சமீபத்திய பதிவுகள்

ஏய் மனிதர்களே நீங்கள் மனிதர்கள் தானா?இல்லை மிருகங்களா?

>> Sunday, May 18, 2008



http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/05/19/003/19_05_2008_003_002_001.jpg

StumbleUpon.com Read more...

1973 ல் காணாமல் போன பர்ஸ் 2008 ல் திரும்ப கிடைத்தது





http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/19/002/19_05_2008_002_004.jpg

StumbleUpon.com Read more...

தலையணையுடன் கோவிலுக்குள் நுழைந்த உமா பாரதிக்கு பூசாரிகள் தடை




StumbleUpon.com Read more...

மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் கடத்தல்

மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் கடத்தல்

அகாபல்கோ, மே. 18-

மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபல்கோ என்ற இடத்தில் மர்ம மனிதர்கள் காரில் சென்ற சுற்றுலா பயணிகள் 7 பேரை கடத்தி சென்ëறனர்.

முன்னதாக அவர்கள் காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். கார் நின்றதும் அதில் இருந்தவர்களே வலுக் கட்டாயமாக கடத்தினார் கள்.

கடத்தல்காரர்கள் போதை மருந்து கும்பலை சேர்ந்த வர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

StumbleUpon.com Read more...

சீனாவில் மீண்டும் பூமி அதிர்ச்சி: பீதியில் மக்கள் ஓட்டம்

சீனாவில் மீண்டும் பூமி அதிர்ச்சி: பீதியில் மக்கள் ஓட்டம்

பிஜீங், மே. 18-

சீன பூகம்பத்தில் இது வரை 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மீட்பு பணி கள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பூகம்பம் நடந்த சிச்சுவான் பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் அலறியபடி ஓடி னார்கள். இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

பெரிய பூகம்பம் ஏற் பட்டதற்கு பிறகு இதுவரை 900 தடவைக்கு மேல் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் 5 ரிக்டர் ஸ்கேல் அள வுக்கு மேலாக 20 தடவை ஏற்பட்டுள்ளது.

பூகம்பம் நடந்த 5, 6 நாட்கள் முடிந்து விட்ட போதிலும் இன்னும் இடி பாடுக்குள் சிலர் உயிரோடு இருக்கின்றனர். அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று 5 நாட்களாக புதைந்து கிடந்த 8வயது சிறு வனை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். கடந்த 2 நாட்களில் 6 பேர் இதே போல உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர்.

இதற்கிடையே பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் அணை ஒன்று உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்த 50 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள் ளனர்.

இந்த அணை பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது மழை பெய்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி இருக்கிறது. எனவே அணை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

StumbleUpon.com Read more...

`முயற்சிகள் தோற்பதில்லை-தியேட்டர் கேண்டீனில் சர்வராக வேலை பார்த்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்




`முயற்சிகள் தோற்பதில்லை'
தியேட்டர் கேண்டீனில் சர்வராக வேலை பார்த்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்
6 முறை தோல்வியை தழுவி 7-வது முறையாக வெற்றி பெற்றார்


சென்னை, மே.18-

சென்னை தியேட்டர் கேண்டீனில் சர்வராக வேலை பார்த்த இளைஞர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். அதிலும் 6 முறை ஐ.ஏ.எஸ். தேர்வில் தோல்வியை சந்தித்து தனது 7-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

கடைசி வாய்ப்பில் வெற்றி

2007-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து 79 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வெற்றிவாகை சூடிய கே.ஜெயகணேஷ் என்ற இளைஞரும் ஒருவர்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஐ.ஏ.எஸ். தேர்வில் 6 முறை தோல்வியை தழுவி, விடாமுயற்சியுடன் செயல்பட்டு 7-வது தடவையில் வெற்றிக்கனியை பறித்துள்ளார். அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடைசி வாய்ப்பே அவருக்கு வெற்றியின் விளிம்பாகவும் அமைந்தது. வாழ்க்கையில் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு இவரது வெற்றி ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கிராமத்து இளைஞர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ். இவரது தந்தை கிருஷ்ணன் சோலூரில் தோல் தொழிற்சாலை ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். தாயார் கலாவதி. ஜெயகணேஷ் தனது ஆரம்பக்கல்வியை சொந்த கிராமத்தில் உள்ள இந்து மிஷன் பள்ளியில் படித்தார். ஆம்பூரில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, குடியாத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தார். இதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து 2000-ம் ஆண்டு முடித்தார்.

அதன்பின் பெங்களூரில் உள்ள டூல்பாம் டெக்னிக்கல் கம்பெனியில் ஒரு ஆண்டு சூப்பர்வைசராக பணிபுரிந்தார். என்ஜினீயராக இருந்த போதிலும் கலெக்டராக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்து வந்தது. அதன்காரணமாக தனது வேலையை விட்டு விட்டு மீண்டும் சொந்த கிராமத்திற்கு வந்தார். அங்கிருந்து கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்தார். 2001-2004 வரை ஊரில் இருந்தவாறே தேர்வு எழுதினார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை.

கேண்டீனில் வேலை

இருந்தாலும் மனம் தளராமல் கண்டிப்பாக ஒருநாள் கலெக்டராவோம் என்ற தன்னம்பிக்கையுடன் மீண்டும், மீண்டும் முயற்சித்தார். அதன்பிறகு 2004-ம் ஆண்டு சென்னை வந்து அண்ணாநகரில் உள்ள அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் உள்பட 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

அதன்பின் தங்குவதற்கும், சாப்பாட்டு செலவிற்கும் பணம் தேவை என்பதால், 2004-ம் ஆண்டு சத்யம் தியேட்டரில் முதல் மாடியில் உள்ள கேண்டீனில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு டீ, காபி மற்றும் திண்பண்டங்கள் சப்ளை செய்வது, பில் போடுவது போன்ற பணிகளை செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் கிடைத்தது.

இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் விடாமுயற்சியுடன் படித்து வந்தார். அவருக்கு 6 வாய்ப்புகள் கழிந்தும் வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுதான் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருந்தது. எனவே மிகவும் கடுமையாக தனது அனைத்து உழைப்பையும் செலுத்தி இரவு, பகல் பாராமல் படித்தார். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்தது. ஐ.ஏ.எஸ். தேர்வில் 6 முறை தோல்வியை தழுவியவர், 7-வது தடவையில் வெற்றிபெற்றார். அவருக்கு அகில இந்திய அளவில் 156-வது ரேங்க் கிடைத்துள்ளது.

தனது சாதனை குறித்து கே.ஜெயகணேஷ் (வயது 29) கூறியதாவது:-

மறக்க முடியாது

எங்கள் ஊர் மிகச்சிறிய கிராமம். அங்குள்ள மக்களுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு ஏற்ற பணி ஐ.ஏ.எஸ்.தான் என்பதை நான் தீர்மானித்தேன். அதனால்தான் இந்த பணிக்காக முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளேன். இனி என்னால் முடிந்தவரை மக்களுக்கு சமூக சேவை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே எனது லட்சியம். நான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது பற்றி என் பெற்றோரிடம் கூறியபோது மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்கள் நான் ஒவ்வொரு முறை தோல்வி பெறும் போதும் அவர்கள் எனக்கு உற்சாகமூட்டியதை மறக்கமுடியாது. அதேபோல நான் வேலை பார்த்த கேண்டீனில் உள்ள சகஊழியர்களும், வாச்மேனும் தேர்வுக்கு சென்ற போது சந்தோஷமாக வழியனுப்பியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

தங்கையை படிக்க வைப்பேன்

என்னைப்போல கிராமத்து மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதிகாரிகளாக வரவேண்டும் என்பதே என்ஆசை. அவர்களுக்குத்தான் மக்களின் பிரச்சினைகளைப்பற்றி முழுவதுமாக தெரியும். யாராக இருந்தாலும் 2 ஆண்டுகள் விடாமுயற்சி எடுத்து படித்தால் இந்த தேர்வில் வெற்றி பெறலாம். அதற்கு பட்டப்படிப்பு படிக்கும்போதே தகுந்த பாடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். நான்கூட பள்ளியில் தமிழ் வழியில் தான் படித்தேன். ஆங்கிலம் ஓரளவு தெரிந்தால் கூட வெற்றிபெறலாம்.

என் தம்பி நரேஷ்குமார் பி.ஏ., படித்து வருகிறார். என் தங்கை ஜெகதீஷ்வரி பி.காம் படித்து வருகிறார். மற்றொரு தங்கை பாரதி பிளஸ்-2 வரை படித்து உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டது. இருப்பினும் இனி அவரை அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கவைக்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு ஜெயகணேஷ் கூறினார்.

கல்லூரியில் பேச அழைப்பு

ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜெகத்ரட்சகனின் ஸ்ரீராமானுஜர் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் அதன் நிர்வாக அதிகாரி லீலா செழியன் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிபெற்ற ஜெய்கணேஷுக்கு வாழ்த்து தெரிவித்து மலர் கொத்து வழங்கினார். தங்கள் கல்லூரியில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் நம்பிக்கைïட்டவும், ஊக்குவிக்கும் வகையிலும் நல்ல உரையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=413413&disdate=5/18/2008

StumbleUpon.com Read more...

இந்தியாவை தாக்க தயார் நிலையில் சீன ஏவுகணைகள்-செயற்கைக்கோள் படங்களால் திடுக்கிடும் தகவல் அம்பலம்


 


பெய்ஜிங், மே.18-

இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனா அச்சுறுத்தல்

இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கனவே ஆக்கிரமித்த இந்திய பகுதிகளையும் விட்டுத்தர மறுக்கிறது. மேலும், இந்தியாவுக்கு தொல்லை தரும் நோக்கத்தில் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.

சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் ஹைனன் தீவில் கடலுக்கடியில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

செயற்கைகோள் படங்கள்

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் 58 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு எடுத்த செயற்கைக்கோள் படங்களில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, அரசு சார்பற்ற அமைப்பாகும். உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இந்த படங்களை நன்றாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, இந்த ஏவுதளங்கள், இந்தியாவின் வடமாநிலங்களையும், ரஷியாவின் தென்பகுதியையும் குறிவைத்து காணப்படுவதாக தெரிவித்தனர்.

அணுகுண்டு தாக்குதல்

இந்த ஏவுதளங்களில் இருந்து டிஎப்-21 ரக ஏவுகணைகள் பறக்க தயார் நிலையில் உள்ளன. இவை டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்கள் வரை வந்து தாக்கும் சக்தி படைத்தவை என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஆகும். இவற்றில் அணுகுண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்.

இந்த ஏவுகணைகளால் ரஷியாவின் தென்பகுதியையும் தாக்க முடியும். ஆனால் ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.

 http://www.dailythanthi.com/CatHome.asp?NewsCategoryID=1

StumbleUpon.com Read more...

ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து ,இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர்

 


ஐயம் : ஒளூ செய்யும்போது, ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து என்று அறிந்திருந்தும், சில சமயங்களில் மனதிருப்திக்காக, நான்கு அல்லது ஐந்து முறை கழுவும் நிலை ஏற்பட்டு விடுகிறதே, இவ்வாறு செய்வது இஸ்ராஃப்(விரையம்) ஆகுமா? குற்றமா? அதைத் தவிர்க்க வழி என்ன?

பர்ஸானா, கீழக்கரை.
தெளிவு : நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.


http://www.annajaath.com/?p=341

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP