சமீபத்திய பதிவுகள்

இந்துக்களே எழுமின் விழிமின்-3-பிராமணர்களுக்கிடையே பிளவு:

>> Monday, June 9, 2008

2. பிராமணர்களுக்கிடையே பிளவு:

தென்னிந்தியாவில் பிராமணர்களுக்கிடையேயுள்ள பிளவுகளில் முக்கியமானவை அய்யர் மற்றும் அய்யங்கார் என்பதாகும்.

இந்த இரண்டு பிரிவினரையும் முழுமையாகப் பார்த்தால் - இவர்களுடைய கடவுள்கள் - இவர்களுடைய இலக்கியங்கள் - இவர்களுடைய குடும்பங்கள் - இவர்களுடைய கலாச்சாரங்கள் இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். இவற்றிற்கொல்லாம் மேலாக இவர்கள் ஆண்டாண்டு காலமாக பதவி, செல்வாக்கு ஆகியவற்றிற்காகத் தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டு வரும் வரலாறும் அம்பலமாகும்.

அய்யர்கள் - அவர்களின் உடல் அமைப்பால் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களின் நேரடி வாரிசுகளாவார்கள்.

அவர்கள் நல்ல நிறம் - நீண்ட மூக்கு இவற்றைக் கொண்ட ஜெர்மானியர்களைப் போல் தோற்றந் தருகின்றார்கள்.

மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல், பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனி;ன தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே!

மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்:

பிராமணர்களின் கொள்கைகள் ஆறு. அவை:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.

2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.

3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.

4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.

5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.

6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை அமுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.

ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார ப+ர்வமான அங்கீகரிக்கப்பட்ட, அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி 204 அபபி J.A. Duboils (Lghap]Wink(டுபாயிஸ்) என்பவர் Hindu Manners Customs and Ceremonies என்ற நூலில் (Oxford Third Eidtion 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.

கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.

மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.

எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருக்பவர்கள்.

ஹிந்து தீவிரவாத அமைப்புகள்.

1. ராஷ்டிரிய சுயம் சேவக் சங்

டாக்டர் கேசவ் பாலிராம் ஹெக்டேவர், என்ற சித்புரம் சித்பவன் பிராமணர் தான் R.S.S. என்ற இந்த அமைப்பை நிறுவியவர். இன்று இவர்கள் பெரியதொரு சக்தியாக வளர்ந்துவிட்டார்கள். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரிய வேட்டாக மாறிவிட்டார்கள்.

இவர்கள் கொள்கைகள் கோட்பாடுகள் இவைபற்றி நம்மவர்கள் பலர் அறியமாட்டார்கள். இவர்களின் கொள்கைகளுள் சில:

பெண்களை நம்பாதே!

இவர்கள் பெண்களின் வாக்குரிமையை எதிர்கின்றார்கள் - மறுக்கின்றார்கள்.

சித்பவன் பிராமணர்கள் மட்டுமே இந்த அமைப்பின் தலைவர்களாக இயலும். (இவர்களின் கண்கள் நீலநிறமாக இருக்கும். கீழ் சாதியினர் இவர்களை நல்ல பாம்புகள் என அழைப்பார்கள்)

இவர்கள் கம்ய+னிசம், சீக்கிய இஸம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் இவை அனைத்தையும் எதிர்க்கின்றார்கள்.

இவர்களின் மிக முக்கியமான கொள்கை, ஆரியர்கள், பிராமணர்கள் மட்டும் தான் இந்தியாவை ஆட்சி செய்திட வேண்டும்.

இவர்கள் திராவிட இயக்கங்களுக்குப் பகிரங்கமான வைரி.

எல்லாவிதமான ஆட்கொல்லி - தீவிர - வன்முறைப் பயிற்சிகளையும் இந்த அமைப்பினர் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தருகின்றார்கள்.

உடன்கட்டை ஏறுவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

இந்த அமைப்பு சமஸ்கிருதத்தை இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஆக்கிடத் துடிக்கின்றது.

வதந்திகளைப் பரப்புவதிலும், மக்களைப் பொய் சொல்லித் திருப்புவதிலும் இவர்கள் தனிப்பயிற்சிப் பெறுகின்றார்கள்.

R.S.S. ன் சாதனைகள்:

மகாத்மா காந்தியைக் கொலை செய்தார்கள். (தாயகத் தந்தை அண்ணல் காந்தி அவர்களைக் கொலை செய்ததற்கு R.S.S. காரர்கள் சொல்லும் காரணம்: அவர் பல்வேறு வகுப்பாரிடையேயும் ஒற்றுமையை வளர்த்தார். எல்லா மக்களும் சமம் எனப் போதித்தார். எல்லா மக்களையும் போலத்தான் கீழ் ஜாதி ஹிந்துக்குளும் என்பதை வலியுறுத்தினார்).

டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு விஷம் தந்து கொலை செய்ய முயன்றார்கள்

காமராசநாடார் அவர்களைக் கொலை செய்ய முயன்றார்கள்.

கொலை செய்யும் எண்ணத்தோடு கர்ப+ரி தாகூர் அவர்களைத் தாக்கினார்கள். ஏனெதில் அவர் சவரத் தொழிலாளி சமுதாயத்தைச் சார்ந்தவர்.

அண்மை காலத்தில் இவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இவர்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துத் தங்களது பொதுக் கொலைத் திட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

சிவசேனை

சொல்லுங்கள் - நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள். இது தான் சிவசேனாவின் தற்போதைய முழக்கம்.

இந்த அமைப்பு இந்தியர்களின் நலனுக்காகவோ இந்தியாவின் நலனுக்காகவோ இயங்குவதல்ல. மாறாக ஹிந்து வெறித்தனத்தின் துறுத்தி.

பால் தாக்ரே என்பவர் தான் இந்த அமைப்பை நிறுவியவர்.

பம்பாயில் வாழும் மலையாளிகள் - தமிழர்கள் - கன்னடத்தவர்கள் ஆகியோரைப் பம்பாயை விட்டு வெளியேற்ற வேண்டும். இதுவே இவர்களின் முதல் கொள்கையாக இருந்தது.

இதில் இவர்களுக்கு அதிக வெற்றி கிடைத்திடவில்லை.

தங்களது நிராதரவற்ற நிலையை மறைத்திடவே இவர்கள், சீக்கயர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை வெறுப்பதைத் தங்கள் கொள்கையாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஹிந்துக்களே! உங்களை மதித்து வாழும் சகோதர இந்தியர்களாகிய சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களோடு சண்டை போடுவதற்கு பதிலாக

உங்கள் மீது அடக்குமறைகளைக் கட்டவிழ்த்து விட்டு உங்கள் உரிமைகளைச் சூறையாடும் ஜாதி முறையை எதிர்த்து நீங்கள் ஏன் போராடக் கூடாது?

நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற முழக்கத்தை விட்டு, நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்று முழங்குங்கள். தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

PAC: PROVINCIAL ARMED CONSTABULARY

இஃதோர் ஹிந்து காவல்துறை (இவர்கள் R.S.S. சார்புடையவர்கள்) ஆனால் இந்தியக் காவல்துறை என்ற பெயரில் இயங்கி வருகின்றார்கள்.

இந்திய அரசின் சம்பளத்தை அதிகமாகப் பெற்றுவரும் இந்தக் காவல்துறையில் இன்று வரை ஹிந்துவல்லாத ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் ஹிந்துஸ்தான் டைம் என்ற பத்திர்ககையில் இதுபற்றி இப்படி எழுதுகின்றார்.

'மீரட், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களே! இவர்கள் அனைவரும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களே! குறிப்பாக PAC - யின் துப்பாக்கிக் குண்டுகள் தாம் முஸ்லிம்களைப் பிணங்களாக்கின. அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி நிறுவனங்கள் அப்பட்டமான இந்த உண்மையை சுருட்டி மறைக்கின்றன."

தனியார்கள் நடத்திய விசாரணை ஒன்றில் R.S.S. தலைவர்களில் ஒருவர் தான் (இவர் முன்னாள் காவல்துறை D.I.G.) இந்த மீரட் படுகொலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொடுத்தார் என்ற உண்மை தெரியவந்நது.

மீரட்டில் நடந்த கூட்டுப் படுகொலை குறித்து Amnesty International உலக மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையை ராய்ட்டர் செய்தி நிறுவனம் 19-11-11992 -ல் இப்படித் தருகின்றது.

Amnesty International உலக மனித உரிமைக்கழகம் மீரட்டில் தான் நடத்திய விசாரணைக்குப்பின் இப்படி முடிவு செய்துள்ளது. வகுப்புக் கலவரம் நடந்த அன்றும் மறுநாளும் முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்கு முழு பொறுப்பும் PACINaயே சாறும். இதற்கான வலுவான ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன. வகுப்புக் கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து முஸ்லிம்கள் ஜெயிலில் வைத்து இறந்து போனார்கள். இதற்கு, கைது செய்த பிறகு அவர்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல் தான் காரணம்.

PACI topel வழிநடத்pய காவல்துறை அதிகாரிகள் (இவர்கள் அத்தனைபேரும் உயர்ஜாதி ஹிந்துக்கள்) முஸ்லிமகளை காவல்துறை ஊர்திகளில் ஏற்றிச் சென்று பின்னர் சுட்டுத் தள்ளினார்கள். பின்னர் பிணங்களை எடுத்துச் சென்று ஆறுகளிலும், குளங்களிலும் வீசினார்கள். இவை அனைத்திற்கும் தெளிவான அத்தாட்சிகள் நேரில் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன.

செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் பிராமணர் செய்தித் துறை

Amnesty International -ன் உலக மனித உரிமைக் கழகத்தின் இந்த அறிக்கையை பிராமணர்களின் செயதித்துறை முற்றாக இருட்டடிப்புச் செய்துவிட்டது. இந்த அறிக்கையையும் அது அம்பலப்டுத்திய உண்மைகளையும் மேலை நாட்டு செய்தி நிறுவனங்களின் மூலம் தான் தெரிந்திட இயன்றது.

1. கீழ்ஜாதி ஹிந்துக்களின் பரிதாபம்

தீண்டத்தகாதவர்கள் ஹிந்துக்கள் அல்ல - இப்படிப் பறை அறிவிக்னறார் ப+ரி சங்கராச்சாரியார்.

இந்த சங்கராச்சாரியாரைத் தான் இந்த பிராமணர்கள் தங்களுடைய மிகப்பெரிய தலைவராகக் கொண்டாடுகின்றார்கள். (Indian Express Aril 4, 1989)


'மனு" என்ற ஹிந்து தர்ம சாஸ்தரிம் கூறுகின்றது.

சூத்திரன் - காகம், தவளை, நாய் இன்னும் இவை போன்ற மிருகங்களைப் போலாவான். இவற்றைப் போல் இவன் ஊனம் உள்ளவன். இவற்றிலுள்ள பலவீனங்கள் அனைத்தும் இவனுக்கு உண்டு.

சூத்திரர்களுடைய சொத்துக்களையும், செலவங்களையும் ஏய்த்துப் பறித்துக் கொள்வது உயர் ஜாதியினருக்கு அனுமதிக்கப்பட்டது.

சூத்திரர்களுக்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் உரிமையே, அடுத்தவர்களைச் சார்ந்து வாழாத ஓர் நிலையை உருவாக்கிக் கொள்ளும் உரிமையோ இல்லை.

வௌ;வேறு ஜாதியினரும் வௌ;வேறு விகிதங்களில் வட்டி கொடுக்க வேண்டும். கீழ்ஜாதியனர் உயர்விகிதத்தில் வட்டி கொடுக்க வேண்டும்.

சூத்திரர்;களின் 'சாட்சியம்" சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தங்களை இந்த நாட்டின் நிரந்தர ஆட்சியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் ஆக்கிக் கொள்ள இந்த நாட்டுக் குடிமக்களை பல்வேறு ஜாதியினர் எனப் பிரித்துப் பலவீனப்படுத்தி விட்டார்கள் ஆரியர்கள் - பிராமணர்கள்.

அண்மையில் அரசு மேற்கொண்ட ஓர் கணிப்பில் இந்தியாவில் 2000 ஜாதிகள் இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஜாதியினரும் தனது ஜாதி தான் உயர்ந்து. ஏனைய ஜாதிகளெல்லாம் கீழானது எனப் பேசிப் பிரிந்து நிற்கின்றனர்.

ஒரு ஜாதியைச் சார்ந்தவன் இன்னொரு ஜாதியைச் சார்ந்த பெண்ணதை; திருமணம் செய்து கொள்ள மாட்டான். இரண்டு ஜாதியினர் ஒன்றாய் ஓரிடத்தில் குழுமுவதில்லை.

2. கொத்தடிமைகள்

பிராமணர்களும் - வேதங்களும் சேர்ந்து கொத்தடிமை முறையை இந்தியாவில் ஏற்படுத்தி விட்டார்கள். இந்தியா சுதந்திரமடைந்து ஏறத்hழ 50 ஆண்டுகளாகியும் இந்தக் கொத்தடிமை முறையிலிருந்து விடுபட இயலவில்லை.

10-5-1987 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இப்படி ஓர் செய்தியைத் தருகின்றது.

கொத்தடிமைகள் விடுதலை இயக்கத்தின் தலைவர் கூறுகின்றார்: பீகார் மாநிலத்தின் தென மாவட்டங்களான சாம்ரான், கோபால் கஞ்ச் போன்றவற்றில் மட்டும் 20000 ஹரிஜன மக்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகினற்hர்கள்.

நாம் 20ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்துறையில் அரிய பல சாதனைகளை நித்தம் நித்தம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் இந்தியாவின் பல பாகங்களில் கீழ் ஜாதியினர் சில தெருக்களில் போகவே இயலாது. இன்னும் சில தெருக்களில் அவர்கள் தங்கள் செருப்புக்களைக் கழற்றித் தலையில் வைத்துக் கொண்டுதான் நடக்க முடியும். இன்னும் பல டீக்கடைகளில் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்குத் தனி 'டப்பாக்கள்" வைக்கப்படிருக்கின்றன.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த இராஜ கோபாலாச்சாரியார் என்ற இராஜாஜி வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழித்திட ஓர் திட்டத்தைக் கொண்டு வந்தார். அது குலத்தொழில் திட்டம் என்பதாகும். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு சமுதாயத்தினரும் அதாவது ஒவ்வொரு குலத்தினரும் தங்கள் மூதாதையர்கள் செய்து வந்த தொழில்களை அப்படியே செய்து வரவேண்டும் என்பதாகும்

இந்தத் திட்டத்தை அவர் அறிவித்தாரோ இல்லையோ பிராமணப் பத்திரிக்கைகள் அனைத்தும் ஒன்றாய் இணைந்து இந்தத் திட்டத்தைப் புகழ்ந்து எழுதின.

இந்தக் குலத்தொழில் திட்டத்தின் நோக்கம், கீழ்ஜாதியினர் தங்களது கீழான தொழிலைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேல் ஜாதியினர் தாங்கள் பிடித்து வைத்திருக்கின்ற உயர் பதவிகளில் நிரந்தரமாக அமர்ந்திட வேண்டும் என்பதாகும்.

கீழ்ஜாதியினர் என பிராமணர்கள் முத்திரைக்குத்தி மூடிப்போட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏன் ஏழைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்?

பிராமணர்கள் அவர்களை எந்த நிலையிலும் எந்த வகையிலும் முன்னேறவிடுவதில்லை. அதிகாரம் அனைத்தும் இருக்கும் இரசு பதவிகள் எல்லாம் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்து என்பதை மக்களுக்குச் சொல்லிட வேண்டிய செய்தி நிறுவனங்களான பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி இவை அனைத்தும் அவர்களின் கைகளில் இருக்கினறன. கல்வித்துறை அவர்களின் கைகளிpலிருக்கின்றது.

இந்த நாட்டிலே புழங்கும் பணத்தில் பெரும்பகுதி அவர்களின் கைகளிலேயே புழங்குகின்றது. இத்தனையையும் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் விஞ்ஞானிகளாகவும், டாக்டர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், நிதிவளங்களும், எந்த சமுதாயத்தின் கைகளிலே இருந்தாலும் அந்தச் சமுதாயம் முன்னேறும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நிச்சயமாக இன்று அமுக்கப்பட்டவர்களாகவும், நசுக்கப்பட்டவர்களாகவும் இருந்து கொண்டிருக்கும் மக்களிடம் இதே வசதிகள் இருக்கமேயானால் அவர்களும் முன்னேறி இருப்பார்கள். இந்த நாட்டையும் முன்னேற்றி இருப்பார்கள்.



இன்னும் தொடரும்..............

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP