சமீபத்திய பதிவுகள்

மேகத்தில் தோன்றிய இயேசு கிறிஸ்து-வீடியோ

>> Wednesday, October 29, 2008

கடவுள் நம்பிக்கை என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டியதுதான்.ஆனால் அது மூட நம்பிக்கையாகும் பொழுது அது நகைப்புக்குரியதாக மாறிவிடுகிறது.மேகக்கூட்டங்கள் ஏதேச்சையாக ஒன்று சேர்ந்து அவை ஒரு மனிதன் போல் வடிவமாக நம் கண்களுக்கு தெரியலாம்.ஆனால் அதை இயேசு கிறிஸ்துவின் உருவம் என்று சொல்லுவது பால்குடிக்கும் கடவுள்கள் போன்ற கற்பனையாக மாறிவிடுகிறது.

இயேசு மனித அவதாரம் எடுத்தார் என்பது வேதாகம படிப்பினை.ஆனால் அவர் போல் உள்ள அனைத்து மனித உருவங்களும் இயேசுவாக முடியாது.

ஆஸ்திரேலியா சிட்னியில் இயேசு கிறிஸ்துவின் உருவம் என்று சொல்லப்படுகிற வீடியோ




StumbleUpon.com Read more...

கோட்சே காலம்முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்

 
 





சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை! வேதனை!! வெட்கம்!!

இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!

ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...

ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!

இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.

பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.

காந்தியாரைக் கொன்ற கோட்சே!

1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?

காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.


சதுமுகையில்...

2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.

ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.

தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).

தென்காசியில்...


3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.

இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!


இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.

குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

கான்பூரில் நடந்தது என்ன?

4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.

பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.

மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.

வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!

வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.

மகாராட்டிரத்தில்...


5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).

பெண் சாமியார் சிக்கினார்

6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!

படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் (ABVP) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.

குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.

பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!

மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.

இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.

சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!

சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.

நடவடிக்கைகள் தேவை


மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.


------------------- "விடுதலை" -28-10-2008

StumbleUpon.com Read more...

இந்தியாவில் ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு ஹிந்துவே.


இந்தியாவில் ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு ஹிந்துவே. கட்டுரையாக்கம்: இங்கிர்ட் அல்புக்யூர்க் ஆன்மீகவாதிகள் நம்பிக்கை கொள்ளவேண்டியது இயேசுவில் மட்டுமே. அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது இயேசு அவர்களுக்காக என்ன செய்தார் என்பதையே. மாறாக கிறித்தவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்யவில்லை என்பதையல்ல.

(மனிதர்களை),ஆலயங்களை, வாழ்விடங்களை, பாதைகளை தகர்ப்பதும் எரிப்பதும் (ஆன்மீகவாதிக்கு) தேவையற்ற கோபவெளிப்பாடுகள். ஒருவகையில் இவை அர்த்தமற்ற போர்களே.ஏனெனில் இந்துத்துவம், கிறித்தவம் ஆகியவை மதங்கள் அல்ல; அவை ஒரு வாழ்க்கை முறைகளே.

ஹிந்து என்பது சிந்து என்ற சொல்லில் இருந்து வந்த ஒன்று. சிந்து என்பது ஒரு நதியின் பெயர். சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் (அந்நாளில்) ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆக ஹிந்து என்பது ஒரு புவியியல் சார்ந்த வார்த்தையன்றி அது ஒரு மதமல்ல. ஹிந்துக்களின் மதம் "சனாதன தர்மம்" அதாவது "பழமையான வாழ்வியல் முறை'. இந்த சனாதன தர்மம் ஒருவனின் நம்பிக்கை,கடமைகள், அவனது தொழில் ஆகியவற்றின் கலவையாக இருந்தது.ஹிந்துக்கள் அவர்களது வாழ்க்கயின் நோக்கத்தை தேடுவதும் (உணர்ந்ததைக்) சாதகம் புரிய முயற்சி செய்வதுமாக இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்தோர் அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், ஹிந்துவாகவே இருந்தார்கள்

மக்கள் உண்மயாகக் கடவுளைத் தேடுகிறார்கள்; அவர்களாகக் கடவுளைக் கண்டடைய முடியாதபோது, மக்கள் தங்களை கடவுளிடம் இட்டுச் செல்ல குருக்களைத் தேடுகிறார்கள். 'குரு' என்பதன் அர்த்தம் மக்களை இருளில் இருந்து ஒளிக்குக் கூட்டிச் செல்பவர் என்பதே. ஒருவர் கிறித்துவை அறிந்து கொள்வதைப் பற்றிப் (கிறித்துவைப் பற்றி அறிந்து கொள்வதல்ல) பேசும் பொழுது, அது கிறித்துவுடனான ஆழ்ந்த தனித்த ஒரு உறவினைப் பற்றியது; அது கிறித்துவை தன் மீட்பராக (இரட்சகராக) ஏற்றுக் கொள்வதும், அன்பையும் மன்னிப்பையும் மைய்யமாகக் கொண்ட அவருடைய கோட்பாடுகளுக்கேற்ப வாழ்வது; இந்த வாழ்முறை கண்ணெதிரில் காணும் கிறித்தவ கொள்கைகள், வழிபாட்டுமுறைகள், அதற்கான கட்டிடங்கள் ஆகியவற்றோடு மிகச் சிறிய அளவிலே ஆன தொடர்புடையது. ஒரு கிறித்தவ ஆலயத்தை இடிப்பது என்பது துயரச் சம்பவம்; ஆயினும் அது கிறித்துவை காயப்படுத்தி விடுவது ஆகாது.

இன்னும், கிறித்துவை அறியாமலே ஒருவன் கிறித்தவனாய் இருக்க வாய்ப்புண்டு. அதே போல் ஒரு ஹிந்துவாய் இருந்து கொண்டு கிறித்துவை அறிந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. முடிவாக, யார் கிறித்துவின் வழியில் உண்மையாய் நடப்பவர்கள்? கிறித்துவை அறிந்து கொண்டு ஆனால் கிறித்தவர்கள் என அறியப்பட விரும்பாத ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உண்டு. ஏனெனில் இந்த பதத்தினால் ஏற்றப்படும் கூடுதல் சுமை,கடந்த கால வலிகள், கிறித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் இந்திய மக்களிடத்தில் சுமத்தப்பட்ட வேதனையும் வெட்கமுமானவைகள் எனப் பல காரணங்கள்.

உண்மையில், ஒருமுறை மதமாற்றத்திற்கு மகாத்மா காந்தியிடம் அழைப்பு விடுத்தபோது அவர் சொன்னார்," என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல ஹிந்துவாக இருப்பதே, நல்ல கிறித்தவனாக இருக்கிறேன் என்பதே. கிறித்துவையும் அவர் போதனைகளையும் நம்புவதற்க்கும் (விசுவசிப்பதற்கும்)உங்கள் கோட்பாடுகளில் நான் சேர வேண்டும் என்பது எனக்கு அவசியமில்லை.

" அநேக கிறித்தவர்கள் நற்செய்தியை எப்படி அறிவிக்கப்பட விரும்பினாரோ, அப்படி அறிவிக்கத் தவறி விட்டனர் என்பது தெளிவாயினும், கிறித்து தன்னுடைய தெய்வீக மகிமையையும் வலிமையையும் வெளிப்படுத்த கிறித்தவர்களை மட்டுமே சார்ந்தவராயில்லை. ஆன்மீகவாதிகள் கிறித்துவில் நம்பிக்கை கொள்ளவேண்டும்; அவர் அவர்களுக்காய் என்ன செய்தார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, கிறித்தவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்பதால் அல்ல.

இன்றைய இந்தியாவில் நிலவும் குழப்பமான சூழலில், கிறித்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்கள், தங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புணர்வை, வன்முறையின் மூலமோ இன்னும் துன்புறுத்தலுக்கு தற்கையளிப்பதன் மூலமோ எதிர்கொள்ளப் போவதில்லை.ஆனால் அன்பின் செய்தியின் மூலம்,இந்த நற்செய்தியை(சுவிஷேசத்தை) ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வாக்குவதன் மூலம், கடந்த காலத்தில் செய்யப்பட்ட இழப்புகளை இல்லாமல் செய்வார்கள்.

அதே நேரத்தில்,இந்த நற்செய்திக்கு பதிலளிப்பது என்பது உண்மையைத் தேடுகின்ற ஹிந்துத்துவ தேடலுக்கு எதிரானதல்ல என்பதை ஒவ்வொரு ஹிந்துவும் உணர்ந்து கொள்ள முடியும். ஏனென்றால் நிறை உண்மையை பழமையான வேத காலத்திலிருந்தே தேடுபவர்களுக்கு, இயேசுவே கடவுள் நிலையின் முழுமையாயிருக்கிறார்.

அஸதோமா ஸாத் காம்யா (உண்மையற்றதிலிருந்து நிறை உண்மைக்கு என்னைக் கொண்டு செல்) இயேசு சொல்கிறார்: "நானே வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறேன்

" தமஸோமா ஜோதிர் காம்யா ( இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்லும்) இயேசு சொல்கிறார்: " நானே உலகின் ஒளி. என்னைப் பின்செல்பவன், ஒருபோதும் இருளில் நடவான். மாறாக வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பான்

" மிர்த்யோர்மா அமிர்தம் காம்யா ( இறப்பிலிருந்து இறவாமைக்கு என்னை இட்டுச் செல்லும்) இயேசு சொல்கிறார்: " நானே உயிர்ப்பும் வாழ்வுமாயிருக்கிறேன். என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பினும் வாழ்வான். என்னில் நம்பிக்கை கொண்டு, என்னுள் வாழ்பவன் ஒருபோதும் இறக்கமாட்டான்."


tamil source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=25726#25726



Every Christian in India is a 'Hindu'

By Ingrid Albuquerque
Spiritual people need to believe in Christ and accept Him for what He has done for them and not on what Christians do or do not do...


All this unnecessary furore over burning churches, buildings and bridges! It really is a battle of semantics because when you get down to it, neither Hinduism nor Christianity are religions — both are lifestyles.

The word Hindu comes from Sindu, which is the name for the River Indus. All those living east of the River Sindu were called Hindus. So the word Hindu is a geographical term, not a religious one. The actual religion of the Hindus is the Sanathana Dharma, which means 'the ancient way of life' — a combination of faith, duties and one's vocation. Hindus are required to find their purpose in life and pursue it forever. So in the strict sense of the term, as long as one lives in India and follows any religion of one's choice, one is still a Hindu.

People genuinely search for god, and when they cannot find god, they seek after gurus who will lead them to god. The word guru refers to a person who brings people from darkness to light. When a person talks about "knowing Christ" (not knowing about Christ), it is a deep and personal relationship with Jesus Christ, accepting Him as Saviour and living life according to His principles, which centre around love and forgiveness. The process has little in common with evident Christianity with its buildings, rites and rituals. To burn a church is a tragic act, however, it does not injure Christ.

Further, it is possible to be a Christian and not know Christ; it is equally possible to be a Hindu and know Christ. Ultimately, who is the true follower of Christ — the Hindu or the Christian? There are thousands of Indians who know Christ but do no want to be known as Christians because of the 'excess baggage' that accompanies the term, the pain of the past and the indignities that were imposed on human beings in India by people who called themselves Christian.

In fact, Mahatma Gandhi, when once asked to convert to Christianity, said, "To me, to be a good Hindu also means that I am a good Christian. There is no need for me to join your creed to be a believer in the beauty and teachings of Christ."

And yet, while it is apparent that most Christians have failed to deliver the gospel message as god intended them to, Christ does not depend on Christians to manifest His divine glory and power. Spiritual people need to believe in Christ and accept Him for what He has done for them and not on what Christians do or do not do.

The genuine follower of Christ in today's turbulent times in India will not meet the hostility through aggression or through a martyr complex, but will try to undo the damage of the past by living and manifesting the message of the gospel, which when translated into everyday life, is the message of love.

Meanwhile, every Hindu can also realise that responding to the gospel is not a contradiction to the Hindu search for truth because Jesus is the fulfilment of god, of seekers of the Truth right from ancient Vedic times:

Asatoma sat gamaya (Bring me from the unreal to the truth). Jesus says, "I am the way and the truth and the life";

Tamasoma jyotir gamaya (Bring me from darkness to light). Jesus says, "I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life";

Mrityorma amritam gamaya (Bring me from mortality to immortality). Jesus says, "I am the resurrection and the life. He who believes in me will live, even though he dies; and whoever lives and believes in me will never die."

http://www.deccanherald.com/Content/Sep192008/panorama2008091890745.asp

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP