சமீபத்திய பதிவுகள்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

>> Monday, May 31, 2010


அவினாசி : மழை பொழிய வேண்டி, அவினாசி அருகே குமாரபாளையத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் இந்த வினோத திருமணத்தில், தண்டுக்காரன்பாளையம், அவிநாயிபுதூர், தாளக்கரை, தொட்டியனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திருமணத்துக்காக இரு தவளைகள் தயாராக பிடித்து வைக்கப்பட்டிருந்தன.



நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆண் மற்றும் பெண் தவளைக்கு தனியாக பச்சைத் தென்னை ஓலைகளால் குடிசை கட்டப்பட்டது. குமாரபாளையம் புதுக்காலனியினர் மணமகள் வீட்டாராகவும், பழைய காலனியினர் மணமகன் வீட்டாராகவும் இருந்தனர். திருமண நிகழ்ச்சியில் செய்யப்படுவதைப் போலவே நிச்சயதார்த்தம், முகூர்த்த கால் நடுதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை 6 மணி முதல் மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு, நாதஸ்வர மேளம் முழங்க 6.30 மணிக்கு பெண் தவளைக்கு, ஆண் தவளையை வைத்திருந்தவர் தாலி கட்டினார். மணமகள் தவளைக்கு சீதனமாக சிறிய மாலையும், துண்டு துணியும் அணிவிக்கப்பட்டது. திருமணத்தையடுத்து, இரு வீட்டாரும் மணமக்களுடன் ஊர்வலமாக தண்டுக்காரன்பாளையம் குளத்துக்குச் சென்றனர். முற்றிலும் வற்றிப் போய், செடி, கொடி, முட்புதர்களுடன் மண்டிக் கிடந்த குளத்திற்கு நடுவில், சிறிய குழி வெட்டி தண்ணீர் நிரப்பினர். மணமக்களுக்கு பூஜை செய்யப்பட்டு, தேங்காய், பழம் உடைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கூடியிருந்த இரு வீட்டாரும் ஒரே குரலில், "மழை பெய்ய வேண்டும்' என்று கூறி, தவளைகளை அக்குழியில் விட்டனர். ஒரே "ஜம்ப்' அடித்த இரு தவளைகளும் அங்கிருந்து "எஸ்கேப்' ஆகிவிட்டன. மணமக்கள் வீட்டார் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.



தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த மணியாட்டி ரங்கசாமி கூறுகையில், ""கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை பெய்யவில்லை. உடனே தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்; நன்றாக மழை பெய்து குளம் நிரம்பியது. அதே போல் இப்போதும் செய்தோம். எங்களது பிரார்த்தனையால், கண்டிப்பாக மழை பெய்யும் என்று நம்புகிறோம்,'' என்றார்.


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உணர்ச்சிப்பூர்வமான செம்மொழி மாநாட்டுப்பாடல் காணொளி


StumbleUpon.com Read more...

வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார்


பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. "இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது' என்று ரவிசங்கர் தெரிவித்தார்.பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.


அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் : இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்பதாவது நாளான நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தொடர்ந்து வந்த வினய் என்ற பக்தரின் கையில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது.இதனால், ஆசிரமத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


உடனடியாக, அவர் பாதுகாப்பாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பக்தர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ரவிசங்கர் மிக அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, பக்தர்களை பாதித்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி குண்டை சுற்றியிருந்த கவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, ஆசிரமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


"நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் : கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். ஆசிரமத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கர்நாடகா டி.ஜி.பி., அஜய்குமார் சிங் விரைந்துள்ளார்,'' என்றார்.இச்சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் கூறுகையில், ""நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது. மீடியாவையும், பத்திரிகையாளர்களையும் இன்று சந்தித்து விளக்கமாகக் கூறுகிறேன்,'' என்றார்.


இது குறித்து ரவிசங்கரின் தனிச் செயலர் கிரிகோவிந்த் கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த சம்பவத்தில் மர்ம நபர், 0.22 ரைபிளை பயன்படுத்தியுள்ளார்,'' என்றார்.


ஏற்கனவே பாதுகாப்பில் உள்ளார் : சம்பவம் குறித்து ராமநகரம் டி.எஸ்.பி., தேவராஜ் கூறுகையில் ; இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் முதலில் எதுவும் கூற முடியாது . சம்பவ இடத்தில் போலீஸ் மோப்ப நாயுடன் , தடயவியல் நிபுணர்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாது. சுவாமிக்கு எவ்வதி அச்சுறுத்தலும் இல்லை அதே நேரத்தில் ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யார் வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


துப்பாக்கியால் சுட்டவன் யார் ? : ஆசிரமத்தில் நடந்து கொண்டிருந்த சஸ்தாங் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர். இந்த வளாகம் காம்பவுண்ட் சுவர் இல்லாதது. நிகழ்ச்சி முடிந்து வந்ததும் மர்ம மனிதன் சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டவனை ஆசிரம பாதுகாவலர் மற்றும் பக்தர்கள் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்தாகவும் ஆசிரம வட்டாரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மர்ம மனிதன் குறித்து எவ்வித தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.


அமைதியை பரப்புவதே என் லட்சியம் : தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் ; ரவிசங்கர் சிறப்பு பேட்டி : துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் நிருபர்களிடம் பேசினார். அவர் இன்று ( திங்கட்கிழமை ) பேட்டியின் போது கூறியதாவது ; நான் அமைதியையும், ஆன்மிகத்தையும் பரப்பி வருகிறேன் . இது தான் எனது இலட்சியம்.  எனக்கென எதிரிகள் யாரும் இல்லை. எனது ஆசிரமத்தில் நடந்த சஸ்தாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தான் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. மற்ற மத ரீதியிலான அமைப்பினர் யாரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை .


நான் என் மீது தாக்குதல் நடத்த வந்தவனை ஏற்கனவே மன்னித்து விட்டேன். தாக்குதல் நடத்த வந்தவனை என் ஆசிரமத்தில் சேர அழைக்கின்றேன். அஹிம்சையே எப்போதும் வெற்றி பெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். சில மக்கள் என் மீது தாக்குதல் நடத்த நினைக்கின்றனர். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மிரட்டல் மூலம் எனது ஆன்மிக பணியை நிறுத்தி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பஜனை பாடல் பாடப்பட்டது. பின்னர் கையை அசைத்தபடி ஆசிரமத்திற்குள் புறப்பட்டு சென்றார்.


source:dinamaalr


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவ மதத்தை பரப்பும் தினமலர்!!!???

>> Sunday, May 30, 2010

http://img.dinamalar.com/data/albums/large/003715194.jpg

தனுஷ்கோடியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை மண்டபம்


தினமலர் இணையதளத்தை பார்வையிட்ட போது இது போன்ற ஒரு சர்சுடைய படத்தை வெளியிட்டு இருந்தது.

அதில் இருக்கும் பைபிள் வாசகம்

"நீ தேடும் நிம்மதி இயேசுவிடம் உண்டு"

"இயேசுவே வழியும்,ஜீவனும்,சத்தியமுமாய் இருக்கிறார்"

"இயேசுவாலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை"


"உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்"


ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது.இலவசமாக விளம்பரம் செய்துள்ள தினமலருக்கு நன்றி.

இது போல தமிழகமெங்கும் இருக்கும் கோயில்களை(பொது இட ஆக்கிரமிப்பு)படம் பிடித்துப்போடுமா இந்த தினமலர்???










StumbleUpon.com Read more...

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்?!





.

ங்கும், எதிலும், எப்போதும் தாங்கள்தான் முந்தி இருக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கர்கள், செல்போன்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? உலக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன்! சராசரியாக, ஒரு அமெரிக்கர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகிறாராம். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு செல்போனை உபயோகிப்பது இல்லையாம் அமெரிக்கர்கள். 2.3% பேர் மட்டுமே தங்களுடைய பழைய செல்போனை மறுசுழற்சி செய்ய உபயோகப்படுத்துவதாகவும் மீதி 7% பேர் அதைக் குப்பையில் வீசுவதாகவும் சமீபத்திய சர்வே சொல்கிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்புச் சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாகப் பாதிக்கப்படும். இதனால், அடிக்கடி செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அமெரிக்காவில். நடப்பு நிலவரப்படி சுமார் 250 ஆயிரம் டன் எடை மதிக்கத்தக்க 500 மில்லியன் செல்போன்கள் குப்பைத் தொட்டிகளுக்குக் காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும், புதிதாக ஐந்து மில்லியன் செல்போன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித உலக மக்கள் தொகைக்குச் சமம் என்று International Telecommunication Union சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.


நிற்க... 1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 'மேரி கிறிஸ்துமஸ்' என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992). இன்று அமெரிக்காவில் மட்டுமே நாளன்றுக்கு 4.1 மில்லியன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். யு.எஸ் முழுக்க எஸ்.எம்.எஸ்தான்போல!--


source:vikatan

http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அலிபாபா கதையில் 'ஆபாசம்

>> Saturday, May 29, 2010

  
 
ஆயிரத்தோர் அரேபிய இரவுக் கதைகள் புத்தகம்
பழங்காலத்து கதைகளில் ஆபாசம் இருப்பதாக புதிய சர்ச்சை
ஆயிரத்து ஓர் இரவுகள் என்ற பழங்காலத்து அரபுக் கதைகளின் சில பகுதிகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அக்கதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எகிப்தின் வழக்குரைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னித் தீவு சிந்துபாத், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற சாகசக் கதைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றவை.

இந்தக் கதைகள் மத்திய கிழக்குப் பகுதியையும் தெற்காசியாவையும் கதைக்களங்களாக கொண்டுள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை இவை.

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த ஓர் உலகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இன்றளவும் இக்கதைகள் ரசிகர்களை ஈர்த்துவருகின்றன.

புத்தகமாக மட்டுமல்லாது திரைப்படங்களாகவும் கார்டூன் படங்களாகவும் வெளிவந்து எல்லா வயதினரையும் இக்கதைகள் வசீகரித்துள்ளன.

எகிப்தில் அண்மையில் வெளியான இக்கதைகளின் புதிய பதிப்பு கூட வெளிவந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளன.

ஆனாலும் தற்போது அங்கு இக்கதைகள் தொடர்பில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

அந்தக் கதைகளில் சில இடங்களில் பாலியல் உணர்வையும் காம உணர்வையும் வெளிப்படுத்தும் பத்திகள் இருக்கின்றன. உடலின் அங்கங்களை வருணிக்கும் வாசகங்கள் இருக்கின்றன.

அந்தக் கதைகளில் வரும் கவர்ச்சியான வர்ணனைகள் ஆபாசமாக உள்ளதாக இஸ்லாமிய சட்டத்தரணிகள் சிலர் கூறுகின்றனர். ஆதலால் இந்தப் புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

'கைவிலங்குகள் அற்ற வழக்குரைஞர்கள்' என்ற பெயர் கொண்ட அமைப்பைச் சார்ந்த அவர்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் வரும் இப்படியான வர்ணனைகள் மனிதன் தவறான பாதையில் செல்லத் தூண்டுவதாகக் வாதிடுகின்றனர்.

"ஆனால் இஸ்லாத்தை கட்டுப்பட்டித்தனமாக அர்த்தப்படுத்துகின்ற ஒரு போக்கிற்குள் இவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். ஆனால் எகிப்து காலாகாலமாக மதத்தைப் புரிந்துகொண்ட விதத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது." என்கிறார் எகிப்திய எழுத்தாளர் அல்லா அல் அஸ்வனி.

இந்த சட்டத்தரணிகள் ' தாலிபான்கள் போல' நடந்துகொள்கிறார்கள் என எகிப்திய எழுத்தாளர்கள் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

பழமையும் செழுமையும் நிறைந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட எகிப்தில் கடும்போக்கு இஸ்லாத்துக்கும் சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாத்துக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

source:BBC

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

முஸ்லீம்களின் பள்ளிவாசலில் துப்பாக்கி சுடு நடத்தும் முஸ்லீம்கள்

>> Friday, May 28, 2010

முஸ்லீம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களின் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்கள்



பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்
2 மசூதிகளில் புகுந்து சுட்டனர்: 80 பேர் குண்டு பாய்ந்து பலி


லாகூர், மே.29-

பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர்.

மசூதிகளில் நுழைந்தனர்

பாகிஸ்தானில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று லாகூர் நகரில் 2 மசூதிகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலி ஆனார்கள்.

லாகூரில் மாடல் டவுண், கர்கி சாகு ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை அகமதி பிரிவினரின் மசூதிகளில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.45 மணி அளவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் திடீரென்று தீவிரவாதிகள் அந்த மசூதிகளுக்குள் புகுந்தனர். அவர்களில் சிலர் உடலில் வெடிகுண்டு ஜாக்கெட்டுகளையும் அணிந்து இருந்தனர்.

தாக்குதல்

உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பாதுகாப்பு தேடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். சிலர் அங்குள்ள அறைகளுக்குள் சென்று பதுங்கினார்கள்.



இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் 2 மசூதிகளுக்கும் சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் பணயகைதிகளாக இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

80 பேர் பலி

தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடல் டவுண் மசூதி தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் ஒருவர் ஆவார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதல் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற டி.வி. நிருபர் ஒருவர் குண்டு காயம் அடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்தார். இதில் சில போலீசாரும் அடங்குவார்கள்.

தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சிலர் போலீசாரும் உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் தலைகள்

மாடல் டவுண் மசூதியில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும், 2 பேர் காயத்துடன் பிடிபட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்கி சாகு பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதோடு, தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அவர்கள் பலியானதாகவும், துண்டாகி கிடந்த அவர்களுடைய தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தலைவர் சஜ்ஜத் புட்டா தெரிவித்தார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதலில் மட்டும் 40-க்கும் அதிகமான பேர் உயிர் இழந்ததாக மீட்புக்குழுவின் செய்தித்தொடர்பாளர் பாகிம் ஜகன்ஜெப் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.

source:dailythanthi
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இதெல்லாம் கொஞ்சம் "ஓவர்!'

 





பெங்களூரு : எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கல்ல, பெங்களூரில்! கொஞ்சம், "ஓவரா' தெரியுதுல்லே?


பெங்களூரிலுள்ள, "போடர் ஜம்போ கிட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக்கூடத்தில், தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில், எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளின் மனவளர்ச்சி, பேச்சுத்திறன், உடல் தகுதி போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் தினசரி பாடங்களும், பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு, "மனவள மேம்பாடு' என்று பெயரிடப்பட்டுள்ளது.


குழந்தைகள் விரும்பும் வண்ணங்களை கொண்டு, எளிமையான படங்களும், எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஒரு வயதுக்குபட்ட இந்த குழந்தைகளுடன், அவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். வகுப்புகள் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். பெற்றோர்களிடம் இந்த மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், பல்வேறு இடங்களில் இந்த பள்ளிகளை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை மாறி போய், பள்ளிகளின் அரவணைப்பில் குழந்தைகள் வளரும் காலம் வந்து விட்டது.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்

 

குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து மறைமுகமாக அனுப்பத் தொடங்கி உள்ளனர். கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும். இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம். அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.
இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது. குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]'  அல்லது '[xx].search.yahoo.com'  என டைப் செய்தாலும், உடனே 89.149.xxx.xxx  என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம். எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும். உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ரயில்வே துறைக்கு எதிராக 65 தாக்குதல்; இன்று பலி 65 ;காயம்; 200 ; ரூ. 500 கோடி இழப்பு

 


கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 70  பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மாவோ., நக்சல்கள் நடத்தி வரும் வெறி தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதே தவிர மத்திய அரசு இன்னும் ஓடுக்கும் விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

 

தொடர்ந்து வரும் தாக்குதல்கள் : இந்தியாவில் மவோயிஸ்ட் நக்சல்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளனர். பெரும் உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து தேசம் என மத்திய அரசுக்கு விடாத தலைவலியாகவே இருந்து வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த நக்சல்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேரை கண்ணி வெடி வைத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநேரத்தில் நக்சல்கள் ஒடுக்கும் விஷயத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 76 வீரர்களை கொன்றதாக 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மே மாதம் 17 ம் தேதியன்று சட்டீஸ்கரில் பயணிகள் பஸ் ஒன்று கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் 36 பேர் கொல்லப்ட்டனர். இதில் 12 பேர் சிறப்பு படை போலீசார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர், இதிலும் சில வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் இவர்கள் தாக்குதல் வெறி அடங்காமல் அவ்வப்போது அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 14 ம் தேதி டீசல் ஏற்றிவந்த டாங்கர் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

 

வெடிக்கும் சப்தம் கேட்டது: இன்று ( வெள்ளிக்கி‌ழமை ) அதிகாலை 1. 30 மணி அளவில் மேற்குவங்கத்தில் இருந்து மும்பை நோக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மேற்கு மிட்னாபூரில் தண்டவாளத்தில் பெரும் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதனையடுத்து ரயில் கவிழ்ந்தது. இதில் 13 ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி சரிந்து விழுந்தன. பயணிகள் அலறல் சப்தம் மட்டுமே அதிகம் ஒலித்ததாக அருகில் இருந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் 65  பேர் வரை உயிரிழந்து விட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். இதில் பலர் ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியபடி இருக்கின்றனர். கோல்கட்டாவில் இருந்து 135 கி.மீட்டர் தொலைவில் கேமாசோலி, சார்தியா ரயில்வே ஸ்டேஷன் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.

 

வெல்டிங் மூலம் உடைத்து மீட்பு : ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்றாக மோதி கிடப்பதால் பயணிகள் பலர் பெட்டிகளின் உடைந்த இரும்பு தளவாடங்கள் இடையே சி்க்கியிருக்கின்றனர். இவர்கள் மீட்கும் பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்க வெல்டிங் மூலம் தளவாடங்கள் உடைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர்.

 

சம்பவ இடத்தில் மம்தா: சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார். மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார். இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.

 

தாமதமாக வந்த மீட்பு படையினர்: அதிகாலை பொழுதில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு படையினரின் தாமத வருகைக்காக காத்திருந்தனர். 1. 30 மணி அளவில் சம்பவம் நடந்து உதவி கேட்டு கதறிக்கொண்டிருந்தோம், ஆனால் மீட்பு படையினர் 5 மணி அளவில் தான் வந்து சேர்ந்தனர். என்றனர் விபத்தில் சிக்கிய பயணிகள் வே‌தனையோடு.

 

நாங்கள் பொறுப்பல்ல மம்தா பேட்டி : சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா கூறுகையில்: இது நக்சல்கள் நடத்திய சதி திட்டம். இந்த சம்பவத்திற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது. பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.முற்போக்கு கூட்ணியில் அங்கம் வகிப்பதால் உள்துறை குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை என்பதே பேட்டியின் உள் குறிப்பு.

 

இது சதிச்செயலாக இருக்கும் என்கிறார் ப. சி., : இந்த தாக்குதல் சம்பவம் நக்சல்களின் சதிச்செயலாக இருக்கும் என கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் வெடித்தனவா என்பகு குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

 

மம்தா பேச்சுக்கு எதிர்ப்பு : மம்தாவின் மாநில அரசின் மீது குறை கூறுவது பொறுப்பற்ற செயல் என்று பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரர். தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இவரது பேச்சு தவறானது என்றும் ரயில்‌ பாதுகாப்பில் ரயில்வே துறைக்கும் பொறுப்பு உண்டு என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரயில்வே துறைக்கு ரூ 500 கோடி நஷ்டம்: ரயில்வே துறைகை குறி வைத்து நக்சல்களின் கடந்த ஆண்டு தாக்குதல் மொத்தம் 65 . இதில் மே மாதம் மட்டும் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ரயில்வே சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், தண்டவாளம் தகர்ப்பு , ரயில்வே அலுவலகம் சூறை , குண்டு வைத்தல் முக்கிய வேலையாக ‌நக்சல்கள் செய்து வருகின்றனர். இதுவரை ரூ. 500 கோடி ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.



source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கூர்கா லீக் தலைவர் கொலை காட்சிகள் யூடியூபில் வெளியானதால் பரபரப்பு

Madan Tamang, President All India Gorkha League 

டார்ஜிலிங் : கூர்கா லீக் தலைவர் மதன் தமாங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ( 21.05.10) அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவரது ஓட்டல் அறையில் இருந்து இந்த வீடிஙயோவை எடுத்துள்ளார். வீடியோவில் மஞ்சள் நிற சட்டை அணிந்த ஒருவன் குர்கி எனப்படும் ஆயுதத்தால் தமாங்கை தாக்கி விட்டு ஓடுவதும், பின்னர் மீண்டும் திரும்பி வந்து தமாங் இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்து விட்டு ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் யூடியூபில் வெளியாகியுள்ளன. இது வீடியோ பரவலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுரம்: பக்தர்கள் அதிர்ச்சி

>> Thursday, May 27, 2010


 

சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது.  பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.  காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை,  திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுந்தன.


சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.



ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை' என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழக இளைஞர் சாதனை

>> Wednesday, May 26, 2010

 

சென்னை : எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழக இளைஞர் என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(26); இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கப்பூரில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த இரு ஆண்டுகளில், மேற்கு ஐரோப்பாவில் உள்ள சோ ஓயோ(8,201 மீ), ஆப்ரிக்காவின் கிளிமன்ஜரோ (5,895 மீ) உள்ளிட்ட பல சிகரங்களில் ஏறியுள்ளார். இந்தியாவில் 53 சதவீதம் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். நாட்டின் முக்கிய பிரச்னையான இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சந்தோஷ்குமார் தமது ஐவர் குழுவுடன், நேற்று முன்தினம் காலை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த பயணத்தை அவர், கடந்த மார்ச் 29ம் தேதி சென்னையிலிருந்து துவக்கினார். தமிழகத்திலிருந்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய, சென்னையைச் சேர்ந்த முதல் இளைஞர் என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார். எவரெஸ்ட் சிகரம் ஏறியவுடன் அங்கு, "தமிழ் வாழ்க' என்று எழுதப்பட்ட பதாகையை வைத்தார். தமது சாதனைப் பயணத்திற்கு நிதியுதவி அளித்த, "கார்ப்பரேட்' நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளையும் எவரெஸ்ட் சிகரத்தின் பல இடங்களில் வைத்தார். சந்தோஷ் குமாரின் எவரெஸ்ட் சிகர பயண அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களை blog.climbeverestwithme.com என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஈழ விடுதலை கிடைக்கும் வரை ஓய்வில்லை ராம் நேர்காணல்

ஈழ விடுதலை கிடைக்கும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை
இயக்குநர் ராம் நேர்காணல்


 கற்று தமிழ் திரைப்படம் மூலமாக தமிழகத்தில் அறிமுகமான இயக்குநர் ராம் தன் படத்தில் தமிழ் படித்தால் என்ன நிலை என்பதை மக்களிடம் கொண்டு சென்றவர். சமீப காலமாக திரை நட்சத்திரங்களும் ஈழ விடுதலைக்காகவும் ஈழமக்களின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லும் நபர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் தான் இப்போது கற்றது தமிழ் இயக்குநர் ராம்  ஈழ உணர்வாளர்களின் கூட்ட மேடைகளில் உணர்ச்சி கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறார்.


 தஞ்சை செங்கிப்பட்டியில் ஈழ விடுதலைக்காகவும், ஈழ தமிழர்களை கொல்லப்படுவதை தடுக்க கோரியும் தீ குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு முதல் சிலை  அமைக்கும் இளந்தமிழர் இயக்கம் நடத்திய சிலை திறப்பு, முள்ளிவாய்க்கால் நினைவு தின பொது கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத்தில் தமிழர்களுக்கு, தமிழ் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லி கூடியிருந்த கூட்டத்தினையும் கண்ணீர் சிந்த வைத்தார்.  இந்த உணர்ச்சிகள் அடங்கும் முன்பாக அவரை நக்கீரன் இணைய தளத்திற்காக சந்தித்தோம்.



 நக்கீரன் : உங்கள் திரைப்பணி எப்படி உள்ளது. அடுத்த திரைப்படப்பணி என்ன ?

 ராம் : என் திரைப்பணிகள் நன்றாக போகிறது. அடுத்து இரண்டு படங்களுக்கான வேலைகள் நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும். மக்களிடம் நல்ல கருத்துக்களை  சொல்லக்கூடிய படமாகத்தான் அந்த படங்கள் இருக்கும். வசூல் அதிகமானால் வர்த்தக ரீதியாக படம்ன்னு சொல்றாங்க. ஆனா எல்லா படங்களுமே வர்த்தக நோக்கில் தான் எடுக்கப்படுகிறது.
 

 நக்கீரன் : திரைத் துறையில் உள்ளவர்கள் பலர் இப்போது மேடை ஏறி பேசத் தொடங்கிட்டாங்களே?   அந்த வரிசையில் தான் நீங்களுமா ?

 ராம் : திரைக் கலைஞர்களும் உணர்வுள்ள தமிழர்கள் தானே. அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகள் இல்லாமலா இருக்கும். அந்த வகையில் தான் நானும் என் ஈழ சொந்தங்களுக்காக பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து மேடை ஏறியிருக்கிறேன் .என் சின்ன வயசுல இருந்தே ஈழ உணர்வாளன் நான்.  அப்போது அதை வெளிக்காட்ட முடியல உள்ளுக்குள்ளேயேயும், நண்பர்கள்கிட்டயும் பேசி வேதனைப்படத்தான் முடிந்தது. ஆனால் இப்ப இது போன்ற மேடைகள் கிடைக்காததால நமக்கு தெரிந்த உண்மைகளை மக்களிடம் சொல்றேன். நானும் தமிழன் தானே எனக்கும் உணர்வுகள்  இருக்கும் தானே. சகோதரர் முத்துக்குமார் தீக் குளித்தது தான் என்னை மேடை ஏற வைத்தது.

 நக்கீரன் : இப்படி சொல்லிக் கொண்டு திரையிலிருந்து வந்தவர்கள் பலரை இன்று காண முடியவில்லையே?

 ராம்: அவர்களின் சூழ்நிலை என்னவோ இப்போது வெளிவராமல் இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் வெளிவர வைக்கும். சூழ்நிலைக்காக அவர்கள் அமைதி காக்கலாம். அடுத்து தங்கள் பிழைப்பையும் பார்க்கனுமே.

 நக்கீரன் : வழக்கு என்று வந்தால் நீங்களும் மறைந்து விடுவீர்களா ?

 ராம் :  ஏன் என்மீது வழக்குகள் வரப்போகிறது. என் இன மக்களுக்காக நான் பேசும் போது ஏன் என் மீது வழக்கு வரும். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லையே அதனால நான் வழக்கில் சிக்கி கைதாகமாட்டேன். அடுத்து நடக்கும் கொடுமைகளை நாட்டின் இறையான்மைக்கு உட்பட்டே தான் என் பேச்சுகள் இருக்கும். இதுவரை அப்படித்தான் பேசி வருகிறேன்.

 நக்கீரன் : முத்துக்குமார் சிலை திறக்க வந்தீர்கள். சிலை திறக்கவிட வில்லையே ?

 ராம் : ஆமாங்க ரொம்ப வேதனையா இருக்குது. ரொம்ப ஆர்வத்தோட வந்தேன். உலகின் முதல் சிலையை இளந்தமிழர் இயக்கம் திறக்குதுன்னு சொல்லித்தான் அதன் ஒருங்கிணைப்பாளர் நண்பர் செந்தமிழன், அருணபாரதி என்னை அழைத்தார்கள். வந்தேன் ஆனா கடைசி நேரத்துல இப்படி திறக்கவிடாம செஞ்சுட்டாங்க. ரொம்ப வேதனையா இருக்கு. அதே மேடையில வச்சு வீட்டுக்கொரு  சிலை கொடுப்போம்னு சொன்னது கொஞ்சம் ஆறுதலாவும் இருக்கு.

 நக்கீரன் : உங்களின் இந்த ஈழ உணர்வு பேச்சு எவ்வளவு நாள் வரை நீடிக்கும்?

 ராம் :  உணர்வுள்ள தமிழன் நான் என் இனம் ஈழ விடுதலை அடையும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை. நான் யாரையும் புண்படுத்தி பேசினால் தானே வழக்கு, புகார் வந்து தடைவரும் யாரையும் புண்படுத்தலயே ! புண்பட்ட என் இனத்திற்காகத்தானே பேசுறேன் என்று முடித்தார்.

        நேர்காணல்: இரா.பகத்சிங்


source:nakkheeran



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பல் பாதுகாப்பு...

>> Tuesday, May 25, 2010


பல் பாதுகாப்பு...
Dr. A. ஆர்த்தி பிரகாஷ்


                   சென்ற இதழில் பற்குச்சி கொண்டு பல் துலக்கும் பல நல் வழி முறைகளை நாம் அலசினோம்.

இதற்கு நீங்கள் அனைவரும் சரியான பல் துலக்கும் முறையினை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, நற்பயனை அடைய ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

சரி...

பற்குச்சி உங்கள் பற்களில் உள்ள பிளேக்சை (Plaques) அகற்றிவிடும் என்று தப்போது நம்புகிறீர்களா?

அப்படி நீங்கள் நினைத்திருப் பீர்களேயாயின், தெரிந்துகொள்ளுங்கள். பற்குச்சியால் மட்டுமே பிளேக்சை முழுமையாக அகற்றிவிட முடியாது. வெளிப்புறங்களில் உள்ள பற்குச்சுகளால் தொடக் கூடிய பிளேக்சை மட்டுமே அகற்ற அது மிக மிக சரியான வழியாகும். பற்களுக்கு இடையே யுள்ள இடைவெளி களிலுள்ள பிளேக்சை பற்குச்சுகளால் தொடவும் முடியாது, முழுவதுமாக அகற்றவும் முடியாது.

எனவே, இந்த இடுக்குகளில் உள்ள பிளேக்குகளை அகற்ற, சிறப்பு சாதனங்கள் உள்ளன

தற்போது பலராலும் வாங்க முடிந்த, வாங்கி உபயோகிகக்கூடிய, சாதனமான இதை, சரியாக உபயோகிக்கும் முறைகளை பற்றி பார்ப்போமா..

அத்தகைய ஓர் எளிய, சிறிய, சீரிய சாதனமே பிளாசிங் (Flossing) எனப்படும். இது உலகெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு பயன்படுத்தப் படும் பொருளை (Dental floss)  டென்டல் பிளாஸ் என்பர்.

சில நாடுகளில் இம்முறையினை பற்கள் துலக்கும்போதே உபயோகிக்கப் பழகியுள்ளனர்.

இதனை உபயோகிக்க, சின்னஞ்சிறு சிறார்களை சிறு வயது முதலே பழக்கிவிடுகிறார்கள். அது என்ன பார்ப்போமா?

பிளாசிங் செய்யும் செம்மையான வழிகள்

மிக சிறிய நாடா போன்ற பொருளே டெண்டல் பிளாஸ் ஆகும். இது இன்று அனைத்து அங்காடி மற்றும் மருந்துக் கடைகளிலும் தாரளமாக கிடைக்கிறது. இதனைக்கொண்டு எப்படி நாம் நல்ல முறையில் பிளாசிங் செய்ய ஆரம்பிக்கலாம் என்பதை அறிவோம்.

ஒரு 45 செ.மீ. அல்லது 18 இஞ்ச் நீளம் கொண்ட பிளாசை எடுத்துக்கொண்டு அதனை 10 செ.மீ. அல்லது 4 இஞ்ச் நீளத்தில் இரு முனைகளிலும் நடு விரலில்சுற்றிக் கொண்டு கடைசி மூன்று விரல்களால் மடித்துப் பிடித்துக்கொண்டு 2 இஞ்ச் நீளத்தில் பிளாசை இரு ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக்கொண்டு பற்களின் இடையே செலுத்தி பற்களிலிருந்து ஈறுகளை நோக்கி நகர்த்தி தேய்க்கவேண்டும். மேலும் கீழும் மெதுவாக இம்முறையில் பிளாசை ஒவ்வொரு பல்லையும் சுற்றி மெல்ல வளைத்து மெதுவாக தேய்த்து விடவேண்டும். வேகமாகவோ, பலமாகவோ தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது மெல்லிய ஈறுகளை அறுத்து ஊறு விளைவிக்கும்.

பிளாசினை உபயோகித்துக் கொண்டே மெதுவாக நகர்த்தி, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுற்றி சுற்றி நகர்த்ததிக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்து பற்களின் இடுக்குகளிலும் பிளாசிங் செய்ய வேண்டும். நன்றாக தேய்த்தப் பின் பிளாசை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டே ஈறுகளுக்கு எதிர்புறமாக நகர்த்தி வெளியே எடுத்து விடலாம்.

பிளாசிங் செய்யாவிடில் என்ன நேரிடும்

பிளாசிங் செய்யாவிடில் இரு பற்களின் இடுக்குகளிலும் பிளேக்குகள் தங்கி கெட்டிப்பட்டுவிடும். இந்நிலையில் பல் மருத்துவரால் மட்டுமே அகற்ற முடியும் என்ற நிலைக்கு அதனை தள்ளியிருப்போம். நாளடைவில் பாக்டீரியாக்கள் இங்கு தங்கி ஈறுகளை உறுத்தி, ஊறுவிளைவித்து, பற்கள் வலுவிழந்து ஆடவும், எலும்புகள் தேயவும், வாய் நாற்றம் வீசவும் காரணமாகிவிடும்.

பற்களைத் தேய்ப்பதாலும், பிளாசிங் செய்வதாலும், பற்களுக்கு ஊறுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாய் நாற்றம், ஈறு உபாதைகள், மற்றும் பல் இழப்பு இவைகளை தவிர்த்து, இனிய புன்னகையை வாழ்நாள் முழுதும் நமதாக்கிக்கொண்டு இன்புற்று வாழ்வோம்.

குறிப்பு

நிறைந்த முழு பயனை அடைய பற்களை முதலில் துலக்கி, பின்னர் உடனே பிளாசிங் செய்து முடித்து, அதன்பின் வாயினை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.

உங்களின் வினாக்களுக்கு விடை தெரிய தொடர்பு கொள்ள  விலாசம்.

aarthiprakashdentalcare@gmail.com.


source:nakkheeran
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

”மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப்படம்!

 

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது.

காட்சியில் திருப்தி அமைந்த இயக்குனர் பாண்டியன் 'கட்' சொல்ல, காமெரா அடுத்த காட்சிக்குத் தயார் படுத்தப்படுகின்றது. "மீண்டும் யுத்தம்" என்ற இந்திய – சிறி லங்கா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களே நடிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்தத் திரைப்படம் பற்றி, அதன் இயக்குனர் திரு. பாண்டியன் அவர்களைக் கேட்டோம். "கடந்த ஒன்பது மாத காலமாகவே இந்தத் திரைப்படத்திற்கான கதை வசனத்தை எழுதிவிட்டு, பல தயாரிப்பாளர்களையும் தொடர்பு கொண்டேன்.

யாரும் இப்படி ஒரு றிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. அதனால், இந்தத் திரைக் கதையை இலங்கையின் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் மூலமாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய அவர்களது அறிமுகம் கிடைத்தது. அவர்தான், "இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களை ஏன் நடிக்க வைக்கக் கூடாது?" என்று கேட்டதுடன், கேணல் ராம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரது சம்மதத்தையும் பெற்றுத் தந்தார் என்று கூறினார். "விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் எப்படி இதற்குச் சம்மதித்தார்?" என்று ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டோம்.

"அதுதான் நட்பின் மகிமை…. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளது படை அணிகள் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், கேணல் ராம் அவர்கள் தனது அணியுடன் சிறிலங்கா படையிடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவர் தானாகவே வழங்கிய ஏராளமான தகவல்கள் சிறிலங்கா படையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அவரை திரு. கோத்தபாய அவர்கள் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தொடர்பு, நட்பாக மலர்ந்தது. அதுவே, இந்தப் படத்தில் கேணல் ராம் அவர்கள் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவிக்கக் காரணமாக இருந்தது" என்றார்.

"இந்தக் கதையும் விடுதலைப் புலிகள் பற்றியதா…?" "ஆம்…, விடுதலைப் புலிகள் பற்றியதுதான். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர்… தப்பிப் பிழைத்த போராளிகள் சிங்கள அரசைப் பழிவாங்கும் நோக்கோடு குழுக்கள், குழுக்களாகப் பிரிந்து சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அதனை முறியடிக்க, கேணல் ராம் அவர்கள் தலைமையில் சிங்கள இராணுவத்தால் நன்கு பயிற்றப்பட்ட ஒரு குழுவினர் களம் இறக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பழிவாங்கும் முயற்சிகளை முறியடிப்பதோடு, புலம் பெயர் தேசங்களில் சிறிலங்காவிற்கு எதிராக உருவாகி வரும் தமிழர் எழுச்சியையும் சிதைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்பதே கதை" "இது தமிழர்களுக்கு எதிரான கதை போல் இருக்கிறதே, இதை அவர்கள் ஏற்பார்களா…? இந்தப் படம் வெற்றி பெறுமா…?" என்று எமது சந்தேகத்தை அவரிடம் முன் வைத்தோம். "இது ஒரு யதார்த்தமான கதை.

இதைத் தமிழர்கள் ஏற்க மறுத்தாலும், சிங்களவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும். ஒரே நேரத்தில் இந்தப் படம் தமிழ், சிங்களம், இந்தி எனப் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் பெரும்பாலும் தமிழர்களே நடிப்பதால், தமிழிலும் வெற்றி பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது." என்றார் உற்சாகமாக. "கதையின் தளம் பற்றிச் சிறிது கூறுங்களேன்…" "கிழக்கு மாகாணத்தின் ஒரு காட்டில் நிகழ்வதான காட்சி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் தமிழகத்திலிருந்து வந்த பத்திரிகையாளர் பாண்டியனாக நடிக்கின்றேன்." என்றவர், திரைக் கதையின் சுருக்கம் அடங்கிய கொப்பியை எங்களிடம் நீட்டினார். "ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை.

கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில்இ உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில்இ விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை" "2009 மே 17-க்குப் பிறகுஇ ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள். அந்த வேனையில் பாண்டியன் என்ற பத்திரிகையாளருக்கு, ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங்கும் சங்கீதன் மூலமாக ஓர் அழைப்பு வருகின்றது. ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர அவருக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்."

"உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திருகோணமலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில்படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன."

"விடியற்காலை நேரத்தில் திருகோணமலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டியனை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணுவத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல்கிறது. உள்ளே இருந்த இளைஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர்களும் பதிலளித்துக் கொண்டே பயணிக்கிறார்கள்."

"ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. "அது எந்த இடம் என்று அவருக்குத் தெரியவில்லை. இறங்கியவுடன், 'வாருங்கோ..' என்றபடி அவரை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தியான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர்கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச்சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது." "காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனத் தைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்." "புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது.

அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்தபடியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்புகளில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையிலேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.

"நீங்க எங்களை மன்னிக்கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்" என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். "ரொம்ப நன்றிங்க அய்யா… ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்" என்கிறார்கள் புலிகள்.

"பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியிலேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். 'தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ" என்கிறார் ஒரு புலி. "சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்" என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. "எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது" என்கிறார்கள் புலிகள்." "அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்.

பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டியனை நோக்கி வேகமாகவும் கம்பீரமாகவும் வருகிறது அந்த உருவம்."

"நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக்கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, "வாருங்கோ… வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்" என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி."

"புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளைகள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு." "2009-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப்போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்." "பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், "யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம் என்கிறார்"

"எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்."

"செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்துவது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்குவது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல்படுவோம்."

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரிகையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்" என்று கதை தொடர்கிறது.

"இந்தக் கதையில் வரும் காட்சிகள் நம்பக் கூடியதாக இல்லையே…?" "இது ஆரம்பக் காட்சிகள். இடை வேளைக்குப் பின்னர் காட்சிகள் விறு விறுப்பாக இருக்கும். முதலில், விடுதலைப் புலிகளின் சிதறுண்ட அணிகளை நம்ப வைக்க இப்படியான காட்சிகள் முக்கியம். ரஜனி, விஜயகாந்த், விஜய், அஜித் என நூற்றுக்கணக்கான பயில்வான் போன்றவர்களை ஒத்தை ஆளாக நின்று அடித்துத் துவைக்கும் காட்சிகளை விசிலடித்து ரசிக்கும் எங்கள் மக்கள் இதையும் ரசிப்பார்கள்.

அத்துடன், இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பெரும் நிதியினை சிறிலங்கா அரசும், கணிசமான தொகையை இந்திய அரசும் ஏற்றிருப்பதால், தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்." என்று நம்பிக்கையோடு கூறிய பாண்டியன், காட்சிகளின் புகைப்படங்களை எம்மிடம் நீட்டினார். "இது, நக்கீரன் கோபால் சந்தணக் கடத்தல் வீரப்பனைப் பேட்டி கண்ட காட்சிகளை நினைவு படுத்துகிறதே…?" படங்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு கேட்டோம்

"நக்கீரன் கோபால்தான் இந்தக் கதைக்கான கருவை என்னிடம் கூறினார். அவர் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருப்பதால், நக்கீரன் சஞ்சிகையில் பல விபரங்களை வெளியிட்டு வருகின்றார். அவரது எண்ணப்படியேதான் இந்தக் காட்சிக்கான இடம், அமைப்பு தெரிவு செய்யப்பட்டது" என்றார் பெருமிதத்துடன்.

"உங்கள் முதல் படத்தையே, இப்படிப் பிரமாண்டமாக எடுக்கிறீர்களே… உங்கள் படம் வெற்றி பெறவும், கேணல் ராம் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்!" என்று கூறி விடை பெற்றோம்.

சூரிய புத்திரன்.

source:puthinamnews

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்! BREAKING NEWS!!






கலவரம், வாடகைக்கு

"கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே"ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த்  குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

______________________________________________

கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.

முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:

  • 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
  • ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
  • 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
  • 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.

________________________________________

நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.

இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள்  என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.

பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


source:vinavu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

எம்.எஸ்.ஆபீஸ் 2010 கூடுதல் தகவல்கள்

 
 



கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது. சிறிய, பெரிய நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள் என எங்கும் எம்.எஸ்.ஆபீஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புதிய பதிப்பு 2010 பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இதன் வளர்ச்சி குறித்து தொடர்புள்ளவர்களுக்கு மட்டும், (மைக்ரோசாப்ட் டெக்நெட் மற்றும் எம்.எஸ்.டி.என். சந்தாதாரர்களுக்கு மட்டும்) இது டவுண்லோட் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வரும் மே 12, நாளை மறுநாள், இத்தொகுப்பின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வர்த்தக ரீதியாக, பொது மக்களுக்கு வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து என இன்னும் அறிவிப்பு வரவில்லை.
இத்தொகுப்பு குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஆபீஸ் 2010, மிக ஆழமாக மேற்கொள்ளப்பட்ட சிந்தனையில், நுண்மையாக வடிவமைக்கப்பட்டு, பல சாப்ட்வேர் புரோகிராம்கள் இணைப்பாக அமைக்கப் பட்ட ஒரு பெருந் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் மையமாகத் தரப்படும் வேர்ட், எக்ஸெல், அவுட்லுக் மற்றும் பிரசன்டேஷன் புரோகிராம்கள், இன்றைய தேவைகளின் அடிப்படையில் புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆபீஸ் தொகுப்புகளுடன் ஒப்பிடுகையில், இத்தொகுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சிறப்பினைக் காணலாம். ஆபீஸ் 2007 தொகுப்பில் ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் முழுமையாக அனைத்து தொகுப்புகளுடனும் தரப்படவில்லை. அவுட்லுக், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் தொகுப்புகளில், ஆபீஸ் 2003ல் இருந்த மெனுவே தொடர்ந்தது. ஆனால் ஆபீஸ் 2010ல் அனைத்துமே ரிப்பன் இன்டர்பேஸுக்கு மாறிவிட்டன. குறிப்பாக அவுட்லுக் தொகுப்பில் முன்பு புதைக்கப்பட்டிருந்த சில வசதிகள் அனைத்தும், ரிப்பன் இன்டர்பேஸில் எளிமையாகப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆபீஸ் 2010ல் பைல் மெனு மீண்டும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007 தொகுப்பில் ஓப்பன் அண்ட் சேவ் டயலாக் பாக்ஸ், பிரிண்ட் பங்சன் போன்றவை ஆபீஸ் மெனுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை இப்போது மிகத் தெளிவாக, வண்ணக் கலவையில் காட்டப்படுகின்றன. ரிப்பன் மெனுவில் இடது ஓரம் அனைத்தும் பைல் ஆப்ஷனாகத் தரப்பட்டுள்ளன.
மேலும் இந்த ரிப்பன் இன்டர்பேஸ் இணைந்து டெவலப்பர்கள் பல டேப்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவாக்கி அமைக்கலாம். ஆப்ஜெக்ட், கிராபிக்ஸ் போன்றவற்றை எடிட் செய்வது, மாற்றி அமைப்பது போன்றவை, ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து புரோகிராம்களில் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் டெக்ஸ்ட் எடிட் செய்வதில், இந்த புரோகிராம்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன.
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் ஒன்றில் சொற்களைத் தேடுவதற்கு பைண்ட் அண்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். வேர்ட் 2010ல் நேவிகேஷன் பேனில் தரப்பட்டிருக்கும் மூன்றாவது டேப்பில் இந்த தேடல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சர்ச் பாக்ஸில் ஒரு சொல்லை டைப் செய்கையில், அந்த சொல் இருக்கும் அனைத்து இடங்களும் ஹைலைட் செய்யப்படுகின்றன. இதனால், நாம், சொல் உள்ள அடுத்தடுத்த இடங்களை தொடர் முயற்சி இன்றி அறியலாம்.
எக்ஸெல் தொகுப்பில் அனைத்து பங்ஷன்களும் மீண்டும் துல்லிதமாகவும் வேகமாகவும் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளன. டேட்டா பேஸ் தனியே அமைத்து, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இணைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த தொகுப்பில் பல வசதிகள் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன.
அவுட்லுக் 2010ல், மெனுவிற்குப் பதில் ரிப்பன் இன்டர்பேஸ் தந்திருப்பது ஒரு முக்கிய மாற்றமாகும். புதியதாக தரப்பட்டுள்ள இரண்டு வசதிகளை இங்கு குறிப்பிட வேண்டும். குயிக் ஸ்டெப்ஸ் (Quick Steps) என்ற ஒரு டூல் உள்ளது. இதில் கட்டளைகளை லிஸ்ட்டிலிருந்து எடுத்து, அவற்றைச் செயல்படுத்தும் வரிசைப்படி அமைக்கலாம். பின்னர் இதனை ஹோம் டேப்பில் உள்ள பட்டன் ஒன்றுக்கு இணைக்கலாம். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்தலாம்.
அடுத்ததாக மெசேஜ்களை குழுவாக அமைக்கும் டூல் செயல்படும் விதத்தினைக் குறிப்பிடலாம். மெசேஜ் சப்ஜெக்ட் அடிப்படையில், அவை குழுவாக அமைக்கப்படுகின்றன. இதில் புதியதாக இக்னோர் (Ignore) ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜ் அல்லது கான்வர்சேஷன் மற்றும் அதன் பின்னணியில் வரப்போகும் அனைத்து மெசேஜ்களும் தானாகவே நீக்கப்படுகின்றன. ஒருவருக்கு காப்பி செய்யப்படும் தேவையற்ற மெசேஜ்களை நீக்க இது பயன்படும். இந்த டூல் சப்ஜெக்ட் தலைப்பின் அடிப்படையில் செயல்படுவதால், அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இந்த வசதி செயல்படாமல் போய்விடும். இந்த பிரச்னை வரும்காலத்தில் தீர்க்கப்படலாம்.
அடுத்ததாக ஆபீஸ் 2010 தொகுப்பு எவற்றை எல்லாம் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். அனைத்து எடிஷன்களும் Word, Excel, PowerPoint, மற்றும் OneNote  ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளன. இவை 32 பிட் மற்றும் 64 பிட் வகைகளில் கிடைக்கின்றன.
ஹோம் எடிஷன் (Home Edition) : இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது. Microsoft Office Home and Student 2010 – இந்த தொகுப்பினைப் பெறும் ஒருவர், தன் வீட்டில் மூன்று பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இதனை நிறுவிக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு அடிப்படை தொகுப்புகள் மட்டுமே உள்ளன. இதனை எந்த வர்த்தக நிறுவனத்திலும், லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளிலும் பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்துவது, ஒப்பந்தப்படி தடை செய்யப்படுகிறது.
Microsoft Office Home and Business 2010:  இது சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கென வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட நான்கு தொகுப்புகளுடன், அவுட்லுக் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Microsoft Office Professional Academic 2010: இந்த தொகுப்பில் அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் (Outlook, Publisher, and Access) உள்ளன. – – @__.edu என்ற இமெயில் முகவரியைக் கொண்டுள்ள எவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தாட்சி பெற்ற கல்வி சார்ந்த அமைப்புகள் வழியாகவே இதன் விற்பனை மேற்கொள்ளப்படும்.
பிசினஸ் எடிஷன் (Business Edition): இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது.
Microsoft Office Standard 2010:   இந்த தொகுப்பில், அடிப்படையான நான்கு புரோகிராம்களுடன், அவுட்லுக் மற்றும் பப்ளிஷர் இணைக்கப் பட்டுள்ளன. மொத்த வால்யூம் லைசன்ஸ் முறையில் இது விற்பனை செய்யப்படும்.
Microsoft Office Professional 2010: சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் இணைக்கப்பட்டுள்ளன.
Microsoft Office Professional Plus 2010: அடிப்படை தொகுப்புகளுடன் Outlook, Publisher, Access, SharePoint Workspace (formerly Groove), Communicate, and InfoPath ஆகியவை இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. வால்யூம் லைசன்ஸ் முறையில் வாங்கலாம்.
ஆபீஸ் 2010 ஐ இயக்க உங்கள் சிஸ்டம் எந்த கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.3 இணைப்புடன்), விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.1 அல்லது பின் வந்த இணைப்புடன் ( 32 அல்லது 64 பிட்) விண்டோஸ் 7 (32 அல்லது 64 பிட்) விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008.
ஹார்ட் டிஸ்க் குறைந்தது 3 ஜிபி இதற்கென இருக்க வேண்டும். வழக்கம்போல, ஒரு ஆபீஸ் 2010 தொகுப்பு, ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பதிந்து இயக்க லைசன்ஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக பதிவதற்கென, ஒரு சில தொகுப்புகள் மட்டும் சில வரையறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிட்டவை அல்லாமல் ஆபீஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் கிடைக்கிறது. ஆனால் இவை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. வெளியே தனியே சில்லரை விற்பனையில் வாங்க முடியாது. இதில் வேர்ட் ஸ்டார்ட்டர் மற்றும் எக்ஸெல் ஸ்டார்ட்டர் ஆகியவை மட்டும் உள்ளன. இதனைப் பெற்றவர்கள், கூடுதலாகப் பணம் செலுத்து முழுமையான ஆபிஸ் 2010 தொகுப்பாகத் தங்கள் ஸ்டார்ட்டர் எடிஷனை மாற்றலாம்.
இந்தியாவில் இந்த பல்வேறு தொகுப்புகளின் விலை, வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் போது தெரியவரும்.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

>> Monday, May 24, 2010


 

பீஜே அவர்களுக்கு பதில்

"இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு

இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

முன்னுரை: பீஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதி அதில் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுப்பதற்கு அனேக விவரங்களை கூறியுள்ளார். அவருக்கு நாம் கடைசியாக அளித்த மறுப்பை இங்கு படிக்கலாம்: இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே.

பீஜே அவர்கள் பைபிளின் துணைக்கொண்டு, இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்க முயற்சி எடுத்துள்ளார், ஆனால், இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை மேலே உள்ள கட்டுரையை மட்டும் படித்தாலே போதும் புரிந்துக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரை அவருடைய புத்தகத்திற்கு மறுப்பாக முன்வைக்கப்படுகின்றது.

கீழே சில கேள்விகள் (36) தரப்பட்டுள்ளது, இக்கேள்விகளுக்கு பதிலை தரும் படி ஒரு இஸ்லாமியரை கேட்டால், அவர் பெரும்பான்மையான கேள்விகளுக்கு "இறைவன்" என்பது தான் பதில் என கூறுவார். பீஜே அவர்களை கேட்டாலும் கீழ் கண்ட அனேக கேள்விகளுக்கு அவர் "இறைவன் (அ) அல்லாஹ்" என்று கூறுவார் (இல்லை, நான் அப்படி கூறமாட்டேன் என்று பீஜே அவர்கள் சொல்வார்களானால், ஏன் என்று விளக்கட்டும், கீழ்கண்ட குணங்களில் ஒன்று கூட அல்லாஹ்விற்கு பொருந்தாது என்று விளக்கட்டும்).

நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ கேள்விகளும் ப‌தில்க‌ளும்

1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? இறைவ‌னின் பெய‌ரில்
2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்? இறைவனின்
3. தூதர்களை அனுப்புவது யார்? இறைவன்
4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? இறைவனுக்கு
5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்? இறைவனின்
6. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? அங்கிலிருந்து வருபவரும் யார்? இறைவன்
7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? இறைவன்
8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? இறைவனிடம்
9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? இறைவன் மூலமாக‌
10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? இறைவன்
11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்? இறைவன்
12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? இறைவன்
13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை? இறைவனின்
14. நித்திய வாழ்வை தருபவர் யார்? இறைவன்
15. நித்திய வாழ்வு யார்? இறைவன்
16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? இறைவன்
17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? இறைவனிடம்
18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? இறைவனிடம்
19. உலகத்தில் ஒளி யார்? இறைவன்
20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? இறைவன்
21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? இறைவனுக்கு
22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? இறைவன்
23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? இறைவன்
24. ஆண்டவர் யார்? இறைவன்
25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? இறைவன்
26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்? இறைவ‌ன்
27. யார் உண்மையாக‌ இருக்கிறார்? இறைவ‌ன்
28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? இறைவன்
29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? இறைவனின்
30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? இறைவன்
31. மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர் யார்? இறைவன்
32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்? இறைவன்
33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? இறைவன்
34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்? இறைவ‌ன்
35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? இறைவன்
36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? இறைவன்


மேலே சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் இறைவன் என்பதற்கான குணங்கள் அல்லது இறைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? மொத்தமாக இல்லையானாலும் மேலே சொல்லப்பட்டவைகளில் பெரும்பான்மையான குணங்கள் இறைவனுக்கு இருக்கவேண்டியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆம், ஒப்புக்கொள்கிறோம் என்றுச் சொல்பவர்கள், கீழ்கண்ட‌ வசனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முக்கியமாக "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதிய பீஜே அவர்கள் கீழ் கண்ட வசனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? ஆம், இவைகள் ஒரு இறைவனின் குணங்கள் தான் என்றுச் சொல்வாரா அல்லது மேலே சொல்லப்பட்ட குணங்கள் ஒன்றும் இறைவனுக்கு (அல்லாஹ்விற்கு) இல்லை என்று ஒப்புக்கொள்ளப்போகிறாரா? இவைகள் எல்லாம் தன்னுடைய குணங்கள் என்று இயேசு கூறியுள்ளார், பீஜே அவர்கள் நிதானமாக இவைகளை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? ........இயேசுவின் பெய‌ரில்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" மத்தேயு 18:20

2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்? ........இயேசுவின்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20

3. தூதர்களை அனுப்புவது யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; … மத்தேயு 13:41

இயேசு கூறினார்: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்… மத்தேயு 24:30 ,31

4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? .........இயேசுவிற்கு

இயேசு கூறினார்: வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31

5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்? .......இயேசுவின்

இயேசு கூறினார்: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்... மத்தேயு 28:20

6. சொர்க்கத்தில் இருப்பவர் யார், அங்கிலிருந்து வருபவரும் யார்? ........இயேசு

இயேசு கூறினார்: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13

7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? ........இயேசு

இயேசு கூறினார்: நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; …. யோவான் 6:51

இயேசு கூறினார்: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. : யோவான் 8:23

இயேசு கூறினார்: நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். யோவான் 16:28

8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? ....... இயேசுவிடம்

இயேசு கூறினார்: …மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15

இயேசு கூறினார்: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,….. யோவான் 10:28

9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? ..........இயேசு மூலமாக‌

இயேசு கூறினார்: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், … யோவான் 10:9

10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? ....... இயேசு

இயேசு கூறினார்: இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35

11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்? ........ இயேசு

இயேசு கூறினார்: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், … கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவான் 6:40-44

12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: ஜீவ அப்பம் நானே. யோவான் 6:48

13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை ? ....... இயேசுவின்

இயேசு கூறினார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 13:31

14. நித்திய வாழ்வை தருபவர் யார் ? ....... இயேசு

இயேசு கூறினார்: என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6:57

இயேசு கூறினார்: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:51

15. நித்திய ஜீவன் யார்? ........ இயேசு

இயேசு கூறினார்: நானே … ஜீவனுமாயிருக்கிறேன்; யோவான் 14:6

16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? ....... இயேசு

இயேசு கூறினார்: என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:39

17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? .......... இயேசுவிடம்

இயேசு கூறினார்: தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37

18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? ........... இயேசுவிடம்

இயேசு கூறினார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் யோவான் 7:38

19. உலகத்தில் ஒளி யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5 , 8:12

20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார் : பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் … ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:34, 36

21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? ........... இயேசுவிற்கு

இயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும். மத்தேயு 9:6

22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:58

23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? ........... இயேசு

இயேசு கூறினார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 11:25

24. ஆண்டவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13

25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? ......... இயேசு

இயேசு கூறினார்: …ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். யோவான் 14:2

26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

27. யார் உண்மையாக‌ இருக்கிறார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நானே … சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: நான் மெய்யான திராட்சச்செடி, …. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:1-4

29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? ......... இயேசுவின்

இயேசு கூறினார்: … என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5

30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17, 18

31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்? .......... இயேசு

இயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்….. வெளி 2:23

32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: …… அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். வெளி 2:23

33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: …. அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 26:63,64

34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்? ........இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார். மத்தேயு 12:8

35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது …. மத்தேயு 19:28

36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மத்தேயு 25:31,32

இயேசு கூறினார்: ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36

இயேசு கூறினார்: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:22,23

இயேசு கூறினார்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். யோவான் 10:30

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:8 ,9

மனித வடிவில் வந்த இறைவன் தான் இயேசு என்று ஏன் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்? இந்த கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. இயேசு தானே இறைவன் என்பதை பலமுறை சொல்லியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் இயேசு மொழிந்த வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொள்கின்றனர். யார் யாரெல்லாம் இதனை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் இயேசுவையும் அவர் சொன்னைதையும் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

தொகுத்தவர் டெர்ரெல் ஸ்மித் - ஆங்கில மூலம்: What about God?





--
5/24/2010 11:25:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP