சமீபத்திய பதிவுகள்

94 சதவீத மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டமைப்புக்கு ஆதரவு

>> Saturday, November 14, 2009

94 சதவீத மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டமைப்புக்கு ஆதரவு

u_kumarஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்ன என்ற தலைப்பில் ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் 94 சதவீதமான வாக்காளர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பை ஆதரித்துள்ளதுடன் அந்த கட்டமைப்பே தமிழர்களின் நலன்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய நிர்வாகம் என்று அங்கீகரித்துள்ளனர்.

இந்த இணையத்தளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வாக்களிப்பில் சுமார் 10 ஆயிரத்து 154 வாக்காளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் வாக்குகளின் பிரகாரம் வெளியான முடிவுகள் வருமாறு:-

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற சொல்லை 82 சதவீதமானவர்களும் புறநிலை தமிழீழ அரசு என்ற சொற்பதத்தை 18 சதவீதமானவர்களும் ஆதரத்துள்ளனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்படவேண்டும் என்று 99 சதவீதமான வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் மூலம் சிறிலங்கா அரசின் தமிழர் விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றமுடியும் என்று 95 சதவீதமான வாக்காளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்மக்களின் இலட்சியம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 99 சதவீதமான வாக்காளர்கள் தனிநாடே தீர்வே என்று வாக்களித்துள்ளனர். ஒரு சதவீத வாக்காளர்கள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்றும் 0.2 வீதமான வாக்காளர்கள் தற்போதுள்ள ஆட்சிமுறையே தமிழர்களுக்கு போதுமானது என்று வாக்களித்துள்ளனர்


source:puthinamnews

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மறக்க முடியாத முதல் போட்டி: சச்சின்

  

மும்பை: "" இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது தான் எனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியை மறக்க முடியாது,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். மிக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடி வரும் இவர் நாளை 21வது காலடி எடுத்து வைக்கிறார். தனது கடந்தகால மறக்க முடியாத அனுபவங்களை சச்சின் இங்கே பகிர்ந்து கொள்கிறார்:



எனது 20 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் மிக நீண்டது. இதில் சிறப்பு வாய்ந்த பல்வேறு தருணங்கள் உள்ளன. அவற்றை கணக்கிடுவது கடினம். ஆனாலும், இந்திய அணிக்காக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது மகத்தான தருணம். கடந்த 1989 நவ., 15ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றேன். அன்று இந்திய அணியின் "கேப்' அணிந்து களமிறங்கிய அனுபவம் என்றென்றும் என்மனதில் நிலைத்து இருக்கும்.



அதிர்ஷ்ட வாய்ப்பு:
இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.



புதிய மாற்றங்கள்:
கடந்த 1989ல் இருந்த கிரிக்கெட்டை விட தற்போது மூன்றாவது அம்பயர், "டுவென்டி-20' என நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. தவிர, பேட்ஸ்மேன்கள் பல்வேறு வகையில் அடித்து விளையாடுகிறார்கள். அவர்கள் "ரிஸ்க்' எடுக்கத் தயங்குவது இல்லை. ஏனெனில் ஒரு நல்ல ஆடுகளத்தில் இப்போதெல்லாம் 275 ரன்கள் என்பது ஒருநாள் போட்டியில் பெரிய ஸ்கோர் அல்ல. 
டெஸ்ட் போட்டிகளில் முன்பு குறைந்த அளவில் தான் முடிவுகள் வந்தன. இது மக்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அதிக டெஸ்ட்கள் முடிவைத் தருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.



புதிய சவால்: 
எனது ஆட்டமுறையிலும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். ஏனெனில் கிரிக்கெட் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தகுந்து எப்போதும் நம்மை தயாராக வைத்திருப்பது கடினமானது.



தாய் பிரார்த்தனை:
நம்மை சார்ந்து இருப்பவர்களது ஒத்துழைப்பும் வெற்றிக்கு முக்கியமாக இருக்கும். எனது பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் எனது மனைவி என, எல்லோரும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். எனது தாயாருக்கு கிரிக்கெட் தெரியாது. ஆனால் எனது மற்றும் தேசத்தின் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திப்பார்.



இருண்ட அத்தியாயம்:
கடந்த 1999ல் வெடித்த கிரிக்கெட் சூதாட்டம் ஒரு இருண்ட அத்தியாயம். அது பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.



ரசிகர்கள் ஆதரவு:
எனது மூத்த சகோதரர் தவிர, பிற சகோதர, சகோதரிகளிடமும் கிரிக்கெட் குறித்து விவாதிப்பேன். அடுத்து எனது மனைவியுடனும் இதுகுறித்து பேசுவேன். இதுதான் நான் நீண்ட ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம். இவைகள் தவிர, இந்திய ரசிகர்களிடம் இருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவும் கிடைத்தது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் எனது வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன். 
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


source:dinamalar  


www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கண்களை நம்பாதே நண்பா.கண்ணால் காண்பது பொய்யோ?















StumbleUpon.com Read more...

சரத் பொன்சேகா கையளித்த கடிதத்தில் இராணுவப் புரட்ச்சி பற்றி கண்டனம்

 

கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகா தான் ஓய்வுபெறுவதாக அறிவித்து எழுதிய கடிதத்தில், தாம் ராணுவ சதிப்புரட்சியை ஆரம்பித்து விடக்கூடுமென்று ஜனாதிபதிக்கு தவறான தகவல்கொடுத்து அவர் தவறாக வழிநடத்தப்பட்டதாலேயே தாம் பதவி மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரங்கள் அற்ற பதவியில் நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜனாதிபதிக்கு தம்மீது நம்பிக்கை அற்று, தாம் ஓரங்கட்டப்பட்டமையும் தமது பதவி விலகலுக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார் சரத். இந்தக் கடிதமானது ஏ.எஃப்.பி செய்திச் சேவையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசிடம் உதவி கேட்ட செயலானது, பயங்கரவாதக் குழுவொன்றை தோற்கடிக்கும் ஆற்றலுள்ள தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான அமைப்பு என்று இலங்கை இராணுவம் ஈட்டியிருந்த புகழுக்கு சேறு பூசுவது போல அமைந்துள்ளதாக சரத்தின் கடிதத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் போரில் தேசத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை தேடித்தந்த ராணுவத்தின் மீது சந்தேகம் கொண்டது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், அப்படி ஒரு புரட்சி நடக்கலாம் என்பதால் ஒக்ரோபர் 15 ஆம் திகதி இந்திய அரசை உஷார் படுத்திய மஹிந்த, இந்திய படையினரை உஷார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் சரத் பொன்சேகா எழுதியுள்ளார்.

யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னரும் சமாதானத்தை வென்றெடுக்கும் ஆற்றலின்றி அரசாங்கம் இருக்கின்றதென்ற குற்றச்சாட்டுடன் ஊழல் மோசடி, வீண்விரயங்கள் உட்பட பல்வேறு பின்னடைவுகள் தொடர்பாகவும் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார். ஊடக சுதந்திரத்தையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் ஜனாதிபதி தடுத்து வைத்துள்ளதாகவும் சரத் பொன்சேகா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தனது தலைமைத்துவத்தில் கீழ் யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கின்ற போதும் அரசாங்கம் இன்னமும் சமாதானத்தை வென்றெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள சரத், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க அரசிடம் தெளிவான கொள்கை கிடையாதென்றும் இதனால் இப்போது கிடைத்துள்ள வெற்றி நிச்சயமாக அழிந்துவிடும் என்றும் மீண்டும் ஒரு கிளர்ச்சி எதிர்காலத்தில் ஏற்பட வழிசமைத்துவிடுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு யுத்தத்தில் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை அங்கேயே தொடர்ந்து வைத்திருப்பதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் வரை தான் இராணுவத் தளபதி பதவியிலிருக்க நான் விரும்பியிருந்ததாகவும் கூறிய சரத், ஆனால் அதற்கு முன்னரே தம்மை அதிகாரம் இல்லாத உயர் பதவிக்கு மாற்றப்பட்டதையும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். சதிப்புரட்சி தொடர்பான அச்சமானது பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் நன்கு தெரிந்த விடயமாக இருந்ததாகவும் இலங்கைக்கு ராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற வரலாறு இல்லை என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், 1960 முற்பகுதிகளில் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாய் பிரண்ட் இல்லை... பாம்பு பிரண்ட் உண்டு : கல்லூரி மாணவியின் 'தில்' பயணம்


Human Intrest detail news பாம்பு... பயமாய், வியப்பாய், அழகாய், மிரட்சியாய் தெரியும் உயிரினம். கண்ணீர் புகை குண்டு போட்டு கலைக்க முடியாத கூட்டத்தில், ஒரு பாம்பை உள்ளே விட்டால் போதும். மொத்த கூட்டத்தையும், ஓட, ஓட விரட்டி விடும். அதனால் தான், "பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என சொல்கின்றனர்.



அந்த அளவுக்கு சமுதாயத்தில் பயத்தை ஏற்படுத்தியுள்ள பாம்பை லாவகமாக பிடித்து தன் மந்திரக்கைகளால் வசமாக்கி விடுகிறார் ஒரு கல்லூரி மாணவி. எத்திராஜ் கல்லூரியில் சுற்றுலா இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தீபிகா தேவிக்கு (21) பாம்புகள்தான் நெருங்கிய நண்பர்கள்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் கிணற்றில் கிடந்த பாம்பை பார்க்க பெரும் கூட்டம். தன் தந்தையுடன் அந்த வழியே வந்த தீபிகா உடனே களமிறங்கினார்.கிணற்றில் இறங்கி, கயிற்றின் உதவியுடன் அந்த பாம்பை பிடித்தார். நான்கடி நீளத்தில் இருந்த அந்த நல்ல பாம்பு அனைவரையும் கண்டு படமெடுத்து சீறியது. அந்த பாம்பை லாவகமாக பிடித்து தான் வைத்திருந்த கூடையில் போட்டுக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.கிணற்றில் அதிக நேரம் இருந்ததால் பாம்பின் உடலில் காயங்கள் இருந்தன. அவற்றிற்கு பச்சிலை சாறு மூலம் மருந்திட்டு குணமாக்கி, பின் மக்கள் நடமாட்டம் இல்லாத கொரட்டூர் ஏரி பகுதியில் பாம்பை விட்டு விட்டு திரும்பியுள்ளார் தீபிகா.



"பாம்பு பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது' எனக் கேட்டபோது, தீபிகா கூறியதாவது: சிறு வயது முதலே எங்கள் வீட்டின் அருகில் வரும் நாய், பூனைக் குட்டிகளையும், அடிபட்டு தாயை பிரிந்த பறவை குஞ்சுகளையும் எடுத்து வந்து அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பேன். பள்ளிக்கு செல்லும் போது, பல நாட்கள் நான் கொண்டு செல்லும் உணவை சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு இட்டுச் செல்வது வழக்கம். நான் செல்லும் வழியில் எந்தப் பிராணி அடிபட்டு கிடந்தாலும், நோய்வாய்ப் பட்டு கிடந்தாலும் அவற்றிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வேன். அப்படித் தான் பாம்புகள் மேலும் எனக்கு பரிவு ஏற்பட்டது.சென்னையில் மிகப்பிரபலமான ஸ்டான்லி பெர்னாண்டசிடம் விஷம், விஷமற்ற பாம்புகளை பிடிப்பது என்பது பற்றி கடந்த ஆறு மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன். இதுவரையில் நாகப்பாம்பு, கோதுமைநாகம், சாரைப்பாம்பு ஆகியவற்றை பிடித்துள்ளேன். பிடிப்பவற்றை பாதுகாப்பாக, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிடுவதுதான் எனக்கு முதல் வேலை.பாம்பு பிடித்துவரும் போது, வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த பாம்பை பற்றிய முழுவிவரங்களையும் சொல்லித் தருவதுடன், அவர்களையும் பாம்பை நேசிக்க வைத்து வருகிறேன். தற்போது, கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையின் டாக்டர் கண்ணன் எனக்கு பாம்புகளை பற்றிய புத்தகங்களை கொடுத்து உதவி வருகிறார்.அவர் உதவியுடன், பள்ளிகளில் சென்று பாம்புகள் மற்றும் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவி வருகிறேன். கல்லூரி படிப்புடன் ஐ.எப்.எஸ்., தேர்வுக்காகவும் பயிற்சி எடுக்கிறேன். புளூ கிராஸ் போன்று விலங்குகளை பராமரிக்க தனியான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம். இவ்வாறு தீபிகா கூறினார்.



கல்லூரி மாணவியான தீபிகாவிற்கு, பாய் பிரண்ட் இல்லை. ஆனால், தினமும் வந்து ஹாய் சொல்லும் பாம்பு பிரண்ட் இருக்கிறதாம். இது பற்றி தீபிகா கூறுகையில், ""என் வீட்டின் அருகில் தினசரி வந்து போகும் பச்சை பாம்பு, எனக்கு நெடுநாளைய தோழியாக மாறி விட்டது. தாயிடம் இருந்து பிரிந்து வந்த அணில் குஞ்சும் என்னிடம் பல ஆண்டுகள் பாசமாக இருந்தது. நாளடைவில், என்னுடன் கல்லூரி வரைக்கும் அணில் குஞ்சு வந்து சென்றதும் உண்டு,'' என்றார்.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP