சமீபத்திய பதிவுகள்

ஹிஜ்ரத்

>> Friday, October 12, 2012

 

கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம். புதிய சகாப்த்தம் என்று அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறது. ஆம், முஹம்மதின் வாழ்கை, ஹிஜ்ரத்திற்குமுன் ஹிஜ்ரத்திற்குப்பின் என்று முரண்பட்ட இரண்டு பகுதிகளாக காணப்படுகிறது. ஹிஜ்ரத்திற்குமுன் அவரது செயல்களில் கற்பனையாக உளறிக் கொண்டிருந்தது மற்றும் குழந்தை ஆயிஷாவுடன் திருமணம் என்பதைத் தவிர குறைகாண வேறொன்றுமில்லை. அல்லாஹ்வின் அனுமதி என்ற பெயரில் அவர், வன்முறையாளராக பெரும் அளவிலான குற்றச்செயல்களை நிகழ்த்தியது ஹிஜ்ரத்திற்குப் பின்னர்தான். மக்கா நகரத்து குரைஷியர்களால் முஹம்மது மற்றும் அவரது அடியார்களின் உயிருக்கு மிகப்பெரும் அச்சுருத்தல் ஏற்பட்டதாலேயே ஹிஜ்ரத் நிகழ்ததென்றும், அவர்களுக்கு பதிலடிகொடுக்கவே வேறுவழியின்றி தாக்குதல்களும், சூறையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் அதேவேளையில், அல்லாஹ்வின் அறிவுறுத்தல் அல்லது ஆணை காரணமாகவே முஹம்மதுவும், அவரது சீடர் குலாமும், தங்களது தாயகமான மக்கா நகரை பிரிந்து செல்ல நேர்ந்தது என்று முரண்பாடகவும் கூறுவார்கள்.
இஸ்லாமியர்களின் கூற்றுப்படி, முஹம்மதிற்கு ஆதரவாக இருந்த அபூதாலிப், சீமாட்டி கதீஜா ஆகியோரின் மரணத்திற்குப்பிறகு அவரது வாழ்க்கையும், பொருளாதார நிலைமையும் கேள்விகுறியாகிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 264 ஆயிரம் கோடி மதிப்புடைய சீமாட்டி கதீஜாவின் செல்வம் முழுவதையும் இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்து ஓட்டாண்டியாகிவிடுகிறார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதுவைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது அவர் குறைஷிகளின் கூட்டத்திலேயே மிகச்சிறந்த பண்பாளர், நம்பிக்கையாளர் "அல்அமீன்" என்றெல்லாம் கதையளப்பார்கள். ஆனால் குர்ஆனோ முஹம்மதிற்கு, குறைஷிகளிடையே அப்படியொன்றும் மகத்தான மரியாதை இருந்ததில்லை என்கிறது.
"இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர்.
(குர் ஆன் 43:31)
தங்களது கடவுளர்களை தரக்குறைவாக ஏசுகிறார் என்ற முறையில் முஹம்மதின் மீது மக்கத்து குறைஷிகளுக்கு கோபமிருந்திருக்கிறது அதை அபூதலிப்பிடம் தெரிவித்திருந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு மக்காவில், முஹம்மதின் உயிருக்கு அச்சுருத்தல் இருந்ததா? முஹம்மது தரப்பில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில் இரண்டைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்...
(புகாரி 520)
ஃபாத்திமா மட்டும் அங்கு வரவில்லையென்றால் மூச்சுதிணறி முஹம்மது இறந்திருப்பார் என்று கண்ணீர்மல்க மதப்பரப்புரை செய்வதை நீங்கள் அறிவீர்கள். மற்றொரு ஹதீஸையும் பார்ப்போம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன்...
(புகாரி 3678)
அபூதாலிப், மற்றும் சீமாட்டி கதீஜாவின் மரணத்திற்குப் பிறகு, மக்கத்து குரைஷிகளால் முஹம்மதின் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் இருந்ததெனக் கூறிக்கொள்வது அல்லாஹ்விற்கும், குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் எதிரானது. ஏனெனில் முஹம்மது, அல்லாஹ்வின் உயர்மட்ட பாதுகாப்பிலிருப்பவர்.  முஹம்மதிற்கு எதிராக சூழ்ச்சி செய்வதைக்கூட அனுமதிக்க முடியாதென்கிறது குர்ஆன்.       
எனவே, நிச்சயமாக அவன், அவருக்கு முன்னாலும், அவருக்குப் பின்னாலும் பாதுகாவலரை நடத்துகிறான்
(குர் ஆன் 72:27)
தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்; அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்; அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடிப்பான்..
 (குர்ஆன் 16:45)
அபூதாலிப் அல்லது கதீஜா இருந்தாலும் இல்லையென்றாலும் அல்லாஹ்விவின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இருக்க முடியாதல்லவா? ஆனால் இவர்களோ முஹம்மதிற்கு எதிராக, குறைஷிகள் கடுமையான தொல்லைகள் விளைவித்ததாகவும், கொலைசெய்ய முயன்றதாகவும், கூறுவதன் மூலம் அல்லாஹ்வை கையாலாகாத கடவுளாக மாற்றிவிட்டனர். மக்காவில் முஹம்மதிற்கு,  அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி ஹதீஸ் கூறுவதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்' என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்'' என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, முஹம்மதைத் தாக்கும் நோக்கில், அபூஜஹ்லால், நெருங்கக்கூட முடியவில்லை, மீறி நெருங்கியிருந்தால் அவனது உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்களாம். இதே அபூஜஹ்லும் அவரது நண்பர்களும் ஒட்டகத்தின் கருப்பை சவ்வுகளை முஹம்மதின் தோள்மீது இட்டபொழுதும், உக்பா பின் அபீமுஐத் போர்வையால் மூச்சு திணறுமளவிற்கு முஹம்மதின் கழுத்தை நெரித்த பொழுதும் எதுவும் நிகழவில்லை. பாதுகாப்பிற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மலக்கு எங்கே போனது? அவர்களது உடல் உறுப்புகள் பிய்த்தெடுக்கப்படவில்லையே ஏன்? இதற்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் கூறவேண்டும். (அல்லாஹ்வின் நாட்டம் அல்லது திட்டப்படியே முஹம்மது யஸ்ரிப்(மதீனா) சென்றார் என்பதுதான் அவர்களது பதில்!)
சரி..! இப்படியொரு படுபயங்கரமான(!?) வானவர்களின் பாதுகாப்பு இருக்கையில், மக்காவை விட்டு எதற்காக ஓடவேண்டும்? மதீனாவாசிகளிடன் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லது  இதே வானவர்கள் மதீனாவிற்கு வந்து பாதுகாக்கமாட்டாரா? ஹிஜ்ரத்தின் அவசியம்தான் என்ன? தனது ஏற்பாடுகளின் மீது அல்லாஹ்விற்கே நம்பிக்கையில்லையா?, அல்லது மலக்குகள் மனிதர்களைவிட மிகபலவீனமானவர்களா?.
ஹிஜ்ரத்திற்கு காரணம் என்னவென்று இப்படி மண்டை பிய்த்துக் கொள்ளவேண்டியதில்லை. மதீனாவில் தனக்கு ஆதரவு பெருகியிருப்பதாக முஹம்மது கருதினார் அதனால் மதீனா சென்றுவிட்டார் அவ்வளவுதான்.
முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூரென்று அறிவித்துக் கொண்ட பத்தாம் ஆண்டில் தனது கொள்கைகளை மக்கா நகருக்கு வெளியிலிருப்பவர்களுக்கும் கூறத்துவங்குகிறார். ஹஜ்ஜின் காலம் துவங்கியவுடன் கஅபாவை வணங்க வந்த யஸ்ரிப்வாசிகளிடமும் தனது மதவியாபாரத்தை செய்கிறார். அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது. அதன் பயனாக தனது விற்பனைப் பிரதிநிதிகளை யஸ்ரிப் என்ற மதீனாவில் நியமித்து வியாபாரத்தை வளர்த்தெடுக்கிறார். இந்நிலையில் கல்வியறிவு இல்லாத யஸ்ரிப்(மதீனா)வாசிகளுடன் அகபாவில் ரகசியமாக சந்தித்து இரண்டுமுறை ஒப்பந்தங்களையும் செய்துகொள்கிறார்.
முதல் ஒப்பந்தத்தில், தன்னைப் பற்றிய செய்தியை யஸ்ரிப்பில் பரப்ப ஏற்பாடு செய்கிறார். இதன் பயனாக முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுடன் இரண்டாம் ஒப்பந்தமும் ஏற்படுகிறது. இப்னு அப்பாஸ் அப்துல் முத்தலிப், முஹம்மதின் சார்பாக பேசுகிறார்.
"கஸ்ரஜ் கூட்டத்தினரே! முஹம்மது எங்கள் மக்களிடம் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் இருக்கிறார். எனினும் அவர் உங்களுடன் இணைந்துவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். அவரது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவதாக இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்லலாம்" என்றார். கஅப் என்பவர் மதீனாவாசிகளின் சார்பாக உறுதிமொழி அளிக்கிறார்.
(இப்ன் ஹிஷாம்)
"O people of al-khazraj (the Arabs used the term to cover both Khazraj and Aus). You know what position Muhammad hold among us. We have protected him from our own people who think as we do about him. He lives in honour and safety among his people, but he will turn to you and join you. If you think that you can be faithful to what you have promised him and protect him from his opponents, then assume the burden you have undertaken. But if you think that you will betray and abandon him after he has gone out with you, then leave him now. For he is safe where he is." …
(Page 203, Life of Muhammad a Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah By A.Guillaume)
மக்காவில் முஹம்மது,  தக்க பாதுகாப்புடன்தான் இருந்திருக்கிறார், அவராது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே மதீனா செல்கிறார் என்பதை கவனிக்கவேண்டும். ஆனால், முஹம்மது ஹிஜ்ரத் செய்ததற்கு, அல்லாஹ் கூறும் காரணங்களை கவனித்துப் பாருங்கள்,
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
(குர்ஆன் 9:13)
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(குர் ஆன் 8:26)
முஹம்மதை குறைஷிகள் என்ன செய்தனர் என்பதில் அல்லாஹ்வினால் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை போலும்!. மேலும் ஹிஜ்ரத்தின் பொழுது மக்காவில் 70-80 பேர்களே முஹம்மதை ஏற்றிருந்தனர்.
உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ  மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
(குர்ஆன் 8:30)
1.     மக்காவாசிகள் முஹம்மதை பிடித்து வைத்துக்கொள்ள சூழ்ச்சி செய்தனர்,
2.     மக்காவாசிகள் முஹம்மதை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர்,
3.     மக்காவாசிகள் முஹம்மதை மக்காவிலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்தனர்.
அல்லாஹ் கூறும் இந்த மூன்று காரணங்களும் ஒன்றுக்கொன்று முரணானவைகள்.
1.     முஹம்மதை, மக்காவிலிருந்து வெளியேற்ற விரும்புபவர்கள், அவரை எதற்காக பிடித்து வைக்க வேண்டும்?
2.     முஹம்மது தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக பிடித்துவைக்க சூழ்ச்சி செய்பவர்கள், எதற்காக  அவரைக் கொல்வதற்காக சூழ்ச்சி செய்ய வேண்டும்?
3.     முஹம்மதை கொல்ல சூழ்ச்சி செய்பவர்கள், ஊரைவிட்டு எதற்காக வெளியேற்ற சூழ்ச்சி செய்ய வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறானாம்! சர்வவல்லமையுடையதாக கூறிக்கொள்ளும் அல்லாஹ்விற்கு, மக்காவில் புகலிடம் அளிக்கவோ, பலப்படுத்தவோ முடியவில்லை. இதை அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதே சரியானது. இதனால்தான் அல்லாஹின் திட்டப்படியே முஹம்மது மதீனா சென்றார் என்றொரு சமாளிப்பை கூறுகின்றனர். அல்லாஹ் அளித்ததாக  கூறிக்கொள்ளும் தூய்மையானவைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும், இருப்பினும் அடுத்துவரும் பதிவுகளில் அதைப்பற்றி பார்க்கலாம். உண்மையில், முஹம்மதின் ஆதரவாளர்கள் அனைவருமே ஹிஜ்ரத் செய்வதை விரும்பினர் என்று கூறுவதற்கில்லை, அவர்களில் சிலருக்கேனும் விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும், ஹிஜ்ரத் செய்வதற்காக எப்படியெல்லாம், கெஞ்சுகிறான், மிரட்டுகிறான் என்பதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
(குர் ஆன் 8:72)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.
(குர் ஆன் 4:100)
.. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றினார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்தியதையும், மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார்.
(குர் ஆன் 60:1)
மக்காவாசிகளின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதைக்கூட எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தெளிபடக் கூறமுடியவில்லை. முன்னுக்குபின் முரணாக ஏதேதோ உளறுகிறான். தங்களை அடித்து விரட்டியவர்களிடம் எவனாவது இரகசியமாக அன்பைச் செலுத்துவானா? இருக்க முடியாது! அப்படியெனில் விரட்டப்பட்டதாகக் கூறுவது பொய்! குறைஷிகள் மக்காவைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க முயன்றனர் என்பதே மெய்! ஹுதைபியா ஒப்பந்தத்திலும்கூட குறைஷிகள், தங்கள் தரப்பிலிருந்து முஹம்மதிடம் வருபவர்களை திருப்பி தங்களிடமே அனுப்பிட வேண்டுமென்ற நிபந்தனை விதித்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே! அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை!  குறைஷிகள் அதையே செய்தனர்.
 முஹம்மதின் மக்கா வாழ்க்கையில் யூதர்கள் இடம்பெறவில்லை, எனவே பழி குறைஷிகளின் தலையில் போடப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது முஹம்மதிற்காக பரிந்து பேசிய அவரது பெரிய தந்தை இப்ன் அப்பாஸ், முஹம்மதையும், அவரது கூட்டத்தினரையும் அழிக்க அபூஜஹ்லுடன் இணைந்து பத்ருகளத்திற்கு வந்து,  முஹம்மதிடம் கைதியாக மாட்டிக்கொண்டதுதான் (முஹம்மதின் கதை, மிகவும் பலவீனமான திரைக்கதை! முன்னாள் சென்றால் கடிக்கிறது பின்னால் சென்றால் உதைக்கிறது)
முஹம்மதியர்களிடம், ஹதீஸ்கள் ஏன் இவ்வளவு கேணத்தனமாக, முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்றால் அது யூதர்களின் சதி என்பார்கள். சில வாரங்களுக்கு முன், இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, "கற்றறிந்த உங்களைப் போன்ற ஆலீம்களே குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் பலவிதமாக குழப்பமாக பொருள் கூறிக்கொள்வது  ஏன்?" என்றேன். அதற்கு ஒரு ஆலீம் கூறினார், "இஸ்ரேலில், குர்ஆன், மற்றும் ஹதீஸ்களை தீவிரமாக ஆய்வு செய்வதற்கென்றே தனித்துறை ஒன்று செயல்படுகிறது. அங்கு நடைபெறும் மிக முக்கியமான பணி என்னவெனில், குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் தவறான, குதர்க்கமான பொருளையும், அதை முஸ்லீம்கள் மத்தியில் கூறும் போலி ஆலீம்களை உருவாக்கி, உலகம் முழுவதிலும் பரவச்செய்து குழப்பத்தை உருவாக்கி இஸ்லாமை அழிப்பதுதான் யூதர்களின் நோக்கம்" என்றார்.
நான், "நமது ஆலீம்களான ஜாகீர் நாயக், பீஜே, அப்துல்லா ஜமாலி, சம்ஸுதீன் காஸிமி, Dr.K.V.S. ஹபீப் முஹம்மது போன்றவர்களும் அந்த யூதர்களின் மதரஸாவில் படித்தவர்களோ?" என்றபொழுது அந்த ஆலீமின் முகத்தில் தெறித்த எரிச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்! கருத்து சொன்னால் கேட்கவேண்டும் ஆராயக்கூடாது. இதுதான் இஸ்லாம்!
 இவர்கள் இப்படியே தொடந்தால், இமாம்கள் அபூஅப்தில்லாஹ், அல்ஹஜ்ஜாஜ் போன்றவர்களின் வேடத்தில்கூட யூதர்கள் வந்தனர் என்று விரைவில் கூறிவிடுவார்கள் என்று நம்பலாம். அல்லாஹ்வின் மற்றொரு வஹீயான ஹதீஸ்களில் விதவிதமாக கைவரிசையை காட்டிய யூதர்கள், குர்ஆனை விட்டு வைத்திருப்பார்களா? நாம் ஹிஜ்ரத்தை தொடர்வோம்.
இவ்வாறாக யஸ்ரிப்(மதீனா)வாசிகள் தங்களது உயிரைகொடுத்து பாதுகாப்போம் என்று உறுதிமொழியளித்த பின்னர், தனக்குத் தக்கபாதுகாப்பு கிடைக்கும் என்று தெளிவடைந்த பிறகுதான் முஹம்மதிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ்(!)விடமிருந்தும் அனுமதி வருகிறது. (இல்லாத) அல்லாஹ் எப்படியும் தன்னை பாதுகாப்பான் என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்து ஓடுவதற்கு அவரென்ன அப்பாவி முஹாஜிரா?
இல்லாத எதிரியைக் கண்டு அஞ்சி நடுங்கிய முஹம்மது, ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு, கிபி 622 செப்டம்பர் 12ல் தனது நண்பர் மூளைசெத்துப்போன அபூபக்கர் துணையுடன் வீட்டிலிருந்து வெளியேறி கிபி 622 செப்டம்பர் 23ல் குபா சென்றடைந்தார். மதீனா வந்த பிறகும் முஹம்மதின் அச்சம் தீரவில்லை தனது கூடாரத்தை பாதுகாக்க இரவுநேர காவலுக்கும் ஏற்பாடுசெய்து கொள்கிறார். மலக்குகளின் பாதுகாப்பு என்னவாயிற்று? என்று குறுக்கு கேள்விகள் கேட்கக்கூடாது!

தஜ்ஜால்

source:iraiyillaislam.blogspot.in

--
http://thamilislam.blogspot.in

StumbleUpon.com Read more...

முஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)முஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)


யத்ரிபிலும் அதை சுற்றியும் பனு கைனுகா, பனு நதிர், பனு குரைலா என்ற மூன்று யூத குலத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய புதிய தீர்க்கதரிசியாக(நபி) தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முஹம்மது உணர்ந்து கொண்டவுடன், அவர்களுக்கு எதிராக அவர் திரும்பினார். முதல் இரண்டு குலத்தினரை, அவர்களுடைய சொத்துக்களையும் செல்வத்தையும் பறித்துக்கொண்ட பிறகு, அவர்களுடைய பூமியிலிருந்து துரத்திவிட்டுவிட்டு, கடைசி குலத்தினரை அவர் படுகொலை செய்தார்.
பனு குரைலாவை  இனப்படுகொலை செய்தது ("முகம்மதுவை புரிந்து கொள்ளுதல்" என்பதிலிருந்து)
  பனு குரைலாவே  முஹம்மதின் பழிவாங்கும் படலத்திற்கு  பலியான யத்ரிபின் கடைசி யூத குலம். அகழ் யுத்தம் முடிந்த உடனே, தங்களுடைய வணிக கூட்டங்களின் மீது தொடர்ந்து  முஹம்மது செய்து வந்த அதிரடி கொள்ளை தாக்குதல்களால் வெறுத்துப்போன மக்கா வாசிகள், அவரை  தண்டிப்பதற்காக மதினாவின் வாசல்கள் வரை வந்தனர். ஒரு பாரசீக நம்பிக்கையாளரால் அறிவுறுத்தப்பட்டபடி, முஹம்மதின் எதிரிகள்(சங்கத்தினர்கள்) நகருக்குள் நுழைவது என்பது கடினமாகி அவர்கள் பின்வாங்கி செல்லும்படி, அதை சுற்றிலும் அவர்கள் பள்ளம்   தோண்டினர். முஹம்மது பனு குரைலாவின்  மீது தன்னுடைய கண்ணை வைத்தார்தன்னுடைய வாளை உறையிலிருந்து வெளியே எடுத்து,   துரோகம் இழைக்கும் பனு குரைலாவின்  வசிப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் சண்டையிடும்படி பிரதான வானவரான ஜிப்ரீல் தன்னை சந்தித்து கேட்டுக்கொண்டதாக முஹம்மது உரிமை பாராட்டினார். "அவர்களுடைய கோட்டைகளை அசைத்து அவர்களுடைய இதயங்களில் பயத்தை ஏற்படுத்ததான் வானவர்களின்  பவனியோடு முன்னே செல்வேன் என்று ஜிப்ரீல் குறிப்பிட்டார்" என்று அல் முபாரக்பௌரி எழுதுகிறார்அல் முபாரக்பௌரி தொடர்கிறார் : " உடனே அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு அழைப்பவரை கூப்பிட்டனுப்பி பனு குரைலாவிற்கு  எதிரான புதிய தாக்குதல்களை அறிவிக்குமாறு கட்டளை இட்டார்."
தொழுகைக்கான அழைப்பு என்பது போருக்கான அழைப்பும் கூட என்பதை  இஸ்லாத்தை படிக்கும்பொழுது கவனிப்பது   முக்கியமானது. எப்பொழுதுமே முஸ்லிம்களுடைய கலவரங்களும் காலித்தனமும் அவர்கள்  தங்களுடைய தொழுகைகளை முடித்தபிறகு மசூதிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன. வெள்ளிக்கிழமைகளிலும் புனித ரமலான் மாதத்தின்போதும் அவர்கள் மிகவும் விஷமத்தனமுள்ளவர்களாக இருக்கின்றனர். 1981 ல், முஹம்மதின் பிறந்த நாளை போற்றும் ஒரு மத சொற்பொழிவில், அயதுல்லாஹ் கொமெய்னி  கூறினார் :    
"மிஹ்ராப்(மசூதி) என்பதற்கு போர்க்களம், சண்டையிடும் இடம் என்றே அர்த்தம். மிஹ்ராப்களில் இருந்து போர்கள் புறப்பட வேண்டும். இஸ்லாமின் போர்கள் அனைத்தும் மிஹ்ராப்களில் இருந்து புறப்பட்டதைப்போலவே. மக்களை கொல்லுவதற்கு நபி வாளை வைத்திருந்தார். நம்முடைய புனித இமாம்கள் தீவிரவாதிகளாகவே இருந்தனர். அவர்கள் அனைவரும் போரிடுபவர்களாகவே இருந்தனர். அவர்கள்  வாள்களை  வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்அவர்கள் மக்களை கொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கைகளை வெட்டி துண்டாக்குகிற, தொண்டைகளை அறுக்கிற, மக்களை கல்லால் அடிக்கிற கலீபா நமக்கு தேவை. கைகளை வெட்டி துண்டாக்குவதை, தொண்டைகளை அறுப்பதை, மக்களை கல்லால் அடிப்பதை அல்லாஹ்வுடைய தூதர் வழக்கமாக கொண்டிருந்த அதே வழியில்."
அன்சார்கள் (உதவி புரிபவர்கள்) முஹாஜிர்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) ஆகியவர்களைக்கொண்ட முப்பது குதிரை வீரர்கள், மூவாயிரம் காலாட்படையினர் அடங்கிய படைக்கு முஹம்மது தலைமை தாங்கினார். குறைஷிகளோடு சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ததாக பனு குரைலா மீது குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில், இந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த குற்ற சாட்டை மறுத்து, மக்கா வாசிகள் பனு குரைலாவிடமிருந்து  தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சண்டை இடாமல் பின்வாங்கி சென்றனர் என்று கூறுகின்றனர்.  
முஹம்மது தன்னுடைய உள்நோக்கங்களை வெளிப்படுத்தியபோது, அவருடைய சித்தப்பா மகனும் தீவிர பின்பற்றியுமான அலி, அவர்களுடைய கோட்டையை பாதுகாக்கும் படையை திடீரென தாக்கி கைப்பற்றுவேன் அல்லது கொல்லப்படுவேன் என்று சபதம் செய்தார். இந்த முற்றுகை 25 நாட்களுக்கு நீடித்தது. இறுதியாக பனு குரைலாவினர்  நிபந்தனை இன்றி சரணடைந்தனர். பெண்களும்  குழந்தைகளும்   தனிமையில் சிறைவைக்கபடும் அதே நேரத்தில், ஆண்களுக்கு கைவிலங்கு இடும்படி முஹம்மது ஆணையிட்டார். அப்பொழுது, பனு குரைலாவின்   நண்பர்களான அவ்ஸ் குலத்தினர் அவர்களிடம் மென்மையாக  இருக்குமாறு  முஹம்மதிடம்  சிபாரிசுசெய்து வேண்டினர். அவர்களிடையே முரட்டு துஷ்டனாக இருந்த, அம்பினால் மிக மோசமாக காயப்பட்டிருந்த சஅத் பின் முஆத் என்பவன்  யூதர்களின்மேல் தீர்ப்பு வழங்கட்டும் என்று முஹம்மது பிரேரணை வைத்தார். சஅத் பனு குரைலாவின் முன்னாள் நண்பனாக  இருந்தான், ஆனால் இஸ்லாத்திற்கு அவன்  மதம் மாறியபின்பு அவர்களுக்கு எதிராக அவன்  மனம் மாறி இருந்தான். அகழ் யுத்தத்தின்போது ஒரு மக்காவாசி எறிந்த அம்பினால் தான் அடைந்த மிக மோசமான காயத்திற்கு அவன்  அவர்களை குறை கூறி இருந்தான். சஅத்  பனு குரைலாவை பற்றி  எப்படிப்பட்ட உணர்வுள்ளவனாக  இருந்தான்  என்பதை முஹம்மது அறிந்தே இருந்தார். அவன்  அவருடைய மெய்பாதுகாவலனாக இருந்தவன் தானே, அவன் மசூதியிலேயே தூங்குவான்.    
"அந்த குலத்தை சேர்ந்த வலிமையுள்ள எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும், பெண்களும் குழந்தைகளும் கைதிகளாக்கப்பட வேண்டும், அவர்களுடைய செல்வம் முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்" என்பதே சஅத் தின் தீர்ப்பாக அமைந்தது
இந்த கொடூரமான தீர்ப்பினால் முஹம்மது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வின் கட்டளையைகொண்டே சஅத் தீர்ப்பு வழங்கினார் என்று கூறினார். அவர் தன்னுடைய சொந்த முடிவுகளுக்கு அல்லாஹ்வையே அடிக்கடி காரணம் காட்டினார். இந்த முறை அவர் தன்னுடைய அபிலாஷைகளை வாய்மொழியாக்க சஅதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அல் முபாரக்பௌரி மேலும் கூறுகிறார் : "இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் செய்த அசிங்கமான துரோகத்திற்காகவும், முஸ்லிம்களின் கைகளுக்கு சென்ற ஆயிரத்து ஐநூறு வாள்கள், இரண்டாயிரம் ஈட்டிகள், முன்னூறு கவச உடைகள், ஐநூறு கேடயங்கள் அடங்கிய மிக பெரிய ஆயுதங்களை அவர்கள் குவித்து வைத்து இருந்ததற்காகவும்உண்மையிலேயே  அந்த கடுமையான தண்டனை நடவடிக்கைக்கு யூதர்கள்  தகுதியானவர்களே"
அல் முபாரக்பௌரி சொல்ல மறந்துவிடுவது என்னவென்றால் அது, பனு குரைலாவினர் தங்களுடைய ஆயுதங்களையும் கடப்பாரைகளையும் மம்மட்டிகளையும், அவர்கள் அகழ் வெட்டி தங்களை பாதுகாத்து கொள்வதற்காக  முஸ்லிம்களுக்கு கடன் வழங்கினர் என்பதே. முஸ்லிம்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஒருபோதும் நன்றி உடையவர்களாக இருப்பதே இல்லை. அவர்கள் உங்கள் உதவியை பெற்றுக்கொண்டு, இனி நீங்கள் அவர்களுக்கு தேவை இல்லை என்ற அதே மாத்திரத்தில் உங்கள் முதுகில் குத்துவார்கள். இந்த நோயின் மனோநிலையை அடுத்த அதிகாரத்தில் நாம் பார்ப்போம்.
பனு குறைலாவினரின் படுகொலையை நியாயாப்படுத்த  அவர்கள்மேல் வழக்கமான  ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைக்க முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அவசரப்படுகிறார்கள். விஷமத்தனமாக இருப்பது, துரோகம் இழைப்பது, விசுவாசம் இல்லாமல் இருப்பது, இஸ்லாத்திற்கு எதிராக சதி செய்வது என்றெல்லாம் அவர்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இருப்பினும், இப்படிப்பட்ட கடுமையான தண்டணையையும் அவர்களுடைய ஒட்டுமொத்த இன அழிப்பையும் நியாயப்படுத்த அந்த பாவங்களின் இயல்பை பற்றிய எந்த குறிப்பிட்ட விளக்கமான தகவல்களும் இல்லவே  இல்லை. மதினாவின் சந்தையில் குழிகள் தோண்டப்பட்டு, 600 முதல் 900  வரையிலான ஆண்களின்  தலைகள்  சீவப்பட்டு அவர்களுடைய உடல்கள் அவைகளில் குவிக்கப்பட்டன
பனு நதிர் குலத்தினரின் தலைவரான ஹுயய் இப்னு அக்தாப் என்பவரும் சிறை பிடிக்கப்பட்டவர்களில் இருந்தார். அவருடைய திருமணமான மகளான சபியா என்பவரை முஹம்மது கைபரின்மீது படையெடுத்தபோது தன்னுடைய கொள்ளை பொருளின் பங்காக எடுத்து  கொண்டார்அவருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டு வெற்றி பெற்றவரிடம் கொண்டு வரப்பட்டார். அசாத்தியமான தைரியத்துடன் எதிர்த்து நின்று, முகம்மதை நிராகரித்து இந்த மனித மிருகத்துக்கு அடிபணிவதைவிட மரணத்தையே மேலானதாக அவர் ஏற்றுகொண்டார். அவர் மண்டியிடும்படி கட்டளையிடப்பட்டு அந்த இடத்திலேயே தலை சீவப்பட்டார்.
யார் யாரை எல்லாம் கொல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்க, இளவயதினர் பரிசோதனை செய்யப்பட்டனர். மர்ம உறுப்பில் முடி வளரபெற்றவர்கள் (pubic hair) எல்லாம் ஆண்களோடு ஒன்றாக கட்டப்பட்டு தலை சீவப்பட்டனர்.  இந்த படுகொலையிலிருந்து தப்பித்த அதிய்யாஹ் அல் குரியாஸ் என்ற யூதர் பிறகு விவரிக்கிறார் : "பனு குரைலாவின் சிறைபிடிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். அவர்கள் (முஸ்லிம்கள்) எங்களை பரிசோதித்தனர், (மர்ம உறுப்பில்) முடி வளர ஆரம்பித்தவர்கள் (pubes) கொல்லப்பட்டனர், முடி வளராதவர்கள் கொல்லப்படவில்லை. முடி வளராதவர்களில் நானும் இருந்தேன்."
முஹம்மது பல யூத குலங்களை கொன்று, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்திவிட்டார். அவர்களில் பனு கைனுகா, பனு குரைலா, பனு முஸ்தலிக், பனு ஜஉன், கைபரின் யூதர்கள் அடங்குவர். தன்னுடைய மரண படுக்கையில், எல்லா காபிர்களையும் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) அரேபிய தீபகற்பத்தைவிட்டே ஒழித்து கட்டும்படி தன்னை பின்பற்றியவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இரண்டாவது கலீபாவான உமர் அந்த கட்டளையை பிறகு நிறைவேற்றினார். மதம் மாறும்படி, வெளியேறும்படி நிர்பந்தித்து அல்லது மரணத்துக்கு உட்படுத்தி யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மற்ற சொந்த நாட்டு மதத்தினரையும் அவர் பூண்டோடு அழித்தார்.  
இப்பொழுது, கொள்ளையினால் செல்வ செழிப்பாகி, தன்னிடம் நம்பிக்கை கொண்டவர்களிடம் முஹம்மது தாராள மனதுடையவராக இருக்க முடிந்தது. அனஸ் அறிவித்தார் : "பனு குரைலாவையும் பனு நதிரையும் அவர் வெற்றி கொள்ளும்வரை நபியவர்களுக்கு மக்கள் தங்களுடைய பேரீச்சம் பழங்களில் சிலவற்றை (தானமாக) கொடுத்து வந்தனர், அதன் பிறகு அவர்களுடைய உதவிகளை அவர் திருப்பி தர ஆரம்பித்தார்."
பனு குரைலாவின் படுகொலையை, அவர்களுடைய ஆண்களை  முஹம்மது  வெட்டி கொன்றதையும் பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாக ஆக்கியதையும் ஆமோதித்து கூறுகின்ற குர்ஆன் வசனம் ஒன்று உள்ளது :
"இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.(33: 26)"

[1] AR-Raheeq Al-Makhtum  by Saifur Rahman al-Mubarakpuri  http://islamweb.islam.gov.qa/english/sira/raheek/PAGE-26.HTM
[2] Ibid.
[3]  Ayatollah Khomeini: A speech delivered on the commemoration of the Birth of Muhammad, in 1981.
[5] Sunan Abu-Dawud Book 38, Number 4390.  Sunan Abu-Dawud is another collection of hadith regarded to be sahih.
[6] Bukhari Volume 4, Book 52, Number 288
[7] Bukhari Volume 4, Book 52, Number 176

மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

source:iraiyillaislam.blogspot.in

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP