சமீபத்திய பதிவுகள்

நிஜ காம்ரேட் !

>> Monday, January 25, 2010

 

மார்க்சிஸ்ட் ஜோதிகளில் ஒன்று மறைந்துவிட்டது!

ஐந்து முறை மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகத் தொடர்ந்து 23 1/2 ஆண்டு காலம் இருந்து, பழுத்த பழமாக 95 வயது வரை வாழ்ந்த ஜோதிபாசு, வாழ்ந்த காலம் முழுவதும் அனல் கிளப்பும் ஜோதிதான்!

பள்ளிப் பையனாக இருந்தபோது, நேதாஜியின் கூட்டத்துக்குப் போகலாம் என நண்பன் ஒருவன் அழைத்தான். 'போனால், போலீஸ் அடிக்கும். அடி வாங்க உனக்குத் தைரியம் இருந்தால் போகலாம். ஓடக் கூடாது!' என்று நிபந்தனை போட்டார் ஜோதிபாசு. எதிர்பார்த்தது மாதிரியே அடி விழுந்தது. வாங்கினார். இவ்வளவு அடிவாங்கும் அளவுக்குப் பையனுக்கு நெஞ்சழுத்தம் இருந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி! கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது, இவரது போராட்ட வேகம் இன்னும் அதிகமானது. பையனது எண்ணத்தை மாற்ற, லண்டனுக்கு ஹானர்ஸ் படிக்க அனுப்பினார்கள். ஆனால், அங்குதான் இவர் கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'லண்டன் மஜ்லிகள்' என்ற அமைப்பு மூலமாக இந்திய விடுதலைக்கு லண்டனில் ஆதரவு திரட்டினார். இந்தியா போனதும் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்று சத்தியம் செய்துவிட்டே புறப்பட்டு வந்தார். வீட்டில் இருந்து ஒரே ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு, வங்காளத்தின் மொத்தத்தையும் தனது பயணத்தால் அளந்தார். அவர் போகாத இடம் இல்லை, சந்திக் காத தொழிற்சங்கம் இல்லை என்று பெயர் வாங்கி னார். கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக அந்த மாநிலம் ஆனதற்கு ஜோதிபாசுவின் அந்தக் காலத்து உழைப்புதான் காரணம்.

கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமாக ஆனபோது, "1982 முதலே நடுத்தரவர்க்கத்தினர் இடையே எங்களுக்கு இருந்த ஆதரவு மெதுவாக வலு இழக்கத் துவங்கிவிட்டது. நிர்வாகத்தில் பல துறைகளில் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம். சில நேரங்களில் எங்களது திருப்தியான மனப்பான்மை, எரிச்சலூட்டும் நடத்தை (பெரிய அளவில் இல்லாவிட்டாலும்), ஊழல் ஆகியவை எங்களைப் பலவீனப்படுத்திவிட்டது!' என்று பகிரங்கமாக விமர்சித்தவர் ஜோதிபாசு.

மார்க்சிஸ்ட் மனிதராக இருந்தாலும், அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டார். 96 தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இல்லாத கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி அமைத்தபோது, பிரதமர் பதவி ஜோதிபாசுவுக்காக அனைவராலும் மனப்பூர்வமாகத் தரப்பட்டது. ஆனால், மார்க்சிஸ்ட்டுகள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். "கட்சியின் முடிவை ஏற்பதுதான் உறுப்பினரது கடமை" என்று அமைதியாகிவிட்டார் பாசு. அதன் பிறகு மேற்கு வங்க முதல்வர் பதவியையும் யாரும் கேட்காமல் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு விட்டுக்கொடுத்தார். "என்னால் வயதைக் குறைத்துக்கொண்டு வாழ முடியாது" என்று ஒரு வரியில் விளக்கம் சொன்னார்.

"நமது நாட்டில் சாதாரண, எளிய மக்களின் ஆட்சி என்பது இன்னமும் கைக்கெட்டாத கனவாகத்தான் நீடிக்கிறது" என்பது அவரது ஏக்கமாக இருந்தது. உயிர் தாங்கிய உடல் நாட்டுக்குப் பயன்பட்டதுபோலவே தனது உயிரற்ற சடலமும் பயன்பட வேண்டும் என்று உடல்தானம் செய்த ஜோதிபாசு... நிஜ காம்ரேட்!

 

source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

'அது'க்கும் வந்துவிட்டது ரோபோ 'ராக்சி...!'

 

Top global news update 

மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளால், உலகம் பல்வேறு வசதிகளைப் பெற்றுள்ளது. விமானம், கப்பல், வாகனங்கள் என துவங்கி, கண்டுபிடிப்புகள் நீண்டுக் கொண்டே போகின்றன. இந்த வகையில், மனிதனின் அரிய கண்டுபிடிப்பு ரோபோக்கள். மனித சமுதாயத்திற்கு ரோபோக்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன.


முடியாத முதியவர்களுக்கு உதவுதல், ஆபத்தான இடங்களில் பணியாற்றுதல் என ரோபோக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையை இழந்தவர்களுக்கும் ரோபோக்கள் உதவி வருகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில், பெரிய தொழிற்சாலைகள், மருத்துவம், அறுவை சிகிச்சை, விண்வெளி பயணம் உள்ளிட்டவைகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.இந்த வரிசையில், செக்ஸ் உணர்வு அதிகம் கொண்டவர்களை திருப்தி செய்யும் வகையில் ரோபோக்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. "ட்ரூ கம்பானியன்' என்ற நிறுவனம் இந்த செக்ஸ் ரோபோவை தயாரித்துள்ளது.



அழகிய, கவர்ச்சி மிக்க பெண்ணைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவின் பெயர் ராக்சி.சிந்தடிக் மென்தசை பொருட்களைக் கொண்டு செயற்கையான தோலால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கும், தொடுவதற்கும்  உண்மையான பெண்ணை போன்று உணரப்படும் இந்த ரோபோ, செயற்கை அறிவுத்திறனும் கொண்டது.



செக்ஸ் ரோபோவின் உள்ளே ஒரு லேப்-டாப் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவை தொடும் போதே அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள உணர்வு கருவிகள் செயல்படத் தொடங்கி விடும். அதற்கேற்ப ரோபோ செயல்படுகிறது. உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் மூலம் சத்தம் வெளிப்படுகிறது. ஆனால், ரோபாவால் அதன் இஷ்டப்படி நகரவோ, தலை மற்றும் உதட்டை  அசைக்கவோ முடியாது. அனைத்தையும் கம்ப்யூட்டர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.



செக்ஸ் ரோபோவை வடிவமைத்துள்ள டக்ளஸ் இனேஸ் கூறும் போது, ""ஏ.வி.என்., அடல்ட் என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முதலாக செக்ஸ் ரோபோ ராக்சி காட்சிக்காக வைக்கப்பட்டது. ஆண்களின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் ராக்சி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்த்தல், பேசுதல், கேட்டல், உணர்தல் ஆகிய நான்கு வித உணர்ச்சிகளையும் இது வெளிப்படுத்தும். வாடிக்கையாளர் கால்பந்து குறித்து பேசினால், அது குறித்து அதுவும் பேசும். கிரிக்கெட் குறித்து பேசினால், அதுவும் திரும்ப பேசும். இப்படி, அனைத்து விஷயங்களிலும் வாடிக்கையாளரை இந்த ரோபோ திருப்திபடுத்தும்.



தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோவின் உயரம் 170 செ.மீ., எடை 54 கிலோ. வாடிக்கையாளர்கள், தங்களின் பழக்க வழக்கங்களையும், விருப்பத்தையும் முன்கூட்டியே கூறினால், அதற்கேற்ப செக்ஸ் ரோபோ வடிவமைத்து தரப்படும். ரோபோவின் கை, கால்கள் தானாகவே திரும்ப முடியாது. ரோபோவை திருப்பி வைத்தால் பேச தயாராகி விடும். செக்ஸ் ரோபோவை பெற, மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாயுடன் மாத சந்தா கட்டணத்தையும் கட்ட வேண்டும். ஆண் செக்ஸ் ரோபோவும் தயாராகி வருகிறது; அதன் பெயர் ராக்கி ட்ரூ,'' என்றார்.



இன்றைய நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செக்ஸ் ரோபோ விற்பனைக்கு வந்துள்ளது. மிக விரைவில், உலகின் அனைத்து பாகங்களிலும் இதன் விற்பனை துவங்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP