சமீபத்திய பதிவுகள்

`செக்ஸ்' சாமியாருக்கு 10 ஆண்டு ஜெயில்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

>> Saturday, June 14, 2008

சென்னை, ஜுன்.15-

பெண்களின் கற்பை சூறையாடிய `செக்ஸ்' சாமியார் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.

தண்டனை பெற்ற செக்ஸ் சாமியார் பட்டு சேலை கட்டி, தலையில் பூ வைத்து பெண் வேடம் போட்டு பெண்களுக்கு நிர்வாண பூஜை நடத்தி, பெண்களின் கற்பையும் சூறையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை சின்மயா நகரில் வசிப்பவர் சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பிரபல தொழில் அதிபர் ஆவார். இவரது தாயார் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டார். டாக்டர்களிடம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இந்த நேரத்தில் திருச்சி அருகே உள்ள குளித்தலையில் சுரேஷ்வரர் சாமியார் பெண்களுக்குள்ள நோய்களை விசேஷ பூஜை மூலம் குணப்படுத்துகிறார் என்று உறவினர்கள் கூறினார்கள். இதனால், சுகன்யாவின் தாயாரை குளித்தலை சாமியாரிடம் அழைத்து சென்றனர்.

சாமியார் சுரேஷ்வரர் விசேஷ பூஜை நடத்தி சுகன்யாவின் தாயாரை குணப்படுத்தினார். இதனால் சுகன்யாவின் குடும்பத்தினர் ஆனந்தம் அடைந்தனர். சாமியாருக்கு அடிமையானார்கள்.

இந்த நேரத்தில் சாமியார் தனது லீலைகளை தொடங்கினார். சுகன்யாவின் வீட்டில் பரிகார பூஜை நடத்த வேண்டுமென்று கூறினார். இதற்கு சுகன்யாவின் பெற்றோர் சம்மதித்தனர்.

சுரேஷ்வரர் சாமியார் பல்வேறு விசேஷ குணங்களை கொண்டவர். 35 வயது நிரம்பிய அவர் தலையில் நீண்ட கொண்டை வைத்திருப்பார். நெற்றியில் பெரிய பொட்டு வைப்பார். நல்ல உடற்கட்டோடு காணப்படும் அவர், பெண்களை வசியப்படுத்தும் கண்களை கொண்டவர்.

பூஜை செய்யும்போது பட்டுசேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து பெண் வேடத்தில் காட்சியளிப்பார். இதனால் பெண்களும் பூஜையில் உற்சாகமாக கலந்து கொள்வார்கள்.

சுகன்யாவின் வீட்டிலும் சுரேஷ்வரர் சாமியார் இதுபோல் தான் பெண் வேடம் போட்டு பரிகார பூஜை செய்தார். ஒருமாதம் சுகன்யாவின் வீட்டில் சாமியார் தங்கினார். அப்போது அங்கு தங்கியிருந்த சுகன்யாவின் உறவுக்காரர் சிவக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. சிவக்குமார் பி.காம். பட்டதாரி ஆவார்.

ஒரு மாத காலத்தில் சுரேஷ்வரர் சாமியார் சிவக்குமாருடன் தகாத உறவு கொண்டு பழக ஆரம்பித்தார். பின்னர் சுகன்யா மீது சாமியாரின் கண் பட்டது. சுகன்யா அப்போது 17 வயதுடன் பிளஸ்-2 படித்துக்கொண்டிருந்தார். சுகன்யாவை அனுபவிக்க சாமியார் துடித்தார்.

இதற்காக ஒரு விïகம் வகுத்தார். குறி சொல்வது போல சொல்லி சுகன்யாவுக்கு தோஷம் இருப்பதாகவும், உடனே அவருக்கு சிவக்குமாரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் சாமியார் கதை விட்டார்.

இதை உண்மை என்று நம்பி சுகன்யாவின் பெற்றோர்கள் சம்மதித்தனர். சுகன்யாவுக்கும், சிவக்குமாருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் உடனே முதலிரவு நடத்தக்கூடாது என்று சாமியார் நிபந்தனை விதித்தார்.

சுகன்யாவின் கணவர் சிவக்குமாரை மிரட்டி சாமியார் தன் கைக்குள் போட்டுக்கொண்டார். சுகன்யா பெயருக்கு மட்டும் தான் உனக்கு மனைவி. அவளுடைய உண்மையான கணவன் நான் தான். நீ அதை கண்டுகொள்ளக்கூடாது என்று சிவக்குமாரிடம் கூறிவிட்டார். சிவக்குமாரும் இதற்கு சம்மதித்துவிட்டார்.

இருவரும் சேர்ந்து திட்டமிட்டு சுகன்யாவின் முதலிரவை அந்தமானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்தமானில் சுகன்யாவை முதலிரவுக்கு அனுப்புங்கள் என்று சாமியார் சொன்னவுடன் சுகன்யாவின் பெற்றோரும் மறுப்பு எதுவும் சொல்லாமல் சம்மதித்தனர்.

உடனே சிவக்குமாரும், சுகன்யாவும் கப்பலில் அந்தமான் சென்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவக்குமாரும், சுகன்யாவும் கப்பலில் அந்தமான் போய் சேருவதற்குள் சுரேஷ்வரர் சாமியார் விமானத்தில் அந்தமான் போய்விட்டார்.

அந்தமானில் சிவக்குமாரை வெளியே நிற்க வைத்துவிட்டு சாமியார், சுகன்யாவுடன் நட்சத்திர ஓட்டலில் முதல் இரவை கொண்டாடினார். சுகன்யா எவ்வளவோ மறுத்தும் கடுமையாக மிரட்டி தனது இச்சைக்கு பணிய வைத்தார்.

திரும்பி வரும்போது கப்பலில் 3 பேரும் சென்னை வந்தார்கள். கப்பலில் வைத்தும் சாமியார், சுகன்யாவோடு காமகளியாட்டம் நடத்தினார். வீட்டுக்கு வந்தவுடன் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் சொல்லி சுகன்யா கதறி அழுதார்.

சென்னை வந்து இறங்கியவுடன் சுகன்யாவின் 35 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு சாமியார் தப்பி ஓடிவிட்டார். நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் எனது மந்திர சக்தியால் உனது பெற்றோரை ரத்தம் கக்கி சாகடிப்பேன் என்று சாமியார் மிரட்டிவிட்டு சென்றார். இருந்தாலும், சுகன்யா துணிச்சலாக சாமியாரின் லீலைகளை போட்டு உடைத்தார்.

சாமியார் சுரேஷ்வரர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் சுகன்யாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். கடந்த 2003-ம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நடந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செக்ஸ் சாமியார் சுரேஷ்வரரை கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிவக்குமாரும் கைது செய்யப்பட்டார். கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், கொள்ளை போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சாமியார் சுரேஷ்வரர், சுகன்யாவை போல பல பெண்களின் கற்பை பரிகார பூஜை நடத்தி சூறையாடியிருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மகளிர் கோர்ட்டில் சாமியார் சுரேஷ்வரருக்கும், சிவக்குமாருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் அப்பீல் செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமாபதி இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மகளிர் கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தது. சாமியார் சுரேஷ்வரருக்கும், சிவக்குமாருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவரும் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
 
 

StumbleUpon.com Read more...

நேர்மைக்கு நேர்ந்த சங்கடம்


ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். பஸ், திருச்சிக்கு சென்றபோது கண்டக்டர் "அரை மணி நேரம் பஸ் இங்கு நிற்கும்... சாப்பிடுபவர்கள்... சாப்பிட்டு வரலாம்'' என்றார். உடனே எல்லாரும் சாப்பிடச் சென்றோம். பக்கத்தில் இருந்த ஓட்டலில் நான் சாப்பிட்டு விட்டு 50 ரூபாய் கொடுத்தேன்.

கல்லாவில் இருந்தவர் நான் நூறு ரூபாய் கொடுத்த ஞாபகத்தில் எனக்கு மீதி ரூபாய் கொடுத்தார். அடுத் தவர் காசு நமக்கு எதற்கு? என்று நினைத்த நான், ``தம்பி... நான் ஐம்பது ரூபாய்தான் கொடுத்தேன், நீங் கள் நூறு ரூபாய்க்கு மீதி கொடுத்து விட்டீர்கள்'' என்று சொல்லியபடி... ஐம்பது ரூபாயை திருப்பிக் கொடுத்தேன்.

திரும்பி நடந்தபோது... யாரோ பளாரென்று அறையும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். அங்கே ஓட்டல் முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தவரை அடித்து உதைத்து... ``ஏன்டா... இப்படித்தான் என்காசை கணக் குத் தெரியாமல் அள்ளிக் கொடுத்து ஓட்டலை அழித்து வருகிறாயா?... நீ வேலைக்கு வேண்டாம். போடா வெளியே'' என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்.

இதைக் கண்ட எனக்கு இதயமே நொறுங்கியதைப் போன்று உணர்ந்தேன். முதலாளி பக் கத்தில் இருப்பதை பார்க்காமல், என்னுடைய நேர்மையை வெளிக்காட்டியதால்... அறியாமல் தவறு செய்த ஒருவரின் வேலையையே பறித்து விட்டோமே... என்று நொந்தபடி பயணத்தை தொடர்ந்தேன். நமது நேர்மையே மற்றவர்களுக்கு சில நேரங்களில் சோதனையாக அமைந்து விடுகிறதே!

- ஆர்.நாகமுத்துமணிகண்டன், ராமநாதபுரம்.
 
 

StumbleUpon.com Read more...

மிரட்டி,பயமுறுத்தி என்னத்தை சாதிக்க போகிறீர்கள்

ஈரான்: மதம் மாறிய பத்து கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.




டெஹ்ரான், 28 மே . ஈரானின் தெற்கு ஷிராஸ் பட்டணத்தில் சமீப மாதங்களில் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடார்ஸ் என்ற செய்தித் தொடர்பாளர் கூறும் பொழுது, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 க்கும் மேற்பட்ட ஈரானிய மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடார்ஸே ஐக்கிய அரபு நாட்டின் ஒரு அகதியாயிருக்கிறார்.

புதிய மஜ்லிஸ் அல்லது ஈரானிய பாராளமன்றம் முதன் முறையாக கடந்த செவ்வாய்கிழமை கூடினது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தண்டனை விதிகளை மறுசீரமைப்பு செய்வதைக் குறித்து வரும் வாரங்களில் விவாதிக்கும்படி கூடுகிறார்கள்.

இந்த புதிய சட்டத்தின் கீழ் ஒரு இஸ்லாமிய தகப்பனுக்கு பிறந்த ஒருவர் இஸ்லாமைத் துறந்து வேறு விசுவாசத்திற்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை வழங்கலாம்.


கடந்த காலங்களில் அதிக அளவிலான கிறிஸ்தவர்களையும், பகாயி மதத்தை பின்பற்றுகிறவர்களையும் தூக்கலிட்டிருந்தாலும், தற்போது இந்த சட்டம் ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Iran: Ten Christian converts arrested




Tehran, 28 May (AKI) - Ten Iranians who converted from Islam to Christianity in recent months have been arrested in the southern city of Shiraz.

According to Goodarz, a spokesperson for the Iranian converts, more than 35 of them have been arrested since the beginning of the year. Goodarz himself has taken refuge in Dubai, in the United Arab Emirates.

The new Majlis or Iranian parliament which met for the first time on Tuesday will be discussing in the coming weeks proposed laws presented by the government to reform the penal code.

Under the new law, anyone born to a Muslim father who decides to renounce Islam and convert to another faith, faces the death penalty.

The punishment is currently absent from the Iranian penal code even though in the past, dozens of Christian converts and followers of the Bahai faith have been hanged


h ttp://www.adnkronos.com/AKI/English/Religion/?id=1.0.2203438506


http://unmaiadiyann.blogspot.com/2008/06/blog-post_13.html



umar said.........

இவர்கள் பயப்பட வைத்து மதத்தை காப்பாற்றவேண்டுமே ஒழிய, வேறு எதனாலும் இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை இருக்கவைக்க முடியாது.

நாம் ஒரு பொதுவான‌ கேள்வியை கேட்போம்:

ஒருவேளை இந்த‌ 10 பேருக்கு, இஸ்லாமுக்கு மாறிவிடு என்று இவர்களுக்கு சில‌ நாட்க‌ள் அவ‌காச‌ம் கொடுப்பார்க‌ள்.

இவர்களில் 5 பேர் உயிருக்கு பயந்து இஸ்லாமில் இருக்கிறேன், நான் மாறவில்லை என்று சொல்வார்கள் என்று நினைத்துக்கொள்வோம். மற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விடும்.

சரி, இந்த ஐந்து பேர் அல்லாவிற்கு தொழுகை நடத்தும் போதும், அவர்கள் சூராக்களை ஓதும் போதும், எப்படி செய்வார்கள்?

இவர்களால் ஆவியோடும் உண்மையோடும் அல்லாவை தொழுதுக்கொள்ள முடியுமா?

மற்றவர்களுக்காக இவர்கள் பாசாங்கு செய்து தொழுதுக்கொள்வது அல்லாவிற்கு தெரியாமல் போகுமா?


ஒருவேளை இவர்கள் இப்படி பாசாங்கு செய்து உயிருக்கு பயந்து முஸ்லீம் போல தொழுதுக்கொள்வதைப் பார்த்து, அல்லா எப்படி ஃபீல் பண்ணுவார்?

"அடடே என் மக்கள் எப்படி தொழுதுக்கொள்கிறார்கள் பாருங்கள், எவ்வளவு பக்தி, எவ்வளவு தாழ்மை என்று பூரிப்பு அடைவாரா? அல்லது இவர்களின் உணமை மனநிலை அறிந்து, வீணாக எனக்கு தொழுகை செய்கிறார்கள் என்று எண்ணுவாரா?"

மூஸ்லீம்களுக்கு இவைகள் எல்லாம் ஒன்றும் தெரியாதா? அல்லது எப்படி இதனை இவர்கள் புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்?

பக்தி என்பது மனது சம்மந்தப்பட்டது அல்லவா? மனதின் அடிபாகத்தில் இறைவன் பற்றி நாம் கொண்டுள்ள அன்பே பக்தியாக வெளிப்படுகிறது என்று இவர்களுக்குத் தெரியாதா?

என்னமோ போங்க...?

பிதாவே இவர்களை (முஸ்லீம்களை) மன்னியும், இவர்கள் செய்கிறது இன்னது என்று.....

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=18767#18767



StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP