சமீபத்திய பதிவுகள்

கல்லால் அடித்து கொல்லும் தண்டனை மாற்றம்: ஈரான் பெண்ணுக்கு இன்று தூக்கு

>> Tuesday, November 9, 2010

கல்லால் அடித்து கொல்லும் தண்டனை மாற்றம்:    ஈரான் பெண்ணுக்கு    இன்று தூக்கு
பெர்லின், நவ. 3-
 
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஸ்தியானி. கணவரை கொலை செய்ததாகவும், வேறு ஒரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இந்த தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்தியானி. தற்போது தெக்ரானில் உள்ள தாப்ரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
எனவே, பொதுமக்கள் மத்தியில் இவரை கல்லால் அடித்து கொல்ல அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு உலக நாடுகளும், சமூகசேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
எதிர்ப்பு வலுவடைந்ததை தொடர்ந்து இந்த தண்டனையை ஈரான் அரசு கை விட்டது. மாறாக கணவரை கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
 
இந்த நிலையில், அவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்தியானயை கல்லால் அடித்து கொல்ல விதிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து போராடிய உலக நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. இது ஜெர்மனியில் இயங்குகிறது.
 
இதற்கிடையே, தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்படுமா? என தெரிய வில்லை. இது குறித்து ஈரான் அதிகாரிகளிடம் நிருபர்கள், கேட்டனர். அதற்கு பதில் சொல்ல அவர்கள் மறுத்து விட்டனர். தண்டனை இன்று நிறைவேற்றப்படலாம் அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்று மழுப்பலாக பதில் அளித்தனர்.

source:maalaimalar


--------

http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கிறிஸ்துமஸ் பொம்மைகளுக்குள் வெடிகுண்டுகள்!


 

ஆப்கானிஸ்தானில் இருந்தபடி அல்கொய்தாவின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் நோட்டம் விட்டு வரும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கிறிஸ்துமஸ் பொம்மைகளுக்குள் வெடிகுண்டுகளை வைத்து தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டமிட்டு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

அரேபிய தீபகற்பத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கும், வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொறுப்பில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தைகளை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுகேட்டதன் மூலம் அவர்களின் புதிய திட்டம் வெளிவந்தது.
 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டில் புதிய முறையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். 


அல்கொய்தாவின் வெடிகுண்டு தயாரிப்பு தலைமை பொறுப்பாளரான இப்ராகிம்ஹாசன் அல் அசிரி கிறிஸ்துமஸ் பொம்மைகளின் உள்பகுதியில் அதிநவீன வெடிபொருள் கலவையை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க செய்ய திட்டமிட்டு இருக்கிறார். 

இதற்காக அல்கொய்தா இயக்கத்தினர் இங்கிலாந்து நாட்டு துறைமுகங்கள் வழியாக கிறிஸ்துமஸ் பரிசு பொம்மைகளை அதிக அளவில் அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கடைகளில் இந்த பொம்மைகளை அடுக்கி வைத்ததும் அவை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும். அதன் மூலம் பெருமளவு சேதம் ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

ஏமன் நாட்டில் இருந்து சரக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், கடல் வழியாக வெடிபொருள்களை அனுப்பவும் அல்கொய்தா திட்டமிட்டு உள்ளது. துறைமுகங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இல்லை என்பதால் இது மிக எளிதாக இருக்கும் என்று அல்கொய்தா கருதுகிறது.

அல்கொய்தாவுக்கு உலகம் முழுவதும் 22 கப்பல்கள் இயங்கி வருவதை உளவுத்துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். இந்த கப்பல்கள் மூலம் கிறிஸ்துமஸ் பொம்மைகள் எளிதில் இங்கிலாந்து நாட்டுக்குள் சென்று விடும் என்று கூறப்படுகிறது.

அல்கொய்தாவின் இந்த திட்டம் தொடர்பாக இங்கிலாந்து அரசை உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து லண்டனில் இப்போதே சோதனை நடவடிக்கைகள் தொடங்கி விட்டன


source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP