சமீபத்திய பதிவுகள்

இந்த வார இணைய தளம்

>> Sunday, January 31, 2010


 
 

 ஆன்லைன் கீபோர்டு
இங்கு சொல்லப்பட இருக்கிற கீ போர்டு இசை அமைக்கப் பயன்படும் கீ போர்டு. பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக் கீ போர்டுகளை வாங்கித் தருகின்றனர். சிலர் அருகில் கற்றுக் கொடுக்கும் மையங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி கீ போர்டை இசைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து இசை உருவாக்குவதன் முழு பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றனர். 
இது போன்ற ஆசையைத் தீர்க்கும் வகையில் ஆன்லைனில் பல விஷயங்களைக் கற்றுத் ரும் தளம் ஒன்று, கீ போர்டினையும் கற்றுத் தருகிறது. இதன் தளத்திலேயே ஒரு கீ போர்டு தரப்படுகிறது. இதில் Piano, Organ, Saxophone, Flute, Pan Pipes, Strings, Guitar, Steel Drumsமற்றும் Double Bass ஆகிய அனைத்து வாத்தியங்களிலும் கிடைக்கும் இசையைக் கற்றுக் கொள்ளலாம்; உருவாக்கலாம். இசைக்கையில் துணை புரிய ஆறு வகையான ட்ரம் பீட்ஸ் தரப்பட்டுள்ளது. இந்த கீ போர்டின் இடது பக்கம் மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. அவை Chord Mode, Play Chord மற்றும் Instructions. இந்த வழிகளில் சில கீகளைத் தேர்ந்தெடுத்து, அவை தொடர்ந்து வாசிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம். Instructions  என்ற பிரிவில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று குறிப்புகள் காணப்படுகின்றன. 
இந்த கீ போர்டில் நாம் விரும்பும் வாத்தியத்தைத் தேர்வு செய்து கீகளை அழுத்திப் பழகலாம். ஏற்கனவே கீ போர்டு இயக்கத் தெரிந்தவர்கள் இதில் இசை அமைக்கலாம். முதலில் உங்கள் சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒலி மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. 
இசையில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் உள்ள கீ போர்டு எப்படி இசை ஒலியைத் தருகிறது என்று விளையாட்டுக்காகக் கூட இதனை ஒலித்துப் பார்க்கலாம். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:  http://www.bgfl.org/index.cfm?s= 1&m=239&p=167,view_resource&id=50


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரன் இறப்பு சான்றிதழ்

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் : சி.பி.ஐ.,க்கு தரவில்லை இலங்கை
 

Front page news and headlines today புதுடில்லி : ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலை புலித் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்து எட்டு மாதங்களாகியும், அவரின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து இன்னும் சி.பி.ஐ.,க்கு வந்து சேரவில்லை.



முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், புலிகளின் தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் புலித் தலைவர் பிரபாகரனும் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றிருந்தார். ஆனால், அவரைப் பிடித்துக் கொண்டுவர முடியவில்லை என்பதால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.



இந்நிலையில், இலங்கையில் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் புலித்தலைவர் பிரபாகரன், எட்டு மாதங்களுக்கு முன், கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜிவ் கொலை வழக்கை முடிப்பதற்காக, பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை தர வேண்டும் என, இலங்கை அரசிடம் சி.பி.ஐ., கேட்டது. அந்தச் சான்றிதழ் இன்னும் இலங்கை அரசிடம் இருந்து வந்து சேரவில்லை என, தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதேபோல், ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



source:dinamalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈழம்:வெற்றி தந்துள்ள வெறி

'மகத்தான வாக்கு வித்தியாசத்தில் வென்று மறுபடியும் இலங்கை அதிபராகி இருக்கிறார் மகிந்தா ராஜ பக்ஷே!

இலங்கையில் 1972-ம் ஆண்டில் இருந்து அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் இருக்கிறது. வில்லியம் கோபல்லா, ஜெயவர்த்த னே, பிரேமதாசா, விஜேதுங்கே, சந்திரிகா குமாரதுங்கே ஆகியோரின் வரிசையில் கடந்த 2005-ம் ஆண்டு அதிபரானார் மகிந்தா ராஜபக்ஷே. 2012-ம் வருடம் வரை அவர் பதவியில் இருக்கும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் பெற்ற வெற்றியை முன்னிறுத்தி முன்னதாகவே தேர்தலை சந்தித்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய சாதனையும் நிகழ்த்தியிருக்கிறார்.

தேர்தல் முடிவில் ஃபொன்சேகா சார்ந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தொண்டர்கள்கடுமை யான விமர்சனங்களை முன்வைத்துக் கொந்தளிக் கின்றனர்.

ஐ.தே.க. செயலாளரான திஸ்ஸ அத்தனாயக்காவிடம் பேசினோம். ''இலங்கையில் தேர்தல் ஜனநாயகமான முறையில் நடக்காது என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். அதனால் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பார்வை யாளர்களை தேர்தலைக் கண்காணிக்க வரும்படி அழைத்திருந்தோம். அவர்கள் வராத நிலையில்... ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தேர்தலைக் கண்காணித்தனர்.

இந்தத் தேர்தலில் சிறுபான்மை இனமான தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு இருந்த 35 லட்சம் வாக்குகள் ஃபொன்சேகாவுக்கே ஆதரவாக இருந்தன. அதனால் சிறுபான்மை வாக்குகளை திட்டமிட்டுத் தடுத்தது ராஜபக்ஷே தரப்பு. தேர்தல் தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர், மாணிக்பாய், கோண்டாவில் போன்ற தமிழர் பகுதிகளில் அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தொடர்ச்சியாக 13 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஆவரங்காலில் உள்ள த.தே.கூ எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீட்டிலும் தாக்குதல் நடந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காகவே பேருந்து சேவைகளை சுத்தமாக நிறுத்தினர்; ரயில் சேவைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. வன்னி மாவட்டம் பண்டாரிக்குளம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது ராணுவம். கிழக்கில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கவச வண்டிகளையும் ராணுவத்தையும் நிறுத்தி, போர் சூழல் கணக்காய் மக்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மலையகத்தில் தமிழர் பகுதிகளில் மக்களின் வாக்காளர் அடையாள அட்டைகள் மொத்தமாக பிடுங்கப்பட்டு, கள்ள ஓட்டுப் போட பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 35 லட்சம்சிறுபான்மையினர் வாக்குகளில் வெறும் 6 லட்சம்வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. பதிவானவற்றில் 70 சதவிகித வாக்குகளை ஃபொன்சேகா பெற்றிருக்கிறார் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். முழு வாக்குகளும் பதிவாகியிருந்தால், தேர்தல் முடிவே மாறியிருக்கும். அதிபரின் சகோதரரான பசில் ராஜபக்ஷே, தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுவித்திருக்கிறார். வாக்கு எண்ணும் இடங்களில் எங்கள் முகவர்களை அனுமதிக்கவேயில்லை. பிற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளையும் ராஜபக்ஷேவுக்கு விழுந்ததாகக் கணக்குக் காட்டி அவரது வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியிருக்கிறார்கள்!'' என குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனார்.

'இதுகுறித்து இலங்கை அரசியல் விமர்சகர்களின் கருத்து என்ன?' என்று அவர்களிடம் பேசினோம்.

''இந்தத் தேர்தலில் சில சிங்களக் கட்சிகளையும், தமிழ்க் கட்சிகளையும் அரசியல்ரீதியாக தோற்கடித்திருக்கின்றனர் மக்கள். தற்போது ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்திய ஐ.தே.கூ இடம்பெற்றிருந்த ஜே.வி.பி., ஜாதீக ஹெல உறுமய போன்ற முக்கியமான சிங்களக் கட்சிகள், கடந்த 2005 தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஆதரவான கூட்டணியில் இருந்தன. அதோடு, தமிழர்கள் முற்று முழுதாகத் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். அப்போது ராஜபக்ஷே 50.29 சதவிகித வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றிருந்தார். எந்தப் பெரிய கூட்டணியும் இல்லாமல் தமிழர் வாக்குகளும் கிடைக்காமலேயே ரணில் 48.43 சதவிகித வாக்குகள் பெற்று மயிரிழையில் தோற்றிருந்தார். அந்தக் கணக்குடன் ஒப்பிடும்போது இந்த முறை ஜே.வி.பி., ஜாதீக ஹெல உறுமய போன்ற சிங்களக் கட்சிகள் ஃபொன்சேகாவையே ஆதரித்தன. தமிழர் வாக்கு வங்கியை வைத்திருக்கும் த.தே.கூ. அவரையே ஆதரிக்க... ஃபொன்சேகா மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றே எல்லோரும் கணித்தனர். ஆனாலும் ராஜபக்ஷே மீண்டும் ஜெயித்துவிட்டார். விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றிக்கு முழு நாயகனாக ராஜபக்ஷேவையே சிங்கள கிராமப்புற மக்கள் நினைத்ததுதான் இதற்கு முதல் காரணம். சிங்களக் கட்சிகளான ஜே.வி.பி-யின் கோட்டையாகக் கருதப்படும் திஸ்ஸமஹராம, ஐ.தே.கட்சியின் மீரிகம, ஜ.ஹெ.உறுமயவின் மொனராகலை போன்ற பகுதிகளில்கூட ராஜபக்ஷேவுக்குத்தான் மிக அதிக வாக்குகள் கிடைத்துள்ளன!

ராஜபக்ஷே தரப்பு... 'த.தே.கூட்டமைப்புடன் சில ரகசிய ஒப்பந்தங்களை ஃபொன்சேகா செய்து கொண்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் புலிகள் மீண்டும் தலை தூக்குவார்கள்...' என பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி அந்த ஒப்பந்த நகல்களையும் சிங்கள மக்களுக்கு வீடு தோறும் நோட்டீஸாக வழங்கியிருந்தது. இது சிங்கள மக்களின் இன வாதத்தைத் தூண்ட... அவர்கள் ராஜபக்ஷேவுக்கே வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலில் 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக ஃபொன்சேகா கூறியிருந்த நிலையில், 2,500 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவதாக ராஜபக்ஷே கூறியிருந்தார். இருந்தாலும் அரசு ஊழியர்களின் வாக்குகள் ராஜபக்ஷேவுக்குத்தான் விழுந்திருக்கின்றன!'' என்கிறார்கள்.

ஃபொன்சேகாவின் அடுத்த கட்ட 'மூவ்' குறித்து அவர் ஆதரவுப் பேச்சாளரான மனோ கணேசனிடம் பேசினோம். ''தேர்தலில் பல்வேறு அடக்குமுறைகளினால் ஆளும் தரப்பு வெற்றி கண்டுள்ளது. தற்போதைய நிலையில் ஃபொன்சேகாவின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை... அதனால் சில காலம் அவர் ஏதாவது ஒரு வெளிநாட்டில் வசிக்கலாம் என எண்ணுகிறார். தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டதற்காக ஒருவரை கைது செய்ய நினைப்பது ஜனநாயகத்தைக் கொல்வதற்கு சமமாகும்!'' என கொதித்தார்.

இதற்கிடையில் போர் காலங்களில் இலங்கை ராணுவத்துக்கு ஃபொன்சேகாவின் மருமகனின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஆயுத பேரங்களில் பெருமளவு ஊழல் இருப்பதாகச் சொல்லி அவரையும் அவர் மருமகனையும் கைது செய்யும் முடிவிலிருக்கிறாராம் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே. இந்த ஆயுத பேர குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே நாம் ஜூ.வி-யில் எழுதியுள்ளோம்!

தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கத்திடமும் பேசினோம். ''ஏற்கெனவே மூன்று தசாப்த காலமாக இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இது மிகவும் கெட்ட காலம்! தமிழ் மக்களைக் கொன்று குவித்து... அதன் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராஜபக்ஷே, தற்போது சிங்களப் பேரினவாதத்தின் பெரிய ஆதரவால் அசுர பலத்துடன் அதிபராகியிருக்கிறார். இது வேதனையில் வெந்து மடியும் தமிழர்களை இன்னும் கொடுமைக்கு உள்ளாக்குவதற்கான ஆரம்பம். தமிழ் மக்களுக்கு கேடயமாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில்... இனி எங்கட தமிழ் சொந்தங்களை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் எனத் தெரியவில்லை. அதற்கான வழிகளும் புலப்படவில்லை!'' என நா தழுதழுக்க தேம்பினார் சிவாஜிலிங்கம்.

''கள் குடித்த குரங்கை தேளும் கொட்டிய கதையாக ராஜபக்ஷேவின் இந்த மறுவெற்றி அமைந்திருக்கிறது. ஒருபக்கம், தனக்கு வாக்களித்த சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காகவும், இன்னொரு பக்கம் வெற்றி கொடுத்திருக்கும் வெறியில் தன் தமிழர் வேட்டையைத் தொடரவும் ராஜபக்ஷே அரசுக்கு தூண்டுதல் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது. இந்த தருணத்திலும்கூட உலக நடுநிலையாளர்களும், அங்கீகாரத்துக்குரிய அமைப்புகளும் இலங்கை யில் நேரடியாக இறங்கி தமிழர்களின் நேற்றைய - இன்றைய நிலைமை குறித்த உண்மைகளை ஆராயாவிட்டால், மிச்சம் மீதியுள்ள தமிழர்களின் 'நாளை' என்பது மிகப் பெரிய அவலமாகிவிடும்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் உள்ள நடுநிலையாளர்கள்.

துரோகமும் பாவமும் கூத்தாடும் அந்த மண்ணில் அடுத்து என்னதான் நடக்குமோ?

- மு.தாமரைக்கண்ணன்   
 

source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP