சமீபத்திய பதிவுகள்

ஆப்கானில் மனித வெடி குண்டு தாக்குதல்: ஆளுநர் பலி

>> Saturday, September 13, 2008

lankasri.comஆப்கானிஸ்தானில் மனித வெடி குண்டு தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் லோகர் மாகாணத்தின் ஆளுநர் அப்துல்லா வார்டக் கொல்லப்பட்டார். 

தலைநகர் காபூல் அருகே உள்ள லோகர் மாகாணத்தின் ஆளுநர் அப்துல்லா வார்டக் தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார். அப்போது வெளியில் காத்திருந்த மனித வெடி குண்டு தீவிரவாதி ஒருவன் காரின் அருகே சென்று தனது உடலில் கட்டி இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். 

இந்த பயங்கரத் தாக்குதலில் ஆளுர் அப்துல்லா வார்டக் சம்பவ இடத்திலேயே பலியானார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221324033&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் ரயில்கள் நேருக்குநேர் மோதல்: 15 பேர் பலி

lankasri.comஅமெரிக்காவில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகர் அருகே வெள்ளிக்கிழமை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் பலியாயினர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வென்டுரா கவுன்டி நகருக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், சாட்ஸ்வொர்த் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில், காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221324077&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

சிமி மீதான தடை நீடிப்பு

 

சிமி மீதான தடை நீடிப்பு
 
lankasri.comசிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பின் மீதான தடையை உச்சநீதிமன்றம் நேற்று காலவரையறையின்றி நீட்டித்து உத்தரவிட்டது.சிமி அமைப்பின் மீதான தடையை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணையை நேற்று ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், சிமி அமைப்பின் மீதான தடையை காலவரையறை யின்றி நீட்டித்து உத்தரவிட்டது. 

தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், "பயங்காரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் சிமி அமைப்பு தொடர்ந்து தடை செய்யபடாவிட்டால் அதன் உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டி இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.

சிமி அமைப்பின் மதவாத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளால் நாட்டின் அமைதி, ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிமி அமைப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த அமைப்பின்மீதான தடையை நீட்டிக்க முடியாது என்று தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

இதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இம்மாதம் 24ம் தேதி வரை சிமி மீதான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த தடை உத்தரவு முடிவதற்கு இன்னும் 14 நாட்கள் இருந்த நிலையில் மத்திய அரசின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரும் வரை சிமி மீதான தடை தொடரும் என்றும் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உத்தரவிட்டது.

 
 

StumbleUpon.com Read more...

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


 
3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
lankasri.comஹூஜி அமைப்பை சேர்ந்த முக்கிய கமாண்டர் உட்பட 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் சிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து 11வது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர் அங்கு சென்று பயங்கரவாதிகள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் ஹூஜி பயங்கரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் இரண்டு பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், 3வது நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

StumbleUpon.com Read more...

தில்லியில் தொடர் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி (புகைப்பட இணைப்பு)


 
lankasri.comதில்லியில் கரோல்பாக், கனாட் பிளேஸ் மற்றும் கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 18 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று மாலை சுமார் 6.15 மணியளவில் மக்கள் நெரிசல் மிகுந்த கரோல்பாக் சந்தைப் பகுதியில் முதல் குண்டு வெடித்தது. அது கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஆனால், சில நிமிடங்களிலேயே தில்லியின் மற்றொரு முக்கியப் பகுதியான கனாட் பிளேஸில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. 
தெற்கு தில்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியிலும் குண்டு வெடித்தது. 

இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் காயமடைந்துள்ளனர். 45 நிமிடங்களுக்குள் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளால் தில்லிவாழ் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்வதற்கு சற்றுமுன் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பு ஏற்பதாக சில பத்திரிகை அலுவலகங்களுக்கு சிமி தீவிரவாத இயக்கத்தின் ஒரு பிரிவான 'இந்திய முஜாஹிதீன்' மின்அஞ்சல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதே அமைப்பு தான் ஆமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கும் பொறுப்பு ஏற்பதாக கூறியிருந்தது. 

சிமி இயக்கத்தைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், தில்லி மற்றும் சென்னையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியா கேட் பகுதியில், வெடிக்காத குண்டு ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டது. மேலும், கனாட் பிளேஸ் பகுதியில் இரு குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில், இச்சம்பவத்தின் சாட்சி எனக் கருதப்படும் 12 வயது சிறுவனை போலீஸ�ர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

தில்லி தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

lankasri.com



lankasri.com



lankasri.com



lankasri.com



lankasri.com



lankasri.com

StumbleUpon.com Read more...

சொல்வது ஒன்று செய்வது ஒன்று - அதன் பெயர்தான் இஸ்லாம்!

 

சொல்வது ஒன்று செய்வது ஒன்று - அதன் பெயர்தான் இஸ்லாம்!





"குர்ஆன் வசனங்களை நீங்கள் தவறாக மேற்கோள் காட்டுகின்றீர்கள்"


குரானின் வன்முறை வசனங்கள் எந்தச் சூழலில் சொல்லப்பட்டது என்று பார்க்க வேண்டும் என்று தக்கியா செய்வது (தக்கியா = கடவுளுக்காக பொய் பேசுவது). அதே சமயம், குரான் 'என்றைக்குமான உலகத் திருமுறை', அது 'எல்லாக் காலத்திற்கும் பொருந்தும், அதன் படி நடக்க வேண்டும்' என்று சொல்வது.



"முஹமது அன்றைக்கு செய்தவை, அன்றைய சூழலின் தேவைகள்"

முஹம்மது அன்றைக்கு செய்த செயல்களை இன்றைக்கு நிலவும் சூழலோடு பொருத்தி மதிப்பிடக் கூடாது என்பது (உதாரணம் தன்னை கடவுளின் தூதன் என்று நம்பிய நண்பனின் ஆறு வயது மகளை கடவுள் சொன்னார் என்று நம்பவைத்து கல்யாணம் செய்து கொண்டது, பல பெண்களின் கணவர்களைக் கொன்று அவர்களை அடைந்தது, தன்னை கடவுளின் தூதன் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களை கொடூரமாக சித்தரவதை செய்து கொன்றது). இன்னொரு புறம், முஹம்மது நபி உலகிற்கான 'அழகிய எடுத்துக் காட்டு' என்று வாதிடுவது. முஹம்மதைப் போலவே இன்றும் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசுவது.



"இஸ்லாம் என்பது அமைதி மார்க்கம்"

இஸ்லாம் 'அமைதி மார்க்கம்' என்று பிரச்சாரம் செய்வது. ஆனால், இஸ்லாத்தை முஹமது துவங்கிய காலம் தொட்டு இன்று வரை எந்த இஸ்லாமிய சமூகமும் அமைதியாக வாழ்ந்ததில்லை; அமைதியாக வாழ்ந்த மற்ற சமூகங்களின் அமைதியை அழித்தது இஸ்லாம் தான் என்ற உண்மையை ஏற்க மறுப்பது.



இஸ்லாத்தை தோற்றுவித்த முஹமது விஷத்தால் செத்துப்போனார். அவரது மகள் பாத்திமா, மருமகன் அலி, பேரன் ஹூசைன், அவரைத் தொடர்ந்த கலீஃபாக்கள் (உமர், அலீ) போன்றவர்கள் எல்லோரும் இந்த வன்முறை மார்க்கத்தின் வன்முறையினால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை பார்க்க மறுப்பது.






"அந்தக் காலத்தில் நிகழ்ந்தவைகளை இன்றைக்கு சுட்டிக் காட்டக் கூடாது"



வந்தேறி முஸ்லீம் மன்னர்கள் செய்த தவறுக்கு இஸ்லாத்தைப் பொறுப்பாக்கக் கூடாது, 'முஸ்லீம் பெயர் தாங்கி தீவிரவாதிகள்' செய்வதை வைத்து அதுதான் இஸ்லாம் என்று சொல்லக் கூடாது என்று வாதிடுவது. ஆனால், அதற்கு நேர் மாறாக செயல்பட்டவர்களைக் கொண்டாடுவது (பாகிஸ்தான் தனது ஏவுகனைகளுக்கு கோரி, கஜினி, திப்பு பெயர்களை வைத்து சந்தோஷப்படுவது. கோயம்புத்தூரில் குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு பணம் கொடுப்பது, அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வது, அவர்களுக்காக முஸ்லீம் அரசியல் அமைப்புகள் போராட்டம் நடத்துவது, மதானியின் விடுதலைக்கு மசூதியில் பிரார்த்தனை நடத்துவது).



சுருக்கமாகச் சொன்னால், அன்றைக்கு முஹமதுவும், கலீஃபாக்களும், முஸ்லீம் மன்னர்களும் செய்த அதே செயல்களை இன்றைக்கு உலகெங்கும் முஸ்லீம் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற முஸ்லீம் நாடுகளும் செய்கின்றன, அவற்றிற்கு இஸ்லாமிய சமூகம் ஆதரவு தந்து அதே செயல்கள் இன்றும் தொடர்வதை ஆதரிக்கின்றன என்ற உண்மையை ஏற்க மறுப்பது.



"அவரவர் மார்க்கம் அவரவர்க்கு, மற்ற தெய்வங்களை நிந்திக்காதீர்கள் என்றெல்லாம் குரான் சொல்கிறது"

இஸ்லாம் 'அவரவர் மார்க்கம் அவரவர்க்கு', 'மற்ற தெய்வங்களை நிந்திக்காதீர்கள்' என்று சொல்கிறது என்று தக்கியா செய்வது. ஆனால், முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் அவர்கள் மீது ஜிஹாது தொடுத்து மதம் மாறாதவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது (பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர்), அவர்களது கோவில்களை இடிப்பது (http://www.flex.com/~jai/satyamevajayate/temple1.html), இன அழிப்பை நடத்துவது (http://www.hindunet.org/hindu_history/modern/hindu_bangla.html), அவர்களை அவர்களது பூர்வீக நிலங்களை விட்டு விரட்டுவது.

'அவரவர் மார்க்கம் அவரவர்க்கு' என்றால் ஏன் அரேபியா முழுவதும் யூதர்கள் விரட்டப்பட்டார்கள், கிறித்துவர்கள் (அரேபியாவின் பூர்வீக அரபி கிறித்துவர்கள்) ஏன் தொடர்ந்து அழித்தொழிக்கப் படுகின்றார்கள். இஸ்லாம் தோன்றியபோது அரேபியாவெங்கும் இருந்த யூத, கிறித்துவ, ஏனைய மதங்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு என்ன நேர்ந்தது – இஸ்லாத்தை தோற்றுவித்த முஹமதுவே அரேபியாவில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது என்று சொல்லியுள்ளாரே, அவரைத் தொடர்ந்து 'சரியாக வழிநடத்தப்பட்ட' கலீஃபாக்களுள் ஒருவரான உமர் (இவர் முஹமதின் நண்பர் மற்றும் மாமனார் ஆவார்) இந்த முஹமதின் வாசகத்தை அடியொட்டி யூதர்களையெல்லாம் விரட்டினாரே சவுதி அரேபியாவில் இருந்து என்ற கேள்வியை கேட்டால் பதில் சொல்லாமல் விடுவது.



"இஸ்லாமே சத்திய மார்க்கம்"

இஸ்லாமே 'சத்திய மார்க்கம்' என்று பிரச்சாரம் செய்வது. வாதுக்கு வாருங்கள் என்று அழைப்பது. ஆனால், எதைச் சொன்னாலும் அவதூறு செய்கிறார்கள் என்று கலவரத்தில் ஈடுபடுவது(சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ர்ரீன், அயான் ஹிர்ஸி அலி, ஹெச்.ஜி.ரசூல்). அவதூறு சட்டம் என்று முஸ்லீம் நாடுகளில் இயற்றி, சத்திய மார்க்கத்தைப் பற்றிய வெளிப்படையான விவாதத்தை தடுப்பது.



இஸ்லாம் சத்திய மார்க்கம் என்றால், அந்த மார்க்கத்தைப் பற்றிய வெளிப்படையான விவாதங்களை இஸ்லாம் ஏன் தடுக்கிறது? சவுதி அரேபியாவில் கிறித்துவர்களை அவர்களது மதத்தை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதுதானே? இந்து மத நிகழ்சிகளை சவுதி அரேபியாவில் நடத்த அனுமதி தருவதுதானே? மாறாக, மற்ற எந்த மதங்களின் நூல்களை வைத்திருந்தாலோ அல்லது வழிபாட்டில் ஈடுபட்டாலோ, சவுதியின் முத்தாவாக்கள் என்ற இஸ்லாமிய மத காவலாளிகள் வந்து பிடித்துக் கொண்டு போய் சிறையில் அடைத்துவிடுவார்கள் – இதுதான் இஸ்லாத்தின் உண்மையான போதனை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுப்பது.



"சவுதியில் இருப்பது அவர்கள் நாட்டு சட்டம் - எங்களை கேட்காதீர்கள்"

சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் இருப்பது அவர்கள் நாட்டு சட்டம் என்று சொல்வது. ஆனால், அது ஷரீய்யா சட்டம் என்பதை சொல்லாமல் விட்டு, இந்தியாவிலும் ஷரீய்யா சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராட்டம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது.



"பெண்களுக்கு இஸ்லாம் ஏராளமான உரிமைகளை தருகிறது"

பெண்களுக்கு இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே சம உரிமை, சொத்துரிமை தந்தது என்று பிரச்சாரம் செய்வது. 'அட, இன்று என்ன நிலை' என்று யாராவது கேட்டால், பெண்களுக்கு அவர்களின் 'இயல்புக்குத் தக்க உரிமைகளை அல்லாஹ் 1425 ஆண்டுகளுக்கு முன்பே தந்துவிட்டார்' என்று சொல்லி, சம உரிமை என்பது சைத்தானின் தூண்டுதல், ஆகவே பெண்கள் சவுதி அரேபியாவில் (ஷரீஅத்து சட்டப்படி) இருப்பது போல தலைமுதல் கால்வரை போர்வை போர்த்தி நடமாடவேண்டும், ஆண் துணை இல்லாமல் செல்லக் கூடாது, தனியே வேலைக்கு போகக் கூடாது, அந்நிய ஆண்களுடன் பேசக் கூடாது என்று சொல்வது.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் இருந்தது போன்று முழுக்க முக்காடு போட்டுக் கொள்வதுதான் உண்மையான பெண் சுதந்திரம் என்று வாதிடுவது, நாலு பெண்களை கட்டிக் கொள்வது அல்லாஹ் ஆண்களை 'ஒழுக்கமாக வைத்திருக்க', 'பெண்களை விபச்சாரத்திலிருந்து காப்பாற்ற' என்று சொல்வது, பெண்களை 'லேசாக' அடிக்கத்தான் கடவுள் சொல்லியிருக்கிறார் அதனால் அது தப்பில்லை என்று வாதிடுவது.



இஸ்லாத்திற்கு முன்பாக பெண்களின் நிலை மோசமாக இருந்தது என்று சொல்வது. ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது – முஹமதின் முதல் மனைவி கதீஜா பெரிய வியாபார நிறுவனத்தை தன்னந்தனியாக நடத்தினார், தான் விரும்பிய இளைஞரான முஹமதுவை தனது தந்தையின் விருப்பத்திற்கெதிராக மணந்து கொண்டார் – அப்போதெல்லாம் இஸ்லாம் இல்லை, இஸ்லாம் வந்தபின்பே பெண்கள் வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்டனர் அங்கே, முழுப்போர்வை போர்த்திக் கொள்கிற 'உரிமை', இயந்திரம் போல குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கும் 'உரிமை', ஆடு மாடுகளைப் போன்று பணத்திற்காக(மஹர்) அறுபது வயது கிழவனுக்கு தந்தையால் தள்ளப்படும் படும் 'உரிமை' போன்ற அடிமைத்தனத்திற்கான உரிமைகளையே இஸ்லாம் உரிமை என்ற பெயரில் கொடுத்தது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது.



"ஜிஹாது என்றால் 'முயற்சித்தல்' - அது உள்மனப் போராட்டம், அதில் வன்முறை கிடையாது"

ஜிஹாது என்றால் 'முயற்சித்தல்' - அது உள்மனப் போராட்டம், பேனாவால் எழுதுவது, பேசுவது, இணையத்தில் வாதிடுவது என்று சொல்வது. அதே சமயம், இந்தியாவை அழிக்க வேண்டும் என்று சொன்ன மதுரை இமாம் அலியை ஷஹீது (ஜிஹாதில் இறந்த இறைப் போராளி) என்று கொண்டாடுவது, போஸ்டர் ஒட்டுவது, பழனி பாபா (என்ற தீவிரவாதிக்கு) நினைவு நாள் அனுஷ்டிப்பது. அவர்களே உண்மையான இஸ்லாமியர் என்று பிரச்சாரம் செய்வது.



ஜிஹாது என்ற பெயரில் முஹமதின் காலத்திலேயே கொள்ளையடித்தார்கள், கொலை செய்தார்கள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் – இன்றும் ஜிஹாது என்ற போர் அறிவிப்பை செய்யுமிடமெல்லாம் இதெல்லாம் நிகழ்கிறது என்ற உண்மையை ஏற்க மறுப்பது.



"குரானில் அறிவியல் உண்மைகள் மலிந்திருக்கின்றன"

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் குரானில் அன்றே சொல்லப் பட்டுள்ளன என்று பிரச்சாரம் செய்வது. எங்கே என்று கேட்டால், தலையும் வாலும் இல்லாத குரான் வசனத்தைக் காண்பித்து இதுதான் அது என்று வாதிடுவது அல்லது 'இறைவனே நன்கறிந்தவன்' என்று ஒரே வார்த்தையில் எல்லாவற்றுக்கும் விடை சொல்லிவிடுவது.








"பாபர் மசூதியை மீட்டுக் கொடுங்கள்"

இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த இடத்திலேயே அரசு எங்களுக்கு மசூதி கட்டித் தரவேண்டும் என்று சொல்வது. அதே சமயம் 1947லிருந்து இதுவரை இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேசங்களான பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப் பட்டுள்ளதையும், இன்றும் பாகிஸ்தானில் புத்தர் சிலைகள் இடிக்கப்படுவதையும் (SWAT Region) பற்றி எவ்வித கண்டனமும் தெரிவிக்காதது. அப்படியே கண்டனம் என்ற பெயரில் ஒன்றை ஒப்புக்கு சொல்லிவிட்டு, அந்த இடங்களில் கோவில்களை மீண்டும் கட்டிக் கொடுக்காதது, சவுதி அரேபியாவில் இன்றிருக்கும் காபா என்ற இஸ்லாமிய ஆலயமே முன்பிருந்த கோவில்/வழிபாட்டுத் தலத்தை இடித்துவிட்டு கட்டப்பட்டது தான் என்ற உண்மையை பார்க்க மறுப்பது.




"மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது, மனித உரிமை பறிபோகிறது"

தமிழ்நாட்டில் கோவில் இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என்று போராடுவது , வன்முறையில் இறங்குவது (தென்காசி கலவரங்கள்), எதற்கெடுத்தாலும் மனித உரிமை பறிபோகிறது என்று மனித உரிமை ஆர்வலர்களை துணைக்கழைத்துக் கொள்வது, மத மாற்றத் தடைச் சட்டம் எங்கள் உரிமைகளைப் பறிக்கிறது என்று கூப்பாடு போடுவது. ஆனால், முஸ்லீம் நாடுகளில் மற்ற மத வழிபாட்டுத்தலங்கள் கட்ட அனுமதி மறுப்பது, பிரச்சாரம் செய்ய முயல்கிறார்கள் என்று சிறையில் அடைப்பது (சவுதி அரேபியாவில் வருடா வருடம் கிறிஸ்துவர்கள் இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் படுகிறார்கள்), மெக்கா மதீனாவில் மற்ற மதத்தவர்களை (முஸ்லீம்களில் அஹமதி போன்ற பிரிவினரைக் கூட) உள்ளே விட மறுப்பது. கேட்டால் இது அல்லாஹ்வின் கட்டளை என்பது. மதம் மாறும் முஸ்லீம்களுக்கெதிராக மரண தண்டனை விதிப்பது (ஆஃப்கானிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இந்த சட்டம் அமலில் இருக்கிறது).



"இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கின்றது"

இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கின்றது என்பது. மற்ற சமுதாயங்களில் சமத்துவம் இல்லை என்பது. அதே சமயம், இஸ்லாமியர்களின் ஆதர்ச சமுதாயமான சவுதி அரேபியாவில் சமத்துவம் இல்லை என்பதை சுட்டிக் காட்டினால் (அங்கே ஷியாக்கள் இந்தியாவின் தலித்துக்களைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் கோர்ட்டில் ஏறி சுன்னி முஸ்லீம்களுக்கு எதிராக சாட்சி சொல்ல முடியாது. இந்திய முஸ்லீம்கள் சவுதி அரேபியப் பெண்களை மணக்க முடியாது). சூடானில் இனவெறி நிலவுவதை ஒப்புக்கொள்ள மறுப்பது. அதே சமயம், அமெரிக்காவில் கறுப்பர்களுக்கெதிராக இனவெறி இருக்கிறது, இஸ்லாமே ஒரே தீர்வு என்பது. அமெரிக்காவில் கறுப்பர் ஜனாதிபதி ஆக வாய்ப்பிருக்கும் நிலையில், ஒரு அரபு நாட்டில் கூட கறுப்பின முஸ்லீம் ஜனாதிபதி அல்லது அரசராக ஆகும் வாய்ப்பே இல்லை என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது.

இந்து மதத்தில் ஜாதிக்கொடுமை இருக்கிறது என்பது. ஆனால், இஸ்லாம் என்ற மதத்தில் மட்டுமே நிரந்தரமாக தாழ்த்தப்படுத்தும் அடிமை முறை கடவுளின் (ஷரீயத்து)சட்டமாக இருக்கிறது, இஸ்லாத்தின் அங்கம் ஜிஹாது என்றால், அடிமை முறை ஜிஹாதின் அங்கம்(1962 வரை சவுதி அரேபியாவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டபூர்வமாக அனுமதிக்கப் பட்டது. அமெரிக்க நிர்ப்பந்தத்தால் இதை அரசு நீக்கவே இஸ்லாமிய அறிஞர்கள் நாடெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் – 2003ல் சவுதி அரேபிய தலைமை உலேமா கவுன்சிலின் முக்கிய உறுப்பினர் இது குறித்து அடிமை முறை இஸ்லாத்தின் பிரிக்க இயலா அங்கம் என்ற ஃபத்துவா கொடுத்திருக்கிறார், இன்றும் சூடானில் அடிமை முறையை அரபு முஸ்லீம்கள் பின்பற்றி கறுப்பின சூடான் முஸ்லீம்களை அடிமைகளாக வைத்திருக்கின்றனர். முஹமது அடிமைப் பெண்ணான மரியத்திடம் முறையற்ற உடலுறவு வைத்திருந்தார். அடிமைப் பெண்களை வன்புணர்ந்து அவர்கள் கர்ப்பம் தரித்தால் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்ற ஷரீயத்து சட்டம் முஹமது-மரியம் தொடர்பு அதைத் தொடர்ந்த சம்பவங்களிலிருந்தே தோன்றியது) எனவே மனிதர்களை தாழ்வாக நடத்துவது இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி என்பதையும், இன்றும் இந்த அடிமைகளின் வாரிசுகள் சவுதி அரேபியாவில் மற்ற அரபியருக்கு சமமாக நடத்தப்படுவதில்லை என்பதையும் ஏற்க மறுப்பது.



"இஸ்லாம் என்பது வெறும் மதம் அல்ல, முழுமையான வாழ்க்கை நெறி"

இஸ்லாம் என்பது வெறும் மதம் அல்ல, 'முழுமையான வாழ்க்கை நெறி' என்பது. முஸ்லீம்கள் அனைவரும் எல்லா விஷயத்திலும் இஸ்லாம் சொல்வதன் படியே நடக்க வேண்டும் என்பது. ஆனால், கவுரவக் கொலைகள், ஜாதி அமைப்பு போன்றவை முஸ்லீம்களிடத்தில் இருப்பதைக் காண்பித்தால், அது இந்த நாட்டின் கலாச்சாரத்தால் ஏற்பட்ட சீரழிவு என்பது. அதே சமயம் அஷ்ரஃப், அஜ்லஃப் முஸ்லீம் ஜாதிப் பிரிவுகள் அரேபியாவிலேயே இருக்கின்றன, இந்த வார்த்தைகளே அரபு வார்த்தைகள் என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது. அடுத்த நொடியில், முஸ்லீம்களில் பிற்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது. ஜாதியில்லை இஸ்லாத்தில் என்றால், பின்பு எப்படி இன்னமும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட முஸ்லீம்கள் இருக்கிறார்கள், ஆயிரம் வருடங்கள் ஆகியும் இந்தியாவில் இஸ்லாத்தால் ஜாதியை நீக்க முடியவில்லை என்றால், இத்தனை சமத்துவம் பேசுவது எதற்கு என்பதை சிந்திக்க மறுப்பது.



"குர்ஆன் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே வடிவத்தில் இருக்கிறது"

குர்ஆன் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே வடிவத்தில் இருக்கிறது, இஸ்லாமியர்களில் எந்த பேதமும் பிரிவும் இல்லை என்பது. அதே சமயம், ஷியாக்களின் குரான், அஹமதிக்களின் குரான் மாறியிருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது. குரானை கடவுளே காப்பாற்றுகிறார் என்பது, அப்போது மற்ற வேதங்களை ஏன் கடவுள் காப்பாற்ற மறுத்தார்* என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து, 'இறைவனே எல்லாவற்றையும் நன்கறிந்தவன்' என்று பகுத்தறிவுக்கு முரணாக பேசுவது. ஆனால், தனியாக மசூதியில் ஷியாக்கள் தவறாக கடவுளின் வார்த்தைகளை திரிக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மசூதியில் தொழும் போது குண்டு வைப்பது(பாகிஸ்தான், ஈராக்), அவர்களது ஹூசைனியத் மசூதிகளை,தர்காஹ்க்களை இடிப்பது(சவுதி அரேபியா), ஷியாக்கள், அஹமதிக்கள் காஃபிர்கள் என்று சொல்வது.



*

இஸ்லாமிய நம்பிக்கையின் படி இறைவன் ஏற்கெனவே இதே குரானை மற்ற நபிமார்கள் மூலம் உலகின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பினார். ஆனால், மற்றவர்கள் அதை திரித்துவிட்டார்கள். இப்படி தொடர்ந்து எல்லா இடங்களிலும் நடக்கவே, கடவுள் குரானை மட்டும் இப்படி மனிதக்கரங்கள் பாழ்படுத்துவதிலிருந்து காப்பேன் என்று உறுதி கூறியிருக்கின்றார்.




"நபிகள் நாயகம் உலகிற்கு அழகிய எடுத்துக் காட்டு"

நபிகள் நாயகம் என்ற முஹம்மதே 'உலகிற்கு அழகிய எடுத்துக்காட்டு' என்று பிரச்சாரம் செய்வது. அப்படியென்றால், அடுத்தவன் மனைவியை அபகரிப்பது (முஹமதின் வளர்ப்பு மகன் ஜைதின் மனைவியை முஹமது திருமணம் செய்து கொண்டார், கடவுள் சொன்னதாகக் கூறி), நண்பனின் ஆறு வயது மகளை அபகரிப்பது (முஹமதின் நெருங்கிய நண்பரான அபூ பக்கரின் ஆறுவயது மகளை கனவில் அல்லாஹ் கல்யாணம் செய்துவைத்துவிட்டார் என்று கூறி திருமணம் செய்துகொண்டார் முஹமது), ஒரு பெண்ணின் கணவனை, தந்தையை கொலை செய்துவிட்டு அவளை அவளது விருப்பத்திற்கு மாறாக மணந்து கொள்வது (சஃபிய்யா என்ற யூதப்பெண்ணை இப்படி முஹமது கல்யாணம் செய்து கொண்டார் - முதலில் சபியாவை வேறொரு முஸ்லீமுக்கு கொடுத்துவிட்டு, பின்பு அழகாயிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் கூப்பிட்டுப் பார்த்து தான் எடுத்துக் கொண்டார், இது போல வேறு இரண்டு பெண்களை முஹமது அடைய முயற்சிக்கும்போது முஹமதின் மனைவிகளே அந்தப் பெண்களை தப்புவித்தார்கள்), கொள்ளையடிப்பது (கஸ்வா, அன்ஃபால்), பெண்களை தனது மருமகனுக்கே அனுபவிக்கக் கொடுப்பது (முஹமது பல சமயங்களில் தனது மருமகன்களுக்கே போரில் பிடிக்கப்பட்ட பெண்களை அனுப்பி வைத்தார்) என்றெல்லாம் செய்த மனிதரை உத்தம நபி, அமைதியான நபி, கடவுளின் தூதர் என்றெல்லாம் புகழ்வது.



"பார்ப்பனர்கள் தமிழர்களின் எதிரிகள், இஸ்லாமியர்கள் தமிழ்ப் பற்றாளர்கள்"

பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தை கோவிலில் ஓதுகிறார்கள், அதனால் அவர்கள் தமிழர்களின் எதிரிகள் என்று சொல்வது, அல்லது அப்படி சொல்ல திராவிட இயக்கங்களை, அப்பாவித் தமிழர்களை தூண்டிவிடுவது.

தமிழ் தமிழ் என்று பார்ப்பவர்களை ஏமாற்றுவது. ஆனால், அதே சமயம் மசூதியில் அரபியிலேயே குரான் ஓதப்பட வேண்டும் ஏனென்றால், அதுவே கடவுளின் வார்த்தை என்பது.

இலங்கையில் தமிழ் ஈழத்தை எதிர்ப்பது தமிழ் முஸ்லீம்கள், அங்கே தங்களை தமிழர்கள் என்று அழைக்காமல் முஸ்லீம்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்புக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக இருப்பது தமிழ் முஸ்லீம்கள் தாம், தங்களை அங்கே அரேபியர்களாகவே அழைத்துக் கொள்கிறார்கள், நாளையே தமிழ்நாட்டிலும் எண்ணிக்கை அதிகரித்தால் இந்த நிலைப்பாட்டையே எடுப்பார்கள் – உலகெங்கும், மொழியைவிட மதத்திற்கே இஸ்லாமியர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் (பாலஸ்தீனத்தில் அரபு கிறித்துவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, பங்களாதேஷில் வங்கமொழி பேசும் இந்துக்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, காஷ்மீரில் அதே காஷ்மீரி பேசும் இந்துக்களை விரட்டியடித்தது) என்ற உண்மையை மறைப்பது.



"இஸ்லாமிய சமூகம் பின் தங்கியிருப்பது மற்றவர்களால்"

தினமும் ஐவேளை தொழ வேண்டும், எப்போதும் கடவுளின் கட்டளைகளையே நிறைவேற்ற வேண்டும், ஃபிதாயீனாக குண்டு கட்டிக் கொண்டு செத்தால் சொர்க்கம், எப்போதும் குரான் ஓதிக்கொண்டிருந்தாலே போதும், அதிலேயே எல்லா அறிவியலும் இருக்கிறது, முஸ்லீம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது மதராஸாக்களிலேயே பயில வேண்டும் என்று சொல்வது. மதராஸாக்களை, அரபி பாடசாலைகளை ஊருக்கூர் ஏற்படுத்தி சவுதி அரசு கொடுக்கும் மாணியத்தில் அவற்றை நடத்தி, அங்கே முஸ்லீம் பிள்ளைகளுக்கு இலவசமாக எல்லாவற்றையும் வழங்கி அவர்களை ஈர்ப்பது.



அதே சமயம் முஸ்லீம் சமூகங்கள் பின் தங்கி இருப்பதற்கு பார்ப்பன சதி, அமெரிக்க சதி, யூத சதி ஆகியவையே காரணம் என்று புலம்புவது. தினமும் ஐவேளை தொழுகை என்றால், எப்படி பாக்டரியில் வேலை செய்ய முடியும்? நான்கு மனைவிகள் நாற்பது குழந்தைகள் என்றால் எப்படி முன்னேற முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்டால், அதெல்லாம் கடவுளுக்கே தெரியும். அதனால் தான் எல்லா நபிமார்களும் பல மனைவியருடன் இருந்திருக்கின்றார்கள், முஹம்மது தனது சமூகம் எண்ணிக்கையில் மற்ற நபிகளின் சமூகத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார், குடும்பக் கட்டுப்பாடு கடவுளுக்கு எதிரானது என்று வாதிடுவது.



"தீவிரவாதச் செயல்களுக்கு இஸ்லாம் மீது குற்றம் சுமத்தக் கூடாது"

தீவிரவாதச் செயல்களுக்கு இஸ்லாம் மீது குற்றம் சுமத்தக் கூடாது. எல்.டி.டி.ஈ அமைப்பை மட்டும் ஏன் இந்து தீவிரவாதிகள் என்று சொல்ல மறுக்கின்றீர்கள் என்று கேட்பது. பதிலுக்கு முஸ்லீம் தீவிரவாதிகள் உலக கிலாபத்துக்காக (Islamic Caliphate), அல்லாஹ்வுக்காக ஜிஹாது செய்யும் அதே நேரத்தில், எவ்வித மதக் காரணமும், நோக்கமும் இவ்வகை அமைப்புகளுக்கு இல்லை என்பதை கவனிக்க மறுப்பது.



தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்துக்கு எதிரானது என்ற காரணத்தால் இன்றுவரை ஒரு முஸ்லீம் கூட காஃபிர் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால், இஸ்லாத்தை நவீனப்படுத்த நல்வழிப்படுத்த எந்த முஸ்லீம் முனைந்தாலும் அவர்கள் காஃபிர்கள் என்று மசூதியில் அறிவிக்கப்பட்டு சமுதாய விலக்கம் செய்யப்படுகிறார்கள்* என்ற உண்மையை ஏற்க மறுப்பது.

*தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியதற்காக காஃபிர் என்று அறிவிக்கப்பட்டு ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், கோவையில் குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு மசூதிகளில் பணம் வசூல் செய்யப்பட்டு அவர்களது விடுதலைக்கு ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயமும் போராடியது.



"அமெரிக்கா சைத்தான். ஈராக்கில் கொடுமை"



அமெரிக்கா சைத்தான் என்பது. ஈராக்கில் முஸ்லீம்களை அமெரிக்கா கொன்று குவிக்கிறது என்பது.

அதே சமயம், இன்றைய சவுதி வஹாபிஸத்தின் பெரும் பாதுகாவலன் அமெரிக்கா என்ற உண்மையை ஏற்க மறுப்பது. அமெரிக்க உதவியுடன் சவுதியில், ஏனைய அரபு நாடுகளில் எண்ணையை எடுத்து, அமெரிக்க உதவியுடன் விற்று, அமெரிக்க உதவியுடன் அதை முதலீடு செய்து, அமெரிக்க தொழில் நுட்பங்களின் மூலம் வசதிகளை அனுபவிக்கும் அதே சவுதி அரச குடும்பமே இன்று உலகெங்கும் மசூதிகளையும், அரபி பாடசாலைகளையும் கட்டி பண உதவி செய்கிறார்கள், அமெரிக்க உதவியினால் பெரும் பலனடைந்தது அரபு நாடுகள் தான், இல்லையென்றால் இன்றும் பதூயீன்களாக(Bedoins) , நாடோடிகளாகத்தான் அரபிக்கள் இருந்திருப்பார்கள், இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் வஹ்ஹாபிஸமும் உலகெங்கும் பரவியிருந்திருக்காது என்ற உண்மையை ஏற்க மறுப்பது. இன்னொரு புறம், வாய்ப்பு கிடைத்தால் ஐரோப்பாவுக்கு ஓடுவது முஸ்லீம்கள் தாம், தங்கள் நாட்டில் நிலவும் மனித உரிமை இல்லா சூழலினால், அமெரிக்காவுக்கு விஸா கிடைத்தால் உடனடியாக ஓடி அங்கே செட்டில் ஆக அனைத்து முஸ்லீம்களும் விரும்புகின்றார்கள்; இந்த ஷைத்தான் நாடுகள் மீது மற்றவர்களைக் காட்டிலும் முஸ்லீம்களுக்கே அதிக பிரியம் இருக்கிறது என்ற உண்மைகளை ஏற்க மறுப்பது.



"இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் முஸ்லீம்களை துன்புறுத்துகிறார்கள்"

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் முஸ்லீம்களை துன்புறுத்துகிறார்கள் என்பது. அதே சமயம், இஸ்லாமிய நாடுகளில் இந்துக்களை, யூதர்களை, கிறிஸ்துவர்களை கொடுமையாக துன்புறுத்துவது, அடிப்படை உரிமைகளை தர மறுப்பது. பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷில் இருந்தும் இந்துக்களை விரட்டியடிப்பது.



"இஸ்லாம் என்பது வாளால் பரப்பப் படவில்லை"



இஸ்லாம் என்பது வாளால் பரப்பப் படவில்லை என்பது. அதே சமயம், தங்களது முன்னோர்கள் போரில் தோற்றே முஸ்லீம் ஆனார்கள், கற்பழிப்புக்கு உள்ளானார்கள், இவற்றின் காரணமாகவே மதம் மாறினார்கள்* என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது.

இன்றைக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாளின் துணையில்லாமல் இஸ்லாம் பரவுகிறது என்பது. அதே சமயம் வாள் முனையில் கடகடவென்று நூறு-இருநூறு வருடங்களிலேயே உலகம் முழுவதும் பரவிய இஸ்லாம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மென்மையான மதமாற்றாத்தால் பெரும்பான்மை மதமாகவில்லை என்ற உண்மையை ஏற்க மறுப்பது.

*முஹமது அமைதியாக இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தபோது மதம் மாறியவர்கள் வெறும் சில பத்து நபர்களே. ஆனால், கொள்ளையடிக்கத் துவங்கியபின், கொலை செய்து சித்தரவதை செய்யத்துவங்கியதன் பின் அவரது மதத்தை மெக்கா, மதீனா முழுவதும் ஏற்றுக் கொண்டது. ஏற்காதவர்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டனர். அதே போல இந்தியாவில் சூஃபிக்களால் மதம் மாறியவர்களைவிட முஸ்லீம் படையெடுப்புகளின் பின் மதம் மாறியவர்களே ஏராளம். அந்த சூஃபிக்களும் இப்போது காஃபிர்கள் , உண்மையான இஸ்லாத்தை அறியாதவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.



"உங்கள் வேதத்தில் எங்கள் நபி நாயகத்தின் பெயர் இருக்கிறது"

மற்ற மத நூல்கள் எல்லாம் மனிதக் கரங்கள் பட்டுக் கறைபட்டுவிட்டன என்பது. அதே சமயம், அப்படி 'கறைபட்ட' நூல்களிலிருந்தே முஹமதுதான் இறைத்தூதன் என்பதற்கு 'ஆதாரங்களை' எடுத்து வைப்பது. இந்துக்களின் வேதத்தில் முஹமதின் வருகை குறிக்கப்பட்டுள்ளது, யூதர்களின் தோராத்து (Torah) நூல்களில் முஹமதுவின் வருகை சொல்லப்பட்டுள்ளது, பைபிளில் முஹமதுவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்று சம்பந்தம் சிறிதும் இல்லாத வசனங்களை மேற்கோள் காட்டுவது.



"குரான் மற்றும் ஹதீஸ்களே இஸ்லாத்தின் அடிப்படை"



குரான் மற்றும் ஹதீஸ்களையே ஆதாரமாக எடுத்து வைத்து வாதிட வேண்டும் என்பது. அவையே இஸ்லாத்தின் அடிப்படை என்பது. ஆனால், ஹதீஸ்களில் எந்த ஹதீஸைக் காட்டினாலும் இது சரியான (சஹீ) ஹதீஸ் இல்லை என்பது. இன்னொரு புறம் அதே ஹதீஸ்களை அடிப்படையாக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஷரீயத்து சட்டங்களை கடவுள் ஏழு வானங்களுக்கு அப்பால் இருந்து வகுத்துத் தந்தது என்று வாதிடுவது.




"இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம்"

இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் கிடையாது, பேய் பிசாசு மாந்திரிகம் பில்லி சூனியம் எல்லாம் கிடையவே கிடையாது என்பது. ஆனால், அதே பேய் - பிசாசு விஷயங்களை மலக், ஜின், காஃபிர் ஜின்கள், மலக் கொண்டு வந்த கல், ஜின்கள் கட்டிய மாளிகை, சூனியம் வைப்பவருக்கு தண்டனை என்பதெல்லாம் 'இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்' என்பதை ஏற்க மறுப்பது.



சிவலிங்கம் போன்றிருக்கும் கறுப்புக் கல்லை (இதை பூமிக்கு கொண்டு வந்தது ஜிப்ரீல் எனும் மலக்காம்) முத்தமிடுவது, காபா கோவிலை ஏழு முறை சுற்றி வருவது, சஃபா மர்வா போன்ற மலைகளை புனித யாத்திரையின் போது நடந்து கடப்பது, கடவுளுக்காக ஒட்டகத்தை (முஹமது பலி கொடுத்தது போன்று) பலி கொடுப்பது, சைத்தானை கல்லால் அடிப்பது, ஜம்ஜம் புனிதத்தீர்த்ததை அருந்துவது - இதெல்லாம் பகுத்தறிவு மார்க்கமா என்று கேட்டால், முஹமது செய்தார் சொன்னார் அதனால் செய்கிறோம் என்று பகுத்தறிவுக்கு புறம்பாக பேசுவது.



"ஒழுக்கத்தை கட்டிக் காக்கும் மதம் இஸ்லாம்"

ஓரினச் சேர்க்கை கடவுளுக்கு எதிரானது, இது ஒழுக்கமான மார்க்கம், பெண்களை பார்க்கும்போது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று முஹமது சொன்னார் என்றெல்லாம் சொல்வது. அதே சமயம், உண்மையான முஸ்லீம்களுக்கு (மற்றவர்களை குண்டு வைத்துக் கொன்று, தானும் செத்து போகும் முஸ்லீம்கள்) சொர்க்கத்தில் உண்மையான முஸ்லீம்களுக்கு கடவுள் 'முத்து போன்ற சிறுவர்களை'யும், ஏராளமான கன்னிப் பெண்களையும், முஹமதைப் போன்று இருமடங்கு செக்ஸ் வலிமையையும் தருவார் என்று நம்புவது.
 
 
 
 
http://islaamicinfo.blogspot.com/2008/06/blog-post_20.html

StumbleUpon.com Read more...

டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி! 40 பேர் காயம்!

தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளது.

முதலில் கரோல் பாக்கில் உள்ள கஃபார் சந்தைப் பகுதியில் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 20 பேர் காயமுற்றனர். அதனைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஸ் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. கன்னாட் பிளேஸ் குண்டு வெடிப்பில் 12 பேர் காயமுற்றதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த குண்டு வெடிப்புக்களில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அனைவரும் இராம் மனோகர் லோகியா உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
http://tamil.webdunia.com/newsworld/news/national/0809/13/1080913053_1.htm

StumbleUpon.com Read more...

இஸ்லாம்:இஸ்லாத்தில் மனுவாதிகள்

இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி - தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)

 
     
 
 
 
கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?


பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.


1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, ""குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்'' என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.


ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.


அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, ""இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?'' என்று கேட்டார்.


அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.


இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.


இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.


இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.


சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?


இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.


கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?
பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்தலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

 

இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.


மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.


இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே ""இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்'' என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ""ஜிந்தகிஇநவ்'' என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.


கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?


பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.


மறுபுறம், இந்திய வரலாற்றில் "இஸ்லாமிய ஆட்சி' என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் "உயர்சாதியினர்' என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் "கீழ் சாதியினர்' என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.


இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் ""முன்டாகாப் அல்தாவாரிக்'', மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் ""தாரிக்இஃபிரோஸ் ஷாஹி'', குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் ""இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

 

இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் "கீழ்' சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


""குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!'' இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது ""சிராஜுல் ஹேதயா'' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.


மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை ""மனுவாதிகள்'' என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.


"மாபெரும்' மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது ""முன்டகாப்அல்தாவாரிஹ்'' நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட ""ஃபடாவாஇஆலம்கிரி'' என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் "கீழ்' சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.


பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட ""டெல்லி உருது அக்பர்''இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; "கீழ்' சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் "இஸ்லாமிய' ஆட்சிக் காலத்தின் "பொற்காலம்' என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்"பொற்கால' ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த "கீழ்' சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.


பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் ""ராஜா'' என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.


சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட "மேல்' சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் "கீழ்' சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.


கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த ""மனுவாதி உலேமாக்கள்'' என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?


பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் "புனித' மற்றவர்களாக "அசுத்த'மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது ""இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' நூலில் குறிப்பிடுகிறார்.


கேள்வி: "இஸ்லாமிய' ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த "மேல்' சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?


பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். ""ஜிந்தகிஇநவ்'' இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.


சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற் றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.


ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.


ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், ""சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது'' என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.


18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது ""ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா'', ""ஃபிக்இஉமர்'' ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ் க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.


தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். ""தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்'' என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!


தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட ""ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்'' என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.


அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு "கீழ்' சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே "மேல்' சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.


தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். ""மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்'' என்ற தமது நூலில் அவர், ""முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது'' என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் ("மேல்' சாதி) என்றும் அர்ஸல் ("கீழ்' சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, ""நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், "கீழ்' சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!


இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது ""அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்'' நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் ""நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி ""வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்'' என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் ""ஜுலாஹா'' என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (""உதவி செய்பவர்கள்'') என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.


இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.


ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் "மசாவத்இ பகார்இ ஷாரியத்'' என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி ""பாஹிஸ்டி ஜேவார்'' என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் "மரியாதைக்குரிய மேல்குடி' (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் "கீழ்' சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் ""இம்தாத் உல்ஃபடாவா'' என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.


இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை ""நவ்முஸ்லிம்கள்'' என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.


அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்.
 

StumbleUpon.com Read more...

புற்றுநோய் புதிய தகவல்

 

 


பொதுவாக, புற்றுநோய் யாருக்கு அதிகமாக வருகிறது? அவர்கள் செய்யும் வேலையென்ன? என்பதை ஆய்வு செய்ய ஜப்பான் சுகாதார அமைச்சகம் முனைந்தது. அமர்ந்து கொண்டே வேலைசெய்பவர்களை விட, ஓடியாடி வேலை செய்பவர்கள் தான் குறைவாக புற்றுநோய் பெறுபவர்களாக இருக்கிறனர் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட ஓடியாடி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களில் முறையே 13, 16 விழுக்காட்டினர் புற்றுநோய் பெறும் சாத்தியக்கூறுகள் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
 

 

அமெரிக்க நோய் விபரவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள்படி, ஆய்வாளர்கள் ஜப்பானின் 9 மாநிலங்களில் வாழ்கின்ற 45 முதல் 74 வயது வரையான எண்பதாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு செய்தனர். அமர்ந்தே இருப்பது, நடப்பது, நிற்பது, உறங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்கள் நாள் முழுவதும் செய்கின்ற ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கண்காணித்தனர். ஓய்வு அல்லது கட்டுக்கோப்பான உடல் பெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், ஒட்டுமொத்த உடற்பயிற்சி மற்றும் வேலைகளை உள்ளடக்கி ஜப்பானில் முதல்முறையாக இந்த ஆய்வை செய்துள்ளனர். இதன் மூலம் ஓடியாடி வேலை செய்யும் அல்லது ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடும் ஜப்பானிய பெண்களிடத்தில் புற்றுநோய் ஏற்படும் விழுக்காடு குறிப்பிடதக்க அளவு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது


StumbleUpon.com Read more...

நிங் சியா ஹுய் இனத்தின் பண்பாட்டுப் பூங்கா

வட மேற்குச் சீனாவிலுள்ள நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் ஹுய் இன மக்கள் குழுமி வாழும் ஒரே மாநில நிலைத் தன்னாட்சிப் பிரதேசமாகும். தனிச்சிறப்பு வாய்ந்த இப்பிரதேச மக்களின் பண்பாட்டால், நிங் சியா, சீனாவில் முஸ்லிம் மக்கள் நடையுடை பாவனையை உணர்ந்து கொள்ளும் மிகச் சிறந்த இடமாக மாறியுள்ளது.
2005ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், அங்கு பண்பாட்டுப் பூங்கா, கட்டியமைக்கப்பட்டது. தற்போது, இது, சீனாவின் ஹுய் இனத்தின் பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களைக் வெளிப்படுத்தும் ஒரே ஒரு இடமாகும். அதை அமைத்த நோக்கம் பற்றி, பொறுப்பாளர் Lei Runze கூறியதாவது,
நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் ஹுய் இன மக்கள் வாழும் இடமாகும். சீனாவின் ஹுய் இன மக்கள் தொகை, சுமார் ஒரு கோடி ஆகும். அவற்றில் 21 இலட்சத்துக்கு மேலான மக்கள், நிங் சியாவில் வாழ்ந்து வருகின்றனர். ஹுய் இனத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இப்பிரதேசத்தின் அரசு, ஹுய் இனத்தின் பண்பாட்டுப் பூங்கா மற்றும் ஹுய் இன அருங்காட்சியகத்தைக் கட்டியமைத்துள்ளது என்றார் அவர்.
அப்பூங்கா அமைக்கப்பட்டது முதல், உள்ளூர் அரசால் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Lei Runze கூறியதாவது,
சீன மக்கள் குடியரசு, பல தேசிய இனங்களைக் கொண்ட நாடாகும். 55 சிறுபான்மைத் தேசிய இனங்களில், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டில் ஹுய் இனம் மிகவும் வளர்ந்த இனங்களில் ஒன்றாகும். ஹுய் இனத்தின் பண்பாடு, இஸ்லாமியத்தின் பண்பாடும், பாரம்பரிய ஹான் மற்றும் தாங் வம்சக்காலங்களின் பண்பாடும் ஒன்றிணைந்து, உருவான புதிய வகை பண்பாடாகும். அத்தகைய பண்பாட்டுப் பூங்காவைக் கட்டியமைப்பது, காலத்தின் தேவைக்குப் பொருந்தியது. அதே வேளையில், ஹுய் இனத்தின் பண்பாட்டை அறிந்து கொள்ள விரும்பும் மக்களின் ஆர்வத்தையும் நிறைவு செய்துள்ளது என்றார் அவர்.
அவரது வழிக்காட்டலில், எமது செய்தியாளர், பண்பாட்டுப் பூங்காவிற்குள் நுழைந்தார். வாயிலுக்கு முன் சென்றவுடன், 20 ஆயிரம் பேர் அமரக் கூடிய அரங்கேற்றச் சதுக்கம் தோன்றியது. மேற்கில் நீண்ட விறாந்தையால் சூழப்பட்டதானது, சீன ஹுய் இனத்தின் பண்பாட்டுப் பூங்காவின் முக்கிய வாயிலாகும். அப்பூங்காவைக் கட்டியமைத்ததை பற்றி, அங்குள்ள பணியாளரான, ஹுய் இன Xu Wei, எமது செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தியதாவது,
பண்பாட்டுப் பூங்காவின் பரப்பளவு, 20 ஹெக்டராகும். இங்கு, ஹுய் இனத்தின் அருங்காட்சியகம், சடங்கு மண்டபம், ஹுய் இன மக்களின் பழக்க வழக்கங்களைக் கொண்ட கிராமம், ஹுய் இன உணவக மையம் மற்றும் ஹுய் இனத்தின் அரங்கேற்ற மையம் ஆகியவை இருக்கின்றன. இங்கு, ஹுய் இனத்தின் பண்பாடு, வரலாறு, ஆடல் பாடல்கள் மற்றும் ஹுய் இனத்தின் நடையுடை பாவனைகளை அறிந்து கொள்ளலாம். இது, சீனாவில் ஹுய் இனத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஒரே இடமாகும் என்றார் அவர்.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP