சமீபத்திய பதிவுகள்

டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்

>> Tuesday, May 4, 2010


 
 


 


நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம். நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.
இப்படி நம் கம்ப்யூட்டரிலிருந்து பைல்கள், ஒரே பெயரிலோ, அல்லது வெவ்வேறு பெயர்களிலோ, கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதனை எப்படி நீக்குவது? சில வேளைகளில் பெயர்களை மாற்றிவிட்டால், டூப்ளிகேட் பைல்களை நீக்குவது எப்படி? இதற்கென புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Duplicate Finder. இதன் மூலம் டூப்ளிகேட் போட்டோக்கள், டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட்ஷீட்கள், எம்பி3 பாடல்கள் மற்றும் பலவகையான டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்கலாம்.
இதனை http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல்; அளவும் சிறியதுதான். மேலும் விரைவாக இன்ஸ்டால் ஆகிறது. பின் இதனை இயக்கி பைல்களை அடையாளம் கண்டு அழிக்கலாம்.
1. இது மிகத் திறமையான தேடும் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது. அதன் மூலம் பைல்களை அதன் பைட்களில் தேடுகிறது. இது பைனரி தேடல் என்பதால், விரைவாக பைல் கண்டறியப்படுகிறது. முழு பைலும் ஒரே மாதிரியான விஷயத்தைக் கொண்டிருக்கின்றனவா என்று கண்டறியப்படுகிறது.
2. பைல்களை அவற்றின் பெயர், அளவு போன்றவற்றின் மூலமும் கண்டறிகிறது.
3. குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களிலும் பைல்களைத் தேடி அறிகிறது.
4. சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் பாதுகாக்கிறது. டூப்ளிகேட் பைல்களை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புகிறது. அல்லது நம்முடைய செட்டிங்ஸ் படி நீக்குகிறது.
5. சில குறிப்பிட்ட டூப்ளிகேட் பைல்களை, பைல்களின் பெயர்களுக்கு முன் சிறிய எழுத்துக்களைச் சேர்த்து அமைக்கிறது. அதன்பின் எந்த பைலை டெலீட் செய்வது என்று நாம் ஒதுக்கலாம்.
6. இதனைப் பயன்படுத்த நல்ல வசதியான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது.
7. யூனிகோட் முறையில் எழுதி அமைக்கப்பட்ட பைல்களையும் கையாள்கிறது. இதனால் சீனம், தமிழ், அரபி மொழிகளில் யூனிகோட் எழுத்துருக்களில் அமைந்த பைல்களையும் கண்டறிகிறது.
இந்த புரோகிராம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. முதலில் நீங்கள் எந்த போல்டர்களை சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதில் பைல்களின் துணைப் பெயர்களையும் (extensions) கீழ் விரி மெனுவில் காட்ட வேண்டும்.
இரண்டாவது நிலையில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தியவுடன், புரோகிராம் தான் கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைக் காட்டும். புரோகிராம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, எத்தனை பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டன என்பதனையும், எவை எல்லாம் டூப்ளிகேட் பைல்கள் என்றும், அவை ஹார்ட் டிஸ்க்கில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்றும் காட்டப்படும்.
மூன்றாவது நிலையில் நாம் அந்த பைல்களை என்ன செய்திட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பைல்களை அப்படியே விட்டுவிடுவது, வேறு பெயர் தருவது, இன்னொரு போல்டருக்கு அனுப்புவது, பைல்களைத் தேர்ந்தெடுத்து அழிப்பது ஆகிய செயல்பாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த புரோகிராமின் சிறப்பம்சங்கள்:
1. ஒரே மேட்டர், ஒரே பெயரில் உள்ள பைல்களைக் கண்டுபிடிப்பது
2. ஒரே படம்; ஆனால் பைல் பார்மட் வேறு (எ.கா.jpg, gif) வீடியோ (avi, mpg) பாடல்கள்(mp3,mp4) என்பனவற்றுள் கண்டறிவது.
3. டூப்ளிகேட் பைல் கண்டறியும் புரோகிராம்களில் இதுவே மிக வேகமாக இயங்கக் கூடியது.
4. மிக மிக எளிதாக இயக்கவல்லது.
5. பிளாப்பி, யு.எஸ்.பி. போன்றவற்றில் வைத்தும் இயக்கலாம்.
6. பைல் பெயர்கள், பைலின் மேட்டர், பைட் / பைட் ஒப்பீடு போன்ற பல வழிகளில் கண்டறிகிறது.
7. குறிப்பிட்ட போல்டர்களில் மட்டும் உள்ள டூப்ளிகேட் பைல்களைச் சுட்டிக் காட்டும்.
8.முக்கியமான பைல்கள் இருந்தால், அவற்றை நீக்கி மற்றவற்றைத் தேடலாம்.
9. விண்டோஸ் மற்றும் நாம் குறிப்பிடும் போல்டர்களை பாதுகாப்பாகத் தன் தேடல்களிலிருந்து ஒதுக்குகிறது.
10. தேடல் முடிவுகளைப் பதிந்து வைத்து, பின் நாட்களில் தேடும்போது உதவுகிறது.
இதன் மூலம் நாம், 1) தேவையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் டிஸ்க் இடத்தை கண்டறிந்து பயன்படுத்தலாம். 2) இதற்கென அதிக நேரம் செலவழிக்க தேவையில்லை. இதனால் நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கம்ப்யூட்டருக்கு அவ்வளவாகப் பழக்கமில்லா தவர்கள் இதனைப் பயன்படுத்தும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் பைலை அழித்துவிடக் கட்டளை கொடுத்துவிடக்கூடாது. இந்த பைல் விண்டோஸ் 95 முதல் அண்மையில் வந்த விண்டோஸ் 7 வரையிலும் உள்ள சிஸ்டங்களில் இயங்குகிறது. இதற்கான ராம் மெமரி 128 எம்பி இருந்தால் போதுமானது. ஹார்ட் டிரைவில் ஐந்து எம்பி இடம் இருக்க வேண்டும்.


source:dinamaalr


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அஜ்மல் கசாப் குற்றவாளி என தீர்ப்பு; இந்தியர்கள் இருவர் விடுவிப்பு

மும்பை தாக்குதல் வழக்கு : அஜ்மல் கசாப் குற்றவாளி என தீர்ப்பு; இந்தியர்கள் இருவர் விடுவிப்பு

 

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை குற்றவாளி என மும்பை தனி நீதிமன்றம் தனது தீர்ப்பில் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது.

சதித்திட்டம் தீட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது முதலிய குற்றச்சாட்டுகள் கசாப்புக்கு எதிராக  நிரூபிக்கப்பட்டன.

குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

அதேநேரத்தில், மும்பைத் தாக்குதலுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட பாகீம் அன்சாரி, சபாபுதீன் அகமது (இந்தியர்கள்) ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என அவர்களை இவ்வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கொடூரத் தாக்குதல்கள் நடத்தினர். இதில், 166 பேர் பலியானார்கள்.

இந்தத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். இவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்.

கசாப் மீதும், மும்பை தாக்குதல் இலக்கு இடங்களை கண்டறிந்து, தாக்குதல்கள் நடத்துவதற்கு ஏதுவாக வரைபடங்கள் தயாரித்து அளித்த பயங்கரவாதிகள் பாகீம் அன்சாரி, சபாபுதீன் அகமது (இவ்விருவரும் இந்தியர்கள்) ஆகியோர் மீதும் 11 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க அஜ்மல் கசாப் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன் நீதிபதியாக கூடுதல் செசன்ஸ் நீதிபதி எம்.எல்.தஹில்யானி அமர்த்தப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி மூவர் மீதும் அவர் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார். அப்போது மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர். அதைத் தொடர்ந்து சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் அரசு தரப்பில் நேரிலும், ஆவண ரீதியிலும் 653 சாட்சிகள் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இவர்களில் 30 பேர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகள். வழக்கின் விசாரணை மார்ச் 31 ஆம் தேதி முடிந்தது.

இந்த நிலையில், மும்பைச் சம்பவம் நடந்து சுமார் 17 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தனி நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தனது தீர்ப்பை வழங்கியது.

அதில், இந்த வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அஜ்மல் கசாப் குற்றவாளி என மும்பை தனி நீதிமன்ற நீதிபதி எம்.எல்.தஹில்யானி தனது தீர்ப்பில் அறிவித்தார்.

அதேவேளையில், மும்பைத் தாக்குதலுக்கு உதவிதாக குற்றம்சாட்டப்பட்ட பாகீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவ்விருவரையும் குற்றமற்றவர்கள் என நீதிபதி அறிவித்தார்.

முன்னதாக,  தீர்ப்புக்காக கசாப் உள்ளிட்ட மூவரும் இன்று தனிக்கோர்ட்டில் மிகுந்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.
இதையொட்டி ஆர்தர் ரோடு சிறை வளாகத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன.


source:vikatan



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கேமராவைத் திருடிய கில்லாடி 'ஆக்டோபஸ்' : விசித்திர சம்பவம்

 
நீச்சல் வீரரிடமிருந்து கேமராவைத் திருடுவதற்காக, கில்லாடி 'ஆக்டோபஸ்' ஒன்று ஐந்து நிமிடங்களாக மல்லுக்கட்டிய விசித்திர சம்பவம், அந்தக் கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

விக்டர் ஹூவாங், நியூசிலாந்தின் கடற்கரை நகரமான வெலிங்டன் கடல் பகுதியில் நீச்சலடித்துக் கொண்டிருந்தார். கேமரா மூலம், கடலடியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, மறைவிடத்திலிருந்து திடீரென ஆக்டோபஸ் ஒன்று, ஒரு கையை நீட்டியபடி வேகமாக வெளியே வந்தது.

அது தன்னைத் தான் தாக்க வருகிறது என நினைத்து, அதிர்ந்தார் விக்டர். ஆனால் ஆக்டோபஸ் இவர் எதிர்பாராத வகையில் இவர் கையிலிருந்த கேமராவைப் பிடுங்க முயற்சித்தது. அப்போது கேமரா இயங்கிக் கொண்டிருந்தது. கேமரா பிடியை இறுக்கினார் விக்டர் ஆக்டோபஸ் விடுவதாக இல்லை.கேமராவுக்காக இருவரும் மல்லுக்கட்டிய சம்பவம், அப்படியே அந்தக் கேமராவில் பதிவானது. ஐந்து நிமிட போராட்டத்துக்குப் பின், கோபம் கொண்ட விக்டர், தன் கையிலிருந்த துப்பாக்கியால் அதன் கையில் தாக்கினார். அதிர்ச்சியில் ஆக்டோபஸ் பின்வாங்கியது.விக்டரின் கேமரா தப்பியது. அதிர்ச்சியிலிருந்து மீளாத விக்டர், 'அது கடையில் திருடிக் கொண்டு ஓடும் திருடனைப் போல, என்னிடமிருந்து கேமராவைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றது' என்று கூறுகிறார்.



source:z9world.com

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP