சமீபத்திய பதிவுகள்

விருவிருப்பான செய்தி:3ஜி மொபைலால் இயங்கும் ரோபோ துப்பாக்கி

>> Wednesday, February 16, 2011

3ஜி மொபைலால் இயங்கும் ரோபோ துப்பாக்கி: நாகாவதி அணை பள்ளி மாணவர்கள் சாதனை




மேட்டூர் : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், 3 ஜி மொபைல் உதவியால் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை, தமிழக எல்லையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், பிடமனேரியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (43). இந்தியன் கல்வி அறக்கட்டளை நிறுவி நடத்தி வரும் ஜெயபாண்டியன், வீட்டு வேலை செய்யும் ரோபோ, தானியங்கி சிக்னல் உட்பட, 128 அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து, ஜெயபாண்டியன் தர்மபுரி மாவட்டம், நாகாவதி அணை அரசு துவக்க பள்ளி மாணவர்கள் உதவியோடு, 3ஜி மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் மால்கோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நேற்று, ரோபோ துப்பாக்கியை ஜெயபாண்டியன் இயக்கிக் காட்டினார்.


நிகழ்ச்சியில், மால்கோ பள்ளி முதல்வர் தேவராஜ், ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெயபாண்டியன் கூறியதாவது:"தர்மபுரியில், "மாணவர்கள் மியூசியம்' என்ற பெயரில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்க உள்ளோம். அதில், என் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் உருவாக்கிய அறிவியல் சாதனங்கள் வைக்கப்படும்.இந்த கண்காட்சிக்கூடம், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் புதிய கண்டுபிடிப்பான ரோபோ துப்பாக்கியை ஆட்கள் இல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். துப்பாக்கியின் ஒரு முனையில் 3ஜி மொபைல் வைத்து விட்டால் போதும், எந்த நாட்டில் இருந்தும் மற்றொரு, 3 ஜி மொபைல் மூலம் துப்பாக்கியில் உள்ள, 3ஜி மொபைலை தொடர்பு கொண்டு, துப்பாக்கியை இயக்கி இலக்கை நோக்கி குறி பார்த்து சுட முடியும்.


நாட்டின் எல்லைப் பகுதியில் வீரர்களே இல்லாமல், துப்பாக்கி, 3ஜி மொபைல் மட்டுமே வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்தவாரே கண்காணித்து இலக்கை சுட முடியும். இதில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ராணுவத்திலும் பயன்படுத்த முடியும். விரைவில், தர்மபுரியில் இந்திய அளவிலான போட்டி நடத்தவுள்ளோம்.பங்கேற்கும் போட்டியாளர்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தாலும், அங்கு இருந்தவாறே மொபைல் மூலம் தர்மபுரியில் உள்ள வீட்டு வேலை செய்யும் ரோபோ மற்றும் 3ஜி ரோபோ துப்பாக்கியை இயக்கி சுட வேண்டும். சிறப்பாக இயக்கிக் காட்டுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்' என்றார்.


நாகாவதி அணை அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் கூறியதாவது:ரோபோ துப்பாக்கியை வடிவமைக்க, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியது. செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ரோபோ துப்பாக்கி உதிரி பொருட்களை எங்கள் மாணவர்கள் சேகரித்து வழங்கினர். துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மீண்டும் பொருத்தும் அளவுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், என்றார்.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கனிமொழி எம்.பி கைது

தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்; கனிமொழி எம்.பி.-5 ஆயிரம் பேர் கைது
சென்னை, பிப். 16-
 
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பருத்தி துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த செயலை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் தி.மு.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி வழங்க வில்லை. எனவே மைலாப்பூர் லஸ்கார்னர் அருகில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர், மகளிர் அணியினர் இதில் கலந்து கொண்டனர்.
 
அப்போது, இலங்கை அரசே தமிழக மீனவர்களிடம் அத்துமீறி நடக்காதே. கைதான மீனவர்களை உடனே விடுதலை செய். கண்டிக்கிறோம் ராஜபக் சேயை கண்டிக்கிறோம். மத்திய அரசே அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்று" என்று கோஷம் எழுப்பினார்கள். மீனவர்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி வந்தனர்.
 
ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
 
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். நேற்று 106 மீனவர்களை கைது செய்துள்ளனர். எதற்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. 106 மீனவர்கள் கைதானதை கேள்விப்பட்டதும் தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் கலைஞர் மிகவும் வேதனைப்பட்டார். அவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக் கும்படி மத்திய அரசை வற்புறுத்தினார். தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டதால் பெரும் திரளாக வந்திருக்கிறோம். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்.
 
தமிழர்களின் உணர்வை இதைவிட ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவோம். மீன வர் சமுதாயத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். இதுதான் தி.மு.க. தலைவர் கலைஞரின் எண்ணம். கைதான தமிழக மீனவர்களை இலங்கை அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
 
அதன் பிறகு கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக செல்ல முயன்றனர். அவர்களை நாகேஸ்வரராவ் பூங்கா அருகே கனிமொழி உள்பட சுமார் 5 ஆயிரம் தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன், பஸ்களில் ஏற்றப்பட்டு மந்தவெளியில் உள்ள பி.எஸ்.எஸ். பள்ளி மைதானத்துக்கு கொண்டு போகப்பட்டனர். அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பெ.வீ. கல்யாணசுந்தரம், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ். பாபு, எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், சங்கரிநாராயணன், முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், மாணவர் அணி செயலாளர் கடலூர் இள. புகழேந்தி, தலைமை நிலைய செயலாளர்கள் சதாசிவம், எஸ்.ஏ.எம்.உசேன். மகளிர் அணி துணைத் தலைவர் விஜயா தாயன்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் வி.எஸ்.ரவி, வி.எஸ்.ஜெ.சீனிவாசன், ஆர்.டி.சேகர், ஏ.டி.மணி, சுரேஷ்குமார், ஐ.கென்னடி, சேப்பாக்கம் மதன்மோகன், இந்திராநகர் ரவி, இளைஞர் அணி வி.எஸ். ராஜ், அகஸ்டின்பாபு, ஜெ.கருணாநிதி, காமராஜ், தனசேகரன், பாண்டி பஜார் எஸ்.ஜி.தமிழரசன், உதயசூரியன், ஏழுமலை, அடையாறு லோகநாதன், ஸ்ரீகாந்த், அன்புதுரை, வில்லிவாக்கம் எஸ்.டி.விஜய்ஆனந்த், மா. அகிலன், ராஜாமுகமது, சுகி, மேட்டுக்குப்பம் கமலக் கண்ணன் உள்பட ஏராளமான நிர்வாகிகள்- தொண்டர்கள் கைதானார்கள்.

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP