சமீபத்திய பதிவுகள்

உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்

>> Thursday, April 15, 2010

உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்

 நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா!

தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்டிவதைக்க தமிழினம் துடிதுடித்துத் தவித்துப்போயிருந்த காலத்தில், நாடுகடந்த தமிழீழம் என்ற ஒற்றைவரி, தமிழர்களை சற்று நிமிர்த்தி உட்கார வைத்திருக்கின்றது. எதிர்காலம் பற்றிய ஒருவிதமான நம்பிக்கையை விதைத்திருக்கின்றது. மீண்டும், சிரிக்க ஆரம்பித்திருக்கின்றோம். கால்களை மெல்ல நிலத்தில் ஊன்றி நிமிர்வதற்கான ஒரு தென்பு கிடைத்திருக்கின்றது.

புலத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நம்பிக்கையைச் சிதைத்தழிக்கும் நடவடிக்கைகளில், சிலர் ஈடுபட்டிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது.

இது குறித்து நீங்கள், வரைந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஊடகங்களில் வாசித்தேன். முதல் வெளிவந்த மடலைத் தொடர்ந்து உங்களுக்கு ஒரு மடல் வரையவேண்டும் என நினைத்தேன் பின் அது அப்படியே போய்விட்டது. இன்று நீங்கள் வரைந்திருக்கும் இரண்டாவது மடல் கண்டு இதனை வரைகின்றேன்.

உங்கள் முயற்சிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கிலும், தடை ஏற்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து, நீங்கள் வேதனைப்படுவதும், உங்கள் முயற்சிகளை இடையில் நிறுத்திவிட நீங்கள் முயற்சித்து பின் அதிலிருந்து மீண்டதாகவும் இதுவிடயங்களில் மிக நெருக்கமானவர்களினூடாக அறிந்தேன். வேதனைப்பட்டேன். அதனால், இதனை வரைகின்றேன்.

அண்ணா!

இது வரலாறு. உங்கள் மீது சுமத்தியிருக்கும் பெரும் பணி. எமது தேசியத் தலைவர், எத்தனை துன்பங்களை, எத்தனை நெருக்கடிகளை, எத்தனை அவமானங்களை, எத்தனை ஆபத்துக்களைச் சுமந்து கல்லில் நார் உரிப்பதுபோல இந்த விடுதலை இயக்கத்தை கட்டிவளர்த்திருப்பார்? எண்ணிப்பாருங்கள். சுயநல சிந்தனையுடைய யாழ்ப்பாண சமூகத்தில் இருந்து அதி அற்புதமான தியாக மனிதர்களை உருவாக்க அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்?

இன்று, உலகத்தமிழ் சமூகத்தை, நாடு பற்றிய இனம் பற்றிய சிந்தனையுடன் அக்கறையுடன், தமது இனத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புடன், உணர்வுள்ள மக்கள் சமூகமாக மாற்ற அவர் புரிந்த தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் நினைத்துப் பார்க்கமுடியாதவை.

விரும்பியோ விரும்பாமலோ, குடும்பத்திற்கு வழிகாட்டவந்த ஒரு மூத்த சகோதரன்போல பெரும் பொறுப்பைச் சுமந்திருக்கின்றீர்கள்.

குழப்பவாதிகள், குழப்படிக்காரர், தங்கள் அதிகார இருப்பு ஆட்டங்கண்டுவிடும் என்ற பயத்தில் இருப்பவர்கள், தங்கள் பிழைப்பில் மண்வீழ்ந்துவிடும் என அச்சப்படுபவர்கள், தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் தங்களின் அனுமதியுடனேயே நடைபெறவேண்டும் என்று, தலைமைக்குப் புறம்பாக சிந்திக்கத் தலைப்படும் குட்டிக் குட்டி குறுநில மன்னர்கள் இப்படியாக பலர் குறுக்கிடுவார்கள். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பயணப்பட வேண்டியது, தமிழ்மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களினது தலையாய பணி.

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள்.

அதிகாரங்களை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு, மக்களைப் பிழையாக வழிநடத்துபவர்கள், அவர்களே சில தமிழ் ஊடகங்களையும் தம்கையில் வைத்திருக்கின்றனர். மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பில் இவர்களின் வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது.

தமது தேவைக்கு ஏற்ப எங்கும் உடைவுகளை மேற்கொள்வதே இவர்களின் தற்போதைய பணி. தாயகத்தில், தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதும் இவர்களின் வேலையே. புலத்திலும் தமிழர்களின் பலத்தைச் சிதறடிப்பது இவர்களின் தற்போதைய பணி. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் சங்கங்கள் குறித்து மக்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

தாயகத் தமிழர்கள், இந்த பிரகிருதிகளின் முயற்சிக்கு தகுந்த பாடத்தை வழங்கியுள்ளனர். இவர்களின் கருவிகளாகச் செயற்பட்ட மனிதர்கள்தான் பாவம். ஆனால் அவர்களும் தமது பிழைகளை உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே என்போன்றவர்களின் விருப்பம்.

எந்த நல் முயற்சியும், உடனடியாக வெற்றிபெற்றுவிடாது. அதற்குக் காலம் எடுக்கும்.

காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும்.

உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்புடன்
ராஜநாதன்


source:nerudal


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறோம்




StumbleUpon.com Read more...

பயர்பாக்ஸில் சைபர் சர்ச்

 
 

கூகுள் சர்ச் இஞ்சின் தான் இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சினாக உள்ளது. இதனாலேயே கூகுள் தந்த குரோம் பிரவுசரிலும் அதன் சர்ச் பாரிலேயே கூகுள் தேடுதல் திறன் தரப்பட்டுள்ளது. இதனால் பலர் கூகுள் குரோம் பிரவுசருக்கு மாறினார்கள். 
இதனைத் தொடர்ந்து பயர்பாக்ஸ் பிரவுசருக்கும் ஒரு தேடுதல் ஆட் ஆன் தொகுப்பு இணையத்தில் வெளியானது. இது சைபர் சர்ச் (Cyber search)  என அழைக்கப்படுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பு ஏறத்தாழ குரோம் பிரவுசரின் சர்ச் இஞ்சின் திறனுடன் இயங்குகிறது. இதனால் இணையத் தேடல் எளிதாகிறது. 
இந்த ஆட் ஆன் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து இயக்குவது எனப் பார்க்கலாம்.
1.உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே பயர்பாக்ஸ் பிரவுசர் இருந்தால் அதனை இயக்கிக் கொள்ளவும். இல்லாதவர்கள்http://www.mozilla.com/enUS/firefox/personal.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று பிரவுசருக்கான பைலை டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இயக்கிக் கொள்ளவும். 
2. அடுத்து சைபர் சர்ச் ஆட் ஆன் தொகுப்பை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதற்கு https://addons.mozilla.org/enUS/firefox /addon/7931  என்ற முகவரியில் உள்ள தளத்தை நாடவும். அங்கு "add to Firefox"  என்று இருக்கும் பச்சை வண்ண பட்டனில் கிளிக் செய்திடவும். தானாக ஆட் ஆன் இணைக்கப்படும். இனி மீண்டும் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடி மீண்டும் திறக்கவும். இப்போது சைபர் சர்ச் இயக்கத்திற்குத் தயாராய் இருக்கும். 
3. இனி நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்திடும்போதே, தளங்கள் வேகமாகத் தேடித் தரப்படுவதனைக் காணலாம்


source:dinamar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்தியா... கழிப்பறைகளை விஞ்சிய செல்போன்கள்!

 

ஐக்கிய நாடுகள், ஏப்.15,2010

க்கள் தொகையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேசமும், பொருளாதாரத்தில் மிக விரைவாக வளர்ந்து நாடுமான இந்தியாவில் கழிப்பறைகளை விட செல்போன்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்ற கவலைக்குரிய புள்ளி விவரங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

"மக்கள் தொகையில் பாதி பேர் செல்போன்கள் வைத்திருக்கும் வகையிலான பொருளாதார நிலையைக் கொண்டிருப்பதும், பாதி பேரால் அடிப்படைத் தேவையான 'கழிப்பறை'யை பயன்படுத்த முடியாதவர்களாக இருப்பதே இந்தியாவின் கவலைக்குரிய முரண்பாட்டு நிலை," என்கிறார் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கான ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஜாஃபர் அதீல்.

கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக ஆய்வு முடிவின்படி, 2008-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 54 கோடியே 50 லட்சம் பேர் (45 சதவீதத்தினர்) சொந்தமாக செல்போன் வைத்திருக்கின்றனர்; 36 கோடியே 60 லட்சம் பேர் (31 சதவீதத்தினர்) மட்டுமே கழிப்பறையை உபயோகிக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 100 பேருக்கு 0.35 ஆக இருந்த செல்போன் பயன்பாட்டு விகிதம், தற்போது 100 பேருக்கு 45 செல்போன் என்ற நிலையை எட்டியிருக்கிறது.

உலக அளவில் மொத்தமுள்ள 6.7 பில்லியன் மக்கள் தொகையில் 1.1 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தச் சூழலுக்கிடையே, '2025-ல் அனைவருக்கும் கழிப்பறை வசதி' என்ற இலக்கை அடைவதற்கான செயல்பாடுகளுக்கு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

வளரும் நாடுகளில் மக்களின் சுகாதாரத்துக்கு கொடுக்கப்பட்டும் முக்கியத்துவத்தை வெளிக்கொண்ரும் வகையிலேயே, மக்களின் செல்போன் பயன்பாடு மற்றும் கழிப்பறை வசதி ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பீட்டு ஆய்வை மேற்கொண்டிருக்கிறது, ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்.

2015-க்குள் உலக மக்கள் தொகையில் பாதி பேருக்கு கழிப்பறை வசதி அமைக்கப்படுவதற்கு 358 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது.

சொந்தமாக வசிக்க வீடு இல்லாத ஏழை மக்கள்தான் கழிப்பறை இல்லாமல் குப்பை மேடுகளையும் புதர் மறைவுகளையும் பயன்படுத்துகின்றனர். பிறகு, கை கால் கழுவ அசுத்தமான குட்டை நீரையே பயன்படுத்துகின்றனர். இதனால், நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.

உலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் இத்தகைய நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்கிறது புள்ளிவிவரம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், கிராமப்புறங்களிலும் நகர் பகுதிகளிலுள்ள குடிசைப் பகுதிகளிலும் தான் மக்கள் தங்களுக்கென்று தனி கழிப்பறை வசதி இல்லாமல் அவதியுறுகின்றனர்


source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சீனாவில் பூகம்பம், திபெத் பீடபூமியில் 400 பேர் பலி கட்டடங்கள் தரைமட்டம்: 10 ஆயிரம் பேர் காயம்


 

Top global news update 

பீஜிங்:சீனாவின் திபெத் பீடபூமியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 400 பேர் பலியாயினர்; 10 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 2008ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் பலியாயினர். இதை தொடர்ந்து தற்போது திபெத் பீடபூமியில் அமைந்துள்ள குங்ஹாய் மாகாணத்தின், யூஷு மாவட்டத்தில் நேற்று காலை 7.1 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.இதனால் ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 400க்கும் அதிகமானவர்கள் பலியாயினர்; 10 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தீயணைப்பு வீரர்களும், 700 ராணுவ வீரர்களும் பூகம்பம் பாதித்த பகுதிகளுக்கு சென்று இதுவரை 900 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 பேர் கொண்ட டாக்டர் குழு அனுப்பப்பட்டுள்ளது.பூகம்பம் பாதித்த ஜீகு என்ற நகரில் 85 சதவீத வீடுகள் தரைமட்டமாகி விட்டன. இப்பகுதியில் உள்ள அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அணை உடையும் முன், தண்ணீரை திறந்து விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


யூஷு மாவட்டத்தில் அரசு அலுவலகங்களும், பள்ளி கூடங்களும், புத்த மடாலயங்களும் நொறுங்கியுள்ளன. தொழில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.சில பள்ளிகள் இடிந்து விழுந்த போது, பலர் உயிர் தப்பியதற்கு காரணம், மாணவ, மாணவியர் அதிர்வு தெரிந்ததும் பக்கத்தில் உள்ள வெட்ட வெளிக்கு தப்பினர். பூகம்பத்தில் இடிந்து விழுந்த வீடுகள் தவிர சற்று உயரமான வீடுகளில் பெரிய அளவில் சுவர்களில் கீறல் காணப்படுகின்றன.மலை மீது உள்ள இந்த மாவட்டத்தில் தற்போது இரவில் பூஜ்யம் டிகிரிக்கு குறைவான வெப்பநிலை காணப்படுகிறது.


வீடுகளை இழந்த மக்கள் இந்த குளிரில் தவித்து வருகின்றனர்.பூகம்பத்தால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரமும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பூகம்பத்தை தொடர்ந்து மூன்று முறை நில நடுக்கம் காணப்பட்டது.வீடுகளை இழந்த மக்களுக்கு கூடாரங்களும், போர்வைகளும், கோட்டுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP