சமீபத்திய பதிவுகள்

தமிழீழம் உருவாவதை ஒருபோதும் இந்திய விரும்பப்போவது இல்லை

>> Friday, September 25, 2009

தமிழீழம் உருவாவதை ஒருபோதும் இந்திய விரும்பப்போவது இல்லை: திருமா

புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் நிகழ்ச்சிக்காக தற்போது லண்டன் வருகை தந்திருக்கும் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் அதிர்வு இணையத்திற்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், தனித் தமிழீழ அரசு உருவாவதை இந்திய கொள்கை வகுப்பாளர்களும் மத்திய அரசும் ஒருபோதும் விரும்பாது எனக் கூறியுள்ளார். அவரின் நேர்காணல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.






source:athirvu

StumbleUpon.com Read more...

எங்களுக்கான போர்க் களம் திறந்தே உள்ளது!

 

ltte leaderமீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது.

சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது.

சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதிவரை அந்த மக்களை யாரும் காப்பாற்றாதபடி தடுத்து நின்ற, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டும், நச்சுக் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த சிங்கள அரசை சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டிலிருந்து இன்றுவரை காப்பாற்றிய இந்தியா தற்போது தர்மசங்கடத்தினுள் சிக்கித் தவிப்பதாகவே உணர முடிகின்றது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டும், அரவணைத்துச் செல்லும், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் அந்த நாட்டில் சமாதானப் பாதை திறக்கப்பட்டு விடும். தெற்காசியப் பிராந்தியத்தில் பதற்ற பூமியாக இருந்த இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட்டு விடும் என்று நம்பிய உலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் மாறாத இனவாதப் போக்கினால் கடும் அதிருப்தி கொண்டுள்ளன.

தமிழீழ மண்ணில் நடந்து முடிந்த தமிழின அழிப்பு யுத்தத்தை நெறிப்படுத்திய இந்தியாவை மீறிச் செல்ல முடியாத நிலையில் இருந்த மேற்குலக நாடுகள் தற்போது தமது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்தியாவுடனான தமது வர்த்தக நலன்களுக்கும் அப்பால், இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்த தமிழின அழிப்பு யுத்தம், அதன் பின்னர் சிங்கள அரசு தமிழர்களை நடாத்தும் விதம், தமிழர்கள்மீது தொடரும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் ஆகியவை பற்றிய தமது அக்கறைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
முள்ளிவாய்க்கால்வரை மௌனம் காத்த மேற்குலக ஊடகங்கள் தற்போது சிங்கள தேசத்தின் இனவாதப் போக்கினையும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளையுளும், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவதையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது மேற்குலகின் மன மாற்றத்தின் வெளிப்பாடே.

நடந்து முடிந்த யுத்தமும், தொடர்ந்து வரும் அவலங்களும் சிங்கள தேசத்திற்கும் மேற்குலகுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. சிறிலங்கா அரசு மேற்குலகின் கவலைகளையும் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல், அதனைச் சவாலாகவே எதிர் கொள்கின்றது. இதுவரை காமதேனுவாகவும், கற்பக தருவாகவும் இருந்து வாரி வழங்கிய மேற்குலக நாடுகளை எதிர் கொள்ள சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைச் சார்ந்து வருகின்றது. இதனை பிரான்சின் பிரபல்யமான 'லு மோந்' பத்திரிகையும் எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றியின் பின்னர் சிறிலங்கா மீதான இந்தியப் பிடியும் நழுவி வருகின்றது. கொடூரமான தமிழின அழிப்பு யுத்தத்திற்கு வக்கிரமான ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசால், ஈழத் தமிழர்கள் மீதான சிங்களக் கொடுமைகளை நிறைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. 'காந்தி தேசம்' என்ற அடையாளத்தைத் தொலைத்து, விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை போன இந்தியாவால் தொடர்ந்தும் சிங்கள தேசத்தின் இனவாத செயற்பாடுகளுடன் இணைந்து பயணிக்க முடியாது. இதனால், கெடுகுடியாகச் சொற்கேளாத சிறிலங்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல் மேற்குலகின் பாதைக்கு வழிவிட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளது.

வல்லமை கொண்ட உலக நாடுகளின் இந்த மனமாற்றம் தமிழீழமக்களின் வரமாக இப்போது அமைந்துள்ளது. தமிழீழ விடுதலையை நோக்கிய ஈழத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தர்ப்பம். இதனைக் கையாளும் திறமையிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. புலம் பெயர் தமிழ் மக்களால் மட்டுமே இந்த உலக நாடுகளின் மாற்றங்களுக்கூடாகப் பயணித்து வெற்றியை அடையலாம். அந்தக் கடமை புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

வன்னி அவலங்களுடன் திரண்டு எழுந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தம்மை மீண்டும் ஒரு போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் உள்ளது. காலத்தைத் தவற விடாமல் உறவுகளை இணைத்து போர்க்களத்தைத் திறக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

சிங்கள தேசத்திற்கு கைகளுக்கு எட்டாத, நெருங்க முடியாத தேசங்களில் வாழும் எமது பேரெழுச்சி மட்டுமே தமிழீழ மண்ணையும், மக்களையும் சிங்கள இனவாத கோரப் பிடியிலிருந்து காப்பாற்றும். வன்னி அவலங்களில் உலிமையோடும் உணர்வோடும் பங்கு கொண்டு, முன் நின்ற இளையோருக்கு இது சவாலான காலம். இந்தப் போர்க் களத்தின் வெற்றியும் இளையோர் கைகளில்தான் உள்ளது. தமிழீழ மக்களை மீட்க மீண்டும் போர்க்களம் நோக்கி வாருங்கள்! எங்கள் அணிதிரளல்கள் மூலம் நாங்கள் மீண்டும் பலம் பெறுவோம்!

எமது தலைவரின் கட்டளையும் இதுவே!


source:nerudal
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அழகு, கற்பு தன்மைக்கு ஏற்ப நான்காயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பெண்கள் விற்பனை

வேட்பாளரிடம் பெண் கேட்கும் வாக்காளர்கள்
 

சண்டிகார் : அரியானா மாநிலத்தில் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் பலர், தங்கள் மகனுக்கு வரன் பார்த்து தரும்படி வற்புறுத்துகின்றனர். அரியானாவில் பெண் சிசு கொலை அதிகம் காணப்பட்டதால், தற்போது அந்த மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 861 பெண்கள் என்ற விகிதத்தில் மக்கள் தொகை உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.



கிராமப்புறங்களில் வேட் பாளர்கள் ஓட்டு வேட்டையாடும் போது, வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்கள்,"உங்களுக்கு ஓட்டு போட வேண்டுமானால், என் மகனுக்கு பெண் பார்த்து தர வேண்டும்' என்ற நிபந்தனை விதிக்கின்றனர். வேட்பாளரும் வேறு வழியில்லாமல், "பார்ப்போம்' எனக் கூறி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அரியானா முதல்வர் புபிந்தர் ஹூடா குறிப்பிடுகையில், "மாநிலத்தில் பெண்கள் பற்றாக்குறையை போக்க வேண்டுமானால், சிசு கொலை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என்றார். அரியானாவில் வரன் கிடைக்காத ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை பயன்படுத்தி சில புரோக்கர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து பெண் தேடி தருகின்றனர். சில இடங்களில் அழகு, கற்பு தன்மைக்கு ஏற்ப நான்காயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பெண்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.


source:dinamalar


StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளை பிரிந்த யானை தனித்திருந்து சோகம் காக்கும் அவலம்

 

  
 
அரசியல் அனாதைகள் என்று  கேள்விப்பட்டிருப்பீர்கள். அடைக்கல அனாதைகள் என்பதை கேள்விப்பட்டிருக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தினால் ஒருவர், தான்  அன்போடு வளர்த்து வந்த விலங்கை  விட்டு சென்றால் அந்த வளர்ப்பு பிராணி அடைக்கல அனாதையாகிறது.  வேறு ஒருவரிடம் அடைக்க்லம் தேடி இப்படி அடைக்கல அனாதையாகி இருக்கிறது ஆஜானுபாகுவான 'பிடி' ஒன்று.

இந்த பெண் யானைக்கு பெயர் என்ன என்பது தெரியாவிட்டாலும் அது வளர்ந்த இடம் கண்ணி வெடிகள் காலைக் கவ்வும் யுத்த முனை. ஆம்... விடுதலைப்புலிகளின் மிச்ச சொச்சங்களில் இந்த பிடியும் ஒன்று...
 

இலங்கை கண்டி அருகே பின்னவாலா என்ற இடத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான அனாதை யானைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது.  80 க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தாயை பிரிந்த, காயமடைந்த, நோயுற்ற யானைகளுக்கு இந்த மையம் தான் புகலிடமாக உள்ளது.  உலகில் அனாதை யானைகளுக்கு என பிரத்யேகமான தனி புகலிடம் இது ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.  21 ஏக்கர் பரப்பளவு  உள்ள இந்த மையத்தில் யானைகள் சுதந்திரமாக் மேய்வதற்கான மேய்ச்சல் நிலம், தென்னந்தோப்பு, யானைகள் குளிக்க ஆறு உட்பட சகல வசதிகளும் உள்ளது. இதைத்தவிர யானைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை  ஒன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.  சுற்றுலாப் பயணிகள் யானைகளை பார்வையிட பிரத்யேக மாடமும் உள்ளது.

ஆயிரக்கணக்கான வெளினாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்த யானைகள் பராமரிப்பு மையத்தை பார்வையிட இலங்கை வருகின்றனர்.  இந்நிலையில் விடுதலைப்புலிகள் 18 ஆண்டுகளாக சீருடனும் சிறப்புடனும் வளர்த்து வந்த பெண் யானை (பிடி) ஒன்றை இலங்கை அரசு இங்கு வைத்து பராமரித்து வருகிறது.  
       
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் போர் நடந்த போது, வவுனியா பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கினர்.  வவுனியாவில் விடுதலைப்புலிகள்  விட்டு சென்ற ஆயுதங்கள் உட்பட பல உடமைகளை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். அதில் 18 வயதான இந்த பெண் யானையும் ஒன்று. 18 ஆண்டுகளுக்கு முன் தாயை  விட்டு தனியாக தவித்துக்  கொண்டிருந்த இந்தக் குட்டியானையை விடுதலைப்புலிகள் காப்பாற்றி பராமரித்து வந்துள்ளனர்.  போருக்குப்பின் அங்கேயே விட்டு சென்று விட்டனர்.  இந்த  யானையை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றி சில காலம் ராணுவ முகாமில் வைத்திருந்தனர்..  பின்னர் கண்டி சின்னவாலா மையத்தில் சேர்த்தனர். இங்கு 80க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தாலும்  இது  விடுதலைப்புலிகள்  வளர்த்த யானை என்பதால் சுற்றுலாப்பயணிகளிடையே தானி மரியாதை உள்ளது.  ஆனாலும் இந்த யானை இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களை நேரில் கண்டதாலோ என்னவோ மெளன சாட்சியமாக உள்ள  இந்த யானை மற்ற யானைகளுடன் சேராமல் சோகத்துடன் தனியே நின்று கொண்டிப்பது சுற்றுலாப்யணிகளிடையே ஒரு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மையத்திற்கு பயிற்சி பெற  சென்று வந்த முதுமலை கால்நடை டாக்டர் கலைவாணன் இந்த யானையை குறித்து  கூறியதாவது;  விடுதலைப்புலிகள் வளர்த்த யானை மக்களிடம் நெருங்கி பழகியுள்ளது. இதன் பெயர் தெரியவில்லை.  அங்குள்ள யானைக்கூட்டத்துடன் சேர்ந்து நிற்காமல் தனியாகவே உள்ளது.

மக்களிடம் அதிகமாக  பழகியுள்ளதால் இது பொது மக்களை பார்த்தவுடன் ஆர்வமாக சென்று நெருங்கி பழகுகிறது.  முகாமில் உள்ள யானைகளை விட இந்த யானையின் உடல் பலம் அதிகமாக உள்ளது.  இந்த யானையின் கண் பார்ப்பதற்கு அழகாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்


source:sangamamlive
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP