சமீபத்திய பதிவுகள்

தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

>> Wednesday, March 14, 2012


  

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௭

"மனிதர்கள் அறிந்துகொள்வதற்காக இதை நாம் அத்தாட்சியாக ஆக்கிவைத்திருக்கிறோம்" குரானில் சில இடங்களில் இப்படி ஒரு அறிவிப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக ஃபிர் அவ்னின் உடல் குறித்த வசனம், நூஹின் கப்பல் குறித்த வசனம். குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அறிவிக்கப்பட்டிருந்தால் பின்னர் ஒரு நாளில் அந்த அத்தாட்சி வெளிப்படுத்தபட்டு குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை மெய்ப்பித்து நிற்கும் என்பது மதவாதிகள் அடிக்கும் ஜல்லி. ஆனால் குரானில் அல்லா அத்தாட்சி என அறிவித்து இன்னும் வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தமுடியாமல் (வெளிப்படுத்தினால் அதை பாதுகாக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு அறிவு(!) வேண்டுமல்லவா?) காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அத்தாட்சிகளும் குரானில் இருக்கின்றன.

 

"……. இதோ பாரும் உம்முடைய உணவையும் உம்முடைய பானத்தையும். அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை. ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும். உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக உயிர் பெறச் செய்கிறோம். ……" குரான் 2:259.

 

"இன்னும் நூஹின் சமூகத்தவர், அவர்கள் நம் தூதர்களைப் பொய்யாக்கியபோது, நாம் அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம். …." குரான் 25:37

 

இதில் முதல்வசனம் ஒரு கதை சொல்கிறது. அதில் ஒருவர் உணவும் குடிப்பதற்குப் பானமும் எடுத்துக்கொண்டு கழுதையில் பயணம் செய்கிறார். வழியில் ஒரு கிராமத்தைக் கடக்கும் போது அந்தக் கிராமத்தின் வீடுகள் இடிந்து கிடக்கின்றன. இதைக்காணும் அவர் மனதில் 'இப்படி வீடுகள் இடிந்து விழுந்து கொல்லப்பட்டவர்களை அல்லா எப்படி தீர்ப்பு நாளில் மீண்டும் எழுப்ப முடியும்?' எனும் ஐயம் எழுகிறது. உடனே அல்லா அவருக்கு புரியவைப்பதற்காக அவரை மரணமடையச் செய்கிறான். பின்னர் அவர் உயிர் கொடுத்து எழுப்பப்படுகிறார். எழுந்த அவர் சிறிது நேரம் உறங்கியதாக கருதுகிறார். அப்போது அசரீரியாக அல்லா பேசுகிறான், "எவ்வளவு காலம் இந்த நிலையில் இருந்தீர்?" "ஒரு நாள் அல்லது அதில் சிறிய பகுதி" "அவ்வாறல்ல, நூறாண்டுகள் மரணமடைந்து பூமியின்மேல் கிடந்தீர். உங்கள் உணவையும் பானத்தையும் பாருங்கள், அவை கெட்டுப்போகவில்லை. ஆனால் அந்தக் கழுதை" அப்போதுதான் அவர் பார்க்கிறார் செத்து மக்கிப் போய் கிடக்கிறது. "மக்கிப்போய் கிடக்கும் கழுதையைக் கவனியுங்கள் எப்படி அதன் எலும்புகளை ஒன்று சேர்த்து சதையைப் போர்த்துகிறோம் என்று பாரும். நீர் தெளிவடைவதற்கும், இனி வரும் மனிதர்களுக்கு அத்தாட்சியாகவும் அதனை உயிர்பெறச் செய்கிறோம்" பின் அவர் உணர்ந்து கொண்டு "அல்லா எல்லாப் பொருளின் மீதும் ஆற்றலுடையவன்" என்று கூறி தெளிவடைகிறார்.

 

இந்தக் கதையில் ஒரு மனிதன் தரையில் நூறு ஆண்டுகளுக்கு கிடக்கிறான். அவன் இறந்து கிடந்தாலும், உறங்கிக் கிடந்தாலும் உடலளவில் குறைந்தபட்ச சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால் நூறு ஆண்டுகள் கழித்து, சில மணிநேரம் உறங்கியதாகத்தான் ஆண்டவனுக்கு பேட்டியளிக்கிறார். நம்பகத்தன்மைக்கே அத்தாட்சி தேவைப்படும் நிலையில் ஒரே இறைவனால் மனிதனுக்கு வழிகாட்ட தரப்பட்ட வேதத்தில் இருக்கும் இந்தக் கதைதான் மனிதன் மீண்டும் எழுப்பப்படுவான் என்பதற்கு அத்தாட்சியாம். விருப்பப்படுபவர்கள் நம்பிக்கொள்ளலாம். போகட்டும், இதில் அத்தாட்சி என்பது எது? கழுதையா? மனிதனா? எந்த விதத்தில் அது மீள் சாட்சியாகப் போகிறது?

 

இரண்டாம் வசனம் மனிதர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறது. அதாவது, தன்னுடைய இருப்பை பல்வேறு அத்தாட்சிகள் மூலம் மெய்ப்பித்தும் மனிதர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தன்னால் அழிக்கப்பட்ட மக்களை பட்டியலிட்டுக்காட்டி மனிதர்களை எச்சரிக்கிறது. இதோ அந்தப் பட்டியல் ௧) ஃபிர் அவ்னின் கூட்டத்தினர், ௨) நூஹ் சமூகத்தினர், ௩) ஆது சமூகத்தினர், ௪) ஸமூது சமூகத்தினர், ௫) ரஸ்வாசிகள் இன்னும் இவர்களுக்கு இடைப்பட்ட அநேக தலைமுறையினர். இந்தப்பட்டியலில் நூஹ் சமூகத்தில் மூழ்கடிக்கப்பட்டவர்களை அத்தாட்சியாக்கியிருப்பதாக இந்த வசனம் குறிப்பிடுகிறது. இங்குதான் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாமிய கதையாடலின்படி ஃபிர் அவ்னின் உடலும், நூஹின் கப்பலும் அத்தாட்சிகள் (இந்த அத்தட்சிகளின் பித்தலாட்டங்கள் குறித்து ஏற்கனவே இந்தத் தொடரில் எழுதப்பட்டிருக்கிறது) ஃபிர் அவ்னின் உடல் மூழ்கியவர்களுக்கான அத்தாட்சி, நூஹின் கப்பல் தப்பிப் பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. ஆனால் இந்த இடத்தில் இவைகளை பட்டியலிடும் போது நூஹின் சமூகத்தினரை மூழ்கியவர்களுக்கான அத்தாட்சியாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் கப்பல் என்பது பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. இதை நீண்ட காலமாக (23 ஆண்டுகள்) குரானை தருவதற்கு எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பிழை என்று கொள்வதா? அல்லது நூஹ் சமூகத்தினரின் மூழ்கடிக்கப்பட்ட அத்தாட்சி இனிமேல்தான் வெளிப்படுத்தப்படவிருக்கிறது என எடுத்துக்கொள்வதா?

 

ஆம். இந்த இரண்டு அத்தாட்சிகளும் இனிமேல் தான் வெளிப்படுத்தப்படவிருக்கின்றன, அல்லது தகுந்த காலம் வந்ததும் அல்லா அவைகளை வெளிப்படுத்துவான் என இஸ்லாமியர்கள் தமக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ள‌ விரும்புவார்களாயின், அதற்கு எதிராகவும் குரானில் ஒரு அத்தாட்சி இருக்கிறது. மேற்கண்டவைகளைப் போல அத்தாட்சியாக வைத்திருக்கிறோம் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் இன்னும் தெளிவாகவே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"இது என் இறைவனிடமிருந்துள்ள கிருபையே ஆகும். ஆனால் என் இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் போது அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும் என் இறைவனின் வாக்குறுதி உண்மையானதே என்றும் கூறினார்" குரான் 18:98

 

இந்த வசனத்தில் கிருபை(கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சியையும் இறைவனின் வாக்குறுதி என்பது மறுமை நாள் அதாவது இறைவன் உலகை அழிக்கும் நாளையும் குறிக்கும். அந்த அத்தாட்சியானது வெளிப்படுத்திக்காட்டவேண்டிய அவசியமின்றி உலக அழிவு நாள் வரை இருந்து இறைவனால் அழிக்கப்படும் என்றும் அந்த வசனம் கூறுகிறது. என்ன அந்த அத்தாட்சி?

 

துல்கர்னைன் எனும் ஒரு மன்னன் வலசை போகிறான். அப்போது ஒரு பகுதியைச் சார்ந்தவர்கள் யஃஜூஜும், மஃஜூஜும் கூட்டத்தார்கள் தம்மை தொல்லை செய்வதாகவும் அவர்களிடமிருந்து தம்மை காக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார்கள். மன்னனும் அதற்கு இசைவு தெரிவித்து, அவர்கள் வராமலிருக்கும் பொருட்டு இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை இரும்புப் பாளங்களால் அடுக்கி செம்பை உருக்கி ஊற்றி நிறைத்து விடுகிறார். இதன்பிறகு அவர்கள் இதில் ஏறிவரவோ ஓட்டையிட்டு துளைத்து வரவோ சக்தியற்றவர்கள் என்று விளக்கமும் அளிக்கிறார். இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தை இரும்புப் பாளங்களால் இட்டு நிரப்பி செம்பை உருக்கி ஊற்றி அடைத்ததைத்தான் மறுமை நாளில் இறைவன் தூளாக்குவது வரை இருக்கும் என்கிறார். எங்கே இருக்கிறது இந்த இடம்? இது ஒன்றும் மறைத்து வைத்திருந்து வெளிப்படுத்தக்கூடிய பொருளில்லையே, உலகில் இப்படி ஒரு இடம் இல்லை என்பது ஒன்றே குரான் இறைவன் தந்ததல்ல, முகம்மது தனது தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டதுதான் அல்லாவும் குரானும் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

 

வாய்ப்புள்ள இடங்களை நீட்டி முழக்குவதும், அல்லாதவற்றை இருட்டடிப்பு செய்வதும் மதவாதிகளின் வழக்கம். இந்த வழக்கச் சகதிக்குள்தான் மதங்களின் வேதங்களின் புனிதங்கள் பிறபெடுக்கின்றன. அதற்கு இது இன்னுமொரு சான்று.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

source:senkodi

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP