சமீபத்திய பதிவுகள்

மொராக்கோ நாட்டில் பள்ளிவாசல் ஸ்தூபி இடிந்து 36 பேர் பலி

>> Saturday, February 20, 2010

 


ரபாத், பிப்.21-

ஆப்பிரிக்காவில் உள்ளது மொராக்கோ. இந்த நாட்டில் உள்ள மேக்னஸ் நகரில் 18-ம் நூற்றாண்டு கட்டப்பட்ட பழமையான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது.

அதற்கு முந்தைய நாட்களில் பலத்த மழை பெய்து இருந்த நிலையில் பள்ளிவாசலின் ஸ்தூபி ஒன்று, கூரையின் ஒரு பகுதியுடன் இடிந்து தொழுகை நடத்தியவர்கள் மீது விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள்.

இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். நேரம் செல்ல செல்ல பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்தது. இறுதி நிலவரப்படி 36 பேர் பலியானார்கள். 71பேர் காயம் அடைந்தனர். பள்ளிவாசல் மக்கள் நெருக்கடி மிகுந்த நகரின் மையப்பகுதியில் அமைந்து இருந்ததால் மீட்புக்குழுவினர் மிகுந்த சிரமப்பட்டனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் உள்துறை மந்திரியும், மற்ற மந்திரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு பணியை தீவிரப்படுத்தினார்கள்.

இடிந்த பள்ளிவாசலை அதன் பழமை மாறாமல் புதிதாக கட்டப்படும் என்று அந்த நாட்டு மன்னர் 6ம் முகமது அறிவித்தார்.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிங்கள மக்களுக்கு தமிழை பயிற்றுவிக்க கத்தோலிக்க தேவாலயங்கள் முயற்சி



சிங்கள மக்களுக்கு தமிழை பயிற்றுவித்து இன வேற்றுமைகளை களைய கத்தோலிக்க தேவாலயங்கள் முயற்சி


சிறிலங்காவில் உள்ள சிங்கள மக்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் மூலம் தமிழை பயிற்றுவித்து 26 வருடங்களாக தொடர்ந்து இருந்து வரும் பிளவுகளை சரி செய்து சமரசப்படுத்தும் முயற்சியில் கொழும்பில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் ஈடுபட்டுள்ளன. 

தமிழ் மொழிப் புலமை குறைவே இரு சமுதாயத்திற்கும் இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி போர் வரை கொண்டு சென்றுவிட்டதாக கத்தோலிக்க மத குருவான அருட்திரு. ரோகன் சில்வா UCA  செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

தமிழை உளப்பூர்வமாக கற்றுக்கொள்ள வைப்பதன் மூலமே வேறுபாடுகளை களைந்து நிர்வாகத்திலும் சமமான தகுதிகளை உண்டாக்கி இணக்கம் காண முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒரு மொழி பயன்படுத்தப்படும் விதத்தால்தான் பிளவும் இணைவும் தோன்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

1956ம் ஆண்டு சிறிலங்காவின் அதிகாரபூர்வ மொழியாக சிங்களம் மட்டும் அறிவிக்கப்பட்டதனால் அது பல இனக்கலவரங்களையும் நம்பிக்கையீனங்களையும் தூண்டியது. 

மீண்டும், 1978ல் சிறிலங்காவின் புதிய அரசியல் அமைப்பு சட்டப்படி, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன. ஆங்கிலம் மூன்றாவது பொது மொழியாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு மொழிகளுமே அதிகார பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற மொழியை பற்றி அரசு கரும மொழிகள் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட கலந்தாய்வு மதிப்பீடுகள் தமிழ் மொழிக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுவதாக உள்ளன. 

50 அரசுசார்பு நிறுவனங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மிக குறைவான சதவிகித நிர்வாக அதிகாரிகளுக்கே தமிழ்மொழி அறிவு இருப்பது கண்டறியப்பட்டது. 

தமிழ் மொழி பரவலாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகும் என அரசு கரும மொழிகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் கொழும்பு களனியா பல்கலைகழகத்தின் மொழியியல் விரிவுரையாளருமான ஜோசப் யோகராஜா தெரிவித்தார். 

தமிழை கற்று கொள்ள ஆர்வம் காட்டும் மாணவர்கள் அரிதாகவே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

மொழிகளால் ஏற்படும் தொடர்பு நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும் என்றும் அது சமுதாயத்தில் சிறிது சிறிதாக மாற்றங்களை ஏற்படுத்த உதவும் என்றும் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகள் முகாம்களில் சேவையாற்றிய அருட்சகோதரி கமலா டொன்டீனு [Kamala Dondeenu] கூறினார். 

தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள அனைத்து சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தமிழ் கற்று கொள்வதற்காக மிகக் குறைந்த செலவில் ஒவ்வொரு புதன் கிழமையும் 2 மணி நேர வகுப்புக்களாக மொத்தம் 48 மணிநேரத்திற்கான பாடத்திட்டத்தை கத்தோலிக்க தேவாலய அமைப்பு உருவாக்கியுள்ளது. 

தமிழ் கற்றுக்கொள்வது தமிழர்களுக்கு மிகவும் அருகாமையில் இருப்பதை உணர வைப்பதாக உள்ளது என தமிழ் கற்றுக் கொள்ளும் மாணவர்களில் ஒருவரான சகோதரி கார்மலின் பெரேரா [Carmalin Perera ] UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

source:puthinappalakai



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இன்று ஃபொன்சேகா... நாளை?

 

சுதந்திரப் போராட்டத் தியாகி மதன்லால் திங்கராவை ஆங்கில அரசு தூக்கிலிட்ட சம்பவம் நடந்த சில மாதங்கள் கழித்து, லண்டனில் மிகப் பெரிய தீ விபத்து. லட்சக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்நாசமாகின. அன்று 'இந்தியா' பத்திரிகைக்கு லண்டன் நிருபராக இருந்த வ.வே.சு. ஐயர், மகிழ்ச்சி கலந்த மனநிலையில் கட்டுரை எழுதி அனுப்பினார். 'இந்த தண்டனைக்குக் காரணமானவர்களை ஆண்டவன் பழிதீர்த்துவிட்டான்' என்று. பத்திரிகைஆசிரிய ராக இருந்த பாரதி இதை ஏற்கவில்லை. 'இதென்ன அற்ப சந்தோஷம்?' என்றார்! சரத் ஃபொன்சேகாவைக் கைது செய்ததைக் கேள்விப்பட்டபோது, அப்படிப் பட்ட சந்தோஷம் ஏற்படவில்லை. ஆனால், வினை விதைத்தவன் வினை அறுப் பான் என்ற மூத்தோர் வாக்கு மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டது.பிப்ரவரி எட்டாம் தேதி இரவு 9 மணிக்கு கொழும்பு ராயல் கல்லூரி மாவத்தை என்ற இடத்தில் உள்ள அலுவகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் சோம வன்ச அமரசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சித் தலைவர் ஹக்கீம், மனோ கணே சன் எம்.பி., என இலங்கை அரசியலின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் அருகில் உட்கார்ந்திருக்கும்போது, சரத் ஃபொன்சேகாவைச் சுற்றி வந்தார்கள் ராணு வச் சீருடை ஆட்கள். தினமும் இதுபோன்ற கண்காணிப்பு இருந்து வருவதால், சாதாரணமாகத்தான் இதையும் நினைத்தார் ஃபொன்சேகா. அவரது பாதுகா வலர் வசம் இருந்த துப்பாக்கிகள் பறிக்கப்பட்டு, 'உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்' என்றார்கள். 'என்னை போலீஸ்தான் கைது செய்ய முடியும்' என்று ஃபொன்சேகா சொன்னதை வந்தவர்கள் ஏற்கவில்லை. வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுக்கிறார்கள். கனமான, உயர்ந்த உருவமாக இருப்பதால் அது கஷ்டமாகி, சுற்றிலும் இருந்த கண்ணாடிகள் உடைத்து வெளியே கொண்டுவரப்படுகிறார்.

இரண்டாவது மாடியில் இருந்து தரதரவெனஇழுத்துச் செல்லப்படுகிறார் ஃபொன்சேகா. 'உலகத்தில் உள்ள ராணுவத் தளபதிகளிலேயே சிறந்தவர்ஃபொன்சேகாதான்' என்று இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனால் பட்டம்சூட்டப்பட்டவர், அந்த நாட்டிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார். நாராயணன் இதைக் கேள்விப்பட்டதும் என்ன நினைத்திருப்பாரோ?

ஃபொன்சேகா கைதானபோது, மகிந்தா ராஜ பக்ஷே ரஷ்யாவில் இருந்தார். பயங்கரவாதத்தை இலங்கையில் வேரோடு ஒழித்ததற்காக மாஸ்கோ பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துப் பாராட்டுவதற்காக அழைத்திருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவுக்குப் பிறகு, இலங்கை அதிகார மையத்தில் இருந்த யாரும் ரஷ்யா போனது இல்லை. அமெரிக்கச் சார்பு நாடாக அடையாளப்பட்டு இருந்ததால் அனுமதியும் கிடைக்கவில்லை. ஐ.நா. சபையில் தன்னை ஆதரித்த ரஷ்யா, டாக்டர் பட்டம் தருவதைப் பாக்கியமாக நினைத்தார் மகிந்தா. அத்துடன் ஃபொன்சேகா கைதுபற்றிய செய்திகளையும் நிமிடத்துக்கு நிமிடம் கேட்டுக்கொண்டார். தேர்தல் தோல்விக்குப் பின்னால் அரசியல் ஆசைகள் வற்றிப்போய் ஃபொன்சேகா, அமெரிக்கா போய் குடியேறிவிடுவார் என்றுதான் மகிந்தா எதிர்பார்த்தார். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னால் இலங்கை பத்திரிகைகளில்ஃபொன்சேகா கொடுத்த ஒரு பக்க விளம்பரம், அவர் இனி ஒதுங்கும் ஆள் அல்ல என்பதை அறிவித்தது.''முன்னெப்போதும் இல்லாதவிதத்தில் உண்மை, ஜனநாயகம், நீதி ஆகியவை நசுக்கப்படுகிற ஒரு கடினமான நிலையை நாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. நேர்மையான மாற்றத்தை எதிர்பார்த்து நீங்கள் ஒத்துழைப்பு நல்கி இருந்தாலும், ஜனாதிபதி தேர்தல் முடிவானது சீர்குலைக்கப்பட்டது. உண்மையான வெற்றியாளர் யார் என்பதை முழு நாடுமே அறியும். உங்களது வெற்றியானது சூறையாடப்பட்டு விட்டது. எத்தகைய கஷ்டங்களை எதிர்நோக்கினும் நான் உங்களைக் கைவிட மாட்டேன்.' என்று மக்களை நோக்கி அந்த அறிக்கை யில் கூறிய ஃபொன்சேகா, இலங்கையில் உள்ள பத்திரிகைகள், இணையதளங்கள் அனைத்தும் ஒடுக்கப்படுவது குறித்து பகிரங் கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இனி வரும் காலம் பத்திரிகைகளுக்கு மேலும் கஷ்டமானது என்றும் அதில் உள்ளது. இந்த விளம்பரம்தான் மகிந்தாவின் கோபத்தை அதிகமாக்கியதாம்.

'இலங்கையில் ராணுவப் புரட்சி நடத்தத் திட்ட மிட்டார்' என்பதுதான் ஃபொன்சேகா மீதான முக்கி யக் குற்றச்சாட்டு. அதோடு கடந்த நான்கு ஆண்டு காலமாக இலங்கையில் நடந்த பத்திரிகையாளர்கள் கொலைகள், தாக்குதல் அனைத்துக்கும்ஃபொன்சேகா தான் காரணம் என்றும் குற்றப்பத்திரிகை தயாரா கிறதாம். 'கொழும்பில் இருந்த பிரிகேடியர் துமிந்த கெப்பிடிக்கொலன்தான், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த, ரவிராஜ் எம்.பி. ஆகியோரின் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்ததாகவும், அவரைத் தூண்டியது ஃபொன்சேகா என்றும் கொண்டுவரப்போகிறார்கள்' எனப் பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் பேச்சுஇருக் கிறது. ஃபொன்சேகா கொடுத்த விளம்பரத்தில்பத்திரி கையாளர்கள் குறித்து அதிகமான கவலை தெரிவித்துப் பேசியிருப்பதன் பின்னணியும் இந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

ஃபொன்சேகாவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் ஐ.நா. சபைச் செயலாளர் பான் கி மூன் தொடங்கி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரை அக்கறை செலுத்துகிறார்கள். யார் பேச்சையும் எப்போதும் கேட்டுப் பழக்கம் இல் லாத ராஜபக்ஷே இதைக் கேட்பாரா என்ன? தன்னு டைய மகன் நாமல் ராஜபக்ஷேவை அரசியலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியைப் பகிரங்கமாகக் கடந்த 12-ம் தேதி நடத்தினார் மகிந்தா. அதில் பேசும்போது, ''பௌத்த கலாசாரம் நன்றியுடையது. நாட்டின் அமைதியைக்குலைக் கும் காரியத்தில் யார் இறங்கினாலும் சும்மா விட மாட் டேன்'' என்று சொல்லியிருப்பது ஃபொன்சேகாவுக்கான பகிரங்கத் தீர்ப்பு.

அரச பயங்கரவாதம் அடக்கப்படும்போதுமட்டும் தான் இலங்கை அமைதியாகும் என்பதை அனைத்து தரப்பினருக்கும் உணர்த்துகிறது ஃபொன்சேகாவின் கைது!

 

source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மீண்டும் உருவாக்கப்படும் மனிதப் புதைகுழிகள்

  - வவுனியவில் கொத்து கொத்தாக உடல்கள் புதைப்பு - அச்சத்தில் தமிழர்கள்.

வவுனியா புறநகர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றது. வவுனியா செட்டிக்குளத்திற்கு அண்மையாக உள்ள பகுதியில் உள்ள சுடுகாட்டில் தினமும் 50,100 உடல்கள் கொண்டுவரப்பட்டு மண் அகழும் பாரிய இயந்திரங்கள்(பெக்கோ) மூலம் குழிகள் தோண்டப்பட்டு ஒன்றாகப் போட்டு புதைக்கப்படுவதாக  நேர்கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.  

இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இராணுவத்தினரால் கொண்டுவரப்படும் உடல்கள் புதைக்கப்படுவதை அடுத்து வவுனியாவில் பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் விசாரணை நடாத்திவருவதாகவும் தெரியவருகின்றது.

முள்ளிவாய்க் கால் பகுதியில் கடந்த மே மாதம் தமிழரின் வாழ்வு, கலை, கலாச்சாராம், பண்பாடு, சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த பல இலட்சக்கணக்கிலான மக்கள் முட்கம்பி வதைமுகாமில் சிறை வைக்கப்பட்டும் சரணடைந்த போராளிகள், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுமார் பதினோராயிரத்திற்கு மேற்பட்டோர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் அண்மை நாட்களாக வவுனியா புறநகர் பகுதியில் கொத்து கொத்தாக உடல்கள் புதைக்கப்பட்டு வருவதை அடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

எதுவித தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் சிறப்பு முகாம் என்ற போர்வையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பதினோராயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளது குடும்பத்தவர்கள், உறவினர்கள் இதனால் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமது உறவுகளது நிலை தெரியாது இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

மகிந்த ராசபக்ச மீண்டும் சிறிலங்காவின் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தமிழர்களது நிலை அச்சத்திற்குரியதாக இருந்து வந்த நிலையில் கொடிய இராணுவத்தின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழர்களது நிலை என்னவாகும் என்பதை வெளிப்படுத்துவதாகவே இச் சம்பவங்கள் அமைந்துள்ளன.

தமிழர்கள் நாதியற்று கொல்லப்பட்டு புதைகுழிகளுக்குள் மூடப்பட்டுவரும் நிலையில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் தத்தமது பதவி சுகங்களுக்காக கொள்கைகளையே மறந்து செயற்பட்டு வருகின்றனர். தமிழீழ தேசியத் தலைமையினையும் தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை போன்ற தமிழர்களது அடிப்படை நிலைப்பாட்டிற்கு விரோதமாக யார் செயற்பட்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை தடம் மாறுபவர்கள் விளங்கிக் கொண்டால் சரி.

இப்போது அனுபவிக்கும் பதவி பவுசு எல்லாம் எமது மக்கள் வழங்கிய அங்கீகாரத்தினால்தான் சாத்தியப்பட்டது என்பதனை உணர்ந்து கொள்வதுடன் ஆனந்த சங்கரிகளையும் சித்தார்த்தன்களையும் பிள்ளையான்களையும் கருனாக்களையும் டக்ளசுகளையும் எதற்குமே பயன்படாதவர்களாக மாற்றியவர்களும் இந்த மக்கள்தான் என்பதனையும் இவர்கள் உணர்வார்களா......? ஈழவிடுதலைப்பயணத்தில் இன்னும் எத்தனை துரோகிகளை சந்திகவேண்டுமோ......? 


source:eeladhesam
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஒரு மகிழ்ச்சியான குடும்பம்ம்ம்ம்

A Happy Family







 The happy parents in these photos celebrate a decade of their remarkable daughters. The photos depict the chronology of the girls from birth until the age of ten. Take a look at the photos and see if you don't agree. More images after the break...

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP