சமீபத்திய பதிவுகள்

வன்னிய கிறித்தவர்களும்,தலித் கிறித்தவர்களும் இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறையும் காட்சி.

>> Sunday, March 9, 2008

இந்தியாவெங்கிலும் ஏராளமான இந்து கோவில்கள் பூட்டப்பட்டு பாழடைந்து கிடப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்தால் மேல் சாதிக்காரர்களுக்கும்,கீழ் சாதிக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையால் அந்த கோவிலை பூட்டி இருப்பார்கள்.இந்துக் கோவில்க இப்படி பூட்டப்படுவது ஒரு பெரிய பிரச்சனை இல்லை.

ஏன் என்றால் இந்து கடவுள்களே இந்த சாதிப் பிரிவுகளை உண்டாக்கி இருப்பதால் சாதி சண்டை வரத்தான் செய்யும் ஆனால் இதில் நாம் கவனிங்க வேண்டியது இதே பிரச்சனைகள் கிறிஸ்தவத்தின் பெயரில் அரங்கேறுவதை பார்க்கும் போது தான் இயேசுவை இவர்கள் மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துவதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

இதில் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேறுமே சொல்லப்போனால் கீழ் சாதிகள் தான்.வன்னியன் என்றால் என்ன பாப்பான் என்று நினைப்போ?பாப்பானுங்க்கு முன்னால் எல்லாமே அடிமைகள் தான்.இதை புரிந்து கொள்ளாமல் மற்றவனை கீழ் சாதியாக நினைப்பதை என்ன கொடுமை என்று நினைப்பது?நான் கீழ் சாதியாக இருந்தால் பரவாயில்லை.எனக்கு கீழ ஒரு சாதி இருக்குல்ல என்று அடிமைத்தனத்தில் சுகம் காண்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.


ஆனால் இந்து மதத்தில் இருக்கும் போது நீ என்ன சாதியாவோ இருந்துட்டு போ.ஆனால் கிறிஸ்தவத்துக்கும் சாதிக்கு என்ன சம்மந்தம்.இயேசு கிறிஸ்து யூதர்களால் கீழ் சாதிகள் என்று சொல்லப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்த கிராமத்தில் தங்குவது மட்டும் அல்லாமல் அவர்களை மிகவும் நேசிக்கவும் செய்தார்.http://www.tamilchristians.com/modules.php?name=Bible&bno=43&cho=4 யோவான் நான்காம் அதிகாரத்தில் இந்த சம்பவத்தை நீங்கள் காணலாம்.


அவரிடத்தில் அநேக கிரேக்கர்கள் கூட விரும்பி வந்தனர்.இப்படி இருக்க கிறித்தவத்துக்கும் ,சாதிக்கும் என்ன சம்மந்தம்.

கீழே உள்ள விவிலிய வார்த்தைகளை பாருங்கள்


யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.கலாத்தியர் 3:28

அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ரோமர் 10:12

ஆனால் விவிலியம்(பைபிள்) இப்படிச்சொல்லும் போது தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் இவர்களை எப்படி தங்களை வன்னிய கிறித்தவர்கள் என்றோ,அல்லது நாடார் கிறித்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள முடியும்.கண்டிப்பாக முடியாது.அரசாங்க அற்ப உதவி பெற்றுக்கொள்ள தங்களை தலித்துகள் என்ற அடையாளத்தை கழைந்து எரியக்கூட இவர்கள் தயங்கி நின்று தங்களை தலித் கிறித்தவர்கள் என்று அடையாளப்படுத்தக் கூட இவர்கள் வெட்கப்படுவது இல்லை.

ஏன் இந்த மாய்மாலம்.இந்து மதத்தை தூக்கி எரிந்துவிட்டு வந்த இவர்களால் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏன் உதறிவிட்டு வர முடியவில்லை.கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டோம் என்று பீத்திக்கொள்ளும் இவர்களால் ஏன் கிறித்தவ மதத்தின் அடிப்படைக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிறித்தவ மதத்தில் எல்லா பிரிவுகளிலும் சாதி உண்டா என்பதை யோசித்து பார்க்க வேண்டியது தானே.ஒரு வேளை சாதியை பிடித்து தொங்கும் கிறித்தவப் பிரிவுகளை உதறித்தள்ளி விட்டு வேறு சாதியை காரணம் காட்டாத எத்தனையோ பிரிவுகளுக்கு மாறி போகவேண்டியதுதானே.

தனியாக கோவில் கட்டியதாக சொல்லும் தலித் கிறித்தவர்கள் ஏன் உங்கள் பழைய பிரிவிடத்தில் சென்று குருவானவரை கேட்டீர்கள்.நீங்களே உங்களில் ஒருவரை குருவாக்கி வேறு பிரிவாக அந்த கோவிலை மற்றி இருக்கலாமே.ஆனால் இதை செய்யாமல் ஏன் இப்படி கிறித்துவுக்கு அவமானச்சின்னங்களாக வாழ்கிறீர்கள்.

கடைசியாக

கத்தோலிக்க,சி எஸ் ஐ ,பெந்தேகோஸ்தே திருச்சபை மக்களே நான் கடைசியாக சொல்ல விரும்புவது நீங்களும் உங்கள் திருச்சபைகளும் கிறித்துவுக்கு அடையாளங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்று மறந்து அவருக்கு அவமானத்தை உண்டாக்குபவர்களாக மாறாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

உங்கள் சபைக்கு வரும் ஏந்த சாதியினரையும் முதலில் அவர்கள் சாதியை மறக்க போதியுங்கள்.அவர்கள் என்ன சாதி என்பதே அவர்கள் மற்ந்து போக செய்யுங்கள்.கிறித்துவின் அன்பில் மட்டும் அவர்கள் இணைந்து கொள்ள செய்யுங்கள்.

இப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால் எத்தனை கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல் எவ்வளவு கோடி பேர் எழுந்து எதிர்த்தாலும் கிறித்துவின் அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ளுவதை ஒருவனும் தடுக்க முடியாது.இது நிச்சயம்

StumbleUpon.com Read more...

காலை தூக்கி காட்டும் இரகசியம் என்னவோ?

தீட்சிதர்கள் யார்? நடராஜர் இடக்காலை தூக்கி ஆடுவதன் மர்மம் என்ன?

சைவக் குரவர்களால் சிலிர்த்துப் பாடப்பெற்ற ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவது பிரச்னையாகி அரசின் அதிரடி முயற்சியால் இப்போது நிலைமை சகஜமாகியிருக்கிறது.

'போலீஸாரையும் தேவாரம் பாட வந்த ஓதுவார்களையும் நெய்யையும் எண்ணெயையும் வாரி ஊற்றி ஓடஓட விரட்டிய இந்தத் தீட்சிதர்கள் யார்?' என்று வேத மேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம்.

''வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம் வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு 'வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்'னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால் இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் 'ஒரிஜினல் பிராமணர்கள்' என்ற எண்ணம் உண்டு.

இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டுமல்ல ஆவுடையார்கோயில் காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால் அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை. வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.

வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள் ஆடுகள் குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.

'வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?' என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?
சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. ஆனால் வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் 'ஆகாச லிங்கமாக' இருப்பதாக... அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர்.

லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். 'நடராஜ மகாத்மியம்' என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில் 'சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.

அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய் 'தில்லைவாழ் அந்தணர்கள்'னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ...'' என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார்.

நன்றி: ஆனந்த விகடன்

StumbleUpon.com Read more...

இஸ்லாம் இனிய மார்கம் கூட்டம் எல்லா இடங்களிலும் போடுவதற்கு காரணம் என்ன?

Ans Tamil Islam: ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?


முன்னுரை: தமிழ் இஸ்லாம் கேள்வி பதில் என்ற தளத்தில் கீழ் கண்ட கருத்தை குற்றச்சாட்டாக அல்லாமல் ஒரு செய்தியாக தெரிவித்துள்ளார்கள்.

1. கிறிஸ்தவத்தில் மக்கள் கேள்வி கேட்காமல் நம்பவேண்டிய நிலை உள்ளது.

2. இஸ்லாம் தளங்களைப் போல கிறிஸ்த தளங்களில் மக்கள் கேள்விகள் கேட்கும் வசதி செய்துத்தரப்படவில்லை.

3. கிறிஸ்தவ ஊழியர்கள் கூட "கிறிஸ்தவ கேள்வி பதில்கள்" என்ற நிகழ்ச்சிகளை நடத்துவதும் இல்லை.

4. ஆனால், இஸ்லாம் தளங்களில் கேள்விகள் கேட்கும் வசதி உள்ளது, பல நிகழ்ச்சிகள் கேள்விபதிலுக்காக இஸ்லாமிய ஊழியர்கள் நடத்துகிறார்கள்.


இஸ்லாமியர்களின் இந்த கருத்து மிகவும் நியாயமானதாக தென்படுகிறது. என் பதிலை படிப்பதற்கு முன்பு, இஸ்லாமிய தளம் எழுதியதை ஒரு முறை படிக்கவும்.


..... அப்போது,ஹிந்துத்துவத்திலும் - கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை உணர்வீர்கள்.

இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இந்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த மதங்கள் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்). ....
....
பால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு 'கர்த்தரை விசுவாசியுங்கள்' என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர "எவரும் கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்" என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச் சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்).

இஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான்.

'நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்' என்கிறது குர்ஆன். (16:43)

கேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் 'கேள்வி ஞானத்திற்கு இடமில்லை' என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?

Source:
http://tamilislam-qa.blogspot.com/2008/02/blog-post_10.html

Formats Mine



ஈஸா குர்‍ஆன் பதில்:

இஸ்லாமியர்களின் இந்த கருத்திற்காக நான் என் பதிலை கீழ் கண்ட தலைப்புகளில் தரவிரும்புகிறேன்.

1. ஏன் இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்விபதில் வசதியை செய்து கொடுத்துள்ளார்கள், கேள்வி‍பதில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதில்லை.

2. கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்காமல் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமுண்டா? கிறிஸ்தவ கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?





1. ஏன் இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்விபதில் வசதியை செய்து கொடுத்துள்ளார்கள், கேள்வி‍பதில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதில்லை.

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் (எனக்கு தெரிந்த மட்டில்) புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

சரி, அப்படியானால், இப்படிப்பட்ட கிறிஸ்தவ கேள்வி பதில் நிகழ்ச்சிகளை யார் நடத்துகிறார்கள்? குறைந்த பட்சம் ஒரு பெயரைச் சொல்லுங்கள் ? என்று நாம் கேட்டால் பெரும்பான்மையாக "கிறிஸ்தவர்களிலிருந்தே" பதில் வராது? அது ஏன்? சரி கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களுக்கு சந்தேகங்கள் இல்லையா? மாற்று மதத்தவர்கள் கிறிஸ்தவ கேள்விகளை கேட்கமாட்டார்களா? என்ற கேள்விகள் எல்லாருக்கும் எழும்பும்.

இக்கட்டுரை முழுவதுமாக படிப்பீர்களானால், உங்களால் இவைகளுக்கு பதிலை கண்டுக்கொள்ளமுடியும்.

ஏன் இஸ்லாம் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது, ஏன் கிறிஸ்தவம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள். இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். "தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை "இஸ்லாமியர்கள்" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் "இஸ்லாமை பரப்புவதற்கு" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் "இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை" என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை."அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் கிறிஸ்தவர்கள் தான், அவர்கள் செய்யும் அராஜத்திற்கு அளவே இல்லை" என்று சிலர் சொல்லலாம். ஆனால், அவர்கள் ஒரு அரசாங்க தலைவராக இருந்து செய்கின்றனர், நான் செய்யும் செயல்களுக்கு பைபிள் தான் காரணம் என்று சொல்வதில்லை. எனவே, சாதாரண மக்கள் இதை பெரிய தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே, கிறிஸ்தவர்களுக்கு கெட்டபெயரை உண்டாக்க தீவிரவாதிகள் இல்லை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களால் தொடரப்பட்ட "குருசேடர்கள்" யுத்தம் பற்றி என்ன சொல்வீர்கள் என்று யாரும் கிறிஸ்தவத்தின் மீது குற்றம் சுமத்தவும் வாய்ப்பு இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள், 1) பைபிள் இதை அனுமதிப்பதில்லை, 2) தற்கால எந்த கிறிஸ்தவ போதகரும் அதை சரி என்றுச் சொல்லி, இப்போதும் அது போல கிறிஸ்தவர்கள் போர்கள் இயேசுவிற்காக செய்யலாம் என்று வக்காளத்து வாங்குவதில்லை.

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.

காரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):

இஸ்லாமியர்கள் அதிகபடியான கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான அடுத்த காரணமாக நான் இதை கருதுகிறேன்.

இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய சட்டம் என்றுச் சொல்லி, "ஷரியா சட்டம்" என்பதை தங்கள் நாடுகளில் அமுல் படுத்துவருகின்றனர்.

எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான "ஷரியா சட்டம்" இல்லை, ஒவ்வொரு நாடுகளுக்கும் வித்தியாசமான சட்டம் உள்ளது. ஷரியா சட்டம் மூலமாக மக்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் போது, அது ஊடகங்கள் மூலமாக உலகம் முழுவதும் சென்றடைகிறது. சில சட்டங்கள் மிகவும் கொடுமையான தாக இருப்பதால் (கல்லெரிந்து கொல்லுதல், சாட்டை அடி அடித்தல், கைகளை வெட்டுதல்) சாதாரண மாற்று மத மக்களின் மனதில் இது "இஸ்லாம் பற்றிய தவறான பாதிப்பை" ஏற்படுத்துகிறது. மட்டுமல்ல, இஸ்லாமிய தண்டனைகள் ஊர் மக்களுக்கு முன்பாக நிறைவேற்றுகின்றன சில இஸ்லாமிய நாடுகள். குறைந்த பட்சம், தண்டனைகளை சிறைச்சாலைகளிலாவது நிறைவேற்றுவதில்லை. ஜனநாயக நாடுகளில், மத சார்பற்ற நாடுகளில் வாழும் சாதாரண மனிதனுக்கு(முஸ்லீமுக்கு கூட) இது மனதிற்கு மிகவும் சஞ்சலத்தை தருகிறது.

உதாரணத்திற்கு சில தண்டனைகள்:


1) மலேசியா நாட்டில் திருமணமான இருவரை ஷரியா சட்டம் மூலமாக பிரித்துவிட்டார்கள், இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால்..

2) கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும், விபச்சாரம் செய்தாள் என்றுச் சொல்லி, சாட்டையால் அடித்து தண்டிக்கவேண்டும் என்று சில நாடுகளின் ஷரியா சட்டம் சொல்கிறது. Human Rights News, BBC News, Religious Tolerance . Org

3) இந்தியாவிலும், விவாகரத்து செய்த கணவனை மறுபடியும் திருமணம் செய்யவேண்டுமென்றால், வேறு ஒரு மனிதனை தற்காலிகமாக திருமணம் செய்யவேண்டும் என்றுச் சொல்லி, ஊர் இஸ்லாமிய பெரியவர்கள் சொன்னதால், அந்த பெண் தற்கொலை செய்துவிட்ட செய்தியை நாம் அறிவோம்.

இப்படி பல ஷரியா சட்டங்கள் வேடிக்கையாகவும், பயங்கரமாகவும் இருப்பதால், மனிதர்களின் மனதில் "இஸ்லாம் பற்றி உள்ள" கருத்தை மாற்றவேண்டும் என்பதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் பல நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம், ஓரளவிற்கு இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால், கிறிஸ்தவத்திற்கு இந்த பிரச்சனையும் இல்லை, அதாவது எந்த நாடும் "பைபிள் சட்டம்" என்றுச் சொல்லி, சட்டத்தை அமுல் படுத்தவில்லை. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் மூலமாகத்தான் எல்லா நாடுகளும் ஆளப்படுகின்றன. ஒருவேளை ஏதாவது ஒரு நாட்டில் தண்டனை மிகவும் கடுமையாக இருந்தாலும், அது பைபிளுக்கு கெட்ட பெயரை கொண்டு வராது. ஏனென்றால், இயேசு தன் அரசை மக்களின் மனதில் நிறுவ வந்தாரே ஒழிய பாராளுமன்றத்தில் அல்ல. அரசியலையும், ஆன்மீகத்தையும் பிரித்து இயேசு தன் வழியை மக்களிடம் போதித்த படியால், எந்த கிறிஸ்தவ நாட்டின் செயலுக்கும் இயேசு பொறுப்பு வகிக்கமுடியாது. மக்களின் மனதை மாற்ற பல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

(உலகத்தில் எந்த நாடும் கிறிஸ்தவ நாடு கிடையாது, கிறிஸ்தவர்களின் சதவிகிதம் அதிகம் இருக்கலாம், ஆனால், சட்டம் பைபிளின் சட்டம் கிடையாது, "இந்த அரசை அமைக்க இந்த சட்டங்களை அமுல் படுத்துங்கள்" என்று பைபிள் சொல்வதுமில்லை)

இஸ்லாம் ஒரு ஆன்மீக மார்க்கமாக மட்டும் இருந்திருக்குமானால், இந்த பிரச்சனை வந்திருக்காது, அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலந்துள்ள மார்க்கமாக இஸ்லாம் உள்ளதால், "இஸ்லாமிய அரசியல்" மூலமாக நடக்கும் தவறான செயல்களுக்கு, "இஸ்லாமிய ஆன்மீகம்" பாதிக்கப்படுகிறது. இதை திருத்தவே கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று நான் கருதுகிறேன்.

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:


ஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது "சரி" என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது "இஸ்லாம் பற்றி" தவறான கருத்தை கொடுக்கிறது.

சில உதாரணங்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் "ஒசாமா பின் லாடன் செய்வது சரியா? இல்லையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்:


"ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."

If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ..... If he is terrorizing (the America) the terrorist, I am with him.... every muslim should be terrorist.....


http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI




இதை படித்தவுடம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று என்னோடு சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்வதை கவனியுங்கள்.

இஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக "ஒசாமா பின் லாடன்" செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) "அவர் செய்வது தவறு தான்" என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், "நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்" ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா?

ஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் "இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை" என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக "தீவிரவாதம் பற்றி" ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இன்னொரு நிகழ்ச்சியை நான் சொல்லவிரும்புகிறேன், எகிப்து பல்கலை கழக பேராசிரியர், ஒரு ஆணும் பெண்ணும் தனியாக அறைகளில் கம்பனிகளில் வேலை செய்யக்கூடாது, இது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது இல்லை, அப்படி வேலை செய்யவேண்டுமானால், அந்தப் பெண், தன்னுடன் வேலை செய்யும் ஆண்களுக்கு தன் பாலை குடிக்க கொடுத்தால் போதும், அந்த ஆண் குடித்தால் போதும் அவர்கள் இனி ஒரு அறையில் தங்கள் அலுவல்கள் வேலையை செய்யலாம் என்றும், இப்படி செய்வதை முகமதுவே அனுமதித்தார் என்று ஹதிஸை காட்டி அறிக்கை வெளியிட்டார். உலகமே இஸ்லாமை கண்டு சிரித்தது, உடனே இஸ்லாமிய அறிஞர்கள் இது தவறு என்று சொன்னார்கள், மறுபடியும் அவர் தனது அறிக்கையை வாபஸ் வாங்கிவிட்டார்.

இப்படி இஸ்லாமை காப்பாற்றுகிறோம், அதற்கு நல்லபெயர் கொண்டு வருகிறோம் என்றுச் சொல்கின்ற இஸ்லாமிய அறிஞர்களே இப்படி அறிக்கை விடுகின்றனர். இதனால், மக்களின் குழப்பத்தை தீர்க்க, இஸ்லாமைப்பற்றி மக்கள் கேள்விப்படுவது தவறு என்றுச் சொல்ல இஸ்லாமிய அறிஞர்கள் படாதபாடு பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட பிரச்சனை கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இல்லை. எந்த ஒரு கிறிஸ்தவ போதகரும் இப்படி "பத்வாவை" அறிக்கையிட்டு மாட்டிக்கொள்வதில்லை. இதனால், கிறிஸ்தவ ஊழியர்கள் பெரிய கூட்டங்கள் போட்டு, கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், செய்தித்தாள்களில் சில நேரங்களில் படிப்பது போல, ஒரு சில கிறிஸ்தவ போதகர்கள் இந்த பெண்ணை கற்பழித்துவிட்டார்கள், ஆலயபணத்தை தின்றுவிட்டார்கள், பணவிஷயத்தில் உண்மையாக இல்லை என்று செய்தித்தாள்களில் படிக்க நேரிடும். இப்படிப்பட்ட தவறுகள்(கற்பழித்தல், பணத்தை ஏமாற்றுதல்..) போன்றவை மற்ற மார்க்கங்களிலும் இருப்பதால், சராசரி மக்கள் இதை படித்து மறந்துவிடுவார்கள். இதற்காக, கிறிஸ்தவ கூட்டங்களில் பங்கு பெற்று, இப்படி ஒரு கிறிஸ்தவ போதகர் செய்தாராமே என்று கேள்விகள் கேட்கமாட்டார்கள். பைபிள் இப்படி செய்யும்படி சொல்லவில்லை என்று எல்லாருக்கும் தெரியும். இதே போல இந்துக்களின் வேதங்களிலும் திருடு, கற்பழி என்று சொல்வதில்லை, யாரோ ஒரு சாமியார் செய்தால், மக்கள் செய்திகளில் படித்துவிட்டு, மறந்துவிடுவார்கள், அதற்காக கூட்டம் போட்டு, இவர் செய்தது சரியானது தான் என்று கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள், இதனை கவனிக்கமாட்டார்கள். இங்கு நான் கிறிஸ்தவ போதகர்கள் செய்யும் இந்த செயல்கள் சரியானது என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட செயல்கள் எல்லா மதங்களிலும் உள்ள ஊழியர்கள் ஆங்காங்கே இருப்பதால், மக்கள் இதனை பெரிதாக நினைக்கமாட்டார்கள்.

இங்கு நான் சொல்லவந்த செய்தி, இஸ்லாமிய அறிஞர்கள் போல, கிறிஸ்தவ போதகர்கள் அடிப்படை சட்டங்களில் கைவைத்து மக்களை குழப்ப முயற்சி எடுப்பதில்லை அதனால், கிறிஸ்தவ மக்கள் தங்கள் அடிப்படை சட்டங்களில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் அடிப்படை சட்டங்களில் கைவைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள் கூறி தங்கள் மார்க்கத்திற்கே கேடு விளைவிக்கிறார்கள் என்று சொல்லவந்தேன், அதனால், தான் பல கூட்டங்கள் நடத்துகிறார்கள் இஸ்லாமியர்கள்.

உதாரணத்திற்கு நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய குழுக்களை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு குழுசொல்லும் இப்படித் தான் செய்யவேண்டும், முகமது இப்படித்தான் செய்தார் என்று, மற்ற குழு சொல்லும் இப்படி அல்ல, அவருக்கு மார்க்க அறிவு குறைவு இது வேறுவிதத்தில் செய்யவேண்டும் என்று. இவர்களின் இந்த செயல்களைப் பார்த்து மக்கள் குழம்பிப்போனால், மறுபடியும் அதற்கும் ஒரு கூட்டம் போட்டு, "இஸ்லாமிய கொள்கை" சரியாக நாங்கள் விளக்குகிறோம், எங்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள்.

ஏன், இஸ்லாமிய அறிஞர்கள் "கேள்வி பதில்" நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்.

எங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை, பால் தினகரன் அவர்கள் "இயேசு இப்படித்தான் சாப்பிட்டார், உட்கார்ந்தார், இத்தனை சென்டிமீட்டரில் தாடிவைத்திருந்தார், தனக்கு தும்மல் வரும் போது, இந்த அதிகாரத்தில் இந்த வசனத்தை சொன்னார்" என்று சொல்வதில்லை. அதற்கு மாறாக " இயேசு அழைக்கிறார்" என்று தான் சொல்கிறார். மற்றொரு கிறிஸ்தவ ஊழியர், பால் தினகரன் அவர்கள் சொன்னது தவறு, இயேசு தும்மல் வரும்போது, இந்த வசனத்தைத் தான் சொன்னார் என்று அவருக்கு எதிராக மாற்றிச் சொல்வதில்லை, அதற்கு பதிலாக, "இயேசு உன்னை சுகமாக்குகிறார்" என்று சொல்கிறார். இதனால், கிறிஸ்தவர்கள் குழம்புவதில்லை. ஓஹோ! இயேசு அழைத்து சுகமாக்குகிறாரோ என்று நினைத்து இந்த ஊழியரின் கூட்டத்திலும் பங்கு பெருகின்றனர், அந்த ஊழியரின் கூட்டத்திலும் பங்கு பெருகின்றனர். மற்ற மக்கள் இந்த இரு ஊழியர்களின் செய்திகளில் குழம்பிப்போவதுமில்லை. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அடிப்படை கோட்பாடுகளை எங்கள் பைபிளை படித்தே தெரிந்துக்கொள்கிறோம் இவர் இப்படி சொன்னார், அவர் அப்படி சொன்னார் என்று குழம்புவதில்லை. ஒருவேளை யாராவது குழப்பினாலும் எங்கள் மொழியில் பைபிள் எங்கள் கைகளில் இருப்பதால், அதை படித்து எங்கள் சபை போதகரிடம் கேட்டு இன்னும் அதிகமாக தெரிந்துக்கொள்கிறோம்.


காரணம் 3. ஹதீஸ்கள்:

இன்று இஸ்லாமியர்கள் முக்கியமாக நம் தமிழ் நாட்டில் பல பிரிவாக பிரிந்து இருப்பதற்கு காரணம் ஹதீஸ்கள் என்றுச் சொன்னால், அது மிகையாகாது. ஆனால், "ஹதீஸ்கள்" என்பது அல்லாவின் ஏற்பாடு தான் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஹதீஸ்படி இது தான் "அடிப்படை" என்று ஒரு குழு சொல்கிறது. இல்லை இல்லை, குர்‍ஆனோடு மோதும் எந்த ஹதீஸையும் நாம் நம்பவேண்டியதில்லை என்று வேறு ஒரு குழு சொல்கிறது. இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், முகமதுவின் உண்மை வாழ்க்கை, அவரது திருமண வாழ்க்கை, அரசியல் ஆன்மீக வாழ்க்கை போன்றவற்றை நாம் அதிகமாக ஹதீஸ்கள், சீராக்கள்(முகமதுவின் வாழ்க்கை சரிதை) மூலமாகத்தான் தெரிந்துக்கொள்கிறோம்.

ஒரு மனிதன் அவன் யாராக இருந்தாலும் சரி, ஹதீஸ்களை படித்தால், அவனுக்கு வரும் சந்தேகத்தை தீர்ப்பதற்கு எத்தனை "கேள்வி பதில்" நிகழ்ச்சிகள் நடத்தினாலும் போதாது. இத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது வரை இஸ்லாமிய உலகம் ஒன்றாக இனைந்து, இது தான் சரியான ஹதீஸ்கள் என்று ஒரு முடிவிற்கு வரவில்லை என்பதிலிருந்து பார்த்துக்கோள்ளுங்கள், ஒருவன் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்வதற்கு முன்பாக அவன் மரித்துவிடுவான் என்று எண்ணுகின்றேன்.

ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிற்கும் தனித்தனி இஸ்லாமிய ஷரியா சட்டம். உலக இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக கூடி இது தான் சரியான "ஷரியா சட்டம்" என்று ஏற்றுக்கொள்வார்களா? அப்படி ஏற்றுக்கொள்ளும் சட்டம் எல்லா நாடுகளுக்கும்(வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ந்துக்கொண்டு இருக்கும் நாடுகள், வளர்ந்த நாடுகள்) பொருந்துமா?

இப்படி இஸ்லாமின் அடிப்படையை பெரும்பான்மையாக ஹதீஸ்களிலிருந்து எடுத்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்த அல்லாவிற்கு இந்த பிரச்சனை புரியவில்லை, ஆனால், இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் "ஹதீஸ்களினால்" வரும் குழப்பங்களை தீர்க்க பல நிகழ்ச்சிகள் நடத்தவேண்டி வருகிறது.

ஆனால், இப்படிப்பட்ட பிரச்சனை கிறிஸ்தவர்களுக்கு இல்லை, எங்கள் அடிப்படை சட்டங்கள் மிகக்குறைவு, "கிறிஸ்து, சிலுவை, உயிர்த்தெழுதல், இரட்சிப்பு,கிறிஸ்துவின் இரண்டாம் வருகை" அவ்வளவு தான். இஸ்லாமைப்போல அல்லாமல், ஜப்பானில் வாழும் ஜப்பான் கிறிஸ்தவன் ஜப்பான் முறையிலான உடை அணிவான், இந்தியாவில் வாழ்பவன் இந்திய முறைப்படி உடை அணிவான், அமெரிக்காவில் வாழ்பவன் அந்நாட்டு உடை அணிவான். ஆனால் என்ன? எந்த நாட்டு உடை அணிந்தாலும் சமுதாயத்திற்கு ஏற்ற நாகரீகமான உடை அணிந்தால் போதும் என்றுச் கற்றுக்கொடுக்கப்படுகிறோம், அவ்வளவு தான்.

இயேசு எப்படி வாழ்ந்தார், எப்படி தாடி வைத்தார், எப்படி சாப்பிட்டார் எப்படி தூங்கினார், போன்றவற்றிற்கு கிறிஸ்தவ(ம்)ர்கள் முக்கியத்தும் கொடுப்பதில்லை, ஆனால், அவர் "நமக்காக என்ன செய்தார்? என்ன சொன்னார்? நாம் எப்படி வாழவேண்டும் என்றுச் சொன்னார்?" போன்றவற்றிற்கு மட்டும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், எங்களுக்கு குழப்பம் இல்லை. கேள்வி பதில் நிகழ்ச்சிகள் எங்களுக்கு அதிகமாக தேவையில்லை.

இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் "இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது?" போன்ற கேள்விகளாகவே இருக்கும். எனவே, அருமை இஸ்லாமிய அறிஞர்களே, எங்களுக்கு உங்களைப்போல குழப்பங்கள் குறைவு, எனவே எங்களுக்கு அதிக நிகழ்ச்சிகள் கேள்வி பதிலுக்காக தேவையில்லை. பைபிளில் படிக்கும் சத்தியங்களை இன்னும் ஆழமாக தெரிந்துக்கொள்ள அவ்வசனங்களில் நாங்கள் சொற்பொழிவை கேட்கவும், எங்கள் மனதிலே மாறுதல் அடையவும் நாங்கள் கூட்டங்களுக்குச் செல்கிறோம், எங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அல்ல.(சந்தேகங்கள் இருந்தால் தானே தீர்த்துக்கொள்ளமுயற்சி எடுக்கவேண்டும்)

காரணம் 2. முகமது:


ஹதீஸ்களை விட முகமதுவிற்கு நான் இரண்டாவது இடம் கொடுத்தேன், ஏனென்றால், இவரது வாழ்க்கை தான் ஹதீஸ்களில் இருப்பது. இன்று நாம்(மாற்று மார்க்கத்தவர்கள்) முஸ்லீம்களிடம் பேசும் போது, அவர்கள் "எங்கள் குர்‍ஆன் இப்படி, அப்படி, அற்புதம், அறிவியல், சரித்திரம் என்று அடிக்கிக்கொண்டே போவார்கள், பெருமைப்படுவார்கள்". திடீரென்று, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றி சில கேள்விகள் கேட்டால், போதும் உடனே அவர்களின் முகநாடி மாறும் ஏன்?

இஸ்லாமியர் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக கேட்கும் கேள்விகள்:

a) ஏன் முகமது வன்முறை மூலமாக தன் ஆட்சியை அமைத்தார்?

b) அவர் ஏன் 10க்கும் அதிகமான திருமணங்களை செய்துக்கொண்டார்?

c) முகமதுவிற்கு 50க்கும் அதிகமான வயது இருக்கும் போது, 6 வயது சிறுமியை(தன் பேத்தி வயதில் இருக்கும்) திருமணம் செய்துக்கொண்டார்?
d) அப்பெண்ணுக்கு 9 வயதாகும் போது ஏன் தன்னுடன் தாம்பத்திய வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டார்? இன்று இது போல யாராவது செய்தால், அது சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்குமா?

e) தன் மருமகளை(வளர்ப்பு மகனின் மனைவியை) ஏன் திருமணம் செய்துக்கொண்டார்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த கேள்விகளைப் பற்றி நான் இப்போது விளக்கப்போவதில்லை. இப்படிப்பட்ட கேள்விகளை மக்கள் கேட்டால், அதனை விளக்க இஸ்லாமியர்கள் பல இலட்சங்கள் செலவு செய்து, இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஏன் இஸ்லாமியர்களுக்கும் கூட‌ பதில் கொடுக்க நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

ஆனால், இந்த பிரச்சனை கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எங்கள் இயேசு ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றார், மற்றவர்கள் விரல் நீட்டும் அளவிற்கு ஒரு கீழ் தரமான வாழ்க்கையை அவர் வாழவில்லை. எனவே, இப்படிப்பட்ட கேள்விகள் கிறிஸ்தவத்தை நோக்கி கேட்கப்படுவதில்லை. அதனால், இஸ்லாமைப் போல பல கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

(இந்த இடத்தில், நாத்தீகர்களும், மற்ற மத அன்பர்களும் "பைபிளில் இயேசு பற்றி நல்லவிதமாக எழுதிவிட்டு சென்று விட்டார்கள் அவரது சீடர்கள், இயேசு எப்படி வாழ்ந்தாரோ நமக்கு எப்படி தெரியும்" என்று கேட்கலாம். எங்கள் வேதத்தில் சொல்லப்பட்டதை நாங்கள் நம்புகிறோம், இதனால், மற்றவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இருப்பதில்லை. ஆனால், இஸ்லாமியர்களின் வேதத்தில், ஹதீஸ்களில் முகமதுவின் (நல்ல) வாழ்க்கையைப் பற்றி மிகவும் தெள்ளத்தெளிவாக புட்டு புட்டு சொல்லிவிட்டதால், அவர்களுக்கு இப்பொது தங்கள் முகமதுவின் வாழ்க்கையை நமக்கு விளக்கவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகம் என்றுச் சொல்கிறேன்.)

"சரி முகமது அந்த காலத்து மனிதர், அந்த காலத்து பழக்கங்கள் படி தான் வாழ்ந்தார் இதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், இன்று நாம் வாழவேண்டிய முறை, பின்பற்றவேண்டிய முறை அது அல்ல, எனவே, முகமதுவின் வாழ்க்கையை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று" இன்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், யாரும் கேள்விகள் கேட்கப்போவதில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள், அவரது வாழ்க்கை இன்று கூட வாழ, பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்லும் போது, மற்றவர்களுக்கு மனதிலே எங்கோ அறிக்கும். என்வே, அதனை அடக்கமுடியாமல், கேள்வியாக கேட்டுவிடுகின்றனர்.

எனவே, இஸ்லாமை நோக்கி விரல் நீட்டுவதற்கு முகமதுவின் வாழ்க்கையும் ஒரு காரணமாகிவிட்டதால், அவரது வாழ்க்கையை இன்றும் நாம் பின்பற்றலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்வதால், பலருக்கு( இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான்) பல கேள்விகள் எழுகின்றன. இதனை சரிசெய்ய பதில் கொடுக்க இஸ்லாமிய அறிஞர்கள் படுகின்ற பாடு, அடேங்கப்பா? வார்த்தைகளில் சொல்லமுடியாது.

கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. அதே போல, பைபிளில் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்கள் கேள்விகள் எழுப்பினால், விரலை நீட்டினால், அவர்கள் தங்கள் விரல்களை நீட்டுவதற்கு முன்பே, அவர்களின்(பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்களின்) நேர்மையற்ற வாழ்க்கையை பைபிள் படம் பிடித்து காட்டிவிடுகின்றது. கிறிஸ்தவர்களும் ஆமாம், இந்த மனிதர் இந்த தவறு செய்தார், ஆபிரகாம் பொய் சொன்னார்? தன் மனைவியை தன் உயிருக்கு பயந்து சகோதரி என்று ஒரு இராஜாவிடம் பொய் சொன்னார், என்று நாங்களே சொல்லிவிடுகின்றோம். எனவே, யாரும் கேள்விகள் கேட்பதில்லை.

எனவே, எனதருமை இஸ்லாமிய அறிஞர்களே, மேதாவிகளே, எங்களுக்கு உங்களைவிட இயேசுவின் வாழ்க்கையை மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் மிக மிக குறைவு. அதனால், கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் குறைவு. உங்களுக்குத்தான் அதிக தேவை இருக்கிறது.


காரணம் 1. குர் ஆன்:

இஸ்லாமியர்கள் அதிக அளவில் "இஸ்லாம் கேள்வி பதில்கள்" நடத்துவதற்கு முக்கிய காரணமாக, முதல் காரணமாக இருப்பது குர்‍ஆன் என்று நான் சொல்வேன். ஏனென்றால், இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், முஸ்லீம்களின் செயல்பாடுகள் அனைத்தும் குர்‍ஆன் மீதே ஆதாரப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனோடு மோதும் ஹதீஸ்கள் தவறானது என்று சொல்கிறார்கள், சிலர் இதை மறுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக நாம் குர்‍ஆனைத் தான் சொல்லமுடியும்.

குர்‍ஆன் ஒரு ஒழுங்காக அமைக்கப்படவில்லை, அதாவது குர்‍ஆனில் சொல்லப்படும் விவரங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக சொல்லப்படவில்லை. எந்த சூழ்நிலையில் என்ன வசனம் இறங்கியது என்று ஹதீஸ்களின் உதவியின்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும், இஸ்லாமியர் அல்லாதவர் குர்‍ஆனை படித்தால் அவருக்கு பெரும்பான்மையான வசனங்கள் புரியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர்‍ஆனை அரபியில் படிக்கத்தான் இஸ்லாமிய அறிஞர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால், பல சந்தேகங்கள் இஸ்லாமியர்களுக்கும் உண்டு, இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் உண்டு.

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும். இதை எல்லாம் குர்‍ஆனில் காணமுடியாது, இவைகளைப் பற்றி ஹதீஸ்களில் பெரும்பான்மையாக காணமுடியும்.

எனவே, ஒரு முஸ்லீமுக்கு தேவையான அடிப்படை கோட்பாடுகள் அனைத்தும் குர்‍ஆனிலிருந்து கிடைப்பதில்லை. சரி, ஹதீஸ்கள் படித்து முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், ஒவ்வொரு இஸ்லாமிய ஊழியரும் வித்தியாசமாக பதில்களை சொல்வார்கள், எனவே, முக்கியமாக இஸ்லாமியர்களுக்கே பல சந்தேகங்கள் குர்‍ஆனில் உண்டு, அதற்காகத்தான் அதிகமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு தேவைப்படுகிறது.துருக்கி நாட்டின் அரசாங்கம் குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்களுக்கு 21ம் நுற்றாண்டிற்கு ஏற்ற பொருள் கூற பல பேராசிரியர்களையும், இஸ்லாமிய மேதாவிகளையும் அழைத்து கு‍ர்‍ஆனுக்கு சரியான பொருள் கூறும்படி கேட்டுக்கொண்டுள்ளதாம். அதாவது, 7ம் நுற்றாண்டு முதல் உள்ள குர்‍ஆன் மொழிபெயர்ப்புகள், உரைகளை நம்பாமல், அதாவது அவைகள் சரியானவை அல்ல என்று முடிவு கட்டிவிட்டு, குர்‍ஆனுக்கு புதிய உரையை எழுத முயற்சி எடுத்துள்ளது. அதாவது, உலகமெங்கும் அல்லாவின் வார்த்தையாகிய குர்‍ஆனை பரப்ப மதினாவில் அச்சடிக்கப்படும் குர்‍ஆனின் மொழியாக்கத்தையும் துருக்கி நாடு "சரியான மொழியாக்கம்" என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.(இதைப்பற்றி இங்கு படிக்கவும்:துருக்கி ஷரியா சட்டம் திருத்த முயற்சி (English : http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam)

ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அப்படியில்லை, எங்களுக்கு தேவையான எல்லா கோட்பாடுகளையும், சத்தியங்களையும் நாங்கள் பைபிளை தமிழில் படிப்பதினால் தெரிந்துக்கொள்கிறோம். மட்டுமல்ல, எங்களுக்கு இஸ்லாம் பழக்கவழக்கங்கள் போல, இத்தனை முறை கைகளை இந்த சூராக்களை சொல்லி கழுவவேண்டும், நகாஜ் படிக்கும் போது இத்தனை முறை எழுந்திருக்கவேண்டும், உட்காரவேண்டும், விரல்களை ஆட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் இல்லை. ஒரு பயனுமில்லாத பழக்கவழங்கள் மூலமாக பைபிள் மக்களை குழப்புவதில்லை, அதனால் அவைகளை விளக்கவேண்டிய அவசியமும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இல்லை. கிறிஸ்தவம் உள்ளத்தின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க எங்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உடல் தூய்மை, ஆரோக்கியம் போன்றவைகளை எந்த நாட்டில் நாங்கள் வாழுகின்றோமோ அந்த நாட்டின் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் உடல் தூய்மையை, ஆரோக்கியத்தை அடைந்து வாழ்ந்துவிடுகிறோம்.

குர்‍ஆன் பைபிளோடு ஒப்பிடும் அளவிற்கு அதற்கு தகுதியில்லை என்று கீழ்கண்ட‌ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது, இது உண்மையா இல்லையா என்பதை இந்த கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர்: சாமுவேல் கிரீன்


COMPARING THE BIBLE AND THE QUR'AN (How to do it Accurately) By Samuel Green

ஆக, குர்‍ஆன் மூலமாக வரும் குழப்பங்களை தீர்க்க உங்களுக்கு அதிகமான நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி இல்லை, எனவே கிறிஸ்தவ ஊழியர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விவரங்கள் குறித்து தங்கள் பிரசங்க பீடங்களில் நின்று மக்களுக்கு சொற்பொழிவு ஆற்றினாலே போதும்.



2. கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்காமல் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமுண்டா? கிறிஸ்தவ கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லை என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி மிகவும் தவறானது. உண்மையைச் சொன்னால், இஸ்லாம் மட்டுமே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தத்தில் மக்களை அடிமையாக்கிக்கொண்டு இருக்கிறது என்று அனுதினமும் நாம் இஸ்லாமிய நாட்டு செய்திகளில் காணமுடியும்.

பல இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறினால் பொதும், இனி அந்த நாட்டில் அவன் வாழ்வதற்கே வழியில்லமல் போய் விடும், எகிப்தில் சிறைச்சாலையில் பல பேர் இப்படி கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஆப்கனிஸ்தானில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவத்தை தழுவினார் என்பதற்காக அவன் கொல்லப்படவேண்டும் என்று சொல்லி, கொடுமைப்படுத்திய செய்தியை நாம் கேட்டு இருக்கிறோம். மலேசியாவில் பல ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த நல்ல குடும்பத்தை, ஒருவர் இந்து என்பதால், கணவனையும் மனைவியையும் பிரித்த பெருமை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு அல்லாமல் வேறு எந்த சட்டத்திற்கு வரும் சொல்லுங்கள். இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், இதற்கு எதிராக இஸ்லாமிய நாட்டில் யாராவது கேள்வி கேட்கமுடியுமா?

ஆனால், இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக இல்லாததால், இங்கு இருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமைப்பற்றி பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.

ஒரு பத்திரிக்கை நிறுபர் இணையத்திலிருந்து "இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் உரிமைகள்" என்ற தலைப்புப் பற்றி கட்டுரையை படித்ததற்காக, அவருக்கு மரண தண்டனை விதித்தார்களாம், ஆப்கனிஸ்தானில். இது தான் கேள்வி கேட்டால் பதில் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு அழகா? இவர் பரிதாபத்திற்கு உரியவர், அதாவது கேள்வியும் கேட்கவில்லை, படித்தார் அவ்வளவு தான், அதற்கே இந்த தண்டனை, ஒரு வேளை இவர் படித்து கேள்வி கேட்டு இருந்தால்? கேள்வி கேட்ட அந்த அரங்கத்திலேயே மரித்து இருப்பார் என்று எண்ணுகின்றேன்.

Young journalist sentenced to death in Afghanistan for reading about women's rights on the internet

A 23-year old has been sentenced to death for downloading information about women's rights in Afghanistan.

Journalist Pervez Kambaksh was reading about the role of women in Islamic socieites.
Source: http://www.dailymail.co.uk/pages/live/articles/news/news.html?in_article_id=511423&in_page_id=1770


அருமையான சுதந்திர நாடுகளில் சுகமாக வாழும் இஸ்லாமிய அறிஞர்களே, தமிழ் இஸ்லாமிய அறிஞர்களே, இஸ்லாம் பற்றி எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, உங்கள் இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள் இஸ்லாமிய நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமைப்பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக படித்ததற்கும், கேள்வி கேட்டதற்கும் அழிந்துக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு உங்கள் இஸ்லாமைப்பற்றி போதியுங்கள். பிறகு வந்து எங்களுக்கு விளக்குங்கள்.

நாளைக்கு இந்தியாவும் ஒரு இஸ்லாமிய நாடாக மாறினால், கேள்விகள் கேட்கும் எங்கள் மேல் முதல் கல் எறிபவர்கள் கூட நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது இந்நாடு ஒரு ஜனநாயக நாடு எனவே, "நீங்கள் கேள்விகள் கேட்டால் நிதானமாக பதில் தருவோம், உங்களுக்கு உங்கள் மதம், எங்களுக்கு எங்கள் மதம்" என்று வேதாந்தம் பேசுவீர்கள். உண்மை இஸ்லாமை இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பார்க்கமுடியாது, இஸ்லாமிய நாடுகளில் மட்டும் தான் பார்க்கமுடியும்.

ஆனால், கிறிஸ்தவமார்க்கத்தில் இஸ்லாம் போல‌ கேள்விகள் கேட்பவர்களை கொலை செய்வதில்லை. அப்படி செய்யும்படி பைபிள் சொல்வதும் இல்லை. கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு சரித்திர விவரங்களோடு, ஆதாரங்களோடு பதில் தருகிறோம். வேண்டுமானால், தமிழில் இப்படிப்பட்ட தளங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமே தவிர, ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

கிறிஸ்தவ கேள்வி பதில் ஆங்கில தளங்களில் சில:


1. Answering-Islam.org: உலகத்திலேயே முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் முதல் தரமான தளம்.உலகத்தில் எந்த ஆங்கில இஸ்லாமிய தளம் எந்த கேள்வியை முன்வைத்தாலும், அதற்கு பதில் இந்த தளத்தில் காணலாம்.

http://www.answering-islam.org/

இத்தளத்தை இஸ்லாமிய உலகத்திற்கு சிம்ம சொப்பனம் என்று கூறுவேன். இத்தளத்தில் பல நூறு புத்தகங்கள், ஆயிரகணக்கான கட்டுரைகள், கேள்விகளுக்கு பதில்கள், இஸ்லாமியர்களுக்கு மறுப்புக்கள் என்று பல கட்டுரைகள் காணக்கிடக்கின்றன.பல மொழிகளிலும் இத்தளம் உள்ளது. கூடிய சீக்கிரத்தில் இத்தளத்தின் ஆங்கில கட்டுரைகள் தமிழிலும் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தளத்தில் நம் இந்திய நாட்டில் திருமகன் திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால், இதுவரை ஜாகிர் நாயக் அவர்கள் இவர்கள் சொல்வது தவறு என்றுச் சொல்லி, தன் தளத்தில் ஆதாரபூர்வமான கட்டுரைகள், மறுப்புக்கள் எழுதமாட்டார்.

இந்த தளத்தின் தலைப்புகளில் சில:

Introductory Articles The Bible Basic Christianity Whey they Converted Index to Islam The Quran Muhammad Polemics Rebuttals Women in Islam Under Islamic Rule Islam and Terrorism Email Dialogs Question and Answers Other Topics New Artilces Other Languages Individual Authors

இத்தளத்தின் கட்டுரைகள் சிலவற்றை நான் இவர்களின் அனுமதி பெற்று மொழிபெயர்த்துள்ளேன், அவைகளைப் பற்றி நம் தமிழ் நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் முச்சு விடுவதில்லை.

கீழ்கண்ட கட்டுரைகள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் ஆகும்.

1. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

2. ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Allah Starts Christianity...by Accident)

3. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

4. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும

5. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

2. Bible Query . com : ஆயிரக்கணக்கான பைபிள் கேள்விகளுக்கு பல தலைப்புகளில் பதில்கள்:(7300 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதில்கள்)

http://www.biblequery.com/ and http://www.muslimhope.com/

இந்த தளத்தில் கீழ்கண்ட தலைப்புகளில், கீழ்கண்ட எண்ணிக்கையில் பதில்கள் சொல்லப்பட்டுள்ளது:

Archaeology / history 582 Original language 380 Practice 717 Doctrine 875 Logic 588 Unclassified 1125 Manuscripts 364 Translations today 696 Experience 1119 Prophecy 284 Science 80 False religions 510

3. Answer-Islam.Org ஆன்சரிங் இஸ்லாம் போல இஸ்லாமிய அறிஞர்களுக்கு மறுப்பு கட்டுரைகளை எழுதும் தள‌ம்

http://www.answer-islam.org/

4. Stand To Reason தளம்: நவீன காலத்தில் சமுதாயத்தில் மனிதன் சந்திக்கும் பல பிரச்சனைகள் மூலமாக எழும் கேள்விகளுக்கு, பைபிள் முலமாக பதில்கள், ரேடியோ கேள்வி பதில் நிகழ்ச்சிகள்

http://www.str.org/site/PageServer?pagename=homepage

இந்த தளத்தின் கேள்வி பதில்களின் தலைப்புகள்: Apologetics Bio-Ethics Christianity And Culture Ethics Miscellaneous Philosophy Science Theology

5. Let us Reason
தளம்:

http://www.letusreason.org/

இந்த தளத்தின் கேள்வி பதில்களின் தலைப்புகள்:

Response to all the Religions Historic true Christianity Cults Escaping the Cults Apologetics Current Trends Bible Doctrines Bible explanations Trinity / Deity World Religions

6. Christian Think Tank
தளம்:

http://www.christian-thinktank.com/

இந்த தளத்தின் கேள்வி பதில்களின் தலைப்புகள்:

Thinking of approaching God? Series, Syllabi, and Larger Studies Of Interest to Followers of Other Religions Philosophical/Theological Topics The Christian Experience

7.
Chrsitian Answers.Net தளம்: 42 மொழிகளில் கேள்வி பதில்களை இத்தளத்தில் நாம் காணலாம்.

http://www.christiananswers.net/

8. History Cart. Com தளம்: சரித்திர ஆதாரங்களோடு கூடிய பதில்கள், பைபிளில் பழைய, புதிய ஏற்பாட்டின் எபிரேய கிரேக்க பிரதிகளின் புகைப்படங்கள், பழைய ஏற்பாட்டு சரித்திர கண்டுபிடிப்புகளின் விவரங்கள் என்று பல விவரங்களை இந்த தளத்தில் காணலாம்.

http://historycart.com/

9. Answers in Genesis தளம்: இந்த தளத்தின் முக்கிய நோக்கம், பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் அளிப்பது.

http://www.answersingenesis.org/

10. Got Questions.org தளம்: இந்த தளத்தில் 141,555 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழிலும் கேள்வி பதில்கள் உள்ளன. மட்டுமல்ல, 72 மொழிகளில் கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டு பதியப்பட்டுள்ளது.

http://www.gotquestions.org/ - 141,555 Bible Questions Answered!

அருமையான இஸ்லாமிய அறிஞர்களே, இப்படி அனேக தளங்கள் கிறிஸ்தவ கேள்வி பதில்களுக்காக உள்ளன. எடுத்துக்காட்டுக்காக சில தளங்களை மட்டுமே நான் கொடுத்தேன். இவைகள் அனைத்தும் பைபிள் பற்றி நாத்தீகர்களால் கேட்கப்படும் சரித்திர, விஞ்ஞான மற்றும் அகழ்வாராய்ச்சி கேள்விகளுக்கும், இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கும் பதில் தரும் தளங்கள்.

எனவே, கேள்விகள் கேட்க கிறிஸ்தவத்தில் வாய்ப்பு இல்லை என்றுச் சொல்லாதீர்கள், கிறிஸ்தவம் ஒரு அரசியல் மார்க்கமல்ல, இது ஒரு ஆன்மீக மார்க்கம். கட்டாயப்படுத்தி அதிக நாட்கள் எந்த மார்க்கத்திலும் யாரையும் நீடித்து நிலைத்துவைக்க முடியாது, வேண்டுமானால், இஸ்லாமிய நாடுகளில் "உயிருக்கு பயந்து" இஸ்லாமியர்கள் போல நடிப்பவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் "நீங்கள் உங்கள் மனதின் விருப்பத்தின்படி எந்த மதத்திற்கும் மாறலாம், கட்டாயமில்லை, கொல்லப்படமாட்டீர்கள் என்று சட்டம் கொண்டுவந்து, அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள், சில ஆண்டுகளில் எத்தனை மசூதிகள் காலியாக கிடக்கும் என்று. எனவே, இந்தியாவில் இஸ்லாமை வெளிப்படுத்தும் விதம் வேறு, இஸ்லாமிய நாடுகளில் வெளிப்படுத்தும் விதம் வேறு. உங்கள் "இந்திய இஸ்லாமை" பார்த்து யாரும் மயங்கிவிட தயாராக இல்லை, எல்லாரும் உலக செய்திகளை படிக்கிறார்கள்.

எனவே, குர்‍ஆன் இஸ்லாமின் அடிப்படையாக இருக்கும் வரை, முகமது உங்கள் வழிகாட்டியாக இருக்கும்வரை, தீவிரவாதிகள் தங்கள் கைகளில் குர்‍ஆனை தூக்கி காட்டிக்கொண்டு இருக்கும் வரை உங்கள் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சிகள் குறையாது.

அறிவுப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எங்களுக்கு தளங்கள் உண்டு, புத்தகங்கள் உண்டு, ஊழியர்கள் உண்டு. தமிழில் தான் இன்னும் இப்படிப்பட்ட தளங்கள் இல்லை என்பது வருத்தப்படவேண்டிய விஷயம். ஏற்கனவே, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும்(http://www.tamilchristians.com/), ஈஸா குர்‍ஆன் தளமும்(www.geocities.com/isa_koran) மிக மிக சிறிய அளவில் இந்த வேலையை ஆரம்பித்துள்ளது. அதே போல சில கிறிஸ்தவ சகோதரர்களும் தங்கள் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது தான் தமிழ் கிறிஸ்தவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இன்னும் சிலபேர் உலக இஸ்லாமிய செய்தியை தங்கள் தளங்களில் பதித்துக்கொண்டு, சில நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு மறுப்பு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கிறிஸ்தவர்களிடையே இஸ்லாம் பற்றிய விழுப்புணர்வு இப்போது தான் சிறிது சிறிதாக வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில‌ ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்ப்பது போல, தமிழிலும் கிறிஸ்தவ கேள்வி பதில் தளங்கள் வரும் என்று நான் நிச்சயமாக கூறமுடியும். காதுள்ளவன் கேட்கக்கடவன், கண்ணுள்ளவன் பார்க்கக்கடவன். ஆக, நீங்கள் அதிகமாக இஸ்லாம் கொள்கை விளக்க கூட்டங்கள், கேள்வி பதில் கூட்டங்கள் நடத்துவதற்கு காரணங்கள், குர்‍ஆனும், முகமதுவின் வாழ்க்கையும், ஹதீஸ்களும், இஸ்லாமிய அறிஞர்களும், ஷரியா சட்டமும், தங்களை இஸ்லாமியர்களாக அடையாளம் காட்டும் தீவிரவாதிகளும் தான் காரணம் என்று நான் கருதுகிறேன்.கிறிஸ்தவத்திற்கு இந்த பிரச்சனை இல்லை என்பதால், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவர்களுக்கு அதிகமாக தேவையில்லை.

கட்டுரை முற்றிற்று

StumbleUpon.com Read more...

வைப்பாட்டி வீட்டுக்கு போன கோவலனுக்காக காத்திருக்கும் கண்ணகிகள்

கணவன் பொம்பளப் பொறுக்கியா இருந்தா மனைவி என்ன செய்யனும்?

பார்ப்பனர்களின் மதத்தில் பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப் படுகிறது என்பதற்கு ஒரு சாம்பிள்.

"கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்த்ரீலோலனா யிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்த்ரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது." (மநு: 5:154)

இன்னொரு சாம்பிள்.

"கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளியாகவிருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம், துணிமணிகள், படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது." (மநு: 9:78)

இதுமட்டுமல்ல.. பார்ப்பனர்களின் மதம் பெண்களைப் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம் வைத்திருக்கிறது தெரியுமா? இதோ..

"மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்." (மநு: 2:213)

இன்னொன்று..

"மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்." (மநு 9:15)

இவங்களோட அம்மா, தங்கை, மனைவி, மகள் எல்லாம் மாதர்கள் இல்லையா?

இதையெல்லாம் விட படு கேவலமான ஒரு'கொள்கை'யும் மநுவில் இருக்கிறது.

"தாய், தங்கை, பெண் இவர்களுடன் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது" (மநு: 2:215)

இதுக்கு என்ன காரணம்? தாய், தங்கை, மகளாக இருந்தால் கூட தனியா இருக்குறப்போ இவனோட மனசை அவங்க கெடுத்துடுவாங்களாம். அட கேடுகெட்ட ஜென்மங்களே.

மனைவியை வேற எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க.

"ஒருவன் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம்." (மநு: 9:52)

இன்னொன்று.

"பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால், அப்போது அந்த ஸ்த்ரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது" (மநு: 9:59)

இதையெல்லாம் படிச்சுட்டு பார்ப்பன பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களின் முகத்தில் காரித்துப்பி தொடப்பக்கட்டையால அடிச்சு விரட்டுனா அதுக்கு நாம பொறுப்பில்லை!

http://unmaiudaiyaan.blogspot.com/2008/03/blog-post_08.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP