சமீபத்திய பதிவுகள்

சிங்கக் கொடியை சர்வதேசரீதியாக தடைசெய்வது எப்படி ?

>> Tuesday, February 17, 2009

StumbleUpon.com Read more...

மார்பகத்தைக் காட்டிய பெண்ணுக்கு $1,000 அபராதம்

மார்பகத்தைக் காட்டியவருக்கு $1,000 அபராதம்

 பொது இடத்தில் மார்பகத்தைக் காட்டிய பிலிப்பினோ மாது ஒருவருக்கு நேற்று கீழ் நீதிமன்றம் $1,000 அபராதம் விதித்தது.
எஸ்பிடோல் ஜெமிலி டாபோய் (25) என்ற அம்மாது டக்ஸ்டன் ரோட்டில் இருக்கும் மனமகிழ் மன்றத்தில் இரவு 11.20 மணிக்கு இக்குற்றத்தை செய்தார் என்று கூறப்படுகிறது.
போலிஸ் அதிகரிகள் அம்மனமகிழ் மன்றத்தை திடீர் சோதனைச் செய்ய வந்தபோது எஸ்பிடோலின் செய்கையைப் பார்த்து அவரைக் கைது செய்தனர்.
இக்குற்றத்திற்காக மாதிற்கு $2,000 அபராதமோ மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டிருக்கலாம்.

http://tamilmurasu.tamil.sg/node/3029

 

StumbleUpon.com Read more...

மக்கள் தொலைக்காட்சியை தவிர‌ எதைவேண்டுமானாலும் பார்த்துக்கொள்

 
எதைவேண்டுமானாலும் பார்த்துக்கொள் ஆனால் மக்கள் தொலைக்காட்சியை பார்க்கவேண்டாம் என்று இலங்கை ராணுவம் தடை விதித்துள்ளது.
 
 
 
செய்தி:
 
 
மக்கள் தொலைக்காட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் தடை
 
தமிழக தொலைக்காட்சிகளை யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பு செய்வதற்கு சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒளிபரபாகும் மக்கள் தொலைக்காட்சிக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுவரும் அழிவுகளை மக்கள் தொலைக்காட்சி மட்டுமே பெரும்பாலும் காண்பித்து வருக்கின்றது. வன்னியில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்களை மக்கள் தொலைக்காட்சியே தொடர்ச்சியாக காண்பித்து வருகின்றது.

 
இது யாழ்குடா மக்களை சென்றடையாது தவிர்ப்பதற்கு படையினர் இந்தத் தடையை விதித்துள்ளனர். இத் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்குபவர்களுக்கும் வழங்கக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

 
முன்னதாக வவுனியாவிலும் இவ்வாறான உத்தரவை படையினர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
யாழ்ப்பாணத்தில் கலைஞர் ரிவி, ஜெயா ரிவி, சண் ரிவி, மக்கள் தொலைக்காட்சி என்பன ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
 

StumbleUpon.com Read more...

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமியை இனிமேல் மு.சாமி என்றுதான் அழைக்கவேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!

 
 
 
நீதிபதிகள் முன்னிலையில் சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீச்சு

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமியை இனிமேல் மு.சாமி என்றுதான் அழைக்கவேண்டும் போல் உள்ளது.அந்த அளவுக்கு முட்டையால் சிறப்பு மரியாதை செய்துள்ளனர் வழக்கறிஞர்கள்.

 

செய்தி:



சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமியை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கினர்.
 

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசே நிர்வகிக்கலாம் என்று கோர்ட் தீர்ப்பளித்ததை எதிர்த்து, தீட்சிதர்கள் சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை இன்று நீதிபகிள் மிஷ்ரா, சந்துரு ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் விசாரணை செய்தது. அப்போது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கக்கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமி, நீதிபதிகளிடம் மனு கொடுத்தார்.

சுப்பிரமணிய சாமியின் மனுவை நீதிபதிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போது, இலங்கை பிரச்சனைக்காக கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீரென நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து, சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். மேலும் முட்டை, தக்காளி ஆகியவற்றை அவர் மீது வீசியதுடன், அவர் சேர்ந்த சமுதாயத்தையும் கடுûமான வார்த்தைகளால் திட்டிய வக்கீல்கள் சிலர் அவரை தாக்கினார்கள்.

அப்போது சுப்பிரமணிய சாமியின் தலையில் இரண்டு முட்டைகள் விழுந்தன. சுப்பிரமணிய சாமி மீதான இந்த தீடீர் தாக்குதலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. நீதிமன்ற வளாகத்திலேயே தாக்குதல் நடக்கிறது. இதற்கு காரணமான தமிழக அரசை கலைக்க வேண்டும். என் மீதான தாக்குதலை சும்மா விடமாட்டேன். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டீல் வழக்கு தொடருவேன் என்றார்.

இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 

StumbleUpon.com Read more...

ஐ.நா. மட்டுமல்ல எந்தக் கொம்பனும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே

ஐ.நா. மட்டுமல்ல எந்தக் கொம்பனும் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்ற தொனியில் ராஜபக்சே கூறியுள்ள செய்தியை படியுங்கள் 
 
 
இலங்கை பிரச்சனையில் ஐ.நா. உட்பட எந்த ஒரு நாடும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கை பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒர அனைத்துலக நாடுகளும் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சே,

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளும் சொல்கின்றன. ஐ.நா.சபை மூலம் போரை நிறுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.

இலங்கை பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. ஐ.நா. சபை உள்பட எந்த ஒரு நாடும் இலங்கை விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்.

மக்களை பாதுகாக்கும் முறைகள் பற்றி இலங்கைக்கு எந்த நாடும் சொல்லித்தர வேண்டியதில்லை. நாங்கள் மக்களை எப்படி பாது காக்கிறோம் என்பதை அறிய வேண்டுமானால், ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் இங்கு வந்து பார்த்து விட்டுப் போகட்டும்.

இலங்கை மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க மாட்டோம். அதற்கு என் தலைமையிலான அரசாங்கம் ஒரு போதும் இடம் கொடுக்காது என்றார்.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP