சமீபத்திய பதிவுகள்

விசுவமடுவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 3 சகோதரிகள் உட்பட 4 பேர் பலி; 21 பேர் காயம்

>> Tuesday, January 13, 2009

 
 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் 3 சகோதரிகள் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.
விசுவமடு மகாவித்தியாலயத்தை அண்மித்த பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் மிகச் செறிவாக வாழும் பகுதி மீது எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியதால் மக்கள் பேரவலத்திற்குள்ளானதோடு வீடுகளும் பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட 3 சகோதரிகளின் தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


காயமடைந்தவர்கள் விசுவமடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான
மயூரி (வயது 19)
சுஜீதா (வயது 14)
சுஜீவனா (வயது 16)
ஆகியோருடன் முதியவர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். அவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

 
சுலக்சன் (வயது 12)
நிசாந்தன் (வயது 13)
உதயகுமார் (வயது 16)
கஜந்தன் (வயது 16)
சுகுமார் யுதயகுமார் (16)
பிரதீபன் (வயது 18)
சுகிர்தா (வயது 18)
பரமேஸ்வரி ( வயது 62)
நாகேஸ்வரி (வயது 83)
மனோகரன் (வயது 49)
சுதாகரன் (வயது 40)
குணறஜனி (வயது 37)
றுக்மணி (வயது 89)
கனகரட்ணம் (வயது 60)
உதயமலர் (வயது 57)
மார்க்கண்டு (வயது 64)
இராமசாமி மணியம் (வயது 50)
வீரபத்திரன் பரமேஸ்வரன் (வயது 62)
கணேசன் சந்திரமலர் (வயது 57)
செல்லப்பா சேதுப்பிள்ளை (வயது 100)
ஆகியோர் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 
source:puthinam

StumbleUpon.com Read more...

சிலாவத்தையில் கடும் சமர் - படையினர் உடலங்களும், ஆயுதங்களும் போராளிகளால் மீட்பு

 
முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர். இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது பெருமளவான இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் முழுமையான விபரத்தினை பின்னர் அறியத்தருகின்றோம்.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

அஷேக் மற்றும் உமர் விவாதம் - பத்ரு போர் ஒர் சிறு குறிப்பு

 

சகோதரர் அஷேக் அவர்கள்: பொதுவாக இஸ்லாமியர்கள் நம் தளத்தில்(www.tamilchristians.com) வந்து "பதிவுகளை" இட்டு, கட்டுரைகளை எழுதுவார்கள், நமக்கு பதில் எழுத முயற்சிப்பார்கள், ஆனால், நம் சகோதரர் அஷேக் அவர்கள் நம் தளத்திலுள்ள சகோதரர்களுக்கு மெயில் மூலம் (தனி மடல்) மூலம் பதிவுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். எனக்கும் இதுவரை இரண்டு தனி மடல்களை அனுப்பினார், என் முதல் பதிலை தள நிர்வாகம் பதித்தது. என் இரண்டாவது பதிலை நான் அவருக்கு அனுப்பினேன், ஆனால், இன்னும் இங்கு பதிக்கவில்லை. அவர் மூன்றாவது தனி மடலையும் எனக்கு அனுப்பியுள்ளார். சீக்கிரத்தில் அதற்கும் பதிலை பார்க்கலாம். அதற்கு முன்பாக, சகோதரர் கேல்வின் அவர்களுக்கு சகோதரர் அஷேக் அவர்களின் பதிலுக்கு என் மறுப்பை இங்கு காணலாம்.


தள சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்: யார் உங்களுக்கு தனி மடல் அனுப்பினாலோ, கேள்வி கேட்டாலோ, அல்லது நம் கட்டுரைகளுக்கு உங்களுக்கு தனியாக பதில் அனுப்பினாலோ, இந்த தளத்தில் அதனை பதிக்கவும். இதனால், தவறான விவரங்கள் உங்கள் மீது திணிப்பதை நாம் அறிய வாய்ப்பு உண்டாகும், அதே போல, நான் என் கட்டுரைகளில் ஒரு விவரத்தை தவறாக சொல்லியிருந்தால், அதற்கு தகுந்த பதிலை இஸ்லாமிய சகோதரர்கள் கொடுத்து இருந்தால், அதனை நீங்கள் இங்கு கட்டுரையாக (மார்ஸ் மேடை) பதித்தால், எல்லாரும் உண்மையை அறியவும், நான் என்னை திருத்திக்கொள்ளவும், அதே நேரத்தில் எல்லாருக்கும் ஒரு பொதுவான விவரங்கள் தெரியவும் வாய்ப்பு உண்டாகும். எனவே, எந்த இஸ்லாமிய மடலாக இருந்தாலும் இங்கு பதியுங்கள், இதர சகோதரர்களுக்கும் உண்மை தெரியவர இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.


சகோதர அஷேக் அவர்களின் ஆதங்கமும், விளக்கமும்:


இஸ்லாமை விமர்சிக்கிறவர்கள் ஒரு சில வசனங்களை மட்டும் குறிப்பிட்டு பொருள் கூறுகிறார்கள், அதனால் அவர்களால் உண்மை நிகழ்ச்சியை புரிந்துக்கொள்ளமாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட வசனத்தின் முந்தைய பிந்தைய வசனங்களையும் படித்தால் தான் உண்மை புரியும் என்றுச் சொன்னார்கள். பின்னணியை புரிந்துக்கொண்டால் தான் குர்‍ஆன் வசனங்களின் உண்மை பொருள் விளங்கும் என்றார்கள்.


குர்‍ஆன் 8ம் அதிகாரத்தின் 12ம் வசனத்தின் உண்மை பொருள் புரியவேண்டுமானால், குர்‍ஆன் 8:7 லிருந்து 13ம் வசனம் வரை படிக்கவேண்டும், மற்றும் இங்கு வரும் வசனங்கள் பொதுவான வசனங்கள் அல்ல, அவைகள் தீவிரவாதத்தை ஊட்டுவதில்லை, போர் களத்தில் சொல்லப்பட்ட அறிவுரை என்றுச் சகோதரர் அஷேக் அவர்கள் சொல்லியுள்ளார்கள். ஒரு வசனத்தின் உண்மைப் பொருளை, பின்னணியை விளக்குகிறேன் என்றுச் சொல்லி, தேவையான விவரத்தை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார் அருமை சகோதரர்.


இந்த கட்டுரையில் குர்‍ஆன் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விவரங்களைப் பற்றி நான் இக்கட்டுரையில் விளக்குகிறேன், பிறகு சில கேள்விகளையும் பார்க்கலாம். அதை படித்து, நான் சொன்ன பின்னணியில் எல்லா விவரங்களும் உள்ளதா என்று நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.


முதலில் அவர் எழுதியதை படிக்கவும்:


 
Quote:
இந்த மூன்று வசனங்களையும் மேலோட்டமாக பார்த்தால்,இந்த வசனங்களின் மூலம் இறைவன் முஸ்லிம் அல்லாதோரை கொல்லச்சொல்வதை போல் உங்களுக்கு தோன்றலாம், பலபேர் எதனால் இப்படி தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்றா,அவர்கள் இந்த வசனங்களின் தொடர்ச்சியை பார்க்காமல் இந்த(8:12) ஒரு வசனங்களை மட்டும் பார்ப்பதினால் தான். இந்த வசனங்களின் முன்னால் மற்றும் பின்னால் வரும் வசனங்களையும் சேர்த்து ஆராய்ந்தால், இந்த வசனங்களை இறைவன் எந்த சூழ்நிலையில், யாருக்கு கூறிய நற்செய்தி என்பதை நீங்கள் எளிதாக புரிந்த்து கொள்ள முடியும். இருந்தாலும் அதை பற்றி விளக்கம் அளிக்க நான் கடமை பட்டிருக்கிறேன்.விளக்கம் அளிப்பதற்க்கு முன்பு இந்த் (8:12, 9:29, 2:191) வசனங்களின் தொடர்ச்சியில் வரும் வசனங்ளை கூறி விளக்கம் அளிக்க ஆசை படுகிறேன்.


முதலில் 8:12 வசனங்களுக்கான் விளக்கத்தை பார்ப்போம். இதன் விளக்கத்தை அறிய நீங்கள் வெளியில் போய் ஆராய தேவையில்லை, அல்

குர்ஆன் 8:7 வசனம் முதல் 8:13 வரை பார்த்தாலே போதும்.அந்த வசனங்களை பார்ப்போம்.


அல் குர்ஆன் 8:7 ல், "எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தததை எண்ணிப்பாருங்கள். ஆயுதம் இல்லாத(வியாபார) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரருக்கவும் விரும்புகின்றான்".


….


மேலே கூறியுள்ள 7 முதல் 13 வரை வசனங்களை சேர்த்து படித்து ஆராய்ந்தீர்களானால், இந்த நிகழ்ச்சி ஒரு போரை குறிப்பிட்டு கூறப்பட்ட செய்தியேயின்றி, பொதுவாக உள்ள அனைத்து மக்களுக்கும் கூறப்பட்ட நற்செய்தியில்லை.உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்,


நபிகள் நாயகம்(ஸல்) (முஹமது நபி) இறைதூதராக இறைவனால் நியமிக்கப்பட்ட பிறகு,அரபு தேசத்தின் ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்,


அந்த சமயங்களில் அவர் தன் எதிரிகளுடன் பல போர்களை செய்துள்ளார்கள். என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.அப்படி நடந்த ஒரு போரை பற்றிய நற்செய்திதான் வசனம் 8:7 முதல் 13 வரை இறைவன் கூறியிருக்கிறான்.


அதாவது, முஹ்ம்மது(ஸல்) அவர்களின் எதிரிகள் இரண்டு பெரும் படைகளாக, முஹம்மது(ஸல்) அவர்களை எதிர்த்து போரிடுவதற்காக வருகிறார்கள். எதிகளோ இரண்டு பெரும் படைகளாக இருக்கிறார்கள் ஆனால் முஹ்மது(ஸல்) அவர்களின் படையிலோ குறைந்த அளவே வீரர்கள் இருந்தார்கள். அதனால் முஹ்ம்மது(ஸல்) அவர்களும், அவரின் படை வீரர்களும் போரை எண்ணி அச்சமடைந்தார்கள்.அதனால் அல்லாஹ், முஹ்ம்மது(ஸல்) அவர்களிடம் கூறுகிறான், "முஹம்மதே பயப்படாதீர்கள், அவர்களை தைரியமாக எதிர்த்து போரிடுங்கள் உங்களுக்கு உதவுவதற்க்காக ஆயிரம் வானவர்களை நான் அனுப்பி வைப்பேன்,……….


…….


இவ்வாறு அல்லாஹ் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு கட்டளை இடுகிறான்.ஒரு போரில், படை தலைவருக்கு கூறப்பட்ட செய்தியை நீங்கள் தவறாக எண்ணி விட்டு, இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதாக கூறுகிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல பலர், இன்னும் சொல்லப்போனால் சில முஸ்லிம்களும் இதை தவறாக கருதிக்கொண்டு அப்பாவி மக்களை அநியாயமாக கொல்கிறார்கள். formats mine


மேலே உள்ள அஷேக் அவர்களின் விளக்கங்களிலிருந்து:

• அது எந்த போர்?


• அதை ஆரம்பித்தது யார்?


• அந்த வியாபார ஆயுதமில்லாத கூட்டம் என்றால் என்ன?


• போர் செய்யும் போது வியாபாரிகள் எங்கே வந்தார்கள்?


• ஆயுதமில்லாமல் யார் போருக்கு வருவார்கள்?


• அப்படி வந்தவர்கள் யார்?


• பத்ரூ என்ற இடத்தில் நடந்த சண்டையை முதலில் துவக்கியது யார்?



போன்ற கேள்விகளுக்கு விளக்கம் தெரிந்துக்கொண்டால், முஹம்மது செய்த போர்களின் நிலை என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இஸ்லாம் அமைதி மார்க்கமா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம். சகோதரர் அஷேக் அவர்கள் பின்னணியை விளக்குகிறேன் என்றுச் சொல்லி மேலோட்டமாக விளக்கியுள்ளார், இந்த மேலோட்ட விளக்கத்தை வைத்துக்கொண்டு, நாம் உண்மை இஸ்லாமை அறிய முடியாது. எனவே, பத்ரூ போர் குறித்து ஒரு சிறு குறைப்பை தரலாம் என்று விரும்புகிறேன்.

பத்ரு போர் பற்றிய சிறு குறிப்பு


போரின் பெயர்: பத்ரு போர் (Battle of Badr)


இடம்: பத்ரு (மதினாவிலிருந்து 130 கிலோ மீட்டர் தூரமுள்ள இடம்)


காலம்: கி.பி. 624 மார்ச் 17, (ரமலான் 17ம் நாள்)


எத்தனை பேர் பங்கு பெற்றனர்: முஸ்லீம்கள் 313, குரைஷிகள் 900 - 1000 பேர்


போரின் விளைவு: இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றனர்.


மரணம்: 14 பேர் முஸ்லீம்கள் மரணம், குரைஷிகள் 70 பேர் மரணம் மற்றும் குரைஷிகள் 40-70 பேர் கைதிகளாக பிடிபட்டனர்.


Source: http://en.wikipedia.org/wiki/Battle_of_Badr



பத்ரு போரா அல்லது கொள்ளைக்கூட்ட சண்டையா?


மக்காவில் வாழும் போது, முஹம்மது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லிக்கொண்ட பிறகு, அவர் 10 வருடங்களுக்கு மேலாக மக்கா மக்களுக்கு தன் மார்க்கத்தைப் பற்றி போதித்தார், சிலர் மட்டும் ஏற்றுக்கொண்டனர், மக்கா மக்கள்(குரைஷிகள்) அவரை ஒரு நபி என்று ஏற்கவில்லை, அவருக்கு தொல்லை தந்தனர், கொடுமைப்படுத்தினர். அந்த தொல்லையை தாங்க முடியாமல், மக்காவிற்கு முஹம்மதுவும் புதிய இஸ்லாமிய விசுவாசிகளும் மதினாவிற்கு கிபி 622ம் ஆண்டு, இடம் பெயர்ந்தனர், இதனை ஹிஜ்ரா என்றுச் சொல்வார்கள்.


முஹம்மது வெறும் போர்கள் தான் புரிந்தார் என்று எல்லாரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், "வழிப்பறிக் கொள்ளை கூட" புரிந்துள்ளார். அப்படி வழிப்பறிகொள்ளை தான் இந்த பத்ருபோர். இதனை பத்ரு போர் என்றுச் சொல்வதை விட, பத்ரு கொள்ளை என்றுச் சொலவது சால பொருந்தும்.


முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகி, 624ம் ஆண்டு, மக்கா குரைஷி வியாரிகள் சிரியாவிலிருந்து வியாரம் புரிந்து, பொருட்களோடு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் மதினா வழியாகத் தான் வரவேண்டும், அதாவது, மதினாவிற்கு 100 க்கும் அதிமான‌ கிலோ மீட்டர் தூரமாகத் தான் அவர்கள் பிராயணம் செய்துக்கொண்டு இருந்தார்கள்.


இந்த செய்தியை கேள்விப்பட்ட முஹம்மது தன்னோடு 313 பேரை அழைத்துக்கொண்டு, அந்த வியாபாரிகளை தாக்கி, அவர்களிடமுள்ள பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டார், அதே போல, பிராயாணப்பட்டுப் போனார். இதை "போர்" என்றுச் சொல்லலாமா? அல்லது "கொள்ளை" என்றுச் சொல்லலாமா? இஸ்லாமியர்கள் தான் சிந்திக்கவேண்டும்.


முஹம்மது தன் கூட்டத்தோடு, தங்கள் வியாபாரிகளை தாக்கப்போகிறார் என்ற செய்தியை மக்காவின் குரைஷிகள் அறிந்த போது, அவர்கள் 1000 பேரோடு, தங்கள் வியாபாரிகளை காப்பாற்ற வந்தனர்.


மதினாவிற்கு 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்ரு இடத்தில் இரண்டு கூட்டமும் சண்டையிட்டது, சண்டையின் போது, முஹம்மது மண்ணை தன் கைகளால் வாரி அவர்கள் மீது இறைத்து, இதோ தூதர்கள் இறங்கி உதவி செய்கிறார்கள் என்றார். இஸ்லாமியர்கள் 313 பேர், ஆயிரம் பேரை துரத்தினார்கள், வெட்டினார்கள், வெற்றிப் பெற்றார்கள். இந்த போரில் அல்லா தன் தூதர்களைக் கொண்டு உதவியதாக அல்லா குர்‍ஆனில் சொல்கிறார்.


குரைஷிகள் 70 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் கிட்டத்தட்ட 70 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இஸ்லாமியர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.


இந்த கொள்ளையில் கிடைத்த பொருட்களில் 20% முஹம்மதுவிற்கும், இதர தர்மம் செய்வதற்கும் ஒதுக்கப்பட்டு, மீதியுள்ள 80% பொருட்கள் போரில் ஈடுபட்டவர்களுக்கு பகிர்ந்து தரப்பட்டது. இஸ்லாமியர்கள் ஏன் போரில்/இப்படிப்பட்ட சண்டையில் அதிகமாக ஈடுபட்டார்கள் என்று சிந்தித்தால், ஒன்று மட்டும் தெளிவாக புரியும், அதாவது, சண்டைபோட்டு உயிரோடு இருந்தால், பொருட்கள் கிடைக்கும், மரித்துவிட்டால் சொர்க்கம் கிடைக்கும், எப்படி பார்த்தாலும், வாழ்ந்தாலும் லாபம் செத்தாலும் லாபம்.


 
Quote:
(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்கிளிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (8:41)


இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு 10 முக்கிய காரணங்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி, இந்த கட்டுரைக்கு சம்மந்தபப்ட்டு கீழே பதிக்கிறேன்.

 
Quote:
4. முஹம்மது மக்காவின் வர்த்தகர் கூட்டத்தின் (caravans) மீது தீவிரத் தாக்குதல்கள் நடத்துகிறார்


Muhammad aggressively attacks Meccan caravans



கி.பி. 622ல் முஹம்மது மக்காவிலிருந்து மதீனா வரையிலான ஹிஜ்ராவிற்கு பிறகு சுமார் ஓராண்டிற்குப் பின்பு, அவர் மக்காவின் வர்த்தகர் கூட்டங்களின் (caravans) மீது ஆறு முறை தாக்குதல்க‌ள் நடத்தினார். மேலும் மதீனாவின் மேய்ச்சல் ஒட்டகங்களை (அல்லது கால் ந‌டைகளை) திருடிக்கொண்டு மூன்றுநாள் தொலைவில் சென்ற அரபுக் கூட்டத்தினரைத் தண்டிப்பதற்காக பின் சென்றதையும் சேர்த்து மொத்தம் ஏழு முறை தாக்குதல் நடத்தியுள்ளார்.


முஹம்மதுவிற்கு ஆதரவாக எழுதும் பிரபல மேற்கத்திய நாட்டினரும் இஸ்லாமின் சரித்திர ஆராய்ச்சியாளருமான W. Montgomery Watt என்பவர் எழுதிய இரு புத்தகங்கள் அடங்கிய சரித்திர நூல்கள் ஆரம்ப கால இஸ்லாம் பற்றியவை. பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்தினைப் பெற்ற இந்த சரித்திரம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது, "மக்காவில் முஹம்மது (1953) மற்றும் மதீனாவில் முஹம்மது (1956)" என்பனவாகும். இப்புத்தகங்கள் எவ்விதம் புவியியல் முக்கிய‌மாக அமைந்தது என்பதை விளக்குகின்றன‌.


இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் முஸ்லீம்கள்தான் முதலில் படையெடுத்தார்கள் என்பதே. ஏழு படையெடுப்புகளில் ஒன்றைத்தவிர மற்ற‌வை அனைத்தும் மக்காவின் வர்த்தகர் கூட்டத்தை (Caravans) நோக்கித் தான் ஏவப்பட்டன. மக்காவிலிருந்து சிரியா செல்லும் வர்த்தகர் கூட்டம் மதீனாவையும் கடற்கரையையும் கடந்துதான் செல்லவேண்டும். கூடுமான வரை செங்கடலை ஒட்டியே சென்றாலும், மதீனாவிலிருந்து சுமார் எண்பது மைல் தொலைவில்தான் கடந்துச் செல்ல வேண்டும். எதிரியின் முகாம் இந்தத் தொலைவில் இருந்தாலும் அவர்களின் சொந்த முகாம் இரு மடங்கு தூரத்தில் தான் இருக்கும்.(மதீனாவில் முஹம்மது பக்கம் 2, emphasis added )


The chief point to notice is that the Muslims took the offensive. With one exception the seven expeditions were directed against Meccan caravans. The geographical situation lent itself to this. Caravans from Mecca to Syria had to pass between Medina and the coast. Even if they kept as close to the Red Sea as possible, they had to pass within about eighty miles of Medina, and, while at this distance from the enemy base, would be twice as far from their own base. (Muhammad at Medina, emphasis added, p. 2)


Source: இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை)


பத்ரு போருக்கு பின் முஹம்மதுவின் செயல்கள்:


முஹம்மது பத்ரு போரில் வெற்று பெற்று மதினா திரும்பிய பிறகு, மதினாவிலிருந்து யூதர்களை துரத்தினார், தன்னை எதிர்த்து கவிதை எழுதியவர்களை கேலி செய்தவர்களை கொன்று போட்டார். ஆனால், முஹம்மது மதீனாவிற்கு தஞ்சம் புகுந்தவுடன் அவர் ஜனாதிபதியாக ஆகிவிட்டார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், இது உண்மையல்ல. மதினா மக்களில் சிலர் இவரோடு சேர்ந்துக்கொண்டு மற்றவர்களை கொலை செய்துக்கொண்டுவருவதை, எதிர்த்தவர்களை, பேசியவர்களை இவரும் இவரது தோழர்களும் கொலை செய்தார்கள். இவர் மதீனாவிற்கு வந்தவுடன், இவர் தலையில் கிரீடம் வைத்து யாரும் இவரை ஜனாதிபதி என்று ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனிக்கவும்.


பத்ரூ போருக்கு பின்பு அமைதி மார்க்கத்தின் கொலைகளை அறிய படிக்கவும்: His enemies to be assassinated


பத்ரூ போருக்கு பின்பு செய்யப்பட்ட சில கொலைகளை தமிழ் கட்டுரையிலிருந்து


 
Quote:

மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)


அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவ‌ர் பத்ரூ போரில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌போது முஹம்மது அவருக்கு ம‌ர‌ண‌ த‌ண்டனையை வழங்கினார். அப்போது அக்பா மிகுந்த ம‌ன‌ச்ச‌ஞ்ஞ‌ல‌த்துட‌ன் "முஹம்மதுவே! என் பிள்ளைக‌ளை யார் காப்பாற்றுவார்க‌ள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்க‌ளுள் ஒருவ‌னின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது.


மார்ச் மாதம் கி.பி. 624: அஸ்மா பின்ட் மர்வன் (Asma bint Marwan)


அஸ்மா (Asma) என்பவள் மதீனாவில் உள்ள ஒரு பழங்குடி மதக் கூட்டத்தினைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவார். யாஜித் பி. ஜையத் என்பவன் அவளது கணவனாவார். அவள் மதீனாவின் தன் பழங்குடி மக்களை, அவர்கள் ஒரு புதியவரான முஹம்மதுவுக்கு அடிபணிந்து, அவர்மீது எதிபாராத தாக்குதல் நடத்தாமலிருந்ததாகக் குறை சொல்லி ஒரு பாடல் இயற்றினாள். அவள் சொன்னதைக் கேள்விப்பட்ட இறைத்தூதர், "எனக்காக அந்த மார்வானின் மகளை அழிப்பவர் யார்?" என்றார். அவளது கணவனின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன், முன்வந்து, அன்றிரவு அவளின் வீட்டிற்குள் பதுங்கிச் சென்றான். அவளுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தன; அவர்களில் கடைக்குட்டி அவளின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தான். தாக்குதலுக்குச் சென்றவன் அந்தக் குழந்தையை மெதுவாக அவளின் மார்பிலிருந்து விலக்கிவிட்டு, அவனது வாளை உருவி அவள்மீது பாய்ச்சி அவளைத் தூக்கத்திலேயே கொன்றான்.


மறுநாள் காலையில் அந்தக் கொலைகாரன், அவன் மீது பழிவாங்குபவர்கள் யாரேனும் உள்ளனரா எனச் சவாலிட்டான். அவளது கணவன் உள்ளிட்ட ஒருவரும் அந்த சவாலுக்கு மறுமொழி கூறவில்லை. உண்மையில், அவனது கூட்டத்தில் இஸ்லாம் வலுப்பெற்றிருந்தது. முன்பு இரகசியத்தில் மாறினவர்கள் கூட பகிரங்கமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர் என்று அறிவித்தனர். இந்தத் தாக்குதலை விவரிக்கும் ஆரம்பகால‌ இஸ்லாமியத் தகவல் ஆதாரம் ஒன்று, "இஸ்லாமின் வலிமையை அவர்கள் கண்டார்கள் – because they saw the power of Islam" என சொல்கிறது.


Source: [url= http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html]இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை)[/url]



பத்ரு போரா அல்லது வழிப்பறி கொள்ளையா?

குர்‍ஆன் எட்டாம் அதிகாரத்தின் பின்னணி இப்போது ஓரளவிற்கு புரிந்திருக்கும், இப்போது படியுங்கள் குர்‍ஆன் 8ம் அதிகார வசனங்களை.


 
Quote:
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான். (8:7)


(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (8:17)


(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (8:42)


இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலை இப்போது உங்களால் தரமுடியுமா என்று பாருங்கள்.


• அது எந்த போர்?

• அதை ஆரம்பித்தது யார்?

• அந்த வியாபார ஆயுதமில்லாத கூட்டம் என்றால் என்ன?

• போர் செய்யும் போது வியாபாரிகள் எங்கே வந்தார்கள்?

• ஆயுதமில்லாமல் யார் போருக்கு வருவார்கள்?

• அப்படி வந்தவர்கள் யார்?

• பத்ரூ என்ற இடத்தில் நடந்த சண்டையை முதலில் துவக்கியது யார்?



குர்‍ஆன் 8:7ம் வசனத்தைப் பாருங்கள், "ஆயுதமில்லாமல் இருக்கும் வியாபாரிகளை" மட்டும் கொள்ளையடித்தால் போதும் என்று இஸ்லாமியர்கள் விரும்பினார்களாம், ஆனால், மக்காவிலிருந்து வந்த எதிரிகளை கூட அல்லா கொடுத்துவிட்டாராம்.

வியாபாரிகளை கொள்ளையடிக்க உதவிய அல்லாவை நாம் காண்கிறோம்.

நான் சொல்வது தவறு, பத்ரு இடத்தில் நடந்தது போர் தான் மற்றும் குரைஷிகள் தான் அதனை ஆரம்பித்தார்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்லக்கூடும். இதற்காகவே, இஸ்லாமியர்களால் மிகவும் அதிகமாக மதிக்கும் இபின் கதிர் குர்‍ஆன் உரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்.


 
Quote:
[size] Ibm Kathir Commentary
The people started mobilizing Muslims, although some of them did not mobilize, thinking that the Prophet would not have to fight. Abu Sufyan was cautiously gathering information on the latest news spying on travelers he met, out of fear for the caravan, especially upon entering the area of Hijaz (Western Arabia).Some travelers told him that Muhammad had mobilized his companions for his caravan. He was anxious and hired Damdam bin `Amr Al-Ghifari to go to Makkah and mobilize the Quraysh to protect their caravan, informing them that Muhammad had mobilized his Companions to intercept the caravan. Damdam bin `Amr went in a hurry to Makkah. Meanwhile, the Messenger of Allah marched with his companions until he reached a valley called Dhafiran. When he left the valley, he camped and was informed that the Quraysh had marched to protect their caravan. The Messenger of Allah consulted the people for advice and conveyed the news about Quraysh to them. Abu Bakr stood up and said something good, and so did `Umar. Al-Miqdad bin `Amr stood up and said, `O Allah's Messenger! March to what Allah has commanded you, for we are with you. By Allah! We will not say to you what the Children of Israel said to Musa,


Source: http://www.tafsir.com/default.asp?sid=8&tid=19613
[/size]


ஒரு இடத்திலிருந்து வியாபாரிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் போது, அவர்களை தாக்குபவர்களை என்னவென்றுச் சொல்வது? போர் வீரர்கள் என்பதா அல்லது கொள்ளைக் கூட்டத்தார்கள் என்பதா? வழிப்பறிக் கொள்ளையை போர் என்று சொல்லமுடியுமா ? சிந்தியுங்கள்.

நான் சொல்வது தவறு என்றுச் சொன்னால், எப்படி என்று விளக்குங்கள்.


பத்ரு போர் குறித்து, பிஜே அவர்களின் குர்‍ஆன் உரையிலிருந்து விவரங்கள்:

இந்த கட்டுரைக்கு தேவையான விவரங்களுக்காக, குர்‍ஆனை தமிழில் மொழிபெயர்த்த அருமை இஸ்லாமிய அறிஞர் பிஜே அவர்களின் குர்‍ஆனிலில் அவர் கூறியிருக்கும் உரையை கீழே தருகிறேன். தேவைப்பட்டால், அவரின் பத்ரு போர் பற்றிய உரைக்கு தனியாக ஒரு பதிலை பிறகு காணலாம். இப்போதைக்கு அவரின் உரையிலிருந்து ஒரு சில கேள்விகள், அவரை நோக்கி எழுப்பப்படுகின்றன.

கீழே உள்ள அவரது உரையிலில் அடிக்கோடிட்ட தடிமன‌ (Underline, Bold) வரிகளைக் காணுங்கள், அடிப்பிற்குள் [] இருக்கும் வரிகள் என்னுடையை வரிகள்.


 
Quote:
196. திட்டமிட்டிருந்தால்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக்கூட்டம் பயணிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்களை வழி மறிக்கவே புறப்பட்டார்கள். ["தமது நாடு" என்று எழுதுகிறார் பிஜே அவர்கள், 622ல் மதீனாவிற்கு தஞ்சம் புகுந்து, 624ல் எப்படி "மதீனா" இஸ்லாமியர்களின் நாடு ஆனது?]

ஆனால், இதை கேள்விப்பட்டு மக்கா வாசிகள் படை திரட்டிக் கொண்டு வந்ததால் எதிர்பாராமல் பத்ருப் போரைச் சந்திக்கும் நிலைமை உருவானது. அதைத் தான் இவ்வசனம் (திருக்குர்‍ஆன் 8:42) கூறுகிறது.

http://www.onlinepj.com/vilakkam/vilakkam4.htm

358. அல்லாஹ்வின் வாக்கு

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு விரட்டப்பட்டு அங்கே ஒரு ஆட்சியை நிறுவினார்கள். அவ்வாறு நிறுவிய பின் முஸ்லீம்களின் எதிரி நாட்டவரான மக்காவாசிகள் தமது வியாபாரப் பயணத்தை மதீனா வழியாக மேற்கொண்டு வாந்தனர்.

எனவே தமது நாட்டுக்குள் சட்ட விரோதமாகப் புகுந்து பயணம் செய்யும் எதிரிகளைத் தடுத்து நிறுத்திட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள். இந்த நிலையில் மக்காவின் முக்கியப் புரமுகர் அபூஸூஃப்யான் தலைமையில் ஒரு வணிகக்கூட்டம் இஸ்லாமிய நாட்டு எல்லையில் புகுந்து செல்லும் தகவல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையுடன் புறப்பட்டனர். இச்செய்தி மக்காவில் உள்ள தலைவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் தமது வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றும் நோக்கில் படை திரட்டி வந்தனர்.

வணிகக்கூட்டத்தை வழி மறிப்பதா? அல்லது போருக்குப் புறப்பட்டு வரும் கூட்டத்துடன் மோதுவதா? என்ற சிக்கல் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டது. இரண்டில் முஸ்லீம்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதில் வெற்றி என்று இறைவன் புறத்திலிருந்து வாக்களிக்கப்பட்டது. இரண்டில் ஒரு கூட்டத்தை உங்களுக்கு அல்லாஹ் வாக்களித்ததை நினைத்துப் பாருங்கள் என்று இங்கே (திருக்குர்‍ஆன் 8:7 வசனத்தில்) இதைத் தான் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

போருக்கு வருவோரை எதிர்கொள்வதென முஸ்லிம்கள் இறுதியில் முடிவு செய்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். …..

http://www.onlinepj.com/vilakkam/vilakkam8.htm

பிஜே அவர்களின் விவரங்கள் சொல்கின்றன:


1) முஹம்மது அவர்கள் மதீனாவில் ஆட்சி அமைத்தாராம். [எப்போது அமைத்தார்?]


2) மதினாவில் சட்டவிரோதமான வணிகக்கூட்டம் வந்ததாம். [இவரே அந்த நாட்டில் தஞ்சம் புகுந்து 2 ஆண்டுகள் ஆனது, அதற்குள் மதீனா இஸ்லாமிய நாடாகிவிட்டதோ, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் புகுந்து இந்நாட்டை தங்கள் நாடு என்று உரிமை கொண்டாடியது போல, இதுவும் உள்ளது]


3) அவர்களை தாக்கி, அவர்களின் பொருட்களை பறிமுதல்(நான் இதனை வழிப்பறிக் கொள்ளை என்பேன்) செய்ய ஒரு கூட்டத்துடன் முஹம்மது சென்றார்கள்.


4) தங்கள் வணிக கூட்டத்தை முஹம்மது தாக்கி பொருட்களை பறிமுதல் செய்வார்கள் என்று மக்காவாசிகள் அறிந்து பெரும்படையுடன் வந்தார்கள்.


5) பிறகு அவர்களிடம் சண்டையிட்டு, வெற்றிப் பெற்றார்கள்.


பிஜே அவர்களுக்கு தனியாக ஒரு பதிலை எழுதுவேன், அதில்


முஹம்மது மதினாவில் எப்போது தனது ஆட்சியை அமைத்தார்? கிபி 624ம் வருடமே, மதீனா இஸ்லாமிய நாடாக மாறிவிட்டதா?


உண்மையில் 130 கிலோமீட்டர் தொலைவில் வணிகர்கள் செல்வது, மதீனாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துச் செல்வதாகுமா?


முஹம்மது மற்றும் இதர வணிகர்கள் தாங்கள் வியாபாரம் முடித்து வந்த போது, மதீனாவிற்கு எத்தனை கிலோமீட்டர் தூரமாக சென்றார்கள், அப்போது மதீனா மக்கள் இவரோடு சண்டையிட்டு பொருட்களை பறிமுதல் செய்தார்களா?


வணிகர்களை தாக்கச் சென்றவர்களை "போர் வீரர்கள் என்பதா" அல்லது கொள்ளையடிக்க சென்ற "ஒரு கூட்டம் என்பதா?".


போன்ற கேள்விகளையும் இன்னும் அனேக விவரங்களையும் காணலாம்.


இந்த கட்டுரைக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக பிஜே அவர்கள் "பத்ரூ" பற்றி கூறிய விவரங்களை மட்டும் தரலாம் என்று நினைத்து இவைகளைக் கூறினேன்.


அருமை அஷேக் அவர்களே,


நீங்கள் உடனே, இந்த தலைப்பை விட்டுவிட்டு வேறு தலைப்பிற்கு தாவாமல், இதைப் பற்றி விவாதம் புரிய விருப்பமானால், மார்ஸ் மேடையில் உள்ள இக்கட்டுரையில் பின்னூட்டமிடுங்கள், நாம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம். தனி மெயில் அனுப்பி உறுப்பினர்களிடம் கேட்கவேண்டாம், [விவாதம் புரியவேண்டுமானால், வீரன் வீரனிடம் போரிடவேண்டும், நாட்டின் குடிமக்களிடம் அல்ல, ஏனென்றால் சாதாரண குடிமக்களுக்கு எதிரிகளின் யுக்திகள் பற்றிய பயிற்சி இருக்காது.] ஏனென்றால், இஸ்லாம் குறித்த பின்னணிகள் இன்னும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு அவ்வளவு அதிகமாக தெரியாது(முஸ்லீம்களுக்கு கூட).


உங்களின் பதிலில் ஒரு பகுதிக்கு மட்டுமே நான் இப்போது பதில்/மறுப்பு எழுதினேன், இன்னும் உங்கள் அனேக வரிகள் அப்படியே உள்ளன, நீங்கள் விரும்பினால் தொடர்வோம்.


கிறிஸ்தவர்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்துச் சென்ற இயேசுக் கிறிஸ்துவையும், அவரை பின்பற்றி தியாக வாழ்க்கை வாழ்ந்த அவரது சீடர்களையும் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.


இப்படி வணிகர்களை கொள்ளையடிப்பவரையும், அவரை எதிர்த்து கவிதை எழுதி, விமர்சித்து, கேலி செய்தவர்களை கொடூரமாக கொன்ற உங்கள் முஹம்மது அவர்களை நாங்கள் எப்படி குறைந்த பட்சம் ஒரு நல்ல மனிதராக நினைத்துப் பார்க்கமுடியும். வேண்டுமானால், உலக வரலாற்றில் வந்துச் சென்ற அனேக அரசர்களில் தலைவர்களில் இவரும் ஒருவர் என்று நினைப்போம் எனவே, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்றுச் சொன்ன இயேசுவின் வாழ்க்கையை நீங்கள் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.


கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிவில் சந்திப்போம்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP