சமீபத்திய பதிவுகள்

கம்ப்யூட்டருக்குப் புதியவரா வேர்டில் பைண்ட் அண்ட் ரீப்ளே

>> Thursday, August 5, 2010


கம்ப்யூட்டருக்குப் புதியவரா வேர்டில் பைண்ட் அண்ட் ரீப்ளேஸ்


ஆவணங்கள் தயாரிப்பதில் வேர்ட் தரும் வசதிகளில், மிக முக்கியமானது, அதிக பயனுள்ளதாகவும், பலரால் கருதப்படுவது, அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) ஆகும். ஓர் ஆவணத்தின் மொத்த பக்கங்களிலும், குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை, ஜஸ்ட் ஒரு கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த வசதி குறித்து இங்கு காணலாம்.  வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு சொல் ஒன்றினைப் போட விரும்புகிறீர்கள். அப்போது கர்சரை ஒவ்வொரு லைனாக இழுத்துச் சென்று அந்த சொல்லைத் தேடி, அதை அழித்துவிட்டு மீண்டும் புதிய சொல்லை டைப் செய்வது நம் நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும். இதற்கெனவே  வேர்ட் தொகுப்பில் Find and Replace என்றொரு வசதி உள்ளது. முதலில் அந்த சொல்லைத் தேட வேண்டிக் கொடுக்கும் கட்டளையைப் பார்க்கலாம். இதற்கு Edit  மெனு சென்று அதில்  Find கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதற்கென உள்ள  Ctrl+F என்ற ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தவும். இப்போது எந்த சொல்லைத் தேட என்று கேட்டு அதற்கென ஒரு நீள் கட்டம் இருக்கும். அதில் கர்சர் துடித்துக் கொண்டிருக்கும். அதில்  தேடி அறிய வேண்டிய சொல்லை டைப் செய் திடலாம். இந்த சொல் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு எழுத்தாகவோ, சொல்லாகவோ அல்லது நிறுத்தக் குறிகளாகவோ, ஸ்பெஷல் கேரக்டர்க ளாகவோ இருக்கலாம். அதன்பின்  Replace  என்ற கட்டத்தில் எந்த சொல்லைப் புதிதாய் அமைக்க வேண்டுமோ அதனை டைப் செய்திடலாம். பின்னர் கீழே உள்ள கட்டங்களில் Next என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், அடுத்த   சொல் இருக்குமிடத்தில் கர்சர் செல்லும். நீங்கள் விரும்பினால், அந்த சொல்லுக்குப் பதிலாக, புதிய சொல்லை அமைக்க,   Replace   என்பதில் அழுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இடமாக அந்த சொல்லைத் தேடித்தேடி மாற்றி அமைக்காமல் அனைத்து இடங்களிலும் அமைக்க முடிவு செய்தால்    Replace All என்பதில் கிளிக் செய்தால் போதும்.  உடனே அனைத்து இடங்களிலும் தேடி, அறிந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல் அமைக்கப்பட்டு டாகுமெண்ட் ரெடியாகும்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இணையதளம் மூலம் விவசாயிகள் "டிப்ஸ்' பெறலாம்!

 விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கி, சர்வதேசப் போட்டியில் வென்றுள்ள ராகுல் சங்க்ஹி: ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும், விவசாயத்தைச் சார்ந்து உள்ளது. ஆனால், மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் நம் நாட்டில் விவசாயம் சார்ந்த விஷயத்தில் முரண்பாடுகள் உள்ளன. விவசாயத்திற்காகப் புதிதாக அரசு திட்டங்கள் தீட்டினாலும், இடைத்தரகர்களாலும், முதலாளிகளாலும், விவசாயிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை இன்னும் ஈட்ட முடியாமல் உள்ளனர். என்ன செய்தால் இந்நிலை மாறும் என்று யோசித்து வடிவமைத்த வரைவு திட்டத்திற்குத் தான் இந்த விருது.நான் கண்டுபிடித்த இந்த மென்பொருள் மூலம் இடைத்தரகர்களால் விவசாயிகள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும். விவசாயப் பொருட்களை எப்படி விற்பது, பொருட்களின் விலை நிர்ணயம், அதை சந்தைப்படுத்தும் முறைகள், விவசாயிகளுக்குப் பயன்படும் தகவல்கள் போன்றவற் றை நான் வடிவமைத்த இணையதளம், விவசாய மக்கள் அனைவருக்கும் வழங்கும்.விவசாயிகள் தங்கள் பகுதியில் பயன்படுத்தி வரும் விவசாய முறைகளை மற்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த இணையதளம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். "பார்மர்ஸ் பிரேம் ஒர்க்' என பெயரிடப்பட்டுள்ள இதில், விவசாயிகள் தங்கள் வட்டார மொழியிலேயே ஒலி வடிவிலான தகவல்களைப் பெற முடியும். மேலும், ஒளிக் காட்சி செயல்முறை விளக்கங்களும் இடம் பெறும். தொடு திரை வாயிலாகவே விவசாயிகள் இந்தத் தகவல்களைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் நேரிடையாக இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டு, இந்த இணையதளத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறலாம். நாட்டில் குக்கிராமத்தில் எந்த அளவிற்கு இணையதள சேவைகள் உள்ளன என்பதைப் பொருத்தே இந்த முயற்சியின் வெற்றி உள்ளது.


ஜெயிச்சே தீரணும்!பி.பீ.ஓ., தொழில் செய்யும் ராகிலா: புதுக்கோட்டை மாவட்டம் தான் எங்களுக்கு சொந்த ஊர். தொழில் காரணமா திருவள்ளூர்ல செட்டிலான  குடும்பம் எங்களுடையது. நான், எங்க அண்ணன் வீட்டில் இரண்டு குழந்தைகள். சின்ன வயதில் வெளியே போய் விளையாட அனுமதிக்காத எங்க வீட்டில், நான் எட்டாவது பாஸ் பண்ணப்போ, இனி பள்ளிக் கூடமெல்லாம் போக வேண்டாம்; படிச்சது போதும்னு சொல்லிட்டாங்க. எங்கப்பா தான் எல்லாரையும் எதிர்த்து என்னை பிளஸ் 2 முடிக்க வச்சார்.அடுத்ததா கல்லூரி போறேன்னு நான் கேட்டப்போ, எங்க வீட்டில் பெரிய போராட்டமே நடந்தது. நான் பிடிவாதமா நின்னு, ஒரு வழியா பி.எஸ்சி., முடிச்சேன். படிப்பு முடிந்த உடன் திருமணம்.என் கணவர் தாஹீர், வெளிநாட்டு மாப்பிள்ளை. திருமணத்திற்குப் பின், உள்ளூரிலேயே பிசினஸ் பண்ண முடிவெடுத்து, திருச்சிக்கு வந்து பி.வி.சி., பைப் பிசினஸ் ஆரம்பித்தார்.அந்த சமயத்தில் பேப்பர்ல வந்த, "டிடீட்சியா'வைப் பற்றிய செய்தியைப் படிச்சுட்டு, அங்கு போய் ராமசாமி தேசாய் சாரைப் பார்த்தேன்; நிறைய தொழில்களைப் பற்றி விளக்கினாங்க. வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பிசினசான பி.பீ.ஓ.,வை தேர்ந்தெடுத்தேன்.பல சிரமங்கள், போராட்டங்கள் எல்லாத்தையும் தாண்டி 15 கம்ப்யூட்டரை வாங்கிப் போட்டு பிசினஸ் ஆரம்பித்த சமயத்துல, பி.பீ.ஓ., சார்ந்த வேலைகளை வெளிநாடுகளுக்கு கொடுக்க மாட்டோம்னு ஒபாமா உத்தரவு போட, மொத்த பி.பீ.ஓ.,வும் முடங்கிப்போயிடுச்சு.லட்சக்கணக்கில் பணம் போட்டு பண்ணின பிசினசில், எனக்கு மிஞ்சினது நஷ்டம் மட்டும் தான். ஒரு கட்டத்தில் என் கணவரின் பிசினசையும் பாதிக்க, வேதனையில துவண்ட நான், வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டேன். ஆனாலும், ஜெயிச்சே தீரணும்னு மீண்டும் போராட ஆரம்பிச்சேன். முன்பை விட ராத்திரி, பகல் பார்க்காம உழைச்சேன். பி.பீ.ஓ., பத்தி தெரியாத பல விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். இழந்ததை மீட்டு விட்டேன்.



source;dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP