சமீபத்திய பதிவுகள்

தமிழ் நடிகையுடன் சல்லாபம் நாடு முழுவதும் பக்தர்கள் கொதிப்பு

>> Tuesday, March 2, 2010

சுவாமி நித்யானந்தாவின் லீலைகள் :கதவைத் திறந்தால் வருவது யாரோ?: தமிழ் நடிகையுடன் சல்லாபம் நாடு முழுவதும் பக்தர்கள் கொதிப்பு

சென்னை: பத்திரிகை அலுவலகத்துக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். ஃபேக்ஸ், இமெயில் வந்த பிறகு கடிதங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பதிலுக்கு வீடியோ, ஆடியோ சி.டி., டி.வி.டி.க்கள் நிறைய வருகின்றன. சிலவற்றில் சுவையான தகவல்கள், படங்கள் கிடைக்கும். சில குழப்பமான தகவல்களை தாங்கி வந்திருக்கும். நேற்று வந்திருந்த ஒரு சி.டி.யை கம்ப்யூட்டரில் செருகியபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 
சுவாமி பரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக தலைவர், பிரபலமான நடிகையுடன் உல்லாசமாக சல்லாபிக்கும் காட்சிகள் வரிசையாக கம்ப்யூட்டர் திரையில் விரிந்தன. ஆர் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர் அந்த தமிழ் நடிகை. செல்வாக்கு மிகுந்த ஒரு ஆன்மிக தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அவருக்கு வேண்டாத யாரோ செய்த ஒட்டுவேலையாக இருக்குமோ என்றுதான் முதலில் சந்தேகம் எழுந்தது. எனவே கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தில் அனுபவம் மிகுந்த நிபுணர்களிடம் சிடியை சோதனை செய்ய கொடுத்தோம். ஒட்டுவேலை அல்ல, அசல் காட்சிகளே சிடியில் பதிவாகியுள்ளது என அவர்கள் அனைவரும் ஊர்ஜிதம் செய்த பிறகே இந்த நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்த தினகரன் தீர்மானித்தது.    
 நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. 
நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர்.  தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ஒரிஜினல் பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் வெப்சைட் கூறுகிறது.
பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூர் சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார். சி.டி.யில் பதிவாகியுள்ள சில காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக தோன்றுகிறது. அவற்றை ஒதுக்கிவிட்டு சில படங்கள் மட்டும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. 
ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது. 
புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

source:dinakaran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபல சாமியார் நித்தியானந்த வீடியோ



தமிழகத்தின் பிரபல சாமியார் நித்தியானந்த பரம்மஹம்சர் தமிழ் சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபம் செய்யும் வீடியோ காட்சி சன் செய்திகள் தொலைகாட்சியில் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடியோ பார்க்கவீடியோ
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கரன்திகாருடைய புஸ்தகத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்.

க்ரன்திகாருடைய புஸ்தகத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்.

 


 
     380 முதல் பாகம் மற்றும் 410 இரண்டாம் பாகம் புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    
      புத்தகம் ஒற்றுமையை குலைப்பதாக உள்ளது என்கிறார். எஸ்.பி. 



கம்மம். உலகின் மீது பிறை நிலா .Crescent over the world -  is boon silent  Holocaust, authored by Macha Laxmaiah alias Krantikar , a civil rights activist,   வியாழனன்று பெரும் கலகத்தை விளைவித்தது. 


  நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் பாதிக்கக் கூடிய விதத்தில் புத்தகத்தின் கருத்துக்கள் இருப்பதாகக் கூறி போரட்டத்தில் ஈடுபட்டனர்.  

 அவர்கள் கூறியதாவது, அந்த புத்தகத்தில் தடைசெய்யப்பட்ட சல்மான் ருஷ்டியின் சாத்தானி;ன் கவிதைகள் மற்றும் தஸ்லிமா நஸ்ரீனின் லஜ்ஜா புத்தகத்திலிருந்தும் கருத்துக்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் டேனிஷால் வரையப்பட்ட கேலிச்சித்திரங்களும் இடம் பெற்றிருக்கிறது. 

 முதல் பாகத்தின் 380 புத்தகங்களையும் இரண்டாம் பாகத்தின் 410 புத்தகங்களையும் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டதில் கைப்பற்றினர். ஆசிரியரையும் கைது செய்துள்ளனர். ஏற்கனவே புத்தகங்கள் அனுப்ப பட்ட இடங்களில் தேடுதல் பணிக்காக குழுக்கள் பிரித்தனுப்ப பட்டுள்ளது. 

 சிறப்பு படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

 மற்ற நகரங்களிலும் ஹைதரபாத்திலும் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 
  
 ஆசிரியரையும் அவருடைய இரண்டு பாகங்கள் வெளிவர நிதி உதவிசெய்த சில மருத்துவர்கள் மற்றும் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்ககை எடுக்கக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளினால் நகரில் எந்த விருப்பமற்ற சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கு சிறப்புப் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளது. 
 
 கம்மம் போலீஸ் சூப்பிரன்டென்ட் அனில் குமார் கூறுகையில் புத்தக வினியோகம் சமூக ஒற்றுமைக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. சட்ட அமுலாக்கத்தின் படி நிலைமைக்கு ஏற்றவாறு செயல்பட்டு சட்டத்தையும் உத்திரவையும் பாதுகாக்க வேண்டிய கடமை போலீசாருக்கு உள்ளது. 

 நியாயமான கருத்துக்களின் அடிப்படையில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 'அந்த புஸ்தகத்தில் சில எதிர்ப்பான கருத்துக்கள் இடம் பெற்றிருப்தாக நாங்களும் உணர்கிறோம்." என்று அவர் கூறினார்.  

                                             நன்றி: த ஹிந்து ( 26. 02. 2010) 


source:http://www.unmaiadiyann.blogspot.com/
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்


 Human Intrest detail news லண்டன் : "ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்' என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது.பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின.


லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வை நடத்தியது.இயற்கை, அறிவியல், வரலாறு, புவியியல், கலை, இலக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சம், மக்கள், முக்கிய இடங்கள் இவை சம்பந்தமாக விஞ்ஞானபூர்வமற்ற முறையில் பொழுதுபோக்கான கேள்விகளை தயாரித்தது.மொத்தம் ஒன்றரை லட்சம் கேள்விகளை தயார் செய்திருந்தது. ஆன்-லைன் மூலம் பதிலளிக்க ஒவ்வொரு கேள்விக்கும் தலா 20 வினாடிகள் ஒதுக்கியது.பதிலளித்த ஆண்கள், பெண் இரு பாலரும் மாறி மாறி கூடுதலாகவும் குறைச்சலாகவும் பதிலளித்தனர். முடிவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிக கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர்.



 பெண்கள் 40,88,139 கேள்விகளுக்கும், ஆண்கள் 40,77,596 கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர்.பெண்கள் பொழுதுபோக்கு பிரிவில் 57 சதவீத கேள்விகளும், இயற்கை மற்றும் அறிவியல் பிரிவில் 55 சதவீத கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர்.  மக்கள், முக்கிய இடங்கள் பிரிவில் 42 சதவீத கேள்விகளே சரியான பதிலை அளித்திருந்தனர். ஆண்கள் இயற்கை, பொழுது போக்கு, அறிவியல், விளையாட்டு போன்ற துறையில் சிறப்பாக பதிலளித்திருந்தனர்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP