சமீபத்திய பதிவுகள்

விண்டோஸ் வேகமாக செயல்பட வேண்டுமா !

>> Wednesday, March 10, 2010

 


உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம். 
கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இருந்தால், நம் உடலில் இருக்கும் ஸ்டேடிக் மின்சாரம் கம்ப்யூட்டரின் நுண்ணிய பாகங்களுக்குக் கடத்தாமல் இருக்கும் வகையில் அதனை வேறு உலோகங்களைத் தொடுவதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்திடலாம். 
ராம் மெமரி பலவகைகளில் கிடைக்கிறது. டி.டி.ஆர்2, டி.டி.ஆர்.3 மற்றும் பல பழைய வகைகளில் உள்ளது. தற்போது வரும் கம்ப்யூட்டர்களின் மதர்போர்டுகள் குறிப்பிட்ட வகை ராம் சிப்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். எனவே கம்ப்யூட்டருடன் தரப்பட்ட குறிப்பேட்டினைப் பார்த்து, எந்த வகை ராம் சிப்பினை மதர் போர்டு ஏற்றுக் கொள்ளும் எனப் பார்க்கவும். உங்கள் மெமரியினை 4 ஜிபிக்கு மேல் உயர்த்துவதாக இருந்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் சிஸ்டமாக இருக்க வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் வகையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தலாம். 
நீங்கள் கம்ப்யூட்டரை அடிக்கடி கேம்ஸ் விளையாடப் பயன்படுத்தாமல் இருந்தாலும், அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ் கார்டு ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவுவது நல்லது. குறிப்பாக விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா அவற்றின் யூசர் இன்டர்பேஸ் திரைகளின் காட்சித் தோற்றங்களைச் சிறப்பாக அமைத்திருப்பதால், கிராபிக்ஸ் கார்டு அதிக திறனுடன் இருப்பது இவற்றின் பயனை நன்கு நமக்குத் தரும். 
உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 என எதுவாக இருந்தாலும், இதனுடன் ஒட்டிக் கொள்ளும் தேவையற்றவைகளை, அவ்வப்போது நீக்குவது, இவற்றின் வேகமான செயல்பாட்டை உறுதி செய்திடும். 
தேவையற்ற செயல்பாடுகள், செயல்படுத்தாத ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நீக்கவேண்டும். இதனால் விண்டோஸ் தன் சக்தியை இவற்றில் ஈடுபடுத்தாமல், தேவைப்படும் புரோகிராம்களில் மட்டுமே பயன்படுத்த வழி கிடைக்கும். 
விண்டோஸ் எக்ஸ்பியில், சிஸ்டம் கண்ட்ரோல் பேனலைத் திறந்திடவும். அதில் அட்வான்ஸ்டு(Advanced)  டேப்பில் கிளிக் செய்திடவும். பின் செட்டிங்ஸ் (Settings) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்ஜஸ்ட் பார் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்ற ரேடியோ பட்டனைக் கிளிக் செய்திடவும். இதனால் மெனுவின் கீழாக ட்ராப் ஷேடோ போன்ற அலங்கார வேலைப்பாடுகள் நீக்கப்படும். 
விஸ்டாவில் சைட் பார் செயல் இழக்கச் செய்வதன் மூலம், இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஏரோ (Aero)  சூழ்நிலையை நிறுத்துவதன் மூலம், கம்ப்யூட்டரின் மெமரியையும், செயல்திறன் சக்தியையும் (Processing Power) மேம்படுத்தலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனுவில் பெர்சனலைஸ் (Personalize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விஸ்டாவில் விண்டோ கலர் அண்ட் அப்பியரன்ஸ் (Window Color and appearance) என்பதை கிளிக் செய்து அதில் எனேபில் ட்ரான்ஸ்பரன்ஸி (Enable Transparency)  என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் விண்டோஸ் 7 பேசிக் (Windows 7 Basic) என்ற தீமைத் தேர்ந்தெடுக்கவும். 
நாம் அடிக்கடி இணையத்தில் பார்க்கும் பல புரோகிராம்களை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகிறோம். இவற்றை இன்ஸ்டால் செய்கையில், சிஸ்டம் தொடங்கும்போதே, அவற்றைத் தொடங்கும் வகையிலும் அமைத்துவிடுகிறோம். இதனால் நமக்குத் தேவையான, அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற (எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோ ஷாப் போல) புரோகிராம்களின் இயக்க வேகம் பாதிக்கப்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பயன்படுத்தாத பல புரோகிராம்கள், இவற்றின் பின்னணியில் இயங்குவதே இதற்குக் காரணம். 
விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில், ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் புரோகிராம்ஸ் அண்ட் பைல்ஸ்(Search Programs and Files) என்ற பீல்டில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். சிஸ்டம் கான்பிகரேஷன் (System Configuration) விண்டோ இப்போது கிடைக்கும். இவற்றில் உள்ள டேப்களில் Startup  என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கட்டளை (Command) பிரிவில் உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம் உள்ளதா எனப் பார்க்கவும். எடுத்துக் காட்டாக, ஐட்யூன்ஸ்(iTunes) வந்த காலத்தில் அதனைப் பதிந்திருக்கலாம். இதனால் iTuneshelper.exe மற்றும்QTTask.exe என்ற இரு பைல்கள் இயங்கியவாறு இருக்கும். இவற்றினால் எந்த பயனும் தனியாக இல்லை. இது போன்ற தேவையற்ற புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் இயக்கப்படுவதைத் தடுக்கலாம். இதனால் ராம் மெமரி இடம் காலியாகி, அவசியமான புரோகிராம்கள் வேகமாக இயங்க வழி கிடைக்கும்.



சிஸ்டம் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க, அடிக்கடி சி டிரைவின் விண்டோஸ் டைரக்டரியில், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களைக் காலி செய்திட வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கியவுடன் இவற்றைக் காலி செய்திட வேண்டும். அல்லது சேப் மோடில் சென்று இவற்றைக் காலி செய்திடலாம். இதனால் பயன்படுத்தாத பைல்கள் பட்டியலில் உள்ள கடைசி பைல் வரை நீக்க முடியும். இதற்கு ஏற்கனவே இந்த பகுதியில் விரிவாகச் சொல்லப்பட்ட சிகிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.
இதில் இன்னும் ஒன்றைக் கவனிக்கலாம். ஏதேனும் ஒரு புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கத்திலிருந்து அறவே நீக்க, அதனுடன் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் 7ல் அன் இன்ஸ்டால் செயல்பாட்டுக்கென ஒரு சிறிய புரோகிராம் பைல் தரப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைப் பயன்படுத்தினாலும் சில பைல்கள் கம்ப்யூட்டரில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அறவே அனைத்து பைல்களை நீக்க சில தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller fromhttp://www.pcworld.com/downloads/file/fid,66703order,6page,1/description.html) என்னும் புரோகிராம் சிறப்பானதாகும். இதனை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம், குறிப்பிட்ட புரோகிராமின் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்தியே அனைத்து பைல்களையும் நீக்குகிறது. பின் மேலும் ஒரு படி சென்று சிஸ்டத்தை ஸ்கேன் செய்து, ரெஜிஸ்ட்ரியைத் தேடிப் பார்த்து, நீக்கப்படும் புரோகிராம் சார்பான அனைத்தையும் நீக்குகிறது. (இந்த புரோகிராம் குறித்து மேலும் தகவல்களுக்கு இந்த வார டவுண்லோட் பகுதியினைப் பார்க்கவும்.)
ஆன்லைன் கேம்ஸ், ஸ்ட்ரீமிங் மீடியா புரோகிராம்கள், இன்டர்நெட் போன் சர்வீசஸ், பிட் டாரண்ட் போன்ற டவுண்லோடிங் புரோகிராம்கள் ஆகியவை அதிக அளவில் டேட்டாவினைக் கையாளுவதால், நெட்வொர்க் பேண்ட் அளவில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே இவற்றைத் தேவைப்படும்போது மட்டும் இயக்கி, மற்ற நேரத்தில் இயங்கா நிலையில் வைத்திட வேண்டும்.
ஹார்ட் டிரைவ் ஒன்றை, அது உள்ளே இணைப்பதாயினும் அல்லது வெளியே வைத்து இயக்குவதாயினும், தேர்ந்தெடுக்கையில் அதன் இயக்க வேகம் அதிக பட்சம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும். உள்ளே வைத்து இயக்கும் இன்டர்னல் டிரைவ் மற்றும் வெளியே வைத்து, இணைத்து இயக்கும் எக்ஸ்டெர்னல் டிரைவ் என இரு வகைகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 
வெளியில் வைத்து பயன்படுத்தும் டிஸ்க் டிரைவ்களில் பல நன்மைகள் உண்டு. உங்கள் டேட்டாவினை நீங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டேட்டா பேக்அப் செய்வதற்கு பாதுகாப்பானதாகும். உள்ளிருந்து இயக்கக் கூடிய டிஸ்க்குகளில் சடா (SATA) வகை இணைப்புகள் சிறந்தவை ஆகும். அடுத்ததாக eSATA எனச் சொல்லப்படும் வேகம் கொண்டவை, யு.எஸ்.பி. அல்லது பயர்வேர் டிரைவ்களைக் காட்டிலும் வேகம் கொண்டவையாகும். ஆனால் இவற்றைப் பயன்படுத்த ஒரு ஆட் ஆன் கார்ட் தேவைப்படும். தற்போது 7,200 ஆர்.பி.எம். வேகத்திற்குக் குறைவாக எந்த ஹார்ட் டிஸ்க்கும் இயங்குவதில்லை. 10,000 மற்றும் 15,000 ஆர்.பி.எம். வேக டிரைவ்கள் கிடைக்கின்றன. ஆனால் சற்று கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். தற்போது அறிமுகமாகிப் பரவி வரும் சாலிட் ஸ்டேட் டிஸ்க், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அதிக வேகம் தரும். ஆனால் இவை இன்னும் குறைவான விலையில் கிடைப்பதில்லை. 
கம்ப்யூட்டர் செயல்படும் வேகத்தினை பிரிண்டர்களும் தாமதப்படுத்துகின்றன. அச்சின் தன்மையைச் சற்றுக் குறைவாக வைத்துக் கொண்டால், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகம் அதிகரிப்பதோடு, அச்சிடும் மையும் மிச்சப்படும்.
இணைய தளங்களை அச்சிடுகையில், அந்த பக்கத்தில் காணப்படும் விளம்பரங்கள், கிராபிக்ஸ் படங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே இந்த படங்கள் இல்லாமல் அச்சிடுவதே நல்லது. 
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அதில் டூல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Tools, Internet Options) தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் அட்வான்ஸ்டு(Advanced)   டேப் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் விண்டோவில் மல்ட்டிமீடியா பிரிவிற்குச் செல்லவும். அதில் �ஷா பிக்சர்ஸ் (Show Pictures) என்று இருப்பதன் எதிரே உள்ள பெட்டியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் டூல்ஸ், ஆப்ஷன்ஸ் (Tools, Options) தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் கண்டென்ட் (Content)  டேப்பில் கிளிக் செய்திடவும். Load Images Automatically என்று இருப்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். இந்த இரண்டு பிரவுசர்களிலும் ரெப்ரெஷ் பட்டனை அழுத்தி இணையப் பக்கங்களை படங்கள் இல்லாமல் இறங்கும்படி பெற்று, பின் பிரிண்ட் கட்டளை கொடுக்க வேண்டும். அச்சடித்து முடித்த பின் மீண்டும் மேலே காட்டியுள்ள இடங்களுக்குச் சென்று மீண்டும் கிராபிக்ஸ் படங்களைப் பெறுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தவும். குறிப்பிட்டுள்ள வழிகள் அனைத்தும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டின் வேகம் குறைகையில் நாம் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளாகும். இவற்றை ஓரிரு முறை எடுத்தால் மட்டும் போதாது. தொடர்ந்து அடிக்கடி இந்த செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வேகம் இழந்த கம்ப்யூட்டர் தொடர்ந்து பழைய கூடுதல் வேகத்தில் இயங்கும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் மரண அடி!முகமது யூசப்,யூனிஸ்கானுக்கு வாழ்நாள் தடை.

நம்பமுடியவில்லை... பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் மரண அடி!

 

ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இன்ப கனவுகள் ஓங்கி நிற்கும். ஆனால், அதற்கு மொத்த மரண அடியாக அமைந்துவிட்டது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. வேகங்களுக்கும், கடல் காற்றுக்கும் இடையில் பாகிஸ்தான் வீரர்களால் சிறப்பாக விளையாட்டை கொடுக்க முடியவில்லையா? அல்லது அனுபவமின்மையா?

தொடக்கம் முதல் இறுதி வரை சொத்தப்பலாகவே அமைந்தது!

தொடர் தொடங்கியது முதல் முடியும் வரை பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்கள். கம்ரன் அக்மால் மேட்ச் ஃபிக்ஸிங், அப்ரிதியின் பால் டாம்பரிங் (பந்தை சேதப்படுத்திய புகார்) என அந்த சர்ச்சைகள் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். இறுதியில் ஒரு வெற்றி கூட கைப்பற்றாமல் வெறும் கையுடன் பாகிஸ்தான் அணி நாடு திரும்பியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு மரண அடியாக இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை அறிவிப்பு என்பதை விட 'தண்டனை' விவரம் என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

கேப்டன் முகமது யூசப் மற்றும் யூனிஸ்கானுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாழ்நாள் கிரிக்கெட் தடை. இவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவ வீரர்கள் மட்டுமல்ல நட்சத்திர வீரர்கள் கூட. ஆஸ்திரேலிய தொடரில் இவர்கள் பங்கு திருப்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக வாழ்நாள் தடை விதித்தது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இது போதாது என்று அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ராணா நவித் ஹாசனுக்கு ஒரு வருட தடையும், 20 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

மேலும், இரு வீரர்களாக கம்ரன் அக்மாலுக்கு 6 மாத தடை, 30 லட்ச ரூபாய் அபராதமும், அவரது இளைய சகோதரர் உமர் அக்மலுக்கு 6 மாத தடை, 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதில் கம்ரன் அக்மால் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க கூடாது என ஓர் அணியும், சேர்க்களாம் என்று ஓர் அணியும் உருவாகி பிரச்னை கிளப்பியது தனி கதை. அதிலும் தன்னை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுவேன் என்று கம்ரன் அக்மல் சின்ன குழந்தை போன்று மிரட்டியதை பலர் எள்ளி நகையாடியதும் தனிக்கதை.

இவர்களை விட படுமோசமாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மொத்தமும் தலை குனிய வைத்த அஃப்ரிதிக்கு வெறும் 6 மாத தடை மற்றும் 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவ்விவகாரத்தில் சோயிப் மாலிக், ராணா நவித், அக்மல் சகோதரர்கள் ஆஸ்திரேலியாவில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தற்போது புது பயிற்சியாளராக பதவியேற்றுள்ள வக்கார் யூனீஸ் கருத்தும் இதில் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது மேலும் சர்ச்சை உருவாக்கியுள்ளது.

இதைப் பற்றி சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெளியிட்ட கருத்து...

முன்னாள் கேப்டன் ஜாகிர் அப்பாஸ்: அணியில் உள்ள வீரர்களின் செல்வாக்கு மிகுதியால் மற்ற ஆட்டக்காரர்களின் திறன் பாதிப்படைந்துவிட்டது. தேவையில்லாத வீரர்களை நீக்க போர்டுக்கு முழு உரிமையும் உள்ளது. இதனால் இனிவரும் வீரர்களுக்கு ஒரு வித அழுத்தம் கொடுக்கும், இதுவே அணிக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று நினைக்கிறேன். வரும் டிவெண்டி 20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் அதைப் பற்றி கவலை பட மாட்டோம். அணியின் ஒழுக்கமே முதல் முக்கியம்.

முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்: இது முற்றிலும் முட்டாள் தனமானது. யூனிஸ்கான் மற்றும் முகமது யூசப் நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடுபவர்கள். பாகிஸ்தான் இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்பவர்கள் இவர்களுக்கு இத்தகைய தண்டனை தேவையற்றது. இவர்கள் விரைவில் கோர்ட் மூலம் இதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா: பாகிஸ்தான் அணிக்கு எப்போழுதும் ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே பிரச்சனைகள் அதிகம் சந்திக்கிறது. ஆனால் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் என்றுமே பாதிப்பு வந்ததில்லை. அணியில் உள்ள பிரச்னைகளை உடனடியாக களைய வேண்டும். அதே நேரம் தடை பெற்ற வீரர்கள் உடனடியாக அதனை சரிசெய்துவிட்டு அணிக்கு திரும்ப வேண்டும்.

தேர்வாளர் மற்றும் சூழற்பந்துவீச்சாளருமான அப்தூல் காதீர்: இது துணிச்சலான முடிவு. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒழுக்கம் உடனடியாக சரி செய்யத்தான் வேண்டும் இத்தகைய தீர்மானங்களால் மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும், இனி அணியிலும் ஒழுக்கம் முழுமையாக கடைபிடிக்க இது உதவும்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் சர்ப்ராஸ் நவாஸ்: இது மிகச் சிறந்த முடிவு. பாகிஸ்தான் வீரர்கள் இனிமேலும் இதனை கருத்தில் கொண்டு சிறப்பான ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டும். யூனிஸ் கானும், முகமது யூசப்பும் சர்வதேச அளவில் சிறந்த விளையாடுபவர்கள் தான், ஆனால் அவர்களுடன் மற்ற வீரர்களும் தண்டனை பெற்றுள்ளனர் எனபதை நினைத்துப் பார்க்க வேண்டும். அக்மலுக்கு ஒரு வருடம் தடைவித்திருக்கலாம்.

சர்ச்சைக்கும், வம்புக்கும் பெயர் பெற்ற முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரசீத் லத்தீப்: யூனிஸ்கானுக்கு இது அதிக்கப்படியான தண்டனையாகவே இதனை கருதுகிறேன். எதற்காக யூனீஸ்க்கு வாழ்நாள் தடை என்பதை தன்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. யூனீஸ்கான் மீது தனிப்பட்ட கால்புனர்ச்சியே இதை காட்டுகிறது. ஆனால் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சில வீரர்களுக்கு இது சிறந்த எச்சரிக்கைதான். அதேநேரம் யூனிஸ் கானு, முகமது யூசப்பும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்பதில் ஐய்யமில்லை. ஆனால் இவர்களுக்கு வயதாகிவிட்டதை நாம் உணர வேண்டும். நவீத் போன்று அக்மாலுக்கும் ஒரு வருடம் தடை வித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆக இவர் யூனீஸ்கானுக்கு ஆதரவா? இல்லை எதிரியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில் இந்த தடாலடி விவகாரத்தால் மீண்டும் ஒரு முறை உலக கிரிக்கெட் விமர்சகர்களின் பார்வை பாகிஸ்தான் பக்கம்  திரும்பிவிட்டது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நிறுவனப் பெயர்கள்

 

இரு இதழ்களுக்கு முன்னால் நில நிறுவனங்களின் பெயர்கள் வந்த நிகழ்வுகளைப் பார்த்தோம். படிக்க மிகவும் சுவாராஸ்யமாக இருந்ததாகப் பல வாசகர்கள் எழுதி உள்ளனர். இதோ இன்னும் சில:
அகாய் (AKAI)ஜப்பானிய மொழியில் அகாய் என்ற சொல் சிகப்பு வண்ணத்தைக் குறிக்கிறது. பொதுவாக சூரிய உதயத்துடன் சிகப்பு வண்ணத்தைக் குறிப்பிடுவார்கள். ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு; ஏனென்றால் கிழக்கு மூலையில் உள்ள நாடு ஜப்பான். சூரியன் உதிக்கும் நாடு எனப் பெயர் பெற்றது. ஜப்பானியக் கொடியின் மையத்தில் சிகப்பு வண்ணத்தில் சிறிய வட்டம் இருக்கும். அகாய் ஒரு ஜப்பானிய நிறுவனம் என்று குறிக்கவே இந்த சொல் நிறுவனத்தின் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.
பிளாபங்க்ட் (Blaupunkt): ஜெர்மானிய மொழியில் இந்த சொல் நீல நிறத்தில் அமைந்த புள்ளி அல்லது நீல நிற முனையினைக் குறிக்கிறது. முதலில் இந்த நிறுவனத்திற்கு ஐடியல் (Ideal) என்ற பெயரே வைக்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஹெட்போன் கள் தயாரிக்கப்பட்டன. அவற்றின் தரத்தைச் சோதித்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப் படும் முன்னர் அதில் நீல நிறப் பொட்டு வைத்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அதுவே நல்ல தன்மையின் அடையாளமாக உணரப்பட்டது. பின்னர் அந்த நீலப் புள்ளியே இந்நிறுவனத்தின் ட்ரேட் மார்க்காகவும், அதனைத் தொடர்ந்து அதுவே நிறுவனப் பெயராகவும் மாறியது.
கேனன் (Canon): இந்த நிறுவனம் பெற்றிருந்த முதல் பெயர் பிரிசிசன் ஆப்டிகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் லேபரட்டரி என்பதாகும். இந்நிறுவனம் தான் ஜப்பான் நாட்டில் முதல் முதலாக 35மிமீ போகல் பிளேன் ஷட்டர் கேமராவினைத் தயாரித்து வெளியிட்டது. அந்த கேமராவின் பெயர் க்வானன் (Kwannon) என்பதாகும். ஜப்பானிய மொழியில் புத்தருடைய போதி சத்துவ கருணை என்று பொருள் தரும். இந்த சொல்லையே சிறிது மாற்றி கேனன் என்ற பெயர் இந்த நிறுவனத்திற்குப் பின்னாளில் வைக்கப்பட்டது.
கேசியோ (Casio): தொழிற்சாலை சாதனங்களை வடிவமைப்பதனை முதல் நோக்கமாகக் கொண்டு முதலில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. டடாயோ கஷியோ என்பவர் இதனை நிறுவினார். இவர் பெயரான கஷியோ (Kashio)  என்பதுதான் சிறிய மாற்றத்துடன் இச்ண்டிணி என இந்நிறுவனத்தின் பெயராக வந்தது. 1946ஆம் ஆண்டு முதல் இது இயங்கிவருகிறது.
காம்பேக் (Compaq): இணைவமைதியுடன் நல்ல திறனுடன் தன்மையுடன் இயங்கும் என்பதைக் குறிக்க இரண்டு சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அவை – Compatibility and Quality   ஆகும். இந்த இரண்டையும் இணைத்து Compaq என்ற சொல்லை உருவாக்கி இந்நிறுவனத்திற்குப் பெயர் வைத்தனர். 
எப்சன் (Epson): இந்த நிறுவனத்தின் பெயர் வந்த நிகழ்வு சற்று வேடிக்கையானதாகும். தைவா கோக்யோ (Daiwa Kogyo) என்ற பெயரில் இந்த நிறுவனம் 1942ல் ஹிசாஓ யமஸகி என்பவரால் உருவாக்கப்பட்டது. கடிகாரத்திற்குத் தேவையான பாகங்களைத் தயாரிக்க நகனோ என்ற இடத்தில் இது அமைக்கப்பட்டது. 1968ல் இதன் பெயர் ஷின்ஸு செய்கி என்ற பெயரைப் பெற்றது. அதே ஆண்டில் இதன் முதல் மினி பிரிண்டர் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இதனை இ.பி. 101 (E.P. Electronic Printer 101)  என அழைத்தனர். 1975 ஆம் ஆண்டில் இரண்டாவது வகை மாடல் பிரிண்டர் தயாரிக்கப்பட்டு வெளியானது. இவற்றை முதலில் வெளியான பிரிண்டரின் மகன் என்றழைக்கும் வகையில் "Son of EP101"  என அழைத்தனர். இதுவே பின்னர் "Son of EP"  என மாற்றம் பெற்று பின் மீண்டும் உணீண்ணிண எனப் பெயர் பெற்றது.
ஹிடாச்சி (Hitachi) ஜப்பானிய மொழியில் ஹிடாச்சி என்றால் சூரிய உதயம் என்று பெயர். ஜப்பானை சூரியன் உதிக்கும் நாடு என உலகத்தவர் அழைப்பதனால், ஜப்பானிய பாரம்பரியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிகும் வகையில் ஹிடாச்சி என்ற பெயர் இந்த நிறுவனத்திற்கு வைக்கப்பட்டது


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP