சமீபத்திய பதிவுகள்

News 25-10-2009-video

>> Sunday, October 25, 2009

StumbleUpon.com Read more...

நக்கீரன் ……!!! ஏன் இப்படி?

 

nak41 ஆயிரம் ஈழத்தமிழர்கள் இன்று சொந்த இடத்திற்கு திரும்பினர்

இலங்கை முகாம் தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அவர்கள் முகாமை சுற்றி பார்த்து குறைகளை கேட்டறிந்தனர்.

அங்கே இக்குழுவினர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசி அவர்கள் முகாமில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் விரைவில் விடுவித்து சொந்த ஊரில் குடியமர்த்தும்படி வற்புறுத்தினார்.

எம்பிக்கள் குழிவின் கோரிக்கைக்கு பதிலளித்த ராஜபக்சே, 3லட்சம் பேரில் இன்னும் 2 வாரத்தில் 58 ஆயிரம் பேரை சொந்த ஊரில் குடியமர்த்துவோம் என்று உறுதி அளித்தார்.

அவர் மேலும், குறுகிய காலத்திற்குள் அகதிகள் அனைவரும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்படுவர் என்றும் அறிவித்தார்.

அறிவித்தபடி முகாம் அகதிகள் கொஞ்சம் கொஞ்சமாக சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இன்று 12 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 41 ஆயிரத்து 685 பேரை முகாமில் இருந்து விடுவித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ. 20 ஆயிரம் பாங்கி சேமிப்பு, 6 மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்கள், படுக்கை விரிப்புகள், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதே நேரம் யாழிலிருந்து ஈ பி டி பி யினரின் செய்தி படங்களோடு கீழ்கண்டவாறு இருக்கிறது:

வவுனியா இருந்து யாழ் வந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து நிதியுதவிகளை வழங்கினார்

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரில் சென்று அவர்களது நிலைமைகள் பற்றி கேட்டறிந்தார்.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த இம்மக்கள் இன்று (22) பிற்பகல் துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அம்மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீளக்குடியமர்வதற்கான உதவித் தொகைiயான 5000 ரூபாவை வழங்கியதுடன் மீதி 20000 ரூபாவை அம் மக்களது பெயர்களில் வங்கியில் வைப்பிலிடப்படும் என அறிவித்ததோடு 6 மாத கால உலர் உணவு நிவாரணம் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் தொழிலை முன்னெடுப்பதற்கான உபகரணங்கள் என்பன வழங்கப்படவுள்ளதாகவும் அம்மக்களிடம் தெரிவித்தார்.
—-

அதே நேரம் யாழ் உதயனின் செய்திகளின் படி..

இன்று 1,007 பேர் அழைத்துவரப்படுவர்

வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 1,007 பேர் இன்று யாழ்ப்பாணம்

கொழும்பு, ஒக்ரோபர் 22
வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 1,007 பேர் இன்று யாழ்ப்பாணம்

அழைத்து வரப்படவிருக் கின்றனர் என யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்றைய தினம் இடம் பெயர்ந்தவர்கள் எவரும் வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்துவரப்பட வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது
—–

தமிழ்வின் இணையத்திலிருந்து வன்னி மீள் குடியேற்றம் தொடர்பான செய்தி..

முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் நாளை ஆரம்பம்:முதற்கட்டமாக 1000பேர் குடியமர்வு

[ வியாழக்கிழமை, 22 ஒக்ரோபர் 2009, 06:48.20 AM GMT +05:30 ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படுவதாக அம்மாவட்ட அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.
சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் முதற் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

அனிஞ்சியன்குளம் அரசினர் பாடசாலை, மல்லாவி மத்திய கல்லூரி, பாலிநகர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு படிப்படியாக அவர்களது வீடுகளில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மீளக்குடியமரும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் அங்கு செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மின்சார விநியோகம், வீதிப் போக்குவரத்து ஆகியன ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று அவற்றைத் துப்புரவு செய்து, தேவையானால் தற்காலிகத் தகரக் கொட்டில் அமைத்து படிப்படியாக மீளக்குடியமர்வார்கள்.

இம்மக்கள் பலரது வீடுகள் சேதமடையாமல் இருக்கின்றன. பல வீடுகள் கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன. இவற்றை அவர்கள் படிப்படியாகத் திருத்தி அமைத்துக் குடியேறுவார்கள். இந்தப்பகுதியில் மக்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பற்றைகள் வளர்ந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்வதில் அவர்கள் முதலில் ஈடுபடுவார்கள்.

இவர்களுக்கு ஆரம்பத்தில் சமைத்த உணவு வழங்குவதற்கும், வேண்டிய ஏனைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமாகும் நடவடிக்கையின் மூலம் 4450 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். இது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் படிப்படியாகக் கட்டம் கட்டமாக அந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளார்கள். 30 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூனகரி, ஜெயபுரம் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன" என்றார்

ஆக தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா??
யாரையாவது திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றனவா?
தமிழகத்துக்கு ஈழத்தமிழர் நிலைமைகள் தவறாகவே கொண்டு செல்லப்படுகின்றனவா?கருணாநிதியின் அரசியலில் ஈழத்தமிழினம் பகடைக்காயா?

நாளைக்கே …. இலங்கையில் அனைத்து முகாம்களிலிருந்தும் அகதிகள் அனவைருமே மீள தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் எனவும் செய்திகளை எதிர்பார்க்க வேண்டுமோ.. ?

அப்படிஎன்றால் முகாம்களில் இருக்கும் எம்முறவுகளின் கதை இவ்வளவு தானா? முடிந்தே விட்டதா?

மீளக் குடியமர்த்தப்படுவார்களெனும் செய்திகள் ஆரம்பத்திலிருந்தே சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட போதிலும் இது வரை அச்செய்திகளில் முன்னேற்றமில்லை.. தொடர்ச்சியாக முகாம்களை மாற்றி மாற்றி எம்மக்களைத் தங்க வைக்கிறார்களே தவிர நிரந்தரமாக மக்களின் சொந்த ஊர்களிளல்ல….


source:tamilspy
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இமாம்கள் பட்வா எனப்படும் தண்டனை விதிப்பதற்கு சவூதி அரேபியாவில் தடை

 

துபாய், அக்.26-

முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் இமாம்கள் மதத்தின் பெயரால் பட்வா எனப்படும் தண்டனைகளை அறிவிப்பது வழக்கம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமானால், ஈரான் நாட்டின் மதத்தலைவரான கோமேனி சைத்தானின் கவிதை என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்ததை சொல்லலாம். இப்படி இமாம்கள் தங்கள் இஷ்டத்துக்கு பட்வா விதிப்பதற்கு சவூதி அரேபியா அரசு தடை விதித்து உள்ளது. இஸ்லாமிய விவகாரத்துக்கான அமைச்சரகம் இந்த தடையை பிறப்பித்து உள்ளது.

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லா சமீபத்தில் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கினார். இந்த பல்கலைக்கழகம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதை விமர்சித்த மதகுரு ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இஸ்லாமிய நெறிகளை பாதுகாக்கும் போலீசுக்கு இந்த பல்கலைக்கழக வளாகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

source:dailythanthi 26/10/09

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா

 

இலங்கையில் இந்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை நடந்த யுத்தத்தில் 170 சர்வதேச சட்டமீறல் சம்பவங்கள் இடம் பெற்றன என்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டனர் என்றும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை தெரிவித்த பகிரங்கப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் செய்மதிப்படங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தயாரித்துள்ள 68 பக்க அறிக்கையிலேயே இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் அனுபவித்த அவலங்கள் குறித்து மிகவும் வேதனையளிக்கக்கூடிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகள் தாம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்துவதாகக் கூறியுள்ளதால் அமெரிக்கா அதை ஏற்றுக்கொண்டு இலங்கையில் உண்மையில் பக்க சார்பற்ற விசாரணை நடக்கிறதா என பார்க்கபோவதாக இந்த அறிக்கைக்கான விசேட தூதர் ஸ்ரீபன் ரப் கூறினார். இதேவேளை அமெரிக்க ஒதுக்கீட்டு உபகுழுவின் தலைவரும் இந்த அறிக்கைக்கான அனுமதியை வழங்கியவருமான செனட்டர் பட்ரிக் ஜே.லீகே இலங்கையில் இரு தரப்பும் மிக மோசமான யுத்த மீறல்களில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் முழுமையாகத் தீர்ந்துபோயுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி யுத்தத்தின் போது தாக்குதல்கள், வன்முறைகள், பட்டினி, மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களின் நிலையையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை ஒவ்வொரு மீறல் சம்பவங்களையும் திகதி வாரியாக விவரித்துள்ளது. அதிலுள்ள சில விடயங்களாவன:

- ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பல தடவைகள் விடுதலைப்புலிகள் இளைஞர்கள் பலரை பிடித்துச் சென்றனர். ஆனால் இக்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை சரியாகக் கிடைக்கவில்லை.
- போர்க் காலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காயங்கள் குறித்த முக்கியமான பல விவரங்கள் பதியப்படவில்லை என்றபோதும், ஆனால் அரச படையின் பெருமளவு ஷெல் தாக்குதல் பாதுகாப்பு வலயத்தின் மீது இடம்பெற்றன. 

- பொதுமக்கள் வெளியேற இரு தடவைகள் 48 மணித்தியால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், அந்தக் காலம் முடிவடைவதற்குள் அரச படைகள் மீண்டும் ஷெல் தாக்குதலை ஆரம்பித்தனர். அதோடு விடுதலைப் புலிகள் பெருமளவு பொதுமக்களை வெளியேற விடாமல் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்தனர்.

- இலங்கைப் படையினர் சட்டவிரோதப் படுகொலைகளை மேற்கொண்டனர்.

- மோதலின் இறுதிக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்காக சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்து, இணக்கப்பாடு ஏற்பட்ட போதிலும் கூட, அவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
எனக் கூறப்பட்டுள்ளது.


source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

செக்ஸ் பற்றி பகிரங்க பேச்சு: சவுதி அரேபிய பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி

  ரியாத், அக்.25- சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரோசானா அல்-யாமி. இவர், லெபனான் நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சானல் ஒன்றில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவரிடம் பகிரங்கமாக செக்ஸ் பற்றி பேசிய காட்சிகள் அண்மையில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை தயாரித்ததோடு, அது பற்றிய விளம்பரத்தை இணைய தளத்திலும் வெளியிடச் செய்ததற்காக ரோசானாவுக்கு சவுதி அரேபிய கோர்ட்டு 60 தடவை கசையடி கொடுக்கும்படி உத்தரவிட்டது. ரோசானாவுடன், செக்ஸ் பற்றி விவரித்து பேசிய அப்துல் ஜவாத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் கசையடி வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. சவுதி அரேபியாவில் செக்ஸ் பற்றி பகிரங்கமாக ஆணோ, பெண்ணோ பேசுவது சட்டப்படி குற்றமாகும்.

dailythanthi 25/10/09
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சரணடைந்த புலி உறுப்பினர்களும் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டது உண்மையே

 

Brahma_Chellaneyசீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகள் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டு போர்க்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்த வேளை கொலை செய்யப்பட்டதும் உண்மையே என்றும் பேராசிரியர் பிரம்மா ஊர்ஜிதம் செய்துள்ளார்.

புதுடில்லியில் உள்ள இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி இணையத்தளம் ஒன்றுக்கு இலங்கையில் நடந்த போர், அதில் இந்தியாவின் பங்கு, இப்போதைய உறவு மற்றும் இலங்கையின் எதிர்கால அரசியல் உத்திகள் குறித்து நீண்ட பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்தப் பேட்டியின் முக்கிய பகுதிகள் சில வருமாறு:

யுத்தகாலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை உண்மையே. அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர்.

இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல சிரேஷ்ட உறுப்பினர்களுடனும் அவர்கள் செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்தகோகொன்னவும் இணைந்திருந்தார். எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்திய தேசிய புலனாய்வு துறையினர் பெரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

மனித உரிமை மீறல்களும், யுத்த குற்றங்களும் யுத்த காலங்களில் செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு தரப்பினர் மீது பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அரசாங்கம் தமது பாரிய எறிகனை வீச்சுக்களை நடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது, விடுதலைப் புலிகள் பொது மக்களை தடுத்து வைத்து கேடயங்களாக பயன்படுத்தியமையும் அது போன்றதுதான். ஆனால் அவை அனைத்தும் சாட்சியமற்று மறைந்து போயின.

அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு சுயாதீன செய்தியாளர்களை அனுப்பாததன் மூலம் அவை அனைத்தையும் மறைத்து விட்டது என்பதே உண்மை. இந்தியா கண்காணிக்கிறது வெளிநாட்டு ஆதிக்கம் அற்ற, சமாதானமான இலங்கையையே இந்தியா விரும்புவதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தை இந்தியா கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிராந்திய வல்லரசுக்கான போட்டியின் மத்தியில் இலங்கை மக்கள் உட்படுத்தப்படுவது, இலங்கை மற்றம் ஆசிய மக்களுக்கு உகந்தது இல்லை. இந்த நிலையிலேயே இலங்கையின் மீள் கட்டுமானம் மற்றும் சீர்படுத்தலுக்கான முனைப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த ஒரு நடவடிக்கை மாத்திரமே, தமிழர்களின் நீண்டநாள் கலாசார மற்றும் அரசியல் அபிலாசைகள் மீதான சந்தேகங்களுக்கு விடையாக அமையும். இந்தியா மட்டும் செய்யக்கூடியதல்ல இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக அடையாளப்படுத்த முடியாது உள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே அக்கறை செலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அது,தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதற்கு முன்னர், இலங்கையின் முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல், சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகவே நான் கருதுகிறேன். தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைகள்முத்துவேல் கருணாநிதி போன்ற தமிழக அரசியல் வாதிகள், இலங்கை தமிழர்களை வைத்து, அரசியல் நாடகங்களை அரங்கேகற்றி வருகின்றனர்.

அவர்கள் முகாம்களில் சிக்கயிருக்கின்ற மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அல்லர் தமிழக மக்களின் மத்தியில் ஓர் மாயையை ஏற்படுத்தும் வகையிலேயே, தமிழக நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். இதன் அடிப்படையிலேயே இலங்கையின் முகாம்களுக்குள் இந்திய நாடாளுமன்ற குழு அனுமதிக்கப்பட்டனர் என்றார்.

நன்றி: உதயன்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP