மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்
>> Thursday, May 1, 2008
மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்
மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்
குவைத், ஏப்.30-
ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.
இவ்வாறு கர்சாய் கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=409627&disdate=4/30/2008
0 கருத்துரைகள்:
Post a Comment