wednesday, March 14, 2012

 

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 15

விந்து வெளிப்படும் இடம் குறித்து அல்லது விந்து உருவாகும் இடம் குறித்து யாருக்கும் தற்காலத்தில் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குரானில் இது சரியாக குரிப்பிடப்படாததில் பெரிய பிழை ஒன்றுமில்லை. தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் அதை சரியானது தான் இன்றைய அறிவியல் தவறாக முடிவு செய்திருக்கிறது என்பவர்களை ஒதுக்கித்தள்ளலாம், ஏனென்றால் அவர்களுக்கு மதமும் தெரியாது அறிவியலும் தெரியாது. ஆனால் தவறான அதை சரியானது என்றும் இன்றைய அறிவியலும் அப்படித்தான் விளக்குகிறது என்பவர்களிடம் நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்மிடம் திணிக்க விரும்புவது அவர்களின் சலவை செய்யப்பட்ட கருவை.

குரான் 86:7 "முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது" இது தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மையை தாங்கியுள்ள வசனம். முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட அந்த இடம் எது? அது ஒரு உறுப்பா அல்லது உறுப்புகளின் கூட்டான ஒரு பகுதியா? என்பது பற்றியோ; தெளிவாக விளங்கிக்கொள்ள ஏதுவான பொருளோ அந்த வசனத்தின் சொற்களிடையே ஒன்றுமில்லை. இன்னும் துல்லியமாக கூறுவதென்றால், விரைகளின் பயன் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இயலா காலத்தில் வாழ்ந்த ஒருவரின், இங்கிருந்து இருக்கக்கூடும் எனும் ஊகத்திலான கூற்று அது. முகம்மதின் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலவிவந்த கிரேக்க கண்டுபிடிப்பு(!) அது. அதைத்தவிர வேறெந்த முக்கியத்துவமும் அந்த வசனங்களுக்கு இல்லை. என்றாலும், இப்போது அது பாமரர்களை மயக்குவதற்காக அறிவியலை அணைத்துக்கொண்டிருக்கிறது.

இதை எப்படி அறிவியலோடு பொருத்துகிறார்கள்? விரைப்பையில் விந்து உற்பத்தியானாலும் அது நேரடியாக அங்கிருந்து வெளிப்பட்டு விடாமல் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் வெளித்தள்ளப்படுகிறது. இதை இப்போதைய அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இதை ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு  படிப்பறிவில்லாத ஒருவரால் சொல்லியிருக்க முடியுமா? எனவே தான் குரானை இறைவன் தான் இறக்கினான் என கூறுகிறோம் என்கிறார்கள். விந்து விரைப்பையில் உற்பத்தியானாலும் செமினல்வெசிக்கிள்ஸ் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும், ப்ராஸ்டேட் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும் சேர்த்துக்கொண்டு தான் வெளியேறுகிறது. ஆனால் அந்த இரண்டு சுரப்பிகளும் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இல்லை என்பது தான் கவனிக்கவேண்டியது.

இந்த வசனத்திற்கு வேறொரு விளக்கமும் கொடுக்கிறார்கள். விந்து வெளிப்படும் விரைப்பு நிலைக்கான தூண்டுதல் முதுகந்தண்டிலிருக்கும் தண்டுவடத்திலிருந்து தான் கிடைக்கிறது எனவே இந்த வசனத்தின் பொருள் அதற்கும் பொருந்துவதால் இதை இறைவனின் வசனம் தான் என அறிவிக்கிறார்கள். ஆனால் விரைப்பு என்பது அனிச்சைச்செயலல்ல என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது மூளைதான். கூடவே மனத்தூண்டுதலும் இதற்கு முக்கியமானது. கொஞ்சம் பழைய மொழிபெயர்ப்புகளில் தான் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் எனும் சொற்களை பயன்படுத்தியிருந்தனர். ஆனால் அது பொருத்தமான சொற்களாக இல்லை என்பதால் புதிய மொழிபெயர்ப்புகளில் முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்று மாற்றிவிட்டார்கள். இப்படி காலத்திற்கு பொருத்தமாக அறிவியல் வளர்ச்சிகளுக்கு பொருத்தமான சொற்களை பயன்படுத்தி பொருள் சொல்லி அதையே அறிவியல் முன்னறிவிப்பாக மேடைகளில் காட்டும் போக்கை அறியாமை என்று அறுதியிட்டுவிட முடியாது.

இந்த வசனத்திற்கான தொடர்விளக்கங்கள் மேலும் வந்துகொண்டே இருக்கின்றன. என்னதான் வேறு சில சுரப்பிகளையும் சேர்த்துக்கொன்டாலும் விந்து வெளிப்படுவது விரையிலிருந்து தானே. அதை முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்றும் கூட  கூறமுடியாதே என்பதால், வெளிப்படும் விந்து திரவத்தில் விரைகளின் பங்கு ஐந்து விழுக்காடிற்கும் குறைவு தான் மீதி 95விழுக்காடிற்கு மேல் பங்களிப்பது செமினல்வெசிக்கிள்ஸ், ப்ராஸ்டேட் சுரப்பிகள் சுரக்கும் திரவம் தான் என்பதால் அந்த வசனம் குறிப்பிடுவது சரியானது தான் என நிறுவ முயல்கின்றனர். ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது. அந்த வசனம் மனிதனின் பிறப்பைப் பற்றியே பேசுகிறது என்பதால் மனிதனை உருவாக்கும் விந்து தான் மையப்படுத்தப்படுகிறது. வெளிப்படும் விந்துத்திரவத்தில் ஐந்து விழுக்காடிற்கும் குறைவான பங்களிப்பை செய்தாலும் விரைதான் முக்கியமான பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. விரை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் இல்லையென்றால் கரு உருவாவது சாத்தியமில்லை. இந்த உயிரணுக்களை பாதுகாப்பாக இலக்கில் கொண்டு சேர்க்கும் வேலையைத்தான் அந்த சுரப்பிகள் செய்கின்றனவேயன்றி, அந்த சுரப்பிகளால் கருவை உருவாக்க இயலாது. செமினல்வெசிக்கிள்ஸில் இருந்து சுரக்கும் திரவம் உயிரணுக்களின் நீண்ட பயணத்திற்கு தேவையான உந்துவிசையை தருகிறது. ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம் பாதையில் இருக்கும் அமிலத்தன்மையிலிருந்து உயிரணுக்களை பாதுகாப்பதற்கு தேவையான காரத்தன்மையை தருகிறது. என்றாலும், தப்பிப்பிழைக்கும் உயிரணுக்களில் ஏதாவது ஒன்றுதான் பெலோபியன் குழாயில் காத்திருக்கும் சினை முட்டையை துளைக்கிறது. சுலபமாக சொல்லவேண்டுமென்றால், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சையின் போது விரை உற்பத்திசெய்யும் உயிரணுக்களை கொண்டுவரும் குழாய் தான் துண்டிக்கப்படுகிறது. மற்ற இரண்டு சுரப்பிகளின் திரவம் வழக்கம்போல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் இந்த அறிவியலை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு உகந்ததை மட்டும் அறிவியலாக்குவது தான் மதவாதிகளின் மரபு.

விந்து குறித்த இன்னொரு விந்தையான தகவலும் குரானில் இருக்கிறது. வசனம் 76:2 கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்…… இந்த வசனத்தில் இருக்கும் கலப்பான இந்திரியத்துளி என்பதற்கு ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு பொருளைக் கொள்வதற்கு இந்த வசனத்தில் இடமில்லை. கலப்பான இந்திரியத்துளி என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்து குறிப்பிடுகிறது குரான். அவ்வாறன்றி ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் வேறுவேறு தன்மையிலானவை. உயிரணு, சினை முட்டை என்று அறிவியல் வளர்ந்த பிறகு மதவாதிகள் குறிப்பிட்டாலும், அந்த வசனம் விந்துத் திரவத்தைத் தான் குறிப்பிடுகிறது. அதாவது ஆண்களுக்கு நீர்த்த நிலையில் வெளிப்படும் விந்துவைப் போலவே பெண்களுக்கும் நீர்த்த நிலையில் ஒரு திரவம் வெளிப்படுகிறது. ஆண்களுக்கு உயிரணுவை தாங்கி வரும் விந்துவைப் போல் பெண்களுக்கு வெளிப்படும் திரவம் சினை முட்டையை தாங்கி வருவதில்லை. அத்திரவத்தின் பயன் உயவு மட்டும் தான். ஆனால் இந்த அறிவியல் ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த முகம்மது அதுவும் ஆண்களிடமிருந்து வெளிப்படுவதைப் போல்தான் என்று எண்ணிக்கொண்டு கலப்பு இந்திரியத் துளி என்று தன குரானைப்படைக்க, இன்று அதை மதவாதிகள் உயிரனுக்கலாகவும் சினை முட்டையாகவும் மொழிபெயர்க்கிறார்கள்.

எவ்வளவு தான் முயற்சித்து அறிவியலையும் வேத வசங்களையும் இணைத்து கட்டுப்போடும் வேலையைச் செய்தாலும் அவை ஒட்டுவதில்லை. ஏனென்றால் இரண்டும் எதிரெதிரானவை. அறிவியல் எப்போதும் மாறும் தன்மையுடையது. தொடர்ந்த ஆய்வுகளால் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது. ஆனால் வேதமோ எப்போதும் மாறாத, மாறவே கூடாத ஒன்று. இரண்டும் எப்படி ஓட்டும்?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்


source:senkodi

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP