சமீபத்திய பதிவுகள்

கற்பழிக்கப்பட்ட பெண்ணை பர்தாவை நீக்கி விட்டு சாட்சியமளிக்க கூறியுள்ளனர்: கனடாவில் சூடுபிடிக்கிறது பர்தா விவகாரம்

>> Tuesday, October 12, 2010

 கனடாவில் சூடுபிடிக்கிறது பர்தா விவகாரம் - இன்று  கனடா நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்புக்கு பலத்த எதிர்பார்ப்பு

 
கடந்த சில மாதங்களாகவே முஸ்லிம் பெண்கள் கண்களை மட்டும் வெளிக்காட்டும் மத பாரம்பரிய  ஆடையான பர்தாவை அணிவதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளன.

 

கடந்த சில மாதங்களுக்கு முனனர் பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் பர்தா அணிவது கூடாது என்பது சட்டமாக்கப்பட்டது. சட்டத்தை மீறி பொது இடங்களில் பர்தா அணிந்தால் $200 அபராதம் கட்ட வேண்டும். மேலும் பெண்களை பர்தா அணியச் சொல்லி வற்புறுத்துபவர்களுக்கும் 1 வருட சிறை தண்டனை என்ற சட்டம் அமலாகியுள்ளது.

 

இதனால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பிரான்ஸ் உள்ளாகி  வருவதாக உளவுத்துறை அறிவிப்பும் வெளியிடப்பட்டது.  பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனிலும் பர்தா விவகாரம் சில மாதங்களாக சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

 

பிரிட்டனில் உள்ள முஸ்லிம் பெண்களில் 70 விழுக்காட்டிர் பர்தா அணிவதை விரும்பவில்லை என்ற ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இஸ்லாமிய சமய அமைப்புக்கள சில கடுமையான கண்டனங்களை தெரிவித்ததால் அரசு பர்தாவிற்கு தடை இல்லை என அறிவித்தது.

 

இருப்பினும் பிரிட்டனில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்திற்குள் முகத்தை மூடும் படியான எந்த ஆடையையும் அணியக் கூடாது என உத்திரவிட்டுள்ளன.

 

கடந்த வாரம் பிரிட்டன் நீதிமன்றத்தில் பர்தா அணிந்து கொண்டு சாட்சியமளிக்க வந்த பெண்ணிடம் நீதிபதிகள் பர்தா அணிந்துகொண்டு சாட்சியம் கூறினால் முக பாவணைகளை பார்க்க முடியாது எனவே அவற்றை நீக்கி விட்டு சாட்சியமளித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என கண்டிப்புடன் கூறினர்.

 

கனடாவிலும் 32 வயது பெண்ணொருவர் தன் உறவினர்களால் கற்பழிக்கப்பட்டதாக பர்தா அணிந்து கொண்டு சாட்சியம் கூறியுள்ளார். ஆண்ட்டரியோ நீதிமன்றம் இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்திய போது அந்த பெண்ணை பர்தாவை நீக்கி விட்டு சாட்சியமளிக்க கூறியுள்ளனர்.

 

தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் இது போன்று கூறிக் கொண்டிருக்கக் முடியாது எனபதால் இதை முறைப்படுத்தும் ஆணையை ஆண்ட்டரியோ நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. தீர்ப்பை அறிய அனைத்து தரப்பு மக்களும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்

source:tamilcnn

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பார்வையற்றவர் பெற்ற பிஎச்.டி டாக்டர் பட்டம்


திருநெல்வேலி : கண்பார்வையற்றவர் கணிதம் மற்றும் புள்ளியியலில் டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் "கணிதவியல் மற்றும் புள்ளியல்' பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு பிஎச்.டி.,டாக்டர் பெற்றவர் முழுவதும் கண்பார்வையற்ற சிவசக்திவேல். அனைவரது புருவங்களையும் உயர்த்தி அவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். வழக்கமாக பார்வையற்றவர்கள் வரலாறு, தமிழ் போன்ற கலைப்பாடங்களைத்தான் தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.


ஆனால் கணிதம் மற்றும் புள்ளியியலில் பி.எச்டி., டாக்டர் பட்டம் பெற்ற சிவசக்திவேல் இதுகுறித்து கூறுகையில், எனக்கு சொந்த ஊர் அருகில் உள்ள ஏழுசாட்டுப்பத்தாகும். நான் கன்னியாகுமரி, அந்தோணியார் பள்ளியில் பயிலும் வரையிலும் கண்பார்வை நன்றாக இருந்தது. இருப்பினும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியர் எழுதிபோட்டதை கரும்பலகைக்கு அருகில் வந்து பார்த்து எழுதிவிட்டு செல்லும் நிலையில் இருந்தேன். நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியில்தான் பி.ஏஸ்.சி.,பயின்றேன். திருச்செந்தூர் கல்லூரியில் எம்.எஸ்.சி.,யும், மதுரையில் எம்.பில் பயின்றேன். விவேகானந்தா கல்லூரியில் துணைப்பேராசிரியராக 1983ல் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பார்வை இருந்தது. பணியில் சேர்ந்த பிறகு முழுமையாக பிறகு அரைகுறையாக இருந்த பார்வை முழுவதுமாக பறிபோனது. இதனால் நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன்.


பார்வையற்றவர் வகுப்பு நடத்த முடியாது என மாணவர்கள் எழுதியதுபோலசிலர் புகார் மனுக்கள் போட்டனர். எனக்கு கண் பார்வை பறிபோனது போல வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.இருப்பினும் என் மீது மாணவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். 1995ல் கண்பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வந்தது. அதன்படி எனக்கு பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய காலகட்டங்கள் போராட்டம் மிகுந்தவை. பி.எச்.டி.,க்கு 2005ல் பதிவு செய்தேன். இடையில் பார்வை போனதால் வழக்கமான பார்வையற்றோர்கள் பின்பற்றும் பிரெய்லி முறையை நான் கற்றுக்கொள்ளவில்லை. எனவேயாராவது நண்பர்கள் பாடத்தை சொல்லச்சொல்ல நன்றாக கேட்டுக்கொண்டு எழுதி பழகினேன்.


வகுப்பில் மாணவர்கள் சேட்டை செய்வார்கள் என்பதெல்லாம் இல்லை. நான் பாடம் நடத்தும்போது மாணவர்கள் நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனது மனைவி தங்கம், அரசு பள்ளியில் கணித ஆசிரியர் என்பதால் எனது படிப்பிற்கும் கல்லூரி பணிக்கும் உதவினார்,. மூத்த மகன் சிவசங்கர், பி.இ.,முடித்துவிட்டு பணியில் உள்ளார். இளையமகன் சிவரஞ்சன் காரியாப்பட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆணுஞூடு பயில்கிறார். இப்போதும் எனக்கு உயர்கல்வி பயில உதவி புரிவது என்னிடம் முன்பு பயின்ற பழைய மாணாக்கர்கள்தான். அவர்களில் சிலர்தான்எனக்கு பயிலவும், வகுப்பு நடத்துவதற்காக குறிப்புகள் தரவும், விடைத்தாள் திருத்தவும் உதவுகிறார்கள் என்றார். 


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இந்திய கம்ப்யூட்டர்களை சீர்குலைக்க ஸ்டக்ஸ்நெட் வைரஸ் அனுப்பி தாக்குதல்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய கம்ப்யூட்டர்கள் மற்றும் நெட்வொர்க்கை சீர்குலைக்கும் வகையில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதிப்புகள், நெட்வொர்க் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன என்று தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்டக்ஸ்நெட் என்ற கம்ப்யூட்டர் வைரஸ் பல நாடுகளை மிரட்டி வருகிறது. பென் டிரைவ் மற்றும் நெட்வொர்க் மூலம் பரவும் இந்த வைரஸ், கம்ப்யூட்டர்களின் எஸ்சிஏடிஏ சிஸ்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி தொழிற்சாலைகளில் முக்கிய வேலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  ஈரான் அணுமின்நிலையத்தை ஸ்தம்பிக்க செய்வதற்காக, இந்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் எதிரி நாடுகள் சமீபத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதனால் ஈரானில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதை முறியடிக்கும் பணியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கம்ப்யூட்டர் வைரஸ் மூலமான 'சைபர் போர்' தொடங்கிவிட்டது. இதை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அறிக்கை விட்டது. இந்நிலையில், ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் இந்தியாவுக்கு, சீனா பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்திய அரசு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை வைரஸ் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக, மத்திய தகவல் தொழில்நுட்ப துறையில் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) என்ற தனிப்பிரிவு கடந்த 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஸ்டக்ஸ்நெட் வைரஸ் தாக்குதல் குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சகம், எரிசக்தி துறை அமைச்சகத்துக்கு, சி.இ.ஆர்.டி-யின் இயக்குனர் ஜெனரல் குல்சன் ராய் கடந்த ஜூலை 24-ம் தேதி கடிதம் அனுப்பி முன்னெச்சரிக்கை விடுத்தார்.

இதனால் இந்திய நிறுவனங்களில் உடனடியாக கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. இதனால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இன்சாட் பாதிப்பில்லை இஸ்ரோ தகவல். 

இந்திய செயற்கைகோள் இன்சாட்&4பி, ஸ்டக்ஸ்நெட் வைரஸால் கடந்த ஜூலை 7&ம் தேதி பாதிப்படைந்ததாகவும், இதனால் அதில் உள்ள 24 டிரான்ஸ்பாண்டர்களில், 12 செயல்படவில்லை எனவும் தகவல் வெளியானது. இதை மறுத்த இஸ்ரோ அதிகாரிகள், ''செயற்கைக்கோள்களில் உள்ள புரோகிராம் லாஜிக் கன்ட்ரோலர் (பிஎல்சி) மட்டும்தான் கம்ப்யூட்டர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும். இன்சாட்-4பி செயற்கைக்கோளில் பி.எல்.சி. இல்லை. அதற்கு பதிலாக உள்நாட்டில் தயாரான சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இன்சாட்-4பி செயற்கைகோளை ஸ்டக்ஸ்நெட் போன்ற வைரஸ் பாதிக்க வாய்ப்பில்லை என்றனர்.


source:dinakaran
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP