சமீபத்திய பதிவுகள்

உலகின் மிகப் பெரிய நாயை காண வேண்டுமா?இங்கு வாருங்கள்

>> Saturday, December 26, 2009



Standing at nearly 43 inches tall from paw to shoulder and weighing a staggering 245lbs could this be the world's new tallest dog? Pictured here in the parks of Tuscon, Arizona, George, a four-year-old blue great dane, looks more like a miniature horse than a dog. More images after a break.......
'Giant George' and owner Dave Nasser share a couch together: The four-year-old blue great dane, weighs a staggering 245lbs and measures almost 43ins at the shoulder. The gentle giant, who measures 7ft 3ins from nose to tail, could be a prime contender to take the title from the former record holder, Gibson, a harlequin Great Dane who passed away from cancer last August.

Now George's owners, David and Christine Nasser, are awaiting confirmation from Guinness World Records to see if he has achieved the lofty heights.

'He's 42.625 inches at the shoulder,' said David. 'He's very very unique.' 

According to David, George consumes 110lbs of food every month, and sleeps alone in his own Queen Size Bed.  David and Christine raised George from when he was 7 weeks old, but never expected him to grow so big. 



Magnificent: George measures more than 7ft from nose to tail and tucks away 110lbs of food every month


With size comes problems: The giant great dane barely fits in the back of his owner's SUV

The couple eventually had to move their aptly named dog out of their king sized bed, when he grew too large for the three of them to share the same sheets. 

Dr. William Wallace of the Buena Pet Clinic in Tucson, who witnessed the documentation necessary for the Guinness record, said: 'In my 45 years of experience working with giant breed dogs, without question, George is the tallest dog I have ever seen.' 

David is currently rushing to get that necessary documentation into Guinness as other dog owners are coming forth claiming the record.  As they wait for the results to come through, George is busy occupying himself with his new found stardom and even has a Facebook fan page and Twitter accounts for his adorning fans. It appears as though the sky's the limit for this mammoth hound.



Paws for thought: George's giant feet dwarf his owner Dave Nassar's hand. Last August the worldís tallest dog, Gibson, a harlequin Great Dane, passed away from cancer 

source:dailymail

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மக்கள் தொகை அதிகரிப்பில் 2025ல் சீனாவை முந்தும் இந்தியா


 

Front page news and headlines today 

 நியூயார்க் : மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, வரும் 2025ம் ஆண்டில் சீனாவை முந்தும் என ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகை கணக் கெடுப்பு நிறுவனம், உலகில் உள்ள 227 நாடுகளில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இந்த ஆய்வில் வரும் 2025ம் ஆண்டில் இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் சீனாவை முந்தும் என்று தெரிவித் துள்ளது.



ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் இப்போது 1.4 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சி சீனாவை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். இதே வேகத்தில் சென்றால், 2025ல் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விடும். ஒவ்வொரு பெண்ணும் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால், இந்தியாவில் இதன் சராசரி விகிதம் 2.7 ஆக உள்ளது. இந்த விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது என்றாலும், மிகவும் மிதமாகவே குறைய ஆரம்பித் துள்ளது. இதனால், மக்கள் தொகை பெருக் கத்தை கட்டுப்படுத்த பெரிய அளவில் பயன் இருக்காது. அதே சமயம், சீனாவில் பிறப்பு வளர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவை விட குறைவாக இருக்கும் சீனாவில், 1990ம் ஆண்டில் இது 2.2 சதவீதமாக இருந்தது; 1995ல், 1.8 ஆக குறைந்தது. 2000ம் ஆண்டில் இந்த விகிதம் 1.6 க்கு குறைந்து விட்டது




source:dinamar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

டி.வி. நிகழ்ச்சி பார்த்து மண்எண்ணை ஊற்றி தீவைத்த சிறுவன்

டி.வி. நிகழ்ச்சியை பார்த்து வாயில் மண்எண்ணை ஊற்றி தீவைத்த வேலூர் சிறுவன் : சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
 சென்னை, டிச. 26-
 
விளையாடும் நேரங்களை தவிர வீடுகளில் இருக்கும் போதெல்லாம் குழந்தைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொள்வது டி.வி. நிகழ்ச்சிகள்தான்.
 
டி.வி.க்களில் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளை விட ஆபத்தான நிகழ்ச்சிகளே தற்போது அதிகம் ஒளி பரப்பாகின்றன.
 
முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் திகைப்பூட்டும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. "டி.வி.யில் வருவது போல யாரும் இதை செய்து பார்க்க வேண்டாம்" என்கிற எச்சரிக்கையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வேலூர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பேரணாம்பட்டை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் வினீத் (வயது 13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
 
இவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து டி.வி.யில் வரும் அந்த குறிப்பிட்ட சாகச நிகழ்ச்சியை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.
 
சம்பவத்தன்று அந்த டி.வி. நிகழ்ச்சியில் சாகசம் நிகழ்த்தியவர் வாயில் மண்எண்ணையை ஊற்றி அதனை வெளியில் கொப்பளித்து தீவைக்கும் சாகசத்தை செய்து காட்டினார்.
 
இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்த வினீத் தனது நண்பர்களுடன் இது பற்றி விவாதித்தான். நாமும் அதுபோல் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் வினீத்துக்கு ஏற்பட்டது. இதையடுத்து அன்று மாலையில் வீட்டில் இருந்த மண்எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வினீத் வெளியில் எடுத்து சென்றான்.
 
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த "விபரீத விளையாட்டு"க்கு ஆயத்தமானான். இதற்காக காயந்த சறுகுகள் மற்றும் குப்பைகளை கூட்டி அதில் தீவைத்தான்.
 
பின்னர் அதன் அருகில் அமர்ந்து வாயில் மண் எண்ணையை ஊற்றி வினீத் சருகில் பற்றிய தீயை கையில் எடுத்தான். அப்போது அவனது உடலில் திடீரென தீபற்றிக் கொண்டது. இதில் வினீத்தின் முகத்தில் இருந்து வயிறு பகுதிவரை தீயில் கருகியது.
 
இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வினீத் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது, வினீத்தால் சரியாக பேச முடியவில்லை. படுத்த படுக்கையாக இருக்கும் அவனது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
சிறுவர்களின் உயிருக்கு உலைவைக்கும் இது போன்ற டி.வி. நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதற்கு பெற்றோர்கள் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற விபரீதங்களை தடுக்க முடியும்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஜப்பானில், ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் தற்கொலை

 
 டோக்கியோ, டிச. 26-
 
உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தொழில் வளம் மிக்க நாட்டில் தற்கொலை சாவுகளும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 11 மாதங்களிலும் மட்டும் 30 ஆயிரத்து 181 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
 
இந்த தற்கொலை விகிதம் கடந்த 12 ஆண்டுகளாக 30 ஆயிரத்துக்கு குறையாமல் அதிகரித்தப்படியே வருகிறது. இந்த தகவலை தேசிய போலீஸ் முகவாண்மை வெளியிட்டுள்ளது.
 
தற்கொலை சாவுகள் அதிகரித்து வரும் நாடுகளில் ஜப்பான் முன்னணியில் திகழ்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எனவே, தற்கொலையை தடுக்கும் வகையில் அந்நாட்டு மக்களுக்கு கவுன்சிலிங் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
உலகில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலும் ஜப்பான் சிக்கி தவிக்கிறது. இங்கு பலர் வேலையின்றி உள்ளனர். எனவே, தற்கொலைகள் அங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மகிந்தவுக்கு பேனா கொடுத்த சீனா-நகைச்சுவை வீடியோ


StumbleUpon.com Read more...

தமிழ்மொழி செம்மொழி என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் `ராபர்ட் கால்டுவெல்'

தமிழ்மொழி செம்மொழி என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் `ராபர்ட் கால்டுவெல்' கருணாநிதி தகவல் சென்னை, டிச.26- தமிழ் மொழி செம்மொழி என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் `ராபர்ட் கால்டுவெல்' ஆவார் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்மொழி செம்மொழி தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ம் ஆண்டு அறிஞர் கால்டுவெல், தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும். செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது. சமஸ்கிருதச் சொற்களையும், எழுத்துக்களையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு; பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது என்று தமிழ்மொழி செம்மொழியே எனச் சான்றாதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார். நாகரிகம்-பண்பாடு அறிஞர் கால்டுவெல்லின் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. தமிழ், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேதான், அண்ணா இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, அவரது திருவுருவச் சிலையைச் சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிடச் செய்தார். தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கிய ராபர்ட் கால்டுவெல் திருவுருவச் சிலை, 2.1.1968 அன்று, அன்றைய தமிழக மேலவைத் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேலர் தலைமையில், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்மொழி செம்மொழியேயென அறுதியிட்டு உறுதியாக சைவ சித்தாந்த மகா சமாஜம் 1918-ம் ஆண்டிலேயே நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் ஆர்வலர்களாலும், அன்பர்களாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிறைவோடும் நினைவு கூரத்தக்கதாகும். அஞ்சல் தலை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைப் பற்றி, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளார் 12.3.1918-ந் தேதி பற்றிய தமது நாட்குறிப்பில், "தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விண்ணப்பம் விடுப்பதற்குப் பச்சையப்பன் கல்லூரியில் 15-ம் நாள் (15.3.1918) நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு, கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.,எம்.எல்., வேண்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார். தஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கம், செம்மொழி வரலாற்றிற்கு வழங்கியுள்ள மிகச்சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நாள்வரை தமிழர்களால் மறக்கவொண்ணாததுமாகும். த.வே.ராதாகிருஷ்ணப் பிள்ளை உள்ளிட்ட தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பயிற்சியும் உடையோர் சிலரால் 1911-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம்; தொடங்கிய காலம் முதல் தமது வாழ்நாள் இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை ஆவார். அதனால் தான், 18.2.2006 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் உமாமகேசுவரனார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் நான் உரையாற்றியபோது:- ஆதாரம் "உமாமகேசுவரனார் பெயர் இன்று மற்ற அறிஞர்களைவிட அதிகமாக நினைவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது. காரணம் தமிழ்ச் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற் கலைஞருக்கு அடுத்து, நம் நினைவுக்கு வருகிற பெயர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியவர். இல்லையேல், தமிழ் செம்மொழியாவதற்கு எந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கின்ற அரசோடு பேசமுடிந்தது?'' - என்று கரந்தை உமாமகேசுவரனாரின் அருமைபெருமைகளுக்கு அணி செய்தது எனது நினைவில் அழுத்தமாக அச்சியற்றப் பெற்றிருக்கிறது. தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டுகளுக்கான விழா, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய நாட்களில் திருக்கோவிலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலிïர் திருஞானியார்மடத்தின் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் தலைமையில், தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, தமிழறிஞர் வேங்கடசாமி நாட்டார், டி.என்.குருமூர்த்திப் பிள்ளை, டி.கூரத்தாழ்வார் முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அவ்விழாவில், "தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிப்பட பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டது. தீர்மானம் 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய நாட்களில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் தலைமையில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டுவிழாவில், "உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில், முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித் தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாயிருப்பதால், அதனை அத்தகை மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது'' எனும் தீர்மானம் இயற்றப்பட்டது. 1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவிற்குத் தலைமையேற்ற திருப்பாதிரிப்புலிïர் ஞானியார் அடிகள் தனது உரையில், "இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத்தக்க தாகும்'' என்று தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார். இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் தொடக்கக் கட்டத்தில்; தமிழ், செம்மொழியென அரசியல் நிலையில் அங்கீகரிக்கப்பட்டு உரிய முறையில் சிறப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும். செம்மொழி வரலாற்றில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.


source:daily thanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளிய பெண் சூசன்னா மாய்லோ

 



வாடிகன் தேவாலயத்தில் போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளிய பெண் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது பரபரப்பு வாடிகன் சிட்டி, டிச.26- வாடிகன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது, இளம்பெண் ஒருவர் பாய்ந்து சென்று போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாடிகன் தேவாலயம் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவும் நேற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமாக விளங்கும் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நற்செய்தி வெளியிடுவது வழக்கம். போப் ஆண்டவர் வந்தார் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக 82 வயதான போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் தேவாலயத்துக்கு வந்தார். அவர் தங்க, வெள்ளை நிற அங்கி அணிந்து இருந்தார். அவருடன் மதகுருக்களும் வந்தனர். தேவாலயத்துக்குள் போப் ஆண்டவர் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரு புறமும் திரண்டு நின்ற கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கீழே தள்ளிய பெண் அப்போது, சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று தடுப்பு கம்பியை தாண்டி குதித்து போப் ஆண்டவரை நோக்கி ஓடினார். போப் ஆண்டவரை நெருங்கிய அந்த பெண், அவர் அணிந்திருந்த அங்கியை பிடித்து இழுத்தார். இதனால் போப் ஆண்டவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருடன் வந்து கொண்டிருந்த மதகுருமார்கள் சிலரும் தடுமாறி கீழே விழுந்தனர். மேலும் அந்த பெண்ணும் தரையில் விழுந்தார். இந்த சம்பவத்தால் தேவாலயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயம் இல்லை உடனே பாதுகாவலர்கள் ஓடி வந்து, கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பாதுகாவலர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் போது போப் ஆண்டவருடன் தடுமாறி கீழே விழுந்த, பிரான்சு நாட்டு கத்தோலிக்க மதகுரு ரோஜர் எட்சகாரே (வயது 87) காயம் அடைந்தார். அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனே அவரை சக்கர நாற்காலியில் அமரச் செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே உடல் நலக்குறைவாக இருந்தவர். 2 மணி நேரம் பிரார்த்தனை எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு சிறிது நேரத்தில் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியது. அதன்பிறகு போப் ஆண்டவர் 2 மணி நேரம் பிரார்த்தனை நடத்தினார். அவர் பதற்றம் எதுவும் இல்லாமல் வழக்கம் போல் பிரார்த்தனை நடத்தினார். போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளிய பெண்ணிடம் வாடிகன் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சூசன்னா மாய்லோ (வயது 25) என்றும், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுள்ளார் என்றும் தெரியவந்தது. கடந்த ஆண்டு அந்த பெண் கடந்த ஆண்டும் இதேபோல் கிறிஸ்துமஸ் தினத்தன்று வாடிகன் தேவாலயத்துக்கு வந்து தடுப்பு கம்பியை தாண்டி குதித்து போப் ஆண்டவரை நெருங்க முயற்சி செய்ததாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிகோ லம்பார்டி தெரிவித்தார். இப்போது 2-வது முறையாக அவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். வாடிகன் தேவாலயத்துக்குள் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

source:daily thanthi

StumbleUpon.com Read more...

புதிய வருமான வரி பூதம் : சம்பளத்தை தாண்டி பெறப்படும் எல்லாவற்றுக்கும் வரி

 
 

Front page news and headlines todayமும்பை : மாதச் சம்பளம் வாங்குவோர் தலையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வருமான வரி "இடி' விழுந்துள்ளது. ஆம்! சம்பளத்தில் பெறும் வாடகைப்படி, கார், பைக் சலுகை போன்ற சலுகைகளுக்கும் வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.



சம்பளத்தில், அடிப்படை சம் பளம் , அகவிலைப்படி மட்டும் அல்ல, உதிரிச் சலுகைகள் என்பது தகவல் தொழில்நுட்ப கம் பெனிகள் வருகைக்குப் பின் அதிகரித்தன. இம்மாதிரி சலுகைகள் தருவதற்கு வரிவிலக்கு இருந் தது. ஆனால், உடனடியாக இதன் மீதான நேரடி வரிவிதிப்பு அமலாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அதிகபட்சம் சம்பளம் பெறுபவராக இருந்தால், சம்பளத்தில் 31 சதவீதம் வரை வரியாக கட்ட நேரிடும். இந்த புதிய வருமானவரி "பூதம்' திடீரென இப்போது ஓசைப் படாமல் நுழைந்து விட்டது. கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்தே முன்தேதியிட்டு வரி பிடித்தம் செய்ய, வருமான வரித் துறை உத்தரவிட்டு விட்டதால், ஒராண்டு முழுக்க போடப்படும் வரியை, வரும் மூன்றே மாதங்களில் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கம்பெனிகளுக்கு இது தொடர்பாக வருமான வரித்துறை கடிதம் அனுப்பி விட் டது. மூன்று மாத சம்பளத்தொகையில் ஓராண்டு வரியை பிடித்து விடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தில் இருந்தே, தனியார் கம்பெனி ஊழியர்கள் பலருக்கும் வரி பிடித்தம் செய்யப்பட்டு விடும்.



கடந்த பட்ஜெட்டை சமர்ப் பித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு அதிரடி இன்ப அதிர்ச்சியை தந்தார். அதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், "உதிரி சலுகைகள் ஆதாய வரி' ( பிரிஞ்ச் பெனிபிட் டாக்ஸ்)என்று ஒரு வரியை போட்டிருந்தார். அதை பிரணாப் நீக்கினார். ஒருவர் பெறும் சம்பளத்தில் சேரும் இதர சலுகைகள் மீதான வரி. இதை பிரணாப் ரத்து செய்ததும், தனியார் நிறுவன ஊழியர் கள், அதிகாரிகள் பெரும் சந்தோஷப்பட்டனர். ஆனால், அது நிலைக்கவில்லை. இப்போது தான் அதன் உண்மையான சுயரூபம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதன் விளைவு என்ன தெரியுமா? மொத்த சம்பளத்தில் வாங்கும் சலுகைப் பணம் எல்லாவற்றுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது தான்.



தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தரப்படும் சில சலுகைகளை கம் பெனி ஏற்றுக்கொள்வதில்லை. தாங்கள் வரி கட்ட வேண்டும் என்பதால், அதில் இருந்து தப்பிக்க, ஊழியர்களிடமே வரி பிடித்தம் செய்கிறது. மாதச் சம்பளத்தில், டி.டி.எஸ்., பிடிக் கப்பட்டு விடுகிறது. ஆனால், வரி பிடித்தம் செய்ய வேண்டாம் என்று நினைத்து, தனியார் நிறுவனங்கள் தரும் இதர சலுகைகளுக்கு வரி பிடிப்பதில்லை. இனி அதற்கும் பிடிக்க வேண்டும் என்பது தான், வரி ஆணையத்தின் குறிக்கோள். அதை இப்போது நிறைவேற்றி உள்ளது. மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சி.டி.பி.டி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய வரி விகிதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.



புதிய வரி விதிப்பின் சில அம்சங்கள்:



* கம்பெனி தரும் கார், அதை ஓட்ட நியமிக்கப்படும் டிரைவருக்கு தரும் சம்பளம் போன்றவை இதுவரை கம்பெனியே ஏற்று வந்தது; இனி இதற்கும் வரி உண்டு.



* சிறிய கார்கள் பயன்படுத்துவோரை விட, பெரிய கார்களை பயன்படுத்துவோருக்கு அதிக வரி பிடித்தம் செய்யப்படும்.



* வாடகைப்படியில் நகரங்களுக்கு ஏற்ப வரி பிடித்தம் செய்யப்படுகிறது. 7.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சம்பளத்தில் கணக்கிட்டு அதற்கு வரி பிடிக்கப்படும்.



* கம்பெனி தரும் கிரெடிட் கார்டு சலுகை, கம்பெனி பங்குகளை ஊழியர்களுக்கு சலுகை விலையில் தரும் "எஸாப்' சலுகைக்கும் கூட வரி உண்டு.



* குழந்தைகளுக்கு படிப்பு உட்பட கட்டண சலுகையை கம்பெனி தந்தால், அதற்கும் வரி உண்டு.



* விடுமுறை கால, சுற்றுலாச் செலவுகளை கம்பெனி ஏற்றாலும் அதற்கும் வரி பிடிக்கப் படும்.



* சென்னை உட்பட பெரிய நகரங்களில் வாடகைப்படி அதிகபட்சமாக 15சதவீத அடிப்படையில் தான் வரி வசூலிக்கப்படும்.



* கிளப்களில் உறுப்பினராக இருந்தாலும், அந்த கட்டணத் துக்கும் வரி பிடித்தம் உண்டு.



இந்த வரிப்பிடித்தம் பற்றி இப்போது தான் தெளிவுபடுத் தப்பட்டாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து விட்டதால், இந்த மாதத்தில் இருந்து மார்ச் வரை மூன்று மாதங்களின் சம் பளத்தில், மற்ற எட்டு மாதங்களுக்கும் சேர்த்து வரி பிடிக்கப்படும். அதேசமயம் கிராக்கிப்படி மற்றும் பிராவிடண்ட் பண்டுகளுக்கு கட்டப்படும் பணம் வரியில் இருந்து தப்பியது. ஏற்கனவே, எப்.பி.டி.,யில் வசூலிக்கப்பட்ட வரித்தொகையை விட, ஒருவர் இந்த புதிய வரி விதிப்பில் அதிகமாகவே செலுத்த வேண்டியிருக்கிறது. முன்பு சிதம்பரம் அமைச்சராக இருந்து அமல்படுத்தியதை விட, அதிக அளவு பிடித்தம் இந்த புது உத்தரவால் அமலாகிறது. கிட்டத்தட்ட 31 சதவீதம் வரை சம்பளத்தில் அதிகபட்சமாக இழக்க வேண்டியதிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP