சமீபத்திய பதிவுகள்

ஈராக் மிஷன் முடிந்தது : அதிபர் ஒபாமா அதிகராப்பூர்வ அறிவிப்பு

>> Tuesday, August 31, 2010


பாக்தாத் : ஈராக்கில் இருந்த அமெரிக்க ‌தாக்குதல் படை செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து நெருக்கடி எழுந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என, அறிவித்தார். இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவம், ஈராக்கில் முகாமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒபாமா பெருமதிம் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் முடிவு ஈராக்கின் நலன் கருதி மட்டும் எடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் நலன் கருதியும் எடுக்கப்பட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை வலுப்படுத்தி ஒரு ஸ்திரமான அரசாக அதை அதன் மக்கள் கைகளில் ஒப்படைக்க அமெரிக்க விலைமதிக்கமுடியாத தியாகத்தை செய்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும் ஈராக்கில் அமைதிய‌ை நிலைநாட்ட பெரிய அளவில் செலவழிக்கப்பட்டது. அமெரிக்காவின் இளைஙர்களும், இளம் பெண்களும், ஈராக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.போரினால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் , ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தான் அமெரிக்கா ஈராக்குக்கு இவ்வளவு காலம் துணை நின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி; ஈரானில் தண்டனை நிறைவேற்றம்

தெக்ரான், ஆக.30-
 
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27).
 
இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.
 
அப்போது கறுப்பு மினி ஸ்கர்ட, டி-சர்ட் மற்றும் ஹை கீல்ஸ் செருப்பு அணிந்திருந்தார். அதற்கு மேல் கறுப்பு நிற கவச உடை அணிந்திருந்தார். இது தங்கள் நாட்டு சட்டத்துக்கு எதிரானது என கூறி அவரையும், அவரது தோழிகளையும் போலீசார் கைது செய்தனர்.
 
ஆண்கள் அணியும் உடையை அவர் அணிந்திருந்ததாக குற்றம் சாட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் செய்த குற்றத்துக்காக 40 சவுக்கடி வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.
 
இதை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து தெக்ரானில் ராச்சிக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு தனி அறையில் வைத்து ராச்சியை சவுக்கால் அடித்தனர்.
 
அந்த அறைக்கு முன்பு அவரது பெற்றோர் காத்து நின்றனர். சவுக்கடியை தாங்காமல் அவர் அலறியதை கேட்டும் சத்தமின்றி மவுனமாக கண்ணீர் வடித்தபடி நின்றனர்.

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP