சமீபத்திய பதிவுகள்

வேர்ட் டேபிளில் பார்முலாக்கள்

>> Wednesday, December 16, 2009

 
 

 வேர்ட் தொகுப்பில் நாம் டேட்டாவினை பார்முலாக்கள் மூலம் இயக்கி, நமக்குத் தேவையான முடிவுகளைக் காணலாம். இந்த வேலை எக்ஸெல் தொகுப்பில் மட்டுமே உள்ளது என எண்ண வேண்டாம். வேர்டில் டேபிள் அமைத்து, அதில் தரப்படும் டேட்டாவினை எப்படி பார்முலாக்கள் மூலம் கையாளலாம் என்று இங்கு பார்க்கலாம்.


பார்முலாக்கள் டேபிள் ஒன்றின் செல்களில் அமைக்கப்படும் எண்களைக் கணக்கிடுவதற்காக அதற்கான குறியீடுகளை அமைத்து அமைக்கப்படுகின்றன. எக்ஸெல் தொகுப்பில் இந்த பார்முலாக்கள் செல்களைக் குறியிட்டு செல்களின் மீதாகவே அமைக்கப்படுகின்றன. வேர்ட் டேபிளில் கணக்கிட்டு பெற வேண்டிய செல்களில் கர்சரை அமைத்துப் பின் அதற்கான மெனுவிலிருந்து பார்முலா பிரிவைக் கிளிக் செய்து தனியே உருவாக்கப்படுகின்றன. வேர்ட் அந்த பார்முலாக்கள் அடிப்படையில் கணக்கிட்டு கர்சர் வைக்கப்பட்டுள்ள செல்களில் கணக்கீட்டின் முடிவைத் தருகிறது. 
வழக்கம்போல வேர்டிலும் பார்முலாக்களில் கூட்டல் (+) கழித்தல்(–) பெருக்கல்(*) வகுத்தல் (/) எக்ஸ்போனென்ஷியல் (^) அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் பயன்படுத்தக் கூடிய முக்கியமான பங்ஷன்கள் சில உண்டு. அவை 


AVERAGE() கொடுக்கப்பட்ட எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தரும்.MIN() எண்களின் குறைந்த மதிப்புடைய எண்ணைத் தரும் SUM() எண்களின் கூட்டுத் தொகையத் தரும். MAX() கொடுக்கப்பட்ட எண்களின் உயர்ந்த மதிப்புடைய எண்ணைத் தரும். PRODUCT()கொடுக்கப்பட்ட எண்கள் அனைத்தையும் பெருக்கி மதிப்பைத் தரும். 
டேபிள் செல்களைக் குறிப்பிடுகையில் அதற்கு லேபிள்களை டேபிளில் தர வேண்டியதில்லை. மேல் முதல் செல் Al  என அழைக்கப்படும். அதே படுக்கை வரிசையில் அடுத்த செல் Bl என அழைக்கப்படும். இப்படியே அடுத்தடுத்த செல்களைக் குறிப்பிடலாம். நெட்டுவாக்கில் அடூ க்கு அடுத்தபடியாக கீழிருக்கும் செல் அ2 என அழைக்கப்படும். பார்முலாக்களில் செல்களைக் குறிப்பிடுகையில் தனித்தனி செல்களைச் சுட்டிக் காட்டுகையில் அவற்றை கமா (,) இட்டு பிரித்துக் காட்ட வேண்டும். வரிசையாகப் பல செல்களைக் குறிப்பிடுகையில் அவற்றிற்கு இடையே கோலன் (:) பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக Al, A3, A5 எனக் குறிப்பிடுகையில் மூன்று தனித்தனி செல்கள் இங்கு காட்டப்படுகின்றன. Al:A5 எனக் குறிப்பிடுகையில் Al  முதல் A5 வரையிலான செல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. Al முதல் A5  வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட =average (Al:A5) எனத் தர வேண்டும். 
கீழ்க்கண்டவாறும் செல்களை மொத்தமாகக் குறிப்பிடலாம். LEFT என்பது கர்சர் இருக்கும் செல்லின் இடது பக்கம் உள்ள அனைத்து செல்களையும் குறிப்பிடும். இதே போல RIGHT, ABOVE, BELOWபோன்ற குறியீடுகளையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு செல்லின் மேலே உள்ள அனைத்துசெல்களின் கூட்டுத் தொகை வேண்டும் என்றால் SUM(ABOVE)  எனத் தர வேண்டும். இதே போல இடது பக்கம் உள்ள செல்களின் எண்களின் சராசரி வேண்டும் என்றால் = AVERAGE(LEFT) எனத் தர வேண்டும். 
டேபிள் ஒன்றில் கணக்கு ஒன்றை அமைத்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும். 1. எந்த செல்லில் கணக்கின் மதிப்பு எழுதப்பட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை நிறுத்தவும். 2. பின் Table  மெனுவைக் கிளிக் செய்து "Formula" என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Formula"  டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 3. இதில் Paste பங்ஷன் பாக்ஸில் எவ்வகையில் கணக்கிட விரும்புகிறோமோ அதற்கேற்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். எடுத்துக்காட்டாக எண்களைக் கூட்ட வேண்டும் என்றால் SUM என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். 4. இனி அதில் தரப்பட்டுள்ள அடைப்புக் குறிகளுக்குள் எந்த செல்களில் உள்ள எண்களைக் கணக்கிட வேண்டுமோ அவற்றைக் குறிக்கவும். எடுத்துக்காட்டாக (al, b4) எனக் குறிக்கலாம். இப்போது பார்முலா = SUM (al, b4)  என உருவாகி இருக்கும். இனி என்டர் தட்டினால் விடை கர்சர் இருந்த செல்லில் கிடைக்கும். இதே போல மற்ற வகைக் கணக்கீடுகளையும் டேபிளில் மேற்கொள்ளலாம்.



டிப்ஸ்... டிப்ஸ்....


என் வசம் வருமா வேர்ட் தொகுப்பு?


வேர்ட் செயல்படும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதன் ஸ்பெல்லிங், ஆட்டோ கரெக்ட், தோற்றம் என ஒரு சில விஷயங்கள் சிலருக்கு, சில காரணங்களால் தேவைப்படாமல் இருக்கலாம். எப்படி இந்த தொகுப்பை நம் வசப்படுத்துவது என சிந்திக்கிறீர்களா? உங்கள் விருப்பப்படி வேர்ட் தொகுப்பை வளைக்க அதனை செட் செய்திடலாம். பலவகையான செட்டிங்குகள் Tools  மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகை யான செயல்பாட்டிற்கென இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பதனைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல்பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதிரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடை யாளத்தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துவிட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என்னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும்.Viewமெனு வேர்ட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.



கிளிப் போர்டு எங்குள்ளது? 
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரிய வரும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கண்ணீரே ஒரு கிருமிநாசினி!

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?

ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும். லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது. இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

source:dinakaran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை: உகாண்டா நாட்டில் பலத்த எதிர்ப்பு


 

 

கம்பாலா(உகாண்டா):உகாண்டாவில், ஓரினச் சேர்க்கையாளர்களான, "கே'க்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள உகாண்டா நாட்டில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது.


அச்சட்டத்தில், "ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவளித்தால், ஊக்குவித்தால், முயன்றால், அவர்களுக்கு வீடுகள், அறைகள் வாடகைக்கு விட்டால் ஏழு ஆண்டுகள் சிறை; மத, அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளில் உள்ளவர்கள் அவர்களைப் பற்றி தெரிந்திருந்தும் தகவல் சொல்லாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை; எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள, "கே'க்களுக்கு மரண தண்டனை' என்று கடுமையான விதிகள் போடப்பட்டுள்ளன.இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் உகாண்டாவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பெரிய தொழிலதிபர்களும் சிறைக்குப் போக வேண்டி வரும்.இதை எதிர்த்து அந்நாட்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தரப்பில்,"இந்த மசோதா, உலகளவில் கடும் எதிர்ப்பை சம்பாதிக்கும். எய்ட்ஸ் ஒழிப்பு நடவடிக்கையில் பின்னடைவை உண்டாக்கும்.



ஆப்ரிக்கக் கண்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வலுவான நிலையில் இருப்பதால் இச்சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்' என்று தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அமெரிக்காவின் கன்சேர்வேடிவ் கட்சியின் கிறிஸ்தவ அமைச்சர்கள் சிலர், "ஓரினச் சேர்க்கையாளர்களை சராசரி உணர்வுள்ளவர்களாக மாற்ற சிகிச்சை அளிக்கலாம்' என்று யோசனை தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள, "கே' ஆர்வலர்கள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி வருகின்றனர். தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூலம் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த மாதம் நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தலைவர் பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்!

பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்!

''விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனும், உளவுத் துறை தலைவரான பொட்டு அம்மானும் கொல்லப்பட்டது உறுதியாகிவிட்டது. அவர்களின் மரணம் குறித்த ஆவணங்களை சிங்கள அரசு, இந்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதனால் விரைவிலேயே ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்!'' - கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிங்கள மீடியாக்கள் இப்படியரு செய்தியை முக்கியத்துவத்தோடு வெளி யிட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிங்கள அரசின் அறிக்கையாகவோ, அதிபர் மாளிகையின் செய்தியாகவோ இந்தத் தகவல் வெளியிடப்படவில்லை. 'இலங் கையின் அட்டார்னி ஜெனரல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட தகவலைச் சொன்னதாக'வே சிங்கள மீடியாக்கள் எழுதி வருகின்றன. அந்த அதிகாரி யார் என்று இலைமறை காயாகக் கூட சிங்கள மீடியாக்கள் குறிப்பிடாத நிலையில்... இந்திய மீடியாக்களும் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரப் போவதாக இதையட்டி ஒரு பரபரப்பைக் கிளப்பத் தொடங்கி இருக் கின்றன.

'ராஜீவ் வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் சிலரிடம் இதுகுறித்துப் பேசினோம். ''18 வருடங்களுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டிருப்பதே காங்கிரஸ் அரசுக்கு பெரிய அவமானம். ஆனாலும், அந்த வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா இப்போதும் முயலவில்லை. ராஜீவ் கொலை வழக்கின் பிரதான குற்றவாளிகளான பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாகச் சொல்லி, அந்த வழக்கை இந்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்தால்... அடுத்த கணமே புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியா விலக்கிக்கொள்ள வேண்டிவரும். இதற்கிடையில், ராஜீவ் கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவராகக் கருதப்படும் சந்திராசாமிக்கும் காங்கிரஸ் அரசுக்கும் ஏகப் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் சந்திராசாமி, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்ட பிறகே இந்தியாவுக்குத் திரும்புகிற முடிவில் இருக்கிறார். அதனால் இலங்கை அரசு எத்தகைய ஆதாரங்களை சமர்ப்பித்தாலும் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை இப்போதைக்கு முடியாது!'' என அடித்துச் சொல்கிறார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டும் நிர்வாகிகள் சிலரோ, ''பிரபாகரனும், பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதாக அரசுரீதியான அறிவிப்பு வெளியாகவில்லை. பொட்டு அம்மானின் உடல் கையில் சிக்காத நிலையில் எந்த ஆதாரத்தை சிங்கள அரசு இந்தியாவிடம் கொடுத்திருக்க முடியும்? சிங்கள அரசு ராணுவத்துக்கு தொடர்ந்து அதிக அளவில் ஆள் எடுத்து வருவதும், கோடிக்கணக்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதும் சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. அதனால்... புலிகளுடனான போர் முடிந்துவிடவில்லை என்றும் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரோடு இருப்பதாகவும் அவர்கள் மத்தியில் பேச்சு கிளம்பத் தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய எண்ணம் பெரிதாகப் பரவி விடாதபடி தடுக்கவே சிங்கள அரசு பிரபாகரன், பொட்டு அம்மான் மரணச் சான்றிதழை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதாக ஒரு செய்தியை சிங்கள மீடியாக்கள் மூலம் பரப்புகிறது. ஃபொன்சேகாவின் அதிரடிகள் பொறுக்காமல் அடுத்தடுத்தும் இந்திய, இலங்கை அரசுகள் என்னென்ன நாடகங்களை நடத்தப் போகின்றனவோ...'' என்கிறார்கள் இவர்கள்.

- இரா.சரவணன்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP