சமீபத்திய பதிவுகள்

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-2

>> Tuesday, June 30, 2009

வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி

 

 

 

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')
குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை

 

 
1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.


தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது

 

 

StumbleUpon.com Read more...

கவிஞர் தாமரை கன்னடாவின் தமிழ் வானொலி மூலம் அளித்த பேட்டி

StumbleUpon.com Read more...

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-1

இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது.

 
பல ஆண்டுகளுக்கு முன்பே ``தமிழ் ஈழம்'' கோரிக்கை, இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்பட்டது. ``இலங்கைத் தமிழர்களின் தந்தை'' என்றும் ``இலங்கையின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம்,

 
தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர், சிங்கள ஆட்சியாளர்கள்.

எனவே, ``இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ `சுதந்திர தமிழ் ஈழம்'தான் ஒரே வழி'' என்று மாநாடு கூட்டி அறிவித்தார்.

அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது.

இலங்கையின் வரலாறு

``தமிழர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இலங்கைக்குப் போனவர்கள்தானே! அவர்கள் தனிநாடு கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?'' என்று இன்றும் பலர் கேட்கிறார்கள். அவர்கள் இலங்கையின் வரலாற்றை அறியாதவர்கள்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். இலங்கையின் "மண்ணின் மைந்தர்கள்.'' தமிழ் மன்னர்கள் பலர் இலங்கையை ஆண்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

``லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் இலங்கையும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது'' என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

ஆதாரங்கள்

 

 

திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1876-ல் பூமியைத் தோண்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பலவகையான மண் பாண்டங்கள் கிடைத்தன. அவை சூளையில் நன்றாக வேக வைக்கப்பட்டு, நல்ல மெருகுடன் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப்பதற்கான ``தாழி''கள் இவை.

இதேபோன்ற ``தாழி''கள், இலங்கையின் வடபகுதியிலும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, புராதன தமிழர்கள் உபயோகித்த பல நாணயங்கள், அரச இலட்சினைகள், முதலானவை இலங்கையின் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


சுருக்கமாகச் சொன்னால், பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எத்தகைய நடை- உடை- பாவனையுடன் வாழ்ந்தார்களோ, அதே மாதிரிதான் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் `தொப்புள் கொடி' உறவு இருந்திருக்கிறது.

வரலாறு கூறுவது என்ன?

 

 

  

இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மவுரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அக்குழு இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் என்றும், அசோகன் விருப்பப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு ``தேவ நம்பி'' என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ராஜ்ஜியங்கள்

ஆதிகாலத்தில், இலங்கை ஒரே நாடாக இருந்தது இல்லை. பல அரசர்களும், சிற்றரசர்களும் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டு வந்தனர்.
ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன:

( 1 ) தென் கோடியில், கொழும்பு பகுதியை உள்ளடக்கிய கோட்டை ராஜ்ஜியம். இந்த கோட்டையை ஏற்படுத்தியவனே அழகுக்கோன் என்ற தமிழன்.
( 2 ) கண்டி ராஜ்ஜியம்.
( 3 ) யாழ்ப்பாண ராஜ்ஜியம்.

இவற்றில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை எக்காலத்திலும் சிங்களர்கள் ஆண்டது இல்லை. கோட்டையையும் கண்டியையும் தமிழர்களும், சிங்களர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.

பல ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இலங்கையையும் ஒரே நாடாக மாற்றினார்கள். சிலோன் (இலங்கை) என்ற பெயரையும் சூட்டினார்கள்.

StumbleUpon.com Read more...

லால்கர் மீட்கப்பட்டது ‐ மேற்குவங்கம் இராணுவக் கட்டுப்பாட்டில் அடுத்தது ஜார்கண்டா?

லால்கர் மீட்கப்பட்டது ‐ மேற்குவங்கம் இராணுவக் கட்டுப்பாட்டில் அடுத்தது ஜார்கண்டா? 


 
மேற்குவங்கம் லால்கரில் மாவோயிஸ்டுகள் கைப்பற்றி வைத்திருந்த ஐம்பது கிராமங்களை மீட்கும் நடவடிக்கையும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இப்போது அப்பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய இராணுவத்தின் ஐந்து கம்பெனிகளும் மாநில அரசின் சிறப்பு அதிரடிப்படையும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் முதலில் ராம்கர், லால்கர் ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டு விட்டன. மாவோயிஸ்டுகள் வசம் கடைசியாக இருந்த முக்கியப் பகுதியான காந்தாபஹாரி பகுதியையும் நேற்று மீட்டதாக இராணுவம் அறிவித்தது.
 
இந்நிலையில் இராணுவம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி கிராம மக்களை துன் புறுத்துவதாக மனித உரிமை அமைப்பினரும் எழுத்தாளர்களும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெர்வித்திருப்பதோடு மத்தியப் படைகளை உடனடியாக மேற்குவங்கத்தில் இருந்து வெளியேறுமாம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இராணுவம் தன் இறுதித் தாக்குதலைத் தொடுத்த போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை. அவர்கள் காடுகளுக்குள் ஓடி ஒளிந்து விட்டதாகவும். ஆங்காங்கே கெரில்லா முறையில் இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

ஜூன் 18‐ஆம் தேதி துவங்கிய மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நேற்றுடன் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
 
 

அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளிக்கூடங்களிலும், வழிப்பாட்டுத்தலங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள தேடுதல் வேட்டையில் சில தலைவர்களை கைது செய்திருந்தாலும் மூத்த தலைவர்களை பிடிக்க இராணுவம் தீவீரம் காட்டுகிறது.
 

தவிரவும் கடைசியாய் கைப்பற்றப்பட்ட காந்தா பஹாரியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்ப்தில் துரிதமாக ஈடுபட்டிருக்கும் இராணுவம். லால்கர் உடபட பல இடங்களில் இராணுவ முகாம்களை அமைக்க திட்டமிடப்படுகிறது. ஆனால் இதற்கு மேற்குவங்க ஆளும் மார்க்ஸ்சிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் அவர்களை அரசியல் ரீதியாகவே வெல்ல நினைக்கிறோம். இராணுவ ரீதியாக அல்ல. என்பதுதான் மார்க்ஸ்சிஸ்டுகளின் கோஷமாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின் கொல்கத்தாவின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் புத்ததேவ்பட்டாச்சார்ய இசட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழே மாவோயிஸ்டுகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாலேயே நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அதே சமயம் அச்சட்டத்தை முழுமையாக பாரபட்சம் இன்றி நடைமுறைப்படுத்த மாட்டோம். என்று தெர்வித்தார். ஆனால் மார்க்சிஸ்டு அரசின் இன்னொரு அமைச்சரோ  மாவோயிஸ்டுகளிடம் இருந்து 95மூ பகுதிகள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் அவர்கள் இப்போது ஜார்கண்ட் மாநிலத்துக்குள் சென்று விட்டார்கள். ஆகவே ஜார்கண்டில் இப்படியான நடவடிக்கையை எடுப்பதுதான் மாவொயிஸ்டுகளை மீண்டும் வளரவிடாமல் தடுக்கும்  என்றார். ஆனால் மத்திய அரசும் விரைவில் ஜார்கண்டில் மவோயிஸ்ட் தேடுதல் வேட்டையை நடத்தும் என்றே தெரிகிற்து.
 
 

StumbleUpon.com Read more...

உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் இலங்கை படைகளுக்குப் பயிற்ச்சி அதிர்ச்சித் தகவல்--காணொளி இணைப்பு

>> Monday, June 29, 2009

SAS உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் இலங்கை படைகளுக்குப் பயிற்ச்சி அதிர்ச்சித் தகவல்--காணொளி இணைப்பு

 

(Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப்

பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார்.

காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் தனியார் நிறுவனம் போலச் செயல்படும் கிருஸ் ரையன்இ இலங்கை சென்று இராணுவத்தினருக்கு அளித்த பயிற்சிகள் குறித்து இதுவரை காலமும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

எமது இணையம் எமது வாசகர்களுக்காக இதனை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது. இலங்கை சென்று பலமாதகாலமாக அதிரடிப்படையினரை கடும் பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் கிருஸ், இவர் பார்வையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இருப்பினும் அவர்களின் வலிமை போரிடும் திறமை, ஒரு இலக்கை அடைய உயிர்த்தியாகம் செய்தல், கொரில்லாத்தாக்குதல் என்பன தம்மை பிரமிக்கவைத்ததாகக் கூறுகிறார் கிருஸ்.

புலிகளின் தாக்குதலில் பல அதிரடிப்படையினர் கொல்லபட்டதும்,  சிறப்பு அதிரடிப்படையினர் பலர் காயமடைந்ததும் அவரை மிகவும் வியப்பில் ஆள்த்தியுள்ளதாம். விடுதலைப் புலிகள் போன்ற கடும் தாக்க்குதல் நடத்தக்கூடிய ஆயுதக் குழுக்களுடன் எவ்வாறு போர்புரிவது என இவர் இலங்கை அதிரடிப்படைகளுக்கு மாதக்கணக்காக பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். வன்னியில் போர் நடைபெற்ற காலங்களில் சிறப்பு அதிரடிப்படையினர், மற்றும் டாஸ்க் போர்ஸ் 7 என்ற அதிரடிப் படையினருமே பல முன் நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 






கூட்டம் கூட்டமாக ஆட்டுமந்தைகள் போல முன்னேறிவந்த இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை சந்தித்திருந்தவேளை, சிறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்துமாறு உக்திகளை வகுத்துக்கொடுத்தவரும் இவரே ஆவார்.மொத்தத்தில் உலகில் கிடைக்கக்கூடிய அனைத்து வழங்களையும் ஒன்றுதிரட்டி, இலங்கை அரசு போர் புரிந்துள்ளது, பாமர சிங்கள மக்கள் முதல் முகாம்களில் பணிபுரிந்த சிங்கள வேலைக்காரவரை, கிருஸ் ரையனைப் பற்றி வாய்திறக்கவில்லை.

ஒற்றுமை காக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இவ்விடையத்தை அறிந்திருந்தும் வாய்திறக்கவில்லை, அங்கும் சிங்கள ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது, போர் முடிவுக்கு வந்த பின்பும் கூட சிங்கள் ஒற்றுமை காக்கப்படுகிறது, ஆனால் தமிழர்கள் இடையே என்ன காணப்படுகிறது? சற்றே சிந்தியுங்கள், சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் எமது இனம் பிளவுபட்டு நின்றது காரணமாக இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்களின் ஒற்றுமையின்மை, பொறாமை இருக்கிறது.






 

 

இதுதான் சிங்களவன் வெற்றிக்கு காரணம்.எம் தமிழினமே இனியாவது விழித்தெழுவோம், இன்னும் நேரம் கடந்துவிடவில்லை, ஒற்றுமையாக ஒன்றுபட்டு தமிழீழம் அமைப்போம். சிங்கள அரக்கர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். கொல்லப்பட்ட மக்களுக்கும், சிறையில் வாடும் எம் உறவுகளுக்காகவும் குரல்கொடுப்போம், இனியாவது ஒன்றுபடுவோம்.. ஓரினமாக !

 

இவரின் பிரபல புத்தகங்கள்

http://www.fantasticfiction.co.uk/images/n32/n162734.jpg

http://www.fantasticfiction.co.uk/images/x0/x4425.jpg

 

 நன்றி;அதிர்வு.கொம்

StumbleUpon.com Read more...

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலர்வது உறுதி களம் புகுவோம்! கடமையாற்றுவோம்!

பிரபாகரன் தலைமையில்
தமிழீழம் மலர்வது உறுதி
களம் புகுவோம்! கடமையாற்றுவோம்!
பழ.நெடுமாறன்

30 ஆண்டு காலம் அறவழியிலும் 30 ஆண்டு காலம் மறவழியிலும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற நடத்திய போராட்டத்தை முற்றிலுமாக முறியடித்து விட்டதாக சிங்களப் பேரினவாத அரசு வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமும் ஒருபோதும் ஓய்ந்து விடுவதில்லை. விழவிழ எழுவோம் என்பதுதான் விடுதலைப் போராளிகளின் இலட்சிய முழக்கமாகும்.

இராசபக்சேயைவிட மிகக்கொடிய இனவெறியர்களான இட்லரும், முசோலினியும் அய்ரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் என்ன ஆயின என்பதை உலக வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. வரலாறு கூறும் இந்த உண்மைகளை அறியாதவர்கள்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழ முடியாத வகையில் ஒடுக்கப்பட்டு விட்டது என வாய்வீச்சு வீசி வருகின்றனர்.






தமிழீழத்தில் ஏற்பட்டிருக்கிற மனிதப் பேரவலம் இதுவரை உலகம் சந்தித்திராத ஒன்றாகும். ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 இலட்சத் திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் பூட்டப்பட்டு ள்ளனர். போதுமான உணவோ மருந்தோ சுகாதார வசதிகளோ இல்லாமல் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சொல்லொணாத சித்ரவதை களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.


சிங்களப் படையினர் நோயாளிகளை தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை வேறிடத்திற்கு கொண்டுச் சென்று அடைத்து வைத்துள்ளனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அந்த நோயாளிகளின் கண்கள், சிறு நீரகங்கள், ஈரல், எலும்பின் உட்சத்து, இருதயம் ஆகியவற்றை மயக்க மருந்து தராமலேயே வெட்டி எடுத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின் றனர்.

குறைந்தது இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு அவர்கள் தங்கள் ஊர்களுக்கோ வீடுகளுக்கோ திரும்பு வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சிங்கள அரசு வெளிப்படையாகக் கூறுகிறது. அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டிருப்பதாகவும் ஆகவே அவற்றை யெல்லாம் அப்புறப்படுத்திய பிறகே மக்களை குடியேற அனுமதிக்க முடியும் என்று சிங்கள அரசு கூறுகிறது. உண்மை அது அல்ல. இராணுவம் ஆக்கிரமித்த ஊர்களில் உள்ள வீடுகள் எல்லாம் விமான குண்டு வீச்சு களினாலும் பீரங்கித் தாக்குதல்களினாலும் அனேகமாக இடிந்து தகர்ந்துவிட்டன. இடியாமல் இருந்த வீடுகளை சிங்கள இராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது. விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களை மீண்டும் தங்கள் ஊர்களில் வாழ்வதற்கு சிங்கள அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பது திண்ணம். அவர்களை எல்லாம் உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றுப்போக வைக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்த வீடுகளைப் பற்றியோ ஊர்களைப் பற்றியோ மக்கள் நினைத்துப் பார்க்கக் கூடாத அளவில் மறந்துவிட வேண்டும். இராணுவ காவலோடு உள்ள முகாம்களில் காலமெல்லாம் வாழ்ந்து மடியவேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு மொழி உணர்வோ இன உணர்வோ கொஞ்சம்கூட இல்லாமல் மழுங்கிப்போன மக்களாக விளங்குவார்கள் என சிங்கள அரசு கருதுகிறது.

இந்த மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெளியேறியவர்கள். இறுதி வரை அவர்களுடன் உறுதியாக நின்றவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் சிங்கள அரசு நடந்து கொள்கிறது.

சிங்கள அரசின் திட்டம் குறித்து பல செய்திகள் கிடைத்துள்ளன. ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களை ஒழித்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஜெர்மானிய மக்களை குடியேற்றினர். ஜெர்மன் மக்களுக்கு வாழ்வதற்கு இடம் தேவை ஆகவேதான் யூதர்களை ஒழித்துக்கட்டியதாக இட்லர் கூறினர். அதே திட்டத்தைத்தான் இராசபக்சே இன்றைக்குச் செயல் படுத்துகிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு எஞ்சிய தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேற்றத் திட்டமிட்டு இருக்கிறார். இராணுவம் கைப்பற்றிய இடங்களில் புத்த விகாரைகள் அவசர அவசரமாகக் கட்டப்படுகின்றன. விகாரைகளைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


"எதிர்காலத்தில் இலங்கையில் இரண்டு இனங்கள் தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம், மற்றொன்று சிங்கள கலப்பினம்"

என இராசபக்சே வெளிப்படை யாகவே கூறுகிறார். அதாவது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி சிங்களக் கலப்பினத்தை தோற்றுவிப்பது அவரின் திட்டமாகும். தமிழ் இளைஞர்களை எல்லாம் தனிமைப்படுத்தி இராணுவம் கொன்று குவித்துவருகிறது.

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்க் குழந்தைகள் சிங்களம் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அரசு அலுவலகங்களில் இனி சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி வேகவேகமாக தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே கேள்விக்குறியாக மாறிவிடும்.


சிங்கள அரசின் சதி

திடீரென இந்த நிலை ஏற்பட்டு விடவில்லை. புலிகளுடனான இறுதிப் போருக்கான ஆயத்தங்களை சிங்கள அரசு முன் கூட்டியே செய்தது.

1. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் ஏராளமான ஆயுதங் களை வாங்கிக் குவித்தது.

2. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சிங்கள இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதி நவீன பயிற்சிகள் அளித்தன. நவீன ஆயுதங்களை எப்படிக் கையாள்வது என்பதை கற்றுக் கொடுத்தன. சிங்கள இராணுவ வீரர்களில் 63 சதவீதம் பேர் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களே யாவார்கள்.

3. இந்தியக் கடற்படையும் சிங்களக் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தது. பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் சிங்கள விமானிகளுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

4. இந்திய உளவு விமானங்கள் இந்துமாக்கடல் பகுதியில் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டுவந்த கப்பல்களைக் கண்டறிந்து அவற்றை மூழ்கடிப்பதற்கு உதவின.

5. செய்மதிகள் மூலம் புலிகளின் நடமாட்டத்தையும் இருப்பிடத்தையும் கண்டறிந்து சிங்கள இராணுவத்திற்குத் தெரிவித்தன.

6. ஈவு இரக்கம் இல்லாமல் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் கொலைவெறி இராணுவமாக சிங்கள இராணுவத்தை மாற்றினார்கள்.

7. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களில் வாழ்ந்த புலிகளின் ஆதரவாளர் களையும் குடும்பத்தினரையும் வெள்ளை வாகனங்களில் கடத்திப் படுகொலை செய்தார்கள்.

8. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். எஞ்சிய உறுப்பி னர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

9. சிங்கள அரசைக் கண்டித்த நடுநிலையான சிங்களவர்களையும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களையும் புலி ஆதரவாளர்கள் எனக்கூறி படுகொலைச் செய்தார்கள்.

10. கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கூலிப்படை தமிழர் களுக்கு எதிராக அட்டுழியங்களைச் செய்தது.

11. சர்வதேச ஊடகவியலாளரை நாட்டைவிட்டு வெளியேற்றினர்.

12. தொண்டு நிறுவனங்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், அய்.நா. அகதிகள் ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் திட்டமிட்டு வெளியேற்றப் பட்டனர்.

சாட்சி சொல்ல யாரும் இல்லாத நிலைமையை உருவாக்கிக்கொண்டு தமிழின அழிப்பு நடவடிக்கையை சிங்கள இராணுவம் தொடர்ந்தது.

ஐந்து ஆண்டுகாலத்திற்கு மேலாக சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசத் தூதராக செயல்பட்ட நார்வே பிரதிநிதிகளை அவமதிப்பான வகையில் சிங்கள அரசு வெளியேற்றியது. இதற்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது. இலங்கை இனப்பிரச்சினையில் இருந்து நீங்கள் வெளியேறிவிடுவது நல்லது என நார்வே பிரதிநிதியான எரிக் சொல்கைம்மிடம் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக அவரே கூறினார். அதாவது இலங்கைப் போரை இந்தியாதான் நடத்துகிறது. எனவே வேறு யாரும் அங்கிருக்கத் தேவையில்லை என்பதுதான் இந்திய அரசு சொன்ன செய்தியாகும்.


ஜே.வி.பி. நோக்கம்

சிங்கள தீவிரவாத இயக்கமான ஜேவிபி இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இயக்கம் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் எதிரான இயக்கமாகும். அந்த இயக்கத்தின் தலைவர் சோமவன்ச அமரசிங்க என்பவர் போர் முடிவுற்ற பிறகு நடத்திய சிறப்புச் செய்தியாளர் மாநாட்டில் பின்வருமாறு அறிவித்தார்.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவை விட அதிகமான உதவி செய்த நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே இலங்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளைவிட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு. நமது நாட்டின் தேசியப் பிரச்சினைகளில் சர்வதேச அழுத்தங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வுகாணப்போவதாக அதிபர் இராசபக்சே தெரிவித்திருக்கிறார். அப்படி யானால் 13-ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை முன்வைக்க முடியாது. 13-ஆவது திருத்த சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் தேவைகளுக்கான தீர்வுத்திட்டம் ஆகும். 1987-ஆம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் சிங்கள மக்களின் எதிர்ப்புகளால் தோல்விகண்டது.

இந்த உள்நாட்டுப் போரில் சிங்கள இராணுவம் வெற்றியடைவதற்கு கனரக ஆயுதங்கள் பாகிஸ்தான் வழங்கி உதவியது. அடுத்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெரும் உதவி அளித்தன. ஆனால் மேற் கண்ட 3 நாடுகளும் இலங்கையின் உள் விவகாரங்களில் அநாகரிகமான முறையில் தலையிடவில்லை. எவ்வித உள் நோக்கமும் இன்றி இலங்கைக்கு உதவி செய்தவர்களை புறக்கணித்துவிட்டு இலங்கையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்து கபடத்தனமாகவும் குள்ளநரி போலவும் காய்களை நகர்த்தும் இந்தியாவுக்கு இடமளிப்பது எந்த வகையிலும் நல்லதல்ல"

இதே சோமவன்ச அனுராதபுரத்தில் பேசியபோது யார் நமது எதிரிகள் என்ற கேள்வியை எழுப்பி அவரே அதற்குப் பதிலும் கூறினார். "முதலில் நார்வே, பிறகு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை நமது நிரந்தர எதிரிகள் ஆனால் இன்னொரு பகை மறைந்தி ருக்கிறது அதுதான் இந்தியா."

13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர் களுக்கு உரிமைகளை வழங்க இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய உயர் அதிகாரி களும் அடிக்கடி கூறி வருகிறார்கள். ஆனால் இராசபக்சேயை வழி நடத்தும் ஜேவிபி இயக்கம் இதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. அந்த இயக்கத்தைப் பகைத்துக் கொண்டு இராசபக்சே ஒரு போதும் செயல்பட மாட்டார். எனவே இந்தியாவின் இந்த நம்பிக்கை வீணான நம்பிக்கை என்பது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.


இந்திய நிலை - பின்னணி

இலங்கை இனப்பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு எடுத்துள்ள நிலைக்கு எவை காரணங்கள் என்பதை நாம் ஆராய வேண்டும். இந்திய அரசின் சார்பில் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுகிறார்கள்.

1. இலங்கையில் நடைபெறுவது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் போராகும்.

2. புலிகளைத் தோற்கடிப்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

3. இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

4. ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது தமிழ்நாட்டில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும்.

5. இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையை வைத்திருக்க வேண்டும்.

மேலே கண்ட காரணங்கள் எந்த வகையிலும் சரியானவை அல்ல. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்று சொன் னால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது ஏன்? தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரையே சிங்கள அரசு நடத்தி வருகிறது என்ற உண்மையை இந்திய அரசு மறைக்கிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு புலிகள் ஒருபோதும் எதிரான நிலை எடுத்ததில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எவற்றிடமும் விடுதலைப்புலிகள் எந்த உதவியையும் நாடியது மில்லை. பெற்றதுமில்லை. அவர்கள் நினைத்திருந்தால் சுலபமாக பெற்றி ருக்க முடியும். தமிழர் தாயகப் பகுதியில் அந்நிய வல்லரசுகளின் இராணுவத் தளங்கள் அமைவதற்கு எதிராகவும் புலிகள் போராடி வந்திருக் கிறார்கள். இன்னொரு வகையில் அத்தகைய தளங்கள் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புலிகள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். எனவே அவற்றை எதிர்த்துப் போராடினார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்காக போராடிய புலிகளுக்கு உதவ வேண்டிய இந்தியா அதற்கு நேர்மாறாக அவர்களுக்கு எதிரான சிங்களருக்கு உதவியிருப்பது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு சமமாகும்.

இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்காகவே சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூறுவது அப்பட்டமான ஏமாளித்தன மானது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றிவிட்டது.

ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்று கூறுவது எதிர்மறையான அணுகுமுறை யாகும். வங்க விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா உதவ முன்வந்தபோது, இந்தியாவிலும் ஒரு வங்கம் இருக்கிறது. இரண்டு வங்கங்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒன்றாக இருந்தவை. எனவே கிழக்கு வங்கம் சுதந்திரம் பெற உதவினால் இந்தியாவில் உள்ள மேற்கு வங்கமும் பிரிந்து போய்விடும் என்ற கருத்து அப்போது யாருக்கும் எழவில்லை. வங்காளி மீது வராத சந்தேகம். எதற்காக தமிழர்கள் மீது வருகிறது?

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு தமிழீழமும் தமிழகமும் வெவ்வேறு நாடுகளாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. இரண்டும் இணைந்து ஒரே நாடாக ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலைபெற உதவினால் தமிழ்நாடு அதற்கு நன்றி பாராட்டும். ஆனால் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்தியா துணை நிற்கிறது என்ற செய்தியே தமிழக மக்கள் மத்தியில் ஆறாத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள அரசுகள் பல கட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்திருக்கின்றன. இந்தியாவின் மீது சீனா படையெடுத்தபோதும், வங்காளதேசப் போராட்டம் நடைபெற்றபோதும். இந்தியா வுக்கு எதிராகவே இலங்கை செயல் பட்டது. இப்போதும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளான சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கையில் தளங்கள் அமைக்க உதவி யுள்ளது. இலங்கை ஒருபோதும் இந்தியா வுக்கு உண்மையான நட்பு நாடாக இருந்ததில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இப்படியொரு தவறான தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி போன்ற பெரும் தலைவர்கள் வகுத்து வழிநடத்திய வெளியுறவுக் கொள்கை என்பது இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரி களால் வழிநடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அரசின் வெளியுறவுத் துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக சிவசங்கரமேனன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன், ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தில் இந்தியப் பிரதிநிதியாக கோபிநாத் அச்சம் குளங்கரே, அய்.நா. பொதுச்செயலாளரின் அலுவலக தலைமை அதிகாரியாக விஜய்நம்பியார், இந்திய அமைச்சரவையின் செயலாளராக பி.கே.நாயர் ஆகிய மலையாளிகள் அமர்ந் திருக்கிறார்கள். இவர்கள்தான் இலங்கை பற்றிய இந்திய அரசின் தவறான கொள்கை வகுப்பாளர்கள். அதுமட்டுமல்ல. அய். நாவில் உயரதிகாரியாக இருக்கும் விஜய் நம்பியாரின் சொந்த சகோதரர். லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா என்பவர் இந்திய இராணுவத்தில் உயரதிகாரியாக பதவி வகித்தவர். பிறகு அய்.நா அமைதிப் படையில் பதவி வகித்தவர். 2002-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்த அத்தனை உண்மை களையும் விஜய நம்பியார் அறிவார். ஆனால் அய்.நா. பொதுச்செயலாளருக்கோ மற்ற நாடுகளுக்கோ தெரியாமல் அவற்றை அவர் மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

மேற்கண்ட அதிகாரிகள் அனை வரும் தமிழர்களுக்கு எதிராகவே செயல் பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு உலக பிரச்சினைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில் இந்த அதிகாரிகள் கூறும் ஆலோசனையின்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள். சில வேளைகளில் இந்த அதிகாரிகள் பிரதமர் கருத்துக்கு எதிராகவும் பகிரங்கமாகவே செயல்படுகிறார்கள்.


10-06-09 அன்று வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கரமேனன் "இலங்கை இனப்பிரச்சினையில் இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லமாட்டோம், அப்படி சொல்வது இந்தியாவின் வேலை அல்ல. இது தொடர்பாக அதிபர் இராசபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று இலங்கை அதிபர் இராசபக்சே சொன்னது ஒருவகையில் சரிதான். இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு டன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தல் ஏற்படும் போது இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு முன் தினம் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் "இலங்கையில் சிங்களவர் களுக்குச் சமமான உரிமைகளை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும்" என வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அதைக் கொஞ்சமும் மதிக்காத வகையில் ஒரு அதிகாரியான சிவசங்கரமேனன் நடந்துகொள்கிறார்.

இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரசியா, மேற்குநாடுகள், ஈரான், பாகிஸ்தான் ஆகியவை சிங்கள அரசுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வந்திருக்கின்றன. இந்நாடுகளுக்கிடையே பகைமை இருந்தாலும் சிங்கள அரசுக்கு உதவுவதில் ஒன்றாக உள்ளன. நார்வே நாட்டின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் அங்கு நிரந்தரமான அமைதி நிலவவேண்டு மானால் சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே படை வலு சம நிலையில் பேணப்பட்டிருக்க வேண்டும். போஸ்னியா போன்ற பிரச்சினைகளில் உலக நாடுகள் இந்த அணுகுமுறையைத் தான் கையாண்டன. ஆனால் இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் போர்நிறுத்த காலத்தில் சிங்கள இராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கண்ட நாடுகள் அனைத்தும் உதவின.

தமிழர் பகுதிகள் மீது சிங்கள அரசு பொருளாதாரத் தடை விதித்தபோது உலக நாடுகள் அதைக் கண்டிக்கவில்லை. இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாநிலங்களை சிங்கள அரசு மீண்டும் பிரித்தபோது இந்திய அரசும் ஏன் என்று கேட்கவில்லை. உலக நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன.

விடுதலைப்புலிகளின் வினியோகக் கப்பல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல் கள், புலிகளின் நகர்வு தொடர்பான செய் மதித் தகவல்கள் கடற்புலிகளின் நடவடிக் கைகள் தொடர்பான தகவல்கள் சிங்கள அரசுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டுக் கரையோரங்களில் வான்பாதுகாப்பு ராடர்களை நிறுவியதன் மூலம் வான்புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சி களிலும் இந்தியா ஈடுபட்டிருந்தது.

சமரச முயற்சியிலிருந்து நார்வே அகற்றப்பட்டபோது இந்தியா மகிழ்ந்தது. இலங்கையின் ஆட்சியாளர்கள் இனி இந்தியாவை நம்பியிருப்பதைத் தவிர வேறுவழியில்லை என கருதியது. ஆனால் இந்தியாவுக்கு பிராந்திய எதிரிகளாக உள்ள சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நோக்கியே இலங்கை நகர்ந்ததே தவிர இந்தியாவை நாடி வரவில்லை.


இந்தியாவின் துரோகம்

குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்த கதையாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள இராணுவத்திற்கு எல்லாவகையிலும் உதவி செய்த இந்தியா அந்நாட்டின் போர்க் குற்றங்களை மறைக்கவும் உதவியுள்ளது.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் சீர்குலைவு பற்றி ஆராய 2009 அன்று மே இறுதியில் 20 நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து நாடு ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தது. சுவிட்சர்லாந்து விண்ணப்பத்தை மறுத்து இலங்கைத் தூதர் ஒரு தீர்மானத்தை அனுப்பினார். இலங்கயின் தீர்மானத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டு நடவடிக்கை களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடது என வற்புறுத்தப்பட்டது. ஆனால் சுவிட்சர் லாந்து நாட்டின் தீர்மானத்திற்கு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு இல்லை என்பதால் இலங்கை அரசின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. 27-5-09 அன்று நடைபெற்ற அய்.நா மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இலங்கை தீர்மானத்திற்கு 29 நாடுகளின் ஆதரவும் 12 நாடுகளின் எதிர்ப்பும் இருந்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

சுவிட்சர்லாந்து நாட்டின் தீர் மானத்தை முதலில் மனித உரிமை அமைப்பு எடுத்துக்கொண்டபோது. இந்தியா அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. இலங்கை தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் இணைந்து திரட்டிய ஆதரவின் பேரில் 29 நாடுகள் வாக்களித்தன.


இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவரமும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ர வதை செய்யப்படுவதும். அண்டை நாடான இந்தியாவிற்கு தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயல் பட்டிருப்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் இதே மனித உரிமை அமைப்புக்கு 4 நாடுகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இலங்கையும் போட்டி யிட்டது. உலகிலேயே மனித உரிமைகளை மிகவும் சீரழிக்கும் நாடான இலங்கைக்கு உலக நாடுகள் எதுவும் ஆதரவு தரக் கூடாது என உலக அளவில் இயங்கிய முக்கியமான மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தேர்தலில் இந்தியா இலங்கையையே ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இலங்கை படுதோல்வியடைந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அய்.நா. மனிதஉரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை 6-6-09 அன்று வலியுறுத்தி இருந்தார். அவரின் இந்த கருத்துக்கு அய்.நா மனித உரிமைக் குழுவின் இந்தியப் பிரதிநிதி கோபிநாத் அச்சம் குளங்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஈழத்தமிழர் பிரச்சினை தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத இன்னொரு நாட்டு பிரச்சினைபோல இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைக்கப்பட்டி ருப்பதுதான் இதற்குக் காரணமாகும். அதிலும் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி எல்லா வகையிலும் இராசபக்சேயின் அரசை வருடிக் கொடுப்பதையும், குளிர்விப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நடுவில் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பேசும்போது இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போரை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆனால் இதை அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரணாப் முகர்ஜி மக்களவையில் அளித்த அறிக்கையில் "இலங்கை இனப் பிரச்சினை அண்டை நாட்டின் பிரச்சினை, இதில் தலையிடவோ அல்லது போரை நிறுத்துங்கள் என கட்டளையிடவோ இந்தியாவுக்கு அதிகாரமில்லை" எனக் குறிப்பிட்டார். இதனால் இராசபக்சே அரசு மேலும் துணிவுபெற்றது. ஆகவேதான் அவர் ஒருமுறை அல்ல பலமுறை கீழ்க்கண்ட இரண்டு கருத்துக்களை திரும்பத் திரும்பக் கூறினார்.

1. போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒருபோதும் இலங்கையிடம் கூறவில்லை.

2. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தவேண்டிய போரை, இலங்கை நடத்துகிறது.

இராசபக்சே யாரோ எவரோ அல்ல. ஒரு நாட்டின் அதிபர். அவர் மேற்கண்டவாறு பலமுறை கூறியதை இந்திய அரசு ஒருபோதும் மறுக்கவில்லை. ஏன்? அப்படியானால் அதன் பொருள் என்ன?

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்று வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்தி இருப்பதாக பலமுறை கூறினார்.

9-4-09 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா சமாதியில் சாகும் வரை உண்ணா நோன்பை மேற்கொண்டார். 5 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக இந்திய அரசிடமிருந்து செய்தி வந்திருப்பதாகக் கூறி உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அன்றைய தினமே சிங்கள இராணுவமானது அப்பாவி தமிழர்கள் மீது விமானகுண்டு வீசி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக் கானவர்களை கொன்று குவித்தது என்பதுதான் உண்மை. ஆக திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இது போன்ற நாடகங் களை இந்திய அரசும் தமிழக முதல்வரும் நடத்தினார்களே தவிர, அங்கு உண்மை யில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எதையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை இராச பக்சேயின் கூற்றும் அம்பலப்படுத்தியது.


தமிழகத்தின் கடமை

தமிழீழப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் தமிழ்நாட்டு மக்களிடம்தான் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக நடைபெற்றுவந்த போராட்டங்களும் அவற்றின் விளைவாக உருவான எழுச்சியும்தான் உலகத்தமிழர்களின் எழுச்சிமிக்க போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே தான் தமிழகத்தின் எழுச்சியை திசை திருப்புவதற்காகவும் மழுங்கடிப்பதற் காகவும் இந்திய அரசின் கொள்கை வகுப் பாளர்களும், இந்திய உளவுத் துறையான "ரா" அமைப்பும் மிகக்கடுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து ஆயுதங் களையும் வெடிப் பொருட்களையும் புலிகள் கைப்பற்றியதாகவும் தமிழக மீனவர்களைப் புலிகள் கடத்தியதாகவும் "ரா" உளவுத்துறை திட்டமிட்டு பொய்யான செய்திகளைப் பரப்பியது. இதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முழுமை யான ஒத்துழைப்புக் கொடுத்தார். ஆனாலும் தமிழகத்தின் எழுச்சி கொஞ்சமும் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்தோங்கியது. இதன் உச்சக்கட்டமாக தி.மு.க., அ.தி.மு.க. அணி களிலிருந்த பல கட்சிகளும் இந்த இரு அணிகளைச் சாராத கட்சிகளும் ஒன்றி ணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி அதன் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், கருப்புக் கொடி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தின. இதன் விளைவாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன் விளைவாக தமிழக ஆளும் கட்சிக்கு ஈழப்பிரச்சினையில் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

14-10-08 அன்று முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றிணைக் கூட்டினார். அந்தக் கூட்ட த்தில் இருவாரக் காலத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உரிய நடவடிக்கை களை இந்திய அரசு மேற்கொள்ளா விட்டால் தமிழகம் - புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானம் ஒரே மனதாக நிறைவேற்றப் பட்டது. இந்தத் தீர்மானம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திற்று. அதே வேளையில் உலகெங்கும் இருந்த தமிழர்கள் உற்சாகமும் புதிய நம்பிக்கை யையும் பெற்றார்கள்.

இதன் விளைவாக பிரதமர் மன் மோகன்சிங் உடனடியாக இலங்கை அதிபர் இராசபக்சேவுடன் தொலைப்பேசியின் மூலம் பேசி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாயின. இதன் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தனக்கு மனநிறைவை அளித்திருப்பதாகவும் இந்திய அரசு சரியான வகையில் செயல்படுவதாகவும் அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முடிவு செய்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தன்னிச்சையாகக் கைவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அக்கூட்டத்தில் பிரணாப்முகர்ஜி தெரிவித்த கருத்துக்களை கூறி அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று அதற்குப் பின்னர் இவர் அறிவித்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். அனைத்துத் தலைவர்களின் நிர்ப்பந்தத் திற்கு பணிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கள் பதவி விலகவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் மத்திய ஆட்சிக்குப் பணிந்து அக் கருத்தை கைவிட்டுவிட்டார்.


உளவியல் சமர்

உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 9 கோடி தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதில் மிக மிக அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறார்கள். இந்த ஆறரைக்கோடி தமிழர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காக அணி திரளும்போது அதற்கான வலிமை என்பது மிக மிக அதிகமானதாகும். அனைத்து லகத்திலும் அதனால் ஏற்படும் தாக்கம் மிக அதிகமானதாகும். ஒட்டுமொத்த தமிழகமும் அணி திரண்டு ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக் கரத்தை நீட்டும்போது இந்திய அரசு மட்டுமல்ல உலகநாடுகளும் சிந்திக்க முற்படும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மாபெரும் எழுச்சி இந்திய அரசின் இரட்டை வேடத்தை உலகத் தமிழர் களுக்கு இனங்காட்டியது. ஈழத்தமிழரை அழித்தொழிக்க சிங்கள பேரின வாதத்திற்குத் துணைபோகும் இந்திய அரசுக்கு எதிராக உலகத் தமிழர்கள் நடுவில் கொதிப்புணர்வு உருவாகியுள்ளது. இதை சிதைக்க வேண்டும் என்று இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இலங்கையில் புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் மீண்டும் அந்தப் போராட்டம் சிலிர்த்தெழுந்துவிடக்கூடாது என இந்திய அரசு நினைக்கிறது. மீண்டும் விடுதலைப் புலிகளின் எழுச்சி உருவாகி விடக்கூடாது என கருதும் இந்தியா அதற்கான சூழ்நிலைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து வரக்கூடும் என கருதுகிறது.

எனவேதான் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது உளவியல் ரீதியான சமர் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டு ள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைப் பற்றி பல செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அதனடிப் படையில் எழும் விவாதங்கள் விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டும் என இந்தியா விரும்பு கிறது.

இந்திய அரசின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்கவேண்டிய கடமை தமிழகத் தமிழர்களுக்கு உண்டு. அவர்கள் அதை சரிவரச் செய்வார்களானால் புலம் பெயர்ந்த தமிழர்களும் புத்துணர்வோடும் புதிய நம்பிக்கையோடும் செயல்படுவார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.


புலிகளின் போர் நமது போர்

நான்காம் ஈழப்போரில் சிங்கள இராணுவம் வெற்றிப் பெற்று விட்டதாகத் தம்பட்டம் அடிக்கலாம். ஆனால் உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.


உலகின் முக்கிய நாடுகள் பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பயங்கரவாதப் பட்டத்தைச் சுமத்தி அதற்குத் தடை விதித்திருக்கும் சூழலில் அந்த நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் எங்கள் சுதந்தி ரத்தை வென்றெடுக்கப் போராடும் போராளிகள் என உரத்தக் குரலில் முழக்கமிட்டனர். புலிகளுக்கு எதிரான போர் தமிழர்களுக்கு எதிரான போர் என்றும் அவர்கள் உலகிற்குப் பறையறைந்து தெரிவித்தனர்.

புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் நாடுகளில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் புலிக் கொடிகளைத் தாங்கி பிரபாகரனின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை பிடித்த வண்ணம் உணர்ச்சி மயமான ஊர்வலங்களை நடத்திய போது அந்த நாடுகளின் காவல்துறையும் சட்டங்களும் திகைத்துத் திணறி நின்றன.


நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காத உலகம் இன்று புலிக் கொடிகளோடு தமிழர்கள் தெருக்களில் இறங்கிய பிறகுதான் தமிழர் பிரச்னைகளில் கவனத்தைத் திருப்புகிறது.


உலக நாடுகளில் மட்டுமல்ல. ஆறரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலும் மக்கள் மாபெரும் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவதே குற்றம் என அடக்கு முறைச் சட்டங்கள் சீறிப் பாயும் காலக்கட்டத்தில் தமிழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை தூக்கிப் பிடித்த வண்ணம் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமிழக வீதிகளில் திரண்ட போது ஆளும் வர்க்கம் அதிர்ந்தது. இந்தப் போராட்டங் களைத் தடுக்க அது துணியவில்லை. மக்களும் அடக்குமுறைகளுக்கோ கொடிய ஆள் தூக்கிச் சட்டங் களுக்கோ அஞ்சி ஒடுங்கும் நிலையிலும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களின் இந்த மகத்தான எழுச்சிதான் உலகத் தமிழர்களின் பேரெழுச்சிக்கு வழிகாட்டியது.

பெரும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கின்றன. சாவின் விளிம்பில் நிறுத்தப் பட்டிருக்கும் ஈழத் தமிழினம் நம்மைத்தான் பெருநம்பிக்கையோடு எதிர்நோக்கி நிற்கிறது.

2000 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் நெருக்கடி யான காலக்கட்டம் இது. இதிலிருந்து ஈழத் தமிழினம் மட்டுமல்ல நாமும் மீண்டாக வேண்டும். நம்மை எதிர்நோக்கி நிற்கும் அறைகூவல்களை துணிவோடு சந்தித்தாக வேண்டிய கட்டம் இது. இந்த காலக் கட்டத்தில் எவ்வித கலக்க மில்லாமலும் சோர்வில்லாமலும் நமது கடமையை நாம் செய்தாக வேண்டும்.

இந்திய, சீனா, பாகிஸ்தான் போன்ற அணு ஆயுத வல்லரசுகளின் துணை யோடு போராடும் சிங்கள வல்லரக்கர்களை எதிர்த்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் புலிகளும் ஈழத் தமிழர்களும் களத்தில் போராடி வருகின்றனர். எவ்வளவோ இழப்புகளுக்கு நடுவே உறுதியாக அவர்கள் நிற்கின்றனர். அவர்களுக்குத் தோள் கொடுத்து துணை நிற்க நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. இதைத் தவிர நமக்கு வேறு முக்கிய கடமையும் இல்லை.


நம்மை குழப்பவும் சோர் வடையச் செய்யவும் பிரபாகரன் குறித்த பொய்யானச் செய்திகளை இந்திய ரா உளவுத் துறையும் ஊடகங்களும் பரப்புகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் தமிழ்ப் பொதிகை மலை போல அந்தத் தலைவன் களத்தில் காலூன்றி நிற்கிறான். முழுமதியை சில நேரங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. முகிலை கிழித்து முழு மதி முன்னிலும் ஒளிவிட்டு மின்னும். தலைவர் பிரபாகரனும் முன்னிலும் அதிகமான துடிப்புடன் நம்மை வழிநடத்துவார்.

தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை என மறைந்த முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் ஒரு முறை மன நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்லின் மேல் எழுத்துப் போன்ற அந்த சொற்களை மனதில் பதிய வையுங்கள். வாராது போல் வந்த மாமணியாக அந்த தலைவன் வாழும் காலத்திலேயே தமிழீழம் மலரும். அதன் மூலம் உலகத் தமிழர்களுக்கும் விடிவுப் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். கடமையாற்றுவோம்.

தமிழக வரலாற்றில் ஈழத் தமிழர் களுக்கு ஆதரவாகத் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்ட தியாக சீலர்கள் நம் காலத்தில் வாழ்ந்தார்கள். நம் கண் முன்னாலேயே மறைந்தார்கள். முத்துக் குமார் தொடக்கி வைத்த இந்த தியாக காவியத்தில் தமிழகத்தில் 13 தோழர்களும் வெளிநாடுகளிலும் 3 தோழர்களும் என்றும் அழியாத இடம் பெற்றுள்ளனர். அவர்கள் எதற்காக தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள்? வாழ வேண்டிய வயதில் தங்கள் குடும்பங்களை குறித்தோ, வேறு எதைப் பற்றியுமோ சிந்திக்காமல் ஈழத் தமிழ்ச் சகோதரர்களுக்காக தியாகத் தீப்பிழம்புகளாக மாறி எரிந்து சாம்பலான இவர்களின் உன்னதமான தியாகம் ஒரு போதும் வீணாகக் கூடாது. அந்த தியாக தீபங்களின் சுடரொளியில் தமிழகத்தில் பரவியிருக்கும் இருளை அகற்றுவோம். அந்த வழிகாட்டும் ஒளியில் இலட்சியப் பாதையில் முன்னேறுவோம்.
 
 
 

StumbleUpon.com Read more...

நடனத்தின் எல்லை மைக்கேல் ஜாக்சன் -ஒரு சகாப்தம்!




                            தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958ல் அமெரிக்காவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன்,  1970 ல் அந்தசக்  குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின்  மிகச்  சிறந்த பாடகராகவும்  பார்க்கப்பட்டார். அப்போது  அவருக்கு வயது 12.

1972 ம் ஆண்டு 'பென்'  எனும்  பெயரில்     தனது     தனி  ஆல்பத்த வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார். பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979 ல் ஆஃப் தி வால் மற்றும் 1982 ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது. த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.  த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.
இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.



1992 ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார்.
ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.


1994 ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது.
லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996 ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999 ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். ஜாக்ஸன் மகன்களின் பெயர் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2. 2005 ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.  மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13 ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.


மைக்கேல் ஜாக்சன் அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். லண்டன் நகரில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த இருந்த மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சிக்கு நடுவே மைக்கேல் ஜாக்சன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருடைய சுவாசம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உயிரை காப்பதற்காக போராடினர். பின்னர் யு.சி.எல்.ஏ. மருத்துவ மையத்திற்கு மைக்கேல் ஜாக்சன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உயிரை மீட்க மருத்துவர்கள் போராடினர். பின்னர் மைக்கேல் ஜாக்சன் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க நேரப்படி மாலை 2.26 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. (இந்திய நேரப்படி 26.06.09 அதிகாலை 2.56 மணி)


மைக்கேல் ஜாக்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் மரணத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மைக்கேல் ஜாக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த இடத்தில் திரண்டனர். பதட்டத்தோடு காத்திருந்த அவர்கள், ஜாக்சன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதும் கேவி அழுதனர். ஜாக்சன் மரணமடைந்த செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் கூடினர். ரசிகர்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டபடி இருந்தனர். மைக்கேல் ஜாக்சன் மரணத்தை அடுத்து எம்டிவி தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல்களை ஒளிபரப்பியது. வானொலி நிலையங்களும் மைக்கேல் ஜாக்சனின் சாகாவரம் பெற்ற பாடல்களை ஒளிபரப்பி வருகிறது.
மைக்கேல் ஜாக்சனின் மரணம் இசையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய முதல் ஆல்பத்தை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்த குவின்சி ஜோன்ஸ், இத்தனை இளம் வயதில் மைக்கேல் ஜாக்சன் உலகை விட்டு பிரிந்தது வேதனையை தருவதாகவும், அதனை விளக்க வார்த்தைகளே இல்லையென்றும் கூறியுள்ளார்.


மைக்கேல் ஜாக்சன் இசையுலகில் செலுத்திய தாக்கமும், பாதிப்பும் என்றென்றும் உணரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மேலும் ஜாக்சனுக்கு ஜெர்மினி, டிட்டோ, ராண்டி ஆகிய மூன்று சகோதரர்களும், ஜேனே மற்றும் லாடோயோ ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 



பாப் இசையுலகம் கொண்டாடிய மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணத்தை அடுத்து  அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே   சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

StumbleUpon.com Read more...

ஈழம் அவசியமா? – அவசரமா?!

>> Sunday, June 28, 2009

 ஈழம் அவசியம் – அவசரம்!

  •  

eelamavasijamகடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

'30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. 'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள்.

 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்….

1. 'கூடாரங்களைப் பிரியுங்கள்!'

ஈழத் தமிழரின் இன்றைய பெயர், 'கூடார மக்கள்'. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், 'இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்' என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள்.

கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. 'கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். 'பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு' என்று சொல்லிவிட்டார்கள். 'இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்' என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!

2. காணவில்லை… காணவில்லை!

ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன.

இதில் பெண்களும் சிறுவர் களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார் கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை

நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்த வர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேத மானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?

முதல்கட்டமாக… பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு

"படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!" – இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்

போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளைகொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள்.

ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக் கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை

'இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை', 'பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்' என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணு வத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட் டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்க ளுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்

ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டு களாக இருக்கும் யாழ்ப்பாணம், 'எமர்ஜென்ஸி' பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப் பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு

எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக் கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்

புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்

இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப் பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேர டியாகப் பார்க்க யாரையும் அனும திக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக் கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்கவைத் தால் மட்டுமே அங்கு உள்ளவர் களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.

"20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்" என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று.

நன்றி: விகடன்

StumbleUpon.com Read more...

இலங்கை ஆபத்தான நாடு-அமெரிக்கா

இலங்கைக்கான விஜயங்கள் ஆபத்தானதென அமெரிக்கா அந்நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது :

 
இலங்கைக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானதாக அமையக் கூடும் என அந்நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
இலங்கையின் சில பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானதென அமெரிக்க சுட்டிக்காட்டியுள்ளது.
 
அனாவசியமான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பயணங்களை கூடிய வரையில் தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கத்தினால் கடந்த 26ம் திகதி விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்க பிரஜைகள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு ஊழியர்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதாக இலங்கை அரசாசங்கம் விடுத்துள்ள அறிவிப்புக்களில் அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ள நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

StumbleUpon.com Read more...

எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் வீரச்சாவடைந்தனர்:செ.பத்மநாதன்

>> Saturday, June 27, 2009

உலகத் தமிழர் ஆதரவுடன் அரசியல் வழிகளில் இனி நாம் போராட்டத்தை முன்னெடுப்போம்: செ.பத்மநாதன்
[
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காக எமது இயக்கம் ஒரு புதிய பாதையில் இனிப் போராடும். அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் எமது அமைப்பில் நாம் மாற்றங்கள் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் - புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

நேற்று முன்நாள் வியாழக்கிழமை 'இந்தியா ருடே' குழுமத்தின் 'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?

எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.
 
இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?

ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது. அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?

எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின் கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.

'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு இன்று எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் கடைசிப் போரின் இறுதிக் கணங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடன் தொடர்பில் இருந்தனர் என்று சொல்லியிருந்தார். ஏனைய உலகத் தலைவர்களுடனும் நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்களா?

ஆம். நான் சில உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் இராஜதந்திரக் காரணங்களுக்காக அத்தகைய தொடர்புகள் பற்றிய தகவல்களை இந்தத் தருணத்தில் எம்மால் வெளியிட முடியாதுள்ளது.

இந்த முயற்சிகள் ஏன் பயன் தராமல் போயின?

போரை நிறுத்த அர்த்தமான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளது. ஆயுதங்களை கீழே வைக்கும் முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது தலைமை இருந்தது.

ஆயுதங்களை கீழே வைப்பதற்குப் பதிலாக நாம் ஒரு போர் நிறுத்தத்தையும் அரசியல் தீர்வையும் தேடினோம். தூரதிர்ஷ்டவசமாக எமது கோரிக்கை சிறிலங்கா அரசுக்கு ஏற்க முடியாத காரணத்தால் அனைத்துலக சமூகத்துக்கு அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கவில்லை. எனவே போரை நிறுத்த கனதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கடுமையான மிருகத்தனமான தாக்குதல்களின் காரணமாகவும் மருத்துவ வசதிகளும் இல்லாத காரணத்தால் பொதுமக்களினதும் எஞ்சிய வீரர்களின் உயிரைக் காக்கவும் எமது தலைமை துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியது.

எமது தலைமை துப்பாக்கிகளை நிறுத்தாது விட்டால் அதனை ஒரு சாட்டாக வைத்து சிறிலங்கா அரசு எமது மக்களின் அழிப்பை நியாயப்படுத்திவிடும் எனக் கவலை கொண்டிருந்தது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தும் செய்தி எனக்கு 15 ஆம் நாள் மாலை தெரியப்படுத்தப்பட்டது. அது ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த 48 மணி நேரமும் நாம் அனைத்துலக சமூகத்துடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு உடனடிப் போர் நிறுத்தத்தை நடைமுறையாக்க முயற்சித்து அதில் எமக்குச் சாதகமான சில பதில்களும் கிடைத்திருந்தன.

மீதமான நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களாக இருந்த போதும் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினர்கள் சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறிலங்கா அரசின் பதில் மறுப்பாகவே இருந்தது. சிறிலங்கா அரசும் அதன் படையினரும் இறுதித் தாக்குதலிலும் தமது மிருகத்தனமான அழிப்பிலும் பிடிவாதமாக இருந்தனர்.

இந்தியாவில் உள்ள வைகோ, நெடுமாறன் உட்பட பல தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிவித்தலை விடுத்தமைக்காக உங்களைக் கண்டித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சிலரும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தி மிகவும் கெட்டதும் பெரும் துன்பம் நிறைந்ததும் ஆகும். நிச்சயமாக இச்செய்தியை ஏற்கவும் உண்மை என எடுக்கவும் எனக்குப் பல மணி நேரங்கள் பிடித்தது. சில உறுப்பினரும் பெரும் பகுதியான தமிழ் மக்களும் நான் வெளிக்கொணர்ந்த செய்தியை நம்ப முடியாதுள்ளனர். நான் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்கிறேன் அவர்களுக்காக மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளேன். அவர்களின் நடவடிக்கைகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளின் காரணமாக உள்ளன. ஓரு பொறுப்பு வாய்ந்த விடுதலை இயக்கமாக நாம் எமது மக்களிடம் இருந்து உண்மைகளை மறைத்து விட முடியாது. அரசியல் ரீதியாகவும் எம் மக்களிடம் இருந்து உண்மைகளை மறைப்பது தவறானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்முறை வழியை கைவிட்டமை அமைப்புக்குள் பரவலான ஆதரவைக் கொண்டுள்ளதா? இது நிரந்தரமானதா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் பின்னால் ஆயுதத்தை எடுக்கும் உரிமையைத் தன்வசம் கொண்டுள்ளதா?

எமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தும் முடிவு எமது தலைவரால் அவரது மறைவுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகும். நாம் இப்போது ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறுகிறோம். இந்நிலையானது அமைப்புக்குள்ளே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு ஆகும்.

எந்த ஒரு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளான, தமிழ்த் தேசியத்தின் அங்கீகாரம், வடக்கு - கிழக்கு தமிழரின் வரலாற்றுத் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிப்பதாக அமைதல் வேண்டும்.

தமிழ் மக்களின் இந்த அரசியல் வேட்கைகளை அடையும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும். நாங்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம். நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தோற்றுவதற்கு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, அரசியல் முறையான எதிர்ப்புகளையும் ஜனநாயகப் போராட்ட உரிமைகள் என்பனவற்றை அடக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தமையும், மூலகாரணமாக இருப்பதை இலகுவாக அவதானிக்க முடியும்.

இந்நிலை எமக்கும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட அநீதிகளின் வரலாற்றுப் பிரதிபலனாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது அரசியல் வழியைத் தெரிவு செய்துள்ளனர். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் பற்றிய கேள்வி வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமையாக விட்டுவிட விரும்புகிறேன்.

அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் இப்போதும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழ் ஈழம் பெறுவதற்கான ஓரே வழி என நம்பும் மக்களைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்ட வழியில் எமது தலைவர் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருந்தார். அக்காலத்தில் நிலவிய நிலைமைகளுக்குள் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்று விட்டார். இலட்சியத்துக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தவர். சுயநலங்களை அச்சாகக் கொண்டு சுழலும் இந்த உலக இயக்கத்துக்கு எமது ஆயுதப் போராட்டம் அனுதாபத்தைப் பெற முடியாது போய்விட்டது.

மாறாக சிறிலங்கா அரசு இன்றைய உலக நிலைப்பாட்டினையும் பூகோள அரசியல் கட்டமைப்புகளையும் தனது பக்கம் அணிதிரட்டி விட்டதை நாம் பார்த்துள்ளோம். நாம் எமது கொள்கைகளிலும் கோரிக்கைகளிலும் உறுதியாக நின்று அடுத்தகட்டப் போராட்டத்தை அரசியல் வழியில் தொடருவதே எம்முன் இருக்கும் சிறந்த தெரிவாக உள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்குத்துக்குள் பிளவு என்றும் அதற்குள் ஒரு பலப்போர் நடக்கிறது என்றும் கூறப்படும் செய்தி அறிக்கைகள் பற்றி உங்கள் பதில் என்ன?

நான் அதனை மறுக்கிறேன். தலைவரின் மரணச் செய்தி அறிவித்தலால் எமக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். இந்த விடயத்தில் நாம் ஒரு ஒற்றுமையைக் காண்பதில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துவிட உழைத்து வருகிறோம்.

இனிவரும் காலத்தில் அமைப்பில் உங்களது பங்கு என்னவாக இருக்கும்?

தமிழீழ அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தலைவராக நான் எமது அரசியல் இலட்சியங்களை வென்றெடுக்கத் தேவையான அனைத்துலக உறவுகள் எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்துவேன். நாம் அமைப்பில் மறுசீரமைப்புப் பணிகள் பற்றித் திட்டம் இட்டு வருகிறோம். இது முடிவுற்றதும் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் அறிவிப்போம்.

எதிர்வரும் காலத்தில் புதிய வன்முறைகள் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தகைய பங்கை வகிக்கும்?

தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காகப் போராடும். நாம் ஒரு புதிய பாதையைத் தெரிவுசெய்து விட்டபடியால், நாம் எமது அமைப்பை அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் மாற்றம் செய்து வருகிறோம். அதன் எமது ஒரு செயற்பாடாக புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டிலும் உலகின் வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் உறவுகளினதும் ஆதரவுடன் எமது அமைப்பின் மீது உள்ள அனைத்துலக தடையை நீக்குவதற்காக உழைக்க வேண்டி உள்ளது.

அனைத்துலக சமூகம் முக்கியமாக இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது புதிய வழியை வரவேற்று அதற்கு வெகுமதியாக எமது அமைப்பின் மீது உள்ள தடையை நீக்கி எமது அரசியல் செயற்பாட்டுக்கான வாசற் கதவுகளைத் திறந்து விடுவர் என நாம் நம்புகிறோம்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றி எமக்குக் கூற முடியுமா? ஏனைய வெளியக அரசுகள் பெருமளவு பயனளிக்காத நிலையில் இது எப்படி அவற்றில் இருந்தும் வேறுபடுகிறது?

எமது சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அரசுக்கும் வெளியக அரசுக்கும் இடையில் சில கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் உருத்திரகுமாரன் இக்கேள்விக்கான  மேலதிக பதிலை வழங்கக்கூடிய சரியான நபர் என நான் கருதுகிறேன்.

தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நேரடியாகப் பங்குபற்றுவது பற்றிச் சிந்திக்குமா? நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பை தேடியிருக்கிறீர்கள். இந்த உறவு எப்படிச் செயற்படும்?

தேர்தலில் கலந்துகொள்வதில் எந்த நியாயமோ தேவையோ இருப்பது எமக்குத் தெரியவில்லை. அரசியல் வழியில் போரிடுவது என்பது கட்டாயமாகத் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தல்களில் கலந்துகொள்ளாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நாம் தேடவில்லை. ஆனால் நாம் புலத்திலும் தாயகத்திலும் அரசியல் நடவடிக்களின் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி உணருகிறோம். எப்படி ஒரு பொதுவான புரிந்துணர்வு உருவாகிச் செயற்படும் என்பது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து இருக்கலாம். ஆனால், அரசியலில் அல்ல. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான காரணிகள் கவனத்தில் எடுக்கப்படாமலே உள்ளன. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இலங்கை மக்களாட்சி பலமான சிங்கள பேரினவாத சர்வாதிகார ஆட்சியாக மாறிவிட்டுள்ளது.

தமிழ் - சிங்கள மக்களை அடக்கும் சாதனங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் அரசு நீதி பரிபாலனம் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கூற்றானது. அந்தத் தீவில் உள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காது உள்ளதோடு அங்கே எதிர்வரும் காலத்தில் இன இணக்கப்பாட்டுக்கு எதிர்வரும் காலத்தில் பாரிய பின் விளைவுகளுக்கு வழிசெய்து விடும்.

சிங்கள மேலாதிக்க செயற்பாட்டில் நாட்டை ஆண்டு வரும் நிலையில் அந்தத் தீவில் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை. ஆனால், தேசப்பற்றாளரும் தேசத் துரோகிகளும் மட்டுமே உள்ளனர் என்பது அபத்தமாக இருக்கிறது. இலங்கை தனது தேசியக் கட்டுமானத்தில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்து உள்ளதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தம்மை இலங்கையர் என அடையாளப்படுத்த விரும்பாது ஈழத் தமிழர்களாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். சிறிலங்கா அரசை அந்நிய அரசாகவே தமிழர்கள் கருதுகின்றனர். 

இத்தகைய பின்னணியில் தமிழர்களின் அரசியல் வேட்கைகளான தமிழ்த் தேசியம், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்து ஒரு உண்மையான இணக்கப்பாடு காண்பதே எஞ்சியிருக்கும் தனி ஒரு தெரிவாக உள்ளது.

இப்போது மகிந்த ராஜபக்ச மிகப்பலமான மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை ஏற்க முன்வரின் சிங்கள மக்களின் எதிர்ப்பு குறைவாக எதிர்நோக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் தம்மை எல்லா இன மக்களையும் சமமாக கருதும் ஒரு உண்மையான தலைவராகக் கருதினால் அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை அங்கீகரித்து தம்மை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

ஈழப் போர் - 4 என இன்று அழைக்கப்படும் போரில் இந்தியாவின் வகிபாகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியாவால் அதிக அளவு செய்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?

அண்மைப் போரில் இந்தியா உறுதியாக இலங்கையின் பக்கம் நின்று முழுமையான ஆதரவை வழங்கியது. இது இரகசியமானது அல்ல. சிறிலங்கா தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பகிரங்கமாக ஏற்றிருந்தனர். எனினும் நாம் இந்தியாவை வெறுக்கவில்லை.

இந்தியாவின் ஏனைய நாடுகளுடனான குறிப்பாக சீனாவுடனான பூகோள அரசியல் போரில் அதற்குத் தமிழ் மக்களின் உண்மையான நம்பகரமான நட்பு இருக்கும் என நாம் கருதுகிறோம். இதனை எதிர்வரும் காலத்தில் இந்தியா உணர்ந்து தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியும் ஏனைய அரசியல் தலைவர்களும் நவம்பர் 2008 ஆம் ஆண்டில் விடுத்த வேண்டுதலை ஏற்று இந்தியா போரை நிறுத்தத் தீர்மானித்திருந்தால் பொதுமக்களைப் பாரியளவில் காப்பாற்றியிருக்க முடியும்.

நீங்கள் இந்தியாவுடன் நேரடித் தொடர்பை மேற்கொள்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு ஏதும் வகிபாகம் இருக்கிறதா?

ஆம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவுடன் நேரடித் தொடர்பு மேற்கொள்ள இருக்கிறேன். தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை ஆதரிக்கவும் கோருவேன். நாடு கடந்த அரசு அமைப்பு கருத்தியல் நிலையில் உள்ளதால் ஏனைய அரசுகளின் ஆதரவைக் கேட்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்காது. தேசம் கடந்த அளவில் இது ஒரு புலம்பெயர் தமிழ் மக்கள் மயமான செயற்பாடாகும்.

நிச்சயமாக நட்பு அரசுகளின் ஆதரவு நாடு கடந்த அரசுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. தற்காலிக நாடு கடந்த அரசமைப்புக் குழு எல்லா நாடுகளுடனும் முக்கியமாக இந்தியாவுடனும் நாடு கடந்த அரசுக்கான ஆதரவைத் தேடும்.

இலங்கையில் இன்னமும் சில விடுதலைப் புலிகப் போராளிகள் செயற்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் காடுகளில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேணல் ராம் பிரபல தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இக்குழுவைப் பற்றிய தகவல் ஏதும் உங்களிடம் இருக்கிறதா? இக்குழுக்களிடம் இனிமேல் உங்கள் தொடர்பு என்னவாக இருக்கும்?

எமக்கு அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தி எமது தலைமையிலான புதிய வழிக்குத் திரும்பி எனது வழிகாட்டலில் உள்ளனர். எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எதுவித வழிமுறையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலை எனக்கு இருக்கிறது. இது விடயத்தில் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு அனைத்துலக பிரச்சாரம் செய்து உங்களைக் கைது செய்யக் கோருகிறது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்ன?

செய்தித் தாள்களில் இச்செய்தியைப் படித்துள்ளேன். தமிழ்த் தேசியம் தனது சட்ட ரீதியான உரிமைகளை வென்றெடுக்கும் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நானும் பங்காளியாக உள்ளேன். அனைத்துலக சட்டங்களின்படி இப்போராட்டம் நியாயபூர்வமானது. இராணுவத் தோல்வி போராட்டத்தின் நியாயப்பாட்டை அழித்துவிட முடியாது. நான் எந்தக் குற்றமோ மனிதத்துக்கு கெடுதல் செய்யவோ இல்லை.

மேலும் நான் இப்போது எமது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்து வருகிறேன். இம் மாற்றத்துக்கான முடிவானது எமது தமிழர்களின் தேசிய நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்தத் தீவில் உள்ள சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.

அந்தத் தீவினதும் பிராந்தினதும் உறுதிப்பாட்டிற்கும் அமைதிக்கும் முக்கியமானது. இந்த விடயத்தில் பாத்திரம் வகிப்போர் இந்த விடயத்தை யதார்த்த நிலையில் அணுகுவார்கள் என நான் நம்புகிறேன். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்காக நான் எவ்வித ஆபத்தையும் உயிரையும் கூடத் தியாகம் செய்யச் சித்தமாக இருக்கிறேன்.

பொட்டு அம்மானின் உண்மை நிலை என்ன, சிறிலங்கா அரசு சொல்கிறது அவர் இறந்து விட்டார் எனவும் ஆனால் அதற்கான சான்றுகளைத் தர முடியாது உள்ளனர்?

எமக்கு கிடைத்த தகவல்களின் படி மே 17 ஆம் நாளில் 2009 இல் இடம்பெற்ற சிறிலங்கா படைகளுக்கு எதிரான போரில் அவரும் மாவீரர் ஆனார் என்றே தெரிகிறது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP