சமீபத்திய பதிவுகள்

தமிழீழ கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டி அமேரிக்காவில் தொடங்கப்பட உள்ளது

>> Friday, September 4, 2009

தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி - 2009
 

வடஅமெரிக்கா கண்டத்தில் முதன் முறையாக கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தினால் கனடியத் தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து  தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள L'Amoreaux Sports Complex இனில் இச் சுற்றுப் போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

பல்வேறு பிரிவினரிற்கும் தனித்தனியே நடைபெறவுள்ள இப்போட்டியில் தமிழீழக் கோப்பையினைத் தமதாக்கிக் கொள்ள பல்வேறு கழகங்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவுள்ளன. இதில் 8, 10, 12, 14, 16 வயதிற்குட்பட்ட பிரிவுகளிலும் திறந்த போட்டியாக வயதுவித்தியாசம் இன்றி யாரும் கலந்துகொள்ளும் போட்டியாகவும் இப்போட்டிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

வசந்த காலத்தின் இறுதியான நீண்ட வார விடுமுறையில் ஏற்பாடாகியுள்ள இப்போட்டிகள் உதைபந்தாட்ட ஆர்வலர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழீழத்திற்கு வெளியே வடஅமெரிக்கக் கண்டத்தில் தமிழீழக் கோப்பைக்கான சுற்றுப்போட்டி ஒன்று நடைபெறுவது இதுவே முதற்தடவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை 647-274-9366, 647-408-4906 ஆகிய எண்களை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்


source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை அறிவிப்பு:வன்னிப் போரின் போது எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் ஒப்படைக்க வேண்டும்

வன்னி போர் நடவடிக்கை வீடியோக்கள் அனைத்தும் ஊடகத்துறை அமைச்சரிடம் கையளிக்குமாறு உத்தரவு
 

வன்னி போர் முன்னெடுப்பு சம்பந்தமான அனைத்து வீடியோ நாடாக்களும் ஊடகத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசதொலைக்காட்சி சேவைகளான இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை (ஐ.ரி.என்) என்பவற்றின் தலைவர்கள் தம்மிடம் உள்ள போர் சம்பந்தமான அனைத்து வீடியோ நாடாக்களையும் உடனடியாக கையளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான வீடியோக் காட்சிகள் இந்த இரு நிறுவனங்களில் இருந்து களவாக வெளியே கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. அதனால் தம்மிடம் இருக்கும் போர் குறித்த வீடியோக்கள் அனைத்தையும் உடனே சரிபார்த்து, ஏதாவது காணாமல் போயுள்ளதா என அறியுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், சில அரசாங்க அதிகாரிகளின் மீது சந்தேகப்பார்வை விழுந்துள்ளதுள்ளதாம். பயன்படுத்தப்படாத சில போர் குறித்த வீடியோ நாடாக்கள் பணத்துக்காக களவாக விற்கப்படுவதாக அரசாங்கத்துக்கு புகார் கிடைத்துள்ளதாம்.

இலங்கை இராணுவம் தமிழ் இளைஞ்ர்களைக் கொல்லும் வீடியோக்காட்சிகள், இலங்கையில் எடுக்கப்பட்டது அல்ல என முற்றுமுழுதாக மறுத்துவரும் அரசாங்கம் தற்போது, இவ் அறிவித்தலை விடுத்திருப்பது பெரும் சந்தேகங்களை கிளப்புகிறது.

--

 
source:athirvu
www.thamilislam.co.cc
 

StumbleUpon.com Read more...

பகுதி நேர முஸ்லிம் - கவிக்கோ

என்னை கவந்த கவிதை

பகுதி நேர முஸ்லிம் - கவிக்கோ


சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்!

பிறைச் சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!

ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம்
மதம் மாற்றியது

இருண்டு கிடந்த
ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க்
கிடக்கிறாய்

மனித மலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்

ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
'டக்ஆஃப்வார்'
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம் போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்

மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின் மகசூலுக்கு
விதைக்கத்தானே இம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடை செய்வாய்?

இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?

நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியை வைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்த போது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்

உன் மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அதனால் இப்போது
உன் நாடுகள்
எரிந்துக் கொண்டிருக்கின்றன

இதிலே கொடுமை
உன் பகைவரின் தீப்பந்தத்திற்கு
நீயே எண்ணெய்
ஊற்றிக் கொண்டிருக்கிறாய்

சாதியற்ற சமுதாயத்தைப்
படைத்தது இஸ்லாம்
நீயோ
இனவுணர்வுக் குட்ட நோயால்
அழுகிக்கொண்டிருக்கிறாய்

உலகெங்கும்
சாந்தியைப் பரப்ப வேண்டிய நீ
'பயங்கரவாதி' என்ற
கெட்டப் பெயரை
வாங்கிக் கொண்டு நிற்கிறாய்

'முஸ்லிம்' என்ற
'லேபிள்' மட்டும் ஒட்டிய
சீஸாவாக இருக்கிறாய்
உள்ளேயோ
சாக்கடையை
நிரப்பிவைத்திருக்கிறாய்
அப்பாவி மக்களைக் கொள்வது
'ஜிஹாத்' என்று
உனக்கு
மூளைச் சலவை செய்தவர்கள்
அகாரணமாய்

மனிதன் ஒருவனைக் கொல்வது
மனித குலத்தையே
கொல்வதாகும் என்ற
இறைவசனத்தை
உனக்குப் போதிக்கவில்லையா?

வேகம் இருக்குமளவு
உனக்கு
விவேகம் இல்லை

முன் யோசனை இல்லாமல்
இரண்டு கோபுரங்களைத்
தகர்த்தாய்
அவனோ உன்னுடைய
இரண்டு நாடுகளை
நாசமாக்கிவிட்டான்

மார்க்கத்தின்
உயிரை விட்டுவிட்டு
உடலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்

வீட்டுக்கு வெளியே
வெள்ளையடிப்பதிலேயே
கவனம் செலுத்தும் நீ
வீட்டுக்குள்ளே கிடக்கும்
குப்பையைப் பற்றிக்
கவலைப்படாமல் இருக்கிறாய்

தாடி வளர்பதில்
நீகாட்டும் அக்கரையில்
கோடியில் ஒரு பங்கு
'தக்வா' வை வளர்ப்பதில்
காட்டியிருந்தால்
நீ வளர்ந்திருப்பாய்

தலைக்கு மேலே வைப்பதற்கு
நீ காட்டும் சிரத்தையில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு
உள்ளே வைப்பதில்
நீ காட்டியிருந்தால்
பகைவருக்கு முன்னால்
உன்தலை
குனியும் நிலை
ஏற்பட்டிருக்காது

லுங்கியைக்
கணுக்காலுக்குக மேலே
உயர்த்துவதில்
நீ காட்டும் கவனத்தில்
நூற்றில் ஒரு பங்கு 
உன் உள்ளத்தில்
'நஜீஸ்' ஒட்டாமல் இருக்கிறதா
என்று பார்ப்பதில் இருந்திருந்தால்
நீ இறைவனை 
நெருங்கியிருப்பாய்

உன் பகைவர்கள்
உன் கண்ணில்
விரலை விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்
நீயோ
அத்தஹிய்யாத்தில்
விரலை ஆட்டுவதா
நீட்டுவதா என்று
சர்ச்சையிட்டுச்
சண்டைபோட்டுக்
கொண்டிருக்கிறாய்

அந்த விரல் உணர்த்தும்
ஏகத்துவத்திற்கு
முக்கியத்துவம் தருவதை விட்டு
விரலுக்கு முக்கியத்துவம்
தருபவனே!
அந்த விரல் இல்லாதவன்
தொழுதால் கூடுமா?
இல்லையா?

சமூகத்தில் தொழுவதே
கொஞ்சம் பேர்கள் தாம்
அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்

பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றாடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா...?


நன்றி
சமவுரிமை மாத இதழில்
கவிக்கோ அப்துல்ரஹ்மான்

source:கிளியனூர் இஸ்மத்

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஹிட்லரின் மரணம் பற்றி - ஹிட்லருடன் இருந்த இறுதி போர் வீரனின் நேரடி அனுபவம்!

 

இரண்டாம் உலகமகாயுத்தத்தின் 70 ஆண்டு நினைவு, பல உணர்ச்சிகரமான ஞாபகங்களுடன் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதனையொட்டி, அந்த யுத்தத்தின் போது ஹிட்லரின் நாசிப்படைகளிடமிருந்து, எப்படி குறிப்பிட்ட சில யூதச்சிறுவர்களை, ஜேர்மனியர் ஒருவர் புகையிரதத்தின் மூலம் காப்பாப்பாற்றினார் என்பதனை எமது செய்திப்பார்வையில் தெரிவித்திருந்தோம்!

தற்போது, ஹிட்லர் தோல்வியின் விளிம்பில் இருந்த போது, அவருடன் கூடவே இருந்து, இன்றுவரை இன்னமும் உயிர் பிழைத்திருக்கும் இறுதிப்படை வீரரினை பற்றிய தகவல்களை தருகிறோம்.

ரோச்சஸ் மிஸ்ச் (Rochus Misch), எனும் இவர் 1945 ஏப்ரல் - மே காலப்பகுதியில் சுமார் 12 நாட்கள், ஹிட்லருடன் அருகிலேயே இருந்து, ஹிட்லர் இறுதியாக தங்கியிருந்த பதுங்குகுழிகளில், பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருந்துள்ளார். 

ஹிட்லரின் பிரத்தியேக படைக்குழுவின், செய்தி தூதுவர், மெய் பாதுகாப்பாளர், தொலைபேசி இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்து வந்த இவர் ஹிட்லரின் படைகள் அனைத்தும் தோல்வியடைந்திருந்த வேளை, ஹிட்லர் இருக்கும் இடத்தினையும் எதிரிகள் கண்டு பிடித்து மிக அருகாமையில் நெருங்கிக்கொண்டிருந்த போது, எவ்வாறு,ஜேர்மனியின், நாசிப்படைகளின் முக்கிய தளபதிகளும், ஹிட்லரும் தம்மை மரணப்படுத்திக்கொண்டார்கள் என்பதனை, தனது அனுபவங்கள் வழியே வெளிக்கொணருகிறார், பிபிசி இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில்!

ஹிட்லர், தனது மரணத்திற்கு மிக அருகாமையில் இருந்த போதே, மிஸ்ச்சினை சந்தித்திருக்கிறார். மிஸ்ச் ஹிட்லரினை சந்தித்த அனுபவத்தினை விளக்கும் போது, ஹிட்லரின் அறைக்கு தான் நுழைந்த வேளை, கதவின் பின்னால் இருந்து ஹிட்லர் வெளிப்பட்டதும், அவருடைய தங்கையிடம் இக்கடிதத்தினை கொடுக்கும் படி, கூறி அவருக்கே உரிய பாணியில் தலை அசைத்ததும், 

பின்னர் தளபதிகள் ஒவ்வொருவரும், தற்கொலை செய்துவிட, ஹிட்லரின் தலை மேசையில் சாய்ந்த வாறு இருக்க, அவர் எவ்வாறு அமர்ந்திருந்தார் என்பதனை கண்முன் காட்சிகளாக உணர்ச்சிபூர்வமாக விளக்குகிறார் இவர்.
 
ஹிட்லரின் மருத்துவர்கள் இறுதியாக, அவருடைய பிள்ளைகளுக்கு, இனிப்புச்சுவை உடைய குடிபானத்தினை கொடுத்து, அவர்களையும் மரணமடைய செய்வது வரை இவர் கூறிய அனைத்து விடயங்களும், ஹிட்லரின் மரணம் பற்றி இது நாள் வரை உலகில் நிலவி வரும் சர்ச்சைகளினை தீர்க்க, வலுவான புதிய ஆதாரத்தினை தருவதாக அமைந்திருக்கிறது.
source:4tamilmedia

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP