சமீபத்திய பதிவுகள்

வந்துவிட்டது கிளவ்ட் கம்ப்யூட்டிங்

>> Friday, December 11, 2009


 
 


செலவைக் குறைத்து, பல்வேறு வசதிகளை எங்கும், எப்போதும் தரக்கூடிய கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இந்தியாவில் தொடங்கிவிட்டது. இன்டர்நெட் வழியாகத் தரப்படும் எந்த சேவையையும் கிளவுட் கம்ப்யூட்டிங் என அழைக்கலாம் என்றாலும், இன்டர்நெட் வழி கம்ப்யூட்டிங் பணிகளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் வசதிகளைத் தருவதே கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகும். அடிப்படைக் கட்டமைப்பு சேவை, கம்ப்யூட்டர் இயக்க மேடை சேவை மற்றும் சாப்ட்வேர் தொகுப்பு பயன்பாடு வழங்கும் சேவை என கிளவ்ட் கம்ப்யூட்டிங் மூன்று பிரிவுகளாக இயங்குகிறது. 


அடிப்படைக் கட்டமைப்பு(InfrastructureasaService):சேவையில் நிறுவனம் ஒன்று மற்ற நிறுவனங்களுக்குத் தேவையான சர்வர்களை நிறுவி, கட்டணம் பெற்றுக் கொண்டு அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கும். இதனை சேவைக் கட்டணம் செலுத்தி எடுக்கும் நிறுவனம் இதில் தனக்குத் தேவையான புரோகிராம்களை அந்த சர்வர்களில் பதிந்து இயக்கிக் கொள்கிறது. நாம் மின்சாரம், குழாய் வழி கேஸ், தண்ணீர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைப் போன்றது. இயக்க மேடை சேவை (Platformasaservice) என்பது கட்டணம் செலுத்தும் நிறுவனத்திற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களையும், சாப்ட்வேர் உருவாக்கிப் பயன்படுத்தத் தேவையான டூல்களையும், சேவை வழங்குபவர் தன் சர்வர்களில் நிறுவி வழங்குவது. இன்டர்நெட் வழியாக இந்த சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் தொகுப்புகளை இந்த மேடை அமைப்பில் உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ளும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துவது போன்றது இந்த சேவை.
சாப்ட்வேர் தொகுப்பு (Softwareasaservice) பயன்பாடு வழங்கும் சேவை என்பது, இந்த சேவையை வழங்குபவர் கம்ப்யூட்டர் கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைத் தன் சர்வரில் அமைத்து, அவர்களுக்குத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அனைத்து உதவிகளையும் தருவது. ஒரு நிறுவனத்திற்கான இமெயில் சேவை, ஸ்டாக் இயக்கம், டேட்டா கணிப்பு போன்ற சேவைகள் அனைத்தும் இதில் அடக்கம். 
இவற்றில் என்ன வசதி என்றால், ஒரு வாடிக்கையாளர் கட்டணம் செலுத்தியபின் எந்த நேரத்திலும் சேவையைப் பெற முடியும். கம்ப்யூட்டர் கிராஷ் அல்லது டவுண் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. அது சேவையைத் தருபவர் பொறுப்பு. வாடிக்கையாளருக்கு சர்வர், கம்ப்யூட்டர், சாப்ட்வேர் போன்றவற்றிற்கான முதலீட்டுச் செலவு இல்லை. தேவையான அளவிற்கு சேவையைக் கேட்டுப் பெறலாம். எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திப் பின் விட்டுவிடலாம்.
தற்போது இத்தகைய கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மாதக் கட்டணம் பெற்றுக் கொண்டு அந்த காலத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்கி வரும் பழக்கத்தினை மேற்கொண்டுள்ளனர். 
இந்த சேவையை வழங்குபவரும் ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேரினைப் பதிந்து அதனைப் பல வாடிக்கையாளருக்கு வழங்க முடியும். எனவே இங்கு குறைவான செலவில் இரு தரப்பினரும் பயனடைய முடிகிறது. இன்றைய இன்டர்நெட் வசதி இதற்கு ஆதாரமாகவும், அடிப்படை இயக்கத்தைத் தருவதாகவும் அமைகிறது. இரு தரப்பினரும் எந்த நேரத்திலும் தங்கள் ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டு வர முடியும். இதனால் இருவருக்கும் நஷ்டம் ஏற்படப் போவதில்லை.
பயன்படுத்துபவருக்கென எந்த கம்ப்யூட்டரும் சாப்ட்வேரும் தேவையில்லை. அதனை இயக்கும் அறிவு மற்றும் தொழில் நுட்பம் தேவையில்லை. சிஸ்டம் என்னவாகுமோ என்ற பயம் தேவையில்லை. எங்கு சென்றாலும் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் சேவையைப் பயன்படுத்தித் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும். இத்தகைய சேவை சிறிய அளவில் இயங்கும் அனைத்து பிரிவு நிறுவனங்களுக்கும் உகந்ததாகும். இந்த வகையில் இதுவரை மேற்கொண்டு வந்த முதலீட்டுச் செலவு, தேய்மானச் செலவு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றனர். 
கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையைப் பயன்படுத்தும் ஒரு விற்பனை நிறுவனம், தான் விற்பனை செய்த பொருளுக்கான பில்லைக் கூட இந்த சேவை மூலம் தயாரித்து வழங்க முடியும். அதே நேரத்தில் வாடிக்கையாளரின் முகவரியைத் தன் விற்பனைப் பொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பி குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி செய்திடவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். பொருள்கள் விற்பனையாவதை மொத்தமாக அறிந்து, காலியாகும் பொருட்களைக் கொள்முதல் செய்திட நினைவூட்டும் செய்தியையும் இந்த சேவை மூலம் பெறலாம்.
தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிபவர்களின் வேலை நாட்கள், ஊதியம், வேலைத் திறன், தொடர்புடைய உற்பத்தித் திறன் என அனைத்தையும் இன்டர்நெட் இணைந்த ஒரு கம்ப்யூட்டர் மூலம் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வழி பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை இந்தியாவில் தற்போது கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணையுடன் இந்தியாவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் டேட்டா சென்டர், "ரிலையன்ஸ் கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வீசஸ்" என்ற பெயரில் இந்த சேவையை வழங்குகிறது.
இன்றைய அளவில் இந்தியாவில் மூன்றரைக் கோடி வர்த்தகர்களும், உற்பத்தியாளர்களும் தங்கள் வருமானத்தில் 0.5 முதல் 4 சதவிகிதம் வரை தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் முதலீடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதியை அவர்களின் தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுத்த கிளவுட் கம்ப்யூட்டிங் உதவுகிறது. அண்மையில் எடுத்த ஆய்வில் வரும் 2011 ஆம் ஆண்டில் 40 சதவிகித தகவல் தொழில் நுட்ப வேலைகள், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் தான் மேற்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது. 
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் கட்டமைப்பு மற்றும் சாப்ட்வேர் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. இதற்கென மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
ஏன், இந்த சேவைக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் எனப் பெயர் வந்தது? அனைத்து சேவைகளும் இன்டர்நெட் வழியே மேற் கொள்ளப்படுவதால், இணைய வைய வெளியில் மேகமே பிரதானமாக உள்ளதால் இது கிளவ்ட் கம்ப்யூட்டிங் எனப் பெயர் பெற்றது


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

காலை வாரும் தமிழ் அமைப்புகளும் – தாயக தாகத்தில் ஒன்றுபட்ட தமிழரும்

 

  •  

தமிழர் தாயகத்தின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் ஏறக்குறைய இந்த உலகப் பந்தை கடந்து சென்றுள்ளன. ஆயினும் மாவீரர் நாள் என்ற வரலாற்று பதிவு உருவான நாள் முதல் எனது அன்பார்ந்த தமிழீழ மக்களே என ஒலிக்கும் அந்த மெல்லிய குரல் இம்முறை நேரடியாக ஒலிக்காமை என்னவென்று விபரிக்கமுடியாத ஒரு உணர்ச்சியையும் கிளப்பியதையும் மறுக்கமுடியாது. இந்த நிலையில் தமது தேசியப் புதல்வர்களுக்கு வணக்கத்தை செலுத்த வந்த புலம்பெயர் தமிழ் மக்களின் தொகையும், உணர்ச்சியும் ஒரு தீர்மானமாக மாறி இருந்தமை இங்கு நோக்கத்தக்கது.

புலம் பெயர் நாடுகளில் தற்போது பேசப்படும் நாடுகடந்த அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம், மற்றும் மக்களவை போன்ற விடயங்களை விட கடந்த 27, 28, 29 ஆகிய நாட்களில் புலம் பெயர் மக்கள் மாவீரர் என்ற புனித வாக்குப் பெட்டிகளுக்கு முன்னால் நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் வலுவுள்ளது. கனடா முதல் ஒஸ்ரேலியா வரை பரந்து கிடக்கும் இந்த மக்கள் சக்தி ஏகமனதாக நிறைவேற்றிய மாவீரர் தீர்மானம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட ஆயிரம், ஆயிரம் மடங்கு வீரியமுள்ளது. அது மட்டுமல்ல இந்த முறை மாவீரர் தினத்திற்கு வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாவீரர்தின செய்திகள் வெளிவந்த கசப்பு போன்ற நிலமை இனிமேல் உருவாகக் கூடது என்ற ஒரு எழுதப்படாத தேசிய நலன் சார்ந்த தீர்மானத்தையும் மக்கள் கூட்டம் நிறைவேற்றியதையும் இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டும்.

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ராம் ஆகியோரின் ஊடாக வெளிவந்த இந்த மாவீரர்தின செய்திகள் குறித்து இனி ஆய்வு செய்வதற்கு பதிலாக புலம் பெயர் மக்களின் இந்த மாவீரர்தின தீர்மானத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டியது ஒரு தார்மீகக் கடமையாகிறது.

கடந்த 27 ஆம் திகதியன்று ஐரோப்பிய நகரங்கள் மற்றும் கனடாவின் ஆங்காங்கே ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் மெளனமாக நிறைவேற்றிய இந்த மாவீரர் தீர்மானம் அரசியல் அடிப்படையில், வரிவடிவில், கடதாசிகளில் பொறிக்கப்படும் வாசகங்களைக்கொண்ட தீர்மானத்தைவிட வலுவானது என்பது உறுதி. தேசிய நலனை முன்னிறுத்தி தமிழர் தாயகம் நடத்திய விடுதலைப் போராட்டம் பெரும் வேதனையான பல கட்டங்களைத்தாண்டி இன்று ஒரு உறைநிலைக்கு வந்தாலும் அந்த தேசிய நலனை கைவிடுவதற்கோ அல்லது அதனுடன் சமரசம் செய்துகொள்வதற்கோ தமிழினம் இன்னும் தயாரகவில்லை என்பதையும் இந்த நகர்வு எடுத்துக் காட்டியுள்ளதையும் நினைவில் நிறுத்தவேண்டும்.

கடந்த 27ஆம் திகதியன்று புகழிடமக்கள் சக்தி வெளிப்படுத்திய இந்த அபிலாசையை உள்வாங்கி அதற்கான செயற்திட்டத்தை வகுக்க வேண்டியதற்கான காலம் இன்னும் 12 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் நினைவுறுத்தவேண்டும். இதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டின் மாவீரர் நாளில் தமிழர் தாயகத்தின் சுதந்திர வாழ்வுக்காக என்ன செய்தீர்கள் என அசரீதியாக ஒலிக்கப்போகும் மாவீரர் குரலுக்கு ஒற்றுமையாக நின்று பதிலளிக்க வேண்டியதும் அனைத்து தமிழ் அரசியல் இயந்திரங்களின் பொறுப்பாக சுமத்தப்பட்டுள்ளது. வேடிக்கையாக குறிப்பிடப்படும் தமிழ் நண்டுக்கதை போல ஒருவர் காலை ஒருவர் வாரிவிடும் போக்கும் பனிப்போர் போன்ற உறைநிலை விரோதமும் இன்னமும் தொடர முனைவதும், மக்களின் இந்த மாவீரர் தீர்மானத்திற்கு முறனானது.

இலங்கைத்தீவில் தமிழ்த்தேசியத்தின் இருப்பு நிலைக்கு பெரும் ஆப்படிக்கும் வேலைகள் சிங்கள தேசத்தின் அரசதலைவர் தேர்தலை மும்முரப்படும் நிலையில் நான் பெரிது, எமது செயற்பாடு பெரிது, எமது தீர்மானம் பெரிது என செயற்படாமல் எம் தேசத்தின் இருப்பு பெரிது, அந்த மக்களின் சுதந்திர வாழ்வியல் பெரிது என செயற்படுவதையே இந்த மெளனமான மாவீரர் தீர்மானத்தினூடாக புலம் பெயர் மக்கள் வெளிப்படுத்தியமை உள்வாங்கப்படவும் வேண்டும். இந்த நிலையில் இந்த முறை எம்மை தொடர்ந்து சென்ற மாவீரர் தினம் என்பது வெறுமனவே தேசத்தை நினைவுறுத்தும் நாள் மட்டுமல்ல எம் தேசத்தை இனிவரும் காலத்தில் நிலையாக இருத்த வேண்டியதற்கான உறுத்தலையும் கொடுத்த ஒரு நாள் என்பது சந்தேகமில்லை.

anna-seatigerகடந்த 30 ஆண்டு காலமாக எமது தேசவிடுதலைக்காக போராடி வித்துக்களாய் மண்ணில் வீழ்ந்து விடுதலைக்கு உரம் சேர்த்து மண்ணினுள் உறங்கும் மாவீரர்களின் தியாகங்களை புரம்தள்ளியோ அல்லது தன்னலம் கருதாது தன் இனம் வாழவேண்டி விடுதலைப் போரை ஆரம்பித்து அதை முன்னின்று நடாத்தி அளப்பரிய சாதனைகளை நிலைநாட்டி தமிழர்களுக்கென்றோர் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்து நடமுறை அரசாட்சி செய்துவந்த முப்படை கண்ட முதல் தமிழன் தமிழீழத் தேசியத் தலைவர்  மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை புறம்தள்ளியோ, அன்றி ஒட்டுமொத்த தமிழர்களின் கனவான தமிழீழக் கோரிக்கையை புறம்தள்ளியோ செயற்படும் எந்த அமைப்புக்கோ, அவைகளின் செயற்திட்டங்களுக்கோ தமிழினம் இனி ஒருபோதும் ஆதரவு வழங்கத் தயாரில்லை என்பதையே இந்த மாவீரர் தீர்மானமும், அங்கு கூடிய மக்களின் தொகையும், அவர்களின் உணர்வுகளும் வெளிப்படுத்திநிற்கின்றன.

ஆகவே மக்களின் இந்த எழுச்சியும், உறுதியும் இன்னும் தாம் ஏமாறத்தயார் இல்லை என்பதையே எடுத்தியம்புகிறது. ஆதலால் அதற்கமைய மக்களி வெறுப்பை சம்பாதிக்காது, மக்களின் நேரங்களை வீணடிக்காது, மக்களின் வளங்களை வீண்விரயமாக்காது அவை அனைத்தையும் தகுந்த முறையில் தமிழ்த்தேசியத்தை கட்டியெழுப்புவதற்கு பயன் படுத்துவதையே தமிழர்கள் விரும்புகின்றனர் என்பது இந்த மாவீரர் தீர்மானத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவும் கொள்ளலாம்.

இதற்கமைய பல குழுக்களாக பிரிந்து ஆளுக்கொரு துருப்புச்சீட்டை கையில் எடுத்தவாறு தமிழரின் பிரதிநிகள் நாங்கள் என பேச்சளவில் சொல்லித்திரிவதை தவிர்த்து இதய சுத்தியுடன் தமிழர் தரப்பு பிரச்சனைகளை கையாண்டு மக்களின் விருப்பிற்கேற்ப எவை எவை எந்த எந்த நேரத்தில் செய்யப்பட வேண்டுமோ அவற்றை அந்தந்த நேரத்தில் செய்வது அவசியமாகிறது. இதைத் தவிர்த்து தொடர்ந்தும் தமது பதவி ஆசைகொண்டு சுயனலமாக தமது இருப்பையும், தமது அமைப்பையும் தக்கவைக்கும் நோக்கில் செயற்பட்டு தமிழ்த் தேசியத்தை புறந்தள்ளி நடப்பவர்கள் காலப்போக்கில் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்டுச்செல்வார்கள் என்பதையே இன்றைய காலம் உணர்த்தி நிற்கிறது.

- தமிழ்மாறன்

source:nerudal
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகள் திரும்பி வரும் நாளை நினைத்து கலங்கி நிற்கிறதா இலங்கை கடற்படை

 

இலங்கை கடற்பரப்பின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் பொருட்டு கடற்படைக்கென இஸ்ரேலிடமிருந்து ஆறு அதிவேக தாக்குதல் படகுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இஸ்ரேலுடன் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதென்று தெரிவித்த அவர், வரும் ஜனவரியில் இந்தப் படகுகள் இங்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் சமரசிங்க கூறியுள்ளார்.

புலிகளை ஒழித்துவிட்டதாக கொக்கரிக்கும் நிலையில் இந்த படகுகளுக்கான அவசியம் குறித்து காரணம் கூறுகையில், புலிகளுடனான கடல் வழி தாக்குதல்களின் போது கடற்படைக்குச் சொந்தமான சில தாக்குதல் படகுகளை தாம் இழந்துவிட்டதால் அவற்றை ஈடு செய்து வலுப்படுத்தவே புதிய படகுகள் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களில் விமானங்களை, ஹெலிகளை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனும் விமானப் படைத் தளபதியுடனும் ஆலோசித்து தாங்கள் ஆலோசிக்கின்றார்களாம். புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் மனைவியும், குடும்பத்தினரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாகவும் கூறிய அவர் அவர்கள் தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

யார் வரவை எண்ணிக் கலங்கியுள்ள இலங்கை அரசு தற்ப்போது தனது கடற்பலத்தை அதிகரித்து வருகிறது என்பது மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது.



source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிச்சைக்காரன் வருகிறான் உஷார் தமிழா உஷார்

 

  •  

எங்கள் குஞ்சுகளின் ரத்தம் காயமுன்னர் நினைவுச்சின்னம் அமைக்கிறானாம் கொடுங்கோலன் மகிந்தா. கொடிய சிங்களத்திகள் றபான் அடித்து நாட்டியம் ஆடுகிறாள்களாம். மடுவில் மானங்கெட்ட மடைத்தமிழச்சி பொட்டு வைக்கிறாளாம். நெஞ்சு பொறுக்குதில்லையே. அடேய் முப்பத்தையாயிரம் போராளிகளே இந்த மானங்கெட்ட தமிழினத்திற்காகவா உங்கள் இன்னுயிரைக் கொடுத்தீர்கள். தாங்க முடியவில்லையடா சில தாசித் தமிழினம் செய்யும் கூத்துக்களை.

vilippu-nerudalதமிழன் வீடெல்லாம் வோட்டுக் கேட்டு வருகிறான் கொடுங்கோலன் மகிந்த மகிந்த. உஷார் தம்பி உஷார். மீண்டும் ஒரு ஆறு வருஷம் பேயாட்சி புரிவதற்கு வாக்ககுக் கேட்டு வருகிறான்.

தாங்கமுடியுமா தமிழினத்தால் துரோகிகள் எல்லாம் மகிந்தனின் பக்கமாம் மற்றவை இன்னும் தீர்மானிக்கவில்லையாம். அடே தமிழ்ப் அரசியல்வாதிப் பிசாசுகளே! உங்கடை குடும்பம்… உங்கடை பிள்ளை… உங்கடை மச்சான் … உங்கடை மாமன்….. உங்கடை மச்சினி என்று சொத்து சேர்த்தது போதுமடா தமிழையும் கொஞ்சம் வாழவிடுங்களன்டா…. எல்லாம் முடிந்துவிட்டது தோற்கப்போகிறோம் என்று தெரிந்த கணத்தில் கூட ஆயுதத்தை எறிந்துவிட்டு சிங்களவன் காலை நக்கி கிடவாது வெடிகுண்டு கட்டி வெடித்து மடிந்தானே அந்த தியாக மாவீர செல்வங்களையும் நினையுங்கடா.

மானங்கெட்டவனே கருணா.. ஈனப்பிறவி பிள்ளையானே.. கேடுகெட்ட இளம்பரிதி சுரணை கெட்ட பாப்பா சிந்தியுங்கடா ஈனப்பிறவிகளே. டக்ளசும் சித்தார்த்தனும் கூட ஸ்ரீதரனும் கூட நல்லவங்களடா. அவங்கள் கொண்ட கொள்கையிலை அன்றிலிருந்து மாறாமல் இருக்கிறாங்கள். நீங்கள்தானடா ஈனப்பிறவிகள் உங்களால் எத்தனை போராளிச் செல்வங்கள் வெடிகுண்டு கட்டி வீரச்சாவு அடைந்தார்கள். அவர்களது ஆத்மா உங்களை ஒருநாள் கொன்று போடுமடா. டேய் ஆஞ்சிநேயன் என்ற இளம்பரிதி பசாசே மானம் ரோசம் சூடு சொரணையில்லா ஈனப்பிறப்பே… யாழ்ப்பாணத்திற்கு வாறியாம் வாடா உனக்கு ஈனச்சாவு யாழ்ப்பாணத்திலைதானடா. 

அண்ணன் எப்ப போவான் திண்ணையெப்ப காலியாகும் என்று காத்திருந்த களவாணிகளே! தமிழன் ஆயுட்காலமும் சிங்களவனின் அடிமைதானாடா. ஈனப்பிறவிகளே மகிந்தனி கால் கழுவி தீர்த்தம் குடிக்கும் நீங்கள் எல்லாம் தமிழச்சி வயிற்லில் தானாடா பிறந்தீர்கள். கேடு கெட்ட நாய்களே…! புது மாத்தளனின் அம்பாந்தோட்டையான் வந்து நினைவுச்சின்னம் திறக்கிறான். அதுக்கு மட்டக்களப்பு எட்டப்பன் அது தமிழரை வென்ற நினைவுச்சின்னம் இல்லையென்கிறான். வன்னியிலை சிங்களவனோடை தமிழன் சண்டை பிடிக்காமல் பறங்கியனாடா சண்டை பிடிச்சவன். மானங்கெட்டவனே மகிந்தவின் யூறின் வாங்கி தினம் குடியடா உனக்குள்ளும் சிங்கள ரத்தம் உருவாகும். ஈனப்பிறப்பே சிங்களவனுக்கு உன் தாயை தங்கையை கூட்டிக் கொடுப்பாயோடா. 

ஏதோ இப்போது கூட்டமைப்பையாவது நாம் நம்பியிருக்கிறோம். அதுவும் குட்டையில் ஊறிய மட்டைதானென்று நிரூபிக்காமல் விட்டால் சரி. ஐயா பெரியோரே… எப்படியாவது பேயையும் சகோதரப் பேய்களையும் நாட்டைவிட்டு அனுப்பிடுங்கள்.. அதற்கு எந்த வேப்பிலை வேண்டுமானாலும் அடியுங்கள் தாங்க முடியவில்லையடா..

- நெருடலுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்


source:nerudal


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP