சமீபத்திய பதிவுகள்

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி

>> Wednesday, February 17, 2010

 
 

இந்திய அளவில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2005–06 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 53,000 பள்ளிகள் பயன்பெற்று வந்தன. இது தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்படும் இந்த திட்டம் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும். இதற்கென ரூ.6,926.13 கோடி செலவிடப்படும். இதில் மத்திய அரசின் பங்காக ரூ.6,000 கோடி கிடைக்கும். மீதத் தொகையினை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 
கம்ப்யூட்டர் கல்வியினை வளரும் மாணவர்களுக்கு அளித்து அவர்களை கம்ப்யூட்டர் பயனாளர்களாக மாற்ற இது பெரும் அளவில் உதவும். குறிப்பாக அரசு பள்ளிகள் ஏழை கிராமப் புற மாணவர்களுக்குக் கல்வியை வழங்கி வருவதால், இந்த திட்டம் பெரும் அளவில் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 
கம்ப்யூட்டர் கல்வி வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், பிற பாடங்களைக் கற்றுக் கொள்வதிலும் இந்த கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும். மேலும் மாநில மொழிகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறித்த தெளிவும் மாணவர்களுக்குக் கிடைக்கும். இதன் மூலம் மக்களிடையே கம்ப்யூட்டர் கற்றவர்கள் மற்றும் அறியாதவர்கள் என்ற இடைவெளி குறைய இவை பயன்படும். கம்ப்யூட்டர்கள், அவை இயங்கத் தேவையான சாப்ட்வேர், கல்வி சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள், மின்சார இணைப்பு, யு.பி.எஸ்., இணைய இணைப்பு ஆகியவை ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும். இந்த தகவலை மத்திய மனித வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் மூலம் 1.5 கோடி மாணவர்களும் 10 லட்சம் ஆசிரியர்களும் பயனடைய இருப்பதாக பிரதமர், திட்டம் தொடங்கியபோது தெரிவித்தார்.
இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதில் பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளது. பத்து கம்ப்யூட்டர்கள், யு.பி.எஸ். , பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் இணைப்பு ஆகிய சாதனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் மிகத் தாமதமாகத்தான் இவை இன்ஸ்டால் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. இவற்றிற்கான தனி அறைகள் இல்லை என்பதால், பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைகள் அல்லது ஆசிரியர் அமரும் அறைகளிலேயே இவை வைக்கப்படுகின்றன. இதனால் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் சுதந்திரமாக இவற்றை இயக்கிக் கற்றுக் கொள்வதில் தடங்கல் ஏற்படுகின்றன. மேலும் இவற்றைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சி தரப்படுவதில்லை. எனவே திட்டத்திற்கு நிதியும் சாதனங்களும் தரப்படுவதோடு நிற்காமல், மாநில அரசுகளின் துறை அதிகாரிகள் இவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளைத் தர வேண்டும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட்

 
 

 முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்க<ள் இருந்தாலும், அண்மையில் நான் பார்த்த ஹாட்நோட்ஸ்(Hott Notes fromhttp://www.hottnotes.com) என்னும்புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது. 
மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம். 
நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம். 
இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

“ஷூ”வுக்குள் துப்பாக்கியை மறைத்திருந்த மாணவர்

பாகிஸ்தான் விமானத்தில் "ஷூ"வுக்குள் துப்பாக்கியை மறைத்திருந்த மாணவர்: "ஸ்கேனிங்" செய்த போது சிக்கினார்
பாகிஸ்தான் விமானத்தில்    ராவல்பிண்டி, பிப். 17-
 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோகி ரத்னா பகுதியை சேர்ந்தவர் அசார் இக்பால், மாணவர். இவர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகருக்கு செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.

விமானத்தில் ஏற ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரை எக்ஸ்ரே கருவி மூலம் "ஸ்கேனிங்" சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர் ஷூக்களில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள்.

 

போரால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும் மனித உரிமைகளை பேணவும் எமது நடுவம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடுவம் அனைத்துலக நாடுகளின் நியமங்களுக்கு ஏற்ற முறையிலும், மனித உரிமை தகவல்களை ஆவணப்படுத்தும் அமைப்பு என அழைக்கப்படும் கூறிடொக்ஷ்ஸ் (HURIDOCS) அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் ஆவணப்படுத்தும் முறைகளை பின்பற்றி மனித உரிமை மீறல்களை பதிவு செய்கின்றது.

இப் பணியானது இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து குறிப்பாக 1958 லிருந்து அண்மைக் காலம் வரை இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களால் தமது குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களை இழந்து தவிக்கின்ற குடும்பத்தினர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி சர்வதேச மனித உரிமை அமைப்புகனிற்கு சாட்சிகனைத் தொகுத்து வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுகின்றது. இதன்மூலம் எமது நாட்டில் தமிழ் மக்களிற்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான வலுவான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கமுடியும்.
உலகத்தில் காலத்திற்குகாலம் போர்க் குற்றங்களும் மனிததத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்கு, ஐரோப்பாவில் யூதர்கள், ரோமானியர்கள், யூகோஸ்லாவிய முஸ்லிம்கள், அல்பேனிய கொசோவோக்கள், குரோசியர்கள், ஆர்மேனியர்கள் ஆபிரிக்காவில் ருவாண்டா புறூண்டி மக்களும்., கம்போடியர்கள், கிழக்கு திமோனியர்கள், பாலஸ்தினியர்கள், அண்மையில் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.

எனவே அண்மையில் இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்டமரணங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நேரிலே பார்த்தவர்கள,; அவற்றினால் பாதிகக் ப்பட்டவர்கள் அவற்றை தெரிந்தவர்கள் அவர்கள் பாதிப்புகள் பற்றிய தகவல்களை தாமாக முன்வந்து தந்துதவுமாறு மனித உரிமைகள் நடுவம் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறது. ரோரன்ரோவில் உள்ள எமது நடுவம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, பெல்சியம், ஒல்லாந்து, ஜேர்மனி, நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளிலுள்ள மனித உரிமை நடுவகங்களூடன் இணைந்து பெப்ருவரி 15ஆம் நாள் தொடக்கம் எப்பிரல் 15 வரை இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டவர்களினதும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களினதும் விபரங்களை ஆவணப்படுத்தும் நாட்களாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.

தேசிய, அனைத்துலக மனித உரிமை நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரக்குட்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை நாம் மனதில் இருத்தி, எமது முயற்சிகளை முனைப்பாக்க வேண்டும். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் தெரிந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பின் காணமால் போயிருப்பார்களாயின், சட்டத்துக்கு மாறாக கைது செய்யப்படடிருப்பின், காயப்பட்டிருப்பர்களாயின், அல்லது எதாவது மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்களேயானால் எம்மிடம் தொடர்பு கொண்டு விபரங்களை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நீங்கள் தரும் விபரங்கள் அனைத்தும் இரகசியமாக பேணப்பட்டு நீதிமன்றத்தில் மட்டும் உங்கள் அனுமதியோடு சமர்ப்பிக்கப்படும். போர்க்குற்றங்கள், மனித இனத்துக்காக குற்றங்கள், இனப்படுகொலைகள் விசாரணைகள் வெற்றிபெற வேண்டுமாயின் எமது மக்களின் மேல் இழைக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் முழுமையான, நம்பத்தகுந்த உண்மையான விபரங்களுடன் சமர்ப்பிக்கப்படவேணடு; ம். எமது முயற்ச்சிக்கு உங்களது முழுமையான ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம் மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி 416 628 1408 

மின்னஞ்சல:info@cwvhr.org 

or
www.cwvhr.org


Germany Sinnathurai
Arunathas
tel : 017663603709

Danemark
+4552173671
forum@dansktamilskforum.dk

Belgium
0032484263905
rangan73@gmail.com

Netherlands.
Ramanan Kanagaratnam
TP: 0031684612190 purposeley for the
advertisement
sunwalker001@gmail.com
my personal TP number is 0031642366875
Suisse
Premawathi accavin TP n°: 0041 32 968 36 59
/premawathi@hotmail.com

France - House of Tamil Eelam
Christa
Personal E-mail : cricrialexander@hotmail.com
E-mail : mte.humanitaire@gmail.com
Phone N°for reporters : 06.25.52.79.55
Personal N° : 06.15.04.20.54

Italie- Palermo
Rishanthan


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP