சமீபத்திய பதிவுகள்

தேசியத்தலைவர் அவர்களே, ""என்னையும் விஞ்சிய போராளி'' என வியந்து பாராட்டிய தளபதி

>> Wednesday, July 8, 2009

மாவீரன் பால்ராஜ்

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, ""என்னையும் விஞ்சிய போராளி'' என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந் தான். 

அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!''.உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் ""யாழ்தேவி'' எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓடச் செய்தவன். அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள் அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு ராணுவத்தினர் யாழ்தேவி சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.

எத்தனையோ ராணுவ வரலாறுகளை படித்திருக் கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங் களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத் தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.

இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமை யுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள். சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற் குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு ராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ... என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கில மும் கலந்து உடைக்கிறார். ""பயப்படாதீர்கள் பால்ராஜ்... "வதிரையன் பாக்ஸ்' சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போ தேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த ராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் ராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?'' என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான ராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய "வதிரையன் பாக்ஸ்' சண்டையை "ஹாலிவுட்' திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாக வோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க் கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.

அதென்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிகு "வதிரையன் பாக்ஸ்' சண்டை? சுருக்கமாக முதலில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பின்னர் விரிவாக விளக்குகிறேன்: கடல், சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில், வடக்குப்புறம் பலாலி ராணுவ தளமும் அத்தளத்தையொட்டி யாழ்குடாவில் நிற்கும் 20,000 ராணுவத்தினர், வடமேற் கில் பளை ராணுவ முகாமும் அங்கிருக் கும் சுமார் 7,000 ராணுவத்தினரும், தெற்குப்புறமாய் 14,000 ராணுவத்தின ருடன் அசைக்க முடியா ஆனையிறவு முகாம், இவ்வாறாக கடற்படை, வான் படை, எறிகணைப் படை, பீரங்கிப் படை, தங்குதடையற்ற விநியோகம் இவற்றோடு சுமார் 40,000 ராணுவத் தினர் சூழ்ந்து நின்ற களத்தை வெறும் 1,500 போராளிகளுடன், சிறு ரக ஆயு தங்களோடு, விநியோக வசதியோ மீட்கப்படும் வாய்ப்போ ஏதுமின்றி, கடல்வழி ஊடறுத்து உள் நுழைகிறார் பால்ராஜ்.

வெட்ட வெளி மணற்பரப்பு, மறைந்து நின்று தற்காத்து சண்டையிட மரங்களோ, புதர்களோ, பாறைகளோ, மணல் மேடுகளோ இல்லாத களம். அப்பரப்பில் "ப', "ட' வடிவில் எதிரியின் குண்டு மழைக்கு நடுவே பதுங்கு குழிகள் வெட்டி நிலையெடுத்து -இதைத்தான் ""பாக்ஸ் சண்டை'' என்கிறார்கள்... அப்படி "ப' "ட' வெட்டிக் கொண்டே மெல்ல நகர்ந்து ஆலி9 நெடுஞ்சாலையை புதுக்காடு சந்திப்பில் இடைமறிக்கிறார்கள். எவ்வித பின்புல விநியோக ஆதரவோ, மருத்துவ உதவிகளோ, தப்பிக்கும் வாய்ப்போ இன்றி சிறு ரக ஆயுதங்களுடனும், பிஸ்கட்-ரஸ்க்-ரொட்டி- வறுத்த மாவு- குடிநீர் என குறைந்த உலர் உணவுடனும் வெறும் 1,500 போராளி கள் -நான்கு படை அசுர பலத்தோடு நின்ற 40,000 ராணுவத் தினரை எதிர்கொண்டு அவர்களின் இதயப் பரப்பிலேயே நிலையெடுத்து -ஒன்றிரண்டல்ல 34 நாட்கள் -ஆனையிறவு முகாம் விழுகின்றவரை சண்டையிட்டார்களென்பது உலகின் வீர வரலாறுகள் இதுவரை அறியாத மெய்சிலிர்க்கும் அதிசயம். இது நடந்தது ஓயாத அலைகள் ஒஒஒலின் இறுதிக் கட்டமான 2000-ம் ஆண்டில்.

2002-ல் நான் வன்னி சென்றிருந்தபோது தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வைத்த முதன்மையான வேண்டுகோள் இதுதான்: ""திரும்பிச் செல்லுமுன் தலைவரையும், தளபதி பால்ராஜையும் நான் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும், பார்க்காமல் நாடு திரும்பப் போவதில்லை''. பால்ராஜ் அவர்களை நான் சந்தித்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில். மருத்துவ ஓய்வில் இருந்தார். எளிய மனிதனாய், லுங்கி கட்டிக் கொண்டு, மரப்பலகையில் போர்வை விரித்து படுத்திருந்தார். ""சிகிச்சையின் போதேனும் மெத்தையில் படுக்கக்கூடாதா, இது சமாதான காலம்தானே...?'' என்றேன். சிரித்தார். ""பழகினால் அதையே உடலும் மனசும் தேடும். இப்படியே இருந்துவிட் டால் போர்க்களத்தில் சுகம்'' என்றார்.

வேரித்தாஸ் வானொலியில் பல புத்தகங்களிலிருந்து கடன் வாங்கி நான் படைத்த நிகழ்ச்சிகளைக் கேட்டு, இயல்பி லேயே நான் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென கற்பிதம் செய்து கொண்டு, என்னிடம் கேட்டு தெளிவு பெறவென, மாசில்லா மாணவன் போல், 49 கேள்விகளை கசங்கிய தாளில் எழுதிவைத்து, அறிந்து கொள்ளும் தீரா ஆர்வத்துடன் வினவிக் கொண்டிருந்த பால்ராஜை எப்படி நான் மறப்பேன்!

""இத்தாவில் "வதிரையன் பாக்ஸ்' சண்டை அனுபவத்தை கேட்டறியத்தான் வந்தேன்'' என்றேன். ஊர்த்திருவிழாவில் சலங்கை கட்டி கரகமாடும் நடன மணியைப் போல், உருண்டு புரண்டு ஓடும் அருவியைப் போல் கதை சொல்லத் தொடங்கினார் பால்ராஜ்.

""மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே தலைவர் வரச்சொல்லி "பால்ராஜ் இத்தாவில்-தாளையடி- வதிரையன் பக்கமாய் போய் ரெக்கி பார்த்திட்டு வா' என்றார். ("ரெக்கி' என்றால் தகவல்கள் சேகரிப்பது, உளவுச் செய்திகள் திரட்டுவது). எனக்கு ஒன்டுமே விளங்கவில்லை. ஏனென்டா தாளையடி, வதிரையன் பகுதிக்கு ராணுவ முக்கியத்துவம், எதுவும் இல்லை. தொடர்ந்தும் தலைவர் சொன்னார். "கவனமா பார்த்து வா பால்ராஜ்... யாழ்ப் பாணத்துக்கான சண்டை அங்கேதான் தொடங்கும்'. அப்போகூட எனக்கு எதுவுமே விளங்கலெ. நானும் போய் ரெக்கி எடுத்தேன். கடல் மணலைத் தவிர வேறொன்டும் அங்கெ இல்லெ. அப்பவும் தலைவர் விபரம் எதுவும் சொல்லெயிலெ''.

மூன்று வருஷத்துக்குப் பிறகு ஓயாத அலைகள் 3 நடக்கேக்க தலைவர் வரச் சொன்னார். ""பால்ராஜ், ஆனையிறவுக்கான சண்டையெ நீதான் நடத்தப் போறெ' என்றார். ""நீ பெரிய வீரன், பால்ராஜ். எத்தனையோ சோத னைகளெ உனக்கு நான் தந்திருக்கேன். எல்லாத்திலெயும் நீ வென்றாய். இது கடைசியா நான் உனக்கு வைக்கிற சோதனை. உன்னையும் 1,500 போராளிகளையும் தாளையடி கடற்பக்கம் சூசை தரையிறக்கி விடுவான் அவ்வளவுதான். சிக்கலென்டா உங்களை காப்பாற்றிக் கொண்டு வரக்கூட எங்களாலெ வர ஏலாது. நீ ஆலி9 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனை யிறவுக்கு வர்ற விநியோகத்தை வெட்டி முறிக்கணும். அதைச் செய்தா ஆனையிறவு தானா விழும். நீ உண்மையான வீர னென்டா ஆனையிறவெ விழ வச்சு நீ அந்தப் பக்கத்திலிருந்து ஆலி9 ரோட்டுலெ ஆனையிறவெ நோக்கி வர, நான் கிளிநொச்சியி லிருந்து இங்காலெ பக்கமா வர ரெண்டுபேரும் ஆனையிறவிலெ கை குலுக்கலாம்'' என்றார்.

2000, மார்ச் 18-ந் தேதி சீறிப்பாய்ந்த கடற்புலிகளின் படகுகள் 1500 போராளி களையும் தளபதி பால்ராஜையும் தாளையடி- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறக்கம் செய்யும்போதே கடும் சண்டை தொடங்கிற்று. விடுதலைப்புலிகள் போன்றதொரு அமைப்பு எதிரிப்படையை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் இத்தனைபேரை தரையிறக்குவதென்பதே மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்வழித் தரையிறக்கம் இது என ராணுவ ஆய்வாளர்கள் அப்போது வியந்தார்கள்.

பால்ராஜ் தொடர்ந்தார். ""இறங்கேக் கெயே கடும் சண்டை... சக்கை அடி அடிச் சான்... நாங்கள் மெதுவா நகர்ந்து வதிரையைனிலெ பாக்ஸ் வெட்டி நிலையெடுத் தம். சண்டையென்டா இதுதான் சண்டை ஃபாதர். குளிக்க ஏலாது, சப்ளை இல்லை... வெட்டி நிற்கும் குழிக்குள்ளெதான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம். காயம்பட்ட போராளிகளெ அதே குழிக்குள்ளே பராமரிக்க ணும். வீரமரணம் தழுவிய போராளிகளெ வணக்கத்தோட விதைக்கணும்... விமானத்தாலெ அடிப்பான்... டாங்கு கொண்டு அடிப்பான்... எறிகணை அடிப்பான்...''

""என்ட ராசா... பழைய தமிழ் இலக்கி யங்கள்லெ படிப்பம்தானே ஃபாதர், "இன்டு போய் நாளெ வா' என்டு... அதுபோலத்தான் வதிரையன் சண்டை யும். இன்டு 400 மீட்டர் அவன் பிடிச்சா, நாளை 600 மீட்டர் நாங்க பிடிப் பம். அவன் 10, 20 டாங்குகளை வேகமா கலச்சுக் கொண்டு எங்களெ குழிக்குள் ளேயே உயிரோட புதைக்கலாமென்டு வருவான்... நாங்க பாய்ஞ்சு அவன் டாங்குகள் மேலெ ஏறி சுட்டுப்போட்டு அதே டாங்கு களெ திருப்பி நாங்க ஓட்டி அவனையே அடிப்பம். ஹாலிவுட் யுத்த படங்கள் பார்த் திருப்பிங்கதானே... அப்பிடித்தான் சண்டை நடந்தது.''

""ரெண்டுநாள்... எட்டுநாள்... பத்துநாள்... சப்ளை துப்புரவா இல்லாத நிலை... கொண்டு வந்த சாமானெல்லாம் தீருது... சாப்பாடு தட்டுப்பாடு, சிங்கள ஆமிக்காரர்களெ பாய்ஞ்சு பிடிச்சு அவங்கட ஆயுதங்களெ எடுத்து சண்ட பிடிச்சம்... என்ட ராசா... சண்டையென்டா இதுதான் சண்டை...'' -அப்படியொரு ரசனையுடன் வதிரை யன் பாக்ஸ் சண்டையை வருணித்தார் பால்ராஜ். 

வதிரையனில் நிலை நின்று வரலாற்றுச் சமராடி, மெல்ல நகர்ந்து புதுக்காடு சந்திப்பு பகுதியில் ஆலி9 நெடுஞ்சாலையை இடைமறித் தார்கள். பல்லாயிரம் ராணுவத்தினரை அணி திரட்டி மீண்டும் மீண்டும் சிங்கள ராணுவம் முயன்ற முன் நகர்வுகளை நினைத்துப் பார்க்க முடியாத இதிகாச வீரம் காட்டி முறியடித்தனர் பால்ராஜின் போராளிகள். ஆலி9 நெடுஞ்சாலை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு முகாமில் இருந்த 14000 ராணுவத்தினருக்கு உணவு, ஆயுத விநியோகம் தடைபட்டது. இன்னொரு முனையில் ஆனையிறவுக்கு குடிநீர் வழங்கிய பரந்தன் பகுதி யையும் புலிகளின் பிறிதொரு படையணி கைப் பற்ற, பால்ராஜும் 1500 போராளிகளும் தாளையடி யில் தரையிறங்கிய 34-ம் நாள், 2000 ஏப்ரல் 22-ம் நாள் ஆனையிறவு முகாம் விழத்தொடங்கியது. ஏப்ரல் 23-ம் தேதி ஆனையிறவு விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப் பாட்டில் வந்தது.

பிரபாகரனும் பால்ராஜும் தங்களுக்குள் செய்துகொண்ட வரலாற்றுச் சபதம் நிறை வேறியது. புதுக்காடு சந்திப்பிலிருந்து வந்த பால்ராஜும் கிளிநொச்சியிலிருந்து வந்த பிரபா கரனும் ஆனையிறவில் கை குலுக்கினார்கள். ஆனால் பொதுவாக சிறு வெற்றிகளுக்கே தாராளமாய் பாராட்டி மகிழும் பிரபாகரன் ஒரு வார்த்தைகூட பால்ராஜிடம் சொல்லவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் பால் ராஜையே பார்த்தவர்... ""என்ன பால்ராஜ், நான் ஒண்டும் பாராட்டிச் சொல்லெலியே என்டு யோசிக் கிறியா. இந்தா கேள் உன்ட எதிரி உன்னைப் பற்றி என்ன சொல்றா னெண்டு? எனக் கூறிக்கொண்டே ஒரு "வாக்மேன்' (ரஹப்ந்ம்ஹய்) பிளேயரையும் குறுந்தகடையும் கொடுத்திருக்கிறார். யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சிக்கும் அப்போ தைய ராணுவ மந்திரி அனுருத்த ரத்வத்தேக்கும் வதிரையன் பாக்ஸ் சண்டையின் இறுதிக் கட்டத்தில் நடந்த காரசாரமான உரையாடலை தனது கட்டளை மையத்தில் இருந்துகொண்டு பதிவு செய்திருக் கிறார் பிரபாகரன். 

ஆனையிறவு விழக்கூடும் என்ற நிலையில், அது தென் னிலங்கையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கு மென்ற அச்சத்தில் பலாலி ராணுவத் தளத்திற்கு பறந்து வருகிறார் ராணுவ மந்திரி ரத்வத்தே. அங்கிருந்து தளபதி ஹெட்டியாராட்சியை காய்ச்சி எடுக்கிறார். ""வேசி மகன்களே... 40,000 பேர் படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டை யிடும் 1500 பேரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு ராணுவமா? த்தூ...'' இப்படிச் சொல்ல முடியாத அசிங்க வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். எல்லாம் கேட்டுவிட்டு ஹெட்டியாராட்சி பொறுமையாகச் சொன்ன பதில் : ""ஐயா பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாகூட சமாளிச் சிடுவேன். வந்திருப்பது பால்ராஜ். அவன் வந்து உட்கார்ந்தானென்றால் கிளப்ப முடியாது'' -இந்த உரையாடலைத்தான் பதிவு செய்து பால்ராஜுக்கு கொடுத்தார் பிரபாகரன். ""உன்ட எதிரியே உன்னெ இப்படி பாராட்டியிட்டான். இதுக்கு மேலெ நான் என்ன சொல்றதாம்? வென்டுட்டெ பால்ராஜ்'' என்று சொல்லிக்கொண்டே பாசமுடன் கட்டித் தழுவிப் பாராட்டினாராம் பிரபாகரன்.

1996 ஓயாத அலைகள் ஒ-ன் போது இதே முல்லைத்தீவில் சிங்களப் படைகளை துவம்சம் செய்து துரத்தியடித்த பால்ராஜ், 1998 ஓயாத அலைகள் ஒஒ-ல் மின்னல் வேகத் தாக்குதலில் கிளிநொச்சி ராணுவ முகாமை துடைத்தெறிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பால்ராஜ், 2000-ல் ஆனையிறவை வீழ்த்திய பால்ராஜ், அதன் பின்னர் இறுதியாக ஆனை யிறவை மீளக் கைப்பற்ற சந்திரிகா அரசு 2001-ல் மேற்கொண்ட "அக்னிஹேலா' பெரும் எடுப்பை எதிர் கொண்டு தகர்த்தெறிந்த பால்ராஜ் 43-ம் வயதில் 2008 -கடந்த ஆண்டு மே 23-ம் நாள் மாரடைப்பால் மரண மடைந்தார். பணமும் மனமுடைய தமிழர் எவரேனும் இம்மாவீரனை திரையில் பதிவு செய்வீர்களா?


நக்கீரனுக்காக ஜெகத் கஸ்பார்

நன்றி: நக்கீரன்


StumbleUpon.com Read more...

திருமணத்தை நிறுத்து: சானியா மிர்சாவை மிரட்டிய வாலிபர் கைது

திருமணத்தை நிறுத்து: சானியா மிர்சாவை மிரட்டிய வாலிபர் கைது
    



    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் நிச்சயதார்த்தை நிறுத்த வேண்டும் என கூறி அவருக்கு மொபைலில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.


இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா. இவருக்கு நாளை மறுநாள் (10.07.2009) முகமுது சோப்ரப் மிஸ்ரா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் சானியா வசிக்கும் அதை பகுதியில் இருக்கும் முகமது அஷ்ரப் (28) என்ற என்ஜினியரிங் மாணவர் தான் அவரை காதலிப்பதாக கூறி சானியாவுக்கு அடிக்கடி எஸ்எம்எஸ் மூலம் செய்திகள் அனுப்பியுள்ளார்.

அவரது மொபைலுக்கு பலமுறை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், அவரது திருமண நிச்சயதார்த்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இதை சானியா தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் 'சானியாமேனியாவில்' பீடிக்கப்பட்ட அந்த வாலிபர் சானியாவின் வீட்டுக்கு வந்து அவரது தந்தை இம்ரான் மிர்சாவிடம் தான் சானியாவை காதலிப்பதாகவும், அதனால் நிச்சயதார்த்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

 
 
 

StumbleUpon.com Read more...

கரும்புலி மாமாக்களே

StumbleUpon.com Read more...

அடங்காது எங்கள் தாகம்.



தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

StumbleUpon.com Read more...

ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்த பிச்சைக்காரர்

லட்சாதிபதி : பிச்சைக்காரர்      
 
திருவனந்தபுரம், எர்ணாகுளம் அருகே பள்ளிவாலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது.
எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார்.  இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.  காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார்.  இந்நிலையில் பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார்.  பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்ல ஆசையாக உள்ளது.  அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லையென்றும் கூறியுள்ளார்.  இதை கேட்டசிலர் அந்த பகுதியில் வசூல் செய்து ரூ.10 ஆயிரத்தை அப்துல் அலியிடம் கொடுத்தனர்.  பெரும்பாவூர் பள்ளிவாசல் செல்வதற்கு ஒரு ஜீப்பையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.  அந்த ஜீப்பில் பெரும்பாவூர் சென்ற அப்துல அலி அங்கு டிரைவரை காத்திருக்குமாறு கூறிவிட்டு ஒரு மணிநேரம் கழித்து திரும்பி வந்துள்ளார்.  பின்னர் அதே ஜீப்பில் குற்றிக்காட்டூர் பள்ளிவாசலுக்கு வந்து வழக்கம் போல் பிச்சை எடுக்க தொடங்கினார்.  இதனை பார்த்த பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இதையடுத்து அவர்கள் முகமது அலியின் பையை சோதிததனர்.  அப்போது அதில் ரூ.80 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.  மேலும் தபால் அலவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகமும் இருந்தது.  இதுகுறித்து அவர்கள் முகமது அலியிடம் கேட்டபோது, அவ்வளவு பணத்தையும் பிச்சை எடுத்தே சம்பாதித்தாக தெரிவித்தார்.  இதையடுத்து மாவூர் போலீசுக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர்.  அவர்கள் விரைந்து வந்து முகமது அலியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
 

StumbleUpon.com Read more...

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு காலத்தின் உடனடி தேவை ‐ கோவிந்தன் வாசு:(கட்டுரைகளின் கருத்துக்களுக்கு கட்டுரையாசிரியர்களே பொறுப்பு:)

 

13 வது சட்ததின்  காவல்துறை அதிகாரங்கள் கிழக்கிற்கு  தேவை இல்லை என்று சொன்ன கரு நாக்குகளும் சமஸ்டி தான் ஒரு தீர்வு அனால் அதற்கு புலிகள் தான் தடையாக இருக்கிறார்கள் என்று சொல்லிவந்த ஆனந்தமான  சங்கர சித்தர்களும், மத்தியில கூட்டு ஆட்சி மாநிலத்தில சுயாட்சி  என்று சொல்லி கொண்டு இருந்து இப்ப  தமது கட்சி அடையாளத்தையே தக்கவைக்க முடியாமல் வேற்று இலைக்குள் நின்றால் தான் வடக்கில  வசந்தம் வீசும் என்று சொல்லிக்கொண்டு  வீணையை கைவிட்டவர்களும் ,  ஈழம், சுய நிர்ணய உரிமை என்று தேர்தலில நின்று 22  ஆசனங்களை பெற்று கொண்டு பாராளமன்றம் சென்ற தமிழ் கூட்டமைப்பும் தற்போது புலிகள் தோற்று விட்டார்கள்  இனி எங்களிடம் பலம் இல்லை இனியும்  சுயநிர்ணயம் தேசியம் பற்றி  பேசி பயனில்லை  என்று சொல்லிகொண்டு மகிந்தா புதிதாக ஆரம்பித்துள்ள  அனைத்து கட்சி மகாநாட்டில ஒன்றாக உட்காந்து விருந்தும் உண்ட பின்பும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு ஒரு தீர்வை மகிந்தாவின் சிந்தனைக்குள் நின்று சுயர் நிர்ணய உரிமையை  பெற்று தரும் என்று எப்படி நம்புவது?
அல்லது தமிழர்களின் உரிமைக்கான ஆயுத  போராட்டதிக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக வன்னியில் கோரமாக தடை செய்யபட்ட ஆயுதங்கள் மூலம்  கொலை செய்யப்பட்டதையா ? அல்லது வைத்தியசாலை மீது குண்டு வீசி காயபட்ட மக்களை கொலை செய்த போர் குற்றத்தையா ? அல்லது வெள்ளை கொடியுடன் சரணடைய வரச்சொல்லி வஞ்சகமாக உலக போர் விதிகளுக்கு முரணாக  செய்த போர்   குற்றத்தையா  ? அல்லது இந்த நாட்டில எல்லோர்க்கும் சம உரிமை என்று சொல்லிக்கொண்டு யுத்தம் முடிந்து 50  நாட்கள் கடந்தபின்பும்  3 இலட்ச மக்களை அடிப்படி வசதி கூட இன்றி முள்ளு கம்பிவேலி கொண்டு ஆடு மாடுகளை போல அடைத்து வைத்துக்கொண்டு சர்வதேச அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக செய்யும் குற்றத்தையா ?????
போர் முடிந்து 2 மாதங்கள் போனபின்பு கூட போர் குற்றமும் இனப்படுகொலையும் விசாரணை செய்ய வேண்டி உலக  மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து அமெரிக்க சனாதிபதியை வலியுறுத்திக்கொண்டு இருக்கிற நிலையில தமிழ் கூட்டமைப்பு இனவாத அரசுடன் சேர்ந்து  பழசை மறக்க தயார் என்று  சொல்வது தமிழர்களது பிணங்களின் மீது நின்று கொண்டு பிழைப்பு நடத்துவது போலுள்ளது
போருக்கு உதவி செய்த இந்தியாவையும் போர் குற்றகளை விசாரிக்க வேணும் என்று சொல்லி நிதி தராத மேலை நாடுகளையும் சந்தோஷபடுத்தி நிதியை பெற  கட்சிகளை கூட்டி  புனரமைப்பு மீள் குடியேற்றம் என்று சொல்லி நிதியை பெற்று போரினால் சிதைந்துள்ள ராணுவ கட்டமைபையும் தென் இலங்கை பொருளாதாரத்தை கட்டி  எழுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரத்தை வழங்க முடியாதென்ற உண்மையை நன்கு தெரிந்த மகிந்தா அப்படி வழங்கினாலும் இனவாத கட்சிகள் மூலம் நீதிமன்றம் சென்று வடக்கு கிழக்கை பிரித்தது போல மீள பெறலாம் என்பதையும் அறிந்து கொண்டு  தமிழரையும் , உலகத்தையும்  ஏமாற்ற தீர்வை முன்வைக்க போவதாக நாடகமாட, அதற்கு தமிழ் கட்சிகளும் பழசை மறந்து ஒன்றாக ஒத்துழைப்போம் என்று சொல்லிப்போன பின்பும் இந்த தமிழ் கட்சிகள் எப்படி  சுய நிர்ணய உரிமையை பெற்று தரும் என்று காலத்தை கடத்துவது ???????
30 ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு தான் இனப்பிரசனைக்கு ஒரே ஒரு தீர்வு என்று வேறு எந்த தீர்வுக்கும்  உடன்படாமல் ஒரே கொள்கையில விலை போகாமல், நின்று போராடிய தலைவரை கொன்றுவிட்டதாகவும் ,அவரின் உடலை எரித்து நந்தி கடலில கரைத்து விட்டோம் என்றும்  அறிக்கைவிட்டு,   தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று  புலம்பெயர் தேசங்களில் வலியுறுத்துகிற மக்களின் போராட்டத்தையும் உணர்வுகளையும் மழுங்கடிக்க முயலுகிற நிலையில் தேசிய தலைவர் தொடர்பாக ஆரம்பத்தில ஒன்றுக்கு ஒன்று  முரணான அறிக்கை விட்ட புலிகளின் சர்வதேச தொடர்பகமும், புலனாய்வு துறையும் பின்பு மக்களின் குழப்பங்களை புரிந்து கொண்டும் , நாடு கடந்த அரசுக்கான திட்டத்தை முன் நகர்த்தி கொண்டு செல்லவும்  ஒரே  கருத்தான  அறிக்கை விட்ட பின்பும்  கூட தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை சொல்லி கொள்ளும் புலம்பெயர் நாடுகளில் மக்களால் அறியப்பட ஊடகங்கள் ஒரு நிலைபாட்டுக்கு வராமல் இன்னும் தலைவர் தொடர்பாக போட்டி போட்டு  முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கொல்லபட்டது தேசிய தலைவர் தான்  வழமை போல தலைக்கு மை தடவி எந்தவித குழப்பமும் இன்றி போரிட்டு வீரமரணமடைந்தார் என்று  சில தமிழ் ஊடங்களும், இல்லையில்லை போர் முடிய சில நாட்களுக்கு முன்பு தலைவர் மீசை இல்லாமல் இருந்தார், அவருக்கு  எப்படி இப்படி  அடர்ந்த சில நாட்களுக்குள்  மீசை வளர முடியும் ?  என்று ஆராட்சி செய்து இன்று வரை மக்களை குழப்பும் இந்த தமிழ் ஊடகங்கள் இது வரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றோ, அல்லது எப்படி இந்த தமிழ் ஈழ விடுதலை போரை அரசியல் ரீதியாக முன்கொண்டு செல்லலாம் என்றோ ஒரு  ஆய்வு  செய்து மக்களை வழி நடத்தாமல் சிங்களத்தின் சிந்தனைக்கு தம்மை அறியாமலே உதவி செய்வதை எப்படி பாராட்டுவது  ?.
3 இலட்சம் மக்கள் முள்ளுகம்பிகளின் பின் அடிப்படை வசதி இன்றியும் 10 ஆயிரத்துக்கு மேலான போராளிகள் சிறைகளில சித்திரவதைகுள்ள நிலையில இன்னும் சில தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை அடையாள படுத்தும் ஊடகங்களும் ஆய்வாளர்களும், தமிழ் நாட்டிலுள்ள தமிழ் உணர்வாளர்களும் விரைவில பிரபாகரன் தலைமையில அடுத்த கட்ட  போர் வெடிக்கும் என்று அறிக்கை விட்டு, ஆய்வுகளை எழுதுவதன் மூலம் இன்னும் தமிழர்களின் அரசியல் போராட்டம் பின்னுக்கு போகுமே அன்றி எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. இந்த ஊடகங்களும், ஆய்வுகளை எழுதுபவர்களும் மக்களை இன்னும் ஒரு மாயைக்குள்  வைத்திருக்காமல், நாடு கடந்த அரசை நிறுவுவதன் மூலம் எப்படி தமிழ் ஈழ கனவை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டியதே  இன்று உள்ள பணியாகும்.
இந்த நாடு கடந்த அரசை உருவாக்கும் தரப்பிற்கும் தமிழ் நாட்டிலுள்ள  தமிழ் உணர்வுள்ள தரப்பிற்கும்  இடையில் ஒரு இடை வெளி இருபது போல தெரிகிறது. முதலில் இந்த குழுவினர் தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஈழம் தான் என்று ஒரே ஒரு தீர்வு என்று சொலி வரும் கட்சிகளையும், தனி ஈழம் அமைத்து தருவேன் என்று சொன்ன   ஜெயலலிதா  போன்றவர்களிடம்   இந்த நாடு கடந்த அரசு பற்றி விளக்கி ஆதரவை பெறுவதுடன் தமிழ் நாட்டு மக்களிடையே இது தொடர்பாக ஒரு எழுச்சியை உருகக்க வேண்டும்
உருவாகவுள்ள நாடு கடந்த அரசு (transnational government) ஏற்கனவே வேறு நாடுகளால் நிறுவப்பட்ட Government of Exile   இற்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக சொல்லும் செயற்குழுவினர் இந்த அரசை அமைக்க கட்டாயம் ஒரு நாட்டின் உடனடி அங்கிகாரம் தேவை இல்லை என்கின்றனர், உலக தமிழர்கள் ஒன்று பட்டு ஆதரவு தந்தாலே  போதும் என்கின்றனர் எனினும் புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ் மக்கள் ஒன்றாக சேர்ந்து வீதிகளில் நின்று போரை நிறுத்த போராடியபோது, இந்தியாவை மீறி போரை நிறுத்தமுடியாமல் நின்ற மேலை நாடுகள்  ஆககுறைந்தது போர் குற்றங்களை ஆவது  விசாரிக்க முயற்சி மேற்கொண்டு,  தோல்வி கண்ட பின், இனி இந்த புலம்பெயர் தேசத்தில போராடும் தமிழர்களுக்கு என்ன செய்யலாம் என்று எண்ணுகிற நிலையில, உடனடிக்கு இல்லாவிடினும் காலப்போக்கில், இந்த நாடு கடந்த தமிழர்களின் அரசை ஏற்று கொள்ள முன்வரும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே உரியவர்கள் ஒன்றுபட்டு முதலில மக்களுக்கு இந்த கொள்ளகை பற்றி தெளிவாக விளக்கி, உலக தமிழர்களை  ஒரு அரசியல் சக்தியில் கொண்டுவந்து   போராடுவதன் மூலம், தமிழர்களின் தனி நாட்டுக்கான கனவு முள்ளிவாய்க்காலில்  புதைந்துவிடவில்லை, என்றும் நந்தி கடலில கரைந்து விடவில்லை  என்பதை உலகுக்கும் இலங்கை அரசுக்கும் தெளிவாக எடுத்து உரைக்க முடியும், எனவே இந்த நாடு கடந்த அரசு ஒரு காலத்தின் தேவை என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து செயற்பட முன்வர வேண்டும்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP