சமீபத்திய பதிவுகள்

திபெத்தை விட்டு கொடுக்க முடியாது: சீனா கண்டிப்பு

>> Tuesday, February 2, 2010


 
 

Top global news update பீஜிங்: ""திபெத்துக்கான தன்னாட்சி குறித்து, விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை,'' என்று  தலாய்லாமாவின் பிரதிநிதிகளிடம் சீனா  உறுதியாக அறிவித்துள்ளது. பீஜிங்கில், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் கலந்து கொண்ட  கூட்டம் நடந்தது. அதில்,"சீனாவின் தன்னாட்சிக்கு பாதகமான பிரச்னைகளில் விட்டுக் கொடுத்தல் என்பது கிடையாது' என்று கூறப்பட்டதாக, "ஜின்ஹூவா' செய்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது.



இந்த கூட்டத்தில், தலாய்லாமாவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட லோடி கியாரி மற்றும் கெல்சாங் ஜியால்ஸ்டென் இருவரும் கலந்து கொண்டனர். திபெத்தின் தன்னாட்சி குறித்த தலாய்லாமாவின் கருத்துக்களை முன்வைத்த அவர்களிடம், சீனாவின் இம்முடிவு உறுதியாகக் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும், தர்ம ஸ்தலாவில் உள்ள தலாய்லாமாவைச் சந்தித்து சீனா கூறியதைத் தெரிவித்தனர். கடந்த 2002ல் இருந்து, சீனாவுக்கும் தலாய்லாமாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தலாய்லாமா மற்றும் சீனா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை, அவர் பிப்ரவரி 16ல் அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு நடக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நியூட்டனின் நிஜமான 'ஆப்பிள் கதை'

நியூட்டனின் நிஜமான 'ஆப்பிள் கதை'- இணையத்தில் காணலாம்

லண்டன்: சர் ஐசக் நியூட்டன் 'ஆப்பிள் கதை' குறித்து உரையாடலை பதிவு செய்த 300 ஆண்டு பழமைவாய்ந்த மூல கையெழுத்துப் பிரதி முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

லண்டனில் உள்ள 'தி ராயல் சொசைட்டி'யின் இணைய தளம் மூலம் இதை பொதுமக்கள் பார்வையிடவும், படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுவதைக் கண்டபோது, பளபளவென மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எரிந்தது போல ஈர்ப்பு விசைக் கொள்கை சர் ஐசக் நியூட்டனுக்கு படிபட்டது என்று வரலாறு கூறுகிறது.

இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை என ஒருதரப்பில் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், நியூட்டன் ஈர்ப்பு விசை பற்றி இளம் வயதிலேயே சிந்திக்கத் தொடங்கிவிட்டார். 

அதை பிறர் புரிந்துகொள்ளும் வகையில் விவரித்து சொல்வதற்காக இப்படி ஒரு 'ஸ்கிரிப்ட்'ஐ உருவாக்கினார் என்றும் கூறிவருகின்றனர்.

எப்படியானாலும், மேஜையில் இருந்து காப்பி டம்ளர் கீழே விழுவது முதல் கோள்கள் சூரியனை சுற்றிவருவது வரை ஒரு புரிதலை ஏற்படுத்தி அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியது நியூட்டனின் விதிகள். 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நியூட்டன் பிளேக் நோய் காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு சென்று நாட்களை கடத்திய போது 1660களின் மத்தியில் இந்த ஆப்பிள் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

நியூட்டனுடன் சஞ்சரித்து, பல்வேறு விவகாரங்களை பரிமாறிக் கொண்ட நண்பரும், விஞ்ஞானியுமாக அறியப்படுபவர் வில்லியம் ஸ்டூக்லி.

இவர் நியூட்டனின் அனுபவத்தை அவரிடமே நேரடியாகக் கேட்டு குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். சுமார் 1720ம் ஆண்டுவாக்கில் இந்த பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

நியூட்டன் விதிகள் பிரபலமடைந்த பின்னர் இந்த கையெழுத்துப் பிரதி சிலரால் மறைக்கப்பட்டும், திருடப்பட்டும், எங்கிருக்கிறது என்று தெரியாமலே போனது. 

சமீபத்தில் இந்த மூல கையெழுத்துப் பிரதிகளை பிரட்டனின் தி ராயல் சொசைட்டி கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் பத்திரப்படுத்தியது.

தற்போது ராயல் சொசைட்டி 350வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் மிகப் பெருமையும், அறிவியல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த பிரதிகளை முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

திங்கள்கிழமை முதல் இம்மூலப் பிரதிகளை இணையம் வழியாக யார்வேண்டுமானாலும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி ராயல் சொசைட்டி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இப்ப்பிரதிகளை பதிவிறக்கம் செய்துவைத்துள்ளது.

ராயல் சொசைட்டியின் ஆவணக் காப்பாளர் இதை நேற்று அறிவித்தார். 

நியூட்டன் பேசிய வார்த்தைகள் எவ்வித வரலாற்றுத் திரிபுகள், சிதைவுகள், ஏற்ற-இறக்கங்கள், இகழ்ச்சி-புகழ்ச்சி போன்றவை இல்லாமல் உள்ளபடியே இதில் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பு என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

StumbleUpon.com Read more...

சீனா... விழுமா? எழுமா?

 

 

ன்று உலகம் முழுக்க உள்ள பொருளாதார நிபுணர்கள் ஒரே ஒரு கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது, சீனா விழுமா, எழுமா என்பதே!

சீனாவின் பொருளாதாரம் அசைக்க முடியாத அளவுக்கு பலமாக இருக்கிறது என்கின்றனர் பலர். இன்னும் சிலர், இதில் கொஞ்சம்கூட உண்மை இல்லை. சீன பலூனை அளவுக்கு அதிகமாகவே ஊதிவிட்டார்கள். இன்னும் ஊதினால் அது வெடிக்கத்தான் செய்யும் என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் சீனாவின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்கிற கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது!

ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரும் பொருளாதார வரலாற்று ஆய்வாளருமான நியல் ஃபெர்குசன் (Niall Ferguson) எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அண்மையில் ஒரு பேட்டி கொடுத்தார். அவர் சொன்ன விஷயத்தை ஒரே வரியில் சுருக்கிச் சொன்னால், நீண்டகால அடிப்படையில் சீனாவைவிட இந்தியாதான் நன்றாக இருக்கும். இதைப் படிக்கும் நமக்கு முயல், ஆமை கதைதான் நினைவுக்கு வரும். வேகமாக ஓடிய முயல் (சீனா) களைத்துப் போய் நிற்க, மெதுவாக வந்த ஆமை (இந்தியா) கடைசியில் ஜெயித்த கதையை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனால் நிஜத்தில் சீனாவுக்கும் நமக்கும் நடக்கும் போட்டி முயல், ஆமை மாதிரி அவ்வளவு எளிதான விஷயமில்லை. காரணம், சர்வாதிகார முதலாளித்துவ நாடான சீனாவின் எழுச்சி பற்றியோ அல்லது பல இனங்களும் மதங்களும் மொழிகள் அடிப்படையில் அமைந்த மாநிலங்களும் ஒன்று சேர்ந்து உருவான இந்தியாவின் எழுச்சி பற்றியோ விளக்குவதற்கான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. 

சீனாவைப் பொறுத்தவரை, ஏற்றுமதியில் காட்டும் அக்கறையைக் குறைத்துக் கொண்டு, உள்நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அதிக அக்கறை காட்டலாம். சீனா அப்படிச் செய்யும் பட்சத்தில் கடந்த 25 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி இனிவரும் ஆண்டுகளில் அடையாது என்றாலும், இப்படிச் செய்வதுதான் அந்த நாட்டின் எதிர்காலப் பொருளாதாரத்துக்கு நல்லது.

இதற்காக சீனாவில் செய்யப்படும் முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப் பதில் சீன மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கம்பெனி களில் முதலீடு செய்தால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.

சீனாவின் வளர்ச்சியை கவனமாகப் பார்த்து வருகிறவர் கள் ஒரு விஷயத்தைப் பற்றி நிறையவே கவலைப்படுகிறார்கள். கடந்த ஆண்டு அந்த நாட்டு வங்கிகள் அளவுக்கதிகமாகவே கடனை அள்ளி வழங்கியது. இந்தக் கடன் பணம் மீண்டும் திரும்ப வருமா என்பது கவலைக்குரிய பிரச்னையாக இப்போது மாறியிருக்கிறது. ஆனால் சீனப் பொருளாதாரம் மிகப் பெரியது. அந்த நாட்டு வங்கிகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் அதிகம். எனவே கொடுத்த கடன் திரும்ப வருமா, வராதா என்பது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்கின்றனர் சிலர்.

தவிர, உற்பத்தியைப் பெருக்கவே சீன வங்கிகள் கடன் வழங்கி இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத வேலைக்கு ஒரு பைசாகூட கடன் அளிக்கப்படவில்லை. எனவே, 1980-ல் ஜப்பான் பொருளாதாரம் சிதறியதைப் போல சீனப் பொருளாதாரமும் சிதறும் என்று சொல்லவே முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம், வங்கிக் கடன் பிரச்னை பூதாகாரமாக வெடிக்கலாம் என்கிற தகவல் தெரிந்தவுடன் பொருளாதாரத்தை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பை சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியிடம் கொடுத்துவிட்டது அந்த நாட்டு அரசாங்கம். கடந்த ஆண்டில் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்த சீனா, அடுத்து வரும் சில ஆண்டுகளில் பொருளாதார நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது.

இதுநாள் வரை சீன அரசாங்கம் தன்னுடைய பணமான யுவானின் மதிப்பை அதிகரிக்க விடாமல் வைத்திருந்தது உண்மைதான். அதன் மூலம் ஏற்றுமதியைப் பெருக்கி, நல்ல வளர்ச்சி காணவும் செய்தது. உலக அளவில் சீனா மட்டுமே இப்படிச் செய்தது என்று சொல்ல முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கெனவே இப்படிச் செய்தன. அதைப் பின்பற்றித்தான் சீனாவும் செய்தது என்றாலும், அதைச் சரி என்று சொல்லிவிட முடியாது.

சீனாவின் உள்நாட்டுத் தேவை சீராகப் பெருகி வருகிறது என்கிற உண்மை அதற்கே தெரியும். இனிவரும் ஆண்டுகளில் உள்நாட்டுத் தேவையைப் பெருக்க சீன அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், அது வளரவே செய்யும். அந்த சமயத்தில் அதன் ஏற்றுமதியும் குறையும். தவிர, சீனாவின் தயாரிப்புகளை இறக்குமதி செய்துவந்த வளர்ந்த நாடுகள் இன்று பலவீனமான நிலையில்தான் இருக்கின்றன. எனவே சீனாவின் ஏற்றுமதி அடுத்துவரும் காலங்களில் கணிசமாகக் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

பலமான உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் ஆண்டொன்றுக்கு 7 முதல் 8 சதவிகித வளர்ச்சி போன்றவை சீனா யுவானின் மதிப்பை அதிகரிக்க சுலபமாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இப்போது பேசப்படும் பல பிரச்னைகள் காணாமலே போய்விடும்.

இப்போதைக்கு மிக முக்கியமான கேள்வி, சீனாவில் முதலீடு செய்யப்படும் பணமோ, சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பணமோ அதிக லாபம் சம்பாதித்துக் கொடுக்குமா என்பதே. சீனா விரைவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும். அதற்கடுத்து இருபது, முப்பது வருடங்களில் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறவும் செய்யலாம். என்றாலும் சீனாவில் பணத்தை முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஏன்?

இங்கேதான் சீனாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சங்கள் இருக்கின்றன. சீனாவில் நேர்மையாக நடந்துகொள்ளும் தனியார் கம்பெனிகளின் எண்ணிக்கை குறைவு. அளவுக்கதிகமான கட்டுப்பாடு, அதனால் ஏற்படும் பயத்தின் காரணமாக சர்வாதிகாரமாகச் செயல்படவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். தனிமனிதன், அமைப்பு, அரசாங்கம் என எல்லா இடங்களிலும் இதைத் தெளிவாகப் பார்க்கமுடியும். பயத்தாலும் பாதுகாப்பின்மை என்கிற உணர்வாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக்கூட அளவுக்கதிகமாக அவர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால்தான் நிதித் துறைகளில்கூட அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும்போது சிறிய தவறு நடந்தாலும் அது மூடி மறைக்கப்படுகிறது. பிற்பாடு அது பெரிதாகி அதற்கொரு முடிவு காணவேண்டும் என்கிறபோது பூதாகாரமாக வளர்ந்துவிடுகிறது.

சீனப் பொருளாதாரத்தையும் அரசியலையும் சமூகத்தையும் அழிக்கிற மாதிரியான ஒரு வீழ்ச்சி வருமா, இல்லையா என்பதை பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது நடக்கும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது சீனாவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சி எதுவும் வராது என்றே தோன்றுகிறது. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்தபிறகும் அமெரிக்கா உலகின் நம்பர் ஒன் பொருளாதாரமாக இருப்பது

போல, ஏதாவது ஒரு வீழ்ச்சி வந்தாலும் சீனா நிலைகுலையாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

எதிர்காலத்தில் சீனா எப்படி இருக்கும் என்பது அந்த நாட்டுத் தலைவர்கள் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்தே இருக்கும். தேவையில்லாத பயம் தேவையில்லாத கட்டுபாட்டையே உருவாக்கும். அது பல தவறுகளைச் செய்யவே உதவும்.

எனவே, உலகின் 'சூப்பர்பவர்' என்கிற போட்டியில் சீனா தோற்றுப் போகவும் வாய்ப்புண்டு. 'எதைப் பெறவேண்டும் என்பதில் தெளிவாக இரு. இல்லாவிட்டால் உன்னால் எதையும் பெறமுடியாது' என்பது சீனப் பழமொழி. எதைப் பெறவேண்டும் என்பதை சீனாதான் முடிவு செய்யவேண்டும்



source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரன் எங்கே? குழப்பம்!


 

குழப்பமான செய்திகளால் உண்மை மறைக்கப்படுகிறதா..
பிரபாகரன் தொடர்பான உண்மைகள் வெடித்துப் பறக்கும்நாட்கள் எண்ணப்படுகின்றன..

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைர் வேபிரபாகரனின்மரணச்சான்றிதழை சிறீலங்கா அரசு தமக்கு தரவில்லைஎன்று நேற்று சி.பி. வெளியிட்ட தகவல் உலகநாடுகளில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இன்று அதற்கு எதிர் மாறாக .சிதம்பரம் இன்றுவெளியிட்ட அறிக்கையில் மரணச்சான்றிதழ் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளார்ஆகவே இந்த விவகாரத்தில் இப்போது இந்திய அதிகார வர்க்கமேகுழம்பிப் போயிருப்பதைக் காண முடிகிறதுஅல்லது குழப்பமான நிலையை உருவாக்கஇப்படிக் கூறப்பட்டதா என்பதும் சிந்திப்பதற்குரியதே.

பிரபாகரன் உயிருடன் இருந்தால் சி.பி.சொல்லியதுதானே என்று சமாளிக்க முடியும்,இல்லையாயின் சிதம்பரம் சொல்லிவிட்டாரேஎன்று கூற முடியும்இரு தலைக்கொள்ளியெறும்பு போல இந்த விவகாரம்இந்திய இலங்கை அரசுகளை ஆட்டிப்படைக்கின்றன.

சில இரகசியங்களை வெளியிடுவேன்,உயிருக்கு பயப்பட மாட்டேன் என்று சரத்பொன்சேகா குறிப்பிட்டது பலத்தசந்தேகங்களை உருவாக்கியுள்ளதுஇந்தநிலையில் குழப்பமான அறிக்கைகளே உண்மைக்கும் பொய்க்கும் பேதம் காண முடியாதசூழலை உருவாக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இது கூறப்பட்டதா என்பதும்சிந்தையைத் தூண்டுகிறதுஇது குறித்து இன்று வெளியான செய்தி

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பாசிதம்பரம்இன்று தெரிவித்துள்ளதாக ' ஹிந்துசெய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐயின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச்சான்றிதழுக்காகத் தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின்தலைவர் வே.பிரபாகரன் கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனானஇறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வேர்ட் டிப்ஸ், டிபஸ், டிப்ஸ்

 
 

 கீழே வேர்ட் புரோகிராமில் நாம் எளிதாகவும் அடிக்கடியும் பயன்படுத்தக் கூடிய சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திடவும். ஆனால் சொல்லை அடுத்துள்ள வாக்கியக் குறிகள் தேர்ந்தெடுக்கப்படமாட்டாது.
ஒரு வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு கிளிக் செய்திடவும். வாக்கியம் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட அந்த பாராவில் எங்கேனும் கர்சரை வைத்து மூன்று முறை கிளிக் செய்திடவும்.
வேர்டில் பேக் ஸ்பேஸ் (Backspace)அழுத்தினால் ஒரு எழுத்து அழியும். கண்ட்ரோல் + பேக் ஸ்பேஸ் (Ctrl+ Backspace) அழுத்தினால் ஒரு சொல் அழியும்.
மேல் அம்புக் குறி அழுத்தினால் ஒவ்வொரு வரியாக மேலே செல்லலாம். கண்ட்ரோல் + மேல் அம்புக் குறியினை அழுத்தினால் ஒவ்வொரு பாராவாக மேலே தாவலாம். இதே போல கண்ட்ரோல் + ஷிப்ட்+மேல் ஆரோ அழுத்தினால் ஒரு பாரா முழுவதும் செலக்ட் செய்யப்படும். 
புதிய சொல் பெற: நீங்கள் ஏற்படுத்திய டாகுமெண்ட்களில் ஒரே சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அல்லது ஏதேனும் ஒரு சொல் அதில் இடம் பெறுவது உங்களுக்குச் சரியில்லை எனத் தோன்றுகிறதா? குறிப்பிட்ட அந்த சொல் தரும் பொருளை ஒத்த வேறு சொல் பெற, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் குதூணணிணதூட்ண் சினானிம்ஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால், அந்த சொல்லுக்கான பொருள் தரும் வேறு சொல் பட்டியல் ஒன்று கிடைக்கலாம்.



டாகுமெண்ட் பக்கம் ஒன்றுக்கு பார்டர் அமைக்க வேண்டுமா?
பார்மட் மெனு திறக்கவும். பார்டர்ஸ் அன்ட் ஷேடிங் (Borders and Shading)  என்பதைக் கிளிக் செய்திடவும். அதில் பேஜ் பார்டர் (Page Border)  என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும். உங்களுக்குப் பிடித்த பார்டரைக் கிளிக் செய்தால் பார்டர் அமைக்கப்படும். இதற்கு ரெடிமேட் ஆக இன்னொரு வழியும் உள்ளது. இந்த டூல்பாரினை மெனு பாருடன் வைத்துக் கொண்டால், நேரடியாக பிடித்த பார்டரில் கிளிக் செய்து பெறலாம். இந்த பார்டர்கள் அடங்கிய ஐகான் ஆல் பார்டர்ஸ் (All Borders) என்ற தலைப்புடன் குறுக்குக் கோடு போட்ட சிறிய கட்டம் கொண்ட ஐகானாகக் காட்சி அளிக்கும்.
டாகுமெண்ட்களுக்கிடையே செல்ல: பல டாகுமெண்ட்களைத் திறந்து இயக்கிக் கொண்டிருக்கீறீர்களா? அடுத்த டாகுமெண்ட் செல்ல கண்ட்ரோல் + எப்6 (Ctrl+F6) அழுத்தவும். பின்னால் உள்ள டாகுமெண்ட் பெற வேன்டுமா? கண்ட்ரோல் + ஷிப்ட்+ எப்6 (Ctrl+Shift+F6)  அழுத்தவும். வேகமாக ஒரு பக்கத்திற்குச் செல்ல கோ டு (Go To)  டூல் பார் உதவும். இந்தக் கட்டளை பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace)என்பதில் கிடைக்கும். இதனை வெகு வேகமாகப் பெற ஸ்டேட்டஸ் பாரினைக் கண்டறியவும். டாகுமெண்ட் கீழாக பேஜ் நம்பர், செக்ஷன், மொத்த பக்கங்களில் இது எத்தனாவது பக்கம், லைன், காலம் எனக் குறிப்புகள் தரப்பட்டுள்ளதல்லவா! அதுதான் ஸ்டேட்டஸ் பார். இதன் இடது ஓரமாகக் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்திடுங்கள். உடனே பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டம் கிடைக்கும். அதுவும் கோடு டேப் அழுத்திய நிலையில் கிடைக்கும். இதில் எந்தப் பக்கம் செல்ல வேண்டுமோ அந்த எண்ணைத் தரலாம். அல்லது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்திலிருந்து நான்கு பக்கங்கள் தள்ளிச் செல்ல வேண்டும் என்றால் +4 எனக் கொடுக்கலாம். நான்கு பக்கங்களுக்கு முன் செல்ல வேண்டும் என்றால் – 4 எனத் தரலாம். மேலும் பல வசதிகள் இருப்பதை இதில் காணலாம்.
புதிய ஸ்டைல் பிடிக்கிறதா? நீங்கள் உருவாக்கிய டாகுமெண்ட்டில் ஒரு பாராவில் அமைத்த பாண்ட், அதன் பார்மட் மற்றும் மொத்த பாரா உங்களுக்கு மிகப் பிடித்துவிட்டதா? இந்த ஸ்டைலை பின் நாளில் பயன்படுத்த எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனைத் தேர்ந்தெடுத்து பார்மட்டிங் டூல் பாரினைக்கிளிக் செய்திடவும். அதில் ஸ்டைல்ஸ் அண்ட் பார்மட்டிங் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஸ்டைல்ஸ் அண்ட் பார்மட்டிங் கட்டத்தில் நியூ ஸ்டைல் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அடுத்து நியூ ஸ்டைல் என்ற கட்டம் கிடைக்கும். இதில் இதற்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்து வைக்கலாம். பின் நாளில் ஏதேனும் ஒரு பாராவிற்கு இந்த ஸ்டைலை அமைக்க வேண்டும் என எண்ணினால் அதனைத் தேர்ந்தெடுத்து, புதிய ஸ்டைல் பெயர் உள்ள கட்டத்தைக் கிளிக் செய்திட வேண்டும்.
மொத்தமாக சேவ் செய்திட: பல டாகுமெண்ட்களை எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். வேலை முடிந்துவிட்டது. மொத்தமாக அனைத்தையும் சேவ் செய்து குளோஸ் செய்திட வேண்டும். ஷிப்ட் அழுத்தியவாறு பைல் மெனு கிளிக் செய்திடவும். சேவ் ஆல், குளோஸ் ஆல் என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இவற்றில் கிளிக் செய்து பைல்களை சேவ் செய்து குளோஸ் செய்திடவும்.
எனக்கு வேண்டாம் இந்த கோடு:
வேர்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஹைபன்களை டைப் செய்கையில் அது நீண்ட படுக்கைக் கோடாக மாறிவிடும். இதில் என்ன பிரச்னை என்றால் இதனை பேக் ஸ்பேஸ் அல்லது வேறு கீகளால் அழிக்க முடியாது. அப்படியே நிற்கும். ஏனென்றால் அது வேர்டைப் பொறுத்தவரை ஒரு பார்டர் லைன். இதனை நீக்க வேண்டுமென்றால் அந்த கோட்டிற்கு மேலாக இடது தொடக்கத்தில் கர்சரை வைத்துப் பின்Format | Borders and Shading எனச் சென்று None  என்பதனை செலக்ட் செய்திடவும். கோடு நீங்கிவிடும். மீண்டும் இந்த பிரச்னை வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். Tools  மெனுவில்AutoCorrect Options  தேர்ந்தெடுக்கவும். விரியும் விண்டோவில் AutoFormat As You Type என்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில் Apply as you type என்ற பிரிவில் Border Lines என்பதற்கு அருகில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் அடிக்கும் ஹைபன்கள் அப்படியேதான் இருக்கும். பார்டர் லைனாக மாறாது.
டாகுமெண்ட்டில் எத்தனை சொற்கள்:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் எத்தனை சொற்கள் உள்ளன என்று கண்டறிய வேர்ட் கவுன்ட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. முழு டாகுமெண்ட் அல்லது குறிப்பிட்ட பகுதியினைத் தேர்ந்தெடுத்து, டூல்ஸ் மெனுவில் உள்ள வேர்ட் கவுண்ட் என்ற பிரிவில் கிளிக் செய்தால், எத்தனை சொற்கள் என்ற தகவலும், சில கூடுதல் தகவல்களும் கிடைக்கும். ஆனால் இந்த வேலை எதுவும் மேற்கொள்ளாமல், அந்த டாகுமெண்ட்டிலேயே எத்தனை சொற்கள் உள்ளன என்று வேர்ட் புரோகிராமைத் தானாகக் காட்டும்படி செய்திடலாம். நாம் எதனையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. நாம் எடிட் செய்து கொண்டிருந்தாலும், டாகுமெண்ட்டில் அமையும் சொற்களைப் பின்னணியில் எண்ணி, டாகுமெண்ட்டிலேயே நாம் குறிப்பிடும் இடத்தில் காட்டும். இதற்கான செட்டிங்ஸ் வேலையைப் பார்க்கலாம்.
1. நீங்கள் எங்கு இந்த சொற்கள் எண்ணிக்கை வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை வைத்திடவும்.
2. பின் கண்ட்ரோல் +எப்9 அழுத்தவும். இப்போது வளைவுக்குறி உள்ள அடைப்பு ஏற்படும். இந்த அடைப்புக் குறிகளுக்குள் NumWords  என டைப் செய்திடவும்.
3. இனி மீண்டும் எப்9 அழுத்தினால், அடைப்புக் குறிகள் நீக்கப்பட்டு, உங்கள் டாகுமெண்ட்டில் உள்ள சொற்களின் எண்ணிக்கை காட்டப்படும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ANIL KANTS TESTIMONY-அனில்கண்ட் சாட்சி

StumbleUpon.com Read more...

விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்''

மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி!


''ஆத்திரம்-அவசரத்துக்கு ஓடி வர அக்கம்பக்கம் ஆட்கள் யாரும் கிடையாது; மின்சாரம், தொலைபேசி கிடையாது; திரும்பிய பக்கமெல்லாம் வெறும் பாறை, புதர் இவை மட்டும்தான். இப்படிப்பட்ட பகுதியில் இந்த இடத்தை நாங்கள் வாங்கியபோது... எங்களைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். 'உங்களுக்கு ஏதும் கிறுக்கு பிடித்துவிட்டதா?' என்று நேரடியாகவே சிலர் கேட்டார்கள். ஆனால், 'இந்த மண்ணை மாற்ற முடியும்... இங்கே வாழ முடியும்' என்று என் மனைவி ஜூலி உறுதியாக நம்பினாள்.

அதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் பதினான்கு ஆண்டுகள் பாடுபட்டதற்கான பலனாக... இன்று நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மாம்பழம் என்று விளைந்து செழித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். மாட்டுச்சாணம், அதன் சிறுநீர் இவைதான் எங்கள் பயிர்களுக்கான டானிக். இதற்காகவே நாலஞ்சு பசுமாடுகளை வளர்க்குறோம்''

- நம் கண்களுக்கும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியபடி பேசுகிறார் விவேக். 

விதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்புச் சக்கரத்தை வேகமாகச் சுழற்றிக் கொண்டிருக்கும் இந்தத் தம்பதியின் வெற்றிக் கதையைக் கேட்டால்... 'அம்மாடியோவ்' என்று ஆச்சர்யத்தின் விளிம்புக்குச் செல்லாமல் இருக்க முடியாது உங்களால்!

மௌனம் பேசியதே...!

பொருளாதாரம் படித்தவர் விவேக். சமூகவியல் படித்தவர் ஜூலி. காதலால் கட்டுண்டு திருமணம் புரிந்த இத்தம்பதி, நவநாகரிக டெல்லியில் வாழ்க்கையை ஓட்டத் துவங்கியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கை நகர மறுத்துவிட்டது. ஆம், புகை கக்கும் கார்கள், மரணத்துக்குத் தோரணம் கட்டும் 'துரித உணவு', சக மனிதன் மேல் பற்றில்லாத சூழல் என்று நரகத்தனமாகிவிட்ட நகர நாகரிகம் இவர்களை ரொம்பவே உரசிப் பார்க்க... மௌனம் உரக்க பேசும் வனம் நோக்கி பயணப் பட்டிருக்கிறார்கள். இறுதியாக இவர்கள் வந்து சேர்ந்த இடம்... கர்நாடக மாநிலம் நுகூ (ழிuரீu) அணையை ஒட்டிய ஹல்சூர். 'இனி, இயற்கை விவசாயம்தான் வாழ்க்கை' என்று மண்ணின் மீது சத்தியம் செய்துவிட்டு, கையில் தூக்கிய மண்வெட்டி... இன்று வரை இயங்கிக் கொண்டே இருக்க... வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டே இருக்கிறது.

'ஆற்று நிறைய தண்ணீர் இருந்தாலும், அள்ளிதான் குடிக்க வேண்டும்!'

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் எனும் சிறுநகரிலிருந்து ஐம்பத்தி இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது ஹல்சூர். இங்கு நுகூ அணையைத் தொட்டபடி சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்தில் நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மா, தென்னை என்று முப்பது வகையான பயிர்களை கடுகளவு ரசாயனம் கூட பட்டுவிடாமல் பக்குவமாக சாகுபடி செய்து கொண்டிருக்கிறது, விவேக்-ஜூலி தம்பதி.

அணையிலிருந்து வெள்ளம் போல நீர் ஓடி வந்தாலும், பாதிப் பயிர்களுக்கு சொட்டுநீர் மீதிப் பயிர்களுக்கு தெளிப்புநீர் என்று தண்ணீரை சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். கோடையில் நீர்வரத்து குறைந்து விடுவதோடு, மின்வெட்டும் அடிக்கடி வந்து சேர்ந்து படுத்தி எடுத்துவிடும் பகுதி இது. அதனால், கிடைக்கும் நான்கைந்து மணி நேர மின்சாரத்தைப் பயன்படுத்தியே.... அத்தனை பயிர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் நீர் பாய்ச்சி விடுவார்களாம்.

விளை பொருளெல்லாம் விலை பொருளாக...!

விளைவிக்கும் பொருட்களில் பெரும்பாலானவற்றை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பதுதான் இவர்களின் வெற்றிப்பாட்டை!

மாங்காய், தக்காளி, பூண்டு, வெங்காயம் என்று பல பொருட்கள் ஊறுகாய்களாக மாறுகின்றன; கரும்பு, ஆலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே வெல்லமாக மாறுகிறது; நெல், இங்கேயே அரிசியாகி கடைகளுக்குச் செல்கிறது. பால், பால்கோவாவாக... பாலாடைக் கட்டியாக மாறுகிறது; தேங்காய், எண்ணெயாக வடிவெடுக்கிறது!

''இப்படி எல்லாவற்றையும் மதிப்புக்கூட்டி, நேரடியாக விற்பனை செய்வதால், எங்கள் உழைப்பு கொஞ்சமும் வீணாகாமல் வருமானமாக திரும்பி வந்து கொண்டே இருக்கிறது.

நெல்லை அப்படியே விற்றால், கிலோவுக்கு பன்னிரண்டு ரூபாய்தான் கிடைக்கும். ஆனால், அரிசியாக விற்கும்போது கிலோ நாற்பது ரூபாய்.

சூரியகாந்தி விதை ஒரு கிலோ 25 ரூபாய். எண்ணெயாக விற்கும்போது ஒரு லிட்டர் அறுபத்தைந்து ரூபாய்.

ராகியின் விலை கிலோ 16 ரூபாய். மால்ட் தயாரித்து விற்றால், கிலோ அறுபத்தைந்து ரூபாய்.

கரும்பு கிலோ 2 ரூபாய். வெல்லமாக மாற்றும்போது கிலோ நாற்பது ரூபாய்.

பால் ஒரு லிட்டர் இருபது ரூபாய். பாலாடைக் கட்டியாக (சீஸ்) விற்கும்போது கிலோ ஆயிரம் ரூபாய்.

எலுமிச்சை, நெல்லி, கேரட், பீட்ரூட் என அனைத்தும் ஊறுகாய், ஜாம் என்று பல வடிவங்களாக உருமாறுகின்றன.

இயற்கை முறையில் விளைந்த பருத்தியை நூலாக்கி, வீட்டிலேயே இயற்கை சாயம் கொடுத்து விற்பனை செய்கிறோம். இந்தச் சாயத்தையும் பழங்கள் மற்றும்காய்கறிகளிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக... மாதுளம் பழத்தின் மேற்புறத் தோலில் இருந்து மஞ்சள் மற்றும் ரோஸ் நிற சாயங்களை உருவாக்குகிறோம். இயற்கைப் பருத்தி மற்றும் இயற்கைச் சாயத்துடன் உருவாகும் எங்களின் நூலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நம்முடைய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, கூடுதலாக 30% முதல் 40% வரை லாபம் பார்க்க முடியும்'' என்று மகிழ்ச்சி பொங்கிய விவேக், தொடர்ந்தார்.

அரசையே அசரவைத்த இயற்கை..!

''ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் உடலுக்கு எவ்வளவு கேடு ஏற்படுகிறதோ... அதே அளவுக்கான கேடு, நாம் உடுத்தும் துணியிலும் இருக்கிறது. ஒரு வெள்ளைச் சட்டைக்கு குறைந்தது நூற்றி ஐம்பது கிராம் ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது (சட்டையைத் தயாரிக்கத் தேவையான பஞ்சை உற்பத்தி செய்வதற்கு). இதிலிருந்து, பருத்தி விவசாயம் எந்தளவுக்கு ரசாயனத்தால் சீரழிந்து கிடக்கிறது என யோசித்துப் பாருங்கள்?'' என்று சமூக அக்கறையோடு கேட்ட விவேக், கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடவில்லை. அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றைம்பது விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'இயற்கை விவசாயிகள் சங்கம்' என்ற ஒன்றை ஏற்படுத்தி, அவர்களையும் இயற்கைப் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார்.

''எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தைப் பார்த்த பின், இந்தப் பகுதி விவசாயிகள் தாங்களாகவே எங்களிடம் வந்து, 'இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தரச் சொன்னார்கள். இதையடுத்து, அவர்களை ஒருங்கிணைத்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் மூலமாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி, ரசாயனக் கொடுமையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு, கர்நாடக அரசின் கவனத்தையும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இயற்கை விவசாயத்தின் மேன்மையைப் புரிந்துகொண்ட கர்நாடக மாநில அரசு, நூறு கோடி ரூபாயை இயற்கை விவசாய மேம்பாட்டுக்காக ஒதுக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படவிருக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி, கர்நாடக மாநிலம் முழுமையும் இயற்கை விவசாய பூமியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு'' என்று சிரிக்கும் விவேக்,

''இந்த நாற்பத்தைந்து ஏக்கரும் இயற்கை விவசாயத்தில் கொடிகட்டி பறந்து, பலருக்கும் வழிகாட்டியாக மாறியதில், என் மனைவியின் உழைப்பும் அளவிட முடியாதது'' என்றபடியே ஜூலியை நோக்கி கை நீட்டினார்.

களை பறித்தல் முதல் காளை வளர்ப்பு வரை அனைத்து வேலைகளையும் செய்யும் ஜூலி, விதவிதமான மூலிகைத் தாவரங்களைப் பயிரிட்டிருப்பதுடன், மூலிகை வைத்தியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

''தமிழ்நாடு அருமையான விவசாய பூமி. அந்த மண்ணில் விளையும் பொருட்களுக்கு ஏற்ற மாதிரியான உணவுப் பழக்கத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல், சம்பந்தமே இல்லாத பயிர்களையெல்லாம் விளைவிக்க முயற்சிப்பது, அதையும் ரசாயன அடிப்படையில செய்வது என்று தடம் மாறி போய்க் கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள்.

விவசாயம் ஒரு தொழில் இல்லை. வாழ்க்கை, கலாச்சாரம் எல்லாமும் அதுதான். இதை ஏன் புரிந்துகொள்ள நாம் மறுக்கவேண்டும். அரிசியை பாலீஷ் செய்து சாப்பிடுவதில் ஆரம்பித்து, மரபணு மாற்று விதை ஆராய்ச்சிக்கு இடம் கொடுப்பது வரை அனைத்துவித தவறான செயல்களுக்கும் தமிழகம் துணைபோவது... இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம்தான். இரண்டு ஏக்கர் பூமி இருந்தாலே இன்று ராஜா மாதிரி வாழலாம். இயற்கை முறையில் விவசாயத்தை செய்யும்போது நீங்கள் ராஜாவுக்கே ராஜாதான். பூச்சி, நோய் என்று எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே பாதித்தாலும் அதை நோயாகப் பாக்காதீர்கள். பயிர் தன்னுடைய வலுவை கொஞ்சம் இழந்துவிட்டதாக நினைத்து, அதற்கு வலுவை ஊட்டுங்கள். அதற்காகத்தான் இருக்கிறது. பசுஞ்சாணம். அதற்கு நிகரான பூச்சிக் கொல்லி எதுவுமில்லை. அதை வைத்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் தயாரித்துப் பயன்படுத்தலாம்'' என்று ஒரு விரிவுரையாளராக பேசிய ஜூலி,

''பருத்தியில் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க அதற்கு நடுவில் வெண்டைச் செடியை சிறிய அளவுல பயிரிட்டாலே போதும். பருத்தியைத் தாக்க நினைக்கும் பூச்சிகள் வெண்டையைச் சூழ்ந்துகொண்டுவிடும். அதை எளிதாக நாம் அகற்றிவிடமுடியும்'' என்று போகிறபோக்கில் ஒரு தொழில்நுட்பத்தையும் சொல்லிவிட்டு,

''இங்கே விளையும் பொருட்களில் 20% எங்களின் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. 70% விற்பனைக்குப் போகிறது. மீதி 10% யானை, காட்டெருமை, பன்றி, பறவைகள் என்று வனவிலங்குகளுக்காக விட்டு விடுகிறோம். ஏன் என்றால்... இது விலங்குகளின் பூமி. நாம்தான் இங்கே வந்து ஆக்கிரமித்துக் குடியிருக்கிறோம். அதனால், அவர்களுடைய பங்கினை கொடுக்க வேண்டாமா?'' என்று உயிர் தர்மம் பேசி வியக்க வைத்தார்!

விளைவிப்பதோடு நின்றுவிடாமல், (விலை) மதிப்பையும் கூட்டும்போதுதான்... பெருவெற்றி என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கும் உதாரணத் தம்பதியை வியந்தபடியே விடைபெற்றோம்!

பேர் சொல்லும் பிள்ளைகள்!

விவேக்-ஜூலி தம்பதிக்கு கபீர், ஆஸாத் என்று இரண்டு மகன்கள். இருவரின் பள்ளிக்கூடமே... அவர்களுடைய நாற்பத்தைந்து ஏக்கர் தோட்டம்தான். ஆம், அடிப்படை எழுத்துக்களையும், சில பல வார்த்தைகளையும் தெரிந்து கொள்வதற்காக தொடக்கப் பள்ளி வரை சென்றதோடு சரி, மற்றதெல்லாமே வீட்டிலும் தோட்டத்திலும்தான். அதிகாலையில் எழுபவர்களுக்கு வயல் வேலையோடு பல துறை பற்றிய அறிவையும் கொடுக்கிறார்கள் அப்பா-அம்மா இருவரும். இப்போது கல்லூரி வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கபீர்-ஆஸாத் இருவருக்குமே கோழித்தீவன தயாரிப்பு துவங்கி இன்டர்-நெட் வரை அத்தனையும் அத்துப்படி. இந்த இருவரும் சேர்ந்தே நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்துக்கும் வேலியை உருவாக்கி இருக்கிறார்கள். டிராக்டரை கழற்றி மாட்டுகிறார்கள். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் வரும் யானை, காட்டுப்பன்றிகளை விரட்ட காவல் இருக்கிறார்கள்.





source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

படுகொலைகளை நேரில்பார்த்த ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

 

சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியலாளரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் மேற்படி ஊடகவியலாளரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனைஅடுத்து, குறிப்பிட்ட ஊடகவியலாளரை தேடி அனுப்பப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழுவினர் அவரை கடந்த வெள்ளி இரவு கைது செய்துள்ளனர். 

பொன்சேகா தலைமையிலான குழுவினரின் பேச்சாளராக கடமையாற்றும் பொறுப்பு, பொன்சேகா தரப்பினரால் இந்த ஒரு ஊடகவியலாளருக்கே வழங்கப்பட்டிருந்தது என்று குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா இராணுவத்தின் 58 டிவிஷன் படையினரிடம் வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் உட்பட நடேசனின் மனைவி உட்பட பலர் படுகோலை செய்யப்பட்டதை குறிப்பிட்ட சிங்கள ஊடகவியலாளர் நேரில் கண்டதாகவும் சரணடைவதற்கு வரும் விடுதலை புலிகள் எவரையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று டிவிஷன் தளபதி சவீந்திர டி சில்வாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தொலைபேசியில் அறிவுறுத்தியிருந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP