சமீபத்திய பதிவுகள்

இந்த காமெடிக்குத்தான் நேரடி விவாதம்ன்னு பெயரோ?

>> Saturday, July 31, 2010




StumbleUpon.com Read more...

கணிணி கேள்வி - பதில்


கேள்வி : சில கீகளை மட்டும் ஏன் டாகிள் கீ என்று சொல்கிறோம். அதன் தன்மையை வைத்தா? அல்லது வேறு சிறப்பு பணி அந்த கீகளுக்கு உள்ளதா?
–எ.செந்தாமரை, திண்டிவனம்
பதில்: சில கீகளின் செயல்பாட்டினை வைத்து இந்த பெயர் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. 
கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில் கேப்பிடல் எனப்படும் பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock)போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன் பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lockகீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இந்த செயல்முறையில் பயன்படும் கீகளையே டாகிள் கீ(Toggle Key) என அழைக்கிறோம்.


கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில் உள்ள ஆன் ஸ்கிரீன் கீ போர்டினை எப்படிக் கொண்டுவந்து இயக்குவது? வழக்கமானவற்றில் இருந்து இது மாறுபட்டு இருப்பதாகப் படித்தேன். விளக்கவும்.
– ஆ. தமிழ்ச்செல்வி, மதுரை
பதில்:
 ஆம், விண்டோஸ் 7 இயக்கத்தில் இது சற்று மேம்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. ஸ்டார்ட் அழுத்திப் பின் சர்ச் பாக்ஸில் ணிண்டு என டைப் செய்து என்டர் அழுத்த ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கும். இதில் வலது மூலையில் உள்ள பல கீகளில் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு நியூமெரிக் கீ போர்டினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். ஒலியை இயக்கலாம், நிறுத்தலாம். விண்டோஸ் இயக்கம் தொடங்கும் போதே, இந்த கீ போர்டினையும் இயக்கத்திற்குக் கொண்டு வரும் வகையில் செட் செய்திடலாம். இன்னொன்று தெரியுமா! மவுஸ் கர்சரைக் கீகள் மீது கொண்டு சென்று கிளிக் செய்து டெக்ஸ்ட்டை அமைக்கலாம்.


கேள்வி: டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களைச் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று திட்டமிடுகிறேன். இதற்கான வழிகளைத் தயவு செய்து கூறவும்.
–ஆ. மா. சிவக்கண்ணு, பொள்ளாச்சி
பதில்
: கீழே தரப்பட்டுள்ள நடைமுறை மூலம், ஐகான்களைச் சிறிதாகவும், பெரிதாகவும் மாற்றலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில்Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Advanced  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.  Item என்பதன் கீழ் கிடைக்கும் பட்டியலில் Icon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Size என்ற இடத்தில் கிடைக்கும் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி, ஐகான்களின் அளவைப் பெரிதாகவோ, சிறியதாகவோ அமைக்கலாம். மாற்றங்களை ஏற்படுத்தியபின்,  Apply  என்பதில் கிளிக் செய்திடவும். 
இதே விண்டோவில் Font மற்றும் Size என்று இருப்பதனப் பார்க்கலாம்.
இன்னொரு மாற்றத்தையும் இதில் ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஐகானுக்கிடையில் உள்ள தூரத்தினை மாற்றலாம். ஐகான்கள் திரையில் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தால், அவற்றை இன்னும் சற்று இடைவெளியில் அமைக்கலாம். Item என்பதன் கீழ் இரண்டு ஆப்ஷன்கள், Icon Spacing (Horizontal) மற்றும் Icon Spacing (Vertical), இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றைப் பயன்படுத்தி, ஐகான்கள் அமையும் இட வெளியை அமைக்கலாம். 
நீங்கள் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 வைத்திருந்தால், மேலே சொன்ன வேலை எல்லாம் தேவையில்லை. ஜஸ்ட், டெஸ்க் டாப் சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால், படங்களும் எழுத்து அளவும் சிறிது, பெரிதாவதைக் காணலாம். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், வியூ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.


கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்துகையில் கெஸ்ட் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதித்தேன். இப்போது விண்டோஸ் 7 வைத்துள்ளேன். இதில் எப்படி கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்குவது?
–கி. சியாமளா கிருஷ்ணன், சென்னை
பதில்:
 நல்ல கேள்வி. புது வீட்டில் குடி புகுந்தால் எழும் சந்தேகங்கள் போல இது உள்ளது. விண்டோஸ் 7ல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. Start அழுத்தி, கிடைக்கும் சர்ச் பாக்ஸில் "Guest Account"  என டைப் செய்திடவும். அதன் பின்னர் என்டர் அழுத்தவும். இப்போது Manage Accounts என்ற விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதில் கிடைக்கும் Guest user என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில் Turn On  என்பதில் கிளிக் செய்திடவும். உடனேயே நீங்கள் விரும்பிய வகையில் கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, அதனை நீங்கள், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம். இந்த அக்கவுண்ட் இருக்க வேண்டாம் எனில், மேலே கூறியதை மாற்றிச் செயல்படவும்.


கேள்வி: ஒருமுறை பயர்பாக்ஸ் தொகுப்பில் உள்ள ஸ்பெல் செக் வசதி குறித்து எழுதி இருந்தீர்கள். என் கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசரில் இது செயல்படுகிறது. ஆனால் பல நண்பர்களின் கம்ப்யூட்டரில் இது செயல்படுவதில்லை. இது எதனால்? மாற்று வழி உண்டா?
–பேரா. சி.வேதராஜன், போரூர்
பதில்:
 நீங்களும், உங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் பயர்பாக்ஸ் பதிப்பு குறித்த தகவல்களைத் தரவில்லை. இருப்பினும் அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் ஸ்பெல் செக் வசதியினைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு ஒன்று குறித்து அறிய நேரிட்டது. இதன் பெயர் Spellbound.  இந்த ஆட் ஆன் தொகுப்பினை இணைத்துவிட்டால், படிவங்களில் நாம் தகவல்களை நிரப்புகையிலும், டெக்ஸ்ட் அமைக்கும்போதும் என அனைத்து இடங்களிலும் ஸ்பெல்லிங் செக் செய்து திருத்துகிறது. தவற்றினைச் சுட்டிக் காட்டுகையில், வண்ணம் மற்றும் போல்டு வகை மாற்றிக் காட்டும் வகையில் இதனை செட் செய்திடலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools>Addons எனச் சென்று Get Addons டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Browse All Addons என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Mozilla Addons தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். சர்ச் பாக்ஸில் Spellbound என டைப் செய்து தேடினால் இது இருப்பது தெரியவரும். பின்னர் Add to Firefox என்பதில் கிளிக் செய்து, அது கேட்கும் தகவல்களைத் தந்து முடிக்கவும்.


கேள்வி: என் நிறுவனத்தில் பெரிய அளவில் ஒர்க்ஷீட் தயாரிக்கிறோம். இதில் குறிப்பிட்ட செல்லுக்கு அடிக்கடி சென்று கணக்கிட வேண்டியுள்ளது. திரையில் இது தெரியவில்லை என்பதால், அதற்குச் செல்ல அதிக நேரம் ஆகிறது. ஏதேனும் சுருக்கு வழி உள்ளதா?
–நா. கந்தசாமி, திருப்பூர்
பதில்:
திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? – இதுதான் உங்கள் கேள்வி, இல்லையா! இதற்கு Edit மெனு சென்று அதில் Go Toஅழுத்தலாம். அல்லது F5 கீ அழுத்தலாம். இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To  பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.


கேள்வி: மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ இரண்டு திறந்து பயன்படுத்துகிறேன். ஆனால் ஒன்றுக்குப் பின் ஒன்று அமைந்துவிடுவதனால், ஒவ்வொரு பைலை இழுத்துவிடுகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. வேறு சுருக்கமான வழிகளில் இதனை மேற்கொள்ள முடியுமா?
–என். ராஜேஷ் குமார், கோவை
பதில்:
 மானிட்டர் திரையின் நீள, அகலம் பொறுத்து இந்த பிரச்னை ஏற்படும். இதற்குத் தீர்வாக இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை www.freecommander. com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். fc_setup.zip என்ற பைல் கிடைக்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகிராமைப் பதிந்து இயக்கலாம். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இரண்டு விண்டோக்களை அடுத்தடுத்து பக்கமாகத் தருகிறது. இதனால் இரு வேறு டைரக்டரிகளில் உள்ள பைல்களை இழுத்து விடுவது எளிது. இந்த புரோகிராமினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை



source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கூகிள் போலவே தமிழில் தேடுதளம்


.




தமிழில் ஓர் இணைய தேடுதளம்

ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனைwww.searchko.in என்ற முகவரியில் பெறலாம். 
இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 
ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்) 
தேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.
இந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார். 
ஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம். 
இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
சரி, அது என்ன "சர்ச் கோ' என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். இங்கு ""கோ'' என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் கொண்டு வந்துள்ள இந்த முயற்சியை வரவேற்போம்

source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இன்டர்நெட் வழியே இலவச எஸ்.எம்.எஸ்.

 
 

மொபைல் போன் பழக்கம் வந்த நாள் தொட்டு, அதன் எஸ்.எம்.எஸ். வழியே தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, அனைவரின் அன்றாட உயிர் மூச்சு போல ஆகிவிட்டது. இதனாலேயே மொபைல் சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்., ஒரு பைசா எஸ்.எம்.எஸ். எனப் பலவகையான திட்டங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்டர்நெட் வழியே இலவசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியை WAY 2 SMS என்ற இணைய தளம் தருகிறது. இந்த தளத்தின் முகவரி http://wwwb.way2sms.com.
இதனை அணுகி, முதலில் நம் மொபைல் எண், நமக்கான பெயர் மற்றும் இமெயில் முகவரியினைக் கொடுத்துப் பதிந்து கொள்ள வேண்டும். அதன் பின் நாம் கொடுத்த மொபைல் போனுக்கு நம் அக்கவுண்ட்டுக்கான பாஸ்வேர்ட், ஒரு நான்கு இலக்க எண்ணாகத் தரப்படும். நம் இமெயில் முகவரியுடன் இந்த பாஸ்வேர்ட் எண்ணையும் தந்து அக்கவுண்ட்டுக்குள் நுழைய வேண்டும். அங்கு நாம் எஸ்.எம்.எஸ். கொடுக்க விரும்பும் மொபைல் எண்ணையும், எஸ்.எம்.எஸ். மூலம் தரப்படும் செய்தியையும் டைப் செய்து, என்டர் அழுத்தினால், செய்தி குறிப்பிட்ட போனுக்கு அனுப்பப்படும். அதிக பட்சம் 10 விநாடி நேரத்தில் செய்தி அனுப்பப்படும். செய்தி போனை அடையும் போது அதற்கான அடையாளமான அலர்ட் பஸ்ஸர் கொடுக்கப்படும். இதனை நாம் விரும்பும் நபரிடமிருந்து வரும்போது மட்டும் தருமாறு செட் செய்திடலாம். அல்லது எப்போது இந்த அலர்ட் செய்தி வேண்டுமோ அந்த வேளையில் மட்டும் கிடைக்கும்படி செட் செய்திடலாம். மேலும் ஒருவருக்கு இமெயில் அனுப்புகையில் அனுப்பும் தகவலை எஸ்.எம்.எஸ். மூலம் அவருக்கு அனுப்பலாம். அதே தளத்தில் நாம் அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்ப விரும்பும் எண்களையும், அவற்றிற்கான பெயர்களையும், மொபைல் போனில் உள்ள அட்ரஸ் புக் மாதிரி பதிந்து வைக்கலாம். இதன் மூலம் நாம் தொடர்ந்து அனுப்ப முயற்சிக்கையில் ஒவ்வொரு முறையும், தொலைபேசி எண்ணையும், பெயரையும் டைப் செய்திடும் வேலைப் பளு குறையும். மேலும் நாம் அனுப்பும் செய்திகளை சேவ் செய்து அனுப்பப்பட்ட செய்திகளாக (Sent SMS)  வைத்துக் கொள்ளும். செய்திகளை டைப் செய்து, அவற்றை அனுப்ப வேண்டிய நாள், நேரம் குறித்து சேவ் செய்து வைத்தால், குறிப்பிட்ட நாளில் அனுப்பி வைக்கும்.
மேலும் குறிப்பிட்ட ஒரு மொபைல் போன் எண்ணைத் தந்து அந்த போன் எந்த ஊரில் உள்ளது என்று கேட்டால், சிறிய மேப்புடன், ஊரைக் காட்டும். அந்த போனுக்கான மெயில் சர்வீஸ் தரும் நிறுவனத்தின் பெயரையும் தரும்.
இதே தளத்தில் இந்த வசதியைப் பயன்படுத்தி, குழு ஒன்றுக்கான எஸ்.எம்.எஸ்.செய்தியை அனுப்பலாம். இதே தளத்தில் இருந்தவாறே, உங்கள் ஜிடாக் (GTalk) மற்றும் யாஹூ! மெசஞ்சர் (Yahoo! Messenger) அக்கவுண்ட்களில் சேட் செய்திடலாம். இவ்வாறு எஸ்.எம்.எஸ்., இமெயில் மற்றும் சேட் ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் கிடைக்கின்றன.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! – 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு

>> Friday, July 30, 2010

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் இரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிகைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.

இந்த பத்திரிகைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும், இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றிபெற்றால் வக்கீல் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பரமேஸ்வரன் அளித்த பேட்டி:

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி, இலங்கைத் தமிழ் அகதி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

9 அக்ரோபர் 2009 அன்று டெய்லி மெயில் என்ற‌ பத்திரிகை, பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மீது உண்மைக்குப் புறம்பான பாரிய அவதூறு குற்றச்சாட்டு ஒன்றைப் பிரசுரித்திருந்தது. "உண்ணாவிரதியின் 7 மில்லியன் பிக் மக்" என்று தலைப்பிடப்பட்ட அந்தச் செய்தியில், திரு.சுப்பிரமணியம் தனது உண்ணாவிரத காலத்தில் இரகசியமாக பேகர்களைச் சாப்பிட்டதாக பொய்யான குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், அவரது இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையால் காவ‌ல்துறையின‌ர் பொதும‌க்க‌ளின் ப‌ண‌த்தினை விர‌ய‌மாக்க‌ நேரிட்ட‌தாக‌வும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சண் பத்திரிகை இணையத்தளத்தில், "உண்ணாவிரதி இதை விரும்பினார்" என்ற செய்தியில் மீண்டும் இதே பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று இலண்டன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், குறித்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில் பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த தவறான செய்தியைத் திருத்திக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்தார்கள்.

இரு பத்திரிகைகளும் பரமேஸ்வரனிடம் மனப்பூர்வமாகவும், முழுமையாகவும் மன்னிப்புக் கோரி இருப்பதுடன், அவரது சட்டச்செலவுகள் உட்பட கணிசமான இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளனர்.

பரமேஸ்வரன் இன்று கூறியதாவது:

"இந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால் எனது மனச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன், நான் மீண்டும் எனது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும்.

கடந்த 8 மாத காலமாக எனது வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாத சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததுடன், அந்தக் காலகட்டங்களில் எனது சொந்தவாழ்வை முடித்துக்கொள்ளும் அளவிற்குக் கூட சிந்தித்து இருக்கிறேன்.

குறித்த பத்திரிகைகள் பிரசுரித்த பொய்யான செய்திகளின் விளைவாக, என்னில் எந்தத் தவறும் இல்லாதபோதும், நான் எனது நண்பர்களை இழந்தேன். எனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டேன். அத்துடன் தமிழ் சமூகத்தினரால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.

குறித்த இரு பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அப் பத்திரிகைகள் பிரசுரித்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை எனது உண்ணாவிரத காலத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், என்னை மதித்து என்னுடன் உதவியாக நின்றவர்களுக்கும் நிருபிக்க வேண்டியது எனது கடமை என்பதை நான் உணர்ந்தேன்.

தற்பொழுது இரு பத்திரிகைகளும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அறிவித்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளன என்பதால், அந்த மக்கள் பத்திரிகைகளின் மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொள்வதுடன் நான் எந்தத்தவறும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்களென நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

ஈழத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்."

பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று தெரிவித்துள்ளதாவது:

பொய்யான குற்றச்சாட்டுக்கள் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து இந்த 8 மாதங்களாக அந்தச் செய்திகள் தமிழ் சமுதாயத்திலும் அதனைத் தாண்டியும் ஏற்படுத்திய அவப்பெயர், சந்தேகம், அவநம்பிக்கை என்பவற்றுடனேயே பரமேஸ்வரன் வாழ வேண்டி இருந்தது.

இரு பத்திரிகைகளும் இறுதியில் உண்மையை உணர்ந்து கீழிறங்கி வந்து தாம் பரமேஸ்வரனிற்கு உருவாக்கிய மனவேதனைக்கும், துன்பத்திற்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.என்றார்.

source:nerudal
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP