சமீபத்திய பதிவுகள்

swisstamilweb-சுவிஸ் தமிழ் வெப்

>> Tuesday, July 14, 2009

StumbleUpon.com Read more...

சிரிக்க நல்ல வீடியோ காட்சி-Iron and Phone - Video

StumbleUpon.com Read more...

தேசியத்தலைவர் பிரபாகரன் இடத்தைப் பிடிக்க பதவிச் சண்டையா?

ருத்திரகுமாரன் ஸ்பெஷல் பேட்டி!

பிரபாகரன் இடத்தைப் பிடிக்க பதவிச் சண்டையா?

நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்கிவரும் நியூயார்க் வாழ் வழக்கறிஞர்-அரசியல் ஆலோசகர் விசுவநாதன் ருத்திரகுமாரனுக்கு ஈழத் தமிழர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெருகிவரும் நிலையில்... முதன் முறையாக நம்மிடம் மனம் திறந்து பேசினார் அவர்.

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவி அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிக அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல... இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடி னார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழி னத்தின் துன்பங்கள் தெரியவந்தன. 'போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!' என்று சதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம்.புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன. ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் போன் றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை. அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, 'உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே... எங்களை ஏன் சேர்க்கவில்லை?' எனக் கேட்கின்றனர்.

எங்கள் அறிக்கையை ராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம். தமிழ் ஈழப் பிரச்னையில் - குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங் களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம்.

இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக் கிறோம்.

நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல... தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று லட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்!'' என்று நம்மிடம் சொன்ன ருத்திரகுமாரனிடம்,

''பிரபாகரன் இடத்துக்கு தாங்கள் வர முயற்சிக்கிறீர் களா?'' எனக் கேட்டோம்.

''அப்படியெல்லாம் இல்லை. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

யூதர்களையும் தமிழர்களையும் ஒப்பிட்டு பிரபாகரன் தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் பேசியதாக கடந்த 08-07-2009 ஜூ.வி. இதழில் அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதி அன்று, 'யுனைடெட் ஸ்டேட்ஸ் தமிழ் ஈழம் ஆக்ஷன் கமிட்டி' என்ற அமைப்பு ஈழ விடுதலைக்கான முன்னோட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு தலைவராக யூத இன மருத்துவரான இலைன் ஷாண்டர் என்ற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். யூத இனம் போலவே தமிழ் இனமும் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து திமிறி எழும் என்கிறார்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.



நன்றி ஜூனியார் விகடன்

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!-ஜூனியர் விகடன்

 

''எங்களை அழிக்க முடியாது... நாங்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வருவோம்!''

- அமெரிக்காவில் அதிர்ந்து எழுந்திருக்கிறது புலி கோஷம்.

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் 22-ம் ஆண்டு மாநாடு, ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா மாநகரில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து வைரமுத்து, தமிழருவி மணியன், ம.நடராசன், சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த விழா, ஓர் எழுச்சி விழாவாகவே அமைந்தது.

இந்தப் பேரவையின் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் புலி அனுதாபிகளின்

ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே அமெரிக்கா, கனடா,இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையினரின் கண்காணிப்புக்குள் இடம்பிடித்துவிடும். இந்த முறையும் அப்படித் தான்!

விழாவில் கலந்துகொண்டு உணர்ச்சிகர மாகப் பேசிய வைரமுத்து, ''போர் நின்று விட்டதாகக் கூறப் படுகிறது.களம் ஓய்ந்து விட் டாலும், அதற்கான கார ணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அப்பாவித் தமிழர்கள் சம உரிமையோடு அவரவர் நிலத்தில் குடி அமர்த் தப்பட வேண்டும்.

பத்தாம் நுற்றாண்டில் வாள் எடுத்துத் தன் வீரத்தைக் காட்டி, உலகை வென்றான் ராஜராஜ சோழன். 21-ம் நூற்றாண்டில் துப்பாக்கி எடுத்து தமிழனின் மானம் காத்தான் மாவீரன் பிரபாகரன். உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவன் அவன். ஒருவேளை அவன் மறைந்திருந்தால், அது துரோகத்தால் பெற்ற வெற்றி! சாவே வந்து பிரபாகரனிடம் பிச்சை கேட்டிருக்கும். அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு மீண்டும் சிவக்கும்... மறுபடியும் உதிக்கும்... அந்த விடியலே தமிழ் ஈழம். இங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் ஈழத்தின் வலியைப் பற்றிப் பேசினார். அவரைப் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் ஈழம் மலரத் தேவை!'' என்றார் வைரமுத்து.

ஈழ மக்களி டையே தனி யாகப் பேசிக் கொண்டிருந்த போது தமிழருவி மணியன், ''தீக்குச் சியும், தீக்கிரையாக்கி விடும் சிகரெட்டும் ஒரே பெட்டியில் இருக்கலாம். ஆனால், தமிழனும் சிங்களவனும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது!'' என்றார். ''தமிழ் ஈழம் தவிர்க்க முடியாதது.

ஆனால், யுக்திகளை மாற்றவேண்டும். 20 ஆண்டுகள் முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. அப்போது அமெரிக்க-ரஷ்ய பனிப் போர். இப்போதோ, இந்தியா-சீனா பனிப்போர் ஆசியாவில் மையம் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே தமிழர்களை ஆதரிக் காததால்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இலங்கையைவிட ராணுவ பலம் அதிகம் இருந்தால் போதுமே, தமிழ் ஈழம் பெற்றுவிடலாம் என்று முப்படை கண்ட மாவீரன் உலக நாடுகளின் ஆதரவை பெறத் தயங்கி நின்றான். அதுவே எதிராகிவிட்டது. ஆகவே, அநாதைகளாக விடப்பட்டோம். இப்போதுகூட தனிநாடு கேட்கவில்லை. இந்திய அரசில் உள்ள மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தைதான் கேட்கி றோம் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டது. ஆனால், அதை சிங்கள அரசு குப்பையில் போட்டது. அதையாவது மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டாமா?

இலங்கை இறையாண்மைக்கு இழுக்கில்லா தனி மாநிலம் பெற அனைத்து ஈழத்தலைவர்களும் கருணாநிதி, ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும். 40 எம்.பி-க்கள் டெல்லியை அசைக்க முடியும். அதற்கு உங்களிடம் முதலில் ஒற்றுமை அவசியம்!'' என்றார்.

விழாவில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றார் ம.நடராசன். ஜார் ஜியா மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டேவிட் போய்த்ரிஸ், சுமார் 2 மணி நேரம் ம.நடராசனுடன் பேசி இந்திய அரசியல், தேர்தல் வியூகம் என்று அலசி னாராம். ஈழத் தமிழர்களும் ம.நடராசனை சந்தித்து ஆலோசனை செய்தார்கள்.

அவர்கள் மத்தியில் பேசிய நடராசன், ''இந்திரா உயிரோடு இருந்திருந்தால், பங்களா தேஷ் உருவாக்கியதைப் போல் தமிழ் ஈழம் அமைத்திருப்பார். அவர் ஒரு ராஜதந்திரி. ஆகவேதான், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தார். ராஜீவ் காந்தியும் மிக அழகாக ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்தார். அதற்குள் அவரை சுற்றி இருந்த தீயசக்திகள் இலங்கையிடம் காசு வாங்கிக்கொண்டு, அவர் புத்தியை மழுங்கடித்துவிட்டன. சோனியா தன் மாமியாரையும் மதிக்கவில்லை, கணவரையும் மதிக்கவில்லை..!

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையும்இணைத்து ஒரே தமிழ் நிலம் அமைக்க வழி வகுத்தது. இப்போது இலங்கை உச்ச நீதிமன்றம், அந்த ஒப்பந்தத்தின் 13-வது ஷரத்தை ரத்து செய்து, இந்தியாவின் முகத்தில் கரிபூசி உள்ளது. கணவர் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காத இலங் கையை தட்டிக்கேட்க சோனியாவுக்கு ஏன் தைரிய மில்லை? இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அமெரிக்க அதிபரான நிக்ஸன் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இந்திரா. அவர் உடம்பில் இந்திய ரத்தம் ஓடியது. இந்தியாவின் புகழை உலக நாடுகளில் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது அண்டை நாடுகளான குட்டி தேசங்கள் நம்மை மதிப்பதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, சுதந்திரம் கிடைக்கும் வரை அங்கு அமைதி திரும்பாது; இலங்கையில் அமைதி இல்லாத வரை இந்தியாவில் அமைதி கிடையாது. இதை சோனியா உணர வேண்டும். கலைஞரையும் இனி நம்பிப் பயனில்லை. தமிழ் ஈழம், புலி என்றாலே கடுமையாக எதிர்த்துவந்த ஜெயலலிதா, அங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டு தன் 20 வருட நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டார். இனி, அவரை நம்பலாம்...'' என்று பேசியிருக்கிறார்.

தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை, வேலூர் ஜி.விஸ்வநாதன்... தமிழ் சினிமா நடிகர்களான பசுபதி, ஜீவா, நடிகை கனிகா ஆகியோர் பேசுகையில் ஈழப் பிரச்னையைத் தொடவில்லை.

அனுராதா ஸ்ரீராம் தமிழ் இசை திரைப்பாடல் நிகழ்ச்சியில் இடை இடையே ஆங்கிலத்தில் பேச, கடுப்பான தமிழ் சங்கத் தலைவர் ஒருவர் 'தமிழில் பேசுங்க' என்று சத்தம் போட்டார். உடனே, அனுராதா ஸ்ரீராம், ''நானும் தமிழச்சிதாங்க. தமிழ்த் திரைப்படத் துறையில் மலையாளிகளும், இந்திக்காரர்களும்தான் அதிகமாகப் பின்னணி பாடுகிறார்கள். உங்கள் கோபத்தை அங்கு சென்று காட்டுங்களேன்... பெருமைப்படுகிறேன்!'' என்றார் பட்டென்று!

பேச்சுகளுக்கிடையில், வன்னியில் நடை பெற்ற படுகொலைகளை, சித்ரவதைகளை புகைப்படங்களாகத் திரையில் காட்டினார்கள். பிணக்குவியல்கள், முடமான மனிதர்கள் என உலுக்கிப்போட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து, அந்த அரங்கத்தில் இருந்த குழந்தைகள் பயப்பட, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கண்களைப் பொத்த வேண்டி வந்தது.

புலிகள் ஆதரவு பொங்கி வழிந்த இந்த மாநாட் டின் இன்னொரு முக்கிய அம்சம், நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைத்து, அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற முயலும் ருத்திரகுமாரனை அழைக்காததுதான்.

இன்னொரு முக்கிய அம்சம் - இந்தப் பேரவை யின் கடந்த ஆண்டு விழா மலர்களில் எல்லாம் இடம் பெற்றிருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தி இந்த முறை மிஸ்ஸிங்..!




நன்றி ஜுனியர் விகடன்

StumbleUpon.com Read more...

சீனர்களை கொன்று குவிப்போம்:அல்குவைதா மிரட்டல்

 

 சீனாவில் முஸ்லீம் உய்கூர் இனத்தினரை அந் நாட்டு அரசு கொன்று குவித்ததையடுத்து அரேபியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சீனர்களை கொன்று குவிக்கப் போவதாக அல்-குவைதா மிரட்டல் விடுத்துள்ளது.

 சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் பெருவாரியாக வசிக்கும் முஸ்லீம் உய்கூர் இனத்தினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை சீனா இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது.

கடந்த வாரத்தில் ஓரிரு நாட்களி்ல் நூற்றுக்கணக்கான உய்கூர் மக்கள் ராணுவம், போலீசார் மற்றும் சீனர்களால் கொல்லப்பட்டனர்.
 
இதையடுத்து அல்குவைதா இ மெயில் மூலம் விடுத்துள்ள மிரட்டலில், அல்ஜீரியாவில் பணியாற்றி வரும் 50,000 சீனர்களை தாக்கிக் கொல்வோம். ஆப்பிரிக்காவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களையும் அதன் ஊழியர்களையும் தாக்கி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலி கிழக்கு தளபதி வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர்!!!

விடுதலைப்புலி கிழக்கு தளபதி வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக கூறுகிறார் கருணா


விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் ராம். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை ராணுவம் உச்சக்கட்ட போர் நடத்தியபோது ராம், இலங்கை தெற்கு பகுதியில் உள்ள அம்பாறைக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
 
அவருடன் விடுதலைப்புலிகளின் கிழக்கு பகுதி அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன், துணைத் தலைவர் நகுலன் மற்றும் சுமார் 500 விடுதலைப்புலிகள் தப்பிச் சென்றனர். இவர்களை சரண் அடையுமாறு இலங்கை ராணுவம் கேட்டுக் கொண்டது.
 
ஆனால் தளபதி ராம் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ராம், நகுலன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை அம்பாறை காடுகளில் இலங்கை ராணுவம் தேடிவருகிறது.
 
இந்த நிலையில் ராம், தயா மோகன் உள்பட சுமார் 500 விடுதலைப்புலிகள் வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டதாக, விடுதலைப்புலிகள் இயக்கம் வலு இழந்து போக காரணமானவர்களில் ஒருவரும், இலங்கை அரசிடம் அமைச்சர் பதவி பெற்று இருப்பவருமான கருணா என்ற முரளீதரன்  பி.பி.சியின் சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
 
அம்பாறை காட்டுப்பகுதியில் இருந்து தப்பிய ராம், தயாமோகன் இருவரும் தற்போது மலேசியாவில் இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களில் 600 பேரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசில் சேர்த்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் கருணா குறிப்பிட்டார்.

StumbleUpon.com Read more...

துன்பத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடு




                 நாளாந்தவாழ்வின் கடமைகளும், கவலைகளும், சம்பந்தமில்லா மனிதர்களும் நீதிக்கானவேட்கையிலிருந்து நம்மை தணிக்கின்றன. இச்சூழல்வினைக்கு நானும் விதிவிலக்கல்ல. அதிகாலை எழுந்து நடக்கும்போது இருக்கிற உணர்வெழுச்சியும்வேகமும் அந்தியாகும் போது இருப்பதில்லை. ஆயினும் ஒருசில நிகழ்வுகள்மட்டும் நம்மை நிம்மதியாக இருக்க முடியாமற் செய்யும், எண்ணும்போதெல்லாம்கண்ணியச் சீற்றம் கிளர்த்தும். கடந்த சுமார் ஐம்பது நாட்களாய் என்னைகனன்றுகொண்டே இருத்தி வைக்கும் நிகழ்வு மே, 14, 15, 16 நாட்களில்முல்லைத்தீவு பகுதியில் பாதுகாப்புத்தேடி ராணுவக் கட்டுப் பாட்டுபகுதிகளுக்குள் வந்த பல்லாயிரக் கணக்கான தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவம்ஆடைகள் களைந்து, நிர்வாணமாய் கைகளை உயர்த்திக்கொண்டு வரச்செய்த கொடுமை.

சரியோ,தவறோ... எந்த வரலாற்று- பண்பாட்டுக் காரணங் களாலோ தெரியவில்லை... பெண்களைபொத்திப் பாது காத்து வளர்க்கும் சாதி இந்த தமிழ்ச்சாதி. உயிரினும் மானம்பெரிதெனக் கருதி வாழ்ந்த சாதி. தாய்மையை தெய்வீகமாய் போற்றிய பண்பாடுடைத்தசாதி. அப்படியான தொரு மக்கள் இனத்தின் அன்னையர்களும், நங்கை நல்லாரும்,மாணவ வயதிலான பிள்ளைகளும்கூட அக்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பதைநினைக்கும் போதெல்லாம் இரத்தம் சூடாகிறது. இயேசுபிரான் சொல்லித் தந்த"பகைவனுக்கும் நேசம் தா...', "வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடதுகன்னத்தையும் காட்டு' போன்ற உன்னத பாடங்கள் மறந்து "பழிதீர்' என்ற வெறியேபிறக்கிறது. இந்த உணர்வுகள் சரியா தவறா என்றும் தெரியவில்லை.

வேலுப்பிள்ளைபிரபாகரன் அவர்களின் புகழ்பெற்ற சொல்லாடல்களில் ஒன்று- "துன்பத்தைதந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'. எனது நேர்காணலின் போது கிளிநொச்சிஅரசியல் அலுவலக வளாகத்தின் வேப்பமர நிழலில் அமர்ந்து நீண்டநேரம்உரையாடினார். அப்போது அவரிடம் சொன் னேன்: ""துன்பத்தை தந்தவனுக்கே அதனைதிருப்பிக்கொடு என்ற உங்களின் சொல்லாடல் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால்ஆட்சியாளர் கள் செய்கிற குற்றத்திற்காய் அப்பாவி மக்களை தண்டிப்பதுபழியும், பாவமுமல்லவா?'' என்றேன்.

""ஒருபோதும்சிங்கள மக்கள் அழிய வேண்டுமென நாங்கள் நினைத்ததில்லை. அப்படி நினைக்கவும்மாட்டோம். எல் லோரும் மனிதர்கள்தானே. சிங்கள ராணுவம் தமிழர்களைகண்மூடித்தனமாக அழிப்பது போல் நாங்களும் சிங்கள மக்களை அழிக்கவேண்டுமென்றுமுடிவெடுத்தால் தினம் ஆயிரம்பேரை கொல்ல முடியும். எங்களுடைய ஒருதாக்குதல்கூட அப்பாவி மக்களை இலக்கு வைத்து செய்யப்பட்ட தில்லை.ராணுவ-அரசியல் இலக்குகளை தாக்கும்போது சில நேரங்களில் பொதுமக்கள் சிலரும்பலியாகிவிடுகிறார்கள். அதற்காக மிகவும் வருந்துகிறோம். நீங்கள் ஒருகணக்கெடுத்துப் பாருங்களேன்... சிங்கள ராணுவத் தாக்குதலில் ஆயிரம்தமிழர்கள் ஒருமாதம் செத்திருந்தா, எங்கட தாக்குதல்களில் பத்து அப்பாவிசிங்கள மக்கள்கூட செத்திருக்கமாட்டார்கள்.''

தொடர்ந்துபேசிய பிரபாகரன் சொன்னார் : ""கொழும்பிலெ இன்டைக்கு தமிழ் சனம் பாதுகாப்பாதலை நிமிர்ந்து நடக்குதென்டா அது புலியளாலத்தான். தமிழரெ அடிச்சா புலிதிருப்பி அடிக்கு மெண்டு இப்போ அவையளுக்குத் தெரியும். 1983-க்குப் பிறகுஇன்றுவரைக்கும் தமி ழருக்கெதிரான கலவரம் எதுவும் நடக்கே லெதானே? சிங்களவன்திருந்தியிட்டா னெண்டு நினைக்கிறியளா? இல்லெ. அடிச்சா புலியள் கட்டாயம்திருப்பி அடிப்பினு மென்ட பயம். அந்த பயம்தான் தமிழருக்கு இன்றிருக்கிறபாதுகாப்பு.''

போரின் இறுதிநாட்களில் தினம் சராசரி 200 தமிழ்மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க,கொழும்பு நகரில் பொதுமக்களை குறிவைத்து பெரிய தாக்குதல்களை புலிகள்நடத்துவார்களென்ற அச்சம் இருந்தது. குறிப்பாக மே-15 அன்று காயம்பட்டுக்கிடந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் புல்டோசர்கள் ஏற்றிப் படுகொலைசெய்யப்பட்ட கொடுமை நடந்தபின் அத்தகையதோர் எதிர்பார்ப்பு அதிகரித்தது.அப்படி எதுவும் நடந்து விடக்கூடாதென நான் பிரார்த்தித்த அதேவேளை-நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை அறிய முயன்றதும் உண்மை. மே15-ம் தேதி இது குறித்து, அப்படி எதுவும் தயவுகூர்ந்து செய்து விடாதீர்கள்என்ற வேண்டுதலோடு புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரிடம் இதுபற்றிக்கேட்டபோது அவர் கூறினார், ""ஃபாதர்... இன்றுகூட புலிகள் நினைத்தால் சிங்களராணு வம் கொல்லும் தமிழரைவிட பத்து மடங்கு சிங்களவரை அழித்தொழிக் கும்வளங்கள் புலிகளிடம் உள்ளன. ஆனால் அப்படி எதுவும் செய்யக்கூடாதென தலைவர்மிகவும் கண்டிப்பான உத்தரவிட்டுள் ளார்.''

உண்மையில்யுத்தத்தின் இறுதி நாட்களில் கொழும்பு நகரில் பெரிய தாக்குதலொன்று நடத்தவேண்டுமென்ற அழுத்தம் பிரபாகரன் மீது தளபதியர்களால் தரப்பட்டிருக்கிறது.அதற்கு அவர் சொன்னதாகக் கூறப்படுவது : ""தமிழ் மக்களுக்கான நீதியைவரலாற்றுக்கும், உலக சமுதாயத்திற்கும் விட்டுவிடுகிறேன். புலிகள் இயக்கம்அப்படியொரு செயலைச் செய்து அவனுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையென்டுகாட்டவேண்டாம்'' என்றிருக்கிறார்.

வேப்பரமரநிழலில் நான் கேட்ட "சென்சிடிவ்'வான கேள்விகளில் ஒன்று- ""மாற்றுக்கருத்துடைய தலைவர்களை அழித்தொழிக்கும் புலிகளின் கொள்கை ஏற்புடையதல்ல.அதிலும் அரசியல் ரீதியாகச் செத்துப் போனவர்களை யெல்லாம் ஏன் மீண்டும்நீங்கள் கொல்ல வேண்டும்? இந்த அணுகுமுறையை மாற்றக்கூடாதா?'' என்றேன்.இக்கேள்வியை சற்று தயக்கத்தோடுதான் நான் கேட்டேன். ஆனால் துளியளவுகூட அவர்கோபமோ, அதிருப்தியோ காட்டவில்லை. ""எங்களைப் பொறுத்தவரை சிங்கள அரசு தமிழ்மக்கள் மீது ஓர் இன அழித்தல் போரை நடத்தி வருகிறது. அந்த அரசுடன் இணைந்துசெயல்படு கிறவர்கள் அனைவருமே தமிழருக்கெதிரான போரில் பங்குதாரர்கள்ஆகிறார்கள். அவ்வகையில் அவர்களும் எமது அரசியல்-ராணுவ எதிர்தாக்குதலுக்கெதிரான இலக்குகளே. அதேவேளை புலிகள் இயக்கமும்மாறிக்கொண்டுதான் வந்திருக்கிறது. முன்பிருந்த இறுக்கம் இப்போது இல்லை.வளர்ச்சிப்பாதையில் நாங்களும் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களைசரிப்படுத்திக்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறோம்'' என்றார்.

விடுதலைப்புலிகளைவிமர்சிக்கிறவர்கள் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்ட- ""வளர்ச்சிப் பாதையில்நாங்களும் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களை சரிப்படுத்திக்கொள்ளும்''-தன்மையை காண மறுக்கிறார்கள். அவர்களது பழைய சில தவறுகளின் அடிப்படையிலேயேஇன்றும் அவர்களைத் தீர்ப்பிடுகிறார்கள். எனது நண்பரும் இப்போது கனடாமருத்துவ பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றி வருகிறவருமானகலாநிதி சந்திரகாந்தன் ஒருமுறை என்னிடம் கூறிய நிகழ்வொன்று நினைவுக்குவருகிறது. சந்திரகாந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்பணிபுரிந்தவர். 1995 இடப்பெயர்வின்போது உள்நாட்டு அகதியாகி, பின் லண்டன்சென்று, அங்கிருந்து பின்னர் கனடா போனவர். கொழும்பிலிருந்து லண்டன்செல்லும் பயண வழியில் மணிலா நகருக்கு என்னை நேரில் பார்த்து நன்றி சொல்லவந்திருந்தார். இவரும் வானொலியில் என் குரலைக் கேட்டு நான் 50, 60வயதுக்காரராக இருப்பேன் என்ற நினைப்பில் வந்தவர். வானொலியிடம் எனக்குமிகவும் பிடித்த அம்சமே இதுதான். அது ஒரு குருட்டு மீடியம். குரல்தான்பொறி. காதோடு வந்து கதைபேசி வசியம் செய்யும். குரலுக்குரியவன் கறுப்பா,வெளுப்பா, பல் விளக்கினானா, தலை வாரியிருக்கிறானா, உடலசைவுகள் நயமாகஇருக்கிறதா, பார்க்க லட்சணமாய் இருக்கிறானா போன்ற அக்கறை களெல்லாம்வானொலிக்கு இல்லை. கருத்தும், குரலுமே அங்கு கதாநாயகர்கள்.

10,15 நிமிடங்களுக்கு சந்திரகாந்தனால் என்னிடம் எதுவுமே பேச வரவில்லை.அப்போது 1997. நான் மாணவத் தோற்றம் மாறாதிருந்த காலம். கால்பந்துமைதானத்தில் விளையாடிக் கொண்டி ருந்தபோதுதான் சந்திக்க வந்தார். வாசகர்கள்என்னிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள விரும்பி னால் அது அன்றாடஉடற்பயிற்சி. அதிகாலை 4.30க்கு எழுந்துவிடுவேன். விட்டேத்தியாய் ஒன்றரைமணி நேரம் நடப்பேன். பிரபஞ்சத்தின் ஆதார ஸ்ருதியோடு ஒத்திசைவாய்இணைந்திருப்பது போன்ற உணர்வு அக்காலைப் பொழுதுகளில் கிட்டும். கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாய் என் எடையை 68 கிலோவிலும் இடையை 34 இன்ச் சிலுமாய்வைத் திருக்கிறேன். ஆதலால் இதுவரை சர்க்கரை நோயோ, கொழுப்போ, ரத்த அழுத்தமோ எதுவும் இல்லை. தினம் சுமார் 15 மணி நேரம் வரை களைப்பின்றி வேலை செய்யமுடிகிறது.

இரவு உணவில்நானும் சந்திரகாந்தனும் நண்பர்களானோம். கணக்கில்லாமல் முதுகலைபட்டங்களும், முனைவர் பட்டங்களும் படித்து வைத்திருக்கிற நடமாடும்பல்கலைக்கழகம் அவர். என்னை கையோடு லண்டனுக்கு கூட்டிச் சென் றார்.பி.பி.சி.தமிழோசையின் ஆனந்தி அக்கா அவருக்கு நண்பர். என்னை பி.பி.சி.யில்ஈழ மக்களின் அவலம் பற்றி பேசவைக்க வேண்டு மென்பது சந்திரகாந்தனின் அவா.லண்டன் பி.பி.சி. நிலையம் சென்றபோது ஆனந்தி அக்காவும் அருட்தந்தை என்றபிம்பத்தை "தாடி, வெள்ளை அங்கி, கனிந்த முகமென'வெல்லாம் எதிர்பார்த்திருந்திருக்கிறார். நானோ கல்லூரி மாணவன்போல் சந்திரகாந்தன் அருகில்நின்றிருந்தேன். ""எங்கெ பாதிரியார்?'' என ஆனந்தி அக்கா கேட்க... ""இவர்தான்'' என சந்திரகாந்தன் என்னைக் காட்ட... முதலில் நம்ப மறுத்த அவர்,""இந்த போப்பாண்ட வரை என்ன செய்யிறது... இப்படி சின்ன பொடியனையெல்லாம்அவர் எடுத்துக்கொண்டா எங்கட பிள்ளையளுக்கு எங்கெ போய் மாப் பிள்ளைதேடுறது...'' என்று கலாய்த்தது இன்னும் மிச்சமிருக்கும் இதமான சிலநினைவுகள்.

பி.பி.சி.கேன்டீனில் மதிய உணவில் இணைந்த போது சந்திரகாந்தனும் ஆனந்தி அக்காவும்பேசிய வற்றுள் மறக்க முடியாதது இது: ""புலிகள் தவறுகள் பலசெய்திருக்கினும்தான். அதேவேளை, வளர வளர அவர்கள் மாறிக்கொண்டுவருகின்றனர். ஆனால் உலகமோ அவர்களை பழைய தவறுகளின் அடிப்படையில்தான்தீர்ப்பிடுகிறது. ""இது நூற்றுக்கு நூறு சதம் உண்மை. தமிழகத்தின் சிலஎழுத்தாளர்கள்கூட புலிகளின் பழைய தவறுகளை இப்போதும் முழங்கி வருகிறார்கள்.ஆனால் சிங்கள -பௌத்த பேரினவாதம்தான் பிரச்சனையின் வேர்மூலம் என்பதைக்கூடநமக்கு சுட்டிக்காட்ட இவர்கள் தயங்கும் போதுதான் நமக்கு சந்தேகம்வருகிறது.''

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP