சமீபத்திய பதிவுகள்

வரலாறு கவனிக்கிறது

>> Sunday, January 25, 2009

வரலாறு கவனிக்கிறது
வரலாறு நெடுக மேலாதிக்கத்தாலும் போர் அச்சுறுத்தலாலும் பீடிக்கப்பட்டவை காஸôவும் வன்னியும். ஏறத்தாழ ஒரே காலகட்டம். ஏறத்தாழ ஒரே பிரச்னை. ஏறத்தாழ ஒரே சூழல். ஆனால், அணுகுமுறைகளில் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள்.

கடந்த டிசம்பர் 27-ம் தேதி ஹமாஸýடனான போர்நிறுத்தத்தை தூக்கியெறிந்துவிட்டு காஸô மீதான தன் தாக்குதலை இஸ்ரேல் அதிபர் எஹுத் ஒல்மர்ட் தொடங்கினார். 22 நாள்களில் ஏறத்தாழ 1,200 உயிர்களைப் பலிகொண்ட பின்னர் ஒட்டுமொத்த சர்வதேச எதிர்ப்பின் விளைவாக போர்நிறுத்தத்தை இப்போது அறிவித்திருக்கிறார்.

இந்தப் போர்நிறுத்தத்துக்காக குரல் கொடுக்காதவர்கள் யாருமே இல்லை. போர் தொடங்கிய நாளிலிருந்தே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

ஐ.நா.சபையின் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்தது. ""இந்தத் தீர்மானம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முடிவு'' என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீஸô ரைஸ். ""நான் பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முழுவீச்சில் தொடங்குவேன்'' என்றார் தற்போது பதவியேற்றுள்ள அதிபர் ஒபாமா.

இஸ்ரேலால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அரபு நாடுகளின் வற்புறுத்தலின்பேரில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் போர்நிறுத்தத்தை ஐ.நா.சபை வலியுறுத்தியது. பான் கி மூன் லெபனான் சென்றார். ஐரோப்பிய ஒன்றியம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியது.

பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி எகிப்து அதிபர் முபாரக்கைச் சந்தித்தார். எஹுத் ஒல்மர்ட்டிடம் போரை நிறுத்தச் சொன்னார். இங்கிலாந்தும் சீனாவும் இந்தியாவும் இஸ்ரேல் நடவடிக்கையைக் கண்டித்தன.

அரபு நாடுகளில் தொடங்கி இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரவிய மக்களின் தன்னெழுச்சியான இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம் எகிப்து, கியூபா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்று உலகெங்கும் பரவியது. ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். இந்தியாவிலும்கூட காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசுகள் மெüனம் காக்க முற்பட்டபோதும் மக்களின் குரல் அரசாங்கங்களை அசைத்து மெüனத்தைக் கிழித்தது.

ஆனால், உலகின் இன்னொரு பக்கம் ஓர் இனமே அழிந்துகொண்டிருக்க ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 2008, ஜனவரி 17-ல் விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டார் ராஜபக்ஷ. இலங்கை அரசின் வன்னி மீதான போர் தொடங்கி ஏறத்தாழ ஓராண்டாகிவிட்டது. உயிரிழந்தோர், காயமடைந்தோர், காணாமல்போனோர் எண்ணிக்கை தெரியவில்லை. வன்னியின் ஒவ்வொரு நகரமும் ஆவி நகரமாகிக்கொண்டிருக்கின்றன.

முல்லைத்தீவில் சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே வாழக் கூடிய பரப்பளவில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் உயிரைக் கையில் ஏந்தி ஒளிந்திருக்கின்றனர். காடுகளிலும் கிராமங்களிலும் வெட்டவெளியில் ஆயிரக் கணக்கானோர் எவ்வித வசதியுமின்றி தங்கியிருக்கின்றனர். விஷ ஜந்துக்கள் கடிக்கு ஆளாகி மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் வன்னியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். மோட்டார் வாகனங்களில், மாட்டு வண்டிகளில், இரு சக்கர வாகனங்களில் எனக் கிடைத்த வாகனத்தில் சொந்த மண்ணையும் உடைமைகளையும் துறந்து பெட்டி, படுக்கையோடு வரிசையாய் அணிவகுத்துச் செல்லும் தமிழர்களால் யாழ்குடா செல்லும் பாதைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றன.

ஆனால், இலங்கை அரசோ சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமரை நடத்திக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவைச் சுற்றி வளைத்திருக்கும் இலங்கை ராணுவம் தன்னுடைய பெரும்பகுதி வீரர்களையும் அங்கு குவித்துவருகிறது. தாக்குதலின் உக்கிரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள் என எவ்விதப் பாகுபாடுமின்றி குண்டுவீச்சு தொடர்கிறது.

ஐ.நா. சபை, அமெரிக்காவின் புதிய அதிபர், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் ஈழத் தமிழர்கள் தனித்தனியே விடுத்த போர்நிறுத்த கோரிக்கை எவராலும் பொருள்படுத்தப்படவில்லை. ""இடம்பெயரும் பிரதேசங்கள் மீதான தாக்குதலையேனும் தாற்காலிகமாக நிறுத்த வேண்டும்'' என்ற தமிழ் மக்களின் குறைந்தபட்ச உயிர்ப்பிச்சையையும்கூட ராஜபக்ஷ நிராகரித்துவிட்டார். ""மருத்துவமனைகள் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டும்'' என்ற மருத்துவர்களின் வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டதால் போரில் தாக்குதலுக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. இறந்தவர்கள் பலருக்கு இறுதிச் சடங்குகள்கூட நடப்பதில்லை.

இலங்கையில் இதற்கும் மேல் நிகழ வேண்டியது என்ன? ஒட்டுமொத்த உலகமும் இன்னமும் மெüனம் காக்கிறதே ஏன்? ஏனெனில், இலங்கையில் கொல்லப்படுவது தமிழர்கள்.

இந்த ஒரு காரணம்தான் இந்தியாவின் பிரதமர் முதல் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் வரை இஸ்ரேலுக்கு ஒரு நியாயமும் இலங்கைக்கு ஒரு நியாயமும் பேச வைக்கிறது; தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பொதுத் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறது; தம் சொந்த இனத்தவர் ஆயிரக்கணக்கில் உயிரழிய, குற்ற உணர்வற்ற மெüனத்தை தமிழர்களுக்குப் பழக்கி இருக்கிறது.

ஆறு கோடி தமிழர்களின் உணர்வைப் புறந்தள்ளி தன்னுடைய ரகசிய உதவிகள் மூலம் ஒரு வரலாற்றுக் குற்றத்தைத் திட்டமிட்டு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தன்னுடைய வெற்று வார்த்தைகள் மூலம் அந்தக் குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தம்முடைய ஓட்டு அரசியல் மூலம் மன்னிக்க முடியாத இனத் துரோகத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். இவை எல்லாவற்றையும் மெüனமாக கவனித்துக் கொண்டிருக்கிறது வரலாறு!
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232914115&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

புலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்திருக்கவும்

 .    
 
வணக்கம் எம் தமிழ் உறவுகளே...!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த கல்மடு பிரதேசத்தை இராணுவம் இறுதி முற்றுகையிட பல நுாறு படை அணிகளுடன் சமராடி சென்ற வேளை கல் மடு குள அணை குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு தேங்கி நின்ற பல அடி தண்ணீர் சுனாமி அலைபோல பாய்ந்து சென்று அப்பகுதியில் முன்னேற்ற முயற்சியை மெற் கொண்ட படையணிகள் பலரை நீர் அடித்து சென்றுள்ளது.

அவர்கள் அந்த கள முனை குளமருகில் நகர்தி நின்ற பலரக கனரக ஆயுதங்களும் அந்த நீரில் அடித்த செல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கத்தைய பிரபல ஊடகம் ஒன்றிற்கு இலங்கை இராணுவப்பேச்சாளர் தெரிவிக்கையில் தமது படையினருக்கு இழப்பு எற்பட்டுள்ளதாகவும்
பலநுாநு படையினர் கொல்லப்பட்டும் காணமல் போயிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இவரது அறிவிப்பின்னாலேயே அங்கு நகர்ந்து நின்ற ஜயாயிரத்திற்கு மேற்ப்பட்ட படையணிகள் இந்த வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டும் அழிவுற்றிருக்கலாமென தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த இராணுவத்தின் மேற்படி தகவலை வைத்த உலகமெல்லாம் பரந்து விரிந்து கிடக்கின்ற ஊடகங்கள் பலவிதமாக இராணுவ
எண்ணிக்கை விகிதங்களை தெரிவித்து வருகின்றன.

ஆனால் அடிப்படையில் இராணுவத்திற்கு பலத்த சேதம்
ஏற்ப்பட்டுள்ளது உண்மையே. அதை இராணுவம்
ஒப்பு கொண்டுள்ள போதும் எதிர் வரும் தேர்தலை
கருதி அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

இராணுவத்தின் கூற்றின் படி விடுதலைப்புலிகளால்
இந்த அணைக்கட்டு
உடைக்கப்பட்டு இருப்பின் இராணுவ தந்திரோபாய
அடிப்படையில் மிக சிறந்த
உத்தியாக கருதப்படும்.

இந்த அணைக்கட்டை உடைத்த விடுதலைப்புலிகள் வெறுமனெ முன்னேறி வரும் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் உத்தியை
கையாள மாட்டார்கள் மாறாக பாரிய நில மீட்பு போரை நடத்துவார்கள்.

அப்படி பாரியமரபு வழி கெரில்ல யுத்த தாக்குதல்களை தீவிர
படுத்தி நில மீட்பை நடத்தினால் பல்லாயிரம் இராணுவத்தின் விநியோகங்கள் தடுக்கப்பட்டால் அந்த இராணுவ அணிகள்
விடுதலைப்புலிகளின் முற்றுகைக்கள் சிக்கியிருப்பார்கள்.

அப்படி ஒரு நிலை வருமேயானல் உலக நாடுகளிடம்
இலங்கை அரசு தமது இராணுவத்தை காப்பாற்றுங்கள் என
அறை கூவல் விடும். அப்போது அந்த வௌிநாட்டு படைகள்
இராணுவத்தை காக்க வருமேயானல் இதை வைத்து விடுதலைப்புலிகளை
இல்லாதொழிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு செய்யும்.

இதன் பின்புல இராணுவ நகர்வுகளை விளங்கி கொண்ட
விடுதலைப்புலிகள் தற்போது தாக்குதல் நடைபெறுமாயின்அந்த
தாக்குதல்களை வௌியிடாமல் மூடி மறைக்கலாம்.

நிலங்களை மீட்ட பின்னர் வௌியிட கூடிய சாத்தியங்கள்
உள்ளன. அரசு தனது இழப்பு விகிதத்தை ஒத்து கொள்ளாது
வௌியிடாது.

காரணம் எதிவரும் தேர்தலை மையமாகவைத்து இதனை
அரசு வௌியிட்டு தனது ஆட்சியை இழக்க விரும்பாது.

எனவே இவ்வாறானதொரு தாக்குதல் நடைபெறுகின்றதாயின்
விடுதலைப்புலிகள் அந்த இராணுவ இழப்புக்களை
அறிவிக்கும் வரை
இலங்கை அரசும் மௌனம் காக்கும்.

எனவே தற்போது வௌிவருகின்ற அணைத்து ஊடக செய்திகளும்
இராணுவம் வௌியிட்ட செய்திகளை மையமாகவைத்தும்
அந்த களமுனையில் நின்ற இராணுவ பட்டாலியன்களையும்
வைத்தே கணிக்கப்பட்டு வௌியிடப்படுகின்றன.

எனவே விடுதலைப்புலிகள் இவ்வாறனதொரு தாக்குதல்
நடைபெறுவதாக இருந்தால் அதன் முடிவில் செய்திகளை
வௌியிடுவார்கள் அல்லாது அங்குள்ள மக்கள் மூலம் நாளடைவில்
செய்திகள் கசியும் என நம்பலம்.

அதுவரை மக்களே அமைதிகாக்கமாறு வேண்டுகிறோம்.

 

 

StumbleUpon.com Read more...

கல்மடு - சொல்லப்படாத கதை:-GTN - போர்நிலவரச் செய்தியாளர்:

கல்மடு - சொல்லப்படாத கதை:-GTN - போர்நிலவரச் செய்தியாளர்:
மிகச் சக்திவாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தியே இந்தப் பாரிய அணைக்கட்டு தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த அணைக்கட்டு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதன் காரணமாக ஏ-35 வீதியின் ஒரு பகுதியும் பரந்தன் - பூநகரி பிரதான வீதி மற்றும் தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் இந்த நீர் வழிந்தோடி ஆனையிறவையும் சென்றடைந்ததாக ஜீ.ரீ.என்னிற்கு உள்ளிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உண்மையில் இந்தக் குளம் உடைப்பதற்கான திட்டம் புலிகளால் முன்னரே தீட்டப்பட்டதா? அல்லது திடீரென எடுக்கப்பட்ட முடிவா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால் உண்மை நிலை விஸ்வமடுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு இருந்த படையினர் ஏறத்தாழ 5 ஆயிரம் துருப்புக்களுடன் நேற்று அதிகாலை 5 அல்லது 5.30 அளவில் தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயாராக இருந்துள்ளனர்.


இதற்கென கிளிநொச்சி மற்றும் பரந்தன் பிரதேசங்களைக் கைப்பற்றிய படையணியினருடன் அவர்களுக்குத் தலைமை தாங்கிய 3 கேணல் தர அதிகாரிகளும்; களத்தில் நேரடியாக இறக்கப்பட்டனர்.


கல்மடுக் குளத்தை அண்மித்த பகுதிகள் இவர்களின் தாக்குதல் தயாரிப்புத் தளங்களாக மாற்றப்பட்டு இருந்தன.


ஏற்கனவே மூன்று நாட்களாக விஸ்வமடுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காகப் படையினர் பல்வேறு முனைகளில் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர் என்பதனை நேற்று (ஜன24) பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையமும் உறுதிப்படுத்தி இருந்தது.

இத்தகைய ஒரு சூழலிலேயே, படையினரால் தாக்குதல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக அதிகாலை வேளை புலிகளால் இந்தக் குளத்தின் அணை குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த நிலையில் படையினரின் தாக்குதல் திட்டத்தை புலிகள் முன்னதாகவே அறிந்திருந்தமை படைத்தரப்பில் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதேவேளை இந்தக் குளம் உடைக்கப்பட்டமை மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் மற்றும் அரச தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியிடப்பட்டு இருக்கவில்லை. இருந்த போதும் குளம் உடைக்கப்பட்டமையை ஏற்றுக் கொண்ட இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம் விடுதலைப் புலிகள் மிகவும் கீழ்தரமான ராணுவ உத்தியைக் கையாண்டு கல்மடுக் குளத்தை உடைத்ததாகவும் இது மக்களுக்கு பெரும் மனிதாபிமானப் பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் கவலை வெளியிட்டிருந்தது.


எனினும் 'கல்மடுக் குளம் உடைக்கப்பட்டதில் படைத்தரப்பினருக்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டு இருக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியவண்ம் உள்ளன. அத்துடன் இந்தப் பிரதேசங்களி;ன் பாரிய தாக்குதல் அதிர்வுகள் யாழ் மாவட்டத்தை அண்மித்த பகுதிகளிலும் கேட்ட வண்ணம் இருப்பதாகவும் யாழ் மாவட்டத்திலும் ஆகாய தரை மார்க்கமான ராணுவப் போக்குவரத்துக்கள் மிகவும் அதிகரித்த நிலையில் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தத் தாக்குதல் குறித்த விபரங்கள் அரச விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியாகா விட்டாலும் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படைத்தரப்பினருக்கு பாரிய அனர்த்தம்; ஏற்பட்டு இருக்கலாம் எனவும் 600ற்கு மேற்பட்ட படையினர் காணாமல் போயிருக்கலாம் எனவும் ஐயம் வெளியிட்டுள்ளன. கூடவே பாரிய ஆயுத தளபாடங்களும் நீரில் சிக்குண்டதாக கூறப்படுகிறது. எனினும் அத்தகைய இழப்புக்கள் எதுவும் இல்லை என படைத்தரப்புக்கள் கூறுகின்ற போதும் கொழும்பில் அமைச்சர்கள் மட்டத்தில் பெரியளவில் பேசப்படும் சம்பவமாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன' என ஜீ.ரீ.என் செய்திச் சேவையும் ஏனைய ஊடகங்கள் செய்திகளை வெளியிட முன்னதாகவே கேள்விக்குறியுடன் செய்தியை வெளியிட்டு இருந்தது.


ஆனால் இந்தத் குளம் உடைக்கப்பட்டமை குறித்தும் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்தும் ஐரோப்பாவில் காட்டுத் தீபோல் வதந்திகள் பரவத் தொடங்கின. கடந்த 2 வருடங்களாக விடுதலைப் புலிகள் அடைந்து வரும் பின்னடைவில் மனம் சோர்ந்திருந்த அல்லது விரக்தியின் உச்சத்திற்குச் சென்றிருந்த புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் திடீரென நித்திரை விட்டெழுந்து பாரிய வெற்றிக்களிப்புகளில் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது. பின்னர் அந்த வெற்றிக் களிப்பு படிப்படியாக காற்றிறங்கியது போல் இறங்கிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. காரணம் இந்த குள உடைபின் பின்னால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து விடுதலைப் புலிகளோ அரசாங்கமோ எந்தத் தகவல்களையும் வெளியிட்டிருக்கவில்லை. அத்துடன் முன்னரைப் போல் தெற்கில் இருந்து தகவல்களை வெளியிடும் பாதுகாப்புப் பத்தி எழுத்தாளர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறியும் அரசாங்க மற்றும் ஏனைய உள்ளகத் தகவல்களை வெளியிட்டும் வந்த லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்ட நிலையிலும' ஊடகங்களும் எந்தத் தகவல்களையும் வெளியிட்டிருக்கவில்லை. அதனால் அளவுக்கு மீறிப் பரப்பிய வதந்திகளும் உண்மையாகவே வெளியான செய்திகளும் அடியுண்டு போய் எல்லோர் தரப்பும் மீண்டும் சோர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆனால் நேற்றைய குள உடைப்பும் அதனால் ஏற்பட்ட சேதங்களும் அரசாங்கத் தரப்பை படைத்தரப்பை கடுமையான அசௌகரியத்திற்கு உள்ளாக்கி இருப்பது என்பதே உண்மையானது. அந்த அசௌகரியத்திலிருந்து அதிர்விலிருந்து மீளுவதற்கான அல்லது படைத்தரப்பினருக்கு மீண்டும் மன வலிமையை ஏற்படுத்துவதற்கான உத்தியாக இன்று முல்லைத் தீவு படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 1995 வரை முழுமையான கட்டுப்பாட்டில் படையினரின் ஆளுகைக்குட்பட்டிருந்த முல்லைத்தீவு கடந்த 13 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. கடலை அண்மித்துக் காணப்படும் இந்த நகரத்திலிருந்து விடுதலைப்புலிகள் ஏற்கனவே முற்றாகப் பின் வாங்கியிருந்தனர். குறிப்பாக தம்முடைய வளங்களை பின்னோக்கி நகர்த்தியிருந்தனர். இருந்த போதும் படையினருக்கெதிரான கடுமையான தாக்குதல்களை தொடுத்த வண்ணமிருந்தனர். கிளிநொச்சி பரந்தன் பிரதேசங்களை இலகுவாகக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவை நோக்கிய நகர்வில் கடந்த 3 வாரங்களாக பாரிய அளவில் எதனையும் சாதித்திருக்கவில்லை. மாறாக நேற்று எதிhபாராத பாரிய இழப்பை சந்தித்து அந்த இழப்பின் மேல் இன்று முல்லைத்தீவு நகரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட கல்மடுக் குளத்தின் நீரின் கன அளவு அதன் வேகம் அது பாய்ந்த சென்ற பிரதேசங்கள் அதன் பரவுகை என்பன எவ்வாறு பாரிய அளவில் படையினரைப் பலி கொண்டிருக்கலாம் என்ற கேள்விகள் பலருடைய மூளைகளையும் துளைத்த வண்ணமுள்ளன.

இந்தக் குளத்தின் நீர் கடல் அலை போல் செல்லுமா அணை புரண்டு ஓடுமா நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் படையினரை அடித்துச் செல்லுமா என்ற கேள்விகள் வாதப் பிரதிவாதங்களுக்குட்பட்டுள்ளன. சிலர் கூறுகின்றார்கள் கல்மடுக்குளம் ஒரு சிறிய குளம். அது உடைந்து இவ்வளவு படையினரை பலி கொள்ளுமா? சில ஊடகங்கள் செய்திகளை மிகைப்படுத்தி உயிரை விட்டுக் கொண்டிருக்கும் புலிகளுக்கு ஒக்சிசன் ஏற்றுவதாகக் கூறுகின்றார்கள். விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் இந்தச் செய்தி பொய்படக் கூடாதென பிரார்த்திகின்றனர். மறுபுறம் விடுதலைப் புலிகளின் அழிவை எதிர்பார்த்திருப்போர் இந்தச் செய்தி பொய்ப்பட வேண்டுமென்றே ஆலாய்ப் பறக்கின்றனர். ஆனால் செய்திகள் என்பவை எப்போதும் செய்திகளே. நம்பகத் தன்மையுடைய செய்திகள் என்றும் வதந்திகளாகிய வரலாறு இல்லை. உண்மைச் சம்பவங்களை அதன் வாயிலாக வரும் செய்திகளை மிகைப்படுத்தவும் முடியாது. வதந்திகளாக்கவும் முடியாது.

ஆயின் கல்மடுவில் நடந்தது என்ன? ஆயிரக் கணக்கான படையினர் விசுவமடுவையும் ஏனைய முக்கிய பிரதேசங்களையும் கைப்பற்றுவதற்கான யுத்த தயாரிப்பில் ஈடுபட்டிருந்தமை உண்மை. நேற்று அதிகாலை (ஜன 24) தாக்குதலை ஆரம்பிக்கத் தயாராக இருந்தமையும் உண்மை. அதற்கென விசேட படையணிகளும் 3 கேணல்தர அதிகாரிகளும் களமிறக்கப்பட்டிருந்தமையும் உண்மை. ஏதிர்பாராத விதமாக குளத்தின் அணை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமையினால் நீர் அணை புரண்டு ஓடியதும் உண்மை. ஆனால் அணை உடைந்து புரண்டோடிய நீரினால் மட்டுமா படையினர் கொல்லப்பட்டனர் என்பது பொய்மையாகலாம். காரணம் இந்த நீரில் மின்சாரம் ஊடுவியிருந்ததாக படைத்தரப்பிலிருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

600க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என எண்ணிய போது இல்லை அதற்கும் அதிகமாக படைத்தரப்பினருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் அணை உடைக்கப்பட்டதனால் வெளிப்பாய்ந்த நீரில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயன்ற அணிகளாக இருந்த படையினர் பலர் இங்கு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. குளத்தில் இருந்து பாய்ந்த நீர் வடிந்தோடுவதற்கும் வற்றுவதற்கும் குறைந்தது 3 நாட்கள் எடுக்கும் என பாதுகாப்புத்தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். உடனடியான மீட்புப் பணிகளில் ஈடபட முடியாத அளவிற்கு கள நிலமை மாற்றப்பட்டிருக்கின்றது. அதனால் மீட்புப் பணிகளுக்கு உடனே செல்ல முடியாத படையினர் அப்பிரதேசங்களுக்கு விடுதலைப்புலிகள் செல்லக் கூடாது என்பதற்காக தொடர் எறிகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெருமளவு ஆயுத தளபாடங்கள் இந்த பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்தன. இவற்றில் பெருமளவானவற்றை விடுதலைப்புலிகள் கைப்பற்றியிருப்பதாக ஒரு தகவல் கூறுகின்றது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தப் பிரதேசங்களில் முன்னேறிச் சென்ற அல்லது பல திசைகளில் சிதறுண்ட படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்மை நிலைப்படுத்துவதற்காக சில மைல் தூரம் பின் நோக்கி வந்ததாக கூறப்படுகின்றது.

அதனையும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த அனர்த்தத்தில் கிளிநொச்சி பரந்தன் வெற்றியைத் தேடிக் கொடுத்த, அடுத்த தாக்குதலுக்குத் தலைமைதாங்கத் தயாராக இருந்த 3 கேணல் தர அதிகாரிகளின் நிலையும் என்னவென்பது ஐயப்பாடான கவலையளிக்கும் விடயமாகவே இருப்பதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எவை எப்படி இருந்த போதிலும் இந்தப் பாரிய அனர்த்தத்திற்கு விடுதலைப் புலிகளோ அல்லது அரசாங்கமோ உடனடியாக உரிமை கோரப் போவதுமில்லை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆக எதிர்வரும் ஒரு சில தினங்களில் 400 முதல் 500 வரையான படையினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் அரச தரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே கல்மடுக் குள உடைப்பும் அதனால் ஏற்பட்ட சேதங்களும் உத்தியோகபூர்வமானவையாகப் பதியப்படும். அதுவரை இவை பலருக்கு செய்திகளாக பலருக்கு வதந்திகளாக சிலருக்கு உண்மைகளாக இன்னும் சிலருக்குப் பொய்மைகளாக இருக்கும் என்பதே யதார்த்தம்.

(நன்றி :globaltamilnews.net)

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232903371&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP