சமீபத்திய பதிவுகள்

இந்த வார இலவச இணைய தளம்

>> Wednesday, June 29, 2011


நம் ஆவணங்கள், செய்திக் குறிப்புகள், தகவல் அறிக்கைகளில் படங்கள் மற்றும் போட்டோக்களை இணைத்து தயாரிக்க விரும்புவோம். சரியான போட்டோக்களுக்கும் படங்களுக்கும் எங்கு செல்வது? என்ற கேள்வியோடு, இணையத்தைச் சுற்றி வந்த போது ஒரு தளம் கவனத்தைக் கவர்ந்தது.http://www.publicdomainphotos.com/ என்ற முகவரியில் உள்ள அந்த தளத்தில் 5,000 க்கும் மேற்பட்ட போட்டோக்களும், அதிகமான எண்ணிக்கையில் கிளிப் ஆர்ட் படங்களும் கிடைக்கின்றன. புகைப்படங்களைத் தேடிப் பெறுவதற்கு மிக எளிமையான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் போட்டோக்கள் வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் காட்டப் படுகின்றன. தேவைப்படும் போட்டோவிற்கான பிரிவில் கிளிக் செய்தால், படங்களின் முன் தோற்றக் காட்சிகள் கிடைக்கின்றன. பின் விரித்துப் பார்த்து நம் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். மிருகங்கள், கட்டடங்கள், நகரங்கள், பானங்கள், பூக்கள், உணவு, தோட்டம், பூச்சி வகைகள், உள் அலங்கார அமைப்பு, புல்வெளிகள், விளக்குகள், தாவரங்கள் என போட்டோ வகை பட்டியல்கள் நீள்கிறது. இந்த பிரிவுகளுக்குத் துணைப் பிரிவுகளும் கிடைக்கின்றன. இதனால் நம் தேடல் குறுக்கப்பட்டு நம் தேவைகளை எளிதாக நிறைவேற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, landscapes என்னும் பகுதியில் fields, forests, lakes, mountains, roads, and sky என அதன் வகைகள் விரிகின்றன. ஒருமுறை சென்று பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது!

>> Tuesday, June 28, 2011


ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தாலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது!
 

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன எனினும், அங்குள்ள மக்களின் விசுவாசம் வளர்ந்து வருவதோடு, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என்று கட்டாக் - புவனேஷ்வர் பேராயர் பார்வா கூறியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி வத்திக்கான் வந்திருந்த பேராயர் பார்வா பீட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ மதம் எப்போதும் இரத்தம் சிந்தும் நேரங்களில் விசுவாசத்தில் வளர்ந்துள்ளது என்ற வரலாற்றிற்கு ஏற்ப, ஒரிசாவிலும், 2008 ஆம் ஆண்டு நடந்த வன்முறைகளால் அங்குள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசம் இன்னும் ஆழப்பட்டுள்ளது என்று பேராயர் கூறினார். தலித் மற்றும் பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாய் நடத்தப்பட்டு வந்த ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவப் பணியாளர்கள் அம்மக்களிடையே மனித உரிமைகள், மனித மதிப்பு ஆகிய எண்ணங்களைப் புகுத்தி வருவது பாரம்பரிய இந்து சாதிய அமைப்பிற்குப் பெரும் சவாலாக இருப்பதே இந்த வன்முறைகளின் முக்கிய காரணம் என்று பேராயர் பார்வா தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
கந்தமால் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களுக்குக் காரணமான 13 பேருக்கு அம்மாநிலத்தில் இயங்கும் துரித நீதிமன்றம் அண்மையில் ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது என்றும், அதே நேரம் மற்றொரு நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட வேறு 12 பேரை விடுதலை செய்துள்ளதென்றும் யூகான் செய்தி குறிப்பு கூறுகிறது

source:namvalvu
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இலங்கைக்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

>> Monday, June 27, 2011


அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி
அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

கொழும்பு, ஜூன். 27- 
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.  
தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.
எனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.  
பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.  
பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.  
இதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.
கோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

iPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்

>> Sunday, June 26, 2011


iPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்-சீன யுவதி அதிரடி!

June 26, 2011
சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த தயாரிப்புக்களை வாங்குகின்றமைக்காக மிகவும் பாரதுரமான தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.
ஐ போன் ஒன்றுக்காக கற்பை பண்டமாற்று செய்ய முன் வந்து உள்ளார் கட்டிளம் யுவதி ஒருவர். இவருடைய இலட்சியக் கனவு ஐ போன் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது. ஆனால் இவரது தகப்பன் ஐ போன் வாங்கிக் கொடுக்கின்றார் இல்லை.
சீனாவின் சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்று வெய்போ ஐ போனை தரக் கூடிய எவரேனும் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றமைக்கு தயார் என்று வெய்போ மூலமாக அறிவிப்பு விடுத்து உள்ளார். அடிப்படைத் தகவல்களுடன் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்து உள்ளார். 1990 களில் பிறந்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரது அறிவிப்பு இணைய மற்றும் ஊடக உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இவரது அறிவிப்புக்கு வெய்போ சமூக இணைப்பு இணையத் தள பாவனையாளர்களிடம் இருந்து வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கற்பு என்பது விலை மதிப்பற்றது , ஐ போன் ஒன்றுக்காக இழக்கப் பட வேண்டியது அல்ல என்பது கண்டனங்களின் அடிப்படையாக உள்ளது.
சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது பையன் ஒருவர் ஐ பாட் , ஐ போன் ஆகியவற்றை வாங்குகின்றமைக்காக ஒரு சிறுநீரகத்தை விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

source:viyapu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மைக்கேல் ஜாக்சனின் சகோதரி அதிர்ச்சி தகவல் வெளியீடு

>> Friday, June 24, 2011


நியூயார்க்: யானை இறந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்து வதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.

அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். கலிபோர்னியாவில் அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார்.தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும்அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர்இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம்இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஆடையில்லாத ஆட்டம்

>> Thursday, June 23, 2011

மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளாலும் நடனமாட முடியும் என்றால் எம்மால் நம்ப முடியுமா?ஆனால் இக்காணொளியில் கொரில்லாவின் நடனத்தினைப் பார்த்தால் நம்பித்தான் ஆக வேண்டும். இக்காணொளியானது தற்போது யுடியுப் இணையத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இக்கொரில்லாவின் பெயர் சூலா. இது ஆரம்பத்தில் நியூயோர்க்கில் உள்ள புரொங்க்ஸ் மிருகக்காட்சிச் சாலையிலிருந்து கனடாவின் கல்காரியிற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த கொரில்லா இனமானது அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



source:puthiyaulakam

StumbleUpon.com Read more...

சுண்டெலியை கடித்து தின்ற வாலிபர்; வீடியோவில் பதிவு


சுண்டெலியை கடித்து தின்ற வாலிபர்; வீடியோவில் பதிவு செய்ததால் சிக்கினார்

லண்டன், ஜூன். 23-
 
சுண்டெலியை கடித்து தின்ற வாலிபர்; 
வீடியோவில் பதிவு செய்ததால் சிக்கினார்
இங்கிலாந்தின் உட்டா நகரைச் சேர்ந்தவர் ஆன்டி ரே ஹாரிஸ். இளைஞரான இவருக்கு, சிறிய உயிரினங்களை பிடித்து, அவற்றை கொடூரமான முறையில் மென்று சாப்பிடுவது மிகவும் பிடித்தமானது.
 
சமீபத்தில், ஒரு சுண்டெலி இவரது கையில் சிக்கியது. பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன அந்த சுண்டெலிக்கு முடி கூட இல்லை. அந்த சுண்டெலியை ஹாரிஸ் தனது வாயில் போட்டு மென்று, விழுங்கினார்.
 
பின் னர் ஒரு கோப்பை தண்ணீரை குடித்து, ஏப்பம் விட்டார்.இந்த காட்சியை ஹாரிஸ் தனது வீடியோ காமிராவில் பதிவு செய்தார். பின்னர், தனது பேஸ்புக்கில் அதை வெளியிட்டார்.
 
இந்த காட்சியை கண்ட விலங்கின ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விலங்குகளை பாதுகாக்கும் “மீட்டா” அமைப்பு மூலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஹாரிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹாரீஸை போலீசார் தேடி வருகின்றனர்.

StumbleUpon.com Read more...

சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள்ளும் கனிமொழி

>> Wednesday, June 22, 2011



புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, ஓய்வு நேரத்தில் மெழுகுவத்தி செய்ய கற்றுக்கொள்வதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், புத்தகங்களை படிப்பதில் நேரத்தை கழித்து வந்தார். இந்நிலையில், தற்போது, தன் ஓய்வு நேரங்களில், பெண் கைதிகளோடு இணைந்து மெழுகுவத்தி தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது ஜாமின் மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட போதும், அதுகுறித்து எந்தவித வருத்தமும் அடையாமல் சிறையில் இயல்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம், கனிமொழியின் தந்தை கருணாநிதியும், தாயார் ராஜாத்தியும் சிறைக்கு வந்து, கனிமொழியை சந்தித்தனர். அப்போது, அவருக்குப் பிடித்தமான முறுக்கு உள்ளிட்ட உணவுப் பண்டங்களை கொடுத்துவிட்டுச் சென்றனர்.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்


சவுதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்

.18-
சவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டு பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
ரியாத்தில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.   இருந்தும் முஸ்லிம் பெண்களின் கார் ஓட்டும் ஆர்வத்தை அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வெள்ளிக்கிழமையான நேற்று பர்தா அணிந்திருந்த ஏராளமான பெண்கள் தடையை மீறி சர்வ சாதாரணமாக கார் ஓட்டி சென்றனர். தங்களின் உரிமையில் சவுதி அரசாங்கம் தலையிட உரிமை கிடையாது. சட்டத்தின் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என பேஷ்-புக்  மற்றும் டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் தங்களின் கருத்தை தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

>> Tuesday, June 21, 2011

அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு இலவச தமிழ் வேதாகமம்

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" எனச் சொல்லி உலகத்திற்கு ஒளியாய் வந்த இயேசுகிறிஸ்துவை இன்னும் அறியாதவரா நீங்கள்?
மறுபடியும் பிறந்த அனுபவம் இன்னும் இல்லாத நண்பரா நீங்கள்?
கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களல்லாத ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தை பற்றி மேலும் அறிய விரும்பும் தமிழ் நண்பர்களுக்கு இலவசமாக தமிழ் வேதாகமங்களை பரிசளிக்க விரும்புகிறோம்.
கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பினால் மேற்கொண்டு விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.

thewayofsalvation@yahoo.com

இத்தகவலை கிறிஸ்தவரல்லாத உங்கள் மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

From "The way of salvation" ministry we are glad to issue free tamil bibles for non Christians /non believers who are interested in learning more about Jesus Christ.
Right now we are taking requests only from residents of USA and Canada.
Please send us a email at

thewayofsalvation@yahoo.com

We will contact you with further information.
Please share this information with your non-christian tamil friends.
God bless you all.


source:.thewayofsalvation

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

டில்லி திகார் சிறையில் கருணாநிதி;!!

 

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான, கனிமொழி ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருக்கும் மகளை சந்திப்பதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்று காலை 8.30மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார்.

சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழியின் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்த கருணாநிதி, மிகுந்த மனவேதனை அடைந்தார். முன்னாள் அமைச்சர்களை, கோபாலபுரம் வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். பின், சிறையிலிருக்கும் மகளை சந்திக்க டில்லி செல்ல முடிவு செய்தார். நேற்று, நிருபர்களை சந்திப்பதை தவிர்த்தார். கருணாநிதி, இன்று காலை, 8.30 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, கருணாநிதிபி.ஏ.சண்முகநாதன், தலைமையிடத்து செயலாளர்காஜாமொகைதீன் மற்றும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பாண்டியன், வினோதன், கணேசன்,டாக்டர் பிரவீன் உதவியாளர் நத்தியானந்தம் உட்பட10 பேர் செல்கின்றனர்.


டில்லி செல்லும் கருணாநிதி, தனியார் ஓட்டலில் தங்குகிறார். திகார் சிறைக்கு சென்று, மகள் கனிமொழியை சந்தித்து பேச உள்ளார். மகளை வெளியில் கொண்டு வர, அடுத்து என்ன செய்வது என, சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்திருப்பதாகவும், அவர் திரும்பி வரும் தேதி முடிவாகாததால், ஓரிரு நாட்கள் டில்லியிலே தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சீனாவின் அட்டூழியம்

>> Monday, June 20, 2011

தரையையும் தரவில்லை தண்ணீரையும் விடவில்லை: சீனா அட்டூழியம்

image.png

இமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.


பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.


சீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம்

>> Friday, June 17, 2011

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்! சீமான் பரபரப்பு பேச்சு!!
Director Seeman speach
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்த‌னர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார். அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார். 

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்; பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இப்படியிருக்க... டைரக்டர் சீமானோ... ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது... அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்

StumbleUpon.com Read more...

காப்பாற்றப்பட்ட தமிழகம்:ரஜினி கொடுத்த வாய்ஸ் சிங்கப்பூரில் இருந்து............

>> Wednesday, June 15, 2011



சென்னை: "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தலையனை மனிதன் (வீடியோ இணைப்பு)

>> Tuesday, June 14, 2011

தலையனை மனிதன் என அழைக்கப்பட்ட பிரின்ஸ் ரான்டியன்(வீடியோ இணைப்பு)
June 14, 2011
இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த Prince Randian என்பவர். இவர் 1871 ம் ஆண்டு பிறந்தவர் பிறக்கும் போதே கைகள் மற்றும் கால்கள் இன்றியே பிறந்தார். பின்னர் 1934 ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார். தனது வேலைகளை மற்றொருவர் துணையின்றி தானே செய்பவர். இவர் வாழ்ந்த காலங்களில் எல்லோராலும் தலையணை மனிதன் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது











source:viyappu

StumbleUpon.com Read more...

மைசூர் நகருக்குள் யானை அட்டகாசம்(படம் இணைக்கப்பட்டுள்ளது)

மைசூர் நகருக்குள்  இரண்டு யானைகள் அட்ட்காசம் செய்தன.ரோட்டில் சென்ற வாகனங்கள் ,மனிதர்கள்,கால்நடைகள் எல்லாவற்றையும் துவசம் செய்தது.அந்த சம்பவத்தில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Mad Elephant

In India, two elephants broke into a suburb of the city of Mysore, in the southern Indian state of Karnataka. They emerged from the woods and become like a mad destroy everything in its path. They attacked the livestock grazed the cars going by and tried to trample the people who stand in their way. Three hours of elephants held in h0rror the whole town, until they had no effect tranquilizer. 05 More images after the break...




StumbleUpon.com Read more...

பெண்களை இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சிக் காட்சி

>> Monday, June 13, 2011


வன்னியில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சிக் காட்சிகளை வெளியிட்ட சனல் – 4! (வீடியோ இணைப்பு)





பெண்போராளிகள் இருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றிய இசைப்பிரியாவும் உள்ளடங்கலாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
சனல் 4 இனது காணொளி வெளியீடானது மகிந்த ராஜபக்ஸ லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்நிலையில் அவரது இராஜதந்திர நகர்வுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அமைப்புக்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிய வருகின்றது.

StumbleUpon.com Read more...

தமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

>> Sunday, June 12, 2011

image.png

மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் மேலும் 53 மொழிகளில், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம், அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில், மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.
இந்த பிரவுசர் வெளியான போது, மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 1990 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்க,

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை

>> Friday, June 10, 2011


 

ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது... 

1. `நாம கொஞ்சம் பேசணும்
'

உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.

`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்' என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.

`பேசுவது' எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும். 

பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.

எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது. 

2. `நீங்க அம்மா பையன்'


பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க... உங்க அம்மா இப்படிப் பண்றாங்க', `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்' என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.

பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை... உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு' என்று கூறுவதையும் விரும்புவதில்லை.

பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.

3. `உங்க நண்பரைப் பாருங்க'
 

`உங்க நண்பரைப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா...' என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.

இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை'யே காதலிச்சிருக்கலாம்' அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்' என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும். 

பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும். 

கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. `நீங்க எப்பவும் இப்படித்தான்... 

திருந்தவே மாட்டீங்க' முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை. 

ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்' என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும். 

அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.

மாறாக, நொந்த வேளையில் `லந்து' செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்...' என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல...' என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை. 

5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு' 

மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை' என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை' அடிச்சுட்டு வாங்க' என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே... இப்போ தடியிடையா ஆயிட்டே...' என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா?

source;viyappu
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல்கலையில் படிப்பு

image.png


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.


கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்' என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.


10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை வந்துள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது: மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். அப்போது தான் அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.


பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக் கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன், என்றார்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP