சமீபத்திய பதிவுகள்

அரசு செலவில் "பலான படங்கள்"

>> Saturday, May 31, 2008




http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/01/264/01_06_2008_264_001.jpg

StumbleUpon.com Read more...

மசூதிகளை கண்காணிக்கவில்லை : அமெரிக்கா மறுப்பு

மசூதிகளை கண்காணிக்கவில்லை : அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவில் உள்ள மசூதிகள், அமெ‌ரி‌க்க‌‌ப் புலனா‌ய்வு‌த் துறையால் கண்காணிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட‌க்கு க‌லிஃபோ‌ர்‌னியா‌வி‌ல் உ‌ள்ள மசூ‌திகளை, அமெ‌ரி‌க்க‌‌ப் புலனா‌ய்வு‌ அமைப்பான எஃ‌ப்.‌பி.ஐ. க‌ண்கா‌ணி‌த்து வருவதாகவும், இது மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌ன் உ‌ரிமைகளில் தலையிடுவதாகும் என்றும் மு‌ஸ்‌லி‌ம் சமுதாய‌‌த் தலைவ‌ர் ஒருவ‌ர் கூ‌றியதாக சா‌ண் டியாகோ யூ‌னிய‌ன் டி‌ரி‌ப்யூ‌ன் இத‌ழி‌ல் செ‌ய்‌தி வெ‌ளியானது.

மேலும் இ‌வ்‌விவகார‌த்தை அமெ‌ரி‌க்க‌க் கா‌ங்‌கிர‌சி‌ல் எழு‌ப்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று அவர் கூறியதகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எ‌ப்.‌பி.ஐ. இணை இய‌க்குந‌ர் ஜா‌ன் ‌மி‌ல்ல‌ர் , த‌னிம‌னித‌ர்க‌‌‌ளி‌ன் ச‌ட்டபூ‌ர்வமான நடவடி‌க்கைகளை‌க் க‌ண்கா‌ணி‌ப்பது த‌ங்க‌ள் நோ‌க்கம‌ல்ல அ‌றி‌க்கை‌ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ச‌ட்டபூ‌ர்வமாக இய‌ங்கு‌ம் மு‌ஸ்‌லி‌ம் அமை‌ப்புக‌ள் எ‌ங்‌கிரு‌‌ந்தாலு‌ம், அவ‌ற்றை‌க் ‌க‌ண்கா‌ணி‌க்கவோ கு‌றிவை‌க்கவோ மா‌ட்டோ‌‌ம்.

வ‌ழிபா‌ட்டு‌த் தல‌ங்க‌ளி‌ன் நடவடி‌க்கைகளை‌‌க் கூ‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌ப்பது எங்க‌ளி‌ன் நோ‌க்கம‌ல்ல. எ‌ப்.‌பி.ஐ.‌யி‌ன் தலைமை வழ‌க்க‌றிஞ‌ர் ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் த‌னிநப‌ர் அ‌ல்லது குழு‌வி‌ன் நடவடி‌‌க்கைக‌ள் கூ‌ர்‌ந்து கவ‌னி‌க்க‌ப்படவோ அ‌ல்லது புலனா‌ய்வோ செ‌ய்ய‌ப்படு‌ம் என அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க'

'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க'
உலகிலுள்ள 1.8 பில்லியன் இளைஞர்களைக் காப்பதற்கு, உடனடியாக அனைத்து நாடுகளும் புகையிலை விளம்பரங்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (உ.சு.நி.) கேட்டுக்கொண்டுள்ளது.

'உலக புகையிலை எதிர்ப்பு தினம்' இன்று (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், உயிரைக் கொல்லும் புகையிலைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் பலரும் அடிமையாவதற்கு தூண்டுதலாய் இருக்கும் புகையிலை விளம்பரங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு வலியுறுத்த முடிவு செய்துள்ளது.

பல கோடி ரூபாய் செலவில், உலகம் முழுவதுமுள்ள புகையிலை நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள், இளைஞர்களின் புகைப்பழக்கத்துக்கு தூண்டுகோலாய் அமைகின்றன என்பதை, அண்மைக்கால மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்திருப்பதை உலக சுகாதார நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

கவர்ச்சிக்கும், சக்திக்கும், எதிர்பாலினத்தவரை ஈர்க்கவல்லதாகவும் புகையிலை பங்காற்றுவதாக, தவறான போக்கில் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை புகையிலை நிறுவனங்கள் வசியப்படுத்துவதாக உ.சு.நி. வெகுவாக சாடுகிறது.

"புகையிலையை விட்டொழிவதாலும், அப்பழக்கத்தின் விளைவால் மரணமடைவதாலும் குறைகின்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு, இப்பழக்கத்துக்கு இளம் வயதினர் அடிமையாவதற்கான வழிகளைப் பின்பற்றி, தங்களது வியாபாரத்தை புகையிலை நிறுவனங்கள் பெருக்கிக் கொள்கின்றன" என்கிறார், உ.சு.நி.யின் தலைமை இயக்குனர் டாக்டர் மார்கிரேட் சான்.

"புகையிலையை விளம்பரப்படுத்துதல், பிரபலப்படுத்துதல் போன்ற அனைத்து வடிவிலான நடவடிக்கைகளை தடை செய்தால்தான், உலக இளைஞர்களை காப்பற்ற முடியும்" என்று மார்கிரேட் திட்டவட்டமாக கூறுகிறார்.

உலக அளவில் பெரும்பாலும் 18 வயதிற்கு உள்ளாகவே புகைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகின்றனர். குறிப்பாக, 25 சதவிகிதத்தினர் 10 வயதுக்கு முன்பாகவே இப்பழக்கத்தைத் தொடங்கிவிடுகின்றனர்.

திரைப்படங்கள், இணைய தளங்கள், ஃபேஷன் பத்திரிகை இதழ்கள், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் தங்களது விளம்பரங்களை இளைஞர்களைக்கு எளிதில் கொண்டு சேர்க்கிறது புகையிலை நிறுவனங்கள்.

பள்ளிச்சிறார்களும் இளம்பெண்களும்!

உலக அளவில் 13 முதல் 15 வயது வரையிலான பள்ளிச் சிறார்களில் 55 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், புகையிலை விளம்பரங்களை நேரடியாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வளரும் நாடுகளிலோ 80 சதவிகித இளைஞர்களை புகையிலை நிறுவனங்கள் குறிவைப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும், உலக அளவில் மாணவிகளிடத்திலும் புகைப்பழக்கம் துரிதமாக பரவிவருவது அதிகரித்துள்ளதாகவும் உ.சு.நி. எச்சரிக்கிறது.

தற்போது, உலக அளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் புகைப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

ஆண்டுதோறும் உலக மக்கள் தொகையில், 5.4 மில்லியன் பேரின் உயிர்களை புகைப்பழக்கம் குடிக்கிறது! இந்தியாவில் இப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஏழத்தாழ 10 லட்சம் பேர் இறக்கின்றனர்.

உலக அளவில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உ.சு.நி. எச்சரிக்கிறது.
(மூலம் - வெப்துனியா

StumbleUpon.com Read more...

பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது

பெண்கள் கவனத்திற்கு

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும். - சகோதரர். சுலைமான்
 
 

StumbleUpon.com Read more...

ஆட்டி வைக்குது

 

  செல்பாஸ்: சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பொருட்களை எடுத்து அடுக்கி வைக்கிறார் ஊழியர் ஒருவர். பொருட்கள் இப்படி கிடப்பதற்குக் காரணம் நிலநடுக்கம். ஐஸ்லாந்தின் செல்பாஸ் நகரில்தான் இந்த காட்சி.

ஐஸ்லாந்தின் தென்பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிறைய இடங்களில் மக்கள் காலி செய்ய வேண்டி இருந்தது. அந்த நிலநடுக்கத்துக்கு இந்த சூப்பர் மார்க்கெட்டும் தப்பவில்லை.
 
 

StumbleUpon.com Read more...

புதுமை கார்


   டோக்கியோ: போக்குவரத்து நெரிசல் என்பது உலகமெங்கும் உள்ள பிரச்சனை. வளர்ந்த நாடான ஜப்பானில் இது அதிகம். எனவே ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் காரை உருவாக்கினால் என்ன என்று யோசித்த ஜப்பானியர்கள் அதனைக் கண்டுபிடித்தே விட்டார்கள்.

படத்தில் டோக்கியோ பல்கலைக்கழக மாணவர் அதனை ஓட்டிச்செல்கிறார். சி&காம்ஸ் என்பது இந்தக் காரின் பெயர். மின்சாரத்தில் 30 வினாடிகள் சார்ஜ் செய்தால் 20 நிமிடம் இந்தக் கார் செல்லுமாம்.

மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் இக்கார் செல்லும். சின்னக் கண் இருந்தாலே கண்டுபிடிப்பும் சிறியதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!

 

StumbleUpon.com Read more...

இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை' முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது

இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை'
முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது

 
 
 
 

மெல்போர்ன், மே.31-

ஆஸ்திரேலியாவில், இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு `அதிசய குழந்தை' பிறந்தது. முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து, உயிருடன் பிறந்துள்ளது.

இலங்கை தம்பதி

இலங்கையை சேர்ந்த ரவி தங்கராஜா-மீரா என்ற தம்பதியர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காயத்ரி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் மீரா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் உள்ள ஒரு தனியாÖëஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க தயாரானார்கள். அப்போது மீராவின் வயிற்றில் கண்ட காட்சி, டாக்டர்களை திடுக்கிட வைத்தது. குழந்தை, கர்ப்பப்பையில் இருப்பதற்கு பதிலாக, அதற்கு வெளியே உள்ள சினைப்பையில் இருந்தது. ஒரு சிலருக்கு இப்படி சினைப்பையில் கரு உருவாகி இருந்தாலும், அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அந்த கருவை அழிக்க செய்து விடுவார்கள். ஏனென்றால், கர்ப்பப்பைக்கு வெளியே கரு வளர்ந்து பெரிதானால், அது தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்.

உலகிலேயே முதல்முÛ
ஆனால், மீராவுக்கோ, முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே கரு வளர்ந்து குழந்தையாக உருவெடுத்துள்ளது. அது உயிருடனும் பிறந்து டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படி நடப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று கருதப்படுகிறது. இதனால் அந்த பெண் குழந்தையை `அதிசய குழந்தை' என்று டாக்டர்கள் வர்ணிக்கிறார்கள். அந்த குழந்தைக்கு `துர்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெண்ணின் சினைப்பை உற்பத்தி செய்யும் கரு முட்டையுடன், ஆணின் உயிரணு இணைந்து கரு உண்டாகும். இந்த கரு, கருக்குழாய் வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடைந்து குழந்தையாக வளரும். இதுதான் இயல்பான நடைமுறை. ஆனால், மீராவுக்கோ கரு, கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாமல், சினைப்பையிலேயே தங்கி குழந்தையாக வளர்ந்து விட்டது.

டாக்டர் பேட்டி

மீராவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஆன்ட்ரூ மில்லர் கூறியதாவது:-

சினைப்பையின் வலப்புறத்தில் குழந்தையை பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை. சினைப்பையின் தோல் மெல்லியதாக இருந்ததால், உள்ளே இருந்த குழந்தையின் தலை முடியையும், முக தோற்றத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. குழந்தை வளரும்போது சினைப்பை கிழியும் அபாயம் உள்ளது. எந்த நேரமும் சினைப்பை கிழிந்து, அதனால் தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் மீராவுக்கு அப்படி நடக்கவில்லை. அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.

மருத்துவ அதிசயம்

இன்னும் சொல்லப்போனால், அவருக்கு கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை வளர்வதை ஆரம்பத்திலேயே கண்டிருந்தால், அதை கலைக்க சொல்லி இருப்போம். ஆனால் அப்படி நடக்காமல், அவர் நன்றாக குழந்தையை பெற்றுள்ளார். இது மருத்துவ உலகிலேயே ஒரு அதிசய சம்பவம். இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=416024&disdate=5/31/2008

StumbleUpon.com Read more...

பெர்லின்: பன்றிகளிடம் சிக்கிய கார் திருடன்!

>> Friday, May 30, 2008

பெர்லின்: பன்றிகளிடம் சிக்கிய கார் திருடன்!
    

பெர்லின்: காரை திருடிக் கொண்டு காட்டுக்குள் தப்பியவர், காட்டுப் பன்றிகளிடம் சிக்கினார். அவரைப் பிடிக்கத் துரத்திய போலீஸார், பன்றிகளிடமிருந்து அந்தத் திருடனை பத்திரமாக மீட்டனர்.

ஜெர்மனியின் ஷெவரின் என்ற நகரில் இந்த வினோத விரட்டல் நடந்துள்ளது. அந்த நகரில் இரவு ரோந்தில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது 18 வயது வாலிபர் ஒருவர், தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஓபல் காரை திருடிக் கொண்டு கிளம்பினார்.

இதைப் பார்த்த ரோந்து போலீஸார் அந்த காரை துரத்தினர். ஆனால் நிற்காமல் பறந்த அந்த நபர், அருகில் இருந்த வனப் பகுதிக்குள் வண்டியை விட்டார்.

காட்டுக்குள் வேகமாக சென்ற கார், அங்கு உலவிக் கொண்டிருந்த காட்டுப் பன்றிக் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் மிரண்ட பன்றிகள், தங்களை டிஸ்டர்ப் செய்த காரை சுற்றி வளைத்தன.

காட்டுப் பன்றிகள் மொத்தமாக சூழ்ந்ததால் பயந்து போன திருடன், உடனடியாக காரை நிறுத்தி விட்டு உதவி கோரி குரல் எழுப்பினார். பின் தொடர்ந்து வந்த போலீஸார் பன்றிக் கூட்டத்திற்குள் திருடன் சிக்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பன்றிகளை விரட்டிய பின்னர் காருக்குள் நடுங்கிக் கொண்டிருந்த திருடனை வெளியே கொண்டு வந்தனர்.
 

StumbleUpon.com Read more...

சிறுவர்களை மனித குண்டுகளாக மாற்றும் தலிபான்கள்

சிறுவர்களை மனித குண்டுகளாக மாற்றும் தலிபான்கள்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

இஸ்லாமாபாத்: சிறுவர்களை வைத்து மனித வெடிகுண்டுகளை உருவாக்குவதாக தலிபான் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலிபான்களின் மனித வெடிகுண்டுப் பிரிவிலிருந்து தப்பி வந்த 14 வயது பாகிஸ்தான் சிறுவனான ஷகிருல்லா இந்த பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளான்.

இதுகுறித்து அவன் கூறுகையில், நான் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதரசாவில் பயின்று வந்தேன். அங்கிருந்த மதகுருமார்கள் என்னிடம் தலிபான் அமைப்பின் தற்கொலைப் படையில் சேர்த்து விட்டனர். அங்கு எனக்கு வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து விளக்கப்பட்டது.

இதனால் நான் பயந்தேன். ஆனால் மதகுருமார்கள் எனக்கு ஆறுதல் கூறி, குண்டு மட்டுமே வெடிக்கும், நீ சாக மாட்டாய் என கூறினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் புத்தாண்டின்போது, வெடிகுண்டுகள் நிரப்பிய காருடன் என்னை அனுப்பி வைத்தனர்.

நான் காரில் போய்க் கொண்டிருந்தபோது வறண்டு கிடந்த ஆற்றுப் படுகையில் எனது கார் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் உளவுப் படையினர் என்னைப் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளான் ஷகீருல்லா.

ஷகீருல்லா, தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிகம் நிறைந்த பாகிஸ்தானின், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள பர்வான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் ஆவான்.

நான்கு மாதங்களுக்கு முன்புதான் அங்குள்ள மதரசாவில் சேர்ந்தான் ஷகீருல்லா. அதன் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு அவன் அனுப்பப்பட்டான். எதிரிகளுடன் மோத வேண்டும் என்ற உத்தரவின் பேரில் அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.

அப்போது அவனிடம் மத குருமார்கள், உன்னால் வெளிநாட்டு தீவிரவாதிகள்தான் சாவார்கள். உனக்கு ஒன்றும் நேராது. நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, தலிபான் தீவிரவாதிகள் ஷகீருல்லாவைப் போல ஏராளமான சிறுவர்களை தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக மாற்றி வருவதாக ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயின் செய்தித் தொடர்பாளர் ஹூமாயூன் ஹமீத்ஸாதா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் சிறுவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை தற்கொலைப் படையில் சேர்த்து பல அப்பாவிகளின் உயிர்களைப் பறித்து வருகின்றனர் என்றார்.
 

StumbleUpon.com Read more...

சமஸ்கிருதத்தில் 100 வாங்கிய முஸ்லீம் மாணவர்

சமஸ்கிருதத்தில் 100 வாங்கிய முஸ்லீம் மாணவர்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

சென்னை: முஸ்லீம் மாணவரான குல்சார் அகமது, சமஸ்கிருதப் பாடத்தில் 100க்கு நூறு வாங்கி அசத்தியுள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்தவர் குல்சார் அகமது. இவரது பூர்வீகம் கேரளா. குல்சார் அகமது, 10வது வகுப்பில் இரண்டாவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுத்தார். 9ம் வகுப்பிலேயே அவர் சமஸ்கிருதம் படித்தார்.

நேற்று வெளியான பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகளில், குல்சாருக்கு சமஸ்கிருதத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இந்துக்களின் புனித மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தில், முஸ்லீம் மாணவரான குல்சார் சென்டம் போட்டது சக மாணவர்களுக்கு வியப்பைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து குல்சார் கூறுகையில், சமஸ்கிருதம் படிக்க எனக்கு சிரமமாக இல்லை. 8ம் வகுப்பு வரை நான் இந்தி படித்துள்ளேன் என்பதால் சமஸ்கிருதத்தை நான் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. இதன் மூலம் எனது மொத்த மதிப்பெண் சராசரி உயர்ந்துள்ளது.

எனக்கு ராமாயணம், மகாபாரதம் முழுமையாகத் தெரியும். 11 வயதாகும்போதே நான் ஆங்கிலத்தில் மகாபாரத்தைப் படித்துள்ளேன்.
எனக்கு மகாபாரத்தில் மிகவும் பிடித்த கேரக்டர் அர்ஜூனன்தான் என்றார் குல்சார்.

சமஸ்கிருதத்தில் சென்டம் போட்டுள்ள குல்சார், தனது மத பழக்கங்களிலும் அதிக நம்பிக்கை கொண்டவராம்.

இதுகுறித்து குல்சாரின் தந்தை அப்துல் ஹமீது கூறுகையில், குல்சார் தினசரி தொழுகை நடத்தத் தவற மாட்டார். நான் கூட சில நேரங்களில் செய்ய மாட்டேன். ஆனால் குல்சார் அப்படி இல்லை. தவறாமல் தொழுகை செய்வார் என்றார்.

பலே மருதபாண்டியன்!:

மாநில அளவில் பத்தாவது வகுப்புத் தேர்வில் 2வது ரேங்க் பெற்றுள்ள பெரம்பலூர் மருதபாண்டியன், ஒரு ஏழை விவசாயியின் மகன் ஆவார். 3 பாடங்களில் இவர் சென்டம் போட்டு அசத்தியுள்ளார்.

தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தையும் பார்த்துக் கொண்டே படித்து சாதனை படைத்துள்ளார் மருதபாண்டியன். வியாழக்கிழமையும் வயலுக்குப் போய் வேலை பார்த்து விட்டு வந்து படுத்தவருக்கு வெள்ளிக்கிழமை இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

காலையிலேயே மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு மருதபாண்டியனுக்கு இனிப்பான செய்தியைத் தந்தது.

பத்தாவது வகுப்பில் மாநில அளவில் 2 வது ரேங்க் பெற்றுள்ள மருதபாண்டியன், மொத்தம் 494 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என பிரமிக்க வைத்துள்ளார்.

விவசாயியின் மகனான இவருக்குள் ஒளிந்திருக்கும் திறமையை மதித்து அவரது பெற்றோரும் தங்களது மகனை ஊக்குவித்து வந்தனர். பெற்றோர்களின் ஆதரவால்தான் தன்னால் இந்த சாதனையைப் படைக்க முடிந்தது என்கிறார் மருதபாண்டியன்.
 

StumbleUpon.com Read more...

நீயும் பொம்மை நானும் பொம்மை...

நீயும் பொம்மை நானும் பொம்மை...

 
 

   அனாஹெய்ம்: டிஸ்னி கதாபாத்திரங்கள் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதிப்பிரியம். இது  உலகம் முழுவதற்கும் பொருந்தும். படத்தில் காண்பது டிஸ்னி மற்றும் பிக்சார் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய ஹெய்ம்லிச் என்னும் கதாபாத்திரம்தான்.

எ பக்ஸ் லைப் என்னும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் இப்படி ஊர்வலம் செல்வது கலிபோர்னியாவில் உள்ள கேளிக்கைப் பூங்காவுக்கு. அங்கு நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்குத்தான் இப்படிக் கூத்தும் கும்மாளமுமாகச் செல்கிறார்கள்.
 

StumbleUpon.com Read more...

டயனோசர் கண்காட்சி

டயனோசர் கண்காட்சி




மெல்போர்ன்: விலங்குகளைப் பார்த்தாலே குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களின் மனமும் குதூகலம் அடையும். காரணம் அவை செய்யும் சேட்டைகள்தான். அப்படித்தான் இந்த இரண்டு குழந்தைகளும் குட்டி டயனோசர் பொம்மையுடன் ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் டயனோசர் முட்டை மற்றும் அதன் குட்டிகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட வகையான செயற்கையாக வடிவமைக்கப்பட்ட அசையும் டயனோசர் எலும்புக்கூடுகள், குட்டிகள் மற்றும் சரியான அளவிலான 130 பொம்மை முட்டைகள் இடம் பெற்றன.

மேலும் கோழி குஞ்சுகள், முதலைகள் உள்ளிட்ட இதர உயிரினங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டன.



http://www.dinakaran.com/daily/2008/may/30/high2.asp

StumbleUpon.com Read more...

மகர விளக்கு செயற்கையே-பக்தர்கள் அதிர்ச்சி

>> Thursday, May 29, 2008




http://tm.dinakaran.co.in/2952008/tm_290508_e1_01_cni.jpg

StumbleUpon.com Read more...

மரமாக மாறிய மனிதர்

மரமாக மாறிய மனிதர்
 


   லாஸ் ஏஞ்சலஸ்: படத்தைப் பார்த்ததும் இது அரச மரமா, ஆல மரமா என்ற ஆராய்ச்சிக்கு போயிருப்பீர்கள். ஆனால், இது மரமல்ல, மரமாக நிற்கும் மனிதர். ஆம்.

இயற்கைக்கு ஆதரவான வாழ்க்கை முறையை ஆதரிக்கும் "பிளானட் கிரீன்" என்ற 24 மணி நேர டிவி சேனல், அமெரிக்காவில் தொடங்கப்படுகிறது. அதன் விளம்பர நிகழ்ச்சி நிகழ்ச்சி லாஞ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது.

அதில் தத்ரூபமாக மரம் போன்ற ஆடை அணிந்து அனைவரையும் அசர வைத்தார் கிளிப் ஸ்பென்ங்கர் என்பவர். நடமாடும் மரமாக வந்து கலக்கிய அவரை எல்லாரும் பாராட்டினர்.
 

 

StumbleUpon.com Read more...

யாழ்ப்பாணம் அருகே, அதிகாலையில் அதிரடி தாக்குதல் கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்


யாழ்ப்பாணம் அருகே, அதிகாலையில் அதிரடி தாக்குதல்
கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்
13 சிங்கள மாலுமிகள் கொல்லப்பட்டனர்


கொழும்பு, மே.30-

இலங்கை ராணுவம் மற்றும் கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை, அதிரடி தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். அதிகாலை நடைபெற்ற மோதலில் சிங்கள மாலுமிகள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

குட்டித்தீவு மீட்பு

இலங்கை தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் அருகில் உள்ள குட்டித்தீவில் (சிரத்தீவு) ராணுவம் மற்றும் கடற்படை தளங்கள் செயல்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் நேற்று அதிகாலையில் இந்த ராணுவ தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலை குலைந்த சிங்கள கடற்படை மாலுமிகள் கொல்லப்பட்டனர். வெற்றிகரமாக நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து குட்டித்தீவை கைப்பற்றியதாக விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர்.

ராணுவம் மறுப்பு

விடுதலைப்புலிகளின் ஆதரவு இணைய தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பலியான 3 மாலுமிகளின் படங்களுடன் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், இலங்கை ராணுவம் இந்த தகவலை மறுத்து உள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து பூநகரியில் இருந்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் கடற்புலிகளின் 4 படகுகளை மூழ்கடித்து, 15 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தசநாயகே அறிவித்து இருக்கிறார்.

பீரங்கி தாக்குதல்

சிங்கள வீரர் ஒருவர் பலியானதாகவும், 3 வீரர்களை காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் நகரை நோக்கி கடற்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் பலியானார்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

54 பேர் பலி

சித்திரத்தீவு மற்றும் முல்லைத்தீவு, மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது இலங்கையின் முப்படையினர் நடத்திய தாக்குதலில் 46 விடுதலைப்புலிகள், பொதுமக்கள் 6 பேர், 2 சிப்பாய்கள் உள்பட 54 பேர் பலியானதாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் இலங்கைப்போரில், தற்போது ராணுவத்தின் கை ஓங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கணித்து உள்ளனர். என்றாலும், இரு தரப்பிலுமே சரியான தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை என்பதால், உண்மை நிலவரம் இன்னும் புதிராகவே இருந்து வருகிறது.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415806&disdate=5/30/2008

StumbleUpon.com Read more...

ஐயப்பன் பெயரில் போலி(மகர) விளக்கு ஏற்றப்பட்டுவந்த ரகசியம் அம்பலம்


செயற்கையாக ஏற்றப்படுவதாக தகவல்
சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு தோன்றுவது பற்றி விசாரணை
கேரள முதல்-மந்திரி அறிவிப்பு


திருவனந்தபுரம், மே.30-

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தோன்றுவது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று கேரள முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் அறிவித்தார்.

மகர விளக்கு

கேரளாவில் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலுக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல லட்சம் பக்தர்கள் சென்று அய்யப்பனை தரிசித்து வருகிறார்கள்.

மகர சங்கராந்தி நாளன்று பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு 3 முறை தோன்றி மறையும். மகர விளக்கு தோன்றும்போது, அய்யப்பனே காட்சி தருவதாக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்கும்.

செயற்கையானது என சர்ச்சை

இந்த நிலையில் அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருவாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான ராமன் நாயர் கூறுகையில்; மகர விளக்கு என்பது இயற்கையானது அல்ல. கோவில் ஊழியர்களால் செயற்கையாக ஏற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதையடுத்து கேரள சுற்றுலா மேம்பாட்டுத் துறை தலைவரும், இடதுசாரி ஆதரவாளருமான செரியன் பிலிப் மற்றும் சில நாத்திக குழுக்களும், மகர ஜோதி என்பது பக்தர்களை ஏமாற்றும் ஒரு மோசடி என்று கூறினார்கள்.

சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை தந்திரி விளக்கம்

இந்த நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு சார்பில் அவரது பேரனும், தந்திரியுமான ராகுல் ஈஸ்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மகர விளக்கு வேறு. மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தை குறிக்கும்.

மகர விளக்கு என்பது, பழங்காலத்தில் அய்யப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும். மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது ஆகும். அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால், இந்த வழக்கம் பல நூற்றாண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

எந்த ரகசியமும் இல்லை

மகர ஜோதியும், மகர விளக்கும் ஒன்று என்று நினைக்கும் ஒரு சிலரின் தவறான கருத்து காரணமாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தேவையில்லாதது. இந்த இரண்டு விஷயங்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

மகர விளக்கு என்பது கடவுள் அய்யப்பனுக்கு வழங்கப்படும் ஒரு பாரம்பரிய தீப ஆராதனை. மற்றபடி இதில் எந்த ரகசியமும் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேவசம்போர்டு மந்திரி

இதற்கிடையே கேரள தேவசம்போர்டு மந்திரி ஜி.சுதாகரன் கூறுகையில், மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பது அரசாங்கத்துக்கு தெரியும் என்று கூறி உள்ளார்.

மகர விளக்கு ஏற்றப்படும் பகுதிக்கு செல்வதென்பது மிகவும் கடினம் ஆகும். இஸ்லாமிய மக்கள் சந்திரனின் பிறைவடிவை பார்த்து, விழாவை தீர்மானிப்பது போலான ஒரு நிகழ்வுதான் இது. நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையில் கைவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இதை சொல்வதால் எனது முற்போக்கு சிந்தனைக்கு எந்த குறையும் ஏற்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது; சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்று கண்டறிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையில் பக்தர்களின் நம்பிக்கைக்கு இடைïறு ஏற்படுத்தும் விதத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர் கூறினார்.

பக்தர்கள் வேதனை

ஏற்கனவே கன்னட நடிகை ஜெயமாலா கோவில் கருவறை வரை சென்றதாக கூறியது, உன்னிக்கிருஷ்ண பணிக்கரின் தேவ பிரசன்னம் ஆகியவற்றால் சபரிமலை அய்யப்பன் கோவில் சர்ச்சைகளில் சிக்கியது. இந்த நிலையில் மகர விளக்கு பற்றி தற்போது சர்ச்சை எழுந்திருப்பது, அய்யப்ப பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415808&disdate=5/30/2008&advt=1

StumbleUpon.com Read more...

புகை பிடிப்பது குழந்தைகளுக்கு தொந்தரவு தரும் விஷயம்

>> Wednesday, May 28, 2008

 
 
பிரேசிலியா: புகைபிடிப்பதன் தீமைகள் குறித்து மருத்துவர்கள் முதல் உறவினர்கள் வரை யார் அறிவுரை சொன்னாலும் சிலரால் அப்பழக்கத்தை விட்டு மீள முடிவதில்லை.

தற்போது உலகப் பொருளாதாரத்தில் விரைந்து முன்னேறிவரும் நாடுகளில் ஒன்றான பிரேசில், புகை பிடிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை விரிவான அளவில் செய்து வருகிறது. புகை பிடிப்பது குழந்தைகளுக்கு தொந்தரவு தரும் விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தை சிகரெட் பாக்கெட்கள் மீது அச்சடித்திருக்கிறார்கள்.

இது அந்நாட்டு சுகாதாரத்துறையின் யோசனை. புகைக்கு எதிராக இதுபோன்ற 10 விளம்பரங்கள் இப்போது பிரேசில் நாட்டையே கலக்குகின்றன. இவற்றைப் பார்த்த பிறகாவது புகைப் பிரியர்கள் கொஞ்சம் திருந்தலாம். 
  
  http://www.dinakaran.com/daily/2008/may/29/high2.asp

StumbleUpon.com Read more...

சேலத்தில் நாடக நடிகை வெட்டிக்கொலை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்



சேலம், மே.29-

சேலத்தில் நாடக நடிகை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நிர்வாண நிலையில் அவர் பிணமாக கிடந்தார். கொலையாளி யார்? ஏன் கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடக நடிகை

சேலம் கிச்சிப்பாளையம் பேச்சியம்மன் நகரை சேர்ந்தவர் சாந்தி என்ற செல்வமேரி (வயது 41), நாடக நடிகை. இவருடைய கணவர் மாசிலாமணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு வளர்மதி (23), சத்யா (21) என்ற 2 மகள்களும், செல்வம் (19) என்ற மகனும் உள்ளனர்.

கணவர் இறந்த பின்பு சாந்தி நாடகங்களில் நடித்து தன் குழந்தைகளை வளர்த்து வந்தார். மகள்கள் வளர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கியபிறகு சாந்தி நடிப்பது இல்லை. ஆனால் மகள்களுக்கு நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வாங்கித் தருவார்.

இவர்களில் செல்வம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வளர்மதியும், சத்யாவும் நாடகங்களில் நடித்து வருகிறார்கள்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வளர்மதியும், சத்யாவும் நாடகங்களில் நடிப்பதற்காக வெளிïர் சென்றுவிட்டனர். செல்வமும், சத்யாவுக்கு துணையாக வெளிïருக்கு சென்றிருந்தார். வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று காலை செல்வமும், சத்யாவும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவருடைய தாய் சாந்தி ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அலறினார். அவருடைய தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட வெட்டுக்காயம் இருந்தது.

சாந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு போராட்டமே நடந்துள்ளதற்கு அறிகுறியாக வீட்டில் அலமாரியில் இருந்த துணிமணிகள், பொருட்கள் எல்லாம் வெளியே சிதறிக்கிடந்தன.

செல்போன் மாயம்

சாந்தி தன்னுடைய உபயோகத்துக்காக ஒரு செல்போன் வைத்திருந்தார். போலீசார் அந்த செல்போன் நம்பருக்கு அழைத்தபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே கொலையாளியே, அந்த செல்போனை தூக்கிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் சாந்தியை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளும் சிக்கவில்லை. அதுவும் போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

சாந்தியை கொலை செய்த மர்ம மனிதன் யார்? ஏன் கொலை செய்தான்? என்ற விவரம் தெரியவில்லை. சாந்தி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்துதான் அந்த ஆசாமி வீட்டுக்கு வந்துள்ளான் என்பதாலும், கொலை செய்யப்பட்ட சாந்தியின் உடல் நிர்வாண நிலையில் இருந்ததும் போலீசாரிடம் பல்வேறு ïகங்களை ஏற்படுத்தியுள்ளது. பல கோணங்களில் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சாந்தி நாடக நடிகை என்பதால் அவருக்கு நாடகங்களில் நடித்த வகையில் யார், யாருடன் பழக்கம் உண்டு என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415571&disdate=5/29/2008

StumbleUpon.com Read more...

ஒசாமா பின்லேடன் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு


பாகிஸ்தான்-சீனா எல்லையில்
பின்லேடன் இமயமலை அடிவாரத்தில் பதுங்கி இருக்கிறார்
அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது


இஸ்லாமாபாத், மே.29-

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் சீனா எல்லை அருகே இமயமலை அடிவாரத்தில் பதுங்கி இருக்கிறார் என்று அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ கண்டுபிடித்து உள்ளது.

எங்கு இருக்கிறார்

அல்கொய்தா அமைப்பின் தலைவரான பின்லேடன் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியபோது ஆப்கானிஸ்தான் தங்கி இருந்தார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து அங்கு இருந்து தப்பி ஓடிய அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியானது.

இணையதளத்தில் வெளியான அவருடைய அறிக்கைகளும், போட்டோக்களும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அவர் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிஇன மக்களுடன் வசிக்கிறார் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியிலும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இமயமலை அடிவாரத்தில்

இந்த நிலையில் அவர் இமயமலை அடிவாரத்தில் காரகோரம் பகுதியில் சீனாவின் எல்லை அருகே அவர் பதுங்கிஇருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ கண்டுபிடித்து உள்ளது.

உலகின் கூரை என்று அழைக்கப்படும் அளவுக்கு உலகிலேயே உயரமான பகுதியில் தான் பின்லேடன் பதுங்கிஇருக்கிறார். பாகிஸ்தானின் மேற்கே ஆப்கானிஸ்தானின் நுரேஸ்தான் மாநிலமும், இந்த பகுதியின் வடக்கே சீனாவும் உள்ளது. இந்த தகவலை அல்அரேபியா என்ற அரபு சேனல் அறிவித்து உள்ளது.

அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஆலோசனை

கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் உள்ள ராணுவதளத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் பின்லேடனை பிடிப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஈராக் நாட்டுக்கான அமெரிக்க தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயியஸ் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஆனி பாட்டர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415614&disdate=5/29/2008

StumbleUpon.com Read more...

சிரிப்பு நடிகர் ஒருவர் தன் காமெடியில் அடிக்கடி `அப்துல்கலாம்' பற்றி குறிப்பிடுவது ஏன்?

தங்கள் காமெடியில் அடிக்கடி `அப்துல்கலாம்' பற்றி குறிப்பிடுவது ஏன்?

அவர் `இஸ்ரோ' தந்த விஞ்ஞானி!
இலக்கியம், தத்துவம் பேசும் மெய்ஞானி!
இசையை நேசிப்பவர்:
பெற்றோரைப் பூசிப்பவர்.
`பொக்ரான்' சோதனையில்
உலகத்தையே உளப்பியவர்!
குழந்தைகள் உள்ளத்தில்
பூவாய் நுழைந்து, புயலைக்கிளப்பியவர்!
ஒரு மயிலுக்கு அடிபட்டாலும்
மருத்துவம் செய்யக் கூறியவர்!
வெயிலில் நிற்கும் ஜவானுக்கு
நிழற்குடை அமைக்கக் கோரியவர்!
இந்தியா, கல்வி - அவர் கடமைகள்!
இரண்டு பேண்ட், இரண்டு ஷர்ட்...
அவர்தம் உடமைகள்!
பாதுகாப்பு வளையம் தாண்டியவர்!
பாரதமாதாவுக்கு வேண்டியவர்!
இல்வாழ்க்கை என்னும்
இன்பம் துறந்தவர்!
இந்திய சுபிட்சத்தின்
கதவு திறந்தவர்!
அவர்!
மாணவர் நெற்றியில் எரியும் விளக்கு!
மணக்கும் பூக்களின் புதிய கிழக்கு!
இந்திய தேசத்தின் புதிய பிதா!
இதனால்தான் அவர் பற்றி கூறுகிறேன் சதா!.

டாக்டர். முருகுசுந்தரம், பூந்தமல்லி.
 
 

StumbleUpon.com Read more...

தில்லை நடராஜர் கோயிலுக்கும்,இப்போது புதிதாக ஆரம்பமாகி விட்டது, ஒரு பிரமோற்சவ பிரச்னை

 

 
 
 
 01.06.08     ஹாட் டாபிக்
 
தில்லை நடராஜர் கோயிலுக்கும், திகுதிகு பிரச்னைகளுக்கும் அப்படி என்னதான் ஒட்டுறவோ தெரியவில்லை! தில்லை பொன்னம்பல மேடையில் நின்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் பிரச்னை ஒருவழியாக ஓய்ந்து விட்டதல்லவா? இப்போது புதிதாக ஆரம்பமாகி விட்டது, ஒரு பிரமோற்சவ பிரச்னை.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள்ளேயே உள்ளது   ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில். இது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில். `இங்கே கொடி யேற்றம்,  பிரமோற்சவம்  நடத்த வேண்டும்' என்று வைணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்க, அவ்வளவுதான்! பிரச்னை ஆரம்பமாகி விட்டது. ``இது சிவ ஸ்தலம். இங்கே பரிவார தேவதையாக இருக்கும் பெருமாளுக்கு எதற்கு பிரமோற்-சவம்? இது ஆகமத்துக்கு எதிரானது! அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன்தான் வைணவர்களைத் தூண்டி-விடுகிறார்'' என்று தீட்சிதர்கள் எகிறி எழ, தீயாய்த் தகிக்க ஆரம்பித்துள்ளது இப்பிரச்னை.
இதுபற்றி சிதம்பரம் நடராஜர் கோயில் பூஜா ஸ்தானிக டிரஸ்டிகளில் ஒருவரான ராஜசேகர தீட்சிதரிடம் முத லில் பேசினோம். "இங்கே பெருமாள் பரிவார தேவதை யாகத்தான் வீற்றிருக்கிறார். பரிவார தேவதைக்கு பிர மோற்சவ விழா நடத்தக் கூடாது. அத்துடன் இங்கே கோயில் என்ற அமைப்புடன் பெருமாள் இல்லை. தனி சன்னதியில்தான் பெருமாள் இருக்-கிறார். கோயில் என்றால் ராஜகோபுரம்,  கொடிமரம், பலிபீடம், கர்ப்பகிரகம் எல்லாம்  இருக்க வேண்டும். இங்கே ராஜகோபுரத்துக்கு வெளியில்தான் கொடிமரம், பலிபீடம் இருக்கிறது. அத்துடன், கொடிமரத்தில் கொடியேற்றுவதற்கான வளையங்கள் எதுவும் அமைக்கப் படவில்லை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்களுக்குள்ளும் பெருமாள் சன்னதிகள் இருக்கின்றன. அங்கேயெல்லாம் பிரமோற்சவ விழா நடத்தப்படுவதில்லை. பிரமோற்சவ விழா என்றால், தேரோட்டம் வேண்டும். இவர்களிடம் தேரே இல்லை. அதேபோல் வாகன மண்டபம், கல்யாண மண்டபம், தீர்த்தவாரி விழா நடத்த தீர்த்தம் என எதுவுமே இங்கே இல்லை. அப்படியிருக்க, பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று வைண வர்கள் பிடிவாதம் பிடிப்பது  மூர்க்கத்தனமான செயல்'' என்றார் அவர் ஆத்திரத்துடன்.
"நாங்கள் கதவைத் திறந்துவிட்டால்தான் அவர்கள் பூஜையே செய்யமுடியும். இதை நாங்கள் ஆணவத்துடன் சொல்லவில்லை. அந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்குக் கூட நாங்கள்தான் யாகசாலைக்கு இடம் தந்து, யாகத்துக்குத் தேவையான வெள்ளிச் சொம்பு ஆகியவற்றைத் தந்து ஒத்துழைப்புக் கொடுத்தோம். ஆகமத்தை மாற்றக் கூடாது என்பதால்தான் பெருமாளுக்கு இங்கே பிரமோற்சவம் நடத்தக் கூடாது என்கிறோம். நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்ப்பதற்காக இங்கே வந்தவர்தான் இந்த கோவிந்தராஜப் பெருமாள். அவரது சன்னதி நடராஜர் கோயிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், அதை  அப்புறப்படுத்திவிட்டு பெரு மாளைத் தூக்கி கடலில் போடவேண்டும் என்று, இந்தக் கோயிலை அமைத்த மன்னனே சொன்னதாகக் கூட வரலாறு இருக்கிறது.
வி.வி.சுவாமிநாதன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது, நடராஜர் கோயில் நகைகளைச் சரிபார்க்க அவற்றை எடுத்து வரச்சொன்னார். நாங்கள் மறுத்து விட்டோம். அதை மனதில் வைத்துத்தான் இப்போது வைணவர்களைத் தூண்டிவிட்டு அவர் பழி தீர்க்கப் பார்க்கிறார். அத்துடன், எங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் சொல்கிறார். சைவ, வைணவ மோதலைத் தூண்டி விடும் இவரையல்லவா குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்? இந்தப் பிரச்னையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ளப் போகிறோம்'' என்றார் துரை தீட்சிதர் என்பவர் படபடப்புடன்.
சரி! வைணவர்கள் தரப்பு என்ன சொல்கிறது?  அது-பற்றி நமக்கு விளக்கம் தர முன்வந்தார் தில்லை ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயில் மேனேஜிங் டிரஸ்டி ரங்காச்சாரி.
"திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகி-யோ-ரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தனி திவ்ய கேஷத்திரம். அத்துடன் தனி நிர்வாகம்,தனி ஆகமத்துடன் இங்கே பூஜை நடந்து கொண்டி ருக்கிறது. இந்தக் கோயிலில் பிரமோற்சவம் நடத்த பக்தர்கள் விரும்பியதால், அறநிலைய அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி விட்டோம். விழாவுக்கு ஒத்துழைப்பு வேண்டும் என தீட்சிதர்களி டமும் விண்ணப்பித்திருக்கிறோம். அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரு தனிக்கோயில் என்றால் அது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அந்த அம்சத்துடன் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், கொடிமரம், பலிபீடம் என ஒரு கோயிலுக்குத் தேவை யான அனைத்தும் இந்த பெருமாள் கோயிலுக்கு இருக்கிறது. பெருமாளை பரிவார தேவதை என்று தட்டிக்கழித்தால், இங்குள்ள  சிவகாமி அம்மன், சுப்பிரமணியசுவாமி போன்றவர்களும் பரிவார தேவதைகள்தானே? அவர்களுக்கெல்லாம் கொடியேற்றி உற்சவம் நடத்துவது மட்டும் சரியா?
பிரமோற்சவ பிரச்னையில் முன்னாள் அமைச்சர் சுவாமி நாதன் எங்களைத் தூண்டிவிட வில்லை. 1968-ம் வருடம் உற்சவம் நடத்த நாங்கள் அறநிலையத்துறைக்கு விண்ணப்பித்தபோது, தீட்சிதர்கள் ஆணையரிடம் அப்பீல் வாங்கினார்கள். பிறகு, 1982-ல் மறுபடியும் நாங்-கள் முயன்றபோது தீட்சிதர்கள் உயர்நீதிமன்றம் போனார்கள். ஆகவே, எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. ஆதிமுதலாக நாங்களாகவேதான் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆயிரம் பேசினாலும் நடராஜர் கோயிலுக்குள் சைவ, வைணவ பேதம் கிடையாது. ஒரே இடத்தில் நின்று கொண்டு சிவனையும், பெருமாளையும் வழிபடுவது மாதிரியான அமைப்பு சிதம்பரத்தைத் தவிர வேறு எங்கும் கிடையாது'' என்றார் அவர் போட்டோவுக்கு மறுத்தபடி.
அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய நபர் ஒருவர் பல `பகீர்' தகவல்களைப் பகிர்ந்தார்.

"நாலாயிர திவ்விய பிரபந்தம் உருவானதே இந்த கேஷத்திரத் தில்தான் என்கிறார்கள். இங்கு கொடிமரம், பலிபீடம் போன்றவை இருப்பதால் ஏற்கெனவே பிரமோற்ச வம் நடந்திருக்க வேண்டும். தில் லையில் இப்போது தீட்சிதர்களின் பலம் சற்றுக் குறைந்திருப்பதால்  இந்த பிரமோற்சவப் பிரச்னை எழுந்திருக்கிறது. பிரமோற்சவம் நடத்தினால் பெருமாளுக்கு சக்தி அதிகமாகி, நடராஜருடைய சக்தி குறைந்துவிடும் என்று தீட்சிதர்கள் கருதுவதாலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்'' என்றார் அவர்.
கடைசியாக  வி.வி.சுவாமிநாதனிடம் பேசினோம்.
"அதிர்ஷ்டவசமாக இந்த பெருமாள் கோயில்  தமிழக அரசின் அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் இருக்கிறது.  பெருமாள் கோயில் பரம்பரை டிரஸ்டிகள் என்று சொல்பவர்கள், தீட்சிதர்களை எதிர்க்கத் துணிவில்லாமல் பயந்தாங்கொள்ளிகளாக இருப்பதால் தான் இந்தக் கோயிலே விளங்காமல் இருக்கிறது.
இந்தக் கோயில் அறங்காவலர் நிர்வாகத்தில் மேனேஜிங் டிரஸ்டி என்ற ஓர் அலங்காரப் பதவிதான் இருக்கிறது. அந்த இடத்தில் அதிகாரமுள்ள நிர்வாக அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும். 1979லிருந்து அறநிலையத்துறையும், நிர்வாக அறங்காவலர்களும் எடுத்த முயற்சியே பிரமோற்சவம் நடத்தப்படவேண்டு மென்பது தான். இதற்குத் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், போலீஸில் புகார் செய்யவேண்டியதுதானே? ஆனால் செய்ய மறுக்கிறார்கள். அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபிறகுதானே கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட தீட்சிதர்கள் அனுமதித்து  அடங்கிப் போனார்கள்'' என்றவர், "இந்தப் பிரச்னையில் நான் யாரையும் தூண்டிவிடவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வுதான் ஊட்டுகிறேன். இதில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கனகசபையில் நடந்தது மாதிரி ஒரு பெரிய மோதலே நடக்கும்'' என்றார் தெளிவாக.     ஸீ

ஸீ
ஆர். விவேக் ஆனந்தன்

 

 

StumbleUpon.com Read more...

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.இவ்வளவு இடங்களை பிடிக்க காரணம் என்ன?ஓர் ஆராய்ச்சி

கர்நாடகத் தேர்தலில் தமது இந்துத்வா முழக்கங்களை பி.ஜே.பி. முன் வைக்கவில்லை. அதை மூட்டை கட்டி வைத்து விட்டது. விலைவாசி உயர்வைத்தான் முன்னிறுத்தியது. காரணம், வெங்காயத்தின் விலை உயர்வுதான் தங்கள் டெல்லிப் பிரதேச ஆட்சியையே கவிழ்த்தது என்பதனை அவர்கள் அறிவார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்னையால் நல்ல பலன் கிடைத்தது. நமது பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் புரிய வேண்டுமே?
 
 
 
 
 
 
ர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தனிப்பெரும் சக்தியாக எழுந்திருக்கிறது. தனித்து ஆட்சி அமைக்க  அதற்கு இன்னும் கூடுதலாக சில இடங்கள் தேவையென்றாலும் அரசு அமைக்க அந்தக் கட்சியை அழைப்பதுதான் ஜனநாயகம்.


இந்த வெற்றி மூலம் விந்தியத்திற்குத் தெற்கே பி.ஜே.பி. தடம் பதிக்கிறது. தலித் மக்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அந்த வாக்கு வங்கியை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி குஜராத் தேர்தலில் சிதைத்தது. மீண்டும் நரேந்திர மோடி முதல்வரானார். இப்போது கர்நாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சிப் பீடம் ஏற, அதே கைங்கர்யத்தை மாயாவதி செய்திருக்கிறார்.


கர்நாடகத் தேர்தலில் மாயாவதி தனித்து `களம்' காண்கிறார் என்ற செய்தி ஏற்கெனவே பி.ஜே.பி.யின் வெற்றிக்குக் கட்டியம் கூறி விட்டது.


தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் பி.ஜே.பி.யின் தேர்தல் வல்லுனர் அருண் ஜேட்லி பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தார். அமைதியாகப் பணிகளைத் தொடங்கினார். அடுத்து அவர் ஓர் அறிவிப்புச் செய்தார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, `தேர்தல் பணியில் வெகுதூரம் முன்னேறி விட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னும் பயணத்தையே தொடங்கவில்லை' என்றார். இறுதிவரை பி.ஜே.பி.யே முன்னேறி முன்னேறி வெற்றிக் கம்பத்தைச் சற்றுத் தடுமாற்றத்துடன் தொட்டு விட்டது.


பொதுவாக கர்நாடகாவின் கடற்கரை மாவட்டங்கள் - தென் கன்னடப் பகுதி பி.ஜே.பி.யின்  கோட்டை என்பார்கள். இம்முறை அந்தக் கோட்டையில் சற்று ஓட்டை விழுந்தது. மராட்டிய மொழிபேசும் மக்கள் கணிசமாக வாழ்கின்ற வட கன்னட மாவட்டங்களில் காங்கிரஸ்  கட்சியின் பலம் கூடியிருக்கிறது. ஆனால், அதன் செல்வாக்கு மண்டலமாகக் கருதப்பட்ட மத்திய கர்நாடகாவில் பெரும் சரிவைச் சந்தித்து இருக்கிறது.


கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட தற்போது காங்கிஸ் கட்சிக்கு 15 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் அந்தக் கட்சி ஆறுதல் பெறலாம். ஆனால், பி.ஜே.பி. 31 இடங்கள்  அதிகமாகப் பெற்றிருக்கிறது.


அரசியல் பொம்மலாட்டம் நடத்தும் தேவேகவுடாவின்  ஐக்கிய ஜனதா தளம்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது.   அதன் சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு இன்னும் கர்நாடகம் முழுமையாக விடை கொடுக்கவில்லை. இருந்தாலும் மரணஅடி கொடுத்திருக்கிறது. வேண்டுமானால் உயிர் பிரிய-வில்லை என்று சொல்லலாம்.


கர்நாடகத் தேர்தலில் பணம்தான் பிரதானமாக இருந்தது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்திருக்கிறார். உண்மை. இந்திய அரசியலை காங்கிரஸ் கட்சியும், பி.ஜே.பி.யும் அழிவு முனைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதனை கர்நாடகத் தேர்தல் வெளிச்சம் போட்-டுக் காட்டி விட்டது.


ரியல் எஸ்டேட் அதிபர்கள், சுரங்க முதலாளிகள், சங்கிலித் தொடராகப் பல்வேறு கல்லூரிகளை நடத்தும் கல்விக் கொள்ளையர்கள், திடீர் குபேரர்கள், கள்ளச்சாராய ஆலை அதிபர்கள் மற்றும் தாதாக்களின் கரங்களுக்கு இந்திய அரசியல் மாறி வருகிறது என்பதனையே காங்கிரஸ், பி.ஜே.பி. வேட்பாளர்களின் பட்டியல் படம் பிடித்துக் காட்டுகிறது.


மாநில பி.ஜே.பி.யின் தேர்தல் பெட்டகமே ஒரு ஜனார்த்தன ரெட்டிதான். அவர்தான் பி.ஜே.பி.க்காகத் தேர்தலையே நடத்தியவர். பெல்லாரியில் குடிகொண்டிருக்கும் அவர், சுரங்கங்களின் ஏகபோகச் சக்கரவர்த்தி. இப்போது சீனத்திற்கு பெல்லாரி இரும்புத் தாது கப்பல் கப்பலாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ரெட்டிகாரின் வருமானம் அவ்வளவு அதிகமில்லை.  ஒரு நாள் வருமானம் ஏழுகோடிதான் என்று கர்நாடக ஏடுகள் கண்சிமிட்டிக் கூறுகின்றன.


காங்கிரஸ் வெற்றி பெற்றால், சுரங்கத் துறையிலுள்ள தமது ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்து விடும் என்று நியாயமாகவே அச்சப்பட்டார். அந்த ரெட்டிகாரின் தர்பாரை மீறி பெல்லாரி உள்பட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணியே செய்ய முடியவில்லை.


வாரிசு அடிப்படையில் இனி தேர்தல் டிக்கெட் இல்லை என்று கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை நல்ல முடிவு எடுத்தது. மார்கரெட் ஆல்வா உள்பட காங்கிரஸ் கட்சியின் 12 பெரும் புள்ளிகளின் வாரிசுகளுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் வேட்பாளர் தேர்வில் பி.ஜே.பி.யின் வழியைத்தான் பின்பற்றியது. காங்-கிரஸ் வேட்பாளர்களில் கணிசமானவர்கள் வசதி-படைத்த செல்வந்தர்கள்தான். பி.ஜே.பி. ரகத்தைச் சேர்ந்த-வர்கள்-தான்.


தேவேகவுடாவின் மைந்தன் குமாரசாமி முதல்வராக இருந்தபோது ஒரு நல்ல காரியம் செய்தார். பெங்களூரு நகர எல்லைக்குள் யார் யார் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதனைக் கண்டுபிடிக்க ஒரு குழு அமைத்தார்.  அரசுக்குச் சொந்தமான ஏறத்தாழ 1300 ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதனை அந்தக் குழு கண்டுபிடித்தது.


ஆனாலும் நிலத்தை மீட்க முடியவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் பலநூறு  மாடி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள் கட்டி விற்பனை செய்து பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாகி விட்டார்கள். அவர்களும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி. வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். வெற்றியும் பெற்றனர். தங்கள் நலன் என்று வரும்போது, இவர்கள் ஆளும் கட்சியைக் காப்பதற்கு அணிதிரண்டு நிற்கத் தயாராக இருக்கிறார்கள். இந்திய அரசியலின் இதயமே எப்படிச் செல்லரித்துப்-போய் வருகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.


கர்நாடகா தேர்தலில் குறிப்-பிடத்தக்க அம்சம் என்னவெனில், காங்கிரஸோ, பி.ஜே.பி.யோ, கவுடாவின் ஜனதா தளமோ கூட்டணி அமைக்கவில்லை. தனித்தேதான் போட்டியிட்டன.


நாடு முழுமையும் நடந்த தொகுதிச் சீரமைப்பிற்குப் பின்னர் கர்நாடகம்தான் முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்தது. எனவே, தீர்ப்பு எப்படியிருக்கும் என்று தேர்தல் ஆணையமும் அச்சம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளும் திகைத்துப் போய்தான் தேர்தல் களத்திற்கு வந்தன. ஆனால், தொகுதிச் சீரமைப்பு எந்தக் கட்சியின் வெற்றி தோல்விகளையும் தீர்மானிக்கவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.


தங்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று கவுடாவின் ஜனதாதளம் நம்பிக்கையோடு இருந்தது. பெல்லாரி சுரங்கத் துறையையும், தொழில்துறையையும் எந்தக் கட்சி தங்களுக்கு சீதனமாக அளிக்கிறதோ, அந்தக் கட்சியுடன் அணி சேர தேவேகவுடா தயாராக இருந்தார். ஆமாம். கர்நாடகா அரசியலைத் தீர்மானிப்பதே பெல்லாரி சுரங்கங்கள்தான்.


அடுத்து வரும் சட்டமன்றங்களின் தேர்தல் தீர்ப்பிற்-கும், நாடாளுமன்றத் தேர்தல் தீர்ப்பிற்கும் கர்நாடக தேர்தல் தீர்ப்பு முன்னோடியாக இருக்கும் என்று பி.ஜே.பி. தெரிவித்தது. இப்போது அந்தக் கட்சி நம்பிக்கையோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.


கர்நாடகத் தேர்தலில் தமது இந்துத்வா முழக்கங்களை பி.ஜே.பி. முன் வைக்கவில்லை. அதை மூட்டை கட்டி வைத்து விட்டது. விலைவாசி உயர்வைத்தான் முன்னிறுத்தியது. காரணம், வெங்காயத்தின் விலை உயர்வுதான் தங்கள் டெல்லிப் பிரதேச ஆட்சியையே கவிழ்த்தது என்பதனை அவர்கள் அறிவார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்னையால் நல்ல பலன் கிடைத்தது. நமது பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் புரிய வேண்டுமே?


எதிர்காலத்தில் புதிய அரசியல் அணிகள் அமைவதற்கான வாசலை கர்நாடகா  தேர்தல் திறந்து விட்டிருக்கிறது. சோனியாவுக்குத் தெரிய வேண்டுமே?            ஸீ 
 

 
 

StumbleUpon.com Read more...

போதனைகள் செய்ய தகுதி உடைய ஒரே ஒருவர்

இயேசு கிறிஸ்துவின் போதனைகள்

thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Good Shepherd Jesusஇயேசு கிறிஸ்து பல இடங்களுக்கும் சென்று கிறிஸ்துவ மத உபதேசங்களை செய்து வந்தார். பலரின் நோய்களையும் குணப்படுத்தி வந்தார். அவரது புகழ் பரவியது.அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரை பின் தெடார்ந்து சென்றனர்.

அது போல் ஒரு நாள் அவரை பின் தொடர்ந்து பெருந்திரளான மக்கள் வந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட இயேசு அருகிலிருந்த குன்றின் மேல் அமர்ந்துமக்களுக்கு போதனை செய்தார். அதனால் இந்த போதனை மலைமேல் இயேசு செய்த போதனை என அழைக்கப்படுகிறது.

தான் அமர்ந்த இடத்திலிருந்து மக்களை பார்த்தார் இயேசு பிரான். கூடியிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருப்பவர்களும், மனவருத்தம் உடையவர்களாகவும் இருக்க கண்டார் இயேசு.

அவர்களுக்கு இயேசு செய்த போதனை:

Sermons
  • மனம் வருந்தாதீர்கள். சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்யம்தான்.

  • தங்களுக்கு ஆறுதல் வேண்டும் என கேட்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

  • கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும்.

  • தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

  • அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவனின் புதல்வர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

  • என் பொருட்டு துன்பப்படுகிறவர்கள் அதற்கான பரிசாக சொர்க்கத்தை அடைவார்கள்.

  • ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார். உங்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம்.ஆண்டவர் அந்த பொறுப்பேற்பார் என்று கூறி எவ்வாறு பிரார்த்தனை செய்வது எனவும் கூறினார்.

  • மற்றவர்கள் நீங்கள் பிரார்த்தனை செய்வதை காண வேண்டும் என பொது இடங்களில் பிரார்தனை செய்யாதீர்கள். தனி அறைக்கு சென்று பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவை பிரார்த்தியுங்கள்.

  • உங்களைப்பற்றி அறிந்த தந்தை உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார் அதை அவர்அருள்வார் என கூறினார்
  • http://thatstamil.oneindia.in/religion/christianity/christmas/sermons.html

    StumbleUpon.com Read more...

    ஏ.கே.47 துப்பாக்கியுடன் போஸ்:சில்வஸ்டர் ஸ்டாலோன் vs குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்

    ஏ.கே.47 துப்பாக்கியுடன் போஸ்- பிரதீபாவுக்கு கண்டனம்
    thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
        

    Pratibha Patil
    டெல்லி: ஏ.கே.47 ரக துப்பாக்கியை கையில் ஏந்தியபடி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் போஸ் கொடுத்துள்ளது கண்டனத்துக்குரியது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ராணுவ தளம் ஒன்றுக்கு சென்ற பிரதீபா, ஏ.கே.47 துப்பாக்கியை வாங்கி அதை மேலே பிடித்தபடி சிரித்தபடி போஸ் கொடுத்தார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, பிரதீபாவின் போஸுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் ஒரு பொருளை கையில் தூக்கியபடி, புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார் குடியரசுத் தலைவர்.

    அவரது புன்னகைக்கும், கையில் இருக்கும் துப்பாக்கிக்கும் சற்றும் பொருத்தமாக இல்லை. முப்படைகளுக்கும் அவர் தலைவர்தான் என்றாலும், இப்படி போஸ் கொடுத்தது தவறு.

    இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது, சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'Stop or My Mom would shoot' என்கிற படம்தான் நினைக்கு வந்தது என்று கூறியுள்ளார் உமர் அப்துல்லா.

     
     

    StumbleUpon.com Read more...

    இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பவரின் புள்ளிவிவரங்கள்: உங்களையும் சேர்த்துள்ளார்கள்

    இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு-ஜக்ஸ்ட்கன்சல்ட் ஆன்லைன் ஆய்வு முடிவுகள்
        

    இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வை ஜக்ஸ்ட்கன்சல்ட் நடத்தியுள்ளது.

    இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரின் பயன்பாட்டுத் தன்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    தற்போது 2008ம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஜக்ஸ்டகன்சல்ட் இந்தியா ஆன்லைன்-2008 ஆய்வின் முக்கிய அம்சங்கள்

    - கடந்த ஆண்டு இந்திய இன்டர்நெட் பயன்பாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.

    - இந்தியாவில் கடந்த ஆண்டு இணைய தளங்களை பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 4.9 கோடியாகும். இதில் 4 கோடி பேர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 90 லட்சம் பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

    - கடந்த ஆண்டில் நகர்ப்புற இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    - இவர்களில் 3.5 கோடி பேர் மிக ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 3 கோடி பேர் நகர்ப்புறங்களையும், 50 லட்சம் பேர் ஊரகப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

    - நகர்ப்புறங்களில் ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 19 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    - 2.5 கோடி பேர் தினமும் இண்டர்நெட்டை பயன்படுத்துவோர் ஆவர்.

    'ரெகுலர்' பயன்பாட்டாளர்கள் என்பது, குறைந்தது மாதம் ஒரு முறையாவது இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஆவர்.

    இந்தியாவில், அனைத்துப் வயதைச் சேர்ந்தவர்களிடையேயும், இன்டர்நெட் பயன்பாடு நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றாலும் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் 77 சதவீதம் நெட்டை பயன்படுத்துகின்றனர்.

    மொத்த இணையதள பயன்பாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் ஏ, பி மற்றும் சி நகரங்களைச் சேர்ந்தவர்கள். 51 சதவீதம் பேர் மாதச் சம்பளம் வாங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 63 சதவீதம் பேர் சொந்த வாகனம் வைத்திருப்போர் ஆவர்.

    இணையதளங்களைப் பயன்படுத்துவோரில் 28 சதவீதம் பேர்தான் ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் தங்களது தாய் மொழி தொடர்பான இணையதளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்டர்நெட் பயன்படுத்துவோரின் பின்னணி


     
    வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருப்போர் இன்டர்நெட் பயன்படுத்துவோர்
    கலர் டிவி வைத்திருப்போர 90 %
    செல்போன் 87%
    வங்கிக் கணக்கு 84%
    கம்ப்யூட்டர் - லேப்டாப் 72%
    பிரிட்ஜ 68%
    லைப் இன்சூரன்ஸ 53%
    2 வீலர 46%
    கிரெடிட் கார்டு 31%
    ஏசி 19%
    4 வீலர் 17%
    பங்கு முதலீடு வைத்திருப்போர் 11%



    தினசரி வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் இன்டர்நெட்:

    இண்டர்நெட் ஒருவரின் தினசரி வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வீடுகளில் பிரவுசிங் செய்வதையே 41 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
    ரெகுலர் பயன்பாட்டாளர்கள் 10 பேரில் 9 பேர் வீட்டிலும் அலுவலகத்திலும் தான் பிரவுஸ் செய்கின்றனர்.

    - இவர்களில் பலர் வீட்டில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    - வார இறுதி நாட்களில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வோரின் எண்ணிக்கை 36 சதவீதமாகும்.

    - 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் டிவி பார்ப்போரின் எண்ணிக்கை 14 சதவீதம்.

    - 2 மணி அல்லது அதற்கு மேல் செய்தித்தாள்களைப் படிப்போரின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான்.

    - 2 மணி அல்லது அதற்கு மேலும் ரேடியோ கேட்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே.

    - சேட்டிங், பிளாக் உள்ளிட்ட சமூக மீடியா தளங்கள் மூலம் பிறருடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோரின் எண்ணிக்கை 81 சதவீதமாகும்.


    இமெயில் அனுப்பத்தான் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்.

     
    டாப் 10 பயன்பாட்டு பட்டியல் இன்டர்நெட் பயன்பாடு
    இ மெயில் 91%
    வேலை தேட 72%
    மெசேஜ், சாட் செய்ய 70%
    செய்தி பார்க்க 63%
    விளையாட்டு செய்தி அறிய 57%
    படம், இசை டவுன்லோட் செய்ய 54%
    கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க 50%
    டேட்டிங், நண்பர்களைப் பிடிக்க 50%
    வரன் தேட 49%
    தகவல் தேட (சர்ச் என்ஜின்) 49%

    சராசரியாக 15 வகையான செயல்பாட்டுக்கு இன்டர்நெட்டை பயன்பாட்டாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதில் டாப் 10ல் 7 செயல்பாடுகள், அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பானவையாக உள்ளன.

    தாய் மொழி பயன்பாடு அதிகரிப்பு:

    தாய் மொழியிலான இணையத் தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12 சதவீதமாக இருந்தது. இது தற்போது 34 சதவீதமாக எகிறியுள்ளது.

    28 சதவீதம் பேர்தான் ஆங்கில தளங்களை அதிகம் பார்க்கின்றனர். அதேசமயம் 34 சதவீதம் பேர் மட்டுமே பிராந்திய மொழிகளைப் பார்ப்பதற்குக் காரணம், பிராந்திய மொழிகளில் போதிய அளவிலான இணைய தளங்கள் இல்லாததே.

    ஆன்லைன் ஷாப்பிங்:

    - ரெகுலராக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குகின்றனர் அல்லது வாங்க இருக்கும் பொருளை ஆன்லைனில் தேடுகின்றனர்.

    - இதில் 23 சதவீதம் பேர் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கியுள்ளனர். ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.

    - ஆன்லைனில் பொருட்கள் வாங்கியவர்களில் 92 சதவீதம் பேர் (இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 23 சதவீதம் ஆவர்) பயணம் தொடர்பான பொருட்களை (டிக்கெட் உள்ளிட்டவை) வாங்கியுள்ளனர். பயணம் தொடர்பில்லாத பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கியோரின் 51 சதவீதத்தினர் ஆவர்.

    - கடந்த 6 மாதங்களில் 80 சதவீதம் பேர் ரயில் டிக்கெட்டுகளை வாங்க ஆன்லைனைப் பயன்படுத்தியுள்ளனர். 52 சதவீதம் பேர் விமான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

    - இவை தவிர புத்தகங்கள், உடைகள், சிடி, டிவிடி ஆகியவற்றையும் பெருமளவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கியுள்ளனர். இன்டர்நெட்டில் அதிக அளவில் தேடப்பட்ட பொருட்களாக கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் உள்ளன.

    தேடல் - முன்னணியில் கூகுள்:

    இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் முன்னணி தளமாக கூகுள் உள்ளது.

     
    இணையதளம நினைத்தவர்கள் அதிகமாக பயன்படுத்தியவர்கள்
    கூகுள் 36.6% 28.4%
    யாஹூ 31.5% 27.6%
    ரீடிப் 7.4% 8.6%
    ஆர்குட 5.6% 8.1%
    ஜிெமயில 5.5% 8.6%
    இந்தியாடைம்ஸ 1.7% 1.2%
    ஹாட்மெயில் 1.1% 1.0%
    மணிகண்ட்ரோல் 0.8% 0.8%
    நெளக்ரி 0.7% 0.4%
    சிஃபி 0.6% 0.7%



















    குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இணையத் தளங்கள்.


     
    நோக்கம் இணையதளம் பயன்பாட்டு விகிதம்
    இ மெயில யாஹூ 51%
    மெசேஸிங் யாஹூ 53%
    வேலை தேடல நெளக்ரி 42%
    ஆன்லைன் செய்தி யாஹூ 16%
    தகவல் தேடல் (ஆங்கிலம்) கூகுள 81%
    தகவல் தேடல் (பிராந்தியமொழி) கூகுள் 65%
    ஆன்லைன் டிராவல யாத்ரா 18%
    கேம்ஸ ஜபக் 32%
    ஷாப்பிங் (பயணம் அல்லாதது) ஈபே 33%
    ரியல் எஸ்டேட் கூகுள் 23%
    நிதி செய்திகள் மணிகண்ட்ரோல 18%
    ஷேர் டிரேடிங் ஐசிஐசிஐ டைரக்ட் 31%
    நெட் டெலிபோன் யாஹூ 25%
    மேட்ரிமோனி பாரத் மேட்ரிமோனி 36%
    டேட்டிங், நண்பர்கள் ஆர்குட 54%
    பட பகிர்வு ஆர்குட 38%
    சோஷியல் நெட்ஒர்க்கிங ஆர்குட 66%
    புரபஷனல் நெட்ஒர்க்கிங ஆர்குட 44%
    வீடியோ பகிர்வு யூடியூப 43%
    விளையாட்ட கிரிக்இன்ஃபோ 19%
    ஜோதிடம் யாஹு 25%
    சினிமா யாஹூ 14%
    இசை ராகா 17%
    ஆன்லைன் கல்வி, கற்றல் கூகுள் 32%
    சிடி வாடகை, வாங்குவது ரீடிப் 19%
    மொபைல் கன்டென்ட் யாஹூ 12%








































    கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை:

    - கடந்த மார்ச் மாதம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    - 40 நகரங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 160 கிராமங்களைச் சேர்ந்த 4000 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

    - மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் பேரிடம் ஆன்லைன் மூலமும் கருத்து அறியப்பட்டது.

    - கூகுள் சர்ச் விளம்பரங்கள் மற்றும் ஜஸ்க்ட்கன்சல்ட் அமைப்பின் இணையதளம் மூலம் (http://www.getcounted.net/) ஆன்லைன் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    - மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில், நகர்ப்புற- கிராமப்புற மக்களின் எண்ணிக்கையை கருத்தில் வைத்து, மிகவும் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
     

    StumbleUpon.com Read more...

    பீச் ஓர பங்களா மர்மம்.

    நீலக்கடல் அலைகள் எந்தநேரமும் முத்தமிடும் நீண்ட எலியட்ஸ் கடற்கரை. அழகான அந்த பீச்சில் உலா வரும் காதல் ஜோடிகளின் கண்கள் கூட, அங்கே அஸ்திவாரம் தோண்டப்பட்டு அசுர வேகத்தில் உருவாகி வரும் ஒரு பங்களாவைக் காணத் தவறுவதில்லை. ``ஏண்டா செல்லம்? எனக்காக கடலோரம் இப்படி ஒரு வசந்த மாளிகையை எவ்வளவு நாளா கட்டுறே? சொல்லவே இல்லியே?'' என்று காதலிகள் செல்லமாக காதலனை வாருகிற காட்சிகளும் அங்கே அடிக்கடி அரங்கேறுகின்றன.

    சரி! யாருக்காகத்தான் கட்டப்பட்டு வருகிறது அந்தக் வசந்த மாளிகை? `அந்த கனவு மாளிகையில் இருந்தபடி கடற்கரையின் அழகைப் பார்த்து ரசிக்கப் போகிற பாக்கியசாலி யார்? இந்த கேள்விக்கான பதில் `கவர்னர்' என்று அமைந்துவிட்டதால் கலங்கிப் போய் இருக்கிறார்கள் பலர்.

    `சுனாமி சுருட்டிய சுருட்டலுக்குப்பின் கடற் கரையில் இருந்து ஐநூறு மீட்டர் தூரத்துக்குள் யாரும் கட்டடம் கட்டக் கூடாது என்று அரசு கட்டளையிட் டிருக்கிறது. கடலோர மீனவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளாதகுறையாக ஐநூறு மீட்டர் தொலைவுக்கு அப் பால் அப்புறப்படுத்துகிறது. அப்படியிருக்க, கவர்னருக்கு மட்டும் கடல்அலை தொடும் தூரத்தில் கனவு மாளி கையா? என்னய்யா கூத்து? ' என்ற கேள்வியும் பலரிடம் எகிறித் தெறிக்கிறது.

    அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட தென் சென்னை மக்களின் சொர்க்கபுரியாக இருக்கும் எலியட்ஸ் பீச்சில் கடற்கரையில் இருந்து சில அடி தூரத்தில் கட்டப்பட்டு வரும் அந்தக் கனவு மாளிகையைக் காணும் ஆவலில் நாமும் எலியட்ஸ் பீச்சுக்கு விரைந்தோம்.

    பெசன்ட்நகர் பிரதான சாலையில் இருந்து சர்ரென விலகி, கடற்கரையில் நடுநாயகமாக அந்த மாளிகையின் கட்டுமானப் பணிகள் கனஜோராக நடந்து கொண்டிருந்தன. அந்த மாளிகையின் பரப்பளவு ஏறத்தாழ பத்து கிரவுண்ட். அதைச் சுற்றி கச்சிதமாகக் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு, பத்தடி ஆழத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு, படு பரபரப்பாகக் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. நாம் காம்பவுண்டின் உள்புறம் சென்று கட்டடப் பணிகளைக் பார்வையிட்டோம். கட்டட முகப்பில் புல் வளர்ப்பதற்காக செம்மண் கொட்டி சமன் செய்யப் பட்டிருந்தது. புல்வெளியில் நின்று பார்த்தால் கடற்கரையின் அழகு முழுவதுமாக கண்ணுக்குத் தெரியும் வகையில் மாளிகையின் வடிவமைப்பு தென்பட்டது. அங்கே இருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

    ``இந்தக் கட்டடத்தின் சுவர்கள் `வயர்கட் பிரிக்' என்று சொல்லப்படும் விலை உயர்ந்த செங்கற்களால் உருவாகி வருகின்றன. ஒரு செங்கல்லின் விலை இருபது ரூபாய். இந்த வகை செங்கல்லில் வீடு கட்டினால் கடலின் உப்புக் காற்றால் சுவரில் அரிப்பு ஏற்படாது'' என்று அவர்கள் விளக்கினார்கள்.

    ``பல லட்ச ரூபாய் செலவில் படுஜோராகத் தயாராகிறது இந்த மாளிகை. தரைத்தளத்தோடு, முதல் தளம் கொண்டதாக கட்டடம் அமையப் போகிறது. இந்த மாளிகையில் கவர்னர் அவ்வப்போது வந்து ஓய்வெடுக்க வசதியாக இரண்டு படுக்கையறை, ஒரு சமையலறை உள்பட அனைத்து வசதிகளும் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு வருகிறது'' என்றனர் அவர்கள்

    அங்கிருந்த ஒரு கட்டடத் தொழிலாளியிடம் பேசினோம். "நாங்கள் எல்லாரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள். பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் மாயக்கிருஷ்ணன் அழைத்ததால் வேலை செய்ய வந்திருக்கிறோம். `கவர்னருக்காகக் கட்டப்படும் பங்களா என்பதால் எல்லாரும் நல்லபடியாக வேலை செய்யணும்' என்று ஆரம்பத்திலேயே சொல்லி வேலை வாங்குகிறார்கள். சில மாதங்களில் வேலை முடிந்துவிடும்'' என்றார் அவர். கட்டடத்தின் பின்புறம் சென்றபோது, சில அடி தூரங்களில் தொட்டுவிடும் தூரத்தில் கடல் இருந்தது.

    எலியட்ஸ் பீச்சில் புதிதாக எழும்பி வரும் இந்த மாளிகையைப் பற்றி, அடுக்ககம் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் மாநிலத் தலைவர் மணிசங்கரிடம் கருத்துக் கேட்டோம்.

    "இது அப்பட்டமான விதிமீறல். மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கடலோர பாதுகாப்புச் சட்டத்தின் படி கடலில் இருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது. ஆனால் இங்கே கடலுக்கு மிக அருகில் கட்டடம் கட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் எந்தவித எச்சரிக்கையும் செய்யாமல் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடமும் தவறு இருக்கிறது. விதிமுறைகள் எல்லா மக்களுக்கும் ஒன்றுதானே?'' என்று ஆதங்கப்பட்டார் அவர்.

    கடற்கரையில் கட்டப்படும் இந்த கவர்னர் மாளி கையை எதிர்த்துப் போராடி வரும் நுகர்வோர் பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சுற்றுச்சூழல் பிரிவு நிர்வாகியான ராஜேஷ் ரங்கராஜன் என்பவரிடமும் பேசி னோம்.

    "சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவ மக் களுக்குக் கூட இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் பொது நல அமைப்புகள் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றன. இதற்காக தொலைவில் உள்ள அரசு நிலங்கள்தான் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், இங்கே தனி ஒருவருக்கு கடற்கரையில் பங்களா கட்ட அனுமதித்திருப்பதன் மூலம் அரசு இரட்டை வேடம் போடுவது நன்றாகத் தெரிகிறது. பொதுப்பணித்துறை சார்பில் அங்கே கட்டடம் கட்டி வருகின்றனர். மாநில அரசின் உயர் பதவியில் இருக்கும் கவர்னர் பர்னாலாவின் பாதுகாப்பைப் பற்றிக் கூட கவலைப்படாமல் இப்படி கடலோரம் அவருக்கு பங்களா கட்டுகிறார்கள். கிண்டி, ராஜ்பவனில் கவர்னருக்குப் போதிய வசதி இருக்கிறது. ஊட்டியிலும் கவர்னருக்கு ஓய்வு பங்களா இருக்கிறது. அப்படியிருக்க எதற்காக இப்படி ஒரு புதிய பங்களா? மக்கள் பணத்தை வீணாக்கவா?

    கவர்னர் இந்த கடற்கரை மாளிகைக்கு ஓய்வெடுக்க வந்தால், இந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும். அப்போது பீச்சில் ஓய்வெடுக்க வரும் சாதாரண மக்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாவார்கள். கடலோர ஒருங்கமைப்புச் சட்டம் 1991_ன்படி கடலின் அதிகபட்ச அலையின் தாக்கம் (ஹை டைட் லைன்) இருக்கும் இருநூறு மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் இருக்கக் கூடாது. இந்த பங்களா காம்பவுண்ட் நூறு மீட்டருக்குள் வருகிறது. இதுவே விதிமீறிய செயல்தான்.

    அதுபோல பெசன்ட் நகரில் இருந்து நீலாங்கரை வரையுள்ள பகுதி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி. இப்படி கடலருகே கட்டடம் கட்டுவதால் ஆமை இனம் கூட அருகிப் போகும். எனவே `கடலோரத்தில் கட்டடம் கட்ட எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?' என்று பொதுத் துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனு செய்திருக்கிறோம். எங்களுக்குப் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து சட்டரீதியாகப் போராடுவோம்'' என்றார் அவர் உறுதியாக.

    கவர்னர் அலுவலக வட்டாரங்களில் நாம் பேசிய போது, "கவர்னருக்கு ராஜ்பவனில் போதுமான அளவுக்கு வசதிகள் இருக்கிறன. இதில் புதிதாக அவருக்கு மாளிகை கட்ட வேண்டிய அவசியமில்லை. கவர்னர் அலுவலகத்தில் துணைவேந்தர் நியமனம் உள்பட பல விஷயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ள ஒரு தனிநபருக்காக ஒருவேளை இந்த கடற்கரை மாளிகை கட்டப்பட்டு வரலாம். அப்படி கட்டடம் கட்டுவது மாநில அரசின் முடிவாகத்தான் இருக்க முடியும். எங்களுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது'' என்றனர் அவர்கள்.

    இதுதொடர்பாக சி.எம்.டி.ஏ தலைவரும், அமைச்சருமான பரிதி இளம்வழுதியிடம் பேச முயன்ற போது அவர் சார்பாகப் பேசியவர்கள், "எலியட்ஸ் பீச்சில் புதிதாக கட்டடம் கட்டுவது பற்றி ஆவணப் பூர்வமாக எங்களிடம் எந்தவித தகவலும் வரவில்லை. பெசன்ட் நகர் பீச்சில் கட்டடம் கட்ட நாங்கள் எந்தவித அனுமதி யும் கொடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்'' என்று கைகாட்டினர்.

    சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியனிடம் நாம் பேசியபோது, "பெசண்ட் நகர் பீச்சில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், அது புதிதாகக் கட்டப்படவில்லை. ஏற்கெனவே இருந்த பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியைத்தான் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்'' என்றார் உறுதியாக.

    பந்து பொதுப்பணித்துறை பக்கம் போய் விட்டதால், அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவரைக் கேட்டோம். "பொதுப்பணித் துறை சார்பில் எந்த ஒரு கட்டடமும் கடற்கரையில் கட்டுவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை. தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள்தான்'' என்று ஒரேடியாக சாதித்து முடித்து விட்டார் அவர்.

    ஆக, அந்த பங்களா ஒரு மர்ம மாளிகையாகத்தான் காட்சியளிக்கிறது. உண்மைகளை விளக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

    படங்கள்: ஞானமணி.
    ஆ. விஜயானந்த்


    நன்றி: குமுதம் ரிப்பொர்ட்டர்

    StumbleUpon.com Read more...

    இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருக்கின்றன அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தகவல்


    லண்டன், மே.28-

    இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருக்கின்றன என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தார்.

    இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் இருப்பதாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக அறிவித்து இருப்பது இதுதான் முதல் முறை ஆகும்.

    ஒப்புக்கொண்டது கிடையாது

    அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலிடம் அணுஆயுதங்கள் இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் அணுகுண்டு இருப்பதாக ஒப்புக்கொண்டது கிடையாது. அமெரிக்க அதிகாரிகளும் இதை வெளிப்படுத்தியது கிடையாது. முதல் முறையாக இப்போது தான் அது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரே தன் வாயால் அதை அறிவித்து இருக்கிறார்.

    ஜிம்மி கார்ட்டர் 1977-ம் ஆண்டு முதல் 1981-ம்ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார். அவரது பதவி காலத்தில் தான் இஸ்ரேல் எகிப்து இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கார்ட்டர் உதவியாக இருந்தார்.

    அவர் லண்டனில் ஒரு விழாவில் பேசும்போது, அமெரிக்காவிடம் 12ஆயிரம் அணுஆயுதங்கள் உள்ளன. ரஷியாவிடமும் அதே அளவு அணுஆயுதங்கள் உள்ளன. இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளிடம் பலநூறு அணுஆயுதங்கள் உள்ளன. இஸ்ரேலிடம் 150 அணுஆயுதங்கள் உள்ளன என்று தெரிவித்தார். எனவே ஈரான் நாட்டுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அணுஆயுத திட்டத்தை கைவிடச்செய்யவேண்டும் என்று கார்ட்டர் வலியுறுத்தினார்.

    கண்டனம்

    இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருப்பதாக கார்ட்டர் தெரிவித்து இருப்பதற்கு இஸ்ரேல் அதிகாரி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது நல்லது செய்வதற்கு பதிலாக தீமை தான் செய்யும் என்று அவர் கூறினார்.

    கார்ட்டர் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். அப்போது அவர் சிரியாவில் ஹமாஸ் தீவிரவாதக்குழு தலைவரை அவர் சந்தித்து பேசினார்.

    கார்ட்டர் இஸ்ரேலின் பாலஸ்தீன கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் கார்ட்டர் இஸ்ரேல் சென்றபோது, அவரை இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மர்ட் சந்திக்க மறுத்துவிட்டார்.


     http://www.dailythanthi.com/article.asp?NewsID=415389&disdate=5/28/2008

    StumbleUpon.com Read more...

    விமானப்படை குண்டுவீச்சில் விடுதலைப்புலி பெண் தளபதி பலி


    விமானப்படை குண்டுவீச்சில்
    விடுதலைப்புலி பெண் தளபதி பலி


    கொழும்பு, மே.28-

    இலங்கையின் மன்னார் பகுதியில் ஆண்டான்குளம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் மீது விமானப்படை ஹெலிகாப்டர்கள் நேற்றுமுன்தினம் குண்டுவீசின. இந்த குண்டுவீச்சில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த பெண் தளபதியான டோரா பலியானார்.

    மன்னார் முன்னரங்க பகுதியில் வேலகுளம், மாம்புலிகுளம், நெடுங்கந்தல், முனிமுறிப்பு உள்ளிட்ட இடங்களில் ராணுவத்துடன் நடைபெற்ற மோதல்களில் 10 விடுதலைப்புலிகள் பலியானார்கள். வவுனியா பகுதியில் 6 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். வெலிஓயாவில் ஜனக்புரா அருகே விடுதலைப்புலிகளின் முக்கிய தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் 14 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இதே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் 3 விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் ஆண்டான்குளத்தில் 4 விடுதலைப்புலிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.

    இந்த தகவல்களை ராணுவ தகவல் மையம் தெரிவித்து உள்ளது.

     http://www.dailythanthi.com/article.asp?NewsID=415377&disdate=5/28/2008

    StumbleUpon.com Read more...

    காக்கிகளைச் சித்தரவதை செய்யும் காக்கிகள்?-கொதித்தெழும் குடும்பங்கள்

    >> Tuesday, May 27, 2008

    ர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகளும் வாக்கி டாக்கியும் களவுபோய் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், காவல் நிலையத்தில் கொள்ளையடித்தது யார் என்பது இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

    குற்றவாளிகள் யார் என்பதை உறுதிபடக் கூற முடியாத போலீஸார் பலரையும் சந்தேகக் கண்கொண்டு விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சம்பவ தினத்தன்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணன், சென்ட்ரி காவலராக இருந்த சுப்பிரமணியம், ஏட்டுக்கள் ராஜமாணிக்கம் மற்றும் ராஜா இவர்களுடன் காவல் நிலையத்தில் தாற்காலிக டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்த செந்தில்குமார் ஆகியோரிடம் கடுமையான விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அவர்களில் ராஜமாணிக்கம், ராஜா என்ற இரண்டு ஏட்டுகளையும் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகச் சித்திரவதை செய்கிறார்கள் என்று சம்பந்தப்பட்ட ஏட்டுகளின் குடும்பத்தினர் முதலமைச்சர் வரையில் முறையிட்டிருக்கின்றனர்.

    தர்மபுரி ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பில் வைத்து ரகசியமாக விசாரிக்கப்பட்டு வரும் ஏட்டுகளை எப்போதாவது சந்திக்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி தரப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அப்படி அவர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய ஏட்டுகளின் குடும்பத்தினர், கொதிப்புடன் வெளிப்படையான போராட்டத்தில் இறங்கி விட்டனர்.

    தர்மபுரி ஆட்சித் தலைவரின் காரை மறித்து "தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை'' என்று கூறிய அவர்கள், தங்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று முறையிட்டி ருக்கின்றனர். அவர்களிடம் பேசிய தர்மபுரி ஆட்சியர் அமுதாவும் சட்டத்துக்குட்பட்ட உதவிகளை நிச்சயம் அவர்களுக்குச் செய்வதாகக் கூறி சமாதானம் செய்திருக்கிறார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க நாம் தர்மபுரி சென்றோம். பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் ஏட்டு ராஜமாணிக்கத்தின் மனைவி சிவகாமியை முதலில் சந்தித்தோம். "கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி வேலைக்குப் போனவர் இன்று வரையில் வீடு திரும்பவேயில்லை. இவரையும் இவரோடு வேலை பார்த்த ராஜா என்ற மற்றொரு ஏட்டையும் தவிர, மற்ற அனைவரும் விசாரணை யிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர்.

    இவர்கள் இருவரும் பிறப்பால் தலித்துக்கள் என்பதால்தான் இந்தக் கொடுமை நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். காவல்துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய என் கணவருக்கு காவல்துறை கொடுத்திருக்கும் கௌரவம் இதுதான். ஏற்கெனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிறார். இந்தத் துப்பாக்கிகளை கொள்ைள யடிக்க உதவினால் என்ன துன்பம் நேரிடும் என்பது அனுபவஸ்தரான அவருக்குத் தெரியாதா? என் கணவர் ஏமாளி என்பதாலும் அதிகாரிகளை எதிர்த்துப் பேசாதவர் என்பதாலும் அவரைக் குற்றவாளியாக்கி வழக்கை முடித்துவிடும் முயற்சி நடக்கிறது.

    `அப்ரூவர் ஆகி நாங்கள் தரும் வாக்குமூலத்தில் கையெழுத்திடு' என்று அவரை டார்ச்சர் செய்கிறார்கள். கண்களைக் கட்டி எங்கெங்கோ கூட்டிக் கொண்டுபோய் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர் வயதுக்கான மரியாதையைக்கூட தராமல் `வாடா, போடா, நாயே' என்றெல்லாம் கேவலமாகப் பேசியிருக்கின்றனர்'' என்றார் கதறியழுதபடி.

    ஏட்டு ராஜமாணிக்கத்தின் மகள் மேகலை நம்மிடம், "என்னுடைய அப்பாவை அடித்து உடலெங்கும் காயப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு நிமிடங்கள்தான் அவரைப் பார்ப்பதற்கான அவகாசமாக எங்களுக்குத் தரப்படும். என் அப்பா தி.மு.க. விசுவாசி. விரைவில் கலைஞரைக் குடும்பத்தோடு சந்தித்து எங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியைப் பற்றி முறையிடப் போகிறேன்'' என்றார் கொதிப்போடு.

    பாதிக்கப்பட்ட மற்றொரு ஏட்டு ராஜாவின் மனைவி கலையரசியைச் சந்தித்தோம். "அதியமான்கோட்டை காவல்நிலையத் துப்பாக்கி கொள்ளை சம்பவத்துக்கும் என் கணவருக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை. இதை நம்பாமல் அவருக்கு என்னென்னவோ சோதனைகளையெல்லாம் செய்தார்கள். ஆனால் எந்தச் சோதனையிலுமே என் கணவரைக் குற்ற வாளியென்று நிரூபிக்க முடியவில்லை. நிரபராதி என்று தெரிந்த போதும் கூட, உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல், இவரையும் இன்னொரு ஏட்டையும் குற்றவாளிகள் ஆக்கி வழக்கை மூடி முடித்துவிட முயற்சிக்கிறார்கள். காலில் அடித்து, நிற்கமுடியாத அளவிற்குக் அவரை காயப்படுத்தியிருக்கிறார்கள்

    `ராஜமாணிக்கம் துப்பாக்கியை திருடித் தந்தார். அதற்கு நான் உடந்தையாக இருந்தேன்' என்று தயாரிக்கப்பட்டிருந்த போலி வாக்கு மூலத்தில் கையெழுத்திடச் சொல்லி என் கணவரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். அடி தாங்க முடியாமல் கையெழுத்திட்டாலும் பாலக்கோடு நீதி மன்றத்தில் நீதிபதி முன்பாக `அது போலி வாக்குமூலம்' என்பதை என் கணவர் துணிந்து கூறி விட்டார். இதன் காரணமாக தற்போது மேலும் அவருக்குச் சித்திரவதைகள் அதிகரித்துள்ளன. உடனடியாக அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்திலாவது அவரை ஒப்படைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை'' என்று அழுகையினூடே சொல்லி முடித்தார் கலையரசி.

    ஏட்டுக்கள் ராஜமாணிக்கம், ராஜா ஆகியோரின் வழக்குரைஞரான கமலக் கண்ணனைச் சந்தித்தோம். "தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யைப் பொறுத் தவரையில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார். `ஏட்டுக்கள் மீது எஃப்.ஐ.ஆரும் போடப்படவில்லை. அவர்களைக் கைதும் செய்ய வில்லை. அப்படி இருக்கும் போது எங்களிடம் அவர்களைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்குத்தான் நீதிமன்றம் இருக்கிறதே. ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யுங்கள். நான் அதைச் சந்திக்கும் விதத்தில் சந்தித்துக் கொள்கிறேன்' என்று சவால்விடும் வகையில் பேசுகிறார்.

    தர்மபுரி ஆட்சியரைச் சந்தித்து இதைப்பற்றி பேச முயன்றோம். ஆனால் அவரைச் சந்தித்துப் பேச எங்களுக்கு இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. `குற்றவாளிகள்' என்று இரண்டு அப்பாவிகளைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிக்கும் அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போலீஸ் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்ய இருக்கிறோம்'' என்று கூறினார் அவர்.

    மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலமாக மனித உரிமைகள் கமிஷனில் இது குறித்து ஏட்டுகளின் குடும்பத்தினர் புகார் செய்திருக் கின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக சட்டவிரோதமாக மேற்கொள் ளப்பட்டு வரும் விசாரணையிலிருந்து ஏட்டுகள் விடுவிக் கப்படவில்லை என்றால் சாலை மறியல், உண்ணாவிரதம் என சீரியஸான போராட் டங்களில் இறங்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீர்மானித் துள்ளனர்!

    ஸீ வை. கதிரவன்

    படங்கள் : ஆகாஷ்.



    நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

    StumbleUpon.com Read more...

    "பந்த" பத்ரானந்தாவின் துப்பாக்கி ரவுசு!-கேரளாவில் பிடிபட்ட இன்னொரு சாமியார்

    கேரளாவில் இது போலிச்சாமியார்களின் சீஸன் போலிருக்கிறது! கஞ்சா, கள்ளக்கடத்தல், கற்பழிப்பு... என சகல `கலை'களிலும் கரைகண்ட சந்தோஷ்மாதவன் என்கிற சாமியாரைத் தூக்கி `உள்ளே' போட்டுவிட்டு போலீஸ் நிமிர்வதற்குள், இதோ அடுத்த சாமியார் என்ட்ரி ஆகி யிருக்கிறார்.

    சந்தோஷ்மாதவன் ஆசிரமம் அமைத்து அருள்(!) பாலித்த கொச்சியிலி ருந்து கூப்பிடு தொலைவிலுள்ள ஆலுவா என்ற இடம்தான் நம் புதிய சாமியாரின் ஸ்தலம். இவரது இயற்பெயர் பத்ரன். ஆனால் `பந்தா' பத்ரானந்தா.. என்று சொன்னால்தான் அந்த ஏரியாவாசிகளுக்கே இவரைத் தெரியுமாம். ஆள் காவி உடையில் இருந்தாலும் கையில் விலை உயர்ந்த செல்போனும், இடுப்பில் துப்பாக்கியும் (பிஸ்டல்) வைத்திருப்பார் இவர். தவிர, வீட்டை விட்டு வெளியே போனாலே இவரது காரில் சுழல்விளக்கு சுழன்றுகொண்டேயிருக்கும். ஐகோர்ட் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் சுழல்விளக்கை இவர் பயன்படுத்துவது பற்றி எப்போதாவது போலீஸார் வழிமறித்துக் கேட்டால், `எனக்கு முதல் அமைச்சரைத் தெரியும்: போலீஸ் துறை அமைச்சரே என் ஃப்ரெண்ட்தான். புரமோஷன் வேணுமின்னா வாங்கித் தர்றேன்' என்கிற ரீதியில் கதைவிட்டு எஸ்கேப்பாகிவிடுவாராம் பத்ரானந்தா.

    அண்மையில் சந்தோஷ்மாதவன் விவகாரம் கேரளாவில் பரபரப்பானதும், அவரைப் போன்ற போலிச்சாமியார்களின் அட்டகாசம் பற்றி `மங்களம்' என்கிற மலையாள நாளிதழ் குறுந்தொடர் வெளியிட்டது. அதில் பத்ரானந்தாவின் பராக்கிரமங்களையும் அந்த நாளிதழ் பிட்டுப் பிட்டு வைத் தது. இது பத்ரானந்தாவை ஆவேசப்படுத்திவிட்டது. செய்தி வெளியான உடனேயே ஆலுவாவிலுள்ள `மங்களம்' பத்திரிகை அலுவலகத்துக்கு தனி ஆளாகவே படையெடுத்த பத்ரானந்தா, காது கேட்கக் கூசும் வார்த்தைக ளால் அங்கு நின்று பத்திரிகை நிர்வாகிகளைத் திட்டியிருக்கிறார். அவர்கள் விஷயத்தை போலீஸுக்குச் சொல்லவும், `காக்கி'கள் வந்து `காவி'யை வளைத்துக்கொண்டு போயிருக்கின்றனர்.

    அப்போது சாதாரண இரு செக்ஷன்களில் வழக்குப்பதிவு செய்துவிட்டு, பத்ரானந்தாவை அவரது சொந்த ஜாமீனிலேயே வெளியே விட்டிருக்கிறது போலீஸ். எனினும் மறுநாள் இந்த விவகாரம் எல்லா மலையாளப் பத்திரி கைகளிலும் செய்தியாகிவிட்டது. ஒரு பத்திரிகையில் செய்தி வெளி யானபோதே எகிறிக் குதித்த பத்ரானந்தா... எல்லா பத்திரிகைகளும் அவரைத் தோலுரித்தால் பொறுப்பாரா?!. அதனால் அவர் நடத்திய பரபரப்பான துப்பாக்கி ரவுசுதான் அடுத்த கட்டம்.

    இதுபற்றிய விவரங்களை ஆலுவாவிலுள்ள பத்திரிகைத்துறை நண்பர் ஒருவரையே நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கடந்த பதினேழாம் தேதி அதிகாலையில் பத்ரானந்தாவிடம் இருந்து எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன். அப்போது ஏதோ வெறி பிடித்தவர் போல கத்திப் பேசிய பத்ரானந்தா, `என் நற்பெயரை(!)யெல்லாம் நீங்கள் கெடுத் துவிட்டீர்கள். உங்களால் இப்போதே நான் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகப்போகிறேன். இங்கு வந்து நீங்கள் என் பிணத்தைத் தின்னுங்கள்' என்றார், படு ஆக்ரோஷமாக.

    உடனே இந்தத் தகவலை ஆலுவா போலீஸ் டி.எஸ்.பி. உன்னிராஜுக்குத் தெரிவித்துவிட்டு, நாங்களும் ஸ்பாட்டை நோக்கிப் போனோம். ஆனால் அதற்குள் போலீஸ் படை அவரை ஆலுவா மத்திய போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது. அங்கு நாங்கள் கண்ட காட்சியை எங்களாலேயே நம்ப முடியவில்லை. ஏதோ போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் போல கால்மேல் கால் போட்டுக்கொண்டு, தனது துப்பாக்கியைத் தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பத்ரானந்தா. அதாவது பத்ரானந்தாவைப் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த பிறகும்கூட அவர் கையில் இருந்த துப்பாக்கியை போலீஸ் பறிக்கவில்லை. அதோடு போலீஸ்நிலையத் திலேயே தனது செல்போனுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தார் பத்ரானந்தா.

    இந்தக் கட்டத்தில் மொத்தமாக பத்திரிகையாளர்கள் அங்கே போனதும், மறுபடியும் பத்ரானந்தாவுக்குக் கோபம் தலைக்கேறியது. ` என்னைச் சாகவும் விடாமல் சுத்தித் சுத்தி வருகிறீர்களே!' என்றபடி ஆவேசமாக துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு எங்களைச் சுட வந்தார். கணநேரத்தில் சுதாரித்துக்கொண்ட ஆலுவா இன்ஸ்பெக்டர் பாபுகுமார் தனது கையில் வைத்திருந்த லத்திக்கம்பால் துப்பாக்கியைத் தட்டிவிட்டார். எனினும் அதற்குள் ஒரு குண்டு துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்து, `மாத்திமம்' பத்திரிகை நிருபரான பேபியின் தலைக்கு வெகு அருகாமையில் பறந்து சென்றது. அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் அந்த நிருபர். அந்த சமயத்தில் பத்ரானந்தாவின் டி65 வகையிலான அந்தத் துப்பாக்கியில் மொத்தம் ஆறு குண்டுகள் இருந்திருக்கின்றன.ஒருவேளை இன்ஸ்பெக்டர் இரு வினாடி தாமதித்திருந்தாலும் நான்கைந்து நிருபர்களைப் போட்டுத் தள்ளியிருப்பார் பத்ரானந்தா'' என பீதி விலகாம லேயே அந்தச் சம்பவத்தை விவரித்தார் அவர்.

    முறைகேடாக துப்பாக்கியைப் பயன்படுத்தியது, பத்திரிகையாளரைக் கொல்ல முயன்றது... உள்பட பல செக்ஷன்களில் பத்ரானந்தா மீது தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீஸார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அடுத்தடுத்து இரு சாமியார்கள் பிடிபட்டிருப்பதும், இருவருமே போலீஸ்துறையில் செல்வாக்குப் பெற்றுத் திரிந்திருப்பதும் தெரியவந்து மொத்த கேரளாவுமே அதிர்ந்துபோய்க் கிடக்கிறது.

    இதுபற்றி, கேரள இடது முன்னணி அரசின் முதல்வர் அச்சுதானந்தனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, `பத்ரானந்தா நடந்துகொண்ட விதம் போலீஸுக்கு விடப்பட்ட சவாலாகத்தான் இருக்கிறது. போலீஸ் துறை மட்டுமல்லாது, அரசும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இது. இந்த சாமியார்களின் பின்னணியை நிச்சயமாக விசாரித்து வெட்ட வெளிச்சமாக்குவோம். போலீஸ் துறையிலுள்ள சிலர் இவர்களுக்குத் துணை போனாலும், அது ஒட்டுமொத்த போலீஸாரின் அந்தஸ்தையுமே பாதிப்பதாகிவிடும்'' என, போலீஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலேயே பேசியிருக்கிறார் அச்சுதானந்தன். நிலைமை மாறுகிறதா? பார்ப்போம்! ஸீ

    ஸீ
    ச. செல்வராஜ்



    நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

    StumbleUpon.com Read more...
    Related Posts with Thumbnails

    Enter a long URL to make tiny:

    தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

      © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

    Back to TOP