சமீபத்திய பதிவுகள்

இந்த வார டவுண்லோட் - புதுவகை ஸ்டிக்கி நோட்ஸ்

>> Tuesday, October 5, 2010


பொதுவாக ஸ்டிக்கி நோட்ஸ் வகையினை, கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் திரையில் தோன்றும்படி அமைக்கலாம். இதில் நாம் நினைவு படுத்தப்பட வேண்டிய விஷயங்களை சுருக்கமாக எழுதி வைக்கலாம். செல்ல வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், அனுப்ப வேண்டிய கடிதங்கள், பணம் செலுத்த வேண்டிய பில்கள் என அனைத்து வகை நினைவூட்டல்களையும் எழுதி, மானிட்டர் திரையில் ஒட்ட வைக்கலாம். தேவையில்லாதபோது நீக்கிவிடலாம்.
அண்மையில் புதுவிதமான ஸ்டிக்கி நோட்ஸ் ஒன்று கிடைக்கப்பெற்றது. இதன் பெயர் கம் நோட்ஸ் (Gumnotes)இதில் என்ன புதுமை என்றால், இந்த நோட்ஸை, டெஸ்க்டாப் மட்டுமின்றி,  எந்த புரோகிராமிலும் ஒட்டி வைக்கலாம். புரோகிராம்களுடன், குறிப்பிட்ட ஆவணங்கள் கொண்ட கோப்புகளிலும் ஒட்டி வைக்கலாம். இதனால், குறிப்பிட்ட ஆவணத்தில் ஒன்றை எடிட் செய்வது சம்பந்தமான குறிப்புகளை எழுதி நோட்ஸாக ஒட்டி வைக்கலாம். 
ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை, குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், அதனைக் குறித்து வைக்கலாம். 
இதற்கு கம் நோட்ஸ் அப்ளிகேஷனை, சிஸ்டம் ட்ரேயில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமினை (வேர்ட்,எக்ஸெல், அடோப் பேஜ்மேக்கர், பெயிண்ட் போன்ற) இயக்குகையில் அதில் நினைவூட்டல்கள் அடங்கிய நோட்ஸினை அமைக்க வேண்டும் என்றால், உடனே சிஸ்டம் ட்ரேயிலிருந்து, அதனை இயக்கி, நோட்ஸ் அமைக்கலாம்.  அடுத்த முறை, அந்த புரோகிராம் அல்லது பைலை இயக்கும்போது, இந்த நோட்ஸ் பாப் அப் முறையில் எழுந்து வந்து நினைவூட்டும்.  இதனை குறிப்பிட்ட இணைய தளத்துடனும் இணைக்கலாம். குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பார்க்கையில் நோட்ஸ் தயாரித்து ஒட்டிவிட்டால், மீண்டும் அடுத்த முறை எத்தனை நாட்கள் கழித்து அந்த இணைய தளம் சென்றாலும், அந்த நோட்ஸ் பாப் ஆகி உங்களுக்கு நினைவூட்டும். அதே போல, இமெயில் புரோகிராம்களிலும்  நோட்ஸ் ஒட்டிக் கொள்ளலாம். இந்த கம் நோட்ஸ் புரோகிராமினை இலவசமாக இணையத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இந்த தள முகவரி: http://www.gumnotes.com/

 


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

வீராங்கனைகளிடம் ரகசியத்தை கேட்ட இளவரசர் சார்லஸ்

 


புதுடில்லி : இந்திய பளு தூக்குதல் வீராங்கனைகளைப் பார்த்து, "வெற்றியின் ரகசியம் என்ன' என, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆச்சரியத்துடன் கேட்டு மகிழ்ந்தார்.

டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவியுடன் வந்து துவக்கி வைத்தார்.அப்போது விளையாட்டுகிராமத்துக்கு சென்று, அங்குதங்கியுள்ள வீரர்களை சந்தித்தார்.இங்கிலாந்து பளு தூக்குதல் வீராங்கனைகளின் பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்த சார்லஸ், திடீரென இந்திய வீராங்கனைகள் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கிருந்த 58 கி.கி., "நடப்புசாம்பியன்'  ரேணுபாலா தேவி,சந்தியா ராணி, மோனிகா தேவி ஆகியோரை சந்தித்த அவர்,"உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?' எனக் கேட்டு வியந்துள்ளார்.


இதுகுறித்துபளு தூக்குதல் அணியின் மானேஜர் சீனிவாஸ் ராவ் கூறியது:இங்கிலாந்து பளு தூக்குதல் வீராங்கனைகளுடன் சார்லஸ் பேசிக் கொண்டு இருந்தார். இதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென ஆச்சரியப்படும் விதமாக, அவர் எங்களை நோக்கி வந்தார். பின் எங்களுக்கு கைகொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.அருகில் இருந்த ரேணுபாலா தேவியை பார்த்து,"" பொதுவாகஇந்திய அணியினர் பளு தூக்குதலில் அதிக பதக்கங்களை வெல்கின்றனர். இந்த வெற்றியின் ரகசியம் என்ன,'' என்றார். நமது வீராங்கனைகள் பளு தூக்குவதை பார்த்து, இளவரசரின் மனைவி கமீலா பார்க்கரும்,ஆச்சரியப்பட்டார். சுமார் 20 நிமிடம்அங்கிருந்த சார்லஸ், பின் வீரர்களுக்கான வசதிகள் குறித்து மகிழ்ச்சிதெரிவித்தார். இவ்வாறு சீனிவாஸ் ராவ் தெரிவித்தார். 



source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஆயிரம் மடங்கு வேகத்தில் அழியும் இயற்கை: 6வது அழிவுக்கு ஆயத்தமாகும் பூமி

குன்னூர் : "ஒரு வினாடிக்கு ஒரு கால்பந்து மைதான அளவுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன,' என ஓசோன் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஓசோன் தினம் மற்றும் பல்லுயிர்ச் சூழல் ஆண்டு சிறப்பு கருத்தரங்கு குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. மரியகொரட்டி மார்ட்டிஸ் தலைமை வகித்தார். துணை முதல்வர் அருட்சகோதரி.ஷீலா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பெள்ளி, செயலர் ராஜூ கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


கடந்த 1980களில் அன்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் முதன் முதலில் கண்டறிந்தனர். இதன் வழியாக ஊடுருவி பூமிக்கு வரும் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்பட்டன. ஏர்கண்டிஷன் கருவியில் இருந்து வெளியேறும் குளேரோபுளோரோ கார்பன் தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழ காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.கடந்த 1984ல் மான்ட்ரீயல் நகரில் நடத்தப்பட்ட உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் 158 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று குளோரா புளோரா கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதன் விளைவாக ஓசோன் ஓட்டை பெருமளவு அடைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.ஓசோன் பிரச்னையில் இருந்து தப்பித்த பூமி, இன்று புவி வெப்ப பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. பூமி தன்னுடைய 460 கோடி ஆண்டு வரலாற்றில் இதுவரை ஐந்து முறை மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது ஆறாவது முறையாக மிகப்பெரிய பேரழிவை சந்திக்க பூமி தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறது; அதற்கான அறிகுறிகள் தற்போது தெரியத் துவங்கியுள்ளன.


தற்போது பூமியிலுள்ள உயிரினங்கள் 1,000 மடங்கு வேகத்தில் அழிந்து வருகிறது; அடுத்த நூற்றாண்டில் 10 ஆயிரம் மடங்கு வேகத்தில் அழியும். ஐ. நா,. சபையின் இயற்கை பாதுகாப்பு குழு அறிக்கை படி, உலகில் உள்ள பறவை, பாலூட்டி, மெல்லுடல் வகை உயிரினங்கள், கடல் ஆமைகள் என பரவலாக உள்ள உயிரினங்களில் குறிப்பிட்ட சில வகை உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.மேலும், 75 சதவீத உணவுத் தாவரங்கள், 25 சதவீத மீன் இனங்கள், 30 சதவீத கடல் பஞ்சுகள் தவிர ஒரு வினாடிக்கு ஒரு கால்பந்து மைதான அளவுள்ள காடுகள் உட்பட இயற்கை வளங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. 3,000 வகையான உணவுத் தாவரங்களில் தற்போது 150 வகை மட்டுமே பயிரிடப்படுகிறது. 8 அடி அகலமுள்ள உலகின் மிகப்பெரிய பூக்கள், இரும்பு கம்பியை விட பலமுள்ள வலை பின்னும் ஒரு வகை சிலந்தி என பல கீஸ்டோன் உயிரினங்களும் அழிவை எதிர்கொண்டு வருகின்றன. இயற்கைக்கு எதிரான மனிதர்களின் செயல் தான் இந்த பேரழிவுக்கு காரணம். மனித சமுதாயம் விழித்து கொள்ளாவிட்டால் இயற்கை வளங்களோடு, மனித வளமும் மறைந்து போகும். இவ்வாறு, கருத்துகள் கூறப்பட்டன. கல்லூரி பேராசிரியை சுஜாதா நன்றி கூறினார்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP