சமீபத்திய பதிவுகள்

எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான்

>> Tuesday, April 27, 2010

எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான்

எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்.

தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

கடைசியாக எமக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பமாக நாடு கடந்த தமிழீழ அரசு விளங்குகின்றது. அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொதுத் தேர்தலின் பின்னர் தமிழீழத் தனிநாட்டிற்கான ஒரு அரசு நாடு கடந்து அமையப் போகின்றது என்பது ஈழத் தமிழினத்திற்கு ஒரு இனிப்பான செய்தியாக அமையப் போகின்றது.

நயவஞ்சகத்தனத்தால் எமது விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்களிடத்தில் தனிநாட்டுக்கான அவா-விருப்பம்-தேவை அற்றுப் போய்விட்டது என்ற சிங்களத்தின் கபடத்தனமான பிரசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்குகொண்டு- அலைஅலையாக நீங்கள் அளிக்கும் வாக்குகள் சிங்களத்தின் உச்சிமண்டையை மீண்டுமொரு தடவை பிளந்தே தீரும்.

புலம்பெயர் தமிழர்களே….

சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென சர்வதேசத்தின் முன் சிங்களம் செய்துவரும் பொய் பிரச்சாரங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள்.

சிங்களத்தின் கொடூர கரங்களிலிருந்து தப்பித்து நீங்கள் அடைக்கலம் புகுந்துள்ள நாடுகளில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்து உங்களது உரிமை அவாவை உலகிற்கு எடுத்துக் கூறுங்கள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டதென்று சொன்னவர்களின் முகத்தில் ஓங்கி அறையுங்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதியதொரு பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் அண்ணன் உருத்திரகுமாருக்கு கைகொடுங்கள். அவரது உன்னதமான பணி எழுச்சிகொள்ள வழிசெய்யுங்கள்.

நாங்கள் பிரிந்து நிற்பது இனியும் வேண்டாம். புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வடிவம் கொடுப்போம். எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவன் நேரடியாக வராவிட்டாலும் அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்.

சிந்திப்போம்…விரைந்து செயற்படுவோம்..நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதன் மூலம் தனிநாட்டுக்கு சிறந்த அத்திபாரத்தை இடுவோம்.

நெதர்லாந்திலிருந்து
தர்சானா


source:tamilspy



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்

பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்

Top global news update 

துபாய்: மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனது கணவரை விட்டு பிரிந்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார். முதியவரிடமிருந்து, விவகாரத்தும் பெறப்பட்டு விட்டது.


இந்த சம்பவத்தை அடுத்து, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, சவுதி அரேபியாவில் வலுத்து வருகிறது. கடந்த 2005ல் சவுதி மன்னர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையமும், இதே கருத்தை தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரித்து, அதை சட்டமாக்க, சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது.


இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், குழந்தை நல மருத்துவர், மத அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில், இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தரப்பினர்,'பல ஆண்டுகளுக்கு முன், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. தற்போது இதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்கின்றனர்.சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அல்-மனே கூறுகையில், 'பழங்காலத்திலிருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு' என்றார்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை? உஷார்... உடல் நலம் பாதிக்கப்படலாம்


 

 

புதுடில்லி : உங்கள் வீட்டுக் குழந்தை அதிக நேரம் கம்ப்யூட்டரில் செலவழிக்கிறதா? உடனடியாகக் கண்காணியுங்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறிப் போனால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.


பயமுறுத்தவில்லை. உண்மை அதுதான். இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அருகிலிருப்பவர் கூட இணையம் மூலம்தான் தொடர்பு கொள்கிறார். இச்சூழலில் நம் வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்குமானால், நம் குழந்தைகளின் நடவடிக்கைகளை ஆராய்வது அவசியம். டில்லி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். தங்கள் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இன்றைய நிலையில் பெரும்பாலோரை அடிமையாக்கி வைத்துள்ளன. இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் கேம்ஸ் வலைத்தளங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் வருகின்றது. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூட நன்றாகப் பேசி சிரித்து இருப்பதில்லை. எப்போதும் கனவுலகில் மிதக்கின்றனர். இது அவர்களுக்கு எளிதாகவும் வாய்க்கிறது.


'secondlife.com, gojiyo.com, farmville போன்ற வலைத்தளங்கள் 'அனிமேஷன்' மூலம் கற்பனை உலகிற்குள் குழந்தைகளை இழுக்கின்றன. இதனால், குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உண்மையான உலகிலிருந்து துண்டிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது கல்வி இரண்டாமிடத்துக்குத் தள்ளப்படுகிறது. வலைத்தளங்களின் விளையாட்டுகளில் ஜெயிப்பதுதான் அவர்களது குறிக்கோளாகிறது' என்கிறார் ஒரு டாக்டர். உடல்நலம் பாதிப்பதால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படுகிறது. இது பல நோய்களுக்கு வித்திடுகிறது. குறிப்பாக, தொடர்ச்சியான தலைவலி, கண் எரிச்சல், இமைகளில் எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதனால் தொடர்ந்து, கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை இருந்துவிடாமல் அவ்வப்போது அவர்களுடன் விளையாடுங்கள். அப்படி 'நெட்' அடிமையாகும் அறிகுறி தெரிந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நலம் என்கின்றனர் உளவியல் துறை நிபுணர்கள்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP